Jump to content

ஊசிக் கதைகள் -நிலாந்தன்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஊசிக் கதைகள் -நிலாந்தன்!

September 26, 2021

 

கட்டுக்கதைகளுக்கு இரையாகாமல் தமது பிள்ளைகளுக்கு தடுப்பூசி ஏற்றும் விடயத்தில் பின்வாங்காமல் செயற்படுமாறு, பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம், சிறுவர் நோயியல் விசேட வைத்திய நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். நேற்று முன்தினம் அதாவது கடந்த 24ஆம் திகதியிலிருந்து பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கு தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் தொடக்கப்படுவதையொட்டி மேற்கண்டவாறு கூறியுள்ளார்கள். கொரோனா வைரஸ் தோன்றிய காலமிருந்தே அதுதொடர்பான கட்டுக்கதைகளும் தோன்றத் தொடங்கின.

கிளிநொச்சியில் நடந்த ஒரு கதை வருமாறு. ஐரோப்பாவில் வசிக்கும் ஒருவர் கிளிநொச்சியிலுள்ள உறவினருக்கு ஒரு காணொளியை அனுப்பியிருக்கிறார். காணொளியில் தான் தடுப்பூசி பெற்றுக் கொண்டபின் தனக்கு காந்த சக்தி ஏற்பட்டதை நிரூபிக்கும் விதத்தில் ஊசி போட்ட இடத்தில் ஒரு சவர அலகை வைத்து அது ஒட்டிக் கொண்டிருப்பதை படம் பிடித்து அனுப்பியிருக்கிறார். அதைப்பார்த்த கிளிநொச்சியிலுள்ள அவருடைய உறவினர் காணொளியை தனக்கு தெரிந்த ஒருவருக்கு காட்டியிருக்கிறார். அதைப்பார்த்த மற்றவர் தான் ஊசி ஏற்றிக் கொண்ட பின் தனது கையில் ஒரு சிறிய கத்தியை வைத்து பார்த்தாராம். அது ஒட்டிக் கொண்டு விட்டதாம். அதைப் படம் எடுத்து தனக்கு ஐரோப்பாவிலிருந்து வந்த காணொளியை காட்டியவருக்கு அனுப்பியிருக்கிறார்.

ஊசி போட்டால் உடலில் காந்த சக்தி ஏற்படும் என்பது அல்லது உடல் ஒரு உயிருள்ள காந்தமாக மாறிவிடும் என்ற கருத்து முதலில் வட இந்தியாவில்தான் தோன்றியது. அங்கே ஊசி போட்டபின் ஒருவருடைய உடலில் அசாதாரணமாக காந்தசக்தி பெருகி அருகில் உள்ள உலோகங்கள் ஒட்டிக் கொள்வதை காட்டும் ஒரு காணொளி முதலில் வெளியாகியது. அது இப்போதும் நம்பப்படும் கதையாக உள்ளது.

இரண்டாவது கதையில் எனது நண்பர் ஒருவர் சொன்னார் தடுப்பூசி எடுத்த பின் தன்னுடைய மாமனாரின் குருதிக் குளுக்கோசின் அளவு ஒப்பீட்டளவில் குறைந்துவிட்டதாக. இன்ஷ்யூரன்ஸ் முகாமையாளர் ஒருவர் என்னிடம் கேட்டார் சினோபாம் போட்டால் ஆஸ்துமா கட்டுப்படும் என்று கூறுகிறார்களே உண்மையா ? என்று.

மூன்றாவது கதை நாட்டின் தலைநகரத்தில் நடந்தது. கொழும்பு மாவட்டத்தில் பைஸர் தடுப்பூசி இல்லாத போது ஏனைய தடுப்பூசியை பெற மனதில்லாமல் 20 தொடக்கம் 30 வயது வரையானவர்கள் பலரும் மீளத் திரும்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு மாநகரசபையின் பிரதான மருத்துவர் ருவன் விஜயமுனி இதனை தெரிவித்துள்ளார். இவ்வாறு தடுப்பூசி பெறாமல் திரும்புவோரின் எண்ணிக்கை 30 வீதமாக உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பு ஊசி ஏற்றும் திட்டத்தை அரசாங்கம் அறிவித்தது. அதில் ஒரு அரசியல் பொருளாதார நோக்கம் உண்டு. உழைப்புச் சக்தி அதிகமுடைய அதேசமயம் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகம் உள்ளவர்களை தடுப்பூசி போட்டு மேலும் பாதுகாப்பதன்மூலம் நாட்டின் உழைப்பாளிகளைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் நோக்கம்.

ஆனால் நாட்டில் தற்போது 20-30வயதுக்கு இடைப்பட்ட இளையோரி டையே கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் ஆர்வம் குறைவடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். தடுப்பூசி ஏற்றிக்கொண்டால் பாலியல் சக்தி குறையும்; சந்ததி விருத்தி பாதிப்புறும் என சமூக ஊடங்களில் வெளியான தகவல்களால் இளைஞர், யுவதிகள் மத்தியில் தடுப்பூசி பெறும் ஆர்வம் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். ஆனால் இது உலகில் எந்த ஒரு ஆராய்ச்சியின் மூலமும் உறுதிப்படுத்தப்படவில்லை. எனவே இளைஞர்,யுவதிகள் அச்சமின்றி தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு தயங்குவது நாட்டை ஆபத்துக்குள்ளாக்குகின்றது என அரசமருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சமூகத்தில் வைரஸ் தொற்று அதிகரிக்கும் ஆபத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். தடுப்பூசி நிலையங்களிற்கு வரும் இளைஞர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது என அவர் தெரிவித்துள்ளார். இளைஞர்கள் மோசமான பாதிப்புகளை எதிர்கொள்ளாத நிலை காணப்படலாம். ஆனால் அவர்கள் சமூகத்தில் வைரஸ் சுமைகளை அதிகரிப்பார்கள் என தெரிவித்துள்ள அவர் சமூகத்தில் வைரஸ் சுமைகள் காணப்பட்டால் அதனால் புதிய திரிபுகள் உருவாகலாம் என தெரிவித்துள்ளார். அவ்வாறான சூழ்நிலையில் திரிப்படைந்த வைரஸ் சமூகத்திற்குள்ளிருந்து உருவாகக்கூடும். தடுப்பூசிகளால் அதனை கட்டுப்படுத்தமுடியாத நிலை காணப்படலாம், இதன்காரணமாகவே வைரஸ் சுமைகளை குறைப்பதற்கு தடுப்பூசியை செலுத்தவேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரை செய்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாலாவது கதையில் சம்பந்தப்பட்டவர் உள்ளூர் மருத்துவம், இயற்கை உணவு போன்றவற்றில் நாட்டம் உடைய ஒருவர். அவர்தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. ஏனென்றால் அது ஒரு சீனச்சதி என்று சொன்னார். அப்படியென்றால் உலகில் அதிகம் பேர்,அதாவது இதுவரை 200 கோடிக்கு மேற்பட்டவர்கள் சீனத்தடுப்பூசியை பெற்றிருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டினேன். அவர் சொன்னார் இருக்கலாம் ஆனால் சீனா உலகின் ஒவ்வொரு நாட்டுக்கும் ஏற்றாற்போல பொருட்களை உற்பத்தி செய்கிறது. அது குழந்தை பிள்ளைகளுக்காக உற்பத்தி செய்யும் விளையாட்டு பொருட்கள் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு தரத்தில் காணப்படுகின்றன. மேற்கு நாடுகளுக்காக உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்களில் உயர்தரம் பேணப்படும். ஆனால் ஆசிய ஆபிரிக்க நாடுகளுக்கு அனுப்பப்படும் உற்பத்திகளில் அதிகம் ரசாயனம் இருக்கும். அது குழந்தைகளுக்கு தீங்கானதாகவும் இருக்கும். எனவே சீனா எதைச் செய்தாலும் அதில் ஒரு வணிக நோக்கம் இருக்கும். எங்களுக்கு தரப்பட்டு ஊசி அப்படி ஒன்றாக இருக்கலாம் என்று சொன்னார்.

அரசு ஊழியரான தன்னுடைய மனைவி உத்தியோக நடைமுறைகளின் படி ஊசி போட வேண்டியிருந்தது என்றும் அவ்வாறு ஊசி போட்டுக் கொண்ட பின் அவருடைய உடலில் தசைகளில் மென்மைத் தன்மையும் எலும்புகளில் பலவீனமும் தோன்றியிருப்பதாக அவர் சொன்னார். இதை ஒரு ஊகமாக வைத்துக் கொண்டிருக்காமல் ஏன் உரிய மருத்துவர்களிடம் சென்று பரிசோதிக்ககூடாது என்று கேட்டேன். கொரோனா வைரஸ் மருத்துவர்களை மட்டுமல்ல மனித குலத்தின் அறிவியல் சாதனைகள் பலவற்றையும் நிர்வாணமாக்கி விட்டது என்றும் அவர் சொன்னார். இது நாலாவது கதை.

மேற்கண்டவை யாவும் பெரும்பாலும் சீனத்துத் தடுப்பூசி பற்றிய கதைகள். சீனாவை குறித்தும் அதன் உற்பத்திகளை குறித்தும் அப்படிப் பல சந்தேகங்கள் உலகில் உண்டு. இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு முன்னரான ஒரு காலப்பகுதியில் யூதர்களை குறித்தும் உலகில் ஒரு பகுதியினர் அவ்வாறு சந்தேகித்தார்கள். குறிப்பாக ஐரோப்பாவில் இயற்கை அனர்த்தங்கள் பஞ்சம் என்று ஏதாவது வந்தால் அது யூதர்களின் பில்லி சூனிய வேலையாகத்தான் இருக்கும் என்று நம்பிய ஒரு காலம் உண்டு. இவர்கள் பில்லி சூனியக்காரர்கள் மந்திர தந்திரங்களில் தேர்ந்தவர்கள் என்ற ஒரு நம்பிக்கை நிலவியது. யூத இனப்படுகொலையை ஊக்குவித்த காரணிகளில் அதுவும் ஒன்று. யூதர்களைப் போலவே சீனர்களைப் பற்றியும் குறிப்பாக வைரசுகுப்பின் பல்வேறு விதமான மர்மக் கதைகள் உண்டு. இக்கதைகளில் பல சூழ்ச்சிக் கோட்பாடுகளில் இருந்து உற்பத்தியாகின்றன. சீனர்கள் எதை செய்தாலும் உள்நோக்கத்தோடுதான் செய்வார்கள் என்று நம்பும் ஒரு நிலைமையை கொரானா வைரஸ் கொண்டு வந்துவிட்டது.

ஆனால் உலகில் அதிக தொகையினர் அதாவது 200 கோடிக்கும் அதிகமானவர்கள் சீன ஊசியைத்தான் போட்டிருக்கிறார்கள். இலங்கைதீவில் நானும் உட்பட லட்சக்கணக்கானவர்கள் சீனத்து ஊசியைதான் பெற்றுக்கொண்டோம். சீனாவின் ஊசிக்கு பின்னால் சூதான நோக்கங்கள் ஏதாவது இருக்குமா இல்லையா என்பதை சோதிக்கும் பரிசோதனைக் கூடமாக மாற்றப்பட்ட கோடிக்கணக்கான உடல்களில் என்னுடையதும் ஒன்று.

இவ்வாறு சீனத் தடுப்பூசிகளை குறித்து ஐரோப்பாவிலும் அச்சம் இருப்பதனால்தான் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் தமது நாட்டுக்குள் வருபவர்கள் சீன தடுப்பூசிகளை போட்டிருந்தால் குறிப்பிட்ட காலம் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கிய பின்னரே நாட்டுக்குள் பிரவேசிக்கலாம் என்று அறிவித்திருக்கின்றன. அவ்வாறு குறிப்பிட்டகாலம் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகும் பொழுது அதற்கு வேண்டிய செலவையும் குறிப்பிட்ட பயணிதான் பொறுப்பேற்க வேண்டும். அவ்வாறு நட்சத்திர விடுதிகளில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளானால் அதற்குரிய செலவு சில சமயம் விமான டிக்கெட்டைவிட அதிகமாக இருக்கும் என்ற அச்சம் உண்டு. இதனால் அடிக்கடி வெளிநாடுகளுக்கு பயணம் செய்பவர்கள் குறிப்பாக அமெரிக்க இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்கள் சீனத் தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதற்கு தயங்குகிறார்கள். அதனால்தான் வடக்கு-கிழக்கில் மன்னார் மாவட்டத்தில் பைசர் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டபோது யாழ்ப்பாணத்தில் இருந்தும் புத்தளம் சிலாபம் போன்ற பகுதிகளில் இருந்தும் அதிகமானவர்கள் பொய்யான ஆவணங்களைக் காட்டி மன்னாருக்கு சென்று பைசர் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டார்கள். இவ்வாறான முறைகேடுகளை முன்வைத்து அரசாங்கம் பைசர் தடுப்பூசியை நிர்வகிக்கும் பொறுப்பை முழுக்க முழுக்க படைத்தரப்பிடம் ஒப்படைத்தது.

ஆனால் மேற்கத்திய தயாரிப்புகளான பைசர் அல்லது மொடோனா தடுப்பூசிகள் மீதான மோகம் என்பது ஒருவித வெள்ளைக்கார மோகமாகவும் அல்லது சீன தயாரிப்புகள் மீதான சந்தேகமாகவும் காணப்படுகிறது. இலங்கைக்கு அதிகளவு தடுப்பூசிகளை வழங்கிய நாடு சீனா. ஆனால் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அரசாங்கம் பைசர் தடுப்பூசிகளை வழங்கியது தொடர்பில் நாட்டில் சர்ச்சைகள் ஏற்பட்டன. அம்பாந்தோட்டையில் ஒரு துறைமுகம் இருப்பதனால் அங்கு பைஸர் தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக அரசாங்கம் கூறியது. அப்பொழுது ஒரு முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டார் கொழும்பில் இருப்பது துறைமுகம் இல்லையா என்று. ராஜபக்சக்கள் தமது சொந்த மாவட்டமான அம்பாந்தோட்டைக்கு ஏன் பைசர் ஊசிகளை கொடுத்தார்கள்? அவர்களுடைய இதயத்தில் வீற்றிருக்கும் சீனா தயாரித்த சீன தடுப்பூசிகளை ஏன் கொடுக்கவில்லை? அதைவிட முக்கியமான கேள்வி நாட்டை ஆளும் குடும்பம் எந்த ஊசியை ஏற்றிக் கொண்டது? யாருக்காவது தெரியுமா?

அதேசமயம்,குறைந்த விலையில் கொள்வனவுச் செய்யக்கூடிய சீனத் தயாரிப்பான சினோபார்ம் தடுப்பூசிக்கு ஏன் அதிக விலை கொடுக்கப்படுகிறது ? என அரச மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. இலங்கையிலும் உலகெங்கிலும் மிகவும் விரும்பப்படும் பைஷர்,மொடர்னா தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கு பதிலாக சீனத்தடுப்பூசிகளை அதிக விலைக்கு கொள்வனவு செய்வது ஆச்சரியமாக இருக்கிறது என மேற்படி சங்கம் தெரிவித்துள்ளது. பொது நிதி பயன்படுத்தப்படுவதால், இதுதொடர்பில் அதிகாரிகள் பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என அச்சங்கத்தின் தலைவரான ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். உலகின் ஏனைய இடங்களில் சினோபார்ம் தடுப்பூசியானது ஒரு டோஸுக்கு 10 முதல் 14 டொலருக்கு கொள்வனவு செய்யப்படுகிறது. அதே நேரத்தில் இலங்கை தடுப்பூசியை 15 டொலருக்கு கொள்வனவு செய்கிறது எனவும் அவர் தெரிவித்தார். இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 22 மில்லியன் தடுப்பூசிகளில் 17 மில்லியன் தடுப்பூசிகள் சீனாவிலிருந்து வந்தவையாகும்.அதாவது நாட்டில் தடுப்பூசிக்குள் கொமிஷன் இருக்கிறது என்று பொருள்.

மக்களுக்கான வக்சின் கூட்டமைப்பு என்ற உலகளாவிய அமைப்பு கடந்த மே மாதம் வெளியிட்ட ஒரு அறிக்கையில் covid-19 வைரஸானது ஒன்பது புதிய கோடீஸ்வரர்களை உருவாக்கியிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளது. இந்த ஒன்பது கோடீஸ்வரர்களும் நிகர லாபமாக 19.3 பில்லியன் டொலர்களை பெறுகிறார்கள் என்றும் குறைந்தளவு வருமானம் பெறும் நாடுகளிலுள்ள முழு மக்களுக்கும் 1.3 தடவைகள் வக்சினேற்ற இந்தக் காசு போதும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்திருந்தது.

மேற்படி அமைப்புக்குள் அங்கம் வகிக்கும் ஒக்ஸ்பாமின் சுகாதார கொள்கை நிர்வாக முகாமையாளரான அனா மரியோட் “இந்த கொடூரமான நோயைக் கட்டுப்படுத்துவதற்கான எமது கூட்டுக் தோல்வியை நாங்கள் சாட்சியம் செய்கிறோம். தங்கள் மிகவிரைவாக புதிய கோடீஸ்வரர்களை உருவாக்கி இருக்கிறோம் ஆனால் கோடிக்கணக்கான மக்களுக்கு ஊசி போடுவதில் முழு அளவுக்கு தோல்வி அடைந்திருக்கிறோம்” என்று கடந்த மே மாதம் குறிப்பிட்டிருந்தார்.

“தடுப்பூசித் தானம் தொடர்பாக உண்மையிலேயே நான் மிகுந்த விரக்தியில் உள்ளேன். உலகின் பல நாடுகள் முதல் டோஸ், இரண்டாவது டோஸ் செலுத்திக் கொள்ள வழியில்லாமல் தவிக்கும் சூழலில் சில நாடுகள் மூன்றாவது டோஸை ஊக்குவித்துக் கொண்டிருக்கின்றன. மூன்றாவது டோஸ் போடும் தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு தானமாகக் கொடுக்கலாம். இதுவரை உலகளவில் உற்பத்தியாகியுள்ள 4.8 பில்லியனுக்கும் அதிகமான டோஸ் தடுப்பூசியில் 75வீத தடுப்பூசிகள் 10 நாடுகளே பயன்படுத்தியுள்ளன. தடுப்பூசி அநீதியால் கொரோனா வைரஸ் மேலும் திரிப்படைந்து அச்சுறுத்தும். இந்த உலகில் உள்ள அனைவரும் பாதுகாப்பான நபராக மாறும்வரை எந்த ஒரு தனிநபரும் நான் பாதுகாப்பாக இருக்கிறேன் என்று கூறமுடியாது”என்று உலக சுகாதார மையத் தலைவர் டெட்ரோஸ் அதானொம் கடந்த ஓகஸ்ட் மாதம் தெரிவித்துள்ளார்.

இன்டர்நெற்றுக்குக்கு அடுத்தபடியாக மனிதகுலம் முழுவதையும் -எல்லாக் கண்டங்களையும் எல்லா மதங்களையும் எல்லா இனங்களையும் பண்பாடுகளையும்- மாஸ்க்கின் மூலம் ஒருங்கிணைத்தது covid-19தான். அதேசமயம் அந்த வைரசுக்கு எதிரான தடுப்பூசி உலகில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வைரஸ் உள்ளளவும் மாஸ்க் இருக்கும்;தடுப்பூசியும் இருக்கும்.தடுப்பூசி உள்ளளவும் தடுப்பூசி அரசியலும் ,தடுப்பூசி ஏற்றத்தாழ்வும் ;தடுப்பூசி வணிகமும்; தடுப்பூசி முதலாளிகளும்; தடுப்பூசிக் கள்ளர்களும் ; தடுப்பூசிக் கதைகளும் இருக்கவே செய்யும்.

https://globaltamilnews.net/2021/166457

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.