Jump to content

கனடாவில் இடம்பெற்ற இந்து சமய முறையிலான தன்பால் ஈர்ப்புடைய ( lesbian) பெண்களின் திருமணம்


Recommended Posts

இவ் உலகில் எல்லாரும் வாழ்வதற்கான இடம் உள்ளது. அது மற்றவர்களை பாதிக்காமல், மற்றவர்களின் இடத்தை அபகரிக்காமல், மற்றவர்களின் வாழ்வுக்கு இடையூறு விளைவிக்காமல் இருக்கும் வரைக்கும் எவருக்கும் வாழ்வதற்கு இடம் உள்ளது.

எனக்கு தனிப்பட்ட ரீதியில் இன்னொரு ஆணிடம் ஈடுபாடோ அல்லது காமமோ ஏற்படுவதில்லை. எப்பொதும் எதிர்பாலினருடன் தான் அந்த ஈடுபாடு ஏற்படும். என்னைப் போல் தான் பெரும்பாலானோர். 

ஆனால் எதிர்பாலருடன் எந்தவிதமான ஈடுபாடும் இல்லாத சக பாலருடன் மட்டுமே ஈடுபாடு ஏற்படும் ஒருவருக்கு இருக்கும் தெரிவு என்ன? அவருக்கு இந்த உலகில் இடம் இல்லையா? அவர் கண்டபடி ஒன்றுக்கு மேற்பட்ட சகபாலருடன் உறவு வைக்காமல், தனக்கு என்று ஒருவரைத் தெரிவு செய்து அவருடன் மட்டுமே உறவு கொள்ளவதில் இருக்கும் தவறு என்ன? அப்படி இல்லாமல் அவர் இந்த சமூக நியதிகளுக்காக வேண்டா வெறுப்பாக எதிர் பாலர் ஒருவரைத்தான் தெரிவு செய்து தானும் தனக்கு பிடித்த வாழ்வை வாழாமல், துணையையும் வாழ விடாமல் செய்ய வேண்டுமா?
 

Link to comment
Share on other sites

  • Replies 386
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, நிழலி said:

இவ் உலகில் எல்லாரும் வாழ்வதற்கான இடம் உள்ளது. அது மற்றவர்களை பாதிக்காமல், மற்றவர்களின் இடத்தை அபகரிக்காமல், மற்றவர்களின் வாழ்வுக்கு இடையூறு விளைவிக்காமல் இருக்கும் வரைக்கும் எவருக்கும் வாழ்வதற்கு இடம் உள்ளது.

எனக்கு தனிப்பட்ட ரீதியில் இன்னொரு ஆணிடம் ஈடுபாடோ அல்லது காமமோ ஏற்படுவதில்லை. எப்பொதும் எதிர்பாலினருடன் தான் அந்த ஈடுபாடு ஏற்படும். என்னைப் போல் தான் பெரும்பாலானோர். 

ஆனால் எதிர்பாலருடன் எந்தவிதமான ஈடுபாடும் இல்லாத சக பாலருடன் மட்டுமே ஈடுபாடு ஏற்படும் ஒருவருக்கு இருக்கும் தெரிவு என்ன? அவருக்கு இந்த உலகில் இடம் இல்லையா? அவர் கண்டபடி ஒன்றுக்கு மேற்பட்ட சகபாலருடன் உறவு வைக்காமல், தனக்கு என்று ஒருவரைத் தெரிவு செய்து அவருடன் மட்டுமே உறவு கொள்ளவதில் இருக்கும் தவறு என்ன? அப்படி இல்லாமல் அவர் இந்த சமூக நியதிகளுக்காக வேண்டா வெறுப்பாக எதிர் பாலர் ஒருவரைத்தான் தெரிவு செய்து தானும் தனக்கு பிடித்த வாழ்வை வாழாமல், துணையையும் வாழ விடாமல் செய்ய வேண்டுமா?
 

பலமான கேள்வி

மனச்சாட்சியை கேட்காமல் தான் பதில் தருவேன்.😭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கைக்கு மாறான உறவை ஊக்கிவிப்பதால் சமூகத்திற்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை. இந்த உறவில் அவர்கள் உச்ச பட்ச திருப்தியை ஒருபோதும் அடையப் போவதில்லை. சில பாலியல் ஒமோன் களின் குறைபாடுகளால் அவர்களால் சரியானஎதிர்பாலினத்தை ஈர்க்க முடியாத நிலையில் அல்லது திருப்த்திப்படுத்த முடியாத நிலையில் இவ்வாறான உறவுகளை நாடுகிறார்கள்.அவர்கள் உண்மையில் மாற்றுத்திறனாளிகள் என்ற வகைக்குள் வைத்துப் பராமரிக்க வேண்டியவர்கள். மற்றும்படி இது கிழிந்த ஆடைகளை அணிவது. உள்ளாடை தெரியக் கூடியவாறு லூசான காற்சட்டைகளை அணிவதை ஒரு பாணியாக்கிக் கொள்வது போன்ற ஒரு மனநிலமைதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, புலவர் said:

இயற்கைக்கு மாறான உறவை ஊக்கிவிப்பதால் சமூகத்திற்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை. இந்த உறவில் அவர்கள் உச்ச பட்ச திருப்தியை ஒருபோதும் அடையப் போவதில்லை. சில பாலியல் ஒமோன் களின் குறைபாடுகளால் அவர்களால் சரியானஎதிர்பாலினத்தை ஈர்க்க முடியாத நிலையில் அல்லது திருப்த்திப்படுத்த முடியாத நிலையில் இவ்வாறான உறவுகளை நாடுகிறார்கள்.அவர்கள் உண்மையில் மாற்றுத்திறனாளிகள் என்ற வகைக்குள் வைத்துப் பராமரிக்க வேண்டியவர்கள். மற்றும்படி இது கிழிந்த ஆடைகளை அணிவது. உள்ளாடை தெரியக் கூடியவாறு லூசான காற்சட்டைகளை அணிவதை ஒரு பாணியாக்கிக் கொள்வது போன்ற ஒரு மனநிலமைதான்.

புலவர், ஒத்த பாலினரைக் காமுறுவோரை விசேட தேவையுடையோர் என்கிறீர்கள்! மிகவும் தவறான கருத்து!  இதற்கு மருத்துவ/விஞ்ஞான ரீதியான ஆதாரங்கள் எவையாவது இருக்கின்றனவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓரின சேர்க்கை என்பது அவரவர் உடல்/உள உணர்ச்சி சார்ந்தது. அதை சொல்லி திருத்த முடியாது. அதை அவர்கள் வழியில் வாழவிட்டு வாழ்த்தி விடுவதுதான் பண்பு. ஓரினச்சேர்க்கைக்கு உந்தப்பட்டவர்கள் இப்போது தமக்கென ஒரு சமுதாயத்தையே உருவாக்கி விட்டார்கள்.

இருந்தாலும்...

இந்த ஓரின சேர்க்கை இயற்கைக்கு மாறானது என்பது என் கருத்து. மனித உயிரினத்தை விட்டு வேறு உயிரினங்கள் ஓரின சேர்க்கையில் ஈடுபடுகின்றனவா? யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Sasi_varnam said:

சந்ததியின் பெருக்கம் / பாலியல் இச்சை இவை தானே ஆண், பெண் இணைவதற்கான முதல் காரணங்கள்.
உலக சனத்தொகை 6.9 பில்லியனை எட்டுகிறது, சனப்பெருக்கம் கொஞ்சம் குறைவதால் உலகத்துக்கு கேடு எதுவும் இல்லை.

மாறாக பூமிக்கு உதவியாகவும் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

ஆண்களும் இப்போ பல இடங்களில் தன்னின சேர்க்கையாளர்களாக வாழ்கிறார்கள் ஜேர்மனியின் முன்னாள் வெளிநாட்டு அமைச்சர் அப்படி வாழ்தவர் அவர் 50....60. வயதிற்குள் இறந்துவிட்டார்

ஜேர்மனியில் இப்போதும் ஓரின சேர்க்கை அரசியல்வாதிகளும் பிரபல்ய ஊடகவியலாளர் இருக்கின்றார்கள். உதாரணத்திற்கு எமது சுகாதார அமைச்சர் மற்றும் எதிர்கட்சியில் இருக்கும் பிரபல பெண்மணி.

எங்கள் சுகாதார அமைச்சரும் அவர் கணவரும்...

Daniel Funke infiziert: Auch Jens Spahns Ehemann positiv auf Corona  getestet - Politik - Stuttgarter Zeitung

 AFD கட்சி தலைவியும் அவரின் மனைவியும். மனைவி சிறிலங்காவை பூர்வீகமாக கொண்டவர். சுவிற்சலாந்தில் வசிக்கின்றார்.

Schäbbigen sein Sohn on Twitter: "Und nach dem Spaziergang mit dem  adoptierten Kind und ihrer Sri Lankischen Lebensgefährtin in der  heimatlichen Schweiz, wird wieder gegen Migranten und #Ehefueralle für ca.  20.000 monatl #

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, குமாரசாமி said:

 

இந்த ஓரின சேர்க்கை இயற்கைக்கு மாறானது என்பது என் கருத்து. மனித உயிரினத்தை விட்டு வேறு உயிரினங்கள் ஓரின சேர்க்கையில் ஈடுபடுகின்றனவா? யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்.

ஆம்.

https://www.nationalgeographic.com/science/article/homosexual-animals-debate

https://www.news-medical.net/news/2006/10/23/1500-animal-species-practice-homosexuality.aspx

 

36 minutes ago, குமாரசாமி said:

ஓரின சேர்க்கை என்பது அவரவர் உடல்/உள உணர்ச்சி சார்ந்தது. அதை சொல்லி திருத்த முடியாது. அதை அவர்கள் வழியில் வாழவிட்டு வாழ்த்தி விடுவதுதான் பண்பு. ஓரினச்சேர்க்கைக்கு உந்தப்பட்டவர்கள் இப்போது தமக்கென ஒரு சமுதாயத்தையே உருவாக்கி விட்டார்கள்.

 

100% சரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, குமாரசாமி said:

இந்த ஓரின சேர்க்கை இயற்கைக்கு மாறானது என்பது என் கருத்து.

உலகில் எதுவுமே இயற்கைக்கு மாறானது இல்லை என நான் நினைகிறேன். ஒரு பொதுவியையும், அதன் விலக்கையும் கொண்டிருப்பதுதான் இயற்கை. எல்லாவறையும் உள்ளடக்கியதே இயற்கை.

எல்லா ஆடுகளும் வெள்ளையாக இருக்கும் போது ஒரு கறுத்த ஆடு அதே மந்தையில் இருக்கும்.

அந்த கறுத்த ஆடு இயற்கைக்கு மாறானது அல்ல. வழமைக்கு மாறானது என்று சொல்லாம். 

இனப்பெருக்கம் செய்யும் உறவுதான் இயற்கையானது என்றால் மலட்டுதன்மை உள்ள, விரும்பி பிள்ளை பெறாது இருக்கும் தம்பதிகளையும் இயற்கைக்கு மாறானவர்கள் என்றல்லவா அழைக்க வேண்டும்?

1 hour ago, புலவர் said:

இயற்கைக்கு மாறான உறவை ஊக்கிவிப்பதால் சமூகத்திற்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை. இந்த உறவில் அவர்கள் உச்ச பட்ச திருப்தியை ஒருபோதும் அடையப் போவதில்லை. சில பாலியல் ஒமோன் களின் குறைபாடுகளால் அவர்களால் சரியானஎதிர்பாலினத்தை ஈர்க்க முடியாத நிலையில் அல்லது திருப்த்திப்படுத்த முடியாத நிலையில் இவ்வாறான உறவுகளை நாடுகிறார்கள்.அவர்கள் உண்மையில் மாற்றுத்திறனாளிகள் என்ற வகைக்குள் வைத்துப் பராமரிக்க வேண்டியவர்கள். மற்றும்படி இது கிழிந்த ஆடைகளை அணிவது. உள்ளாடை தெரியக் கூடியவாறு லூசான காற்சட்டைகளை அணிவதை ஒரு பாணியாக்கிக் கொள்வது போன்ற ஒரு மனநிலமைதான்.

நிச்சயம் தன்பாலின ஈர்ப்பு ஒரு பாணி அல்ல. அது ஒரு நோயுமல்ல ஒரு அங்கவீனமும் அல்ல.

பாலின ஈர்ப்பு என்பது ஒரு spectrum என்கிறார்கள். ஒரு extreme இல் எதிர் பாலினத்தவரால் மட்டும் ஈர்க்கப்படும் நம் போன்றோர். எதிர் extreme இல் தன்பாலின கவர்சி மட்டும் உடையோர். இந்த இரெண்டுக்கும் இடையில் bisexual, pansexual இவ்வாறு பலர்.

மனித பாலின அடையாளம் சூரிய ஒளி போன்றது. பார்க்க வெளிச்சம் மாரி இருந்தாலும் அதற்குள் வயலட் முதல் சிவப்பு வரை நிறங்கள் உள்ளன.

இதை குறிக்கவே ரெயின்போ கொடி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

இனப்பெருக்கம் செய்யும் உறவுதான் இயற்கையானது என்றால் மலட்டுதன்மை உள்ள, விரும்பி பிள்ளை பெறாது இருக்கும் தம்பதிகளையும் இயற்கைக்கு மாறானவர்கள் என்றல்லவா அழைக்க வேண்டும்?

மலட்டுத்தன்மை இயற்கை விதிகளுக்குள் வராது. மலட்டுத்தன்மையோ அல்லது ஆண்மையின்மையோ அது ஒருவித குறைபாடு.

 மலட்டுத்தன்மையும் ஆண்மையின்மையும் ஓரளவு மருத்துவத்தால் நிவர்த்தி செய்யக்கூடிய குறைபாடு.
ஓரின சேர்க்கை அப்படியல்லவே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

மலட்டுத்தன்மை இயற்கை விதிகளுக்குள் வராது. மலட்டுத்தன்மையோ அல்லது ஆண்மையின்மையோ அது ஒருவித குறைபாடு.

 மலட்டுத்தன்மையும் ஆண்மையின்மையும் ஓரளவு மருத்துவத்தால் நிவர்த்தி செய்யக்கூடிய குறைபாடு.
ஓரின சேர்க்கை அப்படியல்லவே

இந்த வகையில் பார்த்தால் எனது ஒப்பீடு பிழைதான். தன்பாலின உந்தலை மருத்துவத்தால் குணமாக்க முடியாது என்பது மிகச்சரி.

ஆனால் மருத்துவத்தால் குணப்படுத்த முடியாத தானாக அமையும் ஒன்றைதானே “இயற்கையானது” என்போம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

கனடாவில் இடம்பெற்ற இந்து சமய முறையிலான தன்பால்ஈர்ப்புடைய( lesbian) பெண்களின் திருமணம்👩‍❤️‍👩

திருமண வாழ்த்துக்கள்💐

Bild

  Bild

Bild

💝

டிவிட்டரிலிருந்து......

Bild

 

புது மண தம்பதியினருக்கு வாழ்த்துக்கள்! 💐💐

திருமண வைபவத்தை இந்து முறைப்படி சிறப்பாக செய்து வைத்த ஐயாவுக்கு பாராட்டுக்கள்! ❤️❤️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நியாயத்தை கதைப்போம் said:

 

புது மண தம்பதியினருக்கு வாழ்த்துக்கள்! 💐💐

திருமண வைபவத்தை இந்து முறைப்படி சிறப்பாக செய்து வைத்த ஐயாவுக்கு பாராட்டுக்கள்! ❤️❤️

நவ நாகரீக உலகு.அதில் ஓரின சேர்க்கையும் அடங்கும்.😷

இங்கு குருக்கள் ஏன் மோனோடை வந்தவர். என்ன மந்திரம் சொன்னவர். ஆகம விதிகளின்படி அது தகுமோ?  ஓரின சேர்க்கைக்கு என்ன  மந்திரம்?
பிளீஸ் ரெல்மீ. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Sasi_varnam said:

உலக சனத்தொகை 6.9 பில்லியனை எட்டுகிறது, சனப்பெருக்கம் கொஞ்சம் குறைவதால் உலகத்துக்கு கேடு எதுவும் இல்லை. 

உலக சனத்தொகை எப்படியாவது போவது இருக்கட்டும் நாம் வெளிநாட்டுக்கு ஓடிவந்திட்டம் இனி ஊர் லெவல்ல எதுக்கு யோசிக்கோனும் உலக லெவல்ல யோசிப்பம் எண்டு சுயநலமா இருக்காம நம்ம ஊரில நம்ம சனத்தொகைய பற்றி யோசிப்பம்… இலங்கையில் தமிழனின் சனத்தொகை அதிகமாக இருந்திருந்தால் இத்தனை லட்சம் சனமும் போராளிகளும் சாகாமல் நோகாமல் ஆட்சி எங்கடை கையில இருந்திருக்கும்.. என்னதான் இந்திய அரசியல் சட்டத்தில் இந்தியகுடிமகன் எவரும் பிரதமர் ஆகலாம் என்று இருந்தாலும்(இலங்கையிலும்தான்) இந்தியாவில் உத்தரப்பிரதேசமும் பீகாரும் மத்தியபிரதேசமும்தான் பிரதமரை தீர்மானிக்கின்றன.. அவர்கள் நலன்பற்றி சிந்திக்கும் வடக்கை சேர்ந்த ஒருவர்தான் பிரதமராக வருகிறார்.. எங்களுக்கும் உதவமுடியவில்லை.. இண்டைக்கு தென்மாநிலங்கள் பூரா தமிழன் இருந்திருந்தால் எண்ணிக்கையில் வடக்கைவிட அதிகம் இருந்திருந்தால் மத்தியில் ஆட்சியை தீர்மானிப்பவன் தமிழன் ஆகி இருப்பான்.. கொள்கைவகுப்பவனும் அவனாக இருந்திருப்பான்.. எங்கட நிலமையும் மாறி இருக்கும்.. முஸ்லீம்கள் எப்படி பெருகுகிறார்கள் சொந்த நாடுகளிலும் போய் இறங்கிய நாடுகளிலும் எண்டு யோசிச்சு பாருங்க.. இண்டைக்கு ஜரோப்பாவில் பலநாடுகளில் அரசியலை தீர்மானிக்கும் சக்தி ஆகிக்கொண்டு வருகிறார்கள்.. நாம ஒருபிள்ளை பாதிப்புள்ளயோட அடுத்தவனுக்கு வகுப்பெடுக்கிறம் உலக சனத்தொகை பற்றி.. எங்கட இனத்துக்கு தொலைநோக்கு பார்வை இல்லை.. இப்ப இந்த நொடி இந்த வாழ்க்கை என் குடும்பம் பிள்ளை குட்டி மட்டும்தான்.. இந்த சமூகத்துக்கு நடுவில தன்னையும் தன்குடும்பத்தையும் பற்றி சிந்திக்காமல் தன் சந்ததி பற்றி சிந்தித்த ஒரு தலைவனும் ஒரு கொஞ்ச போராளிகளும் பிறந்தது அதிசயம்தான்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

உலக சனத்தொகை எப்படியாவது போவது இருக்கட்டும் நாம் வெளிநாட்டுக்கு ஓடிவந்திட்டம் இனி ஊர் லெவல்ல எதுக்கு யோசிக்கோனும் உலக லெவல்ல யோசிப்பம் எண்டு சுயநலமா இருக்காம நம்ம ஊரில நம்ம சனத்தொகைய பற்றி யோசிப்பம்… இலங்கையில் தமிழனின் சனத்தொகை அதிகமாக இருந்திருந்தால் இத்தனை லட்சம் சனமும் போராளிகளும் சாகாமல் நோகாமல் ஆட்சி எங்கடை கையில இருந்திருக்கும்.. என்னதான் இந்திய அரசியல் சட்டத்தில் இந்தியகுடிமகன் எவரும் பிரதமர் ஆகலாம் என்று இருந்தாலும்(இலங்கையிலும்தான்) இந்தியாவில் உத்தரப்பிரதேசமும் பீகாரும் மத்தியபிரதேசமும்தான் பிரதமரை தீர்மானிக்கின்றன.. அவர்கள் நலன்பற்றி சிந்திக்கும் வடக்கை சேர்ந்த ஒருவர்தான் பிரதமராக வருகிறார்.. எங்களுக்கும் உதவமுடியவில்லை.. இண்டைக்கு தென்மாநிலங்கள் பூரா தமிழன் இருந்திருந்தால் எண்ணிக்கையில் வடக்கைவிட அதிகம் இருந்திருந்தால் மத்தியில் ஆட்சியை தீர்மானிப்பவன் தமிழன் ஆகி இருப்பான்.. கொள்கைவகுப்பவனும் அவனாக இருந்திருப்பான்.. எங்கட நிலமையும் மாறி இருக்கும்.. முஸ்லீம்கள் எப்படி பெருகுகிறார்கள் சொந்த நாடுகளிலும் போய் இறங்கிய நாடுகளிலும் எண்டு யோசிச்சு பாருங்க.. இண்டைக்கு ஜரோப்பாவில் பலநாடுகளில் அரசியலை தீர்மானிக்கும் சக்தி ஆகிக்கொண்டு வருகிறார்கள்.. நாம ஒருபிள்ளை பாதிப்புள்ளயோட அடுத்தவனுக்கு வகுப்பெடுக்கிறம் உலக சனத்தொகை பற்றி.. எங்கட இனத்துக்கு தொலைநோக்கு பார்வை இல்லை.. இப்ப இந்த நொடி இந்த வாழ்க்கை என் குடும்பம் பிள்ளை குட்டி மட்டும்தான்.. இந்த சமூகத்துக்கு நடுவில தன்னையும் தன்குடும்பத்தையும் பற்றி சிந்திக்காமல் தன் சந்ததி பற்றி சிந்தித்த ஒரு தலைவனும் ஒரு கொஞ்ச போராளிகளும் பிறந்தது அதிசயம்தான்..

அருமையிலும் அருமையான கருத்துக்கள்.👍🏽


அண்மையில் இங்கு ஒரு திரியில் எமக்கு ஏன் வறுமையிலும் பத்து பிள்ளைகள் வேண்டும் என சொல்ல முற்பட என்னை  உச்சியில் அடித்தே படுக்க வைத்து விட்டார்கள்.

நீங்கள் சொன்ன பீகாரும் மத்திய பிரதேசம் மற்றும் உத்தர பிரதேசங்கள் எல்லாம் வறுமை மாநிலங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

உலக சனத்தொகை எப்படியாவது போவது இருக்கட்டும் நாம் வெளிநாட்டுக்கு ஓடிவந்திட்டம் இனி ஊர் லெவல்ல எதுக்கு யோசிக்கோனும் உலக லெவல்ல யோசிப்பம் எண்டு சுயநலமா இருக்காம நம்ம ஊரில நம்ம சனத்தொகைய பற்றி யோசிப்பம்… இலங்கையில் தமிழனின் சனத்தொகை அதிகமாக இருந்திருந்தால் இத்தனை லட்சம் சனமும் போராளிகளும் சாகாமல் நோகாமல் ஆட்சி எங்கடை கையில இருந்திருக்கும்.. என்னதான் இந்திய அரசியல் சட்டத்தில் இந்தியகுடிமகன் எவரும் பிரதமர் ஆகலாம் என்று இருந்தாலும்(இலங்கையிலும்தான்) இந்தியாவில் உத்தரப்பிரதேசமும் பீகாரும் மத்தியபிரதேசமும்தான் பிரதமரை தீர்மானிக்கின்றன.. அவர்கள் நலன்பற்றி சிந்திக்கும் வடக்கை சேர்ந்த ஒருவர்தான் பிரதமராக வருகிறார்.. எங்களுக்கும் உதவமுடியவில்லை.. இண்டைக்கு தென்மாநிலங்கள் பூரா தமிழன் இருந்திருந்தால் எண்ணிக்கையில் வடக்கைவிட அதிகம் இருந்திருந்தால் மத்தியில் ஆட்சியை தீர்மானிப்பவன் தமிழன் ஆகி இருப்பான்.. கொள்கைவகுப்பவனும் அவனாக இருந்திருப்பான்.. எங்கட நிலமையும் மாறி இருக்கும்.. முஸ்லீம்கள் எப்படி பெருகுகிறார்கள் சொந்த நாடுகளிலும் போய் இறங்கிய நாடுகளிலும் எண்டு யோசிச்சு பாருங்க.. இண்டைக்கு ஜரோப்பாவில் பலநாடுகளில் அரசியலை தீர்மானிக்கும் சக்தி ஆகிக்கொண்டு வருகிறார்கள்.. நாம ஒருபிள்ளை பாதிப்புள்ளயோட அடுத்தவனுக்கு வகுப்பெடுக்கிறம் உலக சனத்தொகை பற்றி.. எங்கட இனத்துக்கு தொலைநோக்கு பார்வை இல்லை.. இப்ப இந்த நொடி இந்த வாழ்க்கை என் குடும்பம் பிள்ளை குட்டி மட்டும்தான்.. இந்த சமூகத்துக்கு நடுவில தன்னையும் தன்குடும்பத்தையும் பற்றி சிந்திக்காமல் தன் சந்ததி பற்றி சிந்தித்த ஒரு தலைவனும் ஒரு கொஞ்ச போராளிகளும் பிறந்தது அதிசயம்தான்..

10 பெறுகிற ஆட்கள் பெறட்டுமேன் ஓணாண்டியார்? யாராவது வலுக்கட்டாயமாக கருத்தடை செய்து விட்டிருக்கிறார்களா? இல்லையெல்லோ? பிறகேன் இவ்வளவு பட படப்பு ஐயா? 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

நவ நாகரீக உலகு.அதில் ஓரின சேர்க்கையும் அடங்கும்.😷

இங்கு குருக்கள் ஏன் மோனோடை வந்தவர். என்ன மந்திரம் சொன்னவர். ஆகம விதிகளின்படி அது தகுமோ?  ஓரின சேர்க்கைக்கு என்ன  மந்திரம்?
பிளீஸ் ரெல்மீ. 🤣

 

புதிய உலக ஒழுங்கு.

இன்னும் சில பத்து வருடங்களில் இவை எல்லாம் சாதாரண விடயங்கள் ஆகிவிடும். உங்கள் பேரன்கள், பேத்திகள், பூட்டன்கள், பூட்டிகள் ஒருவருடைய ஒரு பாலின திருமணத்தை காணும் வாய்ப்பு உங்கள் ஆயுள் காலத்தில் கிடைத்தாலும் ஆச்சரியப்பட ஏதும் இல்லை.

ஒரு ஆணும் ஒரு பெண்ணும் நட்பு ரீதியாக பழகினாலே கண், மூக்கு வைத்து நாலு விதமாய் கதைகள் சொல்லி ஆட்களை பிரித்து வைக்கும் எமது சமூகம் ஒரே பாலினத்தை சேர்ந்த இருவர் இந்து முறைப்படி பகிரங்கமாக திருமணம் செய்வதை வாயை மூடிக்கொண்டு சும்மா பார்த்துக்கொள்ளும் என எதிர்பார்த்தால் அது மடமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

Bild

  Bild

Bild

ஒரு திருமணத்திற்கு....  அந்தப் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்,
மடியில் தூக்கி வைத்து... பல்லுக் கொழுக்கட்டை  தீத்திய.. தாய் மாமன், மாமி... 
இல்லாமல்... என்ன கலியாணம் என்று கேட்கிறேன். 

அவர்களே... இந்தத் திருமணத்தை விரும்பாமல், கலியாணத்துக்கு வரமால்,
தண்ணியை தெளித்து.. விரட்டி விட்டார்கள்.

இவர்களின் கலியாணத்துக்கு வந்தவர்களை, படத்தில் பார்த்தால்,
இவர்களை...  "பப்பா" மரத்தில்.. ஏத்தி விட்டு, 
"கூத்து" பார்க்க வந்தவர்களே தவிர... வாழ்த்த வந்தவர்கள் அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி, ஓர் பாலினத்தில்...  திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசை இருந்திருந்தால்,
இரகசியமாக அந்த திருமணத்தை, செய்து விட்டு போயிருக்கலாம்.

ஏன்... முகநூல் எல்லாம் பதிந்து, அதனை பிரபலமாக்கி...
பெற்றோருக்கும், திருமணம் முடிக்காமல் இருக்கும் சகோதரங்களுக்கும்,  
வெளியே... தலை காட்ட முடியாத, தலை குனிவை ஏற்படுத்த வேண்டும். 😡

*****

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கைக்கு மாறான எதுவுமே தவறானது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களும் ஓர் பாலின திருமணமும்!
---------------------------------------------------
 

இன்று whatsapp, Facebook என பல தளங்களிலும் பேசுபொருளாக இருக்கும் விடயம்தான் Navreet, Kaythusha ஆகிய தமிழர், சீக்கியர் ஆன இருவரின் ஓர்பாலின திருமணம்தான். இது தொடர்பில் சிலர் ஆதரவாக கருத்திடும்வேளை பலரும் இதனைக் கண்டித்தும் கீழ்த்தரமாகவும் கருத்திடுவதையும் படங்களைப் பகிர்வதையும் காணக்கூடியதாகவும் இருக்கிறது. இவ்வாறு கருத்திடுவோர் அதீத  வெறுப்புணர்வை தெளிவாகவே வெளிப்படுத்துகிறார்கள். வேறு சிலர் நடுநிலையாளர்கள் போல நைச்சியமாக பேசி இது எமது கலாச்சாரத்துக்கு கேடு என்று தந்திரமாக சொல்லி முடிக்கிறார்கள். 

உண்மையில் இவர்களில் சிலர் சொல்வதுபோல இவ்வாறான ஓர்பாலின ஈர்ப்பு வெறுப்புக்குரியதா? இது ஒரு நோயா? அல்லது மனப் பிறழ்வா? 

நிச்சயமாக ஓர்பால் ஈர்ப்பு ஒரு நோயல்ல என்பதும் மனப்பிறழ்வு இல்லை என்பதும் விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்ட விடயமாகும். அது இயற்கையானது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. உலகில் 10% மக்கள் (பத்தில் ஒருவர்) இருபாலின உறவுக்கு ஏற்றவர்கள் அல்ல என பல ஆய்வுகள் சொல்கின்றன. 

மனிதர்கள் தவிர்த்து உலகில் நட்சத்திர மீன் தொடங்கி மனித இனம்வரை 1500க்கு மேற்பட்ட உயிரனங்கள் ஓர்பாலின ஈர்புள்ளன என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். Bonobos என்ற குரங்கினம் மனித இனத்துக்கு நெருக்கமான தொடர்புடைய இனமாக விஞ்ஞானிகளால் அடையாளம் காணப்பட்ட ஒரு விலங்கினமாகும். இந்தக் குரங்கினங்களில் ஓர்பாலின பாலியல் நடத்தைகள் பொதுவாக அவதானிக்கப்படுள்ளது. 

இவ்வாறு விலங்கினங்கள் மத்தியில் ஓர்பாலின செயற்பாடுகள் சர்வசாதாரணமாக ஒரு விடயமாகவே உள்ளது. ஆனாலும் எம்மில் சிலர் தேவையற்ற விடயங்களைப் புனிதப்படுத்தியும் பேசவேண்டிய விடயங்களை பேசாப் பொருட்களாக்கியும் ஒரு மாயைக்குள் மற்றவரையும் தள்ள முயற்சித்ததன் விளைவுதான், இன்று மானுடம் எத்தனையோ மாற்றங்களை ஏற்றுக் கொண்ட பின்னரும் எம்மவர்கள் கீழ்த்தரமாகவும் கேவலமாகவும் ஓர் பாலின இணைகளை விமர்சிப்பதற்கு முக்கிய காரணமாக இருக்க வேண்டும்.

இதைவிட, இலங்கையிலும் இந்தியாவிலும் சிறுவர்களை தமது பாலியல் இச்சைக்குப் பலியாக்கும் சில ஆண்களையே ஒருபாலின ஈர்ப்புள்ள ஆண்கள் என எமது சமூகம் தவறாக இனம் கண்டிருந்ததும் இவ்வாறு ஓர் பாலின இணைகள் மீதான வெறுப்புக்கு காரணமாக இருக்கலாம். அதேபோல தமிழ் சினிமாக்களிலும் transgender நபர்களை இழிவுபடுத்தும் வகையில் சித்தரிப்பதும் எமது மக்கள் மத்தியில் இந்தச் சிறுபான்மையினர் மீதான இத்தகைய பார்வைக்கு காரணம் என்றும் கூறலாம். மொத்ததில் இன்னமும் தமிழ் சமூகத்தில் LGBTQ தொடர்பான புரிதல் அடிமட்டத்திலேயே இருக்கிறது.

உலகிற்கே பண்பாடு கற்பித்ததாகவும் மொழி, கலை, கலாச்சாரம், விஞ்ஞானம் எல்லாம் கற்றுத் தந்ததாகவும் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாறு கொண்டதாகவும் சொல்லிக்கொள்ளும் ஒரு   சமூகத்தினால் ஏன் இவ்வாறு இரண்டு பெண்கள் தமது இயல்பான உணர்வின் அடிப்படையில் முடிவெடுப்பதை சகிக்க முடியவில்லை. இவர்களால் ஏன் பொது வெளியில் பண்பாக பேசமுடியவில்லை என்பதுவும் புரியவில்லை. உலகில் 1500க்கு மேற்பட்ட உயிரனங்கள் ஓர்பாலின ஈர்ப்புள்ளனவாக இருந்து வந்துள்ளன என்பதும் உலகின் பல்லினத் தன்மையில் இவையும் ஒரு பகுதி என்பது எப்படித் தெரியாமற் போனது என்பதுவும் புரியவில்லை! 

இந்த விமர்சகர்களில் ஒரு பகுதியினர் கொஞ்சம் நல்லவர்கள். அவர்களுக்கு கனடாவில் இந்த இரண்டும் பெண்கள் ஓர் பாலினத் திருமணம் செய்தது பிரச்சனையில்லையாம். ஆனால் தமிழர்களின் புனிதமான திருமணச் சடங்கை ஐயரை வைத்துச் செய்ததுதானாம் பிரச்னை. இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழகத்தில் இன்னொரு (தேசியக்) கூட்டம் ஆதிக்கப் பிராமணர் புகுத்திய இவ்வாறான திருமணச் சடங்குகள் எமக்குரியவையல்ல என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எனவே இவர்கள் எல்லாம் சேர்ந்து கதைத்துப் பேசி, நாம் இன்று பின்பற்றும் திருமணச் சடங்குகள் தமிழருக்கு உரியவையா இல்லையா என்று ஒரு முடிவெடுத்துவிட்டு ஓர் பாலினத்தவருக்கு அறிவுரை சொல்ல வந்தால் நல்லதல்லவா?  

இன்னும் கொஞ்ச நல்லவர்கள் அதற்கும் மேலே யோசித்திருக்கிறார்கள். இந்தத் தம்பதிகளுக்கு ஒரு வாழ்த்துச் சொல்லிவிட்டு, இது ஒரு ஹோர்மோன் மாற்றத்தால் ஏற்படுவதாகவும் ஆனால் இது ஏற்புடையது இல்லையென்றும் விலாங்குமீன் விளையாட்டுக் காட்டுகிறார்கள். இப்படியான திருமணங்களை ஊக்குவிப்பது எங்கள் இளையவர்களுக்கு தவறான உதாரணமாகி விடுமாம். அதால மனித இனவிருத்தி பாதிக்கப்படுமாம். அதனால் பொதுவெளியில் இவர்கள் திருமணத்தை ஊக்குவிக்கும் வகையில் கருத்துப் பகிர வேண்டாமாம். உண்மையில் இவர்களைவிட நேரடியாக எதிர்ப்பவர்களே பரவாயில்லை என்பதுதான் உண்மை. 

இதில் மிகவும் கவலை தரும் விடயம் என்னவென்றால், இவ்வாறு இந்தத் தம்பதிகளை கீழ்த்தரமாக விமர்சிக்கும் பல தமிழர்கள் இலங்கையின் அல்லது தமிழகத்தின் தமிழ் தேசிய உணர்வுள்ளவர்களாக தமது தனிப்பட்ட பக்கத்தில் காட்டிக் கொள்பவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான். 

அதனால் அவர்களுக்கு விளங்கும் மொழியில் இதனை விளக்கலாம் என்று நினைக்கிறேன். இலங்கையில் பெரும்பான்மையாக உள்ள இனத்தவர் சிறுபான்மைத் தமிழர்கள் வாழும் வடக்குக் கிழக்கில் பௌத்த மத, சிங்கள மொழியை திணிக்க முயல்வதை இலங்கைத் தமிழர்கள் விரும்புவதில்லை. அதேபோல தமிழகத்தில் இந்தி மொழித் திணிப்பை தமிழர்கள் விரும்புவதில்லை. காரணம் இவை இரண்டுமே forcible assimilation என்று சொல்லப்படும் வலிந்து திணிக்கும் செயற்பாடு ஆகும். அதையொத்ததுதான் உலகிலேயே சிறுபான்மையினரான LGBTQS சமூகத்தவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும், யாரைத் திருமணம் செய்யலாம், எந்தச் சடங்கைப் பின்பற்றலாம் என்று உலகில் பெரும்பான்மையினராக இருக்கும் நாம் தீர்மானிக்க நினைப்பதுவும் பேசுவதும் என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
https://m.facebook.com/akkampakkam2/photos/a.102039331303828/416668159840942/?type=3&source=48&refid=52&ref=page_internal&__tn__=EH-R


https://www.facebook.com/101881847986243/posts/416668236507601/?d=n

Link to comment
Share on other sites

29 minutes ago, கிருபன் said:

தமிழர்களும் ஓர் பாலின திருமணமும்!
---------------------------------------------------
 

இன்று whatsapp, Facebook என பல தளங்களிலும் பேசுபொருளாக இருக்கும் விடயம்தான் Navreet, Kaythusha ஆகிய தமிழர், சீக்கியர் ஆன இருவரின் ஓர்பாலின திருமணம்தான். இது தொடர்பில் சிலர் ஆதரவாக கருத்திடும்வேளை பலரும் இதனைக் கண்டித்தும் கீழ்த்தரமாகவும் கருத்திடுவதையும் படங்களைப் பகிர்வதையும் காணக்கூடியதாகவும் இருக்கிறது. இவ்வாறு கருத்திடுவோர் அதீத  வெறுப்புணர்வை தெளிவாகவே வெளிப்படுத்துகிறார்கள். வேறு சிலர் நடுநிலையாளர்கள் போல நைச்சியமாக பேசி இது எமது கலாச்சாரத்துக்கு கேடு என்று தந்திரமாக சொல்லி முடிக்கிறார்கள். 

உண்மையில் இவர்களில் சிலர் சொல்வதுபோல இவ்வாறான ஓர்பாலின ஈர்ப்பு வெறுப்புக்குரியதா? இது ஒரு நோயா? அல்லது மனப் பிறழ்வா? 

நிச்சயமாக ஓர்பால் ஈர்ப்பு ஒரு நோயல்ல என்பதும் மனப்பிறழ்வு இல்லை என்பதும் விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்ட விடயமாகும். அது இயற்கையானது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. உலகில் 10% மக்கள் (பத்தில் ஒருவர்) இருபாலின உறவுக்கு ஏற்றவர்கள் அல்ல என பல ஆய்வுகள் சொல்கின்றன. 

மனிதர்கள் தவிர்த்து உலகில் நட்சத்திர மீன் தொடங்கி மனித இனம்வரை 1500க்கு மேற்பட்ட உயிரனங்கள் ஓர்பாலின ஈர்புள்ளன என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். Bonobos என்ற குரங்கினம் மனித இனத்துக்கு நெருக்கமான தொடர்புடைய இனமாக விஞ்ஞானிகளால் அடையாளம் காணப்பட்ட ஒரு விலங்கினமாகும். இந்தக் குரங்கினங்களில் ஓர்பாலின பாலியல் நடத்தைகள் பொதுவாக அவதானிக்கப்படுள்ளது. 

இவ்வாறு விலங்கினங்கள் மத்தியில் ஓர்பாலின செயற்பாடுகள் சர்வசாதாரணமாக ஒரு விடயமாகவே உள்ளது. ஆனாலும் எம்மில் சிலர் தேவையற்ற விடயங்களைப் புனிதப்படுத்தியும் பேசவேண்டிய விடயங்களை பேசாப் பொருட்களாக்கியும் ஒரு மாயைக்குள் மற்றவரையும் தள்ள முயற்சித்ததன் விளைவுதான், இன்று மானுடம் எத்தனையோ மாற்றங்களை ஏற்றுக் கொண்ட பின்னரும் எம்மவர்கள் கீழ்த்தரமாகவும் கேவலமாகவும் ஓர் பாலின இணைகளை விமர்சிப்பதற்கு முக்கிய காரணமாக இருக்க வேண்டும்.

இதைவிட, இலங்கையிலும் இந்தியாவிலும் சிறுவர்களை தமது பாலியல் இச்சைக்குப் பலியாக்கும் சில ஆண்களையே ஒருபாலின ஈர்ப்புள்ள ஆண்கள் என எமது சமூகம் தவறாக இனம் கண்டிருந்ததும் இவ்வாறு ஓர் பாலின இணைகள் மீதான வெறுப்புக்கு காரணமாக இருக்கலாம். அதேபோல தமிழ் சினிமாக்களிலும் transgender நபர்களை இழிவுபடுத்தும் வகையில் சித்தரிப்பதும் எமது மக்கள் மத்தியில் இந்தச் சிறுபான்மையினர் மீதான இத்தகைய பார்வைக்கு காரணம் என்றும் கூறலாம். மொத்ததில் இன்னமும் தமிழ் சமூகத்தில் LGBTQ தொடர்பான புரிதல் அடிமட்டத்திலேயே இருக்கிறது.

உலகிற்கே பண்பாடு கற்பித்ததாகவும் மொழி, கலை, கலாச்சாரம், விஞ்ஞானம் எல்லாம் கற்றுத் தந்ததாகவும் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாறு கொண்டதாகவும் சொல்லிக்கொள்ளும் ஒரு   சமூகத்தினால் ஏன் இவ்வாறு இரண்டு பெண்கள் தமது இயல்பான உணர்வின் அடிப்படையில் முடிவெடுப்பதை சகிக்க முடியவில்லை. இவர்களால் ஏன் பொது வெளியில் பண்பாக பேசமுடியவில்லை என்பதுவும் புரியவில்லை. உலகில் 1500க்கு மேற்பட்ட உயிரனங்கள் ஓர்பாலின ஈர்ப்புள்ளனவாக இருந்து வந்துள்ளன என்பதும் உலகின் பல்லினத் தன்மையில் இவையும் ஒரு பகுதி என்பது எப்படித் தெரியாமற் போனது என்பதுவும் புரியவில்லை! 

இந்த விமர்சகர்களில் ஒரு பகுதியினர் கொஞ்சம் நல்லவர்கள். அவர்களுக்கு கனடாவில் இந்த இரண்டும் பெண்கள் ஓர் பாலினத் திருமணம் செய்தது பிரச்சனையில்லையாம். ஆனால் தமிழர்களின் புனிதமான திருமணச் சடங்கை ஐயரை வைத்துச் செய்ததுதானாம் பிரச்னை. இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழகத்தில் இன்னொரு (தேசியக்) கூட்டம் ஆதிக்கப் பிராமணர் புகுத்திய இவ்வாறான திருமணச் சடங்குகள் எமக்குரியவையல்ல என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எனவே இவர்கள் எல்லாம் சேர்ந்து கதைத்துப் பேசி, நாம் இன்று பின்பற்றும் திருமணச் சடங்குகள் தமிழருக்கு உரியவையா இல்லையா என்று ஒரு முடிவெடுத்துவிட்டு ஓர் பாலினத்தவருக்கு அறிவுரை சொல்ல வந்தால் நல்லதல்லவா?  

இன்னும் கொஞ்ச நல்லவர்கள் அதற்கும் மேலே யோசித்திருக்கிறார்கள். இந்தத் தம்பதிகளுக்கு ஒரு வாழ்த்துச் சொல்லிவிட்டு, இது ஒரு ஹோர்மோன் மாற்றத்தால் ஏற்படுவதாகவும் ஆனால் இது ஏற்புடையது இல்லையென்றும் விலாங்குமீன் விளையாட்டுக் காட்டுகிறார்கள். இப்படியான திருமணங்களை ஊக்குவிப்பது எங்கள் இளையவர்களுக்கு தவறான உதாரணமாகி விடுமாம். அதால மனித இனவிருத்தி பாதிக்கப்படுமாம். அதனால் பொதுவெளியில் இவர்கள் திருமணத்தை ஊக்குவிக்கும் வகையில் கருத்துப் பகிர வேண்டாமாம். உண்மையில் இவர்களைவிட நேரடியாக எதிர்ப்பவர்களே பரவாயில்லை என்பதுதான் உண்மை. 

இதில் மிகவும் கவலை தரும் விடயம் என்னவென்றால், இவ்வாறு இந்தத் தம்பதிகளை கீழ்த்தரமாக விமர்சிக்கும் பல தமிழர்கள் இலங்கையின் அல்லது தமிழகத்தின் தமிழ் தேசிய உணர்வுள்ளவர்களாக தமது தனிப்பட்ட பக்கத்தில் காட்டிக் கொள்பவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான். 

அதனால் அவர்களுக்கு விளங்கும் மொழியில் இதனை விளக்கலாம் என்று நினைக்கிறேன். இலங்கையில் பெரும்பான்மையாக உள்ள இனத்தவர் சிறுபான்மைத் தமிழர்கள் வாழும் வடக்குக் கிழக்கில் பௌத்த மத, சிங்கள மொழியை திணிக்க முயல்வதை இலங்கைத் தமிழர்கள் விரும்புவதில்லை. அதேபோல தமிழகத்தில் இந்தி மொழித் திணிப்பை தமிழர்கள் விரும்புவதில்லை. காரணம் இவை இரண்டுமே forcible assimilation என்று சொல்லப்படும் வலிந்து திணிக்கும் செயற்பாடு ஆகும். அதையொத்ததுதான் உலகிலேயே சிறுபான்மையினரான LGBTQS சமூகத்தவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும், யாரைத் திருமணம் செய்யலாம், எந்தச் சடங்கைப் பின்பற்றலாம் என்று உலகில் பெரும்பான்மையினராக இருக்கும் நாம் தீர்மானிக்க நினைப்பதுவும் பேசுவதும் என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
https://m.facebook.com/akkampakkam2/photos/a.102039331303828/416668159840942/?type=3&source=48&refid=52&ref=page_internal&__tn__=EH-R


https://www.facebook.com/101881847986243/posts/416668236507601/?d=n

சிறப்பான பதிவு. இணைப்புக்கு நன்றி கிருபன். அந்த இருவரின் விருப்பங்களை மதித்து அவர்களுக்கு வாழ்த்து சொல்வோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விளக்கத்தை எழுதியவருக்கும் இணைத்த @கிருபன் உங்களுக்கும் நன்றிகள்.. 

இன்னுமொரு விடயம், அடிக்கடி இஸ்லாமியர்களை உதாரணம் காட்டுவதால், இஸ்லாமியர்களுக்கும் எங்களுக்கு எவ்வளவு வித்தியாசங்கள் இருக்கிறது என்பது ஒரு புறம் இருந்தாலும் அவர்களைப்போல தனியே பெண்களை விளைநிலங்களாக மட்டும் எங்களது குடும்பங்களில் பார்ப்போமா? முடியாது என நம்புகிறேன்..

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

இந்த வகையில் பார்த்தால் எனது ஒப்பீடு பிழைதான். தன்பாலின உந்தலை மருத்துவத்தால் குணமாக்க முடியாது என்பது மிகச்சரி.

ஆனால் மருத்துவத்தால் குணப்படுத்த முடியாத தானாக அமையும் ஒன்றைதானே “இயற்கையானது” என்போம்?

ஆம் அப்போ தனபாலின உந்துதல் இயற்கையானது இந்த திருமணச்சடங்கு தான் செயற்கையானது இரண்டுமே பெண்கள் ஏன் ஒருவரை மாப்பிள்ளை என்று அழைக்க வேண்டும் தோழனுக்குப் பதில் தோழியை நிறுத்தியிருக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓர் பாலினக் கூட்டு என்றாலும் அதில் male part & female part என்று உள்ளது.

அதேவேளை இருவரும் மாற்றியும் கொள்ளலாம்

வெள்ளைச் சீலையுடன் உள்ளவர் male part என்றபடியால் (?) 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.