Jump to content

இலங்கை முஸ்லிம்கள் மத்திய கிழக்கிலிருந்து தோன்றியவர்கள் அல்லர்: மரபணு ஆய்வில் வெளியான தகவல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Genetic-0122-1024x426.jpg

சிங்களவர்கள், இலங்கைத் தமிழர்கள் மற்றும் இலங்கை முஸ்லிம்கள் – மரபணு ரீதியாக பல ஒற்றுமைகளைக் கொண்டுள்ளனர் என, கொழும்பு பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் மரபணு தொழில்நுட்பம், மூலக்கூறு அறிவியல் துறை நடத்திய நான்கு வருட ஆய்வை தொடர்ந்து இந்த விடயம் அவதானிக்கப்பட்டது.

வேறு சில அம்சங்களை ஆராயும் போது, இலங்கையின் முக்கிய இனங்கள் பற்றிய இந்த அவதானிப்பு தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டதாக, மேற்படி ஆராய்ச்சி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“சிங்களவர்களுடன் இலங்கை தமிழர்களை விடவும், இலங்கை முஸ்லிம்கள் பெரிய மரபணு ஒற்றுமையைக் கொண்டுள்ளனர் என்று இந்த ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில் முஸ்லிம்களை விட சிங்களவர்கள்தான் தமிழர்களுடன் அதிக ஒற்றுமையைக் கொண்டிருப்பார்கள் என்று பரவலாக நம்பப்பட்டது” என, தலைமை ஆராய்ச்சியாளர் டொக்டர் கயானி கல்ஹேன தெரிவித்துள்ளார்.

பெரும்பாலும் நம்பப்படுவது போல் இலங்கை முஸ்லிம்கள் மத்திய கிழக்கிலிருந்து தோன்றவில்லை என்றும், அவர்கள் இந்தியாவில் இருந்து தோன்றியதாகவும் டொக்டர் கயானி கல்ஹேன மேலும் கூறியுள்ளார்.

சிங்களவர்கள், இலங்கைத் தமிழர்கள் மற்றும் இலங்கை முஸ்லிம்களுடன் ஒப்பிடுகையில், இந்தியத் தமிழர்கள் 0.4% வித்தியாசத்தைக் காட்டுவதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

https://puthithu.com/?p=58434&fbclid=IwAR1s-ZBrCeYa-SRaVflenG8gkX4XjLW3MxlWQEQha-FgIf4pfEum_C-CdfU

Link to comment
Share on other sites

13 minutes ago, colomban said:

Genetic-0122-1024x426.jpg

 

சிங்களவர்கள், இலங்கைத் தமிழர்கள் மற்றும் இலங்கை முஸ்லிம்களுடன் ஒப்பிடுகையில், இந்தியத் தமிழர்கள் 0.4% வித்தியாசத்தைக் காட்டுவதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

https://puthithu.com/?p=58434&fbclid=IwAR1s-ZBrCeYa-SRaVflenG8gkX4XjLW3MxlWQEQha-FgIf4pfEum_C-CdfU

இலங்கைதமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் அனைவரும் மலையாளிகளுடன் தொடர்பு கொண்டுள்ளனரேயன்றி, வங்காளிகளுடனோ, அரபிகளுடனோ அல்லது தமிழ்நாட்டு தமிழருடனோ அல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

இலங்கைதமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் அனைவரும் மலையாளிகளுடன் தொடர்பு கொண்டுள்ளனரேயன்றி, வங்காளிகளுடனோ, அரபிகளுடனோ அல்லது தமிழ்நாட்டு தமிழருடனோ அல்ல. 

என்ன யூட்டர்.... புதுசா சரித்திரம் சொல்லுறியள்...

மலையாளிகள் - சேர தமிழர்கள்.... அவர்களது மொழி, தமிழில் இருந்து பிரிந்த ஒன்று.

கன்னியாகுமரி மக்கள் பேசும் மொழி நடை.... மலையாளம், தமிழ் கலந்த ஒரு  தமிழ். அதுவே, யாழ்ப்பாணத்தில் உள்ளது போன்ற மொழிநடை..

கடைசி யாழ் மன்னன் சங்கிலி, கன்னியாகுமரியில் குடும்ப தொடர்பு கொண்டவராக இருந்திருக்கிறார்.

உள்ளூர் இஸ்லாமியர்கள், பெரும்பாலும், சாதிய தீண்டாமையினால், மதம் மாறியவர்களாக இருந்தார்கள். கிழக்கு மாகாண இஸ்லாமியர்கள், தமிழக, கேரள பகுதிகளில் இருந்து வந்தவர்கள்.

ரவூப் ஹக்கீம் போன்றோர், சிரிய வம்சாவளி இஸ்லாமியர்கள்.

கொழும்பில், பாகிஸ்தானிய இஸ்லாமியர்கள் பலர் உள்ளனர். தம்மை சிந்தி இனத்தவர்கள் என்பார்கள். இந்தியா சுதந்திரம் பெறும் காலத்தில் நடந்த மோதலில், அண்மையில் இருந்த, இன்னும் பிரித்தானிய ஆளுமையின் கீழ் இருந்த இலங்கைக்கு ஓடி வந்தவர்களே இவர்கள்.

சிங்களவர்கள், வங்களாளிகள் தொடர்பு கொண்டவர்கள். 

அவர்களது மொழி, சமஸ்கிருதம், பாலி, தமிழ் கலந்த ஒரு கலவை.

ஆரிய மொழி கலப்பு என்று புளுடா, விட்டுக்கொண்டு இருக்கின்றனர். மஹாவம்சம் போலவே..... கப்சா...

உண்மையில், பெரும்பாலான தமிழர்கள், இஸ்லாமியர்கள், தமிழ்மொழிக்கான வாய்ப்பு இல்லாத நிலையில், சிங்கள மொழியில் படித்து, தம்மை சிங்களவர்களாக கருதி வாழ்கின்றனர்.

இன்று புலம் பெயர்ந்த தமிழர்கள், வம்சாவளியினர் இவ்வாறு ஒரு தடுமாறுதலுக்கு உள்ளாகி இருந்தாலும், தோலின் நிறம், அந்த தடுமாறுதலுக்கு ஒரு எல்லை யினை வகுத்து விடும்.

ஆனால் இலங்கையில் தோல் நிற பிரச்னை இல்லாததாலும், தமது பாதுகாப்பு காரணமாகவும், பல தமிழர்கள், தம்மை சிங்களவர்களாகவே காட்டி கொண்டு வாழ்கின்றனர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

இலங்கைதமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் அனைவரும் மலையாளிகளுடன் தொடர்பு கொண்டுள்ளனரேயன்றி, வங்காளிகளுடனோ, அரபிகளுடனோ அல்லது தமிழ்நாட்டு தமிழருடனோ அல்ல. 

எந்த ஆதாரம் மூலம் இருக்கு உங்களிடம் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கற்பகதரு said:

இலங்கைதமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் அனைவரும் மலையாளிகளுடன் தொடர்பு கொண்டுள்ளனரேயன்றி, வங்காளிகளுடனோ, அரபிகளுடனோ அல்லது தமிழ்நாட்டு தமிழருடனோ அல்ல. 

கற்பகத்தார்! இது எழுதேக்கை நீங்கள் இருக்கிற இடத்திலை எத்தினை மணி? 7063-f7437c7ded1c1514e778c26308e735dfce6411a7.gif

Link to comment
Share on other sites

2 hours ago, கற்பகதரு said:

இலங்கைதமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் அனைவரும் மலையாளிகளுடன் தொடர்பு கொண்டுள்ளனரேயன்றி, வங்காளிகளுடனோ, அரபிகளுடனோ அல்லது தமிழ்நாட்டு தமிழருடனோ அல்ல. 

இலங்கைத்தமிழரும் முஸ்லிம்களும் சிங்களவரும் மலையாளிகள் என்றே மேலே எழுதியிருக்குறேன்.

1 hour ago, Nathamuni said:

என்ன யூட்டர்.... புதுசா சரித்திரம் சொல்லுறியள்...

மலையாளிகள் - சேர தமிழர்கள்.... அவர்களது மொழி, தமிழில் இருந்து பிரிந்த ஒன்று.

கன்னியாகுமரி மக்கள் பேசும் மொழி நடை.... மலையாளம், தமிழ் கலந்த ஒரு  தமிழ். அதுவே, யாழ்ப்பாணத்தில் உள்ளது போன்ற மொழிநடை..

கடைசி யாழ் மன்னன் சங்கிலி, கன்னியாகுமரியில் குடும்ப தொடர்பு கொண்டவராக இருந்திருக்கிறார்.

உள்ளூர் இஸ்லாமியர்கள், பெரும்பாலும், சாதிய தீண்டாமையினால், மதம் மாறியவர்களாக இருந்தார்கள். கிழக்கு மாகாண இஸ்லாமியர்கள், தமிழக, கேரள பகுதிகளில் இருந்து வந்தவர்கள்.

நீங்களும் அதையே சொல்லிவிட்டு பிறகு இராவுல் ஹக்கிமிடமும் மகாவம்சத்திடமும் சரணடைந்து விட்டீர்களே?

1 hour ago, பெருமாள் said:

எந்த ஆதாரம் மூலம் இருக்கு உங்களிடம் ?

ஏதோ நம்மால முடிஞ்சது வஞ்சகமில்லாம சுத்த தமிழில்:

https://ta.m.wikipedia.org/wiki/இலங்கைத்_தமிழர்_பற்றிய_மரபியற்_கற்கை

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, கற்பகதரு said:

நீங்களும் அதையே சொல்லிவிட்டு பிறகு இராவுல் ஹக்கிமிடமும் மகாவம்சத்திடமும் சரணடைந்து விட்டீர்களே?

 

இன்று ரொம்ப குழப்பி இருக்கிறீர்கள்...

சரி விடுங்க... 🙄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

எந்த ஆதாரம் மூலம் இருக்கு உங்களிடம் ?

23 minutes ago, கற்பகதரு said:

ஏதோ நம்மால முடிஞ்சது வஞ்சகமில்லாம சுத்த தமிழில்:

https://ta.m.wikipedia.org/wiki/இலங்கைத்_தமிழர்_பற்றிய_மரபியற்_கற்கை

விக்கிபீடியாவுக்கை போய் ஆரும் என்னவும் எழுதலாம். அதெல்லாம் உண்மையான வரலாற்று தகவல் கிடையாது.

உதாரணத்துக்கு நானும் விக்கியர்ரை பீடியாவுக்கு போய் கற்பகம் எண்டவர் கக்கக்க போ காக்கைவன்னியன் தம்பி எண்டு எழுதலாம் கண்டியளோ? 😎

 

Link to comment
Share on other sites

2 hours ago, குமாரசாமி said:

விக்கிபீடியாவுக்கை போய் ஆரும் என்னவும் எழுதலாம். அதெல்லாம் உண்மையான வரலாற்று தகவல் கிடையாது.

உதாரணத்துக்கு நானும் விக்கியர்ரை பீடியாவுக்கு போய் கற்பகம் எண்டவர் கக்கக்க போ காக்கைவன்னியன் தம்பி எண்டு எழுதலாம் கண்டியளோ? 😎

 

நீங்கள் கண்டதும் திண்டதும் எழுத நானும் எனது பட்டாளமும் விரல் சூப்பிக்கொண்டு இருப்பம் எண்டா கனவு காணுறியள்? விக்கிப்பீடியாவில நீங்களும் எழுதிவியள் எண்டுறியள், இருக்குறதும் பிழை எண்டுறியள், பிறகு எதுக்கு விக்கிப்பீடியாவில எழுதாமல் இங்க வந்து குப்பை கொட்டுறியள்? விக்கிப்பீடியாவில இருக்கிறது பிழை எண்டால் திருத்தி எழுத பல்லாயிரம் பொதுசனம் எங்கே எண்டு கண்ணுக்குள்ள எண்ணை விட்டு பார்த்துக்கொண்டு இருக்கினம். ஆதாரம் இல்லாமல் விக்கிப்பீடியாவில எதுவும் நிலைக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கற்பகதரு said:

இலங்கைதமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் அனைவரும் மலையாளிகளுடன் தொடர்பு கொண்டுள்ளனரேயன்றி, வங்காளிகளுடனோ, அரபிகளுடனோ அல்லது தமிழ்நாட்டு தமிழருடனோ அல்ல. 

 

5 hours ago, கற்பகதரு said:

ஏதோ நம்மால முடிஞ்சது வஞ்சகமில்லாம சுத்த தமிழில்:

https://ta.m.wikipedia.org/wiki/இலங்கைத்_தமிழர்_பற்றிய_மரபியற்_கற்கை

 

இலங்கைத் தமிழர் பற்றிய மரபியற் கற்கை

 
 

இலங்கைத் தமிழரின் கலாச்சாரத்தினதும் மொழியியலினதும் தனித்தன்மை, மரபியற் கற்கை என்பன தென்னிந்தியாவிலுள்ள இந்தியத் தமிழருடன் தொடர்பு கொண்டுள்ள அதேவேளை இலங்கை தீவிலுள்ள ஏனைய இனக் குழுக்களுடன் நெருங்கிய தொடர்புள்ளது என்பதை தெரிவிக்கின்றது. வேறுபட்ட கற்கைகள் இலங்கைத் தமிழர், சிங்களவர், இந்திய இனக்குழுக்களுக்கு இடையிலான தொடர்பின் பல்வகைக் கோணங்களை காட்டுகின்றன.

350px-Sri_Lankan_Tamil_Genetic_Admixture
இலங்கைத் தமிழரின் மரபியல் கூட்டுக்கலவை - கலாநிதி. கெளதம் கே. சாட்ரியா

1995இல் கலாநிதி. கெளதம் கே. சாட்ரியாவின் மரபியல் கூட்டுக்கலவை கற்கையின்படி, இலங்கைத் தமிழர் சிங்களவர்களுடன் நெருங்கிய தொடர்பும் குறைந்தளவு தொடர்பை வங்காளி மக்களுடனும் இந்தியத் தமிழர்களுடனும் கொண்டிருப்பதாக குறிப்பிடுகின்றது. அவரின் கற்கை இலங்கைத் தமிழர் இந்தியத் தமிழர்களுடனான தொடர்பைவிட (16.63% +/- 8.73) சிங்களவர்களுடன் பாரிய தொடர்பை (55.20% +/- 9.47) கொண்டிருப்பதாகத் தெரிவிக்கின்றது. ஆனால், சிங்களவர் தென்னிந்திய தமிழர்களுடன் பாரிய தொடர்பையும் (69.86% +/- 0.61), அதற்கடுத்து வட இந்திய வங்காளியினருடன் தொடர்பு (25.41% +/- 0.51). கொண்டிருப்பதாக கண்டார். இலங்கைத் தமிழரும் சிங்களவரும் 55% பொது மரபணுத்தொகுப்பை பகிர்கின்றனர். அவர்களுக்கும் சுதேசிகளான வேடுவர்களுக்குமான தொடர்பு தொலைவில் காணப்படுகின்றது.[1] இலங்கைத் தமிழருக்கும் சிங்களவருக்குமான இந்த நெருங்கிய தொடர்பானது, இரு சனத்தொகைக்குமான வரலாற்று, மொழியியல், கலாச்சார நெருங்கிய தொடர்பானது 2000 வருடங்களுக்கு மேலானது.[1]

350px-Sinhalese_Genetic_Admixture_TA.png
சிங்களவரின் மரபியல் கூட்டுக்கலவை - கலாநிதி. கெளதம் கே. சாட்ரியா

 

 
குறிப்புக்கள்தொகு
  1.  1.0 1.1 Kshatriya, G.K. (1995). "Genetic affinities of Sri Lankan populations". Human Biology (American Association of Anthropological Genetics) 67 (6): 843–66. பப்மெட்:8543296.

 

 
இவற்றையும் பார்க்கதொகு

மேலே கற்பகத்தரு  சொல்றார்  இப்படி 

5 hours ago, கற்பகதரு said:

இலங்கைத்தமிழரும் முஸ்லிம்களும் சிங்களவரும் மலையாளிகள் என்றே மேலே எழுதியிருக்குறேன்.

நீங்கள் தந்த இணைப்பில் எங்கு மலையாளி தொடர்பு உள்ளது ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் விக்கிபீடியா சிங்களவர்களின் புளுகு ஆள் எழுதியிருக்கார் அதிலும் மலையாளி தொடர்பை காணவில்லை ஆனால் கற்பகத்தார் சிங்களவனை விட பலமடங்கு வரலாற்று பொய்யை இந்த திரியில் அவுட்டு விடுறார் .

Link to comment
Share on other sites

2 hours ago, பெருமாள் said:

முதலில் விக்கிபீடியா சிங்களவர்களின் புளுகு ஆள் எழுதியிருக்கார்

உங்கள் தமிழீழ புளுகை இப்போது எங்கேயும் காணோமே? என்னாச்சு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

உங்கள் தமிழீழ புளுகை இப்போது எங்கேயும் காணோமே? என்னாச்சு?

மலையாள தொடர்பு என்று நீங்கள் தான் இங்கு எழுதியது தந்த  ஆதாரத்தில் அப்படியொண்டையும் காணவில்லை பொய்யான தகவலை பரப்புவதுதான் உங்கள் நோக்கமா ? 

அல்லது சொந்த இனத்தையே கரித்துக்கொண்டு ..........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

மலையாள தொடர்பு என்று நீங்கள் தான் இங்கு எழுதியது தந்த  ஆதாரத்தில் அப்படியொண்டையும் காணவில்லை பொய்யான தகவலை பரப்புவதுதான் உங்கள் நோக்கமா ? 

அல்லது சொந்த இனத்தையே கரித்துக்கொண்டு ..........................

கரிக்காட்டில் கல்லா நிறையாது எல்லோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலே பெருமாள் இணைத்த ஆய்வு 1995 இல் அப்போது வழக்கத்திலிருந்த முறைகளைக் கையாண்டு செய்யப் பட்டிருக்கிறது. முடிவில் தவறுகள் இல்லை, ஆனால் அவர்களால் இந்தியாவின் எந்தப் பிரதேசத்தோடு தொடர்பு இருக்கிறது என்பதைச் சொல்ல முடியாது - எனவே ஆய்வு முடிவில் அது உள்ளடங்கவில்லை!
 ஆனால் இன்னும் granular ஆக 2013 இல் வெளிவந்த ஆய்வு நவீன முறைகளைக் கையாண்டு செய்யப் பட்டிருக்கிறது.

இந்த இரண்டாவது ஆய்வில் பயன்படுத்தப் பட்டிருப்பது எங்கள் கலங்களில் இருக்கும் சிறுமணிகள் (mitochondria) எனும் அமைப்பினுள் இருக்கும் டி.என்.ஏ. இது ஏன் முக்கியம்? ஆணின் விந்து பெண்ணின் முட்டையைக் கருக்கட்டும் போது, முளையம் உருவாகிறது. அந்த முளையத்தின் மிகப் பெரும்பான்மையான சிறுமணிகள் தாயின் முட்டையிலிருந்தே வருகின்றன. முளையம் வளர்ந்து , பிறந்து இன்னொரு மனிதனாகும் போது அந்த மனிதனின் உடலில் இருக்கும் சிறுமணிகள் அனேகமாக எல்லாமே தாயிடமிருந்து வந்தவையாகவே இருக்கும். எனவே, ஆதிப் பரம்பரை தேடும் ஆய்வில் இந்த தாய்வழிச் சிறு மணிகளின்  டி.என்.ஏ (mtDNA) தான் ஏற்றுக் கொள்ளப் பட்ட நியமமாக இப்போது இருக்கிறது.

இனி கீழுள்ள படத்தைப் பாருங்கள்:

Figure 5

 

அங்கே TS Jaf என்று இருப்பது யாழ்ப்பாணத் தமிழ். இந்தியாவின் எந்தப் பகுதியோடு யாழ்ப்பாணத்தமிழர்கள் நெருக்கமாக இருக்கிறார்கள் என்று பார்க்கும் போது, மூன்று இந்தியப் பிரதேசங்கள் நெருக்கமாக வருகின்றன: அவை, NI-Tri-Tha (தற்போதைய உத்தரகாண்ட்), WI-Cas-Guj (குஜராத்), SI-Cas-Coc (கேரளா) என்பன. புள்ளிகளிடையேயான தூரங்களை ஒப்பிட்டால், தமிழ் நாட்டை விட (SI-Tri-Pan) யாழ் தமிழர்கள் வட இந்தியாவோடும், கேரளாவோடும், குஜராத்தோடும் நெருக்கமாக இருப்பதாகவே தெரிகிறது! 

இந்த இணைப்பில் சென்று முழு ஆய்வையும் வாசிக்கலாம்:

https://www.nature.com/articles/jhg2013112


 பி.கு: எனவே, எம்மிடையே இனத்தூய்மை பேசுவோர் இரு முனை கூரான கத்தியை வைத்து விளையாடும் வேலையைத் தான் செய்கின்றனர். இனத்தூய்மையை பிழையான வழியில் நோண்ட ஆரம்பித்தால், நம் மூக்கே ஒரு நாள்  வெட்டு வாங்க வேண்டி வரும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பெருமாள் said:

அவரின் கற்கை இலங்கைத் தமிழர் இந்தியத் தமிழர்களுடனான தொடர்பைவிட (16.63% +/- 8.73) சிங்களவர்களுடன் பாரிய தொடர்பை (55.20% +/- 9.47) கொண்டிருப்பதாகத் தெரிவிக்கின்றது. ஆனால், சிங்களவர் தென்னிந்திய தமிழர்களுடன் பாரிய தொடர்பையும் (69.86% +/- 0.61), அதற்கடுத்து வட இந்திய வங்காளியினருடன் தொடர்பு (25.41% +/- 0.51). கொண்டிருப்பதாக கண்டார். இலங்கைத் தமிழரும் சிங்களவரும் 55% பொது மரபணுத்தொகுப்பை பகிர்கின்றனர். அவர்களுக்கும் சுதேசிகளான வேடுவர்களுக்குமான தொடர்பு தொலைவில் காணப்படுகின்றது.

இலங்கை தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் மரபணுவியல் ஒற்றுமை 55% சதவீதமாம்.அதே சிங்களவர்களுக்கு தென்னிந்திய தமிழர்களுடன் தொடர்ப்பு 70% தமாம். ஆனால்.. இலங்கைத் தமிழர்களுக்கும்.. தென்னிந்திய தமிழர்களுக்கும் தொடர்ப்பு வெறும் 16% சதவீதமாம். 

மேலும் சிங்களவர்களுக்கு 25% சதவீதம் தானாம் வங்காளித் தொடர்ப்பு.. அதாவது வடக்கிந்தியத் தொடர்ப்பு.

தமிழர்களுக்கு அது எத்தனை சதவீதம் என்று சொல்லேல்ல.

சரி.. இந்த ஆய்வு நடுநிலையானதா.. திறனாய்வுக்கு உள்ளானதா என்பதை எல்லாம் விட்டிட்டு பார்த்தாலும்..

விஜயன்.. கும்பல்.. வடக்கிந்தியர்கள் அல்ல.  வேடுவர்களே தங்கள் மூதாதை என்ற சிங்களத்தின் கருத்தியலும் அடிபட்டுப் போகுது.

அதுசரி மகாவம்சப்படி.. சிங்களவர்கள் சிங்கத்துக்கு மிக நெருக்கமா இருந்திருக்கனுமே.. அதையும் காணம்.

ஆக.. சிங்களவர்கள் எனப்படுவோர்.. இன்றைய தெலுங்கர்கள் எனப்படும்.. முன்னைய தமிழர்கள் ஆவர். இன்றைய ஈழத்தமிழர்கள்.. முன்னைய சேர நாட்டுக்காரர்கள் தாம் அதிகம். சோழ நாட்டு தமிழகத் தமிழ் கலப்பு அதில் உண்டு.  ஆக சிங்களவர்களிடம்.. வட இந்தியத் தொடர்பு.. அசோகன்.. விஜயன் கதை.. இலங்கை சிங்களவர்களுக்கே பூர்வீகமானது என்பதெல்லாமே அடிபட்டுப் போகுது. 

ஏனெனில்.. சிங்களவர்களுக்கு முன் தென்னிந்தியாவை மையப்படுத்தி.. சேர நாட்டிலும்... தமிழகத்திலும் தமிழர்கள் வாழ ஆரம்பித்துவிட்டனர். தமிழர்களின் பரம்பல்.. வடக்கே.. சரஸ்வதி நதிவரையும்.. கிழக்கே... வங்கம் வரையும்.. விரிந்தே இருந்துள்ளது. சோழர் காலத்தில்.. அது இன்னும் பரம்பலடைந்துள்ளது.

இவை எல்லாத்தையும் கருத்தில் கொண்டால்.. சிங்களவர்களின் தோற்றம் தமிழர்கள் சார்ந்தது என்பது வெளிப்படையாவதோடு.. தென்னிந்திய நாயக்க.. தெலுங்கர் தமிழர் கூட்டமே.. சிங்களவர்கள் என்ற தொல்பியல் மனித இனப்பரம்பல் ஆய்வுக்கு அமைய மரபணு ஆய்வு சரி நிகர்ப்படுத்திச் செல்கிறது. 

ஆனால்.. இந்த ஆய்வை மையப்படுத்தி.. தமிழர்களை சிங்களவர்களாகக் காட்டும் வலுவற்ற உக்தி கையாளப்பட்டிருப்பது.. இந்த ஆய்வின் நடுநிலைத் தன்மை.. திறனாய்வை கேள்விக்கு உட்படுத்துகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

மேலும் சிங்களவர்களுக்கு 25% சதவீதம் தானாம் வங்காளித் தொடர்ப்பு.. அதாவது வடக்கிந்தியத் தொடர்ப்பு.

தமிழர்களுக்கு அது எத்தனை சதவீதம் என்று சொல்லேல்ல.

28%. 

விசித்திரமாக, சிங்களவர்களை விட நாங்கள் சிங்கம் தனகின மக்கள்.

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3 18 APR, 2024 | 11:56 AM   7 இலட்சம் சுற்றுலா பயணிகள் வருகை என்ற மைல்கல்லை இலங்கை 14  வாரங்களில் கடந்துள்ளது. ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மொத்தம்  718,315 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின்  தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஏப்ரல் மாதத்தின் முதல் 15 நாட்களில் 82,531 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வளர்ச்சி வேகம் சீராக இருப்பதை காட்டுகிறது. ஒரு வருடத்திற்கு முன்பு நாளாந்த சுற்றுலா பயணிகளின் வருகை 3000 ஆக குறைந்து இருந்த நிலையில், தற்போது ஏப்ரல் மாத்தில் 5,502 ஆக அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் 168,539 ற்கும் 182,724 ற்கும் இடையில் சுற்றுலாப் பயணிகள் வருகையை இலங்கை இலக்காகக் கொண்டுள்ளது. இந்த இலக்கை அடைய நாளாந்தம் சராசரியாக 5,617 முதல் 6,090 வரை சுற்றுலாப் பயணிகள் வருகை தரவேண்டும். தற்போதைய வருகையின் வேகம் இலங்கை மாதத்திற்கான வருகை இலக்கின் கீழ் எல்லையை எட்டக்கூடும் என்பதைக் காட்டுகிறது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தால் கடந்த ஆண்டு  ஏப்ரல் மாதம்  பதிவு செய்யப்பட்ட 105,498 சுற்றுலா பயணிகளின் வருகையை நாடு விஞ்சும்.  2018 ஆம் ஆண்டில் சுற்றுலா பயணகளின் வருகையை நாடு  அடைய மேம்பட்ட வேகம் தேவை. ஏப்ரல் மாத்தில் 17 சதவீதமான சுற்றுலா பயணிகள்  இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். 11 சதவீதமான சுற்றுலா பயணிகள்  பிரித்தானியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். ஐக்கிய இராச்சியம் தனது பிரஜைகளுக்காக வெளியிட்டுள்ள இலங்கைக்கான பயண ஆலோசனையை (Travel Advisory) தளர்த்தியுள்ளமையினால் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகை எதிர்பார்க்கப்படுகிறது. 10 சதவீதமான சுற்றுலா பயணிகள்  ரஷ்காவிலிருந்து  வருகை தந்துள்ளனர். ஜெர்மனி, பிரான்ஸ், அவுஸ்திரேலியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தரவரிசையில் நான்காவது, ஐந்தாவது, ஆறாவது மற்றும் ஏழாவது இடங்களைப் பிடித்துள்ளன. 14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை | Virakesari.lk
    • Published By: DIGITAL DESK 7 18 APR, 2024 | 03:43 PM   கடந்த வருடங்களில் அதிகளவில் உயிரிழப்புக்கள் ஏற்பட்டமைக்கு பிரதான காரணம் மாரடைப்பு என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அத்தோடு, 2010 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலும் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு பிரதான காரணமும் மாரடைப்பு என்று சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. அதுமட்டுமன்றி, மாரடைப்பு ஏற்படுவதற்கு பிரதான காரணங்களாக ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள், உடல்  உறுப்புகளின் செயற்பாடுகள் பற்றிய கவனமின்மை, புகையிலை , போதைப்பொருள் பாவனை மற்றும் மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களினால் மாரடைப்பு ஏற்படுவதாகவும்  சுகாதாரத் துறை திணைக்களம் சுட்டிகாட்டியுள்ளது.    இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம் மாரடைப்பு! | Virakesari.lk
    • Published By: DIGITAL DESK 7 18 APR, 2024 | 05:21 PM   ( எம்.நியூட்டன்) யாழ்ப்பாணத்தில் இருந்து நள்ளிரவு வேளை சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு திருகோணமலைக்கு கொண்டு செல்லப்படுவதாக மக்கள் என்னிடம் முறையிட்டுள்ளார்கள் இது தொடர்பில் மக்களால் முறையிடப்பட்ட இடங்களை பார்வையிட்டபோது அங்கு 20 முதல் 25 அடிவரை அகழப்பட்டு இருக்கிறது. அவ்வாறு  அகழப்பட்ட சுண்ணகற்கள் பிறிதொரு இடத்திற்கு கொண்டு சென்று சேர்த்த பின்னர் நள்ளிரவு வேளை  திருகோணமலைக்கு கொண்டுசெல்லப்படுகிறது. இந்த செயற்பாட்டிற்கு யார் அனுமதி வழங்கியது?   கற்களை அகழ்வதற்கு எந்த திணைக்களம் பொறுப்பு கூறுவது இராணுவம், பொலிஸாரின் அனுமதியுடன் இது நடைபொறுகிறதா? யார் தான்  பொறுப்பு கூறுவது? 12,14 கன்ரர், டிப்பர் வாகனங்களில்  கற்களை கொண்டு செல்கிறார்கள்.  நள்ளிரவில் இந்த வேலைகளை செய்வதால் இரவு கடமையில் நிற்கும் பொலிஸார் இராணுவத்தினர் இதனை கொண்டு செல்வதற்கு அனுமதி வழங்கிறார்களா? ஒருங்கிணைப்பு   குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் இணைத்தலைவர்களில் ஒருவராகிருக்கிறார்.  அமைச்சரும் இணைத்தலைவர்களில் ஒருவராக இருக்கிறார். எனவே இந்த விடயத்தில் யாரால் இந்த செயற்பாடு நடைபெறுகிறது. இதனை நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார். இதன்போது வடக்கு மாகாண ஆளுநர் பொலிஸார் இராணுவத்தினரிடம் இவை தொடர்பில் நள்ளிரவு வேளை கடமையில் இருக்கின்றபோது வீதியில் செல்லும் கனரக வாகனம், டிப்பர் வாகனங்களை சேதனைக்குட்படுத்தி உரிய அனுமதிகளை சோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டார். யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு திருகோணமலைக்கு கடத்தப்படுகிறதா ? சிறிதரன் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கேள்வி | Virakesari.lk
    • Published By: DIGITAL DESK 7 18 APR, 2024 | 05:29 PM   யாழ்ப்பாணத்தில் குழாய்க்கிணறுகளைத் தோன்றுவது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு முடிவெடுப்பது என யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் ஆகியோரின் இணைத்தலைமையில்  யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.  அதன்போது யாழ்ப்பாணத்தில் அனுமதியற்ற முறையில் அதிகளவான குழாய்க்கிணறுகள் அடிக்கப்பட்டு வருவதாகவும் , அதனால் நிலத்தடி நீர் அற்று போகும் அபாயம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது  அதனை தொடர்ந்து கூட்டத்தில் வாத பிரதிவாதங்கள் எழுந்தன. அதனை அடுத்து குழாய்க்கிணறு அடிப்பதால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு ,அதன் அடிப்படையில் அவற்றை கட்டுப்படுத்துவது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது. அதேவேளை யாழ்ப்பாணத்தில் நடைபெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பிலும் அது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தி அவற்றை முற்றாக கட்டுப்படுத்துவது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் கூட்டத்தில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.  யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து ஆய்வு செய்ய நடவடிக்கை | Virakesari.lk
    • Published By: DIGITAL DESK 7 18 APR, 2024 | 05:27 PM   வடக்கு மாகாணத்தில் காணி உறுதிப்பத்திரங்களை கைமாற்றும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தபட்டுள்ளதாக யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஆளுநர் தெரிவித்துள்ளார். காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கல், மீள் குடியேற்றம், புதிய வீட்டுத்திட்டம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கையில், இந்த வருட இறுதிக்குள் மீள் குடியேற்ற நடவடிக்கை நிறைவு செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி வழங்கியுள்ள பணிப்புரைக்கு அமைய, மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. யாழ் மாவட்டத்தில் ஆயிரத்து 500 குடும்பங்களை சேர்ந்தவர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர். அவர்களை மீள்குடியேற்றுவது தொடர்பில் விசேட கூட்டம்  நடத்தப்பட வேண்டும். அத்துடன் ஏற்கனவே மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வீடுகளுக்கான மின்சார விநியோகம் தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன் . இதேவேளை, வடக்கு மாகாணத்தில் காணி உறுதிப் பத்திரங்களை கைமாற்றும் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.  "உரித்து" காணி உறுதிகளை வழங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துவதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமையை மே மாத நிறைவுக்குள்  வடக்கு மாகாணத்தில் 60 ஆயிரம் பேருக்கான  காணி உறுதிப் பத்திரங்கள் கையளிக்கப்படவுள்ளன. வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வீட்டுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்கள் மற்றும் திட்டமிடல்கள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த திட்டத்தில் நெடுந்தீவு மக்களுக்கான 76 வீடுகளும் உள்வாங்கப்பட்டுள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார்.  மே மாத இறுதிக்குள் வடக்கில் 60 ஆயிரம் பேருக்கு காணி உறுதி வழங்கப்படும் - வடக்கு ஆளுநர் | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.