Jump to content

கனடாவில் இடம்பெற்ற இந்து சமய முறையிலான தன்பால் ஈர்ப்புடைய ( lesbian) பெண்களின் திருமணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

என் பிள்ளை ஒரு வேளை இப்படி செய்தால் என் ரியாக்சன் அதன் பின்னான என் எண்ணங்கள் எப்படி இருக்கும் எண்டு சொல்லதெரியவில்லை.. அநேகமாக இதனால் சந்ததி பெருக்கம் மற்றும் சவால்களை எடுத்து சொல்லி புரியவைத்து பார்ப்பேன் இல்லை என்றால் மெளனமாக ஏற்றுக்கொள்வேன்..

Link to comment
Share on other sites

  • Replies 386
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையிலும் கூட  ஓரினச்சேர்க்கையாளர்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கொஞ்சமாவது வந்துவிட்டது என்றே நினைக்கிறன். நான் அறிய கொழும்பு / கண்டி பகுதிகளில் ஆண்கள் இப்படி விமர்சையாக திருமணம் செய்து வாழ்கிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

ஆனால் ஒரே ஒரு கவலை இப்படியே பெண்கள் தன்னின சேர்க்கையாளர்களாக  போனால் ஆண்கள் எதிர்காலத்தில் என்ன செய்வது? 

கவலைப்படாதே சகோதரா 😂😂🤣…. பெண்களில் பெரும்பாலானோருக்கு எம்மீதுதான் ஈர்ப்பு. 

ஒப்பீட்டளவில் ஒத்த பாலினைஈர்ப்பு உள்ளவர்கள் மிக சொற்ப அளவினரே.

ஆண்கள் ஆண்களை விரும்புவதும் உண்டு, இதனால் பெண்களுக்கு ஆண் துணை இல்லாமல் போகும் ஒரு நிலை வராதுதானே?

வர நாம் விடுவோமா😂.

பிகு

ஒத்த பாலின கவர்ச்சி என்பது ஒரு ஆளை பார்த்து இன்னொரு ஆள் செய்வதல்ல. அதே போல் இது fashion trend போல ஒரு டிரெண்டும் அல்ல. 

உள்ளார்ந்த உந்தல். இது உள்ளவர்கள் sexual minority ஆகவே ஆண்களுக்கு பெண்கள் இல்லாமல் போய்விடுமோ என்ற பயம் முகாந்திரம் இல்லாதது.

 

Link to comment
Share on other sites

5 minutes ago, Sasi_varnam said:

இலங்கையிலும் கூட  ஓரினச்சேர்க்கையாளர்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கொஞ்சமாவது வந்துவிட்டது என்றே நினைக்கிறன். நான் அறிய கொழும்பு / கண்டி பகுதிகளில் ஆண்கள் இப்படி விமர்சையாக திருமணம் செய்து வாழ்கிறார்கள். 

இவர்களுக்கு என்று சிங்கள சஞ்சிகை ஒன்றும் உள்ளது. அத்துடன் ஒரு அமைப்பும் உள்ளது. பெயர்கள் தான் உடனடியாக நினைவுக்கு வருகுது இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


சந்ததியின் பெருக்கம் / பாலியல் இச்சை இவை தானே ஆண், பெண் இணைவதற்கான முதல் காரணங்கள்.
உலக சனத்தொகை 6.9 பில்லியனை எட்டுகிறது, சனப்பெருக்கம் கொஞ்சம் குறைவதால் உலகத்துக்கு கேடு எதுவும் இல்லை. பாலியல் இச்சை அது அவனவன் / அவளவள் உணர்வு.
இது சரியா தவறா என்ற சமூக விவாதத்தை ஒதுக்கி விட்டு தனி மனித உரிமை விடயமாய் பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, நிழலி said:

மற்றவர்களின் எம்மைப் பற்றிய அபிப்பிராயம் என்பது என்னைப் பொறுத்தவரைக்கும் நாய் குலைப்பது போன்றது. திருப்பி உறுதியாக நின்றால் குலைக்கும் நாய் வாலைச் சுருட்டிக் கொண்டு ஓடிவிடும்.

100% உண்மை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

இனிய திருமண நல் வாழ்த்துக்கள் .........இவர்களின் சொத்துக்கள் இவர்களுக்கு பின் யாருக்கு போகும் 😂

பெண்கள் திருமணம் செய்யும் போது விரும்பினால் பிள்ளை பெறலாம்.

ஆண்கள் தான் இதிலிருந்து விதிவிலக்காக இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Sasi_varnam said:


சந்ததியின் பெருக்கம் / பாலியல் இச்சை இவை தானே ஆண், பெண் இணைவதற்கான முதல் காரணங்கள்.
உலக சனத்தொகை 6.9 பில்லியனை எட்டுகிறது, சனப்பெருக்கம் கொஞ்சம் குறைவதால் உலகத்துக்கு கேடு எதுவும் இல்லை. பாலியல் இச்சை அது அவனவன் / அவளவள் உணர்வு.
இது சரியா தவறா என்ற சமூக விவாதத்தை ஒதுக்கி விட்டு தனி மனித உரிமை விடயமாய் பாருங்கள்.

அது சரி.. இச்சை எப்படி போக்குவினம். அடல்ட் சொப் போயா..?!

--------------------------------------

கறுமம் கண்றாவித்தனமெல்லாத்துக்கும்.. ஒரு விளக்கம் கொடுத்தே பழகிட்டு வாறம்.

அறிவியல் ரீதியாக.. கூட இந்த உறவுகளை அர்த்தப்படுத்துவது சிரமம். எதிக் பேசி... ஏதோ சமாளிச்சிக்கிட்டு இருக்கு உலகம்.

அண்மையில் ஒரு பெண் சிகிச்சைக்கு வந்திருக்காங்க.. அவான்ர நோயே விசித்திரமாக இருந்தது. 

இப்ப விளங்குது.. எப்படி பெண் நோயியல் எல்லாம்.. அதுகளின்ர வாய்க்குள்ள வருகுதுண்ணு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

ஒப்பீட்டளவில் ஒத்த பாலினைஈர்ப்பு உள்ளவர்கள் மிக சொற்ப அளவினரே.

அது சரிதான்,

ஒருபாலின ஈர்ப்பு ஹார்மோன்கள் மாறுபாட்டில் வருகிறதென்றும் சொல்கிறார்கள், காமவெறியில் வருகுது என்றும் சொல்கிறார்கள்,  கல்லூரி ஆண்கள் பெண்கள் விடுதியில் எல்லாம் ஓர் பாலின சேர்க்கை அமோகமாக எம் நாடுகளிலேயே நடந்திருக்கிறது என்று அறிந்திருக்கிறோம். 

இலங்கையில்கூட தன்னினசேர்க்கையாளர் ஊர்வலம் போகும் அளவில் எல்லாம் இப்போ நிலமை இருக்கு.

இன்று ஓரின சேர்க்கையை விவாத பொருளாக்கியிருக்கும் நாம் . உலகத்துக்கே தன்பாலி சேர்க்கையை அறிமுகம் செய்தது இந்து மதம் என்பதை சத்தமின்றி கடந்துவிடுகிறோம், விஷ்ணுவும் சிவனும் ஓரின சேர்க்கையாகிதான் ஐயப்பன் சாமியே பிறந்தார் என்று கூறுகிறார்கள்.

இதில் வேடிக்கை என்னவெண்றால் ஓரின சேர்க்கையை அடியோடு வெறுக்கும் எம்மில் பலர் ஐயப்பன் பக்தர்களாக இருக்கிறார்கள்.

இதுபோல்தான் வெள்ளைக்கார பெண்கள் புகைப்பதையே பெரும் வியப்பாக  பார்க்கும் எம் சமூகம், வெள்ளைக்காரிகளுக்கு முன்னமே அந்தக்காலத்து நம் கிழவிகள் சிகரெட்டிலும் பார்க்க மிகவும் கெடுதலான சுருட்டை இழு இழு எண்டு இழுத்து  பொக்கு பொக்கு எண்டு புகைவிட்டதை அடியோடு மறந்துவிடுகிறோம்.

எல்லாம் இப்படியே தாறுமாறா ஓடுது பங்கு என்ன பண்ண?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, nedukkalapoovan said:

!

நெடுக்கர்...

காமசூத்திரா போல, ஆயகலைகள் போல புதுசா ஒரு "மேயக் கலை" கண்டுபிடிப்பதென்ன அவ்வளவு கஷ்டமா? 
இது வயர்லெஸ் , வை (f )வய் காலம் 'ஆண்'டெனா இல்லாமலேயே ட்யூனப் செய்யலாம், குழாய் இல்லாமலே குளிர்பாணம் அருந்தலாம்.. 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, valavan said:

ஆனால் ஒரே ஒரு கவலை இப்படியே பெண்கள் தன்னின சேர்க்கையாளர்களாக  போனால் ஆண்கள் எதிர்காலத்தில் என்ன செய்வது? 

ஆண்களும் இப்போ பல இடங்களில் தன்னின சேர்க்கையாளர்களாக வாழ்கிறார்கள் ஜேர்மனியின் முன்னாள் வெளிநாட்டு அமைச்சர் அப்படி வாழ்தவர் அவர் 50....60. வயதிற்குள் இறந்துவிட்டார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேசப்பட வேண்டிய விடயம். அதனால் தான் கேள்வியை வைத்தேன். 

10 minutes ago, nedukkalapoovan said:

அது சரி.. இச்சை எப்படி போக்குவினம். அடல்ட் சொப் போயா..?!

--------------------------------------

கறுமம் கண்றாவித்தனமெல்லாத்துக்கும்.. ஒரு விளக்கம் கொடுத்தே பழகிட்டு வாறம்.

அறிவியல் ரீதியாக.. கூட இந்த உறவுகளை அர்த்தப்படுத்துவது சிரமம். எதிக் பேசி... ஏதோ சமாளிச்சிக்கிட்டு இருக்கு உலகம்.

அண்மையில் ஒரு பெண் சிகிச்சைக்கு வந்திருக்காங்க.. அவான்ர நோயே விசித்திரமாக இருந்தது. 

இப்ப விளங்குது.. எப்படி பெண் நோயியல் எல்லாம்.. அதுகளின்ர வாய்க்குள்ள வருகுதுண்ணு. 

அது தான் ஆரம்பத்திலேயே இயற்கைக்கு மாறான விடயத்தை வாழ்த்துவதில்லை பாராட்டுவதில்லை என்றேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமணம் என்பதற்கு வரைவிலக்கணம் வகுக்கப்படவேண்டும்  இப்போது இருக்கே தெரியாது  ஒரு ஆணும் ஒரு பெணும் இணைவது தான் திருமணம் ஆகும் ஒரே இனம் இணைவது திருமணம் இல்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kandiah57 said:

திருமணம் என்பதற்கு வரைவிலக்கணம் வகுக்கப்படவேண்டும்  இப்போது இருக்கே தெரியாது  ஒரு ஆணும் ஒரு பெணும் இணைவது தான் திருமணம் ஆகும் ஒரே இனம் இணைவது திருமணம் இல்லை 

சில வரைவிலக்கணங்களை மாற்றமுடியாது மாற்றக் கூடாது.

பொது நோக்கோடு தூர நோக்கோடு நாம் செய்யணும். 

வாழ்த்தி பாராட்டி பேசுவது ஊக்கப்படுத்துவாத மாறிவிடும்.

ஆனால் உண்மையில் இங்கே வாழ்த்துக்கூறி பாராட்டியவர்கள் எவரும் தம் பிள்ளைகளுக்கு இதை ஊக்கப்பட்படுத்த மாட்டார்கள் என்பதே நிதர்சனம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்கால இதைக் கடந்து இப்ப என்னென்னமோ எல்லாம் நடக்குது.. எங்கட ஆக்கள் இன்னும் பப்பிளிக்கிக்கு கொண்டு வரேல்ல.

Are humans naturally monogamous or polygamous? | by mikrobiologia | Medium

Polygamy or Monogamy - Which side of the Fence you are on? - Blued India

Monogamy Vs. Polygamy | A Deep Analysis of Monogamy and Polygamy

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nedukkalapoovan said:

அங்கால இதைக் கடந்து இப்ப என்னென்னமோ எல்லாம் நடக்குது.. எங்கட ஆக்கள் இன்னும் பப்பிளிக்கிக்கு கொண்டு வரேல்ல.

Are humans naturally monogamous or polygamous? | by mikrobiologia | Medium

Polygamy or Monogamy - Which side of the Fence you are on? - Blued India

Monogamy Vs. Polygamy | A Deep Analysis of Monogamy and Polygamy

நன்றி நெடுக்ஸ் தம்பி

நான் கொஞ்சம் இதை சொல்ல தயங்கினேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பப்பா, நீ அப்பன்தானடா என்று ஒரு சுவீடன் நாட்டு நிஜகதை எழுதி  இருந்தேன்.

இப்படி இரு பெண்கள், அவர்களது தோழி, தோழியின் கணவர்..... இடேயை நிகழும் சம்பவம்.....

ம்..... எவனா... /எவளா இருந்தாலும், ஒரு பொம்பிள / ஆம்பிளை உடன் வா என்று சொல்லும் நிலையில் பல பெற்றோர்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, valavan said:

அது சரிதான்,

ஒருபாலின ஈர்ப்பு ஹார்மோன்கள் மாறுபாட்டில் வருகிறதென்றும் சொல்கிறார்கள், காமவெறியில் வருகுது என்றும் சொல்கிறார்கள்,  கல்லூரி ஆண்கள் பெண்கள் விடுதியில் எல்லாம் ஓர் பாலின சேர்க்கை அமோகமாக எம் நாடுகளிலேயே நடந்திருக்கிறது என்று அறிந்திருக்கிறோம். 

இலங்கையில்கூட தன்னினசேர்க்கையாளர் ஊர்வலம் போகும் அளவில் எல்லாம் இப்போ நிலமை இருக்கு.

இன்று ஓரின சேர்க்கையை விவாத பொருளாக்கியிருக்கும் நாம் . உலகத்துக்கே தன்பாலி சேர்க்கையை அறிமுகம் செய்தது இந்து மதம் என்பதை சத்தமின்றி கடந்துவிடுகிறோம், விஷ்ணுவும் சிவனும் ஓரின சேர்க்கையாகிதான் ஐயப்பன் சாமியே பிறந்தார் என்று கூறுகிறார்கள்.

இதில் வேடிக்கை என்னவெண்றால் ஓரின சேர்க்கையை அடியோடு வெறுக்கும் எம்மில் பலர் ஐயப்பன் பக்தர்களாக இருக்கிறார்கள்.

இதுபோல்தான் வெள்ளைக்கார பெண்கள் புகைப்பதையே பெரும் வியப்பாக  பார்க்கும் எம் சமூகம், வெள்ளைக்காரிகளுக்கு முன்னமே அந்தக்காலத்து நம் கிழவிகள் சிகரெட்டிலும் பார்க்க மிகவும் கெடுதலான சுருட்டை இழு இழு எண்டு இழுத்து  பொக்கு பொக்கு எண்டு புகைவிட்டதை அடியோடு மறந்துவிடுகிறோம்.

எல்லாம் இப்படியே தாறுமாறா ஓடுது பங்கு என்ன பண்ண?

Free யா விடுங்க பங்கு 😀. வரலாறு என்பது காட்டாறு, அதை தடுக்க முடியாது. 

23 minutes ago, Kandiah57 said:

திருமணம் என்பதற்கு வரைவிலக்கணம் வகுக்கப்படவேண்டும்  இப்போது இருக்கே தெரியாது  ஒரு ஆணும் ஒரு பெணும் இணைவது தான் திருமணம் ஆகும் ஒரே இனம் இணைவது திருமணம் இல்லை 

இந்த வரைவிலக்கணம் நாட்டுக்கு நாடு வேறுபடும். யூகேயில் ஆணும்-ஆணும், பெண்ணும்-பெண்ணும் சிவில் திருமணம் செய்யலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, விசுகு said:

வாழ்த்தி பாராட்டி பேசுவது ஊக்கப்படுத்துவாத மாறிவிடும்.

ஆனால் உண்மையில் இங்கே வாழ்த்துக்கூறி பாராட்டியவர்கள் எவரும் தம் பிள்ளைகளுக்கு இதை ஊக்கப்பட்படுத்த மாட்டார்கள் என்பதே நிதர்சனம்.

நடந்த நிகழ்ச்சிக்கும் இங்கு வாழ்த்துக்கள் கூறியவர்களுக்கும் எந்த சம்பந்தமில்லை நாங்கள் வாழ்த்தவிட்டாலும். எதிர்காலத்தில் இப்படி நடைபெறும்...இருந்தும் வாழ்த்தியது  ஒரு ஊக்குவிப்பு என்பதை எற்றுக்கொள்கிறேன்.  ஆனாலும் வாழ்த்துவதைவிட வேறு வழி இல்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

நன்றி நெடுக்ஸ் தம்பி

நான் கொஞ்சம் இதை சொல்ல தயங்கினேன். 

 

9 minutes ago, nedukkalapoovan said:

அங்கால இதைக் கடந்து இப்ப என்னென்னமோ எல்லாம் நடக்குது.. எங்கட ஆக்கள் இன்னும் பப்பிளிக்கிக்கு கொண்டு வரேல்ல.

Are humans naturally monogamous or polygamous? | by mikrobiologia | Medium

Polygamy or Monogamy - Which side of the Fence you are on? - Blued India

Monogamy Vs. Polygamy | A Deep Analysis of Monogamy and Polygamy

நீங்கள் இருவரும் சொல்வதில் ஒன்றுடன் உடன்படுகிறேன். 

மேற்குலகை பொறுத்தவரை ஹோமோசெக்சுவாலிட்டி இப்போ ஒரு settled matter சட்டரீதியாகவேனும்.

இப்போ இங்கே பேசு பொருள் gender dysphoria, ஆண்/பெண்ணாக மாறுவது, எந்த வயதில் ஆப்பரேசன் செய்யலாம், அது சம்பந்தமான உரிமைகள் பற்றியே.

இப்போ யார் பெண் என்பதே இங்கே பேசுபொருளாக இருக்கிறது. Women v trans women, are trans women, women ? இவைதான் இங்கே பேசப்படுகிறன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டில் "இந்தப்பூனையும் பால் குடிக்குமா" என்று இருக்கும் அந்நிய ஆண்களுடன் கண்டம் விட்டு கண்டம் பறந்து சென்று டேற்ரிங் பண்ணிட்டு வருகுதுகள்.....சில மாதங்களில் வேறுஒருத்தரை மணமுடிக்குதுகள்....!

சகோதரங்களுக்குள்ளேயே விடாப்பிடியாய் நின்று மணமுடிக்குதுகள்....இப்படி நிறைய பார்த்து மனசு மரத்து போய் விட்டது......!

மரத்துக்கும் மரத்துக்கும் கலியாணம், கழுதைக்கும் கழுதைக்கும் கலியாணம்,நாய்க்கும் மனுசனுக்கும் கலியாணம் என்றும் நிறைய பார்த்தாச்சுது.......!

வாழ்த்துவதாய் இருந்தால் அது மனப்பூர்வமாய் இருக்க வேண்டும்...... அது முடியவில்லை....!

இதையெல்லாம் இரண்டு குலை போட்ட வாழை, நாலு கிளையுடன் நிக்கும் பனை என்று செய்தியாக பார்த்து கடந்து போக வேண்டும்......அவ்வளவுதான்.......!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பத்தில் இனப்பெருக்கத்துக்கான உறவுமுறை தெரிவு கட்டுப்பாடுகளற்று இருந்தது. பின்பு பொது மனித முன்னேற்றம் கருதி நாகரீக வளர்ச்சியின் படியில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டு கடைப்பிடிக்கப்பட்ட வருகிறது.  உதாரணமாக நெருங்கிய உறவினரிடையே திருமணம் செய்ய முடியாது. 

தனி மனித உரிமை தானே என்று சொல்லி யாரவது நெருங்கிய உறவினரிடையே திருமணம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினால் ஏற்றுக்கொள்ளலாமா. 

உதாரணமாக தாய் மகனை மணம் புரிதல்.

 இங்கே நான் சட்டத்தை பற்றி கதைக்கவில்லை.

மாற்றங்களே மனித வரலாற்றில் மாறாதிருப்பவை எனினும் காட்டு வாழ்க்கைக்கு திரும்பிப் போகாமலிருப்பது நலம் எனவே தோன்றுகிறது.

தனிப்பட்ட முறையில் இருக்கும் புறநடைகளை கொண்டாட வேண்டியதில்லை என்பது எனது அபிப்பிராயம் ...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, சாமானியன் said:

 உதாரணமாக தாய் மகனை மணம் புரிதல்.

இதற்கு காரணம் சில வேளை குறையுள்ள பிள்ளை பிறக்கலாம் என்கிறார்கள்.

நான் உட்பட எனது ஊரில் பல ஆயிரம் ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள விடயம் தான் இது. அப்படி யாரையும் நான் கண்டதில்லை.

ஆனால் பிறக்கும் குழந்தைக்கு சிலவேளை குறையிருக்கலாம் என்பதற்காக அதை தடுக்கும் சட்டம் குழந்தையே பிறக்காத விடயத்துக்கு சட்ட சேவைகளை வழங்குகிறது??

கொஞ்சம் உறுத்தலாக இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது சித்தப்பாவுடைய மகன் ஒருவன் அதாவது எனது தம்பி கனடாவில வாழ்கிறான் கனடாவில் அவன் சார்ந்த துறையில் கொஞ்சம் என்ன நல்ல பிரபல்யம் அவன் சார்ந்த துறையைக் குறிப்பிட்டல் கனடாவில வாழும் தமிழர்களில் அனேகர் உடனேயே கண்டுபிடித்துவிடுவினம் அதனால் நான் சொல்லவில்லை தவிர களவிதியும் இடம்கொடாது 

அவனும் இப்போது கே ஆகத்தான் வாழ்கிறான் நிரந்தரமாக சோடி சேர்ந்து இருக்கிறாணோ இல்லை அடிக்கடி இபடியான கோஸ்டியளுடன் உறவாடுகிறாணோ தெரியாது 

ஆனால் அவன் ஊரில இருக்கும்போதே இப்படியான தொடசல்கள் இருந்ததை நான் அறிவேன்.

யாழ்ப்பாணத்தில் பிரபல்யமான கோவில் உரிமையாளர் ஒருவரும் இந்த விடையத்தில் அதிக நாட்டமுள்ளவர்.

எனது நெருங்கிய நண்பன் ஒருவனும் அதேதான் அவனுக்கு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்த்தது ஆனால் சரிப்பட்டு வரவில்லை இப்படியான பிரச்சனை என்றவுடன் மனைவி விட்டுப்பிரிந்து போய்விட்டார்.  திருமணம் நடந்தபின்பும் அவருக்கு ஒரு ஆண் நண்பர் ஒருவருடன் உறவு இருந்தது அவருக்கும் திருமணம் நடந்து அதுவும் சரிவரவில்லை இரண்டு பெண்களது வாழ்க்கையும் அப்படியே போய்விட்டது இறுதியில் எனது நண்பனது ஆண்துணையும் நோய்வாய்ப்பட்டு இளவயதிலேயே இறந்துவிட்டார்.

அண்மையில் யாழ்ப்பாணம் போகும்போதும் எனது நண்பனைச்சந்தித்தேன் அவருக்கு என்ன ராசியோ தெரியவில்லை இப்போதும் ஓரிருவருடன் சகவாசம் வைத்திருக்கிறர் என உணர்ந்தேன்.

இது அவரது தனிப்பட்ட விடையம்

அதைத்தவிர்த்துவிட்டுப் பார்த்தால் குண இயல்புகளில் சுத்தத் தங்கம். பொய் பொறாமை ஏமாற்று சூது வஞ்சகம் எதுவுமே இல்லாதவர்.  போன இடத்தில் வாரும் ஐசே ஏதாவது சாப்பாட்டுக்கடையில சாப்பிடுவம் என அழைத்தல் வருவார் ஆனால் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறேன் என்பதற்காக என்னைச் செலவுசெய்ய விடமாட்டார். 
உண்மையாகச் சொல்லப்போனால் சந்டிக்கும்போது எனது கையைப்பர்த்ததாக எனக்கு நினைவே இல்லை.

இப்போதும் அவர் எனக்கு நல்ல நண்பரே. அவருடன் பழகியதாலோ இல்லையோ எனக்கு இப்படியான செய்திகளை வாசிச்சாலோ கேள்விப்பட்டளோ மாறுதலான கருத்துகள் எதுவும் ஏற்படுவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோஷம் நீங்க கழுதைக்கு கலியாணம் கட்டி வைக்க கூடியவர் காசு வாங்கி கொண்டு யார் யாருக்கும் கட்டி வைக்கலாம்.திருமணம் செய்பவர்கள் அது அவரவர் இஷ்டம்.இதுல தூக்கி வைச்சு பாராட்டுற அளவிற்கு  என்ன சாதனை என்னு நானும் யோசிச்சு  யோசிச்சு பார்க்கிறேன் புரியுதில்லை.எதோ Elon musk ன் Spacex project ல் புது rocket design பண்ணினது போல,அல்லது கருந்துளையை கண்டறிந்தது போல, இல்லாவிட்டால் சரிந்திருந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க புதிய பொருளாதார கொள்கையை அறிமுகப்படுத்தியது போல என்ன புர்ச்சி என்னு விளங்குதில்லை.கலாச்சாரம் என்றால் காலத்திற்கேற்ப சூழ்நிலைக்கேற்ப ஏற்கும் கருத்தியலுக்கு ஏற்ப மாறிக்கொண்டிருக்கும்.திருமணம் செய்பவர்கள் அது அவரவர் தனிப்பட்ட உணர்வு, முடிவு.இதுல சாதனை புர்ச்சி என்ன என்று தான் விளங்குதில்லை.

இதற்கு புரட்சி முற்போக்கு வெங்காயம் என்று யாரும் சாயம் பூச வேண்டாம். யாரோ இருவர் தங்கள் விருப்பப்படி திருமணம் செய்கிறார்கள். அதை தங்கள் மத நம்பிக்கைக்கு ஏற்ப செய்வதாக எண்ணிக் கொள்கிறார்கள். 

முன்பு முகநூலில் ஒரு திருமணத்தில் பெண்ணுக்கு ஆணும், ஆணுக்கு பெண்ணும் தாலிகட்டி அதை புரட்சி என்று பீத்தி இருந்தார்கள். அந்த புரட்சியால் ஆதாயம் பெற்றது நகைகடைகாரர் மட்டுமே. ஒரு தாலிக்கு பதில் இரண்டு தாலி விற்றார்கள். 

அவர்கள் திருமணம் செய்வது இல்லை பிரச்சினை விசுகு சொன்னதுபோல் இவ்வாறானவற்றை தூக்கிவைத்து கொண்டாடி இதை ஒரு கலாச்சாரமாக மாற்றுவதுதான் இங்கு சுட்டிகாட்டப்பட்டு கண்டிக்கபட்டவேண்டியது.. சுவி அண்ணை சொன்னதுபோல் இதையெல்லாம் இரண்டு குலை போட்ட வாழை, நாலு கிளையுடன் நிக்கும் பனை என்று செய்தியாக பார்த்து கடந்து போக வேண்டும் அவ்வளவுதான்.. நீங்கள் போற்றவும் வேண்டாம் தூற்றவும் வேண்டாம் அவர்களைஅவர்கள் பாட்டுக்கு வாழவிடுங்கள்.. நம்ம தலைமுறையை நாம காப்பற்றிக்கொள்ளுவம்.. ஏற்கனவே அழிஞ்சு போன இனம்.. இனப்பெருக்கமும் இல்லாட்டி இருந்த தடமும் இல்லாமல் போயிடும்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.