Jump to content

மன்னாரில்... பங்குதந்தைக்கும், விவசாயிகளுக்கும் இடையில் வாய்த்தர்க்கம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் பங்குதந்தைக்கும் விவசாயிகளுக்கும் இடையில் வாய்த்தர்க்கம்!

மன்னாரில்... பங்குதந்தைக்கும், விவசாயிகளுக்கும் இடையில் வாய்த்தர்க்கம்!

மன்னார்-மடு, பெரிய பண்டிவிரிச்சான் பகுதியில் விவசாயிகளுக்கும் பெரிய பண்டிவிரிச்சான் பங்கு தந்தைக்கும் இடையில், வயல் காணியில் வைத்து நேற்று (சனிக்கிழமை) வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

குறித்த விவசாயிகள் 40 வருடங்களுக்கு மேலாக குறித்த வயல் காணியில் விவசாயம் செய்து வருகின்றபோதும் அந்த பணியை தமக்கு வழங்குமாறு மடு ஆலய நிர்வாகம், விவசாயிகளுக்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வந்துள்ளது.

இதன் விளைவாக தொடர்ச்சியாக விவசாயிகள் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக இந்த விடயத்துக்காக போராடி வருகின்றனர்.

மேலும், மாகாண காணி ஆணையாளர் மற்றும் வட மாகாண ஆளுநர் அவருடைய அனுமதியின் பெயரில் விவசாயிகள் குறித்த வயல் காணியை உழவு செய்து பயிர் செய்ய தயாராகி வருகின்ற நிலையில், அத்துமீறி பிரவேசித்த பங்குத்தந்தை, மடு தேவாலயத்தில் வேலை செய்கின்ற சிலரும் இரண்டு உழவு இயந்திரங்களில் வருகைதந்து அத்துமீறி விவசாய காணிகளை உழவு செய்ய முற்பட்டனர் .

இந்த சந்தர்ப்பத்தில் குறித்த பங்கு தந்தைக்கும் விவசாயிகளுக்கும் இடையில் கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

அதன்தொடர்ச்சியாக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பங்கு தந்தை  குறித்த வயல் காணியை விட்டு வெளியேறி சென்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://athavannews.com/2021/1241229

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் உண்மை செய்தியை அறிக்கையிட்ட ஊடகவியலாளருக்கு மத குருவால் அச்சுறுத்தல்

மன்னார் மடு பிரதேச் செயலக பிரிவில் உள்ள கோவில் மோட்டை காணி பிரச்சினை தொடர்பாக கோவில் மோட்டை கத்தோலிக்க விவசாயிகள் மற்றும் மடு தேவாலயத்திற்கு இடையில் காணப்பட்ட பிரச்சினை தொடர்பாக உண்மை செய்திகளை வெளியிட்ட ஊடகவியளாலருக்கு மடு பகுதியில் கடமையாற்றும் லோரன்ஸ் என்ற கத்தோலிக்க மத குரு அச்சுறுத்தல் விடுத்துள்ளதுடன் குறித்த ஊடகவியளாலரின் வீட்டுக்கு அடியாட்களுடன் சென்று அடவடித்தனத்திலும் ஈடுபட்டுள்ளார்

 மடு கோவில் மோட்டை காணி தொடர்பான பிரச்சினை நீண்ட காலமாக இடம் பெற்று வருகின்ற நிலையில் நேற்றைய தினம் விவசாய காணிகளை உழவு செய்ய முற்பட்ட சமயம் கோவில் மோட்டை விவசாயிகளுக்கும் லோரன்ஸ் மதகுரு குழுவினருக்கும் முரண்பாடு தோற்றம் பெற்ற நிலையில் குறித்த செய்தியை ஊடகவியளாலர் அறிக்கையிட்டதுடன் குறித்த சம்பவம் தொடர்பாக மடு தேவலயத்தின் நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு குறித்த மத குருவிடம் கோரியுள்ளார் ஆனாலும் குறித்த மத குரு விளக்கம் கொடுக்க மறுத்த நிலையில் தன்னால் சேகரிக்கப்பட தகவலின் அடிப்படையில் குறித்த செய்தியை அறிக்கையிட்டுள்ளார் 

 செய்தி வெளியாகிய நிலையில் லோரன்ஸ் என்ற பிரச்சினையுடன் சம்ம்தப்பட்ட மத குரு தொலைபேசி ஊடாக குறித்த ஊடகவியளாலரை அச்சுறுத்தும் விதமாக பேசியதுடன் தான் யார் என்பதை காட்டுவேண் எனவும் தொலைபேசியில் தெரிவித்துள்ளார் தொலைபேசியில் அச்சுறுத்தியதுடன் நிறுத்தாமல் இன்று இரவு குறித்த ஊடகவியளாலர் இல்லாத நேரத்தில் அவருடைய வீட்டை சில அடியாட்களுடன் சுற்றிவளைத்ததுடன் வீட்டின் மீது கற்றகளை வீசியுள்ளனர் விடயம் அறிந்து அப்பகுதி மக்கள் ஒன்று திரண்ட நிலையில் அக்குழுவினர் ஓடி ஒளிந்துள்ளனர் மத குருவாக இருந்து மன்னார் மறை மாவட்ட ஆயரின் அனுமதி இன்றி மத குரு என்ற நிலையை மறந்து ஏழை விவசாயிகளின் காணிக்காக இவ்வாறு அச்சுறுத்தல் செய்ற்பாட்டில் ஈடுபட்ட மத குரு மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பாதிக்கப்பட ஊடகவியளாலரால் மடு பொலிஸில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது

http://www.newmannar.lk/

blob:https://www.facebook.com/e2fe2eba-b5c3-4f4c-84a7-7811afe0fd77

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் பங்குத் தந்தை மனம் திரும்பி ஆண்டவரிடம் பாவமன்னிப்பு கேட்கவேண்டும். இயேசு சொன்னார்: ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தையும் காட்டுன்ங்கள் என்று. உங்கள் சேர்ப்பு பரலோகத்தில் இருக்கவேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார் என்று கேள்விப்பட்டுள்ளேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.