Jump to content

ஆடையில்லாமல் படுங்கள்; படுக்கையறையின் பவர்ஃபுல் டெக்னிக்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

``இரவுகளில் தம்பதியர் ஆடையில்லாமல் படுத்தாலே அது செக்ஸில்தான் முடியும். அணிந்திருக்கும் ஆடை மேல் கை படுவதற்கும், வெதுவெதுப்பான மெத்தென்ற உடலின்மீது கை படுவதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா?"

 

`முந்தைய நாள் இரவு திருப்தியான தாம்பத்திய உறவுகொண்டால், மறுநாள் காலையில் எனர்ஜியாக அலுவலக வேலைகளைப் பார்க்கலாம்' என்கின்றன ஆய்வுகள். `டெட்லைனை முடிச்சு டிராஃபிக்ல வண்டியை ஓட்டி, வீட்டுக்கு வந்து கொரோனா போக தேய்ச்சுக் குளிச்சிட்டு பெட்ரூமுக்குள்ள நுழைஞ்சா, என்னை எப்ப பெட்ல போடப்போறேன்னு உடம்பு கெஞ்ச ஆரம்பிச்சிடுது. எனர்ஜியே இல்லாம எப்படிங்க செக்ஸ் வெச்சுக்கிறது. அதெல்லாம் வீக் எண்ட்ல பார்த்துக்கலாம்' அப்படிங்கிறதுதான் இன்னிக்கு இருக்கிற பெரும்பாலான தம்பதிகளோட தாம்பத்திய நிலைமை. கம்ப்யூட்டர்லேயே குடியிருக்கிற கணவனுக்கு `என் தலைவியோட ஷாம்பு கூந்தல் நறுமணத்தைவிட நீ தேன் குடிச்ச பூக்கள் வாசமா இருந்துச்சா வண்டே'ன்னு ரொமான்டிக்கா பேசுறதுக்கான மனநிலை வரணும். லேப்டாப்பைப் பார்த்துப் பார்த்து கண்கள் பூத்துப்போன மனைவி, `செம்புலப்பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் கலக்கலாமா'ன்னு கணவன்கிட்ட கேட்கிற அளவுக்குக் காதலாகி கசிந்துருகணும். தினசரி வாழ்க்கையின் ஸ்ட்ரெஸ் கணவன், மனைவிக்கிடையேயான தாம்பத்திய உறவைக் கொல்லாமல் இருக்க அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று பாலியல் மருத்துவர் காமராஜிடம் கேட்டோம்.

Couple (Representational Image)
 

``முழுமையான செக்ஸ் உடம்பு வலியைக் குறைக்கும், தலைவலியைப் போக்கும். ஆபீஸ்ல ஏதோவொரு பிரச்னைன்னா நம்ம மக்கள் `மூடு இல்ல'ன்னு செக்ஸை அடுத்த நாளுக்குத் தள்ளி வெச்சிடுறாங்க. ஆனா, அன்னிக்கு செக்ஸ் வெச்சுக்கிட்டீங்கன்னா மன அழுத்தம் குறையுறதை நீங்களே அனுபவபூர்வமா தெரிஞ்சுக்க முடியும்.

 
 

உடலுறவின் உச்சக்கட்டம் மனிதர்களுடைய உடலிலும் மனதிலும் செய்கிற மேஜிக்ஸைபத்தி தெரிஞ்சுக்கிட்டீங்கன்னா, ரொம்ப ஆச்சர்யப்படுவீங்க. உச்சக்கட்டம் அடையுறப்போ மூளையிலிருந்து `மார்பின்' (Morphine) வலிநிவாரணியின் குணத்தையொத்த திரவம் ஒன்று சுரக்கும். உடல்வலியால் அவதிப்படுபவர்களுக்கு இந்த மார்பினைத்தான் பரிந்துரைப்போம். மனதை ரிலாக்ஸ் செய்வதற்கும் இதையேதான் தருவோம். `அப்படின்னா உச்சக்கட்டம் வந்தாதான் மார்பின் சுரக்குமா டாக்டர்'னு கேட்கத் தோணலாம். ஆண்களைப் பொறுத்தவரை 99 சதவிகிதம் பேர் உச்சக்கட்டம் அடைந்துவிடுகிறார்கள். பெண்களில் சிலருக்குக் கிடைக்காமல் போகலாம். ஆனால், உறவு கொள்ளும்போது சுரக்கிற மற்ற ஹார்மோன்கள் வலி நிவாரணியாகவும் மன அழுத்தம் போக்கும் மருந்தாகவும் செயல்பட்டுவிடும். இந்த எஃபெக்ட் அடுத்த ஒரு நாள் வரை இருக்கும்'' என்றவர், இதற்கு கணவன் மனைவி ஃபாலோ செய்ய வேண்டிய வழிகளையும் சொன்னார்.

பாலியல் மருத்துவர் காமராஜ்
 

``படுக்கையறையைப் பொறுத்தவரைக் கணவன் - மனைவி இருவரைத் தவிர வேறு ஒருவர் இருந்தால், அதைக் கூட்டம் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளையும் சேர்த்தே சொல்கிறேன். `மகள் முழிச்சிப்பாளோ; மகன் பார்த்திடுவானோ' என்று பயந்து பயந்து வைத்துக்கொள்ளும் உறவில் உச்சக்கட்டம் அடைவது கடினம்.

அடுத்த பாயின்ட் மிக மிக முக்கியமானது. இரவுகளில் தம்பதியர் ஆடையில்லாமல் படுத்தாலே அது செக்ஸில்தான் முடியும். அணிந்திருக்கும் ஆடை மேல் கை படுவதற்கும், வெதுவெதுப்பான மெத்தென்ற உடலின்மீது கை படுவதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா? இப்படிப் படுத்தால் இரவிலிருந்து காலைக்குள் ஏதோ ஒரு நேரத்தில் உறவு நிகழ்ந்துவிடும். இது வெரி வெரி பவர்ஃபுல் டெக்னிக். இதில் சிரிப்பதற்கோ, ச்சீய்... என்பதற்கோ ஒன்றுமே இல்லை. ஆராய்ச்சி செய்யப்பட்டு நிரூபிக்கப்பட்ட வழிமுறை இது. நம் நாட்டில் பெரும்பாலானோர் குழந்தைகளுடன் படுப்பதால் இந்த முறையை முயற்சி செய்து பார்ப்பதே இல்லை.

காமத்துக்கு மரியாதை
 
காமத்துக்கு மரியாதை

அடிக்கடி உறவு வைத்துக்கொள்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஜலதோஷம், காய்ச்சல் வராது. உறவுகொள்ளும்போது மகிழ்ச்சிக்கான ஹார்மோன்கள் சுரப்பதால் தற்கொலை எண்ணம் வராது. வந்தாலும் தடுக்கப்படும். ஸ்ட்ரெஸ் குறையும். ரத்த அழுத்தம் சீராகும். இதனால் 10 வருடம் கூடுதலாக வாழலாம். அதிலும் இளமையாக வாழலாம். ஹார்ட் அட்டாக் வருவதற்கான வாய்ப்பு மூன்றில் ஒரு பங்காகக் குறையும். பெண்களுக்கு செர்விகல் கேன்சர் ஆபத்து குறையும். ஆண்களுக்கு புராஸ்ட்டேட் கேன்சர் ஆபத்து குறையும். ஸோ, காமத்தை அடிக்கடி கொண்டாடுங்க. மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருங்க...'' என்கிறார் டாக்டர் காமராஜ்.

வாசகர் கேள்வி:

நான் 29 வயது நிரம்பிய ஆண். எனக்கு சிறு வயதிலிருந்தே சுய இன்பத்தில் அதீத ஆர்வம். வேலை மற்றும் குடும்ப சூழ்நிலைகளால் ஸ்டிரெஸ் வந்தால் ஸ்ட்ரெஸ் பஸ்டராக சுய இன்பம் அனுபவிப்பேன். ஒரு நாளைக்கு ஒருமுறையாவது சுய இன்பத்தில் ஈடுபட்டு விடுவேன். சமீபத்தில், ஆண்குறி முன்தோலை பின்னிழுத்து நீரில் தூய்மைப்படுத்தும்போது, மொட்டின் முடிவுப்பகுதி கருநீல நிறத்தில் இருப்பதைப் பார்த்தேன். ஆனால், வலியோ வீக்கமோ இல்லை. இருந்தாலும் பயமாக உள்ளது. இப்போது எனக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருப்பதால், தாம்பத்திய வாழ்வில் இதன் காரணமாக ஏதேனும் பிரச்னை வருமோ என்று பயமாக உள்ளது.

டாக்டர் பதில்: ``சுய இன்பத்துக்கும் இந்த நிற மாற்றத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. ஆணுறுப்பில் இப்படி நிறமாற்றம் ஏற்படுவது இயல்பானதுதான். அங்கு நிகழ்கிற சின்னச் சின்ன மாற்றங்களை உற்றுப்பார்த்து பயப்படுவது தேவையில்லாதது. இதனால், உங்கள் திருமண வாழ்க்கையில் எந்தப் பிரச்னையும் வராது. ரொம்பவும் பயமாக உணர்ந்தீர்களென்றால், பாலியல் நிபுணரைச் சந்தியுங்கள்.''

https://www.vikatan.com/lifestyle/relationship/doctor-talks-about-the-importance-of-sex-as-a-stress-buster-kamathukku-mariyadhai

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் என்ற ஒரு தளத்தை கண்ணியமான ஒரு தளமாக மட்டும் பாவியுங்கள்..அதை விடுத்து பத்தோடு பதினொன்றாக யாழின் தரத்தை கண்ட கன்றாவி ஆக்கங்களையும் போட்டு துலைக்காதீங்கள்..எது என்றாலும் வீட்டு வாசற் படி தாண்டாதவரை மனிதனுக்கோ யாருக்கோ அழகு.செய்தி என்றால் போல் எல்லாமே செய்தி ஆகாது....நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாருடனும் விவாதத்துக்காக எழுதவில்லை. பொதுவாக உடலுறவு உடலுக்கும் உள்ளத்துக்கும் நன்மை பயப்பது என்பதை நீண்ட காலம் கழித்துப் புரிந்து கொண்டவன் நான். இளமைக்காலத்தில் சுயஇன்பத்திற்குப் பின் சுய  கழிவிரக்கமும் குற்றவுணர்ச்சியும் ஏற்பட்டு மனதளவில் பாதிக்கப்பட்டது உண்டு. அவற்றைப் பற்றிய தவறான கற்பிதங்களே காரணம். காமசூத்ரா போன்ற படைப்புகளே பல தவறான புரிதல்களைக் கொண்டவை. சமூகத்தில் காமத்தைப் பற்றிய தவறான கற்பிதங்கள் உலா வரும்போது சரியான கருத்துக்களும் வலம் வருவது நியாயம்தானே ! அவையறிந்து சொல்லுதல் நலம் என்று மக்கள் எண்ணினால், அதற்கென தனிப்பட்ட பகுதியை    ('பேசாப் பொருள்' போல) வரையறுத்து எழுதலாம். Adults only என்று திரைப்படங்களை வரையறுப்பதில்லையா ?  

        எனவே இவ்வாறான எழுத்துக்களை வரவேற்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, யாயினி said:

யாழ் என்ற ஒரு தளத்தை கண்ணியமான ஒரு தளமாக மட்டும் பாவியுங்கள்..அதை விடுத்து பத்தோடு பதினொன்றாக யாழின் தரத்தை கண்ட கன்றாவி ஆக்கங்களையும் போட்டு துலைக்காதீங்கள்..எது என்றாலும் வீட்டு வாசற் படி தாண்டாதவரை மனிதனுக்கோ யாருக்கோ அழகு.செய்தி என்றால் போல் எல்லாமே செய்தி ஆகாது....நன்றி.

உங்கள் கருத்தோடு முரண்படுகிறேன் யாயினி!

எங்கள் சமூகத்தில் இது போன்ற விடயங்களில் எல்லாவற்றையும் முக்காடுக்குள் பேசி விட்டுப் போகிற பழக்கம் வாழ்க்கையை எப்படி அனுபவிப்பதென்னும் எந்தத் தகவல்களையும் பகிர அனுமதிப்பதில்லை! இதனால்  பத்துப் பிள்ளையைப் பெத்த பின்னரும் எதுவும் தெரியாமல் இருக்கும் மக்கள் தான் எங்களிடையே அதிகமாக இருக்கின்றனர்.

மூச்சு விடுவது, கழிவகற்றுவது, உறங்குவது போல இதுவும் ஒரு உடலியல் செயல்பாடு தான் என்று பார்த்தால் இதில் முக்காட்டுக்குள் பேச எதுவுமில்லை என்பது புரியும்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, யாயினி said:

யாழ் என்ற ஒரு தளத்தை கண்ணியமான ஒரு தளமாக மட்டும் பாவியுங்கள்..அதை விடுத்து பத்தோடு பதினொன்றாக யாழின் தரத்தை கண்ட கன்றாவி ஆக்கங்களையும் போட்டு துலைக்காதீங்கள்..எது என்றாலும் வீட்டு வாசற் படி தாண்டாதவரை மனிதனுக்கோ யாருக்கோ அழகு.செய்தி என்றால் போல் எல்லாமே செய்தி ஆகாது....நன்றி.

கோவில் கற்பக்கிரகங்களை தாங்கள் நிமிர்ந்து பார்க்காதவரை நீங்கள் கூறுவது சரியாகத்தான் தோன்றும்..😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது கட்டாயம் பேசப்படவேண்டியதே. 

சொல்லப்போனால் ஏனைய மஞ்சள் பத்திரிகைகள் போல எழுதாமல் இவற்றை கண்ணியமான adult approach இல் எழுத, வாசிக்க, விவாதிக்க கூடியதாக இருப்பது யாழின் தனிச்சிறப்பே.

ஆனால் பேசாப்பொருள் என்ற பக்கத்தில் போட்டிருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

கோவில் கற்பக்கிரகங்களை தாங்கள் நிமிர்ந்து பார்க்காதவரை நீங்கள் கூறுவது சரியாகத்தான் தோன்றும்..😆

நண்பர் Kapithan சொல்ல வருவது கோபுர சிற்பங்களை என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுப.சோமசுந்தரம் said:

நண்பர் Kapithan சொல்ல வருவது கோபுர சிற்பங்களை என்று நினைக்கிறேன்.

ஆமாம், நீங்கள் கூறுவது சரியே 👍

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஆழ்ந்த இரங்கல்கள். மேலே  ஏராளன் இணைத்த தினக்குரல் பத்திரிகையில் 1933 ஓகஸ்ட்இல் பிறந்த எதிர்வீரசிங்கம் வயது 89 என்று எழுதியிருக்கிறார்கள். 90 என்றுதானே வரவேண்டும்?. அவர் மத்திய கல்லூரியில் படிக்கும் போது இலங்கை சாதனையை முறியடிக்கும் போது ,  கொழும்பில் வெளிவந்த ஆங்கில பத்திரிகை ஒன்றில் இவரது பெயரை எதிர்வீரசிங்க என்று எழுதியிருந்தது. அப்பொழுது மத்திய கல்லூரியின் அதிபர் சிமித் அவர்கள் ‘எதிர்வீரசிங்க அல்ல நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்’  என்று எழுதிய கடிதம் அதே பத்திரிகையில் பிறகு வந்தது.  ஆசிய விளையாட்டுப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றபின்பு யாழ் புகையிரத நிலையத்தில் இருந்து மத்திய கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டு ,எதிர்வீரசிங்க அவர்களுக்கு சிறந்த வரவேற்பு பாடசாலையில்வழங்கப்பட்டது.  -  மத்திய கல்லூரியின் பழைய மாணவரான எனது தகப்பனார் சொன்ன தகவல்
    • அட்லீஸ்ட் விஜயலக்சுமிக்கு செய்தது போல் அநியாயம் செய்யாமல் தன்னை நம்பி வந்த பெண்ணை கண்ணியத்தோடு நடத்தினார் என நினைக்கிறேன்🤣. பதில் விளக்கம் போதும் என நினைக்கிறேன்🤣 ஐயகோ….இரு மாநில ஆளுனர்….ஆட்டுகுட்டி கதையை கேட்டு…
    • இல்லை அண்ணாவின் ஆட்சிகாலம் போல இருக்கும்.   
    • அவ‌ங்க‌ள் இட‌த்தில் நேர்மை ஊழ‌ல் இல்லாம‌ இருந்தால் ஏன் த‌மிழ‌ர்க‌ள் திராவிட‌த்தை வெறுக்க‌ போகின‌ம் 2ஜீ ஊழ‌லால் ஒரு இன‌ம் அழிவ‌தை வேடிக்கை பார்த்த‌வ‌ர்க‌ள் பெரியார் ஜாதியை ஒழித்தார் அது தான் குறிப்பிட்ட‌  ஜாதி ம‌க்க‌ள் வ‌சிக்கும் இட‌த்தில் ம‌னித‌க் க‌ழிவை த‌ண்ணீருக்கை க‌ல‌ந்த‌வை....................... சோடா க‌டையில் வேலை பார்த்து விட்டு ம‌ஞ்ச‌ல் வாக்கில் 4புத்த‌க‌த்தோட‌ வ‌ந்த‌வ‌ரின் குடும்ப‌த்துக்கு இத்த‌னை ல‌ச்ச‌ம் கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து ச‌த்திய‌மாய் கோடி காசுக்கு எத்த‌னை 0 என்று என‌க்கு தெரியாது ஆனால் நீட் தேர்வை ர‌த்து செய்ய‌ எங்க‌ளிட‌ம் ர‌க‌சிய‌ம் இருக்கு என்று சொல்லி ப‌ல‌ பிள்ளைக‌ள் நீட்டால் இற‌ந்து போனார்க‌ள் அத‌ற்க்கு பிற‌க்கு உத‌ய‌நிதியின் பெயர் கொல்லிநிதி கொல்லுநிதியின் ம‌க‌ன் இன்ப‌நிதிக்கு தெரியும் கோடி காசுக்கு எத்த‌னை 0 என்று....................திமுக்காவுக்கு ஓட்டு போட்ட‌ ம‌க்க‌ள் ம‌ழை வெள்ள‌த்தால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ போது வீட்டுக்குள் இருந்து க‌டும் வேத‌னை ப‌ட்ட‌வை 4000ஆயிர‌ம் கோடி ஒதுக்கி ப‌ணி செய்தார்க‌ளா அல்ல‌து அதையும் ஊழ‌ல் செய்து மூடி ம‌றைத்தார்க‌ளா...........................ஆண்ட‌வா இனி வ‌ள‌ந்து வ‌ரும் பிள்ளைக‌ளுக்கு ந‌ல்ல‌ அறிவைக் கொடு அப்ப‌ தான் கால‌ம் க‌ட‌ந்து த‌மிழ் நாட்டில் ந‌ல் ஆட்சி ம‌ல‌ரும் நாடும் செல்ல‌ செழிப்பாய் இருக்கும் ம‌க்க‌ளும் குறைக‌ள் இல்லாம‌ எல்லா வ‌ச‌தியோடும் வாழுவின‌ம்...............................................  
    • இப்படியா தலைவரே?  😍 பட விளக்கம் போதுமா? இல்லை எழுத்து விளக்கங்களும்  தேவையா? 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.