Jump to content

யாழ். மக்களுக்கான இரு பெரும் குடிநீர் திட்டங்கள் : பிரதமர் மஹிந்த ஆரம்பித்து வைக்கிறார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். மக்களுக்கான இரு பெரும் குடிநீர் திட்டங்கள் : பிரதமர் மஹிந்த ஆரம்பித்து வைக்கிறார்

யாழ்ப்பாணம் மற்றும் பளை பகுதிகளில் 60,000 குடும்பங்களைச் சேர்ந்த மூன்று இலட்சம் மக்களுக்கு ஒரு நாளைக்கு 24000 கன மீற்றர் சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுக்கும் இரண்டு பாரிய நீர் வழங்கல் திட்டங்கள் தொடக்கி வைக்கப்பட உள்ளன.

பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தலைமையில், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதி, மெய்நிகர் தொழில்நுட்பம் ஊடாக இந்த தொடக்க நிகழ்வு (Virtual inauguration) இடம்பெறவுள்ளது.

அன்றைய தினம் தாளையடியில் நிர்மாணிக்கப்படும் SWRO கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் வேலைத்திட்டம் தொடக்கி வைக்கப்பட உள்ளதுடன், நயினாதீவில் முழுமையாக நிறைவுசெய்யப்பட்ட நீர் விநியோக திட்டம் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

May be an image of 2 people, people sitting and indoor

நயினாதீவு திட்டத்தின் மூலம் 5000 பயனாளர்களுக்கு சுத்தமான நீர் வழங்கப்படவிள்ளது. 

இதேவேளை, தாளையடியில் நிர்மாணிக்கப்படும் SWRO கடல்நீர் சுத்திகரிப்பு நிலைய திட்டத்தின் நீட்சியாக ஒரு இலட்சம் மக்களைப் பயனாளர்களாக உள்ளடக்கும் வகையில், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு திட்டத்தின் கீழ், 284 கிலோமீற்றர் தூரத்திற்கு குழாய்களை அமைக்கும் திட்டம் உள்ளடக்கிய - யாழ் மாநகர விநியோக திட்டமும் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளது.

யாழ் மாநகர விநியோகம் மற்றும் தாளையடி SWRO திட்டங்கள் 2023ஆம் ஆண்டு நிறைவுசெய்யப்படுவதுடன், இதனூடாக மூன்று இலட்சம் பயனாளர்களுக்குச் சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொடுக்க எதிர்பார்க்கப்படுகின்றது.

இரணைமடு குளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீரைப் பெற்றுக்கொள்ளும் வகையில் வகுக்கப்பட்ட அசல் மூலத்திட்டமானது -

அந்த பகுதி விவசாயிகளால் எழுப்பப்பட்ட ஐயங்களினாலும், அந்த பகுதி அரசியல்வாதிகளின் இடையூறுகளினாலும் ஏற்கெனவே கைவிடப்பட்டுவிட்டதன் காரணமாகவே தாளையடி SWRO திட்டம் தொடங்கப்பட்டது.

 

https://www.virakesari.lk/article/114185

Link to comment
Share on other sites

இது ஒரு அரசியல் ஏமாற்றாக இல்லாமல்  மேற்கூறப்பட்ட தகவல்களின் பிரகாரம் மக்களுக்கு பலனளிக்கும் திட்டமாக இருந்தால் பாராட்டப்படவேண்டிய செயல் திட்டமே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, tulpen said:

இது ஒரு அரசியல் ஏமாற்றாக இல்லாமல்  மேற்கூறப்பட்ட தகவல்களின் பிரகாரம் மக்களுக்கு பலனளிக்கும் திட்டமாக இருந்தால் பாராட்டப்படவேண்டிய செயல் திட்டமே. 

அதே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

இது ஒரு அரசியல் ஏமாற்றாக இல்லாமல்  மேற்கூறப்பட்ட தகவல்களின் பிரகாரம் மக்களுக்கு பலனளிக்கும் திட்டமாக இருந்தால் பாராட்டப்படவேண்டிய செயல் திட்டமே. 

திட்டம் பாரட்டக்கூடியது.  ஆனால் இது எமது வடமாகாணசபை செய்ய வேண்டிய திட்டம் மகிந்த அரசு செய்வது கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கும் வேலைத்திட்டம் இதனை ஆதரிப்பது ஒற்றை ஆட்சியை ஆதரிப்பதாகும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நயினாதீவு திட்டம் பற்றி யாருக்காவது தெரியுமா? இதற்கு எங்கே இருந்து நீர் உறிஞ்சப்படுகிறது?

தாளையடி திட்டம் என்பது வெறும் அறிவிப்பு என்றே நினைக்கிறேன். கடல்நீரை நன்னீராக்குவத்ற்கு அமைக்கபடும் தொழில் சாலைக்கு எங்கே இருந்து funding வருகிறது? இதன் மூலம் 2023 இல் யாழுக்கு நீர் வர போகுது என்றால் குழாய் பதிக்கும் வேலைக்கு யார் funding? ஏன் கிளிநொச்சி, தாளையடியில் இருந்து யாழ் நகருக்கு வர 283 கிமி தூரத்துக்கு குழாய்கள் தேவை? இதன் சூழலியல் விளைவுகள் எப்படி சமன் செய்யபடும்? இதன் நீண்ட கால செலவை யார் ஏற்பர்?

மகிந்த ஏதாவது செய்வதாக காட்ட விட்ட புருடா அறிவிப்போ?

ஆனால் ஊரில் சில AB வீதிகளின் காப்பெட் போடும் பணி கொவிடிலும் நடக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நயினாதீவு திட்டமென்ன.. தீவகத்தில் போடப்பட்ட வேக வீதிகளே நடுவழியில் கிடக்குதாம். 

இது தண்ணி வரும்.. ஆனால் வராது கதை தான். எல்லாம் அரசியல் விளம்பரம். இதில் தாடியர் இன்னொரு பக்கம் கத்த.. அங்கஜன் இன்னொரு பக்கம் கத்துவார். பெரிய பாஸ் இப்படிக் கத்துவார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று நான் தம்ம்பியாருடன் கதைத்தனான் மண்கும்பானுக்கு அருகில் பென்னாம் பெரிய ஒரு தண்ணீர் தொட்டி மிக உயரமாகக் கட்டியிருக்கினமாம் யாழ்ப்பாணத்தில நிண்டு பாத்தாலே தெரியுமாம் நான் நினைக்கிறன் சாட்டியிலிருந்து நயினாதீவுக்குக் கொண்டுபோகினம் போல இருக்கு.  gravity water supply system என நினைக்கிறன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்களுக்கு சுத்தமான குடி நீரை திட்டமிட்டு பெற்று கொடுக்க வேண்டியது அரசின் கடமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kandiah57 said:

திட்டம் பாரட்டக்கூடியது.  ஆனால் இது எமது வடமாகாணசபை செய்ய வேண்டிய திட்டம் மகிந்த அரசு செய்வது கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கும் வேலைத்திட்டம் இதனை ஆதரிப்பது ஒற்றை ஆட்சியை ஆதரிப்பதாகும்

அப்ப வடமாகாண சபை இனியொரு தரம் உருவாகி நித்திரைச் சோம்பல் முறிச்சு எழும்பி தண்ணீர்த் திட்டம் தரும் வரை மக்கள் குடத்தோட நடந்து உடற்பயிற்சி எடுக்கட்டும் என்கிறீர்கள் போல?😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Justin said:

அப்ப வடமாகாண சபை இனியொரு தரம் உருவாகி நித்திரைச் சோம்பல் முறிச்சு எழும்பி தண்ணீர்த் திட்டம் தரும் வரை மக்கள் குடத்தோட நடந்து உடற்பயிற்சி எடுக்கட்டும் என்கிறீர்கள் போல?😎

ஜேர்மனியில் எந்த ஒரு தேர்தலும்  ஒரு வினாடிகூட பிந்தி நடத்தப்படவில்லை மட்டுமல்ல எந்த அரசியல் வாதியும் தலையிடுவதில்லை இங்கே நான் எட்டு தேர்தலை கண்டு இருக்கிறேன் ஐந்து தேர்தலில் வாக்குப்பதிவு செய்துள்ளேன் நான் இருக்கிறது சின்ன நகரில் எமக்கு தண்ணீர் தருவது மின்சார சபை மத்தியரசு இதில்  தலையிடுவதில்லை இந்த சின்ன நகரம் மிகச்சிறந்த முறையில் செயல்படுகிறது ஜேர்மனியின் தலைநகராக பொன் மாநகர் இருந்துள்ளது பொன்னின் நகரபிதா ஒரு இந்தியததமிழன் பெயர் அசோக்குமார் தமிழன் ஒருவன் நகரபிதாவாயிக்கிறான். என்று தேர்தல் நடத்தப்படமால் விடவில்லை   சட்டவிரோதமாக யாழ் மாகாண சபையை முடக்கி வைத்து கொண்டு...பெய்கின்ற மழையை கடலில் விட்டு உப்பு நீராக்கி அதை மீண்டும் எடுத்து  வடிகட்டி குடிநீர் தருகிறேன் எனப் தமிழனை பிரிந்து வைக்கிறார்கள் அப்போ ஏன் பேச்சுவார்த்தை? தீர்வு என்னாத்துக்கு அவனே அனைத்தும் செய்யட்டும் என்று விடலாம் இல்லையா? ஜேர்மனியில் நாங்கள் வாழ்ந்து வருவதாலும்  இலங்கையில் தமிழருக்கு ஒரு நிரந்திரமான தீர்வு வேண்டும் என்று விரும்புவதாலும் இலங்கை அரசின் செயல் அருவருப்பாய் தெரிகிறது எனவே… அந்தப் பதிலை  எழுதினேன் அதில் பிழை இருப்பின் சுட்டிக்காட்டவும்

கடந்த ஆண்டு உங்கள் நாட்டின் தேர்தலை உலகமே கண்டு சிரித்தது எனவே… உங்களுக்கு இலங்கை அரசின் செயல்கள் சரியாகவே தெரியும் 

2009 ஆம் ஆண்டு திருகோணமலை இருந்து முள்ளிவாய்க்கால் வரை உணவுப்பொருக்களையும் குடிநீர் வகைகளையும் தடைசெய்து ஒய்வு இன்றி  துரத்தி துரத்தி தமிழன் தலையில் குண்டு மழை பொழிந்தபோது குடம் வைத்துக்கொண்டு உடல் பயிற்சி செய்தவர்களா?

Link to comment
Share on other sites

4 hours ago, Kandiah57 said:

ஜேர்மனியில் எந்த ஒரு தேர்தலும்  ஒரு வினாடிகூட பிந்தி நடத்தப்படவில்லை மட்டுமல்ல எந்த அரசியல் வாதியும் தலையிடுவதில்லை இங்கே நான் எட்டு தேர்தலை கண்டு இருக்கிறேன் ஐந்து தேர்தலில் வாக்குப்பதிவு செய்துள்ளேன் நான் இருக்கிறது சின்ன நகரில் எமக்கு தண்ணீர் தருவது மின்சார சபை மத்தியரசு இதில்  தலையிடுவதில்லை இந்த சின்ன நகரம் மிகச்சிறந்த முறையில் செயல்படுகிறது

கந்தையா அண்ணை.

ஜேர்மனியையும் பங்களாதேசிடம் இருந்தே கடன் வாங்கும் இலங்கையையும் ஒப்பிடுவது கொஞ்சம் டூமச் சாக இல்லையா?🤣
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, நிழலி said:

கந்தையா அண்ணை.

ஜேர்மனியையும் பங்களாதேசிடம் இருந்தே கடன் வாங்கும் இலங்கையையும் ஒப்பிடுவது கொஞ்சம் டூமச் சாக இல்லையா?🤣
 

ஆமாம் ஒத்துக்கொள்கிறேன்   இலங்கையில் பாராளுமன்ற தேர்தல்...ஐனதிபதி  தேர்தல்  நடககிறது  ஆனால் வடமாகாண சபை தேர்தல் நடைபெறவில்லை காரணம் என்ன? குறைந்த அதிகாரம் இருக்கலாம் செயல்பாடுகளில் குறைபாடு இருக்கலாம் தொடர்ந்து இயங்கினால். இவை நிவர்த்தி ஆகும் இதேவேளை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வேறு அதனை எறக்கும் தமிழர்கள் சிலர் நினைத்தால் கவலையளிக்கிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kandiah57 said:

ஜேர்மனியில் எந்த ஒரு தேர்தலும்  ஒரு வினாடிகூட பிந்தி நடத்தப்படவில்லை மட்டுமல்ல எந்த அரசியல் வாதியும் தலையிடுவதில்லை இங்கே நான் எட்டு தேர்தலை கண்டு இருக்கிறேன் ஐந்து தேர்தலில் வாக்குப்பதிவு செய்துள்ளேன் நான் இருக்கிறது சின்ன நகரில் எமக்கு தண்ணீர் தருவது மின்சார சபை மத்தியரசு இதில்  தலையிடுவதில்லை இந்த சின்ன நகரம் மிகச்சிறந்த முறையில் செயல்படுகிறது ஜேர்மனியின் தலைநகராக பொன் மாநகர் இருந்துள்ளது பொன்னின் நகரபிதா ஒரு இந்தியததமிழன் பெயர் அசோக்குமார் தமிழன் ஒருவன் நகரபிதாவாயிக்கிறான். என்று தேர்தல் நடத்தப்படமால் விடவில்லை   சட்டவிரோதமாக யாழ் மாகாண சபையை முடக்கி வைத்து கொண்டு...பெய்கின்ற மழையை கடலில் விட்டு உப்பு நீராக்கி அதை மீண்டும் எடுத்து  வடிகட்டி குடிநீர் தருகிறேன் எனப் தமிழனை பிரிந்து வைக்கிறார்கள் அப்போ ஏன் பேச்சுவார்த்தை? தீர்வு என்னாத்துக்கு அவனே அனைத்தும் செய்யட்டும் என்று விடலாம் இல்லையா? ஜேர்மனியில் நாங்கள் வாழ்ந்து வருவதாலும்  இலங்கையில் தமிழருக்கு ஒரு நிரந்திரமான தீர்வு வேண்டும் என்று விரும்புவதாலும் இலங்கை அரசின் செயல் அருவருப்பாய் தெரிகிறது எனவே… அந்தப் பதிலை  எழுதினேன் அதில் பிழை இருப்பின் சுட்டிக்காட்டவும்

கடந்த ஆண்டு உங்கள் நாட்டின் தேர்தலை உலகமே கண்டு சிரித்தது எனவே… உங்களுக்கு இலங்கை அரசின் செயல்கள் சரியாகவே தெரியும் 

2009 ஆம் ஆண்டு திருகோணமலை இருந்து முள்ளிவாய்க்கால் வரை உணவுப்பொருக்களையும் குடிநீர் வகைகளையும் தடைசெய்து ஒய்வு இன்றி  துரத்தி துரத்தி தமிழன் தலையில் குண்டு மழை பொழிந்தபோது குடம் வைத்துக்கொண்டு உடல் பயிற்சி செய்தவர்களா?

மேலே நிழலி கேட்ட கேள்வி தான் என்னுடையதும்: ஜேர்மனி, அமெரிக்கா, கனடா நிலையை இலங்கையில் எதிர்பார்த்தால், நீங்கள் , நான், நிழலி எல்லாரும் இலங்கையில் தான் இப்ப இருந்திருப்போம்!

மக்களுக்கு அத்தியாவசியத் தேவைகள் உண்டு! இது நிதர்சனம், யதார்த்தம். அவற்றைத் தீர்க்க இலங்கையின் எந்த மட்ட அரசு வந்தாலும்  அனுமதிக்க வேண்டுமென்பது என் நிலைப்பாடு. கடந்த தேர்தலில் அங்கஜனுக்குக் கிடைத்த வாக்குகளின் படி - தாயக மக்களின் நிலைப்பாடும் அது போலத் தான் தெரிகிறது!

இதில் அரசியல் வர்ணம் பூசுவோரை மக்கள் ஒதுக்கி வைப்பது அடுத்த தேர்தல்களில் வெளிப்படையாகத் தெரிய வரும். அப்போது மீண்டும் இது பற்றிப் பேசுவோம்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Elugnajiru said:

நேற்று நான் தம்ம்பியாருடன் கதைத்தனான் மண்கும்பானுக்கு அருகில் பென்னாம் பெரிய ஒரு தண்ணீர் தொட்டி மிக உயரமாகக் கட்டியிருக்கினமாம் யாழ்ப்பாணத்தில நிண்டு பாத்தாலே தெரியுமாம் நான் நினைக்கிறன் சாட்டியிலிருந்து நயினாதீவுக்குக் கொண்டுபோகினம் போல இருக்கு.  gravity water supply system என நினைக்கிறன்

 

எனது  ஊரிலும் இது  போன்று பெரிய தண்ணீர்  தொட்டி கட்டி  பல  வருடங்களாக  காய்ந்து  போய்க்கிடக்கு?

பூனகரி என்றார்கள்

இரணைமடு  என்றார்கள்

கடல்  தண்ணீரை  நன்னீர் ஆக்கிறம் என்றார்கள்

புண்ணியவான்கள் யாராவது  தண்ணியை விடுங்கடா  என்று சனம் ஏங்கிக்கிடக்கு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நபருக்கு நாளொன்றுக்கு  80 லீட்டர் (24000x1000/300000) குடிநீர் என்பது மிக அதிகம். இதில் வேறு தேவைகளுக்கான தண்ணீரும் அடங்கும் என்றால் வீண் செலவும் சக்தி விரயமும் ஏற்படும். இந்த குடிநீரை மக்களுக்கு விநியோகிப்பதற்கு அரசு பயன்படுத்தும் வழிகள் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

 

எனது  ஊரிலும் இது  போன்று பெரிய தண்ணீர்  தொட்டி கட்டி  பல  வருடங்களாக  காய்ந்து  போய்க்கிடக்கு?

பூனகரி என்றார்கள்

இரணைமடு  என்றார்கள்

கடல்  தண்ணீரை  நன்னீர் ஆக்கிறம் என்றார்கள்

புண்ணியவான்கள் யாராவது  தண்ணியை விடுங்கடா  என்று சனம் ஏங்கிக்கிடக்கு?

உங்கட ஊரில தண்ணீர்த்தொட்டி மாத்திரமா கேட்பாரற்றுக்கிடக்குது. கோவில்கள் கோடி கோடியாகச் செலவுசெய்து கட்டிமுடிக்கப்பட்டு அதற்கு உள்நுழைவு வளைவுகளும் பலகோடிகள் செலவுசெய்து கட்டப்பட்டு. தவிர அம்பலவாணர் அரங்கம் கட்டப்பட்டு மாடு மழைவெயிலுக்கு ஒதுங்க விட்டபடி இப்படி ப்லவிடையங்கள் அங்கு காணக்கிடக்குது.

அண்மையில் நான் போனபோது அந்தவேளைகளில் வாழ்ந்தவர்கள் பூவரசங் கதியாலால் நிரைச்சுக்கு எல்லைவேலி அமைத்து அக்காணிகளில் வாழ்ந்த சுவடுகளின் அடையாளமாக நிறையப் பூவரச மரங்கள் காணப்பட்டது இப்போ அதுகளையும் வெட்டி விறகாக்கப்படுகிறது எனக் கேள்விப்பட்டன். தவிர இடம்பெயர்ந்து வந்தபோது பல்லாயிரக்கணக்கான கால்நடைகளை அப்படியே விட்டு வந்ததால் அவை பராமரிப்பல்லாது ஆனால் தங்களைத் தாங்களே தற்காத்துக்கொள்ளும் ஒரு இனமாகி மாறி நிறயவே காணப்பட்டது அதையும் கறிக்கடைக்காகக் காவுகொடுத்தாயிற்று.

சூழலியலாளர்கள் அப்படிக்கைவிட்டும் தப்பித்துவாழும் மாடுகளை அப்படியே பாதுகாத்து எதிர்காலத்தில் வறட்சியான சூழலில் பலன் தரக்கூடியசிறந்த கால்நடைகளை உருவாக்கலாம் எனக்கருதியிருந்தனர் அவை எல்லாமே அநியாயமாகக் கைநழுவிப்போய்விட்டது.

உங்களுக்கு நினைவிருக்கலாம் ஒரு நேவிக்கொமாண்டர் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு நெடுந்தீவுக் குதிரைகள் சிலதை எந்தவித அனுமதியும் இல்லாது விற்பனை செய்ததை. நெடுந்தீவுக்குதிரைகளது அருமை அவர்களுக்குத் தெரிகிறது எமக்கு எங்கே புரியப்போகுது.

கண்ணில் தெரியும் புங்குடுதீவைச்சேர்ந்த அனைவரையும் கும்பிட்டுக் கும்பிட்டுக் கூறினேன் இந்தக் கோய்ல் மண்டபம் தேர், தேர்முட்டி கட்டுறதை விட்டுட்டு ஆழுக்கு ஆள் குறைந்தது இரண்டு சூரிய மின் தகடுகளை வாங்கி குறிப்பிட்ட பிரதேசத்தில் வைத்துப் பராமரித்து தீவுப்பகுதிக்கும் மிகுதியானதை யாழ் நகருக்கும் விற்கலாம் என ஆனால் இவன் என்ன லூசன் இப்படிக் கதைக்கிறான் எனக்க்கூறிக்கொண்டு நழுவிப்போகினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Elugnajiru said:

உங்கட ஊரில தண்ணீர்த்தொட்டி மாத்திரமா கேட்பாரற்றுக்கிடக்குது. கோவில்கள் கோடி கோடியாகச் செலவுசெய்து கட்டிமுடிக்கப்பட்டு அதற்கு உள்நுழைவு வளைவுகளும் பலகோடிகள் செலவுசெய்து கட்டப்பட்டு. தவிர அம்பலவாணர் அரங்கம் கட்டப்பட்டு மாடு மழைவெயிலுக்கு ஒதுங்க விட்டபடி இப்படி ப்லவிடையங்கள் அங்கு காணக்கிடக்குது.

அண்மையில் நான் போனபோது அந்தவேளைகளில் வாழ்ந்தவர்கள் பூவரசங் கதியாலால் நிரைச்சுக்கு எல்லைவேலி அமைத்து அக்காணிகளில் வாழ்ந்த சுவடுகளின் அடையாளமாக நிறையப் பூவரச மரங்கள் காணப்பட்டது இப்போ அதுகளையும் வெட்டி விறகாக்கப்படுகிறது எனக் கேள்விப்பட்டன். தவிர இடம்பெயர்ந்து வந்தபோது பல்லாயிரக்கணக்கான கால்நடைகளை அப்படியே விட்டு வந்ததால் அவை பராமரிப்பல்லாது ஆனால் தங்களைத் தாங்களே தற்காத்துக்கொள்ளும் ஒரு இனமாகி மாறி நிறயவே காணப்பட்டது அதையும் கறிக்கடைக்காகக் காவுகொடுத்தாயிற்று.

சூழலியலாளர்கள் அப்படிக்கைவிட்டும் தப்பித்துவாழும் மாடுகளை அப்படியே பாதுகாத்து எதிர்காலத்தில் வறட்சியான சூழலில் பலன் தரக்கூடியசிறந்த கால்நடைகளை உருவாக்கலாம் எனக்கருதியிருந்தனர் அவை எல்லாமே அநியாயமாகக் கைநழுவிப்போய்விட்டது.

உங்களுக்கு நினைவிருக்கலாம் ஒரு நேவிக்கொமாண்டர் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு நெடுந்தீவுக் குதிரைகள் சிலதை எந்தவித அனுமதியும் இல்லாது விற்பனை செய்ததை. நெடுந்தீவுக்குதிரைகளது அருமை அவர்களுக்குத் தெரிகிறது எமக்கு எங்கே புரியப்போகுது.

கண்ணில் தெரியும் புங்குடுதீவைச்சேர்ந்த அனைவரையும் கும்பிட்டுக் கும்பிட்டுக் கூறினேன் இந்தக் கோய்ல் மண்டபம் தேர், தேர்முட்டி கட்டுறதை விட்டுட்டு ஆழுக்கு ஆள் குறைந்தது இரண்டு சூரிய மின் தகடுகளை வாங்கி குறிப்பிட்ட பிரதேசத்தில் வைத்துப் பராமரித்து தீவுப்பகுதிக்கும் மிகுதியானதை யாழ் நகருக்கும் விற்கலாம் என ஆனால் இவன் என்ன லூசன் இப்படிக் கதைக்கிறான் எனக்க்கூறிக்கொண்டு நழுவிப்போகினம்.

 

இவன் என்ன லூசன் இப்படிக் கதைக்கிறான்

எனக்கும்  இதே  பெயர்  தான்

அதனால தான்  ஏதோ  என்னால  முடிஞ்சதை என் குடும்பத்தோட  சேர்ந்து செய்து  கொண்டு வாறன்

நன்றி  சகோ

உங்களது  ஆதங்கத்துக்கும் நேரத்திற்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யேர்மனியோடு இலங்கையை ஒப்பிடுவது ரூ மச்சே தான். வடமாகாண சபை நிர்வாகத்துடன் யேர்மன் நகர நிர்வாகத்தை ஒப்பிடுவதும் ரூ மச்.
எனக்கு விளங்காதது இவ்வளவு சிறந்த நாட்டில் கோவிட் தடுப்பூசிக்கு எதிரான கொள்கை கொண்ட நேஸ் ஒருவர் கோவிட் தடுப்பூசிக்கு பதிலாக உப்பு தண்ணீரை  மக்களுக்கு ஏற்றிய போது _ நூற்று கணக்காணவர்களுக்கு இல்லை ஆயிரகணக்காணவர்களுக்கு _  மேல் அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தனர் :rolleyes:

Regional broadcaster NDR says 8,557 people have been asked to go back for repeat vaccinations, and so far about 3,600 new appointments have been confirmed.

https://www.bbc.com/news/world-europe-58186032

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Justin said:

மேலே நிழலி கேட்ட கேள்வி தான் என்னுடையதும்: ஜேர்மனி, அமெரிக்கா, கனடா நிலையை இலங்கையில் எதிர்பார்த்தால், நீங்கள் , நான், நிழலி எல்லாரும் இலங்கையில் தான் இப்ப இருந்திருப்போம்!

மக்களுக்கு அத்தியாவசியத் தேவைகள் உண்டு! இது நிதர்சனம், யதார்த்தம். அவற்றைத் தீர்க்க இலங்கையின் எந்த மட்ட அரசு வந்தாலும்  அனுமதிக்க வேண்டுமென்பது என் நிலைப்பாடு. கடந்த தேர்தலில் அங்கஜனுக்குக் கிடைத்த வாக்குகளின் படி - தாயக மக்களின் நிலைப்பாடும் அது போலத் தான் தெரிகிறது!

இதில் அரசியல் வர்ணம் பூசுவோரை மக்கள் ஒதுக்கி வைப்பது அடுத்த தேர்தல்களில் வெளிப்படையாகத் தெரிய வரும். அப்போது மீண்டும் இது பற்றிப் பேசுவோம்! 

நீங்கள் குறிப்பிட்ட நாடுகள் ஒருகாலத்தில் இலங்கையை விட கேவலமாக இருந்துள்ளன ஆனால் இன்று அவர்கள் எப்படி இந்த நிலைக்கு வந்தார்கள்?ஏன் இலங்கையையும் இன்று அவர்கள் இருக்கும் நிலைக்கு வரமுடியாது?

வடமாகாண சபை தேர்தல் ஒழுங்காக நடத்தப்பட்டு  எந்த இடையுருமின்றி சுயமாக இயங்க அனுமதித்ததால் வடமாகாண சபை இலங்கை முழுவதும் தண்ணீர் வழங்கும் திட்டத்தை வெற்றிகரமாக செய்யும் கடந்த காலத்தில் வடமாகாண சபை சுயமாக இயங்க அனுமதிக்கப்படவில்லை அதனால் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட முடியவில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

நீங்கள் குறிப்பிட்ட நாடுகள் ஒருகாலத்தில் இலங்கையை விட கேவலமாக இருந்துள்ளன ஆனால் இன்று அவர்கள் எப்படி இந்த நிலைக்கு வந்தார்கள்?ஏன் இலங்கையையும் இன்று அவர்கள் இருக்கும் நிலைக்கு வரமுடியாது?

வடமாகாண சபை தேர்தல் ஒழுங்காக நடத்தப்பட்டு  எந்த இடையுருமின்றி சுயமாக இயங்க அனுமதித்ததால் வடமாகாண சபை இலங்கை முழுவதும் தண்ணீர் வழங்கும் திட்டத்தை வெற்றிகரமாக செய்யும் கடந்த காலத்தில் வடமாகாண சபை சுயமாக இயங்க அனுமதிக்கப்படவில்லை அதனால் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட முடியவில்லை 

மேல் பந்தி உண்மை!

கீழ் பந்தி: யார் அனுமதிக்கவில்லை?

Link to comment
Share on other sites

6 hours ago, Justin said:

மேல் பந்தி உண்மை!

கீழ் பந்தி: யார் அனுமதிக்கவில்லை?

1987 ல் வட கிழக்கு மாகாண சபையை  இயங்க விடாமல்  இடையூறு செய்து அடம் பிடித்த நாம் இன்று வடக்கு மாகாண சபையை இயங்க விட்டாலே போதும் என்ற நிலைக்கு வந்திருப்பது நல்ல முன்னேற்றம் தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Justin said:

கீழ் பந்தி: யார் அனுமதிக்கவில்லை?

1..அரசாங்கம் விக்கியார். முதலமைச்சர் நிதியம் நிறுவ இலங்கை அமைச்சரிடம் விண்ணப்பித்திருந்தார். அதை நிராகரித்து விட்டார்கள் இதற்க்கு தமிழ்தேசியகூட்டமைப்பும் ஆதரவு வழங்கவில்லை.  எனெனில்  இவ்வாறு அனுமதி வழங்கினால் புலம்பெயர் தமிழர்கள் நிதியுதவி செய்து  வடமாகாணமும் வடமாகாணமக்களும் வளர்ச்சி அடைந்துவிடுவார்கள் என்பதால் மற்றும்  ஒரு திட்டம் வடமாகாண சபைக்கு நேரடியாக வந்தபோது அரசாங்கம் அத்திட்டம் எமக்கு ஊடக செய்யவேண்டும் எனவும் 1/3 கமிஷன் கேட்டு இருந்தார்கள்...

2...தமிழ்தேசியகூட்டமைப்பு உறுப்பினர்கள்..இவர்கள் ஒவ்வொருவரும் வருடாந்தம்  எங்களுக்கு 6....10....15.....20.....மில்லியன் ஒதுக்கீடு செய்யுமாறு வலியுறுத்தி கேட்டுக்கொள்வார்கள். வறிய நாடான இலங்கையால் இருபகுதிக்கும் நிதி ஒதுக்க முடியுமா?இப்படிப் பெற்ற நிதியில் என்ன செய்தார்கள்? எந்தவொரு கணக்காளரரும் மதிப்பீடு செய்ததில்லை. வேலையைப் பார்வையிட்டதுமில்லை வடமாகாண சபை உறுப்பினர்களும்  இதே மாதிரி தான் செயல்ப்பட்டார்கள்   தமிழ்  மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்...மாகாண சபை உறுப்பினர்கள் வடமாகாண சபையின் செயல்பட்டுக்கும். வளர்ச்சிக்கும் இடையூறு செய்தார்கள் 

உண்மையில் வடமாகாண சபை ஒரு திட்டத்திற்கான வேலையை கேள்விகள் மூலம் பல நிறுவனங்களை அழைத்து நேர்முகத்தேர்வு நடத்தி ஒன்றிடம்  வேலையை ஓப்படைத்து. வேலை முடிய...முடய..பார்வையிட்டு நிதியை அனுப்ப வேண்டும் இந்த செயலுக்கு. ஒட்டுமொத்த தமிழ் உறுப்பினர்கள் தடையாக இருந்தார்கள்  இதில் பலர் மாளிகை கடடியுள்ளார்கள்

வடமாகாணசபை தொடர்ந்து இயங்குமாயின் அது ஒரு வலுவான அரசாக வளர்ச்சி அடைய வாய்ப்பு உண்டு இதற்கு இலங்கை அரசும் தமிழ் உறுப்பினர்களும் தடையாக இருக்கிறார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

1987 ல் வட கிழக்கு மாகாண சபையை  இயங்க விடாமல்  இடையூறு செய்து அடம் பிடித்த நாம் இன்று வடக்கு மாகாண சபையை இயங்க விட்டாலே போதும் என்ற நிலைக்கு வந்திருப்பது நல்ல முன்னேற்றம் தான். 

இடையூறு செய்தது உண்மை காரணம் ஒரு தீர்வை இல்லாமல் செயவதற்க்கு இல்லை  இலங்கை அரசின் கையில் ஆயுள் உள்ள ஒரு தீர்வை தமிழர்கள் விரும்பவில்லை இன்று வடகிழக்கு மாகாண சபை அரசாங்கத்தினால் சாக அடிக்கப்பட்டு விட்டது அன்று அவர்கள் செய்தது சரியாகும்  இதை இலங்கை அரசு மாகாண சபையை வலுப்படுத்தி செயல்பட அனுமதித்துதிருந்தால் அன்று அவர்கள் செய்தது பிழை என உறுதி படுத்திருக்கலாம் வடமாகாண  சபை தேர்தல் ஏன் நடத்தப்படவில்லை? இப்படி நடக்கும் என்று அப்போதோ அவர்களுக்கு தெரியும்.இதில் எந்த முன்னேற்றத்தையும் நான் காணவில்லை 

அரசாங்கம் நினைத்தால் எல்லா மாகாணசபைகளையும் நன்றாக இயங்க வைக்க முடியும்....அதுநேரம். முடக்கவும் முடியும் எந்த ஒரு தனி நபரும் அல்லது அமைப்புக்கள் இதில் மாற்றங்கள் செய்ய முடியாது இதை தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kandiah57 said:

1..அரசாங்கம் விக்கியார். முதலமைச்சர் நிதியம் நிறுவ இலங்கை அமைச்சரிடம் விண்ணப்பித்திருந்தார். அதை நிராகரித்து விட்டார்கள் இதற்க்கு தமிழ்தேசியகூட்டமைப்பும் ஆதரவு வழங்கவில்லை.  எனெனில்  இவ்வாறு அனுமதி வழங்கினால் புலம்பெயர் தமிழர்கள் நிதியுதவி செய்து  வடமாகாணமும் வடமாகாணமக்களும் வளர்ச்சி அடைந்துவிடுவார்கள் என்பதால் மற்றும்  ஒரு திட்டம் வடமாகாண சபைக்கு நேரடியாக வந்தபோது அரசாங்கம் அத்திட்டம் எமக்கு ஊடக செய்யவேண்டும் எனவும் 1/3 கமிஷன் கேட்டு இருந்தார்கள்...

2...தமிழ்தேசியகூட்டமைப்பு உறுப்பினர்கள்..இவர்கள் ஒவ்வொருவரும் வருடாந்தம்  எங்களுக்கு 6....10....15.....20.....மில்லியன் ஒதுக்கீடு செய்யுமாறு வலியுறுத்தி கேட்டுக்கொள்வார்கள். வறிய நாடான இலங்கையால் இருபகுதிக்கும் நிதி ஒதுக்க முடியுமா?இப்படிப் பெற்ற நிதியில் என்ன செய்தார்கள்? எந்தவொரு கணக்காளரரும் மதிப்பீடு செய்ததில்லை. வேலையைப் பார்வையிட்டதுமில்லை வடமாகாண சபை உறுப்பினர்களும்  இதே மாதிரி தான் செயல்ப்பட்டார்கள்   தமிழ்  மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்...மாகாண சபை உறுப்பினர்கள் வடமாகாண சபையின் செயல்பட்டுக்கும். வளர்ச்சிக்கும் இடையூறு செய்தார்கள் 

உண்மையில் வடமாகாண சபை ஒரு திட்டத்திற்கான வேலையை கேள்விகள் மூலம் பல நிறுவனங்களை அழைத்து நேர்முகத்தேர்வு நடத்தி ஒன்றிடம்  வேலையை ஓப்படைத்து. வேலை முடிய...முடய..பார்வையிட்டு நிதியை அனுப்ப வேண்டும் இந்த செயலுக்கு. ஒட்டுமொத்த தமிழ் உறுப்பினர்கள் தடையாக இருந்தார்கள்  இதில் பலர் மாளிகை கடடியுள்ளார்கள்

வடமாகாணசபை தொடர்ந்து இயங்குமாயின் அது ஒரு வலுவான அரசாக வளர்ச்சி அடைய வாய்ப்பு உண்டு இதற்கு இலங்கை அரசும் தமிழ் உறுப்பினர்களும் தடையாக இருக்கிறார்கள் 

கந்தையா, 
1. அரசு அனுமதித்திருக்காது - இது அதிசயமில்லை. இலங்கையின் ஏனைய மாகாணங்களில் இப்படியொரு நிதியம் இல்லை! அப்படி மூன்றிலொரு பங்கு கேட்டிருந்தால், அதைக் கொஞ்சம் குறைத்துப் பேரம் பேசி ஆரம்பித்திருக்கலாம் என்பது என் அபிப்பிராயம்! ஏனெனில், எங்களுக்குக் காரியமாக வேண்டுமெனில் இலங்கையில் கையூட்டு வழமையான சிஸ்ரம்.

2. இதில் இருக்கும்  தகவல்களும் விக்கி ஐயா வெளியிட்டவை, எந்த ஆதாரமும்  பொது வெளியில் இல்லை! தனது வாகனம், விமானச் சீட்டுகள் மீதான அக்கறை, அமைச்சர்கள் மீது காரணமற்ற ஒழுக்க நடவடிக்கை, தனது உறவினருக்குப் பதவி கொடுக்க காட்டிய மும்முரம் - இவை போன்ற பல காரணங்களால் விக்கி ஐயாவின் வார்த்தைகள் உண்மைத் தன்மை குறைந்தவையாகத் தெரிகின்றன.

எனக்குத் தெரிந்தவரையில்: விக்கி ஐயா நிர்வாகத்தைக் கோட்டை விட்டு தேசிய அரசியலில் மிகை ஆர்வம் காட்டியதால் மிகக் கொஞ்சமே வட மாகாணசபை சாதித்தது. தங்களுக்கு ஒரு சொகுசான கட்டிடம் கட்டியது மட்டுமே அவர்கள் செய்த பெரிய செயல் திட்டம். மக்களுக்கு பயன் ஒன்றுமில்லை. கழுதை, மாடு, நாய் அதனதன் வேலையை மட்டும் பார்க்க வேண்டுமென்பார்கள் அல்லவா? அதை விக்கி ஐயா பின்பற்றியிருந்தால் சிறப்பான பலன் கிடைத்திருக்குமென்பது என் கருத்து!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

கந்தையா, 
1. அரசு அனுமதித்திருக்காது - இது அதிசயமில்லை. இலங்கையின் ஏனைய மாகாணங்களில் இப்படியொரு நிதியம் இல்லை! அப்படி மூன்றிலொரு பங்கு கேட்டிருந்தால், அதைக் கொஞ்சம் குறைத்துப் பேரம் பேசி ஆரம்பித்திருக்கலாம் என்பது என் அபிப்பிராயம்! ஏனெனில், எங்களுக்குக் காரியமாக வேண்டுமெனில் இலங்கையில் கையூட்டு வழமையான சிஸ்ரம்.

2. இதில் இருக்கும்  தகவல்களும் விக்கி ஐயா வெளியிட்டவை, எந்த ஆதாரமும்  பொது வெளியில் இல்லை! தனது வாகனம், விமானச் சீட்டுகள் மீதான அக்கறை, அமைச்சர்கள் மீது காரணமற்ற ஒழுக்க நடவடிக்கை, தனது உறவினருக்குப் பதவி கொடுக்க காட்டிய மும்முரம் - இவை போன்ற பல காரணங்களால் விக்கி ஐயாவின் வார்த்தைகள் உண்மைத் தன்மை குறைந்தவையாகத் தெரிகின்றன.

எனக்குத் தெரிந்தவரையில்: விக்கி ஐயா நிர்வாகத்தைக் கோட்டை விட்டு தேசிய அரசியலில் மிகை ஆர்வம் காட்டியதால் மிகக் கொஞ்சமே வட மாகாணசபை சாதித்தது. தங்களுக்கு ஒரு சொகுசான கட்டிடம் கட்டியது மட்டுமே அவர்கள் செய்த பெரிய செயல் திட்டம். மக்களுக்கு பயன் ஒன்றுமில்லை. கழுதை, மாடு, நாய் அதனதன் வேலையை மட்டும் பார்க்க வேண்டுமென்பார்கள் அல்லவா? அதை விக்கி ஐயா பின்பற்றியிருந்தால் சிறப்பான பலன் கிடைத்திருக்குமென்பது என் கருத்து!  

மன்னிக்கவும் இந்த உங்கள் கருத்துகளுடன் உடன்படமுடியவில்லை 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார். https://thinakkural.lk/article/299459
    • இது ஒட்டு மொத்த‌ இந்திய‌ அள‌வில் தேர்த‌ல் ஆணைய‌த்தை கைக்குள் வைத்து பிஜேப்பி செய்யும் தேர்த‌ல் மோச‌டி இப்ப‌டி குள‌று ப‌டி செய்து தேர்த‌லில் வெல்வ‌தெல்லாம் ஒரு வெற்றியா......................இது ஜ‌ன‌நாய‌க‌ முறைப்ப‌டி ந‌ட‌க்கும் தேர்த‌ல் கிடையாது................இந்திய‌ அள‌வில் தாங்க‌ள் 400 இட‌ங்க‌ளின் வென்று ஆட்சி அமைப்போம் என்று சொன்னார்க‌ளே / ஆனால் இப்ப‌டி குள‌று ப‌டி செய்து அமைப்போம் என்று ஆர‌ம்ப‌த்தில் சொல்ல‌ வில்லை இப்ப‌ பிடிப‌ட்டான் மோடி என்ற க‌ள்ள‌ன்......................தேர்த‌ல் ஆணைய‌த்தையும் ஈவிம் மிசினையும் ந‌ம்பி தான் த‌மிழ் நாட்டு பிஜேப்பி அண்ணாம‌லை அதிக‌மாய் பொங்கி எழுகிறார்....................இதெல்லாம் ஒரு தேர்த‌ல்.............................த‌மிழ் நாட்டில் வ‌ள‌ந்து வ‌ரும் க‌ட்சிக‌ளை நினைக்க‌ ப‌ரிதாவ‌மாய் இருக்கு....................................
    • "மதுவும் மாதுவும் - சுமேரியாவில் இருந்து சங்கத் தமிழ் நாடுவரை"     பண்டைய சுமேரியாவில் பொதுவாக பெண்களின் வேலை அல்லது பங்கு வீட்டு பணிகளில் இருந்தே வருகிறது. கி மு 1800 ஆம் ஆண்டை அல்லது அதற்கும் முற்பட்ட சுமேரியன் துதி பாடல் [Sumerian Hymn to Ninkasi] ஒன்று "மது" பெண் தெய்வமான நின்காசியையும் [Ninkasi: “வாய் நிரப்பும் பெண்மணி] மது வடித்தலுக்கான சேர்மானங்களையும் செய்முறையையும் [recipe for brewing] பாராட்டுகிறது. பொதுவாக மது வடிப்போர் /காய்ச்சுவோர் அங்கு பெண்களாக இருந்தார்கள், அதிகமாக நின்காசியின் பெண் குருவே இவர்கள். மேலும் முன்பு, துணை உணவாக மது, வீட்டில் பெண்களால் வடிக்கப்பட்டது அல்லது காய்ச்சப்பட்டது. எனவே வீட்டு பணிகளுடன் மேல் அதிகமாக அவர்கள் தாம் வடித்த ஒரு வகைச் சாராயத்தை /பீர் மது பானத்தை [beer] விற்கவும் முடியும். அதாவது பெண்கள் தவறணை காப்பாளராகவும் இருக்க முடியும். மேலும் அந்த துதி பாடல் சேர்மானங்களையும் செய்முறையையும் விளக்கமாக கொண்டுள்ளது. உதாரணமாக புளிக்கச் செய்யப் பயன் படும் பொருள் முதல், ஊற வைத்தல், நொதித்தல், வடித்தல் என்பனவற்றின் விபரங்களை தருகிறது.     "நின்காசி, நியே மாவை [dough] ஒரு பெரிய வாரி [shovel] மூலம் குழியில் கலாவுகிறாய்- பார்லி ரொட்டியையும் [bappir] தேனையும் [இந்த தேன் பேரீச்சம் பழம் சாறாக இருக்கலாம்? வாசனை சுவை கொடுப்பதற்கு இங்கு பேரீச்சம் பழம் சேர்க்கப்படுகிறது?]   நின்காசி, நியே பார்லி ரொட்டியை பெரிய சூளையில் வேக வைக் கிறாய்- உமி தானியங்ககளை [hulled grains] ஒரு ஒழுங்காக குவித்து [வடித்தலின் போது "பப்பிர்" [bappir: பார்லி ரொட்டி] ஒன்றுக்கு மேற்பட்ட நோக்கங்களை நிறைவேற்றுகிறது. ஒன்று சர்க்கரை உற்பத்திக்கான மாப்பொருளை தருகிறது. மற்றது அரைத்தலுக்கான புரதங்களையும் சுவைகளையும் தருகிறது]   நியே பார்லி முளை தானியத்திற்கு [malt] தண்ணீர் விடுகிறாய்- பெரும் அதிகாரம் உள்ளவர்களையும் உன் மேன்மை பொருந்திய நாய் காத்து தள்ளி விடுகிறது நின்காசி, நியே பார்லி முளை தானியத்தை சாடியில் ஊற வைக்கிறாய்- அலைகள் ஏறுகின்றன, அலைகள் இறங்கு கின்றன [இந்த அசைவு மறை முகமாக அரைத்தலை குறிக்கலாம் ? அப்பொழுது முளை தானியமும் பப்பிரும் மேல் அதிக பார்லி உடன் சேர்க்கப் படுகிறது? அத்துடன் இந்த மசியல் அதிகமாக சூடாக்கி இருக்கலாம்?]   நின்காசி, நியே சமைத்த கூழாகிய களியை [cooked mash] நாணல் பாயில் பரப்புகிறாய்- சூடு தணிகிறது, குளிர்ச்சி வெற்றி கொள்கிறது [இது இரண்டு நோக்கங்களை நிறைவேற்றி இருக்கலாம். ஒன்று பாவித்த தானியத்தின் உமியை அகற்றவும் மற்றது திரவம் வடியவும் இது உதவி இருக்கலாம்? அது மட்டும் அல்ல, சாராயத்துக்கான மாவூறல் நன்கு குளிர்ச்சியாக இருந்தால், நொதித்தல் அல்லது புளித்தல் திறமையாக நடை பெரும். ஏன் என்றால் உயர் வெப்பம் மாவை புளிக்க வைக்க உதவும் பொருளின் [yeast / புளிச்சொண்டியின்] ஆற்றலை குறைத்து விடும் என்பதால்]   நியே உனது இரு கையாளும் சாராயத்துக்கான இனிக்கும் மாவூறலை [great sweet wort] வைத்து இருக்கிறாய் - அதை தேனுடனும் திராட்சை ரசத்துடனும் வடிக்கிறாய் [இது உண்மையில் தேனா? அல்லது பேரீச்சம் பழம் சாறா? என்பது ஒரு கேள்விக் குறியே. அது மட்டும் அல்ல, திராட்சை பழம் அல்லது உலர்ந்த திராட்சையின் தோலில் இயற்கையாகவே "ஈஸ்ட்" ['yeast'] காணப்படுகிறது. ஆனால் ஒயினில் [wine] அப்படி அல்ல. அங்கு "ஈஸ்ட்" இன் செயற்படு அற்று காணப்படுகிறது. ஆகவே இது திராட்சை ரசமாக இருக்க முடியாது. அது அதிகமாக திராட்சை பழம் அல்லது உலர்ந்த திராட்சையாக இருக்கலாம்?]   நின்காசி, வடி கட்டும் பெரும் மரத்தொட்டி ஒரு இன்பமான ஒலியை தருகிறது- நீ சேகரிக்கும் பெரும் மரத்தொட்டியில் [large collector vat] சரியாக வைக்கிறாய்" [இந்த இன்பமான ஒலி அதிகமாக, சொட்டு சொட்டாக மரத் தொட்டிக்குள் வடியும் பீர் மது பானத்தின் சத்தமாக இருக்கலாம்?]   அது மட்டும் அல்ல, இந்த துதி பாடலில் இருந்து நாம் எப்படியான பாராட்டுதலை அல்லது புகழ்ச்சியை ."பீர் மதுபான பெண் தெய்வம்" பெற்றால் என அறிய முடிகிறது. மேலும் நின்காசிக்கும் பீர் மது பானத்திற்கும் உள்ள தொடர்பு மிகவும் பலமானது என்பதையும் அறிய முடிகிறது. உதாரணமாக மேலும் இரண்டு புகழ்ச்சியை கிழே தருகிறோம்.   "நின்காசியே, நியே, வடித்த பீர் மது பானத்தை மரத் தொட்டியில் இருந்து ஊற்றுகிறாய். அது டைகிரிஸ், யூபிரட்டீஸ் ஆறு மாதிரி வேகமாய்ப் பாய்கிறது [Ninkasi, you are the one who pours out the filtered beer of the collector vat, It is [like] the onrush of Tigris and Euphrates]"   மற்றது   "குடிப்பவர்களிடம் ஒரு கவலையும் இல்லா பேரின்ப மனோ நிலையை ஏற்படுத்தக் கூடியதாக [a blissful mood… with joy in the [innards] [and] happy liver] அதை நீ தயாரித்து எமக்கு அளிக்கிறாய்" என நின்காசியை புகழ்தல் ஆகும்.   மேலும் மெசொப் பொத்தேமியாவில் கண்டு எடுக்கப்பட்ட கி மு 1800 ஆண்டை சேர்ந்த களி மண் பலகை கல் ஒன்று ஒரு பெண் தனது கணவனுடன் ஒன்று கூடும் போது, சாடி ஒன்றில் இருந்து. பீர் மது பானம் குடிப்பதை தெளிவாக வரைந்து காட்டுகிறது.   “துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.” (குறள் 926)   என்று கூறுகிறார் வள்ளுவர்.அதாவது, உறங்கினவர் இறந்தவரை விட வேறுபட்டவர் அல்லர், அவ்வாறே கள்ளுண்பவரும் அறிவு மயங்குதலால் நஞ்சு உண்பவரே ஆவர் என்கிறார். என்றாலும் நாம் சங்க இலக்கியத்தை பார்க்கும் போது, அங்கு மது பானம் பண்டைய தமிழர் வாழ்வில், ஆண் பெண் இரு பாலாரிடமும், ஒரு முக்கிய பங்கு வகுத்ததை காண முடிகிறது.  துணை உணவாக மது புலவர்களுக்கு வழங்கி அரசனும் சேர்ந்து உண்டு மகிழ்ந்ததை, புகழ்பெற்ற சங்க புலவர் ஒளவையார், தனது புறநானுறு 235 இல்,   "சிறியகட் பெறினே, எமக்கீயும் மன்னே;பெரியகட் பெறினே யாம்பாடத் தான்மகிழ்ந்து உண்ணும் மன்னே;"   என்று எடுத்து உரைக்கிறார். அதாவது, சிறிதளவு கள்ளைப் பெற்றால் அதியமான நெடுமான் அஞ்சி அதை எமக்குத் தருவான்; பெருமளவு கள்ளைப் பெற்றால் எமக்கு அளித்து நாம் பாட அதைக் கேட்டு மகிழ்ந்து அவனும் உண்பான்; என்கிறார் ஒளவையார். மேலும் அகநானுறு 336:   "தெண் கள் தேறல் மாந்தி மகளிர் நுண் செயல் அம் குடம் இரீஇப் பண்பின் மகிழ்நன் பரத்தைமை பாடி அவிழ் இணர்க் காஞ்சி நீழல் குரவை அயரும்"   என கூறுவதையும் காண்க, அதாவது, தெளிந்த கள்ளினைக் குடித்து, பெண்கள், நுண்ணிய தொழில் நலம் வாய்ந்த அழகிய குடத்தினை வைத்து விட்டு, தம் கணவரது நற்பண் பில்லாத பரத்தைமைகளைப் பாடி, விரிந்த பூங்கொத்துக்களை உடைய காஞ்சி மரத்தின் நீழலில் குரவை [கைகோத்து ஆடப்படும்] ஆடுதலைச் செய்யும் மகளிர் என்கிறது. அது மட்டும் அல்ல, பெரும்பாணாற்றுப்படை [275-281] இல், மதுவின் செய்முறை விளக்கப்பட்டு இருப்பதுடன், பட்டிணப் பாலை [106 -110] இல், கணவரோடு கூடி இன்புற்ற இள மகளிர் மதுவை அருந்தி மயக்கத்தில் கொண்டாடியதையும் நாம் காணலாம்.   "அவையா அரிசி அம்களித் துழவை மலர்வாய்ப் பிழாவில் புலர ஆற்றி பாம்பு உறை புற்றின் குரும்பி ஏய்க்கும் பூம்புற நல் அடை அளைஇ தேம்பட எல்லையும் இரவும் இருமுறை கழிப்பி வல்வாய்ச் சாடியின் வழைச்சுஅற விளைந்த வெந்நீர் அரியல் விரல் அலை நறும்பிழி" -பெரும்பாணாற்றுப்படை(275-281)   அதாவது, குற்றாத தவிடெடுபடாத அரிசியைக் அழகினையுடைய களியாகத் துழாவிக் சமைத்த கூழை, வாயகன்ற தாம்பாளத்தில் [தட்டில்] உலர வைப்பார். நல்ல நெல் முனையை இடித்து அக் கூழிற் கலப்பர். அக் கலவையை இனிமை பிறக்கும்படி இரண்டு பகலும் இரண்டு இரவும் கழித்து வலிய வாயினையுடைய சாடியின் கண்ணேயிட்டு, வெந்நீரின் வேகவைத்து நெய்யரியாலே வடிக்கட்டி, விரலாலே அலைத்துப் பிழியப்பட்ட நல்ல வாசனையுள்ள கள் என்கிறது.   "துணைப்புணர்ந்த மடமங்கையர் பட்டுநீக்கித் துகிலுடுத்தும் மட்டுநீக்கி மதுமகிழ்ந்தும் மைந்தர்கண்ணி மகளிர் சூடவும் மகளிர்கோதை மைந்தர் மலையவும்" - பட்டிணப்பாலை[106-110]   அதாவது, தம் கணவரோடு கூடி இன்புற்ற இள மகளிர், தாம் முன்பு அணிந்திருந்தப் பட்டாடைகளைத் தவிர்த்து நூலாடைகளை உடுத்தினர். இன்பத்தின் மயக்கத்தால் தாம் அருந்தும் மயக்கம் தராத கள்ளினைக் [மட்டினைக்] கைவிட்டு மதுவினை குடித்தனர். மதுவுண்ட மயக்கத்தில் கணவர் அணியும் மாலைகளை மகளிர் அணிந்து கொண்டனர். மகளிர் அணியும் கோதையினை (மாலை) ஆடவர் சூடிக் கொண்டனர் என்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 18 ஏப்ரல் 2024, 08:18 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் யுக்ரேனில் ரஷ்ய ராணுவ வீரர்களின் இறப்பு எண்ணிக்கை இப்போது 50,000ஐ கடந்துவிட்டதை பிபிசி உறுதிப்படுத்தியுள்ளது. ரஷ்யா இரண்டாவது ஆண்டிலும், இறைச்சி அரவை (Meat Grinder) உத்தி என்றழைக்கப்படும் அதன் தாக்குதல் உத்தியின்படி – அதாவது யுக்ரேனிய படைகளை வலுவிழக்கச் செய்வதற்காக கூட்டம் கூட்டமாக ராணுவ வீரர்களை களமிறக்கும் ரஷ்யாவின் உத்தி – பல ராணுவ வீரர்களை போருக்கு அனுப்பியது. அதன் விளைவாக ஏற்பட்ட ரஷ்ய வீரர்களின் இறப்புகள் முதல் ஆண்டைவிட தற்போது கிட்டத்தட்ட 25% அதிகமாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. பிபிசி ரஷ்ய சேவை, சுயாதீன ஊடக குழுவான மீடியாசோனா மற்றும் தன்னார்வலர்கள், பிப்ரவரி 2022 முதல் இந்த இறப்புகளைக் கணக்கெடுத்து வருகின்றனர். புதைவிடங்களில் உருவாக்கப்பட்ட புதிய கல்லறைகளில் இருந்த ராணுவ வீரர்களின் பெயர்கள் அவர்களுக்கு இந்தக் கணக்கெடுப்பில் உதவின. அலுவல்ரீதியிலான அறிக்கைகள், செய்தித்தாள்கள், சமூக ஊடகங்கள் ஆகியவை மூலம் திறட்டப்பட்ட தகவல்களையும் எங்கள் குழுக்கள் இதில் பயன்படுத்தின. எங்கள் கண்டுபிடிப்புகளின்படி, ரஷ்ய வீரர்களில் சுமார் 27,300க்கும் மேற்பட்டோர் போரின் இரண்டாவது ஆண்டில் இறந்துள்ளனர். இது, பிராந்தியத்தைக் கையகப்படுத்தும் முயற்சியில் எவ்வளவு பெரிய மனித இழப்பு ஏற்பட்டுள்ளன என்பதைப் பிரதிபலிக்கிறது. பிபிசியின் செய்திக்கு பதிலளித்திருக்கும் ரஷ்யா, மாஸ்கோவில் உள்ள பாதுகாப்பு அமைச்சகம்தான் இதுதொடர்பான தகவல்களைத் தர முடியும் என்று கூறியுள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES யுக்ரேனிய படைகளை வீழ்த்துவதற்கும், ரஷ்ய பீரங்கிகளுக்கு அவர்களது இருப்பிடங்களை அம்பலப்படுத்துவதற்கும் ரஷ்யா இடைவிடாமல் ராணுவ வீரர்களை முன்னோக்கி அனுப்பும் இந்த உத்தியை விவரிக்க மீட் கிரைண்டர் (meat grinder) என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. மொத்த ரஷ்ய வீரர்களின் இறப்பு எண்ணிக்கை, 50,000க்கும் அதிகமானது. செப்டம்பர் 2022இல் ரஷ்யாவால் இதுவரை வழங்கப்பட்ட இறப்பு எண்ணிக்கைகளின் அதிகாரபூர்வ தரவுகளைவிட இது 8 மடங்கு அதிகம். ரஷ்யா தரப்பில் ஏற்பட்டுள்ள இறப்புகளின் எண்ணிக்கை உண்மையில் இதைவிட அதிகமாக இருக்கக்கூடும். எங்கள் பகுப்பாய்வில் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட டொனெட்ஸ்க் மற்றும் கிழக்கு யுக்ரேனில் உள்ள லுஹான்ஸ்கில் ஏற்பட்ட வீரர்களின் இறப்புகள் குறித்து எதுவும் சேர்க்கப்படவில்லை. அதுவும் சேர்க்கப்பட்டால், ரஷ்யா தரப்பில் இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும். "சிறப்பு ராணுவ நடவடிக்கை" அரசு ரகசியங்களை உள்ளடக்கிய சட்டங்கள் மற்றும் தகவல்களைப் கொண்டிருப்பதால், உயிரிழப்புகள் பற்றிய தகவல்களை "பாதுகாப்பு அமைச்சகம்தான் வழங்க முடியும்" என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறினார். இதற்கிடையில், யுக்ரேன் தனது போர்க்களத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் அளவு குறித்து அரிதாகவே கருத்து தெரிவிக்கிறது. பிப்ரவரியில், அதிபர் வோலொதிமிர் ஸெலென்ஸ்கி, 31,000 யுக்ரேனிய வீரர்கள் கொல்லப்பட்டதாகக் கூறினார். ஆனால், அமெரிக்க உளவுத்துறையின் தரவுகள் அடிப்படையிலான மதிப்பீடுகள், மேலதிக இழப்புகள் இருப்பதாகக் கூறுகின்றன.   ரஷ்யாவின் மீட் கிரைண்டர் உத்தி பிபிசி மற்றும் மீடியாசோனாவிடம் இருக்கும் இறந்த வீரர்களின் சமீபத்திய பட்டியல், ரஷ்யாவின் மாறிவரும் போரின் முன்களத் தாக்குதல் தந்திரங்களில் இருக்கும் அப்பட்டமான மனித இழப்புகளைக் காட்டுகிறது. யுக்ரேனின் டொனெட்ஸ்க் பகுதியில் ஒரு பெரியளவிலான தாக்குதலைத் தொடங்கியதால், 2023 ஜனவரியில் ரஷ்ய ராணுவம் தரப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு எவ்வாறு ஏற்பட்டது என்பதைக் கீழே உள்ள வரைபடம் காட்டுகிறது. ரஷ்யர்கள், வுஹ்லடேரி நகரத்தைக் கைப்பற்றப் போரிட்டபோது, அது “சாரைசாரையாக வீரர்களை முன்னோக்கி அனுப்பும் பயனற்ற தாக்குதல்களை” பயன்படுத்தியதாக போர் ஆய்வுக்கான நிறுவனம் (ISW) தெரிவித்துள்ளது. “சவாலான நிலப்பரப்பு, போர்த்திறன் இல்லாமை, யுக்ரேனிய படைகளுக்கு அதிர்ச்சி அளிக்கத் தவறியது” என இந்தத் தாக்குதல் அதிக போர் இழப்புகளுக்கும் ஆனால் சிறிய அளவிலான ஆதாயங்களுக்கும் வழிவகுத்தது. வரைபடத்தில் மற்றொரு குறிப்பிடத்தக்க உச்சம் 2023 வசந்த காலத்தில் பாக்முத் போரின்போது நிகழ்ந்திருப்பதைக் காணலாம். கூலிப்படை குழுவான வாக்னர், ரஷ்யா அந்நகரத்தைக் கைப்பற்ற உதவியது. வாக்னரின் அப்போதைய தலைவரான யெவ்ஜெனி ப்ரிகோஜின், அந்த நேரத்தில் அவரது குழுவின் இழப்புகள் 22,000 என மதிப்பிட்டார். கடந்த இலையுதிர்க்காலத்தில் கிழக்கு யுக்ரேனிய நகரமான அஃப்டிஃப்காவை ரஷ்யா கைப்பற்றியது ராணுவ வீரர்களின் இறப்புகள் மீண்டும் அதிகரிக்க வழிவகுத்தது.   கல்லறைகளைக் கணக்கெடுத்தல் பிபிசி மற்றும் மீடியாசோனாவுடன் பணியாற்றும் தன்னார்வலர்கள் போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யா முழுவதும் 70 புதைவிடங்களில் புதிய ராணுவ கல்லறைகளைக் கணக்கெடுத்து வருகின்றனர். இந்தப் புதைவிடங்கள் கணிசமாக விரிவுபடுத்தப்பட்டிருப்பதை வான்வழிப் படங்கள் காட்டுகின்றன. எடுத்துக்காட்டாக, மாஸ்கோவின் தென்கிழக்கில் உள்ள ரியாசானில் அமைந்திருக்கும் போகோரோட்ஸ்காய் கல்லறையின் இந்தப் படங்கள், ஒரு புதிய பகுதி அங்கு தோன்றியிருப்பதைக் காட்டுகிறது. தரையில் எடுக்கப்பட்ட படங்கள் மற்றும் வீடியோக்கள், இந்தப் புதிய கல்லறைகளில் பெரும்பாலானவை யுக்ரேனில் கொல்லப்பட்ட வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்குச் சொந்தமானவை எனத் தெரிவிக்கின்றன. ரஷ்யாவின் இறந்த வீரர்களில் ஐந்தில் குறைந்தபட்சம் இரண்டு பேர், படையெடுப்புக்கு முன்பு நாட்டின் ராணுவத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் வாழ்ந்தவர்கள் என்று பிபிசி மதிப்பிடுகிறது. “கடந்த 2022ஆம் ஆண்டின் படையெடுப்பின் தொடக்கத்தில், சிக்கலான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்யா தனது தொழில்முறை துருப்புகளைப் பயன்படுத்த முடிந்தது. ஆனால், அந்த அனுபவமிக்க வீரர்கள் பலர் இப்போது இறந்திருக்கக்கூடும் அல்லது காயமடைந்திருக்கலாம்,” ராயல் யுனைடெட் சர்வீசஸ் நிறுவனத்தைச் சேர்ந்த பாதுகாப்புத் துறை ஆய்வாளர் சாமுவேல் க்ரானி-இவான்ஸ் விளக்குகிறார். மேலும், குறைந்த அளவு பயிற்சி அல்லது ராணுவ அனுபவமே உள்ளவர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் மற்றும் கைதிகள் போன்றவர்கள் அவர்களுக்குப் பதிலாக போர்க்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார். தொழில்முறை ராணுவ வீரர்கள் செய்யக்கூடியதை இவர்களால் செய்ய முடியாது எனக் கூறும் க்ரானி-இவான்ஸ், “இதன் பொருள், அவர்கள் தந்திரோபாயரீதியாக மிகவும் எளிமையான விஷயங்களைச் செய்ய வேண்டும். அதாவது பொதுவாக பீரங்கிகளின் உதவியோடு யுக்ரேனிய ராணுவ நிலைகள் மீது முன்னோக்கிச் சென்று தாக்குதல் புரிய வேண்டியுள்ளதாகத் தெரிகிறது,” எனக் கூறினார்.   வாக்னர் படையில் சேர்க்கப்பட்ட சிறைக் கைதிகள் சிறைச்சாலையில் செய்யப்படும் ராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு இந்த மீட் கிரைண்டர் உத்திக்கு மிக முக்கியமானது. மேலும் எங்கள் பகுப்பாய்வு அவர்கள் இப்போது முன்வரிசையில் விரைவாகக் கொல்லப்படுவதாகத் தெரிவிக்கிறது. ஜூன் 2022 முதல் சிறைச்சாலைகளில் ஆட்சேர்ப்பைத் தொடங்க வாக்னர் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜினுக்கு ரஷ்யா அனுமதியளித்தது. பின்னர் வீரர்களாக மாறிய கைதிகள், ரஷ்ய அரசின் சார்பாக ஒரு தனியார் ராணுவத்தின் ஒரு பகுதியாகப் போரில் களமிறங்கினர். இடைவிடாத சண்டை உத்திகள், மிருகத்தனமான உள் நடவடிக்கைகளுக்குப் பெயர்போன தனியார் ராணுவமாக வாக்னர் இருந்தது. அவர்கள் உத்தரவின்றிப் பின்வாங்கிய வீரர்களை அந்த இடத்திலேயே தூக்கிலிடலாம். இந்தக் குழு பிப்ரவரி 2023 வரை கைதிகளில் இருந்து தனது படைக்கு ஆட்சேர்ப்பு செய்தது. பிறகு ரஷ்யாவுடனான அதன் உறவு மோசமாகத் தொடங்கியது. ப்ரிகோஜின் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ரஷ்யாவின் ஆயுதப் படைகளுக்கு எதிராகக் கலகம் நடத்தினார். பின்னர் அதைக் கைவிட்டார். மேலும் திரும்பிச் செல்ல ஒப்புக்கொள்வதற்கு முன்பு மாஸ்கோவை நோக்கி முன்னேற முயன்றார். அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் அவர் விமான விபத்தில் கொல்லப்பட்டார். முன்வரிசையில் கொல்லப்பட்ட 9,000 ரஷ்ய சிறைக்கைதிகளின் பெயர்களை எங்கள் சமீபத்திய பகுப்பாய்வு மையமாகக் கொண்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES அவர்களில் 1,000க்கும் மேற்பட்டவர்களுக்கு, அவர்களின் ராணுவ ஒப்பந்தம் தொடங்கும் தேதிகள் மற்றும் அவர்கள் எப்போது கொல்லப்பட்டார்கள் என்பதை நாங்கள் உறுதிப்படுத்தினோம். வாக்னரின் கீழ், அந்த முன்னாள் கைதிகள் சராசரியாக மூன்று மாதங்கள் மட்டுமே உயிர் பிழைத்திருந்ததை நாங்கள் கண்டறிந்தோம். இருப்பினும், மேலே உள்ள வரைபடம் குறிப்பிடுவது போல, பாதுகாப்பு அமைச்சகத்தால் அதற்குப் பின்னர் பணியமர்த்தப்பட்டவர்கள் சராசரியாக இரண்டு மாதங்கள் மட்டுமே பிழைத்திருந்தனர். பாதுகாப்பு அமைச்சகம் பொதுவாக புயல் படைப்பிரிவுகள் (Storm platoons) என்றழைக்கப்படும் ராணுவப் பிரிவுகளை உருவாக்கியுள்ளது. இது கிட்டத்தட்ட முழுக்க முழுக்க குற்றவாளிகளால் ஆனது. வாக்னரின் கைதி படைப்பிரிவுகளைப் போலவே, இந்தப் பிரிவினரும் போரில் முன்களத்தில் பலியிடப்படுவதற்கான ஒரு சக்தியாகவே கருதப்படுகின்றனர். “இந்தப் புயல் வீரர்கள், வெறும் சதைப்பிண்டம் மட்டுமே” என்று புயல் உறுப்பினர்களுடன் இணைந்து போராடிய ஒரு சராசரி சிப்பாய் கடந்த ஆண்டு ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறினார். சமீபத்தில், புயல் வீரர்கள் அஃப்திஃப்காவை பிடிக்கப் பல மாதங்கள் நீடித்த போரில் முக்கியப் பங்கு வகித்தனர். இந்த நகரம் எட்டு வாரங்களுக்கு முன்பு ரஷ்யாவிடம் வீழ்ந்தது. அதோடு பாக்முத்திற்கு பிறகு புதினுக்கு மூலோபாய ரீதியாகவும் குறிப்பிடத்தக்க வகையிலும் ஒரு மிகப்பெரிய போர்க்கள வெற்றியை இது பிரதிநிதித்துவப்படுத்தியது.   பட மூலாதாரம்,REUTERS பயிற்சியின்றி போர்க்களத்தின் முன்வரிசைக்கு அனுப்பப்பட்ட கைதிகள் வாக்னர் கூலிப்படையின் கீழ், வீரர்களாக மாறிய சிறைக்கைதிகளுக்கு போரில் களமிறக்கப்படுவதற்கு முன்பாக 15 நாட்கள் ராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கு நேர்மாறாக, பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் சேர்க்கப்பட்டவர்கள் சிலர் ஒப்பந்தம் போடப்பட்ட இரண்டே வாரங்களில் முன்வரிசையில் கொல்லப்பட்டதைக் கண்டோம். பிபிசி இறந்த மற்றும் உயிருடன் இருக்கின்ற ராணுவ வீரர்கள் சிலரது குடும்பத்தினரிடம் பேசியது. சிறையில் ஆட்சேர்ப்பு செய்தபோது படையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் வழங்கிய ராணுவப் பயிற்சி போதுமானதாக இல்லையென்று அவர்கள் கூறினர். கடந்த ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி சிறையில் தனது கணவர் அமைச்சகத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக கணவரை இழந்த ஒரு பெண் எங்களிடம் கூறினார். மேலும், அவர் ஒப்பந்தம் போடப்பட்டு மூன்று நாட்களுக்குப் பிறகு போரில் முன்வரிசையில் சண்டையிட்டார். “அவர்கள் கூறியதன்படி சில வாரங்களுக்கு பயிற்சிகள் இருக்கும் என்று நான் உறுதியாக இருந்தேன். குறைந்தபட்சம் ஏப்ரல் இறுதிவரை பயப்பட ஒன்றுமில்லை என நினைத்தேன்.” தனது கணவர் தன்னிடம் பேசுவார் எனக் காத்திருந்ததாகவும் ஆனால் அவர் ஏப்ரல் 21 அன்று கொல்லப்பட்டதாகத் தெரிய வந்ததாகவும் அந்தப் பெண் தெரிவித்தார்.   மற்றொரு தாய் கூறுகையில், போர்க்களத்தில் சண்டையிட்டுக் கொண்டிருந்த தனது மகனின் மரணம் குறித்துத் தெரிவிக்கத் தனது கணவரைத் தொடர்புகொள்ள முயன்றபோதுதான் தனது கணவரும் சிறையில் இருந்து போர்க்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதைத் தாம் அறிந்ததாகக் கூறினார். இரட்டைக் குழந்தைகளின் தந்தையான தனது மகன் வாடிம், இந்த ராணுவ ஆட்சேர்ப்புக்கு முன்னதாக எந்த ஆயுதத்தையும் ஏந்தியதில்லை என்று அவரது தாய் அல்ஃபியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கூறினார். மகனின் மரணம் குறித்துத் தனது கணவர் அலெக்சாண்டரிடம் அவரால் சொல்ல முடியவில்லை. ஏனெனில் அவர் சண்டையிடுவதற்காக “போர்க்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்” என்று அவர் கூறுகிறார். வேறொரு கைதியின் தொலைபேசி அழைப்பு மூலமாகத்தான் தன் கணவர் சென்றிருப்பது அவருக்குத் தெரிய வந்தது. அலெக்சாண்டர் யுக்ரேனில் வளர்ந்ததாகவும் அங்கு குடும்பம் நடத்தியதாகவும் அல்ஃபியா கூறுகிறார். மேலும், பாசிசத்தை எதிர்த்துப் போராடுவதற்காக ரஷ்யா யுக்ரேனை ஆக்ரமித்தது “பொய் என்று அவருக்குத் தெரியும்” எனவும் அவர் தெரிவித்தார். அவரது மகன் இறந்து ஏழு மாதங்களுக்குப் பிறகு கணவர் அலெக்சாண்டரும் போரில் கொல்லப்பட்டதாக அல்ஃபியாவுக்கு தெரிவிக்கப்பட்டது.   ‘இறப்பதற்குத் தயாராக இருங்கள்’ வாக்னர் கூலிப்படைக்கு வேலை செய்யும்போது, சிறைக்கைதிகள் பொதுவாக ஆறு மாதங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டனர். ஒப்பந்த காலத்தின் இறுதியில் அவர்கள் உயிர் பிழைத்தால் அவர்களுக்கு சுதந்திரம் வழங்கப்படும். ஆனால், கடந்த செப்டம்பரில் இருந்து பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் பட்டியலிடப்பட்ட கைதிகள் அவர்கள் இறக்கும் வரை அல்லது போர் முடியும் வரை, இரண்டில் எது முதலில் வருகிறதோ அதுவரைக்கும் போரில் சண்டையிட வேண்டும். சரியான சீருடைகள், காலணிகளை வாங்குவதற்கு உதவுமாறு உறவினர்களிடம் கேட்ட கைதிகள் பற்றிய கதைகளை பிபிசி சமீபத்தில் கேட்டுள்ளது. கைதிகள் சரியான உபகரணங்கள், மருத்துவப் பொருட்கள் அல்லது கலாஷ்னிகேவ் துப்பாக்கிகள் கூட இல்லாமல் சண்டைக்கு அனுப்பட்ட செய்திகளும் உள்ளன. ரஷ்ய போர் ஆதரவாளரும் பதிவருமான விளாதிமிர் க்ரூப்னிக் தனது டெலிகிராம் சேனலிலி, “பல வீரர்களிடம் போருக்குப் பொருத்தமற்ற துப்பாக்கிகள் இருந்தன,” என்று எழுதியுள்ளார். “முதலுதவிப் பெட்டி, அகழி தோண்ட மண்வெட்டி, உடைந்த துப்பாக்கியுடன் முன்வரிசையில் ஒரு சிப்பாய் என்ன செய்ய முடியும் என்பது பெரிய மர்மம்” எனக் குறிப்பிடுகிறார் அவர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES க்ரூப்னிக், ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு யுக்ரேனை தளமாகக் கொண்டவர். சில துப்பாக்கிகள் “முற்றிலும் உடைந்து இருப்பதைக் கண்டறிந்தபோது, அவற்றை மாற்றுவது சாத்தியமற்றது” என்று தளபதிகள் கூறியதாக அவர் கூறுகிறார். “அந்தத் துப்பாக்கி ஏற்கெனவே அந்த நபருக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. மேலும் கடுமையான ராணுவ அதிகாரத்துவத்தால் அதுகுறித்து எதுவும் செய்ய முடியவில்லை,” என்று அவர் குறுப்பிடுகிறார். முன்னாள் கைதிகளும் தங்கள் தோழர்கள் தம் உயிர்கள் மூலம் இந்தப் போருக்காகச் செலுத்தியுள்ள அதிக விலையை விவரித்துள்ளனர். “நீங்கள் படையில் இப்போது பதிவு செய்தால், இறப்பதற்குத் தயாராக இருங்கள்” என்று புயல் வீரர்கள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கான ஆன்லைன் குழுவில் செர்கேய் கூறுகிறார். இந்தத் தளத்தில் அவர்கள் பற்றிய தகவல் பகிரப்படுகிறது. அவர் அக்டோபர் முதல் புயல் படையில் சண்டையிட்டு வரும் முன்னாள் கைதி எனக் கூறுகிறார். இந்தத் தளத்தைச் சேர்ந்த மற்றோர் உறுப்பினர், ஐந்து மாதங்களுக்கு முன்பு 100 வீரர்களைக் கொண்ட புயல் படைப்பிடிவில் தாம் சேர்ந்ததாகவும் இப்போது அதில் உயிருடன் இருக்கும் 38 வீரர்களில் தானும் ஒருவர் எனவும் கூறுகிறார். “போரில் நடத்தப்படும் ஒவ்வொரு தாக்குதலும், மறுபிறவியைப் போல் உள்ளது” என்கிறார் அவர். https://www.bbc.com/tamil/articles/c2e074ry91ro
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.