Jump to content

இலங்கையின் யுத்த குற்ற விசாரணைகள் சர்வதேச பொறிமுறையின் கீழ் முன்னெடுக்கப்பட வேண்டும் - ஹம்ஷாயினி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் நிச்சயம் போர் குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். யுத்த குற்ற விசாரணைகளை முன்னெடுப்பது மாத்திரமின்றி , சிறுபான்மையினரின் உரிமைகளையும் மதிக்க வேண்டும். சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பதற்கான பொறுப்பும் கடமையும் பெரும்பான்மையிருக்கும் இருக்கிறது. மேற்குலக நாடுகளில் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படவில்லை எனில் அதுவே பாரியதொரு குற்றமாக கருதப்படும் என்று நோர்வே பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள ஹம்ஷாயினி குணரத்னம் தெரிவித்தார்.

கலந்துரையாடலுக்கான எந்தவொரு அழைப்பினையும் நான் ஏற்றுக் கொள்வேன். நான் புலம் பெயர் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்துபவள் இல்லை. நான் நோர்வே பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவராவேன். எவ்வாறிருப்பினும் யார் அழைப்பு விடுத்தாலும் அதனை ஏற்று கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கு நான் தயாராகவுள்ளதாகவும் ஹம்ஷாயினி குணரத்னம் தெரிவித்தார்.

நேற்று முன்தினம்  ஞாயிற்றுக்கிழமை காணொளி தொழிநுட்பத்தின் ஊடாக இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் தொடர்ந்தும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில்,

Kamzy_Gunaratnam.jpg

கேள்வி : இலங்கை தமிழர்கள் தமக்கான அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்வதில் இன்னமும் சவால்களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றனர். இதனை நீங்கள் எவ்வாறு அவதானிக்கிறீர்கள் ?

பதில் : இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் பலர் உள ரீதியாகவும், உடல் ரீதியாகவும் காயப்பட்டுள்ளனர் என்பதை ஏற்றுக் கொள்கின்றோம். மீண்டும் அதனை சரி செய்வது இலகுவானதல்ல. எனினும் இலங்கை மக்கள் தமக்கான தீர்வை அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். அதனை எம்மால் கூற முடியாது. இலங்கை எந்த திசையில் பயணிக்க வேண்டும் என்ற பாதையை அமைத்துக் கொடுப்பது அந்நாட்டு மக்களின் கைகளிலேயே உள்ளது.

என்னால் இங்கிருந்து அதற்கான வழிகளைக் கூற முடியாது. மாறாக எனது பயிற்சிகளை மாத்திரமே பகிர்ந்து கொள்ள முடியும். எனவே மக்கள் அது தொடர்பான அரசியலை தேர்ந்தெடுக்க வேண்டும். அல்லது அரசியலில் ஈடுபட வேண்டும்.

கேள்வி : இலங்கை தமிழ் மக்கள் தங்களின் இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கு சர்வதேச ஈடுபாடு மிகவும் அவசியம் என்று கருதுகின்றனர். இது தொடர்பில் உங்கள் நிலைப்பாடு ?

பதில் : நோர்வே இலங்கையுடனான நட்புறவை தொடர்ந்தும் பேணும். ஆனால் அதனை எவ்வாறு செய்வது என்பதை தற்போது விளக்கமாகக் கூற முடியாது. எனினும் யுத்த குற்ற விசாரணைகள் நிச்சயம் இடம்பெற வேண்டும். அந்த விசாரணைகளை முன்னெடுக்காமல் எம்மால் தொடர்ந்தும் பயணிக்க முடியாது. நல்லிணக்கம் , வெளிப்படைதன்மை மற்றும் ஜனநாயகத்திற்கு இது மிகவும் அத்தியாவசியமானதாகும்.

எனவே நோர்வே இலங்கையுடனான நட்புறவை தொடர்வதோடு , இலங்கையில் யுத்த குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற இரு விடயங்களையும் நான் வலியுறுத்துகின்றேன். யுத்த குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை எனில் தொடர்ந்து பயணிப்பது கடினமாகும். காரணம் சகலருக்கும் உண்மையை கண்டறிதலே தேவையாகவுள்ளது.

கேள்வி : இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு சர்வதேச பொறிமுறையின் கீழ் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதில் இலங்கை வம்சாவளி நோர்வே பாராளுமன்ற உறுப்பினரான உங்களின் பங்களிப்பு எவ்வாறு அமையும் ?

பதில் : இலங்கையின் விவகாரத்தில் சர்வதேச ரீதியில் சில விடயங்களைச் செய்ய முடியும். ஆனால் இலங்கையிலுள்ள மக்களே இதில் அதிக அவதானம் செலுத்த வேண்டும். சமூகம் எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை அங்குள்ள மக்களே தீர்மானிக்க வேண்டும். எவ்வாறிருப்பினும் சர்வதேசம் என்ற ரீதியில் எமக்கும் பொறுப்புக்கள் உள்ளன. அதற்கமைய இலங்கையுடனான நட்புறவை தொடர்தல் மற்றும் யுத்த குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற இரு நிலைப்பாட்டில் ஸ்திரமாகவுள்ளோம்.

கேள்வி : புலம்பெயர் தமிழர்களுக்கு இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள அழைப்பை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?

பதில் : கலந்துரையாடலுக்கான எந்தவொரு அழைப்பினையும் நான் ஏற்றுக் கொள்வேன். நான் புலம் பெயர் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்துபவள் இல்லை. நான் நோர்வே பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவராவேன். எவ்வாறிருப்பினும் யார் அழைப்பு விடுத்தாலும் அதனை ஏற்று கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கு நான் தயாராகவுள்ளேன்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சியில் இலங்கைக்கு விஜயம் செய்து அவரை சந்தித்த போது பெண்களின் பிரச்சினைகள் , பெண்களுக்கு அரசியல் அதிகாரங்கள் வழங்கப்படுவதற்கான முக்கியத்துவம் உள்ளிட்ட பெண்களுடன் தொடர்புடைய விடயங்களையே அவரிடம் வலியுறுத்தினேன். அதே போன்று தற்போதைய ஜனாதிபதியால் அழைப்பு விடுக்கப்பட்டாலும் அவரிடமும் அரசியலில் பால் நிலை சமத்துவத்தை வலியுறுத்துவேன்.

கேள்வி : யுத்த குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாகவுள்ள நீங்கள் , அவை உள்வாரியானதாக இருக்க வேண்டும் என்று கருதுகிறீர்களா? அல்லது வெளிவாரியானதாக இருக்க வேண்டும் என்று கருதுகிறீர்களா?

பதில் : வெளிவாரியான யுத்த குற்ற விசாரணைகளையே நாம் வலியுறுத்துகின்றோம். உள்வாரி விசாரணைகளை வைத்து என்ன செய்வது? இலங்கை அரசாங்கம் தவறிழைத்திருந்தால் அதனை அவர்களே விசாரணை செய்வது பொறுத்தமானதாக இருக்குமா?

கேள்வி : இலங்கையில் தமிழர்கள் சிறுபான்மையினத்தவர்கள் ஆவர். எனவே அவர்களுக்கான தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதிலும் உரிமைகளை பாதுகாத்துக் கொள்வதிலும் சில நெருக்கடிகள் உள்ளன. இது குறித்து உங்கள் நிலைப்பாடு?

பதில் : இலங்கையில் வெளிப்படை தன்மையான ஜனநாயகம் காணப்படுகிறது என்பதை காண்பிப்பதற்கு அரசாங்கம் சில செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. யுத்த குற்ற விசாரணைகளை முன்னெடுப்பது மாத்திரமின்றி , சிறுபான்மையினரின் உரிமைகளையும் மதிக்க வேண்டும். சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பதற்கான பொறுப்பும் கடமையும் பெரும்பான்மையிருக்கும் இருக்கிறது. மேற்குலக நாடுகளில் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படவில்லை என்றால் அதுவும் பாரியதொரு குற்றமாகவே கருதப்படும். இலங்கைக்கும் இலங்கை மக்களுக்கும் என்மனதில் எப்போதும் இடமுண்டு.

இலங்கையின் யுத்த குற்ற விசாரணைகள் சர்வதேச பொறிமுறையின் கீழ் முன்னெடுக்கப்பட வேண்டும் - ஹம்ஷாயினி | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • Replies 53
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இணைக்க அரசியல் யாரையும் விட்டு வைப்பதில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/9/2021 at 19:23, பிழம்பு said:

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் நிச்சயம் போர் குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். யுத்த குற்ற விசாரணைகளை முன்னெடுப்பது மாத்திரமின்றி , சிறுபான்மையினரின் உரிமைகளையும் மதிக்க வேண்டும். நோர்வே பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள ஹம்ஷாயினி குணரத்னம் தெரிவித்தார்.

கலந்துரையாடலுக்கான எந்தவொரு அழைப்பினையும் நான் ஏற்றுக் கொள்வேன். நான் புலம் பெயர் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்துபவள் இல்லை. நான் நோர்வே பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவராவேன்.

மிகச்சிறப்பு. உண்மையான அரசியல்வாதி இவர்தான்.

 

மக்கள் தங்களையும் தங்கள் வலுவையும் சுயமதிப்பீடு செய்யும்வரை  சம்பந்தர் - டக்ளஸ் - கம்சாயினியென்று பட்டியல் நீளவே செய்யும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

//முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சியில் இலங்கைக்கு விஜயம் செய்து அவரை சந்தித்த போது பெண்களின் பிரச்சினைகள் , பெண்களுக்கு அரசியல் அதிகாரங்கள் வழங்கப்படுவதற்கான முக்கியத்துவம் உள்ளிட்ட பெண்களுடன் தொடர்புடைய விடயங்களையே அவரிடம் வலியுறுத்தினேன்.//


பெண்களுக்கு அரசியல் அதிகாரமா? உலகின் முதலாவது பெண் முதன்மை அமைச்சர்(PM) சிறிமாவோ பண்டாரநாயக்கா என்பது நினைவிருக்கட்டும், மக்களே! 
கடவுளே... 🥱🥱🥱 

 

 

//அதே போன்று தற்போதைய ஜனாதிபதியால் அழைப்பு விடுக்கப்பட்டாலும் அவரிடமும் அரசியலில் பால் நிலை சமத்துவத்தை வலியுறுத்துவேன்.//

பால் நிலை சமத்துவமா?🤣🤣 
ஐயோ... இந்த மாதிரி ஒன்டை எங்களுக்காகப் பேசும் என்டு எதிர் பார்த்த ஆக்கள் ஆரேனும் இருந்தால் இண்டையோட அந்த நிலைப்பாட்டை குப்பையில் போடவும். இதுவும் பண்டியோடு🐽 சேர்ந்த கன்டே!🐷🐷

 

 

//இலங்கைக்கும் இலங்கை மக்களுக்கும் என்மனதில் எப்போதும் இடமுண்டு.//

****

 

 

Link to comment
Share on other sites

இவர் தன்னை முழுவதுமாக தமிழ் மக்களிடம் இருந்து அன்னியப்பட்டு, தான் தமிழர் வாக்குகள் இன்றியே இனி வெற்றி பெறுவேன் என்று கூறிவிட்டார். இவரைநோக்கிநோர்வாத் தமிழர்கள் இனிப் போராட்டங்களை நடாத்த வேண்டும். இவர் முற்று முழுதாகவேநோர்வே அரசின் முகவராகத் தொழிற்படத் தொடங்கி விட்டர். இவரின் இப் பேட்டியை கொழும்புநோர்வேத் தூதரகமே ஒழுஙகமைதுள்ளது. இதைநோர்வாத் தமிழர்கள் இவரின் குடும்ப உறவுகள் மூலமாவது சொல்லி அவர் போகும் பாதை தவறானது என்று சொல்லி வழி காட்ட வேண்டும். இவர் தமிழ் இளைய்யொர் அமைப்பின் செயற்பாட்டளாராக இருந்து அரசியலுக்குக் கொண்டு வரப்பட்டவர். இப்பொது ஏறி வந்த ஏணியய்த் தூக்கி எறிந்து விட்டடார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, நன்னிச் சோழன் said:

//முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சியில் இலங்கைக்கு விஜயம் செய்து அவரை சந்தித்த போது பெண்களின் பிரச்சினைகள் , பெண்களுக்கு அரசியல் அதிகாரங்கள் வழங்கப்படுவதற்கான முக்கியத்துவம் உள்ளிட்ட பெண்களுடன் தொடர்புடைய விடயங்களையே அவரிடம் வலியுறுத்தினேன்.//


பெண்களுக்கு அரசியல் அதிகாரமா? உலகின் முதலாவது பெண் முதன்மை அமைச்சர்(PM) சிறிமாவோ பண்டாரநாயக்கா என்பது நினைவிருக்கட்டும், மக்களே! 
கடவுளே... 🥱🥱🥱 

 

 

//அதே போன்று தற்போதைய ஜனாதிபதியால் அழைப்பு விடுக்கப்பட்டாலும் அவரிடமும் அரசியலில் பால் நிலை சமத்துவத்தை வலியுறுத்துவேன்.//

பால் நிலை சமத்துவமா?🤣🤣 
ஐயோ... இந்த மாதிரி ஒன்டை எங்களுக்காகப் பேசும் என்டு எதிர் பார்த்த ஆக்கள் ஆரேனும் இருந்தால் இண்டையோட அந்த நிலைப்பாட்டை குப்பையில் போடவும். இதுவும் பண்டியோடு🐽 சேர்ந்த கன்டே!🐷🐷

 

 

//இலங்கைக்கும் இலங்கை மக்களுக்கும் என்மனதில் எப்போதும் இடமுண்டு.//

No photo description available.

 

 

 

 

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

😂Kamzy_Gunaratnam.jpg😂

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

நன்னிச்  சோழன், 
போர் நடந்த காலத்தில்... ராதிகா குமாரசாமி என்ற பெண்மணியை தெரியுமா?
மனித உரிமை மீறல், சிறுவர்கள்... புலிகளில் உள்ளார்கள் என்று,
சின்னக் கதிர்காமி போல்... கூவிக்  கொண்டு திரிந்தவர்.

இவரின் கருத்தைப் பார்க்க, அவரின் நினைவு வந்தது.
ராதிகாவின்.. படம் இருந்தால், இணைத்து விடுங்கள்.
ஒப்பிட்டுப் பார்க்க, வாசகர்களுக்கு இலகுவாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

RC.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Radhika Coomaraswamy

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அம்மணி தவறாக ஏதும் கூறவில்லையே... 

சாதா காக்கைகளைப் போல பறந்து பறந்து  கத்த வேண்டுமென எதிர்பார்க்கின்றனரோ..☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
2 hours ago, தமிழ் சிறி said:

நன்னிச்  சோழன், 
போர் நடந்த காலத்தில்... ராதிகா குமாரசாமி என்ற பெண்மணியை தெரியுமா?
மனித உரிமை மீறல், சிறுவர்கள்... புலிகளில் உள்ளார்கள் என்று,
சின்னக் கதிர்காமி போல்... கூவிக்  கொண்டு திரிந்தவர்.

இவரின் கருத்தைப் பார்க்க, அவரின் நினைவு வந்தது.
ராதிகாவின்.. படம் இருந்தால், இணைத்து விடுங்கள்.
ஒப்பிட்டுப் பார்க்க, வாசகர்களுக்கு இலகுவாக இருக்கும்.

 

இல்லை சிறி அவர்களே... நான் இப்போதுதான் முதற்தடவையாக கேள்விப்படுகிறேன், இப்பெண்மணி பற்றி! 

நொச்சி அவர்கள் இணைத்துள்ளார், இதுவாவெனப் பாருங்கள். எனக்கு இவ பற்றித் தெரியாது. (அப்போது நான் குழந்தை; இணையத்தள வசதியற்ற இடத்தில் வேறு இருந்தேன்.)

 

 

2 hours ago, nochchi said:

RC.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நன்னிச் சோழன் said:

 

இல்லை சிறி அவர்களே... நான் இப்போதுதான் முதற்தடவையாக கேள்விப்படுகிறேன், இப்பெண்மணி பற்றி! 

நொச்சி அவர்கள் இணைத்துள்ளார், இதுவாவெனப் பாருங்கள். எனக்கு இவ பற்றித் தெரியாது. (அப்போது நான் குழந்தை; இணையத்தள வசதியற்ற இடத்தில் வேறு இருந்தேன்.)

நன்னிச்  சோழன்....
நொச்சி, சொன்னது சரியே....

இந்தப் பெண்மணி தான்...
உலகமெல்லாம்... பறந்து திரிந்து, 
புலிகளில்... சிறுவரை, சேர்க்கிறார்கள் என்று...
"லிப்ஸ்டிக்"  பூசின, வாயால்.... பொய்  செய்தி பரப்பியது.

அந்த, நேரம்.... இது, யாழ். களத்திலும்.... விவாத பொருளாகி,
இளம் பிக்குகள்... புத்த சமயத்தில், இருப்பதை...
இவ,  கண்டு கொள்ள மாட்டாவோ... என்று, பலரும் விவாதித்தார்கள்.

அதன்... சாட்சியாக, இன்றும் பல, யாழ்.கள  உறுப்பினர்கள் உள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
4 minutes ago, தமிழ் சிறி said:

நன்னிச்  சோழன்....
நொச்சி, சொன்னது சரியே....

இந்தப் பெண்மணி தான்...
உலகமெல்லாம்... பறந்து திரிந்து, 
புலிகளில்... சிறுவரை, சேர்க்கிறார்கள் என்று...
"லிப்ஸ்டிக்"  பூசின, வாயால்.... பொய்  செய்தி பரப்பியது.

அந்த, நேரம்.... இது, யாழ். களத்திலும்.... விவாத பொருளாகி,
இளம் பிக்குகள்... புத்த சமயத்தில், இருப்பதை...
இவ,  கண்டு கொள்ள மாட்டாவோ... என்று, பலரும் விவாதித்தார்கள்.

அதன்... சாட்சியாக, இன்றும் பல, யாழ்.கள  உறுப்பினர்கள் உள்ளார்கள்.

எங்கட இனத்தில புல்லுருவிகள் மிதமிஞ்சிப் போயிருக்கிறது, வேறொன்றுமில்லை...
இப்ப அந்த எண்ணிக்கையில இன்னொண்டு கூடுதலாக சேர்ந்திருக்கிறது!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, நன்னிச் சோழன் said:

எங்கட இனத்தில புல்லுருவிகள் மிதமிஞ்சிப் போயிருக்கிறது, வேறொன்றுமில்லை...
இப்ப அந்த எண்ணிக்கையில இன்னொண்டு கூடுதலாக சேர்ந்திருக்கிறது!

 

 

இந்தப் பெண் என்ன விதமான பதிலைக் கூறியிருக்க வேண்டும் என்கிறீர்கள் ? 

இராதிகா சிற்சபேசன் போல, தன்வாயால் கெட்டு, எங்களின் குரல் கனேடிய நாடாளுமன்றத்தில்  அறவே இல்லாமல் போனது போல போகவேண்டும் என்கிறீர்களோ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
11 minutes ago, Kapithan said:

இந்தப் பெண் என்ன விதமான பதிலைக் கூறியிருக்க வேண்டும் என்கிறீர்கள் ? 

இராதிகா சிற்சபேசன் போல, தன்வாயால் கெட்டு, எங்களின் குரல் கனேடிய நாடாளுமன்றத்தில்  அறவே இல்லாமல் போனது போல போகவேண்டும் என்கிறீர்களோ? 

கப்பித்தன் அவர்களே... சமரசத்திற்கு ஒத்துக்கொண்ட பின்னர் இவரிடம் இருந்து நாங்கள் எதை எதிர்பார்க்க முடியும்?

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/9/2021 at 13:23, பிழம்பு said:

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் நிச்சயம் போர் குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். யுத்த குற்ற விசாரணைகளை முன்னெடுப்பது மாத்திரமின்றி , சிறுபான்மையினரின் உரிமைகளையும் மதிக்க வேண்டும். சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பதற்கான பொறுப்பும் கடமையும் பெரும்பான்மையிருக்கும் இருக்கிறது. மேற்குலக நாடுகளில் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படவில்லை எனில் அதுவே பாரியதொரு குற்றமாக கருதப்படும் என்று நோர்வே பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள ஹம்ஷாயினி குணரத்னம் தெரிவித்தார்.

கலந்துரையாடலுக்கான எந்தவொரு அழைப்பினையும் நான் ஏற்றுக் கொள்வேன். நான் புலம் பெயர் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்துபவள் இல்லை. நான் நோர்வே பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவராவேன். எவ்வாறிருப்பினும் யார் அழைப்பு விடுத்தாலும் அதனை ஏற்று கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கு நான் தயாராகவுள்ளதாகவும் ஹம்ஷாயினி குணரத்னம் தெரிவித்தார்.

நேற்று முன்தினம்  ஞாயிற்றுக்கிழமை காணொளி தொழிநுட்பத்தின் ஊடாக இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் தொடர்ந்தும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில்,

Kamzy_Gunaratnam.jpg

கேள்வி : இலங்கை தமிழர்கள் தமக்கான அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்வதில் இன்னமும் சவால்களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றனர். இதனை நீங்கள் எவ்வாறு அவதானிக்கிறீர்கள் ?

பதில் : இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் பலர் உள ரீதியாகவும், உடல் ரீதியாகவும் காயப்பட்டுள்ளனர் என்பதை ஏற்றுக் கொள்கின்றோம். மீண்டும் அதனை சரி செய்வது இலகுவானதல்ல. எனினும் இலங்கை மக்கள் தமக்கான தீர்வை அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். அதனை எம்மால் கூற முடியாது. இலங்கை எந்த திசையில் பயணிக்க வேண்டும் என்ற பாதையை அமைத்துக் கொடுப்பது அந்நாட்டு மக்களின் கைகளிலேயே உள்ளது.

என்னால் இங்கிருந்து அதற்கான வழிகளைக் கூற முடியாது. மாறாக எனது பயிற்சிகளை மாத்திரமே பகிர்ந்து கொள்ள முடியும். எனவே மக்கள் அது தொடர்பான அரசியலை தேர்ந்தெடுக்க வேண்டும். அல்லது அரசியலில் ஈடுபட வேண்டும்.

கேள்வி : இலங்கை தமிழ் மக்கள் தங்களின் இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கு சர்வதேச ஈடுபாடு மிகவும் அவசியம் என்று கருதுகின்றனர். இது தொடர்பில் உங்கள் நிலைப்பாடு ?

பதில் : நோர்வே இலங்கையுடனான நட்புறவை தொடர்ந்தும் பேணும். ஆனால் அதனை எவ்வாறு செய்வது என்பதை தற்போது விளக்கமாகக் கூற முடியாது. எனினும் யுத்த குற்ற விசாரணைகள் நிச்சயம் இடம்பெற வேண்டும். அந்த விசாரணைகளை முன்னெடுக்காமல் எம்மால் தொடர்ந்தும் பயணிக்க முடியாது. நல்லிணக்கம் , வெளிப்படைதன்மை மற்றும் ஜனநாயகத்திற்கு இது மிகவும் அத்தியாவசியமானதாகும்.

எனவே நோர்வே இலங்கையுடனான நட்புறவை தொடர்வதோடு , இலங்கையில் யுத்த குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற இரு விடயங்களையும் நான் வலியுறுத்துகின்றேன். யுத்த குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை எனில் தொடர்ந்து பயணிப்பது கடினமாகும். காரணம் சகலருக்கும் உண்மையை கண்டறிதலே தேவையாகவுள்ளது.

கேள்வி : இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு சர்வதேச பொறிமுறையின் கீழ் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதில் இலங்கை வம்சாவளி நோர்வே பாராளுமன்ற உறுப்பினரான உங்களின் பங்களிப்பு எவ்வாறு அமையும் ?

பதில் : இலங்கையின் விவகாரத்தில் சர்வதேச ரீதியில் சில விடயங்களைச் செய்ய முடியும். ஆனால் இலங்கையிலுள்ள மக்களே இதில் அதிக அவதானம் செலுத்த வேண்டும். சமூகம் எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை அங்குள்ள மக்களே தீர்மானிக்க வேண்டும். எவ்வாறிருப்பினும் சர்வதேசம் என்ற ரீதியில் எமக்கும் பொறுப்புக்கள் உள்ளன. அதற்கமைய இலங்கையுடனான நட்புறவை தொடர்தல் மற்றும் யுத்த குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற இரு நிலைப்பாட்டில் ஸ்திரமாகவுள்ளோம்.

கேள்வி : புலம்பெயர் தமிழர்களுக்கு இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள அழைப்பை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?

பதில் : கலந்துரையாடலுக்கான எந்தவொரு அழைப்பினையும் நான் ஏற்றுக் கொள்வேன். நான் புலம் பெயர் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்துபவள் இல்லை. நான் நோர்வே பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவராவேன். எவ்வாறிருப்பினும் யார் அழைப்பு விடுத்தாலும் அதனை ஏற்று கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கு நான் தயாராகவுள்ளேன்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சியில் இலங்கைக்கு விஜயம் செய்து அவரை சந்தித்த போது பெண்களின் பிரச்சினைகள் , பெண்களுக்கு அரசியல் அதிகாரங்கள் வழங்கப்படுவதற்கான முக்கியத்துவம் உள்ளிட்ட பெண்களுடன் தொடர்புடைய விடயங்களையே அவரிடம் வலியுறுத்தினேன். அதே போன்று தற்போதைய ஜனாதிபதியால் அழைப்பு விடுக்கப்பட்டாலும் அவரிடமும் அரசியலில் பால் நிலை சமத்துவத்தை வலியுறுத்துவேன்.

கேள்வி : யுத்த குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாகவுள்ள நீங்கள் , அவை உள்வாரியானதாக இருக்க வேண்டும் என்று கருதுகிறீர்களா? அல்லது வெளிவாரியானதாக இருக்க வேண்டும் என்று கருதுகிறீர்களா?

பதில் : வெளிவாரியான யுத்த குற்ற விசாரணைகளையே நாம் வலியுறுத்துகின்றோம். உள்வாரி விசாரணைகளை வைத்து என்ன செய்வது? இலங்கை அரசாங்கம் தவறிழைத்திருந்தால் அதனை அவர்களே விசாரணை செய்வது பொறுத்தமானதாக இருக்குமா?

கேள்வி : இலங்கையில் தமிழர்கள் சிறுபான்மையினத்தவர்கள் ஆவர். எனவே அவர்களுக்கான தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதிலும் உரிமைகளை பாதுகாத்துக் கொள்வதிலும் சில நெருக்கடிகள் உள்ளன. இது குறித்து உங்கள் நிலைப்பாடு?

பதில் : இலங்கையில் வெளிப்படை தன்மையான ஜனநாயகம் காணப்படுகிறது என்பதை காண்பிப்பதற்கு அரசாங்கம் சில செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. யுத்த குற்ற விசாரணைகளை முன்னெடுப்பது மாத்திரமின்றி , சிறுபான்மையினரின் உரிமைகளையும் மதிக்க வேண்டும். சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பதற்கான பொறுப்பும் கடமையும் பெரும்பான்மையிருக்கும் இருக்கிறது. மேற்குலக நாடுகளில் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படவில்லை என்றால் அதுவும் பாரியதொரு குற்றமாகவே கருதப்படும். இலங்கைக்கும் இலங்கை மக்களுக்கும் என்மனதில் எப்போதும் இடமுண்டு.

இலங்கையின் யுத்த குற்ற விசாரணைகள் சர்வதேச பொறிமுறையின் கீழ் முன்னெடுக்கப்பட வேண்டும் - ஹம்ஷாயினி | Virakesari.lk

யதார்த்தம் புரிந்த பெண் போல் உள்ளது. பதில்கள் சிறப்பாக உள்ளன.

6 hours ago, narathar said:

இவர் தன்னை முழுவதுமாக தமிழ் மக்களிடம் இருந்து அன்னியப்பட்டு, தான் தமிழர் வாக்குகள் இன்றியே இனி வெற்றி பெறுவேன் என்று கூறிவிட்டார். இவரைநோக்கிநோர்வாத் தமிழர்கள் இனிப் போராட்டங்களை நடாத்த வேண்டும். இவர் முற்று முழுதாகவேநோர்வே அரசின் முகவராகத் தொழிற்படத் தொடங்கி விட்டர். இவரின் இப் பேட்டியை கொழும்புநோர்வேத் தூதரகமே ஒழுஙகமைதுள்ளது. இதைநோர்வாத் தமிழர்கள் இவரின் குடும்ப உறவுகள் மூலமாவது சொல்லி அவர் போகும் பாதை தவறானது என்று சொல்லி வழி காட்ட வேண்டும். இவர் தமிழ் இளைய்யொர் அமைப்பின் செயற்பாட்டளாராக இருந்து அரசியலுக்குக் கொண்டு வரப்பட்டவர். இப்பொது ஏறி வந்த ஏணியய்த் தூக்கி எறிந்து விட்டடார்.

உங்கள் கருத்தை பார்த்தால் நீங்கள் போராட்டம் நடாத்த வேண்டியது நோர்வே அரசுக்கு எதிராகவே. வளர்த்த கிடாய் மார்பில் பாய்ந்து விட்டதோ?

Link to comment
Share on other sites

நோர்வே பாராளுமன்ற உறுப்பினர் கம்ஷாயினி குணரத்தினத்தின் பேட்டி முழுவதும் வாசித்ததில் அவரது பதில்கள்  சிறப்பான கருத்துக்களாகவே தெரிகிறது. இலங்கையில் சிறுபான்மை மக்களுக்கு அவர்களுக்கு உரித்தான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என தெளிவாக கூறியுள்ளார். போர்ககுற்ற விசாரணைகள் வெளிவாரியாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

இங்கு அவரை கரித்து கொட்டுபவர்கள் அவர் எந்த கேள்விக்கு தவறாக பதிலளித்தார் என்று கூறவேண்டும். அவர் எப்படி கூறி இருக்க வேண்டும் என்றும் கூற வேண்டும்.  நாட்டின் பாராளுமன்ற உறுப்பினராக பொறுப்புணர்வுடன் பதிலளித்துள்ளார்.  

ஒரு பெண்ணாக பாலின சமத்துவத்தை அவர் வலியுறுத்தியது உலகில் வாழும் நாகரீக  அடைந்த மக்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்தே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1. இலங்கையில் தமிழர் ஒரு தேசியஇனம்.
2. தனித்துவமான மொழியையும்,  பண்பாட்டையும், வாழ்வியல் முறைகளையும் கொண்டவர்கள்.
3. இலங்கைத்தீவிலே 1918 முதல் 2002வரையான காலத்தில் ஏற்பட்ட எந்த ஒப்பந்தங்களையும்  சிங்களத்தரப்பு ஏற்று நடந்ததில்லை. 
4. எல்லா ஒப்பந்தங்களையும் தன்னைப் பலப்பபடுத்தவே சிங்களம் பயன்படுத்திமை வரலாறு. 
5. தமிழர்களைப் பிரிந்து சென்று தனிநாட்டைக் கோரும் நிலையை ஏற்படுத்தியது சிங்களம் என்பதே வரலாறு. 
6. தமிழர் சிறுபான்மையல்ல. அவர்கள் இலங்கைத் தீவின் சமபங்காளிகளாவர்.
7. தமிழரை ஒரு இனமாக ஏற்காத சிங்களம் சிறுபான்மையினருக்கு தாம் சமஉரிமையயை வழங்கியிருப்பதாகவே உலகெங்கும் பலமில்லியன் டொலர்களைச் செலவுசெய்து பரப்புரைசெய்து வருகிறது. 
8. அதனை மிகச்சிறப்பாக சிங்களத்தின் கொள்கையை  எந்தவொரு வரலாற்றுப் பார்வையுமற்று அப்படியே இந்த நோர்வே நாடாளுமன்றத்துக்குச் செல்லும் உறுப்பினர் சுட்டுவது தவறாகும்.  

 முதலிலே தமிழர்கள் தமது நிலையையும், தமக்கு இனத்துவ அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டுவரும் அழிவுகளையும், இன்றுவரை வன்பறிப்புக்குள்ளாகும் தமிழர் பிரதேசங்கள் குறித்தும் தெளிவானதொரு பார்வையைக்கொண்டு செயற்படாதவரை தமிழினம் இலங்கைத் தீவிலிருருந்து சிங்கள சிறீலங்காவால் முற்றுமுழுதாக அழிக்கப்படும். 

அது நீர்கொழும்பில் தொடங்கி வவுனியா தெற்கு மணலாறு என விரிவடைந்து செல்ல இன்றும் சிங்களத்துக்கு முண்டுகொடுக்கும் தமிழரைத் எப்படி நோக்குவது. 

புலத்திலே உள்ள தமிழர்கள் அரசியல் ரீதியாக உதவமுடியுமாயின் தமது பதிவி கட்சி என்ற வரையறைக்குள் நின்று தமிழரது நியாயமான கோரிக்கைகளை முன்வைக்க முடியுமாயின் செய்யலாம். செய்யமுடியாதுவிடின் சிங்களத்தின் கொள்கைகளை முன்மொழியாது இருக்கலாம் அல்லவா? அதேவேளை இவர் தமிரது ஆதரவே தனக்குத்தேவையில்லையென்று கூறியே வந்துள்ளார். இவரது தவறான கருத்துகளைத் தமிழினம் கண்டித்தல் வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நன்னிச் சோழன் said:

கப்பித்தன் அவர்களே... சமரசத்திற்கு ஒத்துக்கொண்ட பின்னர் இவரிடம் இருந்து நாங்கள் எதை எதிர்பார்க்க முடியும்?

 

 

நீங்கள் எதை எதிர்பாற்கிறீர்கள் ? அதைக் கூறலாமல்லவா ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

1. இலங்கையில் தமிழர் ஒரு தேசியஇனம்.
2. தனித்துவமான மொழியையும்,  பண்பாட்டையும், வாழ்வியல் முறைகளையும் கொண்டவர்கள்.
3. இலங்கைத்தீவிலே 1918 முதல் 2002வரையான காலத்தில் ஏற்பட்ட எந்த ஒப்பந்தங்களையும்  சிங்களத்தரப்பு ஏற்று நடந்ததில்லை. 
4. எல்லா ஒப்பந்தங்களையும் தன்னைப் பலப்பபடுத்தவே சிங்களம் பயன்படுத்திமை வரலாறு. 
5. தமிழர்களைப் பிரிந்து சென்று தனிநாட்டைக் கோரும் நிலையை ஏற்படுத்தியது சிங்களம் என்பதே வரலாறு. 
6. தமிழர் சிறுபான்மையல்ல. அவர்கள் இலங்கைத் தீவின் சமபங்காளிகளாவர்.
7. தமிழரை ஒரு இனமாக ஏற்காத சிங்களம் சிறுபான்மையினருக்கு தாம் சமஉரிமையயை வழங்கியிருப்பதாகவே உலகெங்கும் பலமில்லியன் டொலர்களைச் செலவுசெய்து பரப்புரைசெய்து வருகிறது. 
8. அதனை மிகச்சிறப்பாக சிங்களத்தின் கொள்கையை  எந்தவொரு வரலாற்றுப் பார்வையுமற்று அப்படியே இந்த நோர்வே நாடாளுமன்றத்துக்குச் செல்லும் உறுப்பினர் சுட்டுவது தவறாகும்.  

 முதலிலே தமிழர்கள் தமது நிலையையும், தமக்கு இனத்துவ அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டுவரும் அழிவுகளையும், இன்றுவரை வன்பறிப்புக்குள்ளாகும் தமிழர் பிரதேசங்கள் குறித்தும் தெளிவானதொரு பார்வையைக்கொண்டு செயற்படாதவரை தமிழினம் இலங்கைத் தீவிலிருருந்து சிங்கள சிறீலங்காவால் முற்றுமுழுதாக அழிக்கப்படும். 

அது நீர்கொழும்பில் தொடங்கி வவுனியா தெற்கு மணலாறு என விரிவடைந்து செல்ல இன்றும் சிங்களத்துக்கு முண்டுகொடுக்கும் தமிழரைத் எப்படி நோக்குவது. 

புலத்திலே உள்ள தமிழர்கள் அரசியல் ரீதியாக உதவமுடியுமாயின் தமது பதிவி கட்சி என்ற வரையறைக்குள் நின்று தமிழரது நியாயமான கோரிக்கைகளை முன்வைக்க முடியுமாயின் செய்யலாம். செய்யமுடியாதுவிடின் சிங்களத்தின் கொள்கைகளை முன்மொழியாது இருக்கலாம் அல்லவா? அதேவேளை இவர் தமிரது ஆதரவே தனக்குத்தேவையில்லையென்று கூறியே வந்துள்ளார். இவரது தவறான கருத்துகளைத் தமிழினம் கண்டித்தல் வேண்டும். 

உங்கள் கருத்தைப் பார்த்தால் கம்சாயினி TNA யின் பிரதிநிதியாகத்தான் நோர்வே நாடாளுமன்றத்தில் போட்டியிட்டிருக்க முடியும். நோர்வே பிரசையாக அல்ல.. 😔

வெளிநாடுகளில் வாழும்  நாம் வீதியில் வாகனம் செலுத்தும்போதுகூட அந்தந்த நாடுகளின் மிகச் சாதாரண போக்குவரத்துச் சட்ட விதிகளைக்கூட மதிக்கின்றோம். ஆனால் வெளிநாடுகளில்  அரசியலில் ஈடுபடும்போது மட்டும் TNA யின் பிரதிநிதியாகச் செயற்படவேண்டும் என எதிர்பார்ப்பது எந்த வகையில் சரியான சிந்தனையாக இருக்க முடியும் ? 

Link to comment
Share on other sites

12 minutes ago, Kapithan said:

உங்கள் கருத்தைப் பார்த்தால் கம்சாயினி TNA யின் பிரதிநிதியாகத்தான் நோர்வே நாடாளுமன்றத்தில் போட்டியிட்டிருக்க முடியும். நோர்வே பிரசையாக அல்ல.. 😔

வெளிநாடுகளில் வாழும்  நாம் வீதியில் வாகனம் செலுத்தும்போதுகூட அந்தந்த நாடுகளின் மிகச் சாதாரண போக்குவரத்துச் சட்ட விதிகளைக்கூட மதிக்கின்றோம். ஆனால் வெளிநாடுகளில்  அரசியலில் ஈடுபடும்போது மட்டும் TNA யின் பிரதிநிதியாகச் செயற்படவேண்டும் என எதிர்பார்ப்பது எந்த வகையில் சரியான சிந்தனையாக இருக்க முடியும் ? 

சரியான கருத்து கபிதன். 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவருடைய அரசியல் நிலைப்பாடு என்பது அவர் சார்ந்த கட்சி  சார்ந்தே இருக்கும்
அதை மீறினால் அவருடைய அரசியலே கேவிக்குறி ஆகலாம் .  

**

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, narathar said:

இவர் தன்னை முழுவதுமாக தமிழ் மக்களிடம் இருந்து அன்னியப்பட்டு, தான் தமிழர் வாக்குகள் இன்றியே இனி வெற்றி பெறுவேன் என்று கூறிவிட்டார். இவரைநோக்கிநோர்வாத் தமிழர்கள் இனிப் போராட்டங்களை நடாத்த வேண்டும். இவர் முற்று முழுதாகவேநோர்வே அரசின் முகவராகத் தொழிற்படத் தொடங்கி விட்டர். இவரின் இப் பேட்டியை கொழும்புநோர்வேத் தூதரகமே ஒழுஙகமைதுள்ளது. இதைநோர்வாத் தமிழர்கள் இவரின் குடும்ப உறவுகள் மூலமாவது சொல்லி அவர் போகும் பாதை தவறானது என்று சொல்லி வழி காட்ட வேண்டும். இவர் தமிழ் இளைய்யொர் அமைப்பின் செயற்பாட்டளாராக இருந்து அரசியலுக்குக் கொண்டு வரப்பட்டவர். இப்பொது ஏறி வந்த ஏணியய்த் தூக்கி எறிந்து விட்டடார்.

நாரதர் அவர்களே,
உங்கள் கருத்தையே நோர்வேயின் பல முன்னணி குமூகச் செயற்பாட்டாளர்களும் சுட்டியதை நேற்று நடைபெற்ற ஒரு கருத்தாடலில் அவதானிக்க முடிந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, nochchi said:

மிகச்சிறப்பு. உண்மையான அரசியல்வாதி இவர்தான்.

 

மக்கள் தங்களையும் தங்கள் வலுவையும் சுயமதிப்பீடு செய்யும்வரை  சம்பந்தர் - டக்ளஸ் - கம்சாயினியென்று பட்டியல் நீளவே செய்யும்.  

 

2 hours ago, Kapithan said:

உங்கள் கருத்தைப் பார்த்தால் கம்சாயினி TNA யின் பிரதிநிதியாகத்தான் நோர்வே நாடாளுமன்றத்தில் போட்டியிட்டிருக்க முடியும். நோர்வே பிரசையாக அல்ல.. 😔

வெளிநாடுகளில் வாழும்  நாம் வீதியில் வாகனம் செலுத்தும்போதுகூட அந்தந்த நாடுகளின் மிகச் சாதாரண போக்குவரத்துச் சட்ட விதிகளைக்கூட மதிக்கின்றோம். ஆனால் வெளிநாடுகளில்  அரசியலில் ஈடுபடும்போது மட்டும் TNA யின் பிரதிநிதியாகச் செயற்படவேண்டும் என எதிர்பார்ப்பது எந்த வகையில் சரியான சிந்தனையாக இருக்க முடியும் ? 


கபிதான் அவர்களே, 
நானும் த.தே.கூ பிரதிநிதியாக இருக்கவேண்டாம் என்றே சொல்கின்றேன்
  அதைத்தான் மேலே, அந்த இடத்திலே சுட்டியுள்ளேன். அதை நீங்கள் பார்க்கவில்லையா?

Link to comment
Share on other sites

18 hours ago, வாத்தியார் said:

ஒருவருடைய அரசியல் நிலைப்பாடு என்பது அவர் சார்ந்த கட்சி  சார்ந்தே இருக்கும்
அதை மீறினால் அவருடைய அரசியலே கேவிக்குறி ஆகலாம் .  

தமிழர்கள் தாம் சார்ந்த கட்சிகளை தமிழர் சார்பாக மாற்ற வேண்டுமே அன்றி கட்சிகளின் நிலைப்பாடுகளை தமிரிடம் விற்கும் முகவராக இருக்க முடியாது. அவ்வாறில்லை தமிழர் நிராகரிக்க வேண்டும். 

Link to comment
Share on other sites

10 hours ago, tulpen said:

நோர்வே பாராளுமன்ற உறுப்பினர் கம்ஷாயினி குணரத்தினத்தின் பேட்டி முழுவதும் வாசித்ததில் அவரது பதில்கள்  சிறப்பான கருத்துக்களாகவே தெரிகிறது. இலங்கையில் சிறுபான்மை மக்களுக்கு அவர்களுக்கு உரித்தான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என தெளிவாக கூறியுள்ளார். போர்ககுற்ற விசாரணைகள் வெளிவாரியாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

இங்கு அவரை கரித்து கொட்டுபவர்கள் அவர் எந்த கேள்விக்கு தவறாக பதிலளித்தார் என்று கூறவேண்டும். அவர் எப்படி கூறி இருக்க வேண்டும் என்றும் கூற வேண்டும்.  நாட்டின் பாராளுமன்ற உறுப்பினராக பொறுப்புணர்வுடன் பதிலளித்துள்ளார்.  

ஒரு பெண்ணாக பாலின சமத்துவத்தை அவர் வலியுறுத்தியது உலகில் வாழும் நாகரீக  அடைந்த மக்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்தே. 

ஈழத்தில் தமிழர் ஒரு தேசிய இனம். இன்ச் சிறுபான்மை அல்ல. தமிழருக்கு இழைக்கப்பட்ட து இனப்படுகொலை. யுத்தக் குற்றச்சாட்டுக்கள் அல்ல. இவை மிக முக்கியமான வித்தியாசங்கள் இவைற்றத் தெரிந்தே இவர் கூறுகிறார். ஏனெனில் அது தான் அமெரிக்கா அரசின் நோர்விஜிய அரசுகளின் நிலைப்பாடு. இவற்றை தமிழருக்கு விற்று பிழைப்பு நாடாத்துவதை விட்டு இவர் இருக்க வேண்டும். தமிழர்கள் அரசியல் ஏமாளிகள் அல்ல.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.