Jump to content

கனடாவில் இடம்பெற்ற இந்து சமய முறையிலான தன்பால் ஈர்ப்புடைய ( lesbian) பெண்களின் திருமணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, MEERA said:

ஓர் பாலினக் கூட்டு என்றாலும் அதில் male part & female part என்று உள்ளது.

அதேவேளை இருவரும் மாற்றியும் கொள்ளலாம்

வெள்ளைச் சீலையுடன் உள்ளவர் male part என்றபடியால் (?) 

“வெள்ளைச் சீலை” என்று அபசகுனமாக சொல்லாதீர்கள்.

அது, பட்டு வேட்டியின்… நிறத்தில் உள்ள சீலை.

Link to comment
Share on other sites

  • Replies 386
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

மத்தியபிரதேசமும்தான் பிரதமரை தீர்மானிக்கின்றன.. அவர்கள் நலன்பற்றி சிந்திக்கும் வடக்கை சேர்ந்த ஒருவர்தான் பிரதமராக வருகிறார்.

1. நேரு - கஸ்மீரி பண்டிட்

2. குல்சரி லால் நந்தா - பஞ்சாபி இந்து

3. இந்திரா - நேருவின் மகள்

4. மொராஜி தேசாய் - குஜராத்தி

5. ரஜீவ் - இந்திராவின் மகன்

6.  நரசிம்ம ராவ் - ஆந்திரா 

7. தேவேகெளடா - கர்நாடகா

8. குஜ்ரால் - பஞ்சாபி இந்து

9. மன்மோகன் - பஞ்சாபி சீக்கியர்

10. மோடி - குஜராத்தி இந்து

10/14 நீங்கள் சொன்ன மாதிரி இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

நீங்கள் சொன்ன பீகாரும் மத்திய பிரதேசம் மற்றும் உத்தர பிரதேசங்கள் எல்லாம் வறுமை மாநிலங்கள்

அதனால்தான் அரசும் மக்களும் திட்டமிட்டு சனத்தொகையை கட்டுப்படுத்திய தமிழ்நாட்டு ரிக்‌ஷா காரனின் பிள்ளைகள் சிலிக்கன் வலியில் கலக்க, உத்தரபிரதேசத்து பிள்ளைகள் பானி பூரி விக்க தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள்.

எங்கேயும் சனத்தொகையை கட்டுப்படுத்துங்கள் என நான் கூறவில்லை. மேலே ஓணாண்டி சொன்ன strength in numbers எனக்கும் புரிகிறது.

ஆனால் அதை பொருளாதார வலு உள்ளவர்கள் செய்ய வேண்டும். இல்லாதவர்கள் நம்பி பெற்றால் அந்த பிள்ளைகளை வளர்க்கும் ஒரு கட்டமைப்பை உருவாக்கிவிட்டு, அவர்களையும் பெற சொல்லலாம். 

 

https://en.m.wikipedia.org/wiki/List_of_Indian_states_and_union_territories_by_Human_Development_Index
 

இந்திய மாநிலங்களின் மனித அபிவிருத்தி சுட்டெண். எந்த மாநிலம் எங்கே உள்ளது. மேலே உள்ள மாநிலங்கள் குடும்ப திட்டமிடலை கையாண்ட முறை என்ன என்பதை ஆராய்து பாருங்கள்.

உத்தர பிரதேசத்தில் பத்து பிள்ளைகளை பெற்று நம்பரை கூட்டி, எம்பிகளை கூட்டினாலும், குறைந்த நம்பரில், வளங்களை சரியாக பயன்படுத்திய மாநிலங்களே முன்னேறுகிறன. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

ஆம் அப்போ தனபாலின உந்துதல் இயற்கையானது இந்த திருமணச்சடங்கு தான் செயற்கையானது இரண்டுமே பெண்கள் ஏன் ஒருவரை மாப்பிள்ளை என்று அழைக்க வேண்டும் தோழனுக்குப் பதில் தோழியை நிறுத்தியிருக்கலாம். 

ஓரினசேர்க்கை இயற்கையானது, ஆனால் வழமையானது அல்ல. 

சிவில் திருமணம் - சிலநாடுகளில் சட்டபூர்வம், பலநாடுகளில் இல்லை. இதில் இயற்கை, செயற்கை என்ற பாகுபாடு இல்லை.

திருமண சடங்கு- அந்தந்த மதம் சார்ந்தது. சில மதங்களில் முடியவே முடியாது (இஸ்லாம்). சில கிறீஸ்தவ உட்பிரிவுகளில் முடியும். இந்துக்களுக்கு ஒரு ஒற்றை தலைமை இல்லை, ஆகவே ஒரு ஐயரை பிடித்தால் சரி.

யார் கணவன், யார் மனைவி - கீழே மீரா சொன்னது போல - அவரவர் விருப்பம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

அப்படி, ஓர் பாலினத்தில்...  திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசை இருந்திருந்தால்,
இரகசியமாக அந்த திருமணத்தை, செய்து விட்டு போயிருக்கலாம்.

ஏன்... முகநூல் எல்லாம் பதிந்து, அதனை பிரபலமாக்கி...
பெற்றோருக்கும், திருமணம் முடிக்காமல் இருக்கும் சகோதரங்களுக்கும்,  
வெளியே... தலை காட்ட முடியாத, தலை குனிவை ஏற்படுத்த வேண்டும். 😡

*****

நீங்கள் சொல்வது இருபக்கமும் நியாயம் உள்ள கேள்வி.

எல்லாவற்றையும் தமக்குள் புதைத்து வைத்துகொண்டு, அம்மா, அப்பா தாங்கமாட்டினம் என்பதற்காக போலியாக வாழ்பவர்களையும் நான் அறிவேன்.

இவர்கள் இரெட்டை வாழ்க்கை வாழ்கிறார்கள். தமது சுயத்தை தொலைத்து. வீட்டில் கல்யாணம் பேசி அலுத்துவிடுவார்கள். ஆனால் இன்னொரு பெண்ணின் வாழ்வை நாசம் பண்ணுவதில்லை என்பதில் தெளிவாக இருப்பதால் - கல்யாணம் கட்டுவதில்லை. சிலர் அதையும் செய்து டிவோசில் நிற்பார்கள். சில பெற்றாருக்கும் அரசல்புரசலாக தெரியும் என நான் ஊகிக்கிறேன், ஆனால் அவர்களும் காட்டிகொள்வதில்லை.

நான் யார் என்பதை வெளியில் காட்டிகொள்ளாமல் வாழும் வாழ்க்கை ஆயுள்தண்டனை போன்றது என்பார்கள்

பலர் இப்படி வாழ்கிறார்கள். குறிப்பாக எமது சமூகத்தில். ஊரில் கூட பலர் தனிமரமாக இருப்பார்கள். சிலர் தற்கொலை கூட செய்வதுண்டு. இப்படியான பிரச்சனையாக இருக்கலாம்.

பெற்றாரின் மன உளைச்சலை தவிர்க்க, இப்படி தம்மைதாமே ஆயுள் சிறையில் தள்ளுபவர்கள் போற்றுதலுக்கு உரியவர்களே, ஆனால் இந்த சிறையில் இனியும் இருக்க முடியாது என்று வெளியில் வருபவர்கள் பக்கமும் நியாயம் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, goshan_che said:

நீங்கள் சொல்வது இருபக்கமும் நியாயம் உள்ள கேள்வி.

எல்லாவற்றையும் தமக்குள் புதைத்து வைத்துகொண்டு, அம்மா, அப்பா தாங்கமாட்டினம் என்பதற்காக போலியாக வாழ்பவர்களையும் நான் அறிவேன்.

இவர்கள் இரெட்டை வாழ்க்கை வாழ்கிறார்கள். தமது சுயத்தை தொலைத்து. வீட்டில் கல்யாணம் பேசி அலுத்துவிடுவார்கள். ஆனால் இன்னொரு பெண்ணின் வாழ்வை நாசம் பண்ணுவதில்லை என்பதில் தெளிவாக இருப்பதால் - கல்யாணம் கட்டுவதில்லை. சிலர் அதையும் செய்து டிவோசில் நிற்பார்கள். சில பெற்றாருக்கும் அரசல்புரசலாக தெரியும் என நான் ஊகிக்கிறேன், ஆனால் அவர்களும் காட்டிகொள்வதில்லை.

நான் யார் என்பதை வெளியில் காட்டிகொள்ளாமல் வாழும் வாழ்க்கை ஆயுள்தண்டனை போன்றது என்பார்கள்

பலர் இப்படி வாழ்கிறார்கள். குறிப்பாக எமது சமூகத்தில். ஊரில் கூட பலர் தனிமரமாக இருப்பார்கள். சிலர் தற்கொலை கூட செய்வதுண்டு. இப்படியான பிரச்சனையாக இருக்கலாம்.

பெற்றாரின் மன உளைச்சலை தவிர்க்க, இப்படி தம்மைதாமே ஆயுள் சிறையில் தள்ளுபவர்கள் போற்றுதலுக்கு உரியவர்களே, ஆனால் இந்த சிறையில் இனியும் இருக்க முடியாது என்று வெளியில் வருபவர்கள் பக்கமும் நியாயம் உண்டு.

கோசான்… வெள்ளக்காரர் சிலர்,

கலியாணம் கட்டி… பிள்ளைகள் பிறந்த பின்பும்…

ஒரின சேர்க்கையில் ஈடுபடுகிறார்கள்.

இந்த வருத்தத்துக்கு… மருந்து இல்லையா. 🤣

கோசானை… “கட்” பண்ண வேணும் என்று சொல்லிப் போடாதீங்க. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

கோசான்… வெள்ளக்காரர் சிலர்,

கலியாணம் கட்டி… பிள்ளைகள் பிறந்த பின்பும்…

ஒரின சேர்க்கையில் ஈடுபடுகிறார்கள்.

இந்த வருத்தத்துக்கு… மருந்து இல்லையா. 🤣

கோசானை… “கட்” பண்ண வேணும் என்று சொல்லிப் போடாதீங்க. 😂

உடலுறவுக்கு கணவன் அல்லது மனைவி மறுத்ததால் என்ன செய்ய முடியும்?🤣

அந்த நேர விருப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டாமா?😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kandiah57 said:

உடலுறவுக்கு கணவன் அல்லது மனைவி மறுத்ததால் என்ன செய்ய முடியும்?🤣

அந்த நேர விருப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டாமா?😍

கந்தையா அண்ணை…

மாட்டுப் பட்டவன், எல்லோ…. ஊரெல்லாம் சொல்லி நாறடிக்கிறான். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, தமிழ் சிறி said:

கந்தையா அண்ணை…

மாட்டுப் பட்டவன், எல்லோ…. ஊரெல்லாம் சொல்லி நாறடிக்கிறான். 🤣

பல வீடுகள் வைத்து இருப்பவனுக்கு.   சமுதாயத்தில் மதிப்பு.....பல கார்கள் வைத்து இருப்பவனுக்கு  சமுதாயத்தில் மதிப்பு...பல தொழில் நிருவனங்கள் வைத்து இருப்பவனுக்கு சமுதாயத்தில் மதிப்பு....பயப்படுவேன்  இந்த உலகில் வாழ முடியாது பயம் வாழ்க்கைக்கு முதல் எதிரி.  மேலே நீங்கள் குறிப்பிட்டவர்களும் மதிக்கும் காலம்  கண்டிப்பாக வரும் 🤣படித்து பல பட்டங்கள் வைத்து இருப்பவனும் மதிக்கப்படுகிறான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கலியாணத்தில் தாலி கட்டியது சிவப்பு நிற சீலை அணிந்தவர்.

பட்டு வேட்டி நிற சீலை அணிந்தவர் ஏன் தாலியை கட்டிக் கொண்டார் …?🤔

எல்லாமே தலைகீழாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, தமிழ் சிறி said:

கோசான்… வெள்ளக்காரர் சிலர்,

கலியாணம் கட்டி… பிள்ளைகள் பிறந்த பின்பும்…

ஒரின சேர்க்கையில் ஈடுபடுகிறார்கள்.

இந்த வருத்தத்துக்கு… மருந்து இல்லையா. 🤣

கோசானை… “கட்” பண்ண வேணும் என்று சொல்லிப் போடாதீங்க. 😂

🤣 மேலே சொன்ன சூரியஒளியும், நிறப்பிரிகையும்தான் காரணம். மனித பாலியல் தெரிவில் 0 தொடக்கம் 100 வரை உண்டு என வையுங்கள்.

0 - நம் போன்ற நூறுவீத எதிர்பாலின ஈர்ப்பு உடையோர். 100 முழுக்க முழுக்க தன்பாலின ஈர்ப்பு உள்ளோர்.

50? அவர்கள்தான் இருபாலின ஈர்ப்பு உள்ளோர். என்னோடு கூட வேலை செய்த ஒரு பெண், 2 பிள்ளைகளின் தாய். 40 சொச்ச வயசில் டிவோஸ் எடுத்துவிட்டு, தன் புதிய தன்பாலின இணையுடன் சேர்ந்து வாழ்கிறார்.

தான் யார் என்பதை முழுமையாக உணர தனக்கு 40 சொச்ச வருசம் தேவைபட்டதாக சொல்லுவார். 

நான் நினைக்கிறேன் இந்த அளவிடயில் 0 இல் இருப்பவரும், 100 இல் இருப்பவரும் தமது பாலின தெரிவில் மாறமாட்டார்கள். ஆனால் 40-60 இடையில் இருப்போர் fluid ஆக இருப்பார்கள் என. எனது எண்ணம்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

🤣 மேலே சொன்ன சூரியஒளியும், நிறப்பிரிகையும்தான் காரணம். மனித பாலியல் தெரிவில் 0 தொடக்கம் 100 வரை உண்டு என வையுங்கள்.

0 - நம் போன்ற நூறுவீத எதிர்பாலின ஈர்ப்பு உடையோர். 100 முழுக்க முழுக்க தன்பாலின ஈர்ப்பு உள்ளோர்.

50? அவர்கள்தான் இருபாலின ஈர்ப்பு உள்ளோர். என்னோடு கூட வேலை செய்த ஒரு பெண், 2 பிள்ளைகளின் தாய். 40 சொச்ச வயசில் டிவோஸ் எடுத்துவிட்டு, தன் புதிய தன்பாலின இணையுடன் சேர்ந்து வாழ்கிறார்.

தான் யார் என்பதை முழுமையாக உணர தனக்கு 40 சொச்ச வருசம் தேவைபட்டதாக சொல்லுவார். 

நான் நினைக்கிறேன் இந்த அளவிடயில் 0 இல் இருப்பவரும், 100 இல் இருப்பவரும் தமது பாலின தெரிவில் மாறமாட்டார்கள். ஆனால் 40-60 இடையில் இருப்போர் fluid ஆக இருப்பார்கள் என. எனது எண்ணம்தான்.

நாற்பதில் நாய்க்குணம்  என்பதை இப்படியும்  சொல்லலாம்...

ஏதோ  பெரிதாக  கண்டு பிடித்த  மாதிரி கதை  விடுவினம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, நிழலி said:

பொதுவாக யாழ் இணையத்தில் தனிப்பட்டவர்களின் வாழ்கையில் நிகழும் சம்பவங்கள்,வைபங்கள், சொந்த விடயங்கள் பற்றி இணைப்பதை தவிர்க்க சொல்வதுண்டு. தனிப்பட்டவர்களின் தனியுரிமையை அது மீறுகின்றது என்பதனால். ஆனால் இந்த பெண்களின் திருமண விடயம் புலம்பெயர் தமிழ் செய்தித் தளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பரவலாக பகிரப்படுவதாலும், கட்டுண்ட சமூகம் ஒன்று கட்டுடைப்பை செய்ய எத்தனிப்பதை வெளிக்காட்டுவதாலும் பண்பான முறையில் தொடர்ந்து கருத்தாடுவது ஆரோக்கியமானது என நினைக்கின்றோம்.

நீங்கள் பண்பான முறையில் கருத்தாடுவது சிறந்தது எனக்கூறுகிறீர்கள், ஆனால் இங்கே அவர்களது தோற்றத்திலிருந்து அவர்கள் தனிப்பட்ட பாலியல்உறவு/திருப்தி வரை எழுதுகிறார்கள்..  ஆண் யார் பெண் யார்? இது எல்லாம் அவரவர் தனிப்பட்ட விடயம்.. இப்பொழுது குருக்கள் வரை வந்துவிட்டது.. கவலைக்குரிய விடயம்

 

 

5 minutes ago, பெருமாள் said:

இடையில் எழுதிய கருத்துக்கள் நான் படிக்கவில்லை மனதில் பட்டதை  எழுதினேன் இங்கு  இரண்டுக்கு மேல் பெற்றால் பிந்திய வயது கல்யாணம் ஆபத்து  என்று வைத்திய ஆலோசனையால் பல நண்பர்கள் பிள்ளை பேறை  நிறுத்தி விட்டார்கள் எப்படி இனம் பெருகும் என்ற கவலை இந்த பயித்திய கலியானம்களை எதிர்க்க சொல்லுது .

 

பிந்திய வயது கல்யாணம் மட்டுமல்ல, எங்களது சமூகத்தில் இருக்கும் சில பழக்கவழக்கங்கள், நடைமுறைகளாலேயே எங்களது சமூகத்தில் திருமணமாகமல் இருப்பவர்களின் எண்ணிக்கை கூடுகிறது.. அதை முதலில் திருத்த முடியுமா என சிந்தியுங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

பிந்திய வயது கல்யாணம் மட்டுமல்ல, எங்களது சமூகத்தில் இருக்கும் சில பழக்கவழக்கங்கள், நடைமுறைகளாலேயே எங்களது சமூகத்தில் திருமணமாகமல் இருப்பவர்களின் எண்ணிக்கை கூடுகிறது.. 

ஆம் நீங்கள் சொல்வதில் தவறில்லை அப்படி இப்படி நம் இனம் சுருங்கி கொண்டு போகையில் இது மாதிரியான கல்யானம்களை நாடாத்தி போட்டோவுக்கு தில்லா போஸ் கொடுக்கிறார் பாருங்கள் பிணமானாலும் கலைத்து  கலைத்து காசு உருவுகிறார்களே இவர்களை என்னவென்று சொல்வது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, விசுகு said:

நாற்பதில் நாய்க்குணம்  என்பதை இப்படியும்  சொல்லலாம்...

ஏதோ  பெரிதாக  கண்டு பிடித்த  மாதிரி கதை  விடுவினம்?

அவர்களாக நாம் இருக்காதவரை இது நமக்கு புரியாது என்று நினைகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

Edited 6 minutes ago by பிரபா சிதம்பரநாதன்

 

13 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

அதை முதலில் திருத்த முடியுமா என சிந்தியுங்கள். 

நீங்கள் முதல் எழுதிய கருத்துக்கு மேலே பதில் உள்ளது அதன்பின் எடிட் பண்ணி சிந்திக்க சொல்கிறீர்கள் அதற்கு வேறு திரி துறந்து போவது நல்லது ஏற்கனவே சில திரிகளின் தலையங்கத்துக்கும் வாலுக்கும் சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் ஓடுது இங்கு வேண்டாமே மேடம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

ஆம் நீங்கள் சொல்வதில் தவறில்லை அப்படி இப்படி நம் இனம் சுருங்கி கொண்டு போகையில் இது மாதிரியான கல்யானம்களை நாடாத்தி போட்டோவுக்கு தில்லா போஸ் கொடுக்கிறார் பாருங்கள் பிணமானாலும் கலைத்து  கலைத்து காசு உருவுகிறார்களே இவர்களை என்னவென்று சொல்வது ?

நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்  எங்களது சமூகத்தில், இந்த உலகில் இவர்களும் ஒரு அங்கம். முன்பு அதிகம் பேசப்படவில்லை அவ்வளவுதான். 

இரண்டாவது, இன்று இந்த குருக்கள் செய்யாவிட்டால் இன்னொருவர் வருவார், அதுவும் தவிர்க்க முடியாத ஒன்று. அதைவிட இனி அர்ச்சகர் இல்லாதோரும் பூசை செய்யலாம் என்றால் குருக்கள் இல்லாத ஒருவரும் இவர்களைப்போன்றவர்களின் திருமணத்தை நடத்திவிட்டு போகப்போகிறார்கள்.. 

 

15 minutes ago, விசுகு said:

ஒரு விழாவுக்கு தலைமை தாங்குபவர் பற்றி விமர்சனம் வருவது தவிர்க்க முடியாது தானே??

மன்னிக்கவேண்டும் விசுகு அண்ணா இங்கே ஓரின சேர்க்கையாளர்களை பற்றிய கதைப்பதால் குருக்களை பற்றி கதைத்து என்ன பிரயோசனம் என நினைக்கிறேன். 

மேலதிகமாக தலைப்பிற்குள் கதைக்கும்படி பெருமாள் அண்ணா வேறு கூறியதால் தலைப்புடன் சம்பந்தமாக எழுதலாம் இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, பெருமாள் said:

ஆம் நீங்கள் சொல்வதில் தவறில்லை அப்படி இப்படி நம் இனம் சுருங்கி கொண்டு போகையில் இது மாதிரியான கல்யானம்களை நாடாத்தி போட்டோவுக்கு தில்லா போஸ் கொடுக்கிறார் பாருங்கள் பிணமானாலும் கலைத்து  கலைத்து காசு உருவுகிறார்களே இவர்களை என்னவென்று சொல்வது ?

இனம் சுருங்குது என்பதற்காக கல்யாணம் முடிக்காமல் இருக்கும் ஆட்களை எல்லால் வலு கட்டாயமா கல்யாணம் கட்டி வைபீர்களா?

எத்தனை பெண்கள் சீதன கொடுமையால், சாதியில் மாப்பிள்ளை கிடைக்காதமையால் கல்யாணம் முடிக்காமல் இருக்கிறார்கள்?

அதை எல்லாம் விடுத்து இரெண்டே இரெண்டு பெண்கள் இப்படி செய்வதால் இனம் சுருங்குகிறது என்றால்?

உங்கள் உறவினர், நண்பர்களின் பிள்ளைகள் இனம் மாறி முடித்தால் - அங்கே இனம் சுருங்கவில்லையா?

அதற்கும் மேலாக பெண்ணின் உடம்பு என்ன பிள்ளை பெறும் இயந்திரமா? இனம் விருத்தி செய்ய வேண்டும், விருப்பமோ, இல்லையோ நீ பிள்ளை பெற்றே ஆக வேண்டும் என சொல்வது தலிபான் தனமாக தெரியவில்லையா?

யாரை கலியாணம் முடிப்பது, பிள்ளை பெறுவதா என்பது ஒவ்வொரு பெண்ணினதும் முடிவு.

பெண்ணின் உடம்பு அவளுக்கு மட்டுமே உரித்தானது, அது யாரினதும் விளைநிலம் அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்  எங்களது சமூகத்தில், இந்த உலகில் இவர்களும் ஒரு அங்கம். முன்பு அதிகம் பேசப்படவில்லை அவ்வளவுதான். 

இரண்டாவது, இன்று இந்த குருக்கள் செய்யாவிட்டால் இன்னொருவர் வருவார், அதுவும் தவிர்க்க முடியாத ஒன்று. அதைவிட இனி அர்ச்சகர் இல்லாதோரும் பூசை செய்யலாம் என்றால் குருக்கள் இல்லாத ஒருவரும் இவர்களைப்போன்றவர்களின் திருமணத்தை நடத்திவிட்டு போகப்போகிறார்கள்.. 

 

மன்னிக்கவேண்டும் விசுகு அண்ணா இங்கே ஓரின சேர்க்கையாளர்களை பற்றிய கதைப்பதால் குருக்களை பற்றி கதைத்து என்ன பிரயோசனம் என நினைக்கிறேன். 

மேலதிகமாக தலைப்பிற்குள் கதைக்கும்படி பெருமாள் அண்ணா வேறு கூறியதால் தலைப்புடன் சம்பந்தமாக எழுதலாம் இல்லையா?

தலைப்பு ஓரினச்சேர்க்கை அல்ல திருமண சடங்கு தானே? அப்படியானால் குருக்கள் முக்கியமானவர் தானே?

பிரான்சில் இது போன்ற ஒன்றை எனது குடும்பம் என்று தெரிந்தால் எந்த குருக்களும் எனது அனுமதி பெறாமல் செய்ய முன் வரமாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

அப்படி, ஓர் பாலினத்தில்...  திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசை இருந்திருந்தால்,
இரகசியமாக அந்த திருமணத்தை, செய்து விட்டு போயிருக்கலாம்.

ஏன்... முகநூல் எல்லாம் பதிந்து, அதனை பிரபலமாக்கி...
பெற்றோருக்கும், திருமணம் முடிக்காமல் இருக்கும் சகோதரங்களுக்கும்,  
வெளியே... தலை காட்ட முடியாத, தலை குனிவை ஏற்படுத்த வேண்டும். 😡

*****

இன்றைய உலகம் விளம்பர,வியாபார உலகம்.
விளம்பரத்திற்காக மணமக்கள் செய்கின்றார்கள்.
பணத்திற்காக குருக்கள் வந்து நிற்கின்றார் அவ்வளவுதான்.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

இனம் சுருங்குது என்பதற்காக கல்யாணம் முடிக்காமல் இருக்கும் ஆட்களை எல்லால் வலு கட்டாயமா கல்யாணம் கட்டி வைபீர்களா?

எத்தனை பெண்கள் சீதன கொடுமையால், சாதியில் மாப்பிள்ளை கிடைக்காதமையால் கல்யாணம் முடிக்காமல் இருக்கிறார்கள்?

அதை எல்லாம் விடுத்து இரெண்டே இரெண்டு பெண்கள் இப்படி செய்வதால் இனம் சுருங்குகிறது என்றால்?

உங்கள் உறவினர், நண்பர்களின் பிள்ளைகள் இனம் மாறி முடித்தால் - அங்கே இனம் சுருங்கவில்லையா?

அதற்கும் மேலாக பெண்ணின் உடம்பு என்ன பிள்ளை பெறும் இயந்திரமா? இனம் விருத்தி செய்ய வேண்டும், விருப்பமோ, இல்லையோ நீ பிள்ளை பெற்றே ஆக வேண்டும் என சொல்வது தலிபான் தனமாக தெரியவில்லையா?

யாரை கலியாணம் முடிப்பது, பிள்ளை பெறுவதா என்பது ஒவ்வொரு பெண்ணினதும் முடிவு.

பெண்ணின் உடம்பு அவளுக்கு மட்டுமே உரித்தானது, அது யாரினதும் விளைநிலம் அல்ல.

நன்றி கோஷான்..

எனக்கு உங்களைப்போல தைரியமாக எல்லாம் நான் நினைப்பதை எழுத முடிவதில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, விசுகு said:

தலைப்பு ஓரினச்சேர்க்கை அல்ல திருமண சடங்கு தானே? அப்படியானால் குருக்கள் முக்கியமானவர் தானே?

பிரான்சில் இது போன்ற ஒன்றை எனது குடும்பம் என்று தெரிந்தால் எந்த குருக்களும் எனது அனுமதி பெறாமல் செய்ய முன் வரமாட்டார்கள்.

அப்படியா நல்ல விடயம்.. பிரான்சில் நீங்கள் முக்கிய பிரமுகராக இருப்பது நல்லதொரு விடயம்.. மிக்க மகிழ்ச்சி.. அவ்வளவுதான் என்னால் கூறமுடியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

நன்றி கோஷான்..

எனக்கு உங்களைப்போல தைரியமாக எல்லாம் நான் நினைப்பதை எழுத முடிவதில்லை. 

இப்ப நீங்கள் எழுதியதை வாசித்து தலையைச் சுற்றுகிறது 🤣😂என்றாலும்  நினைத்ததை  எழுதுங்கள் நாங்கள்  ஒன்றும் செய்யமாட்டோம்  சில நேரம் அவை நல்ல கருத்துகள் ஆக இருக்கலாம் 😃😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏனைய திரிகளிலும் இதைப் பற்றிப் பேசியிருக்கிறோம்: பத்துப் பிள்ளை பெறலாம், ஆனால் அதற்கு ஒரு விலை கொடுக்க வேண்டியிருக்கும். அந்த விலையில் முக்கியமானது பெண்களின் கல்வி, பொருளாதாரச் சுதந்திரம் (சில சமயங்களில் உடல் நலம்!) என்பன. 

உதாரணமாக, இன்று இலங்கையில் உயர்கல்வி நிலையங்களில் கற்போர் அரைவாசிக்கு சற்று மேல் பங்கு பெண்கள் (ஆண்கள் இயற்கையிலேயே படிப்பை விரும்பாதோர் தானே?:grin:). ஒரு ஐந்து பிள்ளையைப் பெற இருபதில் கட்டிக் கொடுத்து விட்டால் படிப்பும் போய், புருசன் காலமான பிறகு தொழில் தேடும் தகைமையும் போய் விடும்! இத்தகைய பெண்கள் பத்துப் பெற்றுப் படிக்காமல் விட்டால் "கோயில் வாசல்களில் கச்சான் விற்றுப் பிழைக்கலாம் தானே?" என்று சிலர் இங்கே சொன்னாலும் எனக்கு ஆச்சரியம் வராது - ஏனெனில் அப்படியான கருத்துகளை முன்னர் இங்கே பெண்கள் குறித்து எழுதியோர் தான் இந்த பத்துப் பெற்றால் என்ன குறைந்து விடும் என்று கேட்கிறார்கள். 

எனவே, இருக்கும் இளையோரை சக்தி மிக்கவர்களாக மாற்றுது தான் பொருத்தமான வழி. பத்துப் பெற்று தெருவில் விட்டு விட்டால்- அவர்களில் ஒரு பகுதியினராவது சமூக ஒட்டுண்ணிகளாக மாறி விட்டால்-இன்று ஐரோப்பாவில் றோமா மக்களுக்கு ஏற்பட்ட நிலையே தமிழர்களுக்கும் ஏற்படும்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணமக்கள் இருவருமே ஆண் பெண் வேறுபாட்டுடன் தோழன் தோழி என கலியாணம் செய்திருக்கிறார்கள். 

 

அவர்கள் தாங்கள் ஒத்த பாலினம் என்றால் இருவருமே பெண்களாகவோ அல்லது ஆண்களாகவோ வெளிப்பட்டிருக்கலாம். அவர்களே தங்கள் இருவருக்குமான வேறுபாட்டை காட்டி உள்ளார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.