Jump to content

தேசியத்துக்கு அப்பால் அரசியல்: காந்தி, பெரியார், அண்ணா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

தேசியத்துக்கு அப்பால் அரசியல்: காந்தி, பெரியார், அண்ணா

 
spacer.png

ராஜன் குறை 

இந்த வார இறுதியில் காந்தி ஜெயந்தி எனப்படும் காந்தியின் 152ஆவது பிறந்த தினம் வருகிறது. காந்தியை தேசப்பிதா என்று அழைத்துப் பழகியுள்ளோம். இந்திய தேசத்தை உருவாக்கியதில், அதன் விடுதலையை உறுதி செய்ததில், அதன் அரசியலை வடிவமைத்ததில் அவருக்கு முக்கிய பங்கு இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், காந்தியின் சிறப்பம்சம் அவர் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியாவை விடுவிக்க நினைத்தார் என்பதல்ல. அந்த அரசியல் விடுதலை என்ற பரிமாணத்தைக் கடந்து அவர் வெகுமக்கள் வாழ்வை மேம்படுத்த நினைத்தார். எளிய மக்களை ஆதிக்கத்தின் நுகத்தடியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால், அதை முரண் அரசியலாகச் செய்யாமல், அனைவரையும் அந்த லட்சியத்தை நோக்கி கூட்டு முயற்சியாகச் செயல்பட வைப்பதன் மூலம் செய்ய வேண்டும் எனக் கனவு கண்டார் எனலாம். காந்தியின் லட்சியவாத சிந்தனைகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளன. அந்த விமர்சனங்கள் முக்கியமானவை. ஆனால், அவர் சிந்தனைகள் அவசியம் தொடர்ந்து பயிலப்பட வேண்டியவை. ஏனெனில் அவர் இந்திய தேசியம் என்ற எல்லைக்குள் மட்டும் சிந்திக்கவில்லை.

காந்தி தொழிற்புரட்சி, முதலீட்டிய நவீன சமூகம், நுகர்வு கலாச்சாரம் போன்றவற்றை ஏற்கவில்லை. அந்த விதத்தில் அவர் முதலீட்டிய மறுப்பாளராக இருந்தார். அதே சமயம் அவர் பொதுவுடமை என்ற வடிவத்தையும் ஏற்கவில்லை. அது மொத்தத்துவ அரசை உருவாக்கும் என்பதால் அதுவும் அவருக்கு ஏற்புடையதாக இல்லை. அவர் கணிசமான சுயாட்சியுள்ள கிராம சமூகங்கள் என்பது போல லட்சியவாத நோக்கில் சிந்தித்தார். ஆனால், அதன் மையத்தில் அதிகார பரவலையும், சுயாட்சி என்ற கருத்தாக்கத்தையும் வைத்திருந்தார். அவர் மரபார்ந்த சமூகத்தின் பண்பாட்டு விழுமியங்களே சமூகத்தை இயக்க உதவியாக இருக்கும் என்று நினைத்தார். ஆனால் சனாதன நோக்கிலான பார்வையை அவர் மரபாக ஏற்கவில்லை. மரபின் ஆரோக்கியமான கூறுகளிலிருந்து பகிர்தலும், கருணையும், ஒத்திசைவும் மிக்க சமூகத்தை புனரமைக்கலாம் என்று நம்பினார்.

அவருடைய மரபுவாத நோக்கின் காரணமாக அவர் ஜாதீய சமூகத்தை அம்பேத்கரைப் போலவும், பெரியாரைப் போலவும் கடுமையாக விமர்சிக்கவில்லை. ஏற்றத்தாழ்வு, ஒடுக்குமுறை ஆகியவற்றை களைந்துவிட்டால் ஜாதி சமூகம், அதன் வேலைப்பிரிவினை தவறல்ல என்றெல்லாம்கூட சிந்தித்தார். அவருடைய சற்றேறக்குறைய ஐம்பதாண்டுக் கால அரசியல் வாழ்க்கையில் அவர் சிந்தனைகள் பல மாற்றம் பெற்றுள்ளன. அவற்றையெல்லாம் தொகுத்து ஆராய்ந்து பல நூல்கள் எழுதப்பட்டுள்ளன. பொதுவாக ஏற்றுக்கொள்ளக் கூடியதாக சிலவற்றைக் கூறலாம். அவர் சனாதன இந்துமத, பார்ப்பனீய பார்வைகளை முழுமையாக ஏற்கவில்லை. அதைவிட முக்கியமாக இந்துமத அடையாளவாத அரசியலை, தேசியத்தை ஏற்கவில்லை. மத நல்லிணக்கத்தை நம்பினார். “ஈஸ்வர் அல்லா தேரோ நாம்” என்ற பாடல் வரியை நாடெங்கும் கொண்டு சென்றார். அவர் முதலீட்டிய உற்பத்தி முறையை, நுகர்வு கலாச்சாரத்தை, அது ஏற்படுத்தும் ஏற்றத்தாழ்வுகளை ஏற்கவில்லை. சமூகத்தை முழுவதுமாகக் கட்டுப்படுத்தும் மொத்தத்துவ அரசு வடிவத்தையும் ஏற்கவில்லை. இதையெல்லாம் இணைத்து சிந்தித்தால் காந்தியின் அரசியல் என்பது பிரிட்டிஷ்காரர்களிடமிருந்து இறையாண்மையை இந்திய அதிகார வர்க்கத்துக்கு மாற்றும் தேசிய அரசியல் மட்டுமல்ல என்பதை உணரலாம். ஆனால், அவர் அத்தகைய அதிகார மாற்றத்தினால் உட்செரிக்கப்பட்டார். அது நிகழ்ந்த பின் பார்ப்பனீய இந்துத்துவ தேசியவாதிகளால் கொல்லப்பட்டார்.

பெரியாரும் காந்தியும் 

இரண்டாண்டுகளுக்கு முன்னால் பெரியாரும் காந்தியும் குறித்து மின்னம்பலத்தில் எழுதும்போது அந்தக் கட்டுரைக்கு “பெரியாரின் காந்தி தேசம்” எனப் பெயரிட்டிருந்தேன். காந்தி இறந்த பிறகு பெரியார், இந்தியாவுக்கு காந்தி தேசம் எனப் பெயரிட வேண்டும் எனக் கூறியது புகழ்பெற்றது. காந்தியை மிகக் கடுமையாக எதிர்த்து அரசியல் செய்தவர் பெரியார். புனே ஒப்பந்தத்தில் அம்பேத்கர், காந்தியின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று கூறியவர். அம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு பார்வையையும், இந்து மத எதிர்ப்பின் அவசியத்தையும் முழுவதும் ஆதரித்தவர். முக்கியமாக, காந்தி கொண்டாடிய ராமர் என்ற லட்சிய உருவகத்தை பெரியார் தீவிரமாக மறுதலித்தவர். ராமாயணத்தையும், ராமர் படத்தையும் கொளுத்தும் போராட்டங்களை அறிவித்தவர். அப்படிப்பட்ட பெரியார் வெறும் உணர்ச்சிகளின் காரணமாக காந்தி மரணமடைந்ததும் அப்படிப் பேசினார் என்று எடுத்துக்கொள்ள முடியாது.

அடிப்படையில் காந்தியும் சரி, பெரியாரும் சரி... மக்கள் விழிப்புணர்வு பெற்று சுயாட்சிக்கான ஆற்றலைப் பெறுவதைக் குறித்தே சிந்தித்தார்கள். இருவருமே அனைத்து மக்களுக்குமான தன்மானம், சுயமரியாதை என்று சிந்தித்ததை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதுதான் மிக முக்கியமானது. அதாவது அரசியலின் அச்சு என்பது ஒரு நபரின் சுய உருவாக்கத்தில், அதற்குக் கிடைக்கும் சமூகவெளி நீதியில், மரியாதையில் இருக்கிறது என்று எண்ணினார்கள். காந்தி அதை மரபுவாதியாகச் சிந்தித்தார். பெரியார் அதை புரட்சிவாதியாகச் சிந்தித்தார். இந்த வேறுபாடுகள் முக்கியமானவை. ஆனால், அவர்கள் இருவருமே தேசிய இறையாண்மையை மட்டுமே லட்சியமாகக் கொண்டு இயங்கவில்லை என்பதும் மிக முக்கியமானது.

இன்றைய சூழ்நிலையில் மீண்டும் மீண்டும் இளைஞர்கள் தேசிய அடையாளவாதம், குறுகிய இனவாத இறையாண்மைக் கனவு ஆகியவற்றை நோக்கி ஈர்க்கும் முயற்சிகள் நடந்துவரும் நாளில் நாம் காந்தியையும் பெரியாரையும் இணைக்கும் புள்ளிகளை மறப்பது ஆபத்தானது. மக்களின் உரிமைகள், அவர்கள் வாழ்வு மேம்படுவதுதான் முக்கியமான அரசியலே தவிர, அடையாளவாதம் பேசுவதும், பிற அடையாளங்கள் மீது வெறுப்பை வளர்ப்பதும், வன்முறையைக் கொண்டாடுவதும் அல்ல. மக்களின் மனமாற்றமே அரசியல் என்பதை அறிந்த காந்தியும், பெரியாரும் வன்முறையை அறவே தவிர்த்தனர். பெரியார் பிம்பங்களையும், குறியீடுகளையும் எரித்தாரே தவிர, பொதுச் சொத்துகளை நாசம் செய்வதை காலித்தனமென்றே கண்டித்து வந்துள்ளார். அவர் என்றுமே அத்தகையை நடவடிக்கைகளை நம்பியதில்லை.

பெரியார் பார்ப்பனர்களை வெறுத்தார், வெறுப்பைத் தூண்டினார் என்று நவபார்ப்பனீய விஷக்கொடுக்குகளும், இந்துத்துவர்களும் பொய்யைப் பரப்பி வரும் நேரத்தில் நேற்று அவருடைய அருமையான மேற்கோள் ஒன்று சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டதாக தெரிகிறது. பெரியாரிய ஆய்வாளரும், நண்பருமான சுபகுணராஜனும் அதைப் பகிர்ந்திருந்தார். சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் ஆகியவை பார்ப்பனர்களுக்கு சடங்குகளில் வரும் வைதீக வருமானத்தைக் குறைத்து வருவதால் அவர்கள் அந்த புரோகித தொழிலைக் கைவிட்டு கல்வி, வர்த்தகம் ஆகியவற்றில் ஈடுபட்டு பணக்காரர்களாக மாறி வருகிறார்களே என்று பெரியாரிடம் கேட்கப்படுகிறது. அதற்கு பெரியார் பார்ப்பனர்கள் பணக்காரர்களாக இருப்பதில் எனக்கு பிரச்சினையில்லை; அவர்கள் மேல் ஜாதியினராக, பிறப்பால் பிறரைவிட உயர்ந்தவர்கள் என்று இருக்கக் கூடாது என்பதுதான் முக்கியம் என்று கூறுகிறார். குடியரசு பத்திரிகையில் 1946 நவம்பர் 9 அன்று வெளியான கட்டுரையில் அவர் கூறுவது: “திராவிடர் கழகப் பிரச்சாரத்தின் கருத்து - ஒரு பார்ப்பான்கூட மேல் ஜாதியான் என்பதாக இருக்கக் கூடாது என்பதற்காகத்தானே தவிர, பார்ப்பான் பணக்காரனாகக் கூடாது. அவன் நல்வாழ்வு வாழக் கூடாது, அவன் ஏழையாகவே இருக்க வேண்டும் என்பது அல்ல. ஒவ்வொரு பார்ப்பானும் ராஜா சர் அண்ணாமலை செட்டியார், பொப்பிலி ராஜா, சர் சண்முகம் செட்டியார், சர் ராமசாமி முதலியார் போன்றவர்களாக, கோடீஸ்வரனாகவும், லட்சாதிபதியாகவும் ஆகிவிட்டாலும் சரியே. எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால். எந்தப் பார்ப்பானும், மடாதிபதிகள் உள்பட எவரும், சிறிது கூட நமக்கு மேல் ஜாதியினன் என்பதாக இருக்கக் கூடாது என்பதுதான்.”

அண்ணாவும் காந்தியும்

காந்தியின் அரசியல் வாழ்வில் மிக முக்கிய பங்காற்றிய, அவருடைய அரசியல் நோக்கை வெளிப்படுத்திய நூல் இந்து சுயராஜ்யம் என்ற நூலாகும். இதை 1909ஆம் ஆண்டு குஜராத்தி மொழியிலும், 1910ஆம் ஆண்டு ஆங்கிலத்திலும் எழுதினார். காங்கிரஸில் பிரிட்டாஷுருடன் ஒத்துழைத்து அவர்களிடம் ஆட்சி செய்யும் அதிகாரங்களைக் கோரிப் பெற்று மெள்ள மெள்ள சுயாட்சி நோக்கி செல்லலாம் என்று நினைத்தவர்கள் மிதவாதிகள் எனப்பட்டார்கள். ஆங்கிலேயர்களை எதிர்த்து கிளர்ச்சி செய்து உடனே பூரண சுதந்திரத்தை அடைய வேண்டும் என்று நினைத்தவர்கள் தீவிரவாதிகள் எனப்பட்டார்கள். காந்தி இருவருக்கும் இடையே புகுந்து சுயராஜ்யம் என்றால் என்ன என்பதற்கு தனது புதிய வரையறையை முன்வைத்தார். அது என்னவென்றால் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் இருப்பதோ, அவர்கள் ஆட்சியதிகாரத்தில் இருப்பதோகூட பிரச்சினையில்லை; ஆனால் இந்திய வாழ்க்கை முறையை ஆங்கிலேயர்களுடைய வாழ்க்கை முறையாக மாற்றக் கூடாது என்பதுதான் சுயராஜ்யம் என்ற கருத்தாகும். அதாவது சுயராஜ்யம் என்பதை ஒரு மக்கள் தொகுதி அவர்கள் பண்பாட்டுக்கேற்ப வாழ்வதுதான் என்பதே காந்தியின் கருத்தாகும். இதில் நம்மவர், அந்நியர் என்ற பேச்சுக்கு இடமில்லை. ஆங்கிலேயர்கள் அந்நியர்கள் என்பதோ, வேறு மதத்தவர்கள் என்பதோ பிரச்சினையில்லை. அவர்கள் வேறொரு வாழ்க்கை முறையை, பண்பாட்டை நம்மீது திணிக்கிறார்கள் என்பதுகூட பிரச்சினையில்லை; அப்படி அவர்கள் திணிக்கும் வாழ்க்கை முறை, பண்பாடு ஆரோக்கியமானதல்ல, மானுடத்துக்கே கெடுதி பயப்பது என்பதுதான் பிரச்சினை என்று வாதிட்டார் காந்தி. இந்த வாதத்தில் சுயாட்சி என்பது ஒரு மக்கள் தொகுதி அவர்கள் விரும்பும் வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதுதான் என்றாகிறது. யார் ஆட்சி செய்கிறார்கள் என்பதோ, இன, மொழி, மத அடையாளங்களோ பிரச்சினையில்லை.

இது போன்ற ஒரு பார்வையை அண்ணாவின் ஆரிய மாயை நூலிலும் காணலாம். அவர் ஆரியர்கள் உருவாக்கியுள்ள வர்ண/ஜாதி தர்மம், அவர்களது தர்ம சாஸ்திரங்கள் கூறும் வாழ்க்கை முறை அவையெல்லாம் தமிழர் பண்பாட்டுக்கு எதிரானது; தமிழர்கள் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கொள்கையைக் கொண்டிருந்தனர். தமிழரிடையே ஜாதி ஏற்றத்தாழ்வை, பார்ப்பனீய கலாச்சாரத்தை புகுத்தியது ஆரியர்கள்தான்; தமிழ் மன்னர்கள் அவர்கள் ஆட்சியை நிலைநிறுத்திக்கொள்ள அதற்கு அனுமதித்தனர்; அதுதான் பிரச்சினை என்று கூறுகிறார். அதனால் ஆரியர்கள் என்று அடையாளப்படும் பார்ப்பனர்கள் தமிழ்நாட்டில் இருக்கக் கூடாது என்பதோ, அவர்களும் பிறருக்கு உரிய அனைத்து உரிமைகளுடன் இருக்கக் கூடாது என்பதோ அல்ல. அவர்களும் திராவிடப் பண்பாட்டை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அவசியம் என்று சுட்டிக்காட்டுகிறார் அண்ணா. ஆரிய மாயை என்பதே தமிழில், தமிழர்கள் வாழ்வில் கலந்துவிட்ட ஆரிய ஜாதீய பண்பாட்டுக்கூறுகள்தான். அதைத்தான் விலக்க வேண்டும் என்று கூறுகிறார் அண்ணா.

திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை கட்சியை துவங்கும்போது திராவிடர் என்ற மக்கள் தொகுதியைக் குறிக்கும் வார்த்தையை திராவிட என்ற பிரதேசத்தைக் குறிக்கும் வார்த்தையாக மாற்றுகிறார். வட இந்தியா ஆரிய கருத்தியலையும், இந்தி மொழியையும் திணிப்பதால் திராவிட மொழிகளைப் பேசும் தென்னிந்தியா ஒரு தனி கூட்டாட்சி குடியரசாக விளங்க வேண்டும் என்பதுதான் அந்தக் கட்சியின் இலக்கு. அதைகூட திராவிட விடுதலை கழகம் என்று கூறாமல் திராவிட முன்னேற்றக் கழகம் என்றுதான் பெயரிடுகிறார்கள். ஏனெனில் மக்கள் அனைவர் வாழ்வும் மேம்படுவதும், ஜாதி இழிவு நீங்குவதும், சமூகநீதி தழைப்பதும்தான் முக்கியமே தவிர, தேசிய சொல்லாடலை உருவாக்குவதோ, இறையாண்மையுள்ள தேசமே லட்சியம் என்று பேசுவதோ அல்ல. சுயாட்சி என்பது மக்களை மையப்படுத்தியதாக, அவர்கள் ஒவ்வொருவரும் அவர்கள் தளைகளிலிருந்து விடுபடுவதாக இருப்பதுதான் அரசியல். அதனால்தான் மக்களாட்சி அரசியலை மேம்படுத்த திராவிட நாடு கொள்கையை கைவிடவும் திமுக தயங்கவில்லை; அதை மாநில சுயாட்சி கொள்கையாக மறுவரையறை செய்துகொண்டு இன்றுவரை இந்திய ஒன்றியத்தில் கூட்டாட்சி தத்துவத்தின் குரலாக ஒலித்து வருகிறது. அதன் அரசியல் தெளிவு அதற்கு வரலாற்றில் வெற்றியையே ஈட்டித் தரும்.

சுருங்கச்சொன்னால் தேசியம், தேசத்தின் விடுதலை என்பது அருவமான சொல்லாடல்; எப்போதுமே ஆதிக்க சக்திகளும் பிற்போக்கு சக்திகளும் இதைப் பேசும். மக்களின் விடுதலை, உரிமைகள், சமூகநீதி என்பதே தூலமான, உண்மையான சொல்லாடல். முற்போக்காளர்கள் இதைத்தான் பேசுவார்கள்.

கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் - பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி

 

https://minnambalam.com/politics/2021/09/27/13/Gandhi-Periyar-Anna-beyond-Nationalism

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.