Jump to content

இலங்கை முஸ்லிம்கள் மத்திய கிழக்கிலிருந்து தோன்றியவர்கள் அல்லர்: மரபணு ஆய்வில் வெளியான தகவல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Genetic-0122-1024x426.jpg

சிங்களவர்கள், இலங்கைத் தமிழர்கள் மற்றும் இலங்கை முஸ்லிம்கள் – மரபணு ரீதியாக பல ஒற்றுமைகளைக் கொண்டுள்ளனர் என, கொழும்பு பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் மரபணு தொழில்நுட்பம், மூலக்கூறு அறிவியல் துறை நடத்திய நான்கு வருட ஆய்வை தொடர்ந்து இந்த விடயம் அவதானிக்கப்பட்டது.

வேறு சில அம்சங்களை ஆராயும் போது, இலங்கையின் முக்கிய இனங்கள் பற்றிய இந்த அவதானிப்பு தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டதாக, மேற்படி ஆராய்ச்சி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“சிங்களவர்களுடன் இலங்கை தமிழர்களை விடவும், இலங்கை முஸ்லிம்கள் பெரிய மரபணு ஒற்றுமையைக் கொண்டுள்ளனர் என்று இந்த ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில் முஸ்லிம்களை விட சிங்களவர்கள்தான் தமிழர்களுடன் அதிக ஒற்றுமையைக் கொண்டிருப்பார்கள் என்று பரவலாக நம்பப்பட்டது” என, தலைமை ஆராய்ச்சியாளர் டொக்டர் கயானி கல்ஹேன தெரிவித்துள்ளார்.

பெரும்பாலும் நம்பப்படுவது போல் இலங்கை முஸ்லிம்கள் மத்திய கிழக்கிலிருந்து தோன்றவில்லை என்றும், அவர்கள் இந்தியாவில் இருந்து தோன்றியதாகவும் டொக்டர் கயானி கல்ஹேன மேலும் கூறியுள்ளார்.

சிங்களவர்கள், இலங்கைத் தமிழர்கள் மற்றும் இலங்கை முஸ்லிம்களுடன் ஒப்பிடுகையில், இந்தியத் தமிழர்கள் 0.4% வித்தியாசத்தைக் காட்டுவதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

https://puthithu.com/?p=58434&fbclid=IwAR1s-ZBrCeYa-SRaVflenG8gkX4XjLW3MxlWQEQha-FgIf4pfEum_C-CdfU

Link to comment
Share on other sites

13 minutes ago, colomban said:

Genetic-0122-1024x426.jpg

 

சிங்களவர்கள், இலங்கைத் தமிழர்கள் மற்றும் இலங்கை முஸ்லிம்களுடன் ஒப்பிடுகையில், இந்தியத் தமிழர்கள் 0.4% வித்தியாசத்தைக் காட்டுவதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

https://puthithu.com/?p=58434&fbclid=IwAR1s-ZBrCeYa-SRaVflenG8gkX4XjLW3MxlWQEQha-FgIf4pfEum_C-CdfU

இலங்கைதமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் அனைவரும் மலையாளிகளுடன் தொடர்பு கொண்டுள்ளனரேயன்றி, வங்காளிகளுடனோ, அரபிகளுடனோ அல்லது தமிழ்நாட்டு தமிழருடனோ அல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

இலங்கைதமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் அனைவரும் மலையாளிகளுடன் தொடர்பு கொண்டுள்ளனரேயன்றி, வங்காளிகளுடனோ, அரபிகளுடனோ அல்லது தமிழ்நாட்டு தமிழருடனோ அல்ல. 

என்ன யூட்டர்.... புதுசா சரித்திரம் சொல்லுறியள்...

மலையாளிகள் - சேர தமிழர்கள்.... அவர்களது மொழி, தமிழில் இருந்து பிரிந்த ஒன்று.

கன்னியாகுமரி மக்கள் பேசும் மொழி நடை.... மலையாளம், தமிழ் கலந்த ஒரு  தமிழ். அதுவே, யாழ்ப்பாணத்தில் உள்ளது போன்ற மொழிநடை..

கடைசி யாழ் மன்னன் சங்கிலி, கன்னியாகுமரியில் குடும்ப தொடர்பு கொண்டவராக இருந்திருக்கிறார்.

உள்ளூர் இஸ்லாமியர்கள், பெரும்பாலும், சாதிய தீண்டாமையினால், மதம் மாறியவர்களாக இருந்தார்கள். கிழக்கு மாகாண இஸ்லாமியர்கள், தமிழக, கேரள பகுதிகளில் இருந்து வந்தவர்கள்.

ரவூப் ஹக்கீம் போன்றோர், சிரிய வம்சாவளி இஸ்லாமியர்கள்.

கொழும்பில், பாகிஸ்தானிய இஸ்லாமியர்கள் பலர் உள்ளனர். தம்மை சிந்தி இனத்தவர்கள் என்பார்கள். இந்தியா சுதந்திரம் பெறும் காலத்தில் நடந்த மோதலில், அண்மையில் இருந்த, இன்னும் பிரித்தானிய ஆளுமையின் கீழ் இருந்த இலங்கைக்கு ஓடி வந்தவர்களே இவர்கள்.

சிங்களவர்கள், வங்களாளிகள் தொடர்பு கொண்டவர்கள். 

அவர்களது மொழி, சமஸ்கிருதம், பாலி, தமிழ் கலந்த ஒரு கலவை.

ஆரிய மொழி கலப்பு என்று புளுடா, விட்டுக்கொண்டு இருக்கின்றனர். மஹாவம்சம் போலவே..... கப்சா...

உண்மையில், பெரும்பாலான தமிழர்கள், இஸ்லாமியர்கள், தமிழ்மொழிக்கான வாய்ப்பு இல்லாத நிலையில், சிங்கள மொழியில் படித்து, தம்மை சிங்களவர்களாக கருதி வாழ்கின்றனர்.

இன்று புலம் பெயர்ந்த தமிழர்கள், வம்சாவளியினர் இவ்வாறு ஒரு தடுமாறுதலுக்கு உள்ளாகி இருந்தாலும், தோலின் நிறம், அந்த தடுமாறுதலுக்கு ஒரு எல்லை யினை வகுத்து விடும்.

ஆனால் இலங்கையில் தோல் நிற பிரச்னை இல்லாததாலும், தமது பாதுகாப்பு காரணமாகவும், பல தமிழர்கள், தம்மை சிங்களவர்களாகவே காட்டி கொண்டு வாழ்கின்றனர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

இலங்கைதமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் அனைவரும் மலையாளிகளுடன் தொடர்பு கொண்டுள்ளனரேயன்றி, வங்காளிகளுடனோ, அரபிகளுடனோ அல்லது தமிழ்நாட்டு தமிழருடனோ அல்ல. 

எந்த ஆதாரம் மூலம் இருக்கு உங்களிடம் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கற்பகதரு said:

இலங்கைதமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் அனைவரும் மலையாளிகளுடன் தொடர்பு கொண்டுள்ளனரேயன்றி, வங்காளிகளுடனோ, அரபிகளுடனோ அல்லது தமிழ்நாட்டு தமிழருடனோ அல்ல. 

கற்பகத்தார்! இது எழுதேக்கை நீங்கள் இருக்கிற இடத்திலை எத்தினை மணி? 7063-f7437c7ded1c1514e778c26308e735dfce6411a7.gif

Link to comment
Share on other sites

2 hours ago, கற்பகதரு said:

இலங்கைதமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் அனைவரும் மலையாளிகளுடன் தொடர்பு கொண்டுள்ளனரேயன்றி, வங்காளிகளுடனோ, அரபிகளுடனோ அல்லது தமிழ்நாட்டு தமிழருடனோ அல்ல. 

இலங்கைத்தமிழரும் முஸ்லிம்களும் சிங்களவரும் மலையாளிகள் என்றே மேலே எழுதியிருக்குறேன்.

1 hour ago, Nathamuni said:

என்ன யூட்டர்.... புதுசா சரித்திரம் சொல்லுறியள்...

மலையாளிகள் - சேர தமிழர்கள்.... அவர்களது மொழி, தமிழில் இருந்து பிரிந்த ஒன்று.

கன்னியாகுமரி மக்கள் பேசும் மொழி நடை.... மலையாளம், தமிழ் கலந்த ஒரு  தமிழ். அதுவே, யாழ்ப்பாணத்தில் உள்ளது போன்ற மொழிநடை..

கடைசி யாழ் மன்னன் சங்கிலி, கன்னியாகுமரியில் குடும்ப தொடர்பு கொண்டவராக இருந்திருக்கிறார்.

உள்ளூர் இஸ்லாமியர்கள், பெரும்பாலும், சாதிய தீண்டாமையினால், மதம் மாறியவர்களாக இருந்தார்கள். கிழக்கு மாகாண இஸ்லாமியர்கள், தமிழக, கேரள பகுதிகளில் இருந்து வந்தவர்கள்.

நீங்களும் அதையே சொல்லிவிட்டு பிறகு இராவுல் ஹக்கிமிடமும் மகாவம்சத்திடமும் சரணடைந்து விட்டீர்களே?

1 hour ago, பெருமாள் said:

எந்த ஆதாரம் மூலம் இருக்கு உங்களிடம் ?

ஏதோ நம்மால முடிஞ்சது வஞ்சகமில்லாம சுத்த தமிழில்:

https://ta.m.wikipedia.org/wiki/இலங்கைத்_தமிழர்_பற்றிய_மரபியற்_கற்கை

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, கற்பகதரு said:

நீங்களும் அதையே சொல்லிவிட்டு பிறகு இராவுல் ஹக்கிமிடமும் மகாவம்சத்திடமும் சரணடைந்து விட்டீர்களே?

 

இன்று ரொம்ப குழப்பி இருக்கிறீர்கள்...

சரி விடுங்க... 🙄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

எந்த ஆதாரம் மூலம் இருக்கு உங்களிடம் ?

23 minutes ago, கற்பகதரு said:

ஏதோ நம்மால முடிஞ்சது வஞ்சகமில்லாம சுத்த தமிழில்:

https://ta.m.wikipedia.org/wiki/இலங்கைத்_தமிழர்_பற்றிய_மரபியற்_கற்கை

விக்கிபீடியாவுக்கை போய் ஆரும் என்னவும் எழுதலாம். அதெல்லாம் உண்மையான வரலாற்று தகவல் கிடையாது.

உதாரணத்துக்கு நானும் விக்கியர்ரை பீடியாவுக்கு போய் கற்பகம் எண்டவர் கக்கக்க போ காக்கைவன்னியன் தம்பி எண்டு எழுதலாம் கண்டியளோ? 😎

 

Link to comment
Share on other sites

2 hours ago, குமாரசாமி said:

விக்கிபீடியாவுக்கை போய் ஆரும் என்னவும் எழுதலாம். அதெல்லாம் உண்மையான வரலாற்று தகவல் கிடையாது.

உதாரணத்துக்கு நானும் விக்கியர்ரை பீடியாவுக்கு போய் கற்பகம் எண்டவர் கக்கக்க போ காக்கைவன்னியன் தம்பி எண்டு எழுதலாம் கண்டியளோ? 😎

 

நீங்கள் கண்டதும் திண்டதும் எழுத நானும் எனது பட்டாளமும் விரல் சூப்பிக்கொண்டு இருப்பம் எண்டா கனவு காணுறியள்? விக்கிப்பீடியாவில நீங்களும் எழுதிவியள் எண்டுறியள், இருக்குறதும் பிழை எண்டுறியள், பிறகு எதுக்கு விக்கிப்பீடியாவில எழுதாமல் இங்க வந்து குப்பை கொட்டுறியள்? விக்கிப்பீடியாவில இருக்கிறது பிழை எண்டால் திருத்தி எழுத பல்லாயிரம் பொதுசனம் எங்கே எண்டு கண்ணுக்குள்ள எண்ணை விட்டு பார்த்துக்கொண்டு இருக்கினம். ஆதாரம் இல்லாமல் விக்கிப்பீடியாவில எதுவும் நிலைக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கற்பகதரு said:

இலங்கைதமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் அனைவரும் மலையாளிகளுடன் தொடர்பு கொண்டுள்ளனரேயன்றி, வங்காளிகளுடனோ, அரபிகளுடனோ அல்லது தமிழ்நாட்டு தமிழருடனோ அல்ல. 

 

5 hours ago, கற்பகதரு said:

ஏதோ நம்மால முடிஞ்சது வஞ்சகமில்லாம சுத்த தமிழில்:

https://ta.m.wikipedia.org/wiki/இலங்கைத்_தமிழர்_பற்றிய_மரபியற்_கற்கை

 

இலங்கைத் தமிழர் பற்றிய மரபியற் கற்கை

 
 

இலங்கைத் தமிழரின் கலாச்சாரத்தினதும் மொழியியலினதும் தனித்தன்மை, மரபியற் கற்கை என்பன தென்னிந்தியாவிலுள்ள இந்தியத் தமிழருடன் தொடர்பு கொண்டுள்ள அதேவேளை இலங்கை தீவிலுள்ள ஏனைய இனக் குழுக்களுடன் நெருங்கிய தொடர்புள்ளது என்பதை தெரிவிக்கின்றது. வேறுபட்ட கற்கைகள் இலங்கைத் தமிழர், சிங்களவர், இந்திய இனக்குழுக்களுக்கு இடையிலான தொடர்பின் பல்வகைக் கோணங்களை காட்டுகின்றன.

350px-Sri_Lankan_Tamil_Genetic_Admixture
இலங்கைத் தமிழரின் மரபியல் கூட்டுக்கலவை - கலாநிதி. கெளதம் கே. சாட்ரியா

1995இல் கலாநிதி. கெளதம் கே. சாட்ரியாவின் மரபியல் கூட்டுக்கலவை கற்கையின்படி, இலங்கைத் தமிழர் சிங்களவர்களுடன் நெருங்கிய தொடர்பும் குறைந்தளவு தொடர்பை வங்காளி மக்களுடனும் இந்தியத் தமிழர்களுடனும் கொண்டிருப்பதாக குறிப்பிடுகின்றது. அவரின் கற்கை இலங்கைத் தமிழர் இந்தியத் தமிழர்களுடனான தொடர்பைவிட (16.63% +/- 8.73) சிங்களவர்களுடன் பாரிய தொடர்பை (55.20% +/- 9.47) கொண்டிருப்பதாகத் தெரிவிக்கின்றது. ஆனால், சிங்களவர் தென்னிந்திய தமிழர்களுடன் பாரிய தொடர்பையும் (69.86% +/- 0.61), அதற்கடுத்து வட இந்திய வங்காளியினருடன் தொடர்பு (25.41% +/- 0.51). கொண்டிருப்பதாக கண்டார். இலங்கைத் தமிழரும் சிங்களவரும் 55% பொது மரபணுத்தொகுப்பை பகிர்கின்றனர். அவர்களுக்கும் சுதேசிகளான வேடுவர்களுக்குமான தொடர்பு தொலைவில் காணப்படுகின்றது.[1] இலங்கைத் தமிழருக்கும் சிங்களவருக்குமான இந்த நெருங்கிய தொடர்பானது, இரு சனத்தொகைக்குமான வரலாற்று, மொழியியல், கலாச்சார நெருங்கிய தொடர்பானது 2000 வருடங்களுக்கு மேலானது.[1]

350px-Sinhalese_Genetic_Admixture_TA.png
சிங்களவரின் மரபியல் கூட்டுக்கலவை - கலாநிதி. கெளதம் கே. சாட்ரியா

 

 
குறிப்புக்கள்தொகு
  1.  1.0 1.1 Kshatriya, G.K. (1995). "Genetic affinities of Sri Lankan populations". Human Biology (American Association of Anthropological Genetics) 67 (6): 843–66. பப்மெட்:8543296.

 

 
இவற்றையும் பார்க்கதொகு

மேலே கற்பகத்தரு  சொல்றார்  இப்படி 

5 hours ago, கற்பகதரு said:

இலங்கைத்தமிழரும் முஸ்லிம்களும் சிங்களவரும் மலையாளிகள் என்றே மேலே எழுதியிருக்குறேன்.

நீங்கள் தந்த இணைப்பில் எங்கு மலையாளி தொடர்பு உள்ளது ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் விக்கிபீடியா சிங்களவர்களின் புளுகு ஆள் எழுதியிருக்கார் அதிலும் மலையாளி தொடர்பை காணவில்லை ஆனால் கற்பகத்தார் சிங்களவனை விட பலமடங்கு வரலாற்று பொய்யை இந்த திரியில் அவுட்டு விடுறார் .

Link to comment
Share on other sites

2 hours ago, பெருமாள் said:

முதலில் விக்கிபீடியா சிங்களவர்களின் புளுகு ஆள் எழுதியிருக்கார்

உங்கள் தமிழீழ புளுகை இப்போது எங்கேயும் காணோமே? என்னாச்சு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

உங்கள் தமிழீழ புளுகை இப்போது எங்கேயும் காணோமே? என்னாச்சு?

மலையாள தொடர்பு என்று நீங்கள் தான் இங்கு எழுதியது தந்த  ஆதாரத்தில் அப்படியொண்டையும் காணவில்லை பொய்யான தகவலை பரப்புவதுதான் உங்கள் நோக்கமா ? 

அல்லது சொந்த இனத்தையே கரித்துக்கொண்டு ..........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

மலையாள தொடர்பு என்று நீங்கள் தான் இங்கு எழுதியது தந்த  ஆதாரத்தில் அப்படியொண்டையும் காணவில்லை பொய்யான தகவலை பரப்புவதுதான் உங்கள் நோக்கமா ? 

அல்லது சொந்த இனத்தையே கரித்துக்கொண்டு ..........................

கரிக்காட்டில் கல்லா நிறையாது எல்லோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலே பெருமாள் இணைத்த ஆய்வு 1995 இல் அப்போது வழக்கத்திலிருந்த முறைகளைக் கையாண்டு செய்யப் பட்டிருக்கிறது. முடிவில் தவறுகள் இல்லை, ஆனால் அவர்களால் இந்தியாவின் எந்தப் பிரதேசத்தோடு தொடர்பு இருக்கிறது என்பதைச் சொல்ல முடியாது - எனவே ஆய்வு முடிவில் அது உள்ளடங்கவில்லை!
 ஆனால் இன்னும் granular ஆக 2013 இல் வெளிவந்த ஆய்வு நவீன முறைகளைக் கையாண்டு செய்யப் பட்டிருக்கிறது.

இந்த இரண்டாவது ஆய்வில் பயன்படுத்தப் பட்டிருப்பது எங்கள் கலங்களில் இருக்கும் சிறுமணிகள் (mitochondria) எனும் அமைப்பினுள் இருக்கும் டி.என்.ஏ. இது ஏன் முக்கியம்? ஆணின் விந்து பெண்ணின் முட்டையைக் கருக்கட்டும் போது, முளையம் உருவாகிறது. அந்த முளையத்தின் மிகப் பெரும்பான்மையான சிறுமணிகள் தாயின் முட்டையிலிருந்தே வருகின்றன. முளையம் வளர்ந்து , பிறந்து இன்னொரு மனிதனாகும் போது அந்த மனிதனின் உடலில் இருக்கும் சிறுமணிகள் அனேகமாக எல்லாமே தாயிடமிருந்து வந்தவையாகவே இருக்கும். எனவே, ஆதிப் பரம்பரை தேடும் ஆய்வில் இந்த தாய்வழிச் சிறு மணிகளின்  டி.என்.ஏ (mtDNA) தான் ஏற்றுக் கொள்ளப் பட்ட நியமமாக இப்போது இருக்கிறது.

இனி கீழுள்ள படத்தைப் பாருங்கள்:

Figure 5

 

அங்கே TS Jaf என்று இருப்பது யாழ்ப்பாணத் தமிழ். இந்தியாவின் எந்தப் பகுதியோடு யாழ்ப்பாணத்தமிழர்கள் நெருக்கமாக இருக்கிறார்கள் என்று பார்க்கும் போது, மூன்று இந்தியப் பிரதேசங்கள் நெருக்கமாக வருகின்றன: அவை, NI-Tri-Tha (தற்போதைய உத்தரகாண்ட்), WI-Cas-Guj (குஜராத்), SI-Cas-Coc (கேரளா) என்பன. புள்ளிகளிடையேயான தூரங்களை ஒப்பிட்டால், தமிழ் நாட்டை விட (SI-Tri-Pan) யாழ் தமிழர்கள் வட இந்தியாவோடும், கேரளாவோடும், குஜராத்தோடும் நெருக்கமாக இருப்பதாகவே தெரிகிறது! 

இந்த இணைப்பில் சென்று முழு ஆய்வையும் வாசிக்கலாம்:

https://www.nature.com/articles/jhg2013112


 பி.கு: எனவே, எம்மிடையே இனத்தூய்மை பேசுவோர் இரு முனை கூரான கத்தியை வைத்து விளையாடும் வேலையைத் தான் செய்கின்றனர். இனத்தூய்மையை பிழையான வழியில் நோண்ட ஆரம்பித்தால், நம் மூக்கே ஒரு நாள்  வெட்டு வாங்க வேண்டி வரும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பெருமாள் said:

அவரின் கற்கை இலங்கைத் தமிழர் இந்தியத் தமிழர்களுடனான தொடர்பைவிட (16.63% +/- 8.73) சிங்களவர்களுடன் பாரிய தொடர்பை (55.20% +/- 9.47) கொண்டிருப்பதாகத் தெரிவிக்கின்றது. ஆனால், சிங்களவர் தென்னிந்திய தமிழர்களுடன் பாரிய தொடர்பையும் (69.86% +/- 0.61), அதற்கடுத்து வட இந்திய வங்காளியினருடன் தொடர்பு (25.41% +/- 0.51). கொண்டிருப்பதாக கண்டார். இலங்கைத் தமிழரும் சிங்களவரும் 55% பொது மரபணுத்தொகுப்பை பகிர்கின்றனர். அவர்களுக்கும் சுதேசிகளான வேடுவர்களுக்குமான தொடர்பு தொலைவில் காணப்படுகின்றது.

இலங்கை தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் மரபணுவியல் ஒற்றுமை 55% சதவீதமாம்.அதே சிங்களவர்களுக்கு தென்னிந்திய தமிழர்களுடன் தொடர்ப்பு 70% தமாம். ஆனால்.. இலங்கைத் தமிழர்களுக்கும்.. தென்னிந்திய தமிழர்களுக்கும் தொடர்ப்பு வெறும் 16% சதவீதமாம். 

மேலும் சிங்களவர்களுக்கு 25% சதவீதம் தானாம் வங்காளித் தொடர்ப்பு.. அதாவது வடக்கிந்தியத் தொடர்ப்பு.

தமிழர்களுக்கு அது எத்தனை சதவீதம் என்று சொல்லேல்ல.

சரி.. இந்த ஆய்வு நடுநிலையானதா.. திறனாய்வுக்கு உள்ளானதா என்பதை எல்லாம் விட்டிட்டு பார்த்தாலும்..

விஜயன்.. கும்பல்.. வடக்கிந்தியர்கள் அல்ல.  வேடுவர்களே தங்கள் மூதாதை என்ற சிங்களத்தின் கருத்தியலும் அடிபட்டுப் போகுது.

அதுசரி மகாவம்சப்படி.. சிங்களவர்கள் சிங்கத்துக்கு மிக நெருக்கமா இருந்திருக்கனுமே.. அதையும் காணம்.

ஆக.. சிங்களவர்கள் எனப்படுவோர்.. இன்றைய தெலுங்கர்கள் எனப்படும்.. முன்னைய தமிழர்கள் ஆவர். இன்றைய ஈழத்தமிழர்கள்.. முன்னைய சேர நாட்டுக்காரர்கள் தாம் அதிகம். சோழ நாட்டு தமிழகத் தமிழ் கலப்பு அதில் உண்டு.  ஆக சிங்களவர்களிடம்.. வட இந்தியத் தொடர்பு.. அசோகன்.. விஜயன் கதை.. இலங்கை சிங்களவர்களுக்கே பூர்வீகமானது என்பதெல்லாமே அடிபட்டுப் போகுது. 

ஏனெனில்.. சிங்களவர்களுக்கு முன் தென்னிந்தியாவை மையப்படுத்தி.. சேர நாட்டிலும்... தமிழகத்திலும் தமிழர்கள் வாழ ஆரம்பித்துவிட்டனர். தமிழர்களின் பரம்பல்.. வடக்கே.. சரஸ்வதி நதிவரையும்.. கிழக்கே... வங்கம் வரையும்.. விரிந்தே இருந்துள்ளது. சோழர் காலத்தில்.. அது இன்னும் பரம்பலடைந்துள்ளது.

இவை எல்லாத்தையும் கருத்தில் கொண்டால்.. சிங்களவர்களின் தோற்றம் தமிழர்கள் சார்ந்தது என்பது வெளிப்படையாவதோடு.. தென்னிந்திய நாயக்க.. தெலுங்கர் தமிழர் கூட்டமே.. சிங்களவர்கள் என்ற தொல்பியல் மனித இனப்பரம்பல் ஆய்வுக்கு அமைய மரபணு ஆய்வு சரி நிகர்ப்படுத்திச் செல்கிறது. 

ஆனால்.. இந்த ஆய்வை மையப்படுத்தி.. தமிழர்களை சிங்களவர்களாகக் காட்டும் வலுவற்ற உக்தி கையாளப்பட்டிருப்பது.. இந்த ஆய்வின் நடுநிலைத் தன்மை.. திறனாய்வை கேள்விக்கு உட்படுத்துகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

மேலும் சிங்களவர்களுக்கு 25% சதவீதம் தானாம் வங்காளித் தொடர்ப்பு.. அதாவது வடக்கிந்தியத் தொடர்ப்பு.

தமிழர்களுக்கு அது எத்தனை சதவீதம் என்று சொல்லேல்ல.

28%. 

விசித்திரமாக, சிங்களவர்களை விட நாங்கள் சிங்கம் தனகின மக்கள்.

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.