Jump to content

கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் மனிதர்களை முந்தும் எலி - மிஸ்டர் கோக்ஸ்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் மனிதர்களை முந்தும் எலி - மிஸ்டர் கோக்ஸ்

27 செப்டெம்பர் 2021
கோக்ஸ்

பட மூலாதாரம்,GOXX CAPITAL

பலரைப் போலவே மிஸ்டர் கோக்ஸும் கிரிப்டோகரன்சி என்ற வணிகக் கடலுக்குள் குதித்துவிட்டார், என்றாவது ஒருநாள் அது தன்னை பணக்காரர் ஆக்கிவிடும் என்ற நம்பிக்கையுடன்.

பலரைப் போலவே என்று சொன்னோம் அல்லவா, ஆனால் இரண்டு விஷயத்தில் அவர் மற்றவர்களை விட மாறுபட்டவர். ஒன்று சாதாரண மனிதர்களைப் போல அவர் குறைந்த அளவு லாபம் ஈட்டுவதில்லை. பல தொழில்முறை வர்த்தகர்கள், நிதியங்கள் போன்றவற்றை எல்லாம் அவர் தோற்கடித்துவிட்டார்.

இரண்டாவது வேறுபாடு, அவர் மனிதர் அல்லர். அவர் ஒரு எலி. வெள்ளெலி.

மிஸ்டர் கோக்ஸுக்கு அலுவலகம் உண்டு. ஆனால் அது அவரது கூண்டுக்குள்ளேயே அமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் அவர் அலுவலகத்துக்குள் வந்துவிட்டார் என்றால் ட்விட்டரில் அவரைப் பின் தொடருவோருக்கு தகவல் வந்துவிடும். ட்விட்ச்(Twitch) தளத்தில் நேரலை தொடங்கிவிடும். மிஸ்டர் கோக்ஸ் தனது வர்த்தகத்தைத் தொடங்குவார்.

அந்த அலுவலகத்தில் ஒரு சக்கரம் இருக்கிறது. அதில் ஓடுவதன் மூலம் எந்த கிரிப்டோ கரன்சியை வர்த்தகம் செய்ய வேண்டும் என்பதை அவர் தேர்வு செய்கிறார். சரி, அதை வாங்க வேண்டுமா, அல்லது விற்க வேண்டுமா என்பதை எப்படித் தீர்மானிப்பது. அதற்கும் அவரது அலுவலகத்துக்குள்ளேயே வசதி இருக்கிறது.

இரண்டு சுரங்க வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒன்று வாங்குவதற்கு, மற்றொன்று விற்பதற்கு. ஒவ்வொரு முறையும் சுரங்கப் பாதைக்குள் ஓடும்போது, அதற்கேற்ப அங்கு இணைக்கப்பட்டிருக்கும் மின்னணுக் கம்பிகள் வர்த்தககத்தை நிறைவு செய்கின்றன.

இந்த எலி முதலீட்டாளரின் பின்னாள் இருக்கும் மூளைகள், இரு ஜெர்மானிய இளைஞர்களுக்குச் சொந்தமானவை.

"இப்போதெல்லாம் எல்லாமே விலை உயர்ந்துவிட்டன. வாடகை அதிகமாகிவிட்டது, சேமிப்பது கடினமாகிவிட்டது. " என்று அவர்கள் கூறுகிறார்கள்.

"எங்கள் தலைமுறையைச் சேர்ந்த பலர் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்கிறேன் என்கிறார்கள். ஆனால், எந்தப் புரிதலும் இல்லாமல், தங்களது சேமிப்பை எல்லாம் கிரிப்டோ கரன்சி சந்தையில் வீசுகிறார்கள். "

"இதுபோன்றோரின் கவனத்தை ஈர்க்க செய்ய முடிவெடுத்தோம். மனிதர்களை எங்களது வெள்ளெலி புத்திசாலித்தனமாக முடிவெடுக்கும் என்று கூறினோம்"

அதனால் திட்டமிட்டேதான் கோக்ஸ் என்ற பெயர் வைக்கப்பட்டது. எம்டி கோக்ஸ் என்ற நிறுவனம் ஒரு காலத்தில் கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் உலகத்திலேயே மிகப்பெரிய நிறுவனமாக இருந்தது. ஆனால் பல லட்சம் கிரிப்டோ கரன்சிகள் திருடப்பட்டதால் அது திவாலானது.

சரி, நமது மிஸ்டர் கோக்ஸ் வெள்ளெலி என்ன செய்திருக்கிறார் என்று பார்ப்போம்.

கூண்டு

பட மூலாதாரம்,GOXX CAPITAL

அவரது முதல் மாதம் கடினமாக இருந்தது. கடந்த ஜூன் மாதம் 12-ஆம் தேதி அவர் தனது முதல் வர்த்தகத்தைத் தொடங்கினார். 326 யூரோக்கள் அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. முதல் மாதத்தில் 95 வர்த்தகங்களை முடித்த பிறகு அவரது மூலதனம் 7.3 சதவிகிதம் குறைந்தது. ஆனால் செப்டம்பர் 27-ஆம் தேதி கணக்குப்படி அவரது மூலதனத்தின் நிகர மதிப்பு 19.41 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது.

இது சாதாரணமல்ல. உலகின் முன்னணி பங்குச் சந்தை முதலீடுகளின் லாபத்தை விடவும், ஏன் முதலீட்டு வித்தகரான வாரன் பஃப்பெட்டின் பெர்க்ஸயர் ஹேத்தாவே நிறுவனத்தின் லாபத்தை விடவும் இது அதிகம்.

கிரிப்டோ கரன்சி சந்தையில்கூட பிட்காயின் போன்ற முன்னணி கரன்சிகளை மிஸ்டர் கோக்ஸ் முந்தியிருக்கிறார்.

ஆனால், மிஸ்டர் கோக்ஸ் பெயரில் இருக்கும் கோக்ஸ் கேபிடல் என்ற நிறுவனம் உண்மையான முதலீட்டு நிறுவனமல்ல. மிஸ்டர் கோக்ஸ் என்ற வெள்ளெலியைப் பயன்படுத்தும் இரு ஜெர்மானிய இளைஞர்களும் தங்களது ஒவ்வொரு ட்விட்டர் பதிவிலும் இதை வலியுறுத்திக் கூறுகிறார்கள். தங்களது முதலீட்டை ஆலோசனையாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்கிறார்கள்.

ஆயினும் தங்களைப் பற்றிய விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க அவர்கள் விரும்பவில்லை.

"கிரிப்டோ கரன்சி பற்றிய பெரும்பாலான விவாதங்கள் சர்ச்சைக்குரியவையாக மாறிவிடுகின்றன. அது நாகரிகமற்றதாகவும் இருக்கின்றன" என்று பிபிசியிடம் அவர்கள் தெரிவித்தனர்.

எலி

பட மூலாதாரம்,GOXX CAPITAL

அதனால் தங்களது "வேடிக்கையான திட்டத்தின்" முகமாக மிஸ்டர் கோக்ஸ் இருக்கட்டும் என்று அவர்கள் முடிவெடுத்துவிட்டனர்.

கொரோனா பொது முடக்கத்தின் காரணமாக வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தபோது வேடிக்கையாக இந்தத் திட்டத்தை தொடங்கியதாக அவர்கள் கூறுகின்றனர்.

அவர்களில் ஒருவர் விரிவுரையாளர் மற்றும் மாதிரிகளை வடிவமைக்கும் நிபுணர். மக்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலான, நகைச்சுவை கலந்த தொழில்நுட்பங்களை தாம் விரும்புவதாக அவர் கூறுகிறார்.

மற்றொருவர் ஒரு புரோகிராமர். பல்கலைக்கழகத்தில் இருந்து இருவரும் நல்ல நண்பர்கள்.

எலி நினைத்தபடி செய்யும் வர்த்தகங்கள் ஆன்லைனில் பலரது ஆர்வத்தை ஈர்த்துள்ளது.

"வெள்ளெலி தனது வர்த்தகத்தைத் தொடங்கிய நாள் முதல் கிரிப்டோ கரன்சி என்றால் என்ன என்று பலரும் என்னைக் கேட்கத் தொடங்கிவிட்டார்கள்" என்கிறார் அவ்விருவரில் ஒருவர். "பொதுவாக மக்கள் 'பிளாக்செயின்' என்ற வார்த்தையைக் கேட்டாலே ஓடிவிடுவார்கள். . "

மிஸ்டர் கோக்ஸின் பெட்டி

மிஸ்டர் கோக்ஸின் அலுவலகம் அடங்கிய பெட்டியின் பெரும்பாலான பாகங்கள் வீட்டிலேயே தயாரிக்கப்பட்டவை. சாஃப்ட்வேர் ஸ்கிரிப்ட், மைக்ரோகண்ட்ரோலர்கள், 3 டி பிரிண்டிங், லேசர் கட்டிங் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இந்த அலுவலகம் முழுமையாக தானியங்கி முறையில் இயங்குகிறது.

கோக்ஸ்

பட மூலாதாரம்,GOXX CAPITAL

இதை விரிவுபடுத்தவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.

"எங்கள் மனதில் பல அம்சங்கள் உள்ளன, அவை அனைத்தையும் பார்க்க மிகவும் வேடிக்கையாக இருக்கும், மேலும் மிஸ்டர் கோக்ஸ் விளையாடுவதற்கு இன்னும் அதிக இடத்தைக் கொடுக்கும்" என்று அவர்கள் கூறினர்.

ஆனால் மிஸ்டர் கோக்ஸ் ஒரு திறமையான, வெற்றிகரமான நிர்வாகியைப் போல தனது நேரத்தை வைத்திருக்கிறார்.

ஆனால் மிஸ்டர் கோக்ஸ், ஓர் உண்மையான வெற்றிகரமான நிர்வாகியைப் போல, தனது நேரத்தை வைத்திருக்கிறார். எப்போது வேண்டுமானாலும் அவர் அலுவலகத்துக்கு வரலாம்.

அவரைப் பார்க்க விரும்புவோர் அடுத்த நேரலை வரை காத்திருக்க வேண்டும்.

https://www.bbc.com/tamil/global-58710984

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.