Jump to content

கனடாவில் இடம்பெற்ற இந்து சமய முறையிலான தன்பால் ஈர்ப்புடைய ( lesbian) பெண்களின் திருமணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Justin said:

குடும்பத்திற்குள் நடக்கும் பாலுறவான incest ஐ சட்டம் தடுக்கப் பல நியாயமான காரணங்கள் உண்டு. குறைபாடுள்ள பிள்ளை பிறப்பதைத் தடுப்பது அதிலொன்றாக இருக்கலாம்! ஆனால், சிறுவர்களை/சிறுமியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்யாமல் தடுப்பதே மிகப் பெரிய காரணமாக இருக்கக் கூடும் என நினைக்கிறேன். Incest ஐ சட்டம் போட்டுத் தடுக்கா விட்டால், தங்கள் மகளையே புணர முயலும் மிருகத் தனமான தந்தையர் எல்லா சமூகத்திலும் இருக்கிறார்கள்!

ஒரு பாலுறவு என்பது இரு வளர்ந்தோர் பரஸ்பர சம்மதத்தோடு உருவாக்கும் உறவு. இங்கெ சம்மதம் (consent) என்பது முக்கியமான சொல்! ஒருவர் குழந்தையைப் பாலியல் ரீதியில் தொட்டால், அங்கே சம்மதம் கிடையாது! ஒரு மிருகத்தைப் புணர்ந்தால் அங்கே சம்மதம் கிடையாது! எனவே consent இல்லாத உறவு வல்லுறவு - சட்ட விரோதம்!

அண்ணா,

மேலே எழுதிய உறவு சட்டத்தை விட்டு விடுவோம் என்றார். அதனால்தான் consent போன்ற விடயங்களை விட்டு விட்டு law making ஐ பற்றி எழுதினேன். 

எல்லா சட்டமுமே சமூகம் தகாதது என கருதுபவற்றினயே குற்றம் ஆக்கிறது. அதன் பின்னால் இருக்கும் காரணங்களை ஆராயாமால் விட்டாலும்.

ஒரு காலத்தில் ஒரு ஆண் 12 வயது பெண்ணை கல்யாணம் முடிப்பது சட்டபூர்வம் ஆனால் அவர் இன்னொரு ஆணை மணம் முடிக்கவியலாது. இப்போ தலைகீழ். 

என்ன காரணம் ? சமூகத்தின் பார்வைமாற்றம். 

அதேபோல் இந்த உலகில் சகோதரியை மணம் முடிப்பது ஏற்கப்பட்டும் உள்ளது (கிரேக்கர், ரோமர்). மேலே நெடுக்ஸ் polygamy பற்றி எழுதுகிறார்…பாஞ்சாலி செய்தது polyandry ஒரு பெண் பலதாரம் முடிப்பது. ஆங்கிலேயர் காலத்தில் கூட சில தமிழ்நாட்டு குடிகளிடம் இந்த வழக்கம் இருந்துள்ளது.

ஆகவே சட்டத்தின் அடிப்படை சமூக தார்மீக உணர்வுதான்.

இங்கே என்ன பிரச்சினை என்றால் இந்த கல்யாணத்தை எதிர்க்கும் ஆட்கள் அவர்கள் வாழும் சமுதாயத்தின் தார்மீக உணர்வுக்கு மாறுபட்டு இருக்கிறார்கள். 

அவர்கள் வாழ்வது ஜேர்மன், பிரான்ஸ், லண்டன், கனடா சமுகத்தில். ஆனால் அவர்களின் தார்மீக உணர்வு காபூலில்🤣

ஆகவே தாம் வாழும் நாட்டின் சமூதாய தார்மீக உணர்வையும், சட்டத்தையும் ஏற்கமுடியாமல் அல்லாடுகிறார்கள்.

 

Link to comment
Share on other sites

  • Replies 386
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

ஓரின சேர்க்கை எல்லா உயினங்களிலும் உள்ளது என வாதிட்டு சமாதானம் சொன்ன விண்ணர்களே!
ஜஸ்ரின் சொன்ன இந்த கருத்தைப்பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன?

அண்ணா,

விளக்கம் மேலே. சட்டம் உருவாவது சமூகத்தின் கண்ணோட்டத்தில் இருந்துதான். 

மிருகங்கள் செய்வதால் மனிதரும் ஓரினசேர்க்கை செய்யுங்கள் என எங்கேயும் யாரும் எழுதவில்லை. இது இயற்கையானது என்றே சொல்லப்பட்டது. அதே போல் இன்செஸ்டும் இயற்கையானதே. 

சிங்கம் மானை வேட்டை ஆடுவதும் இயற்கையானதே. அதுக்காக விருப்படி கொலை செய்யுங்கள் என்பதல்ல அர்த்தம்.

இயற்கையானது எல்லாவற்றையும் செய்ய வேண்டியதில்லை:

மனித சமூகம் நாகரீகம் அடைய, அடைய சில சட்டங்களை, தனது தார்மீக விழுமியங்களுக்கு ஏற்ப சட்டமியற்றி, இன்செஸ்ட் போன்றவற்றை தடுக்கிறது. 

ஒரு காலத்தில் தன்னின சேர்க்கையை தடுத்தது, இப்போ இரு சம்மதிக்கும் இரு வயது வந்தவர்களுக்குரிய உறவில் சமூக பாதகம் ஏதும் இல்லை என்று கருதி தடுக்காமல் விடுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

 

இங்கே என்ன பிரச்சினை என்றால் இந்த கல்யாணத்தை எதிர்க்கும் ஆட்கள் அவர்கள் வாழும் சமுதாயத்தின் தார்மீக உணர்வுக்கு மாறுபட்டு இருக்கிறார்கள். 

அவர்கள் வாழ்வது ஜேர்மன், பிரான்ஸ், லண்டன், கனடா சமுகத்தில். ஆனால் அவர்களின் தார்மீக உணர்வு காபூலில்🤣

ஆகவே தாம் வாழும் நாட்டின் சமூதாய தார்மீக உணர்வையும், சட்டத்தையும் ஏற்கமுடியாமல் அல்லாடுகிறார்கள்.

 

எங்களை விடுங்கள் சகோ

இந்த  நாடுகளில் உள்ள எத்தனை வீதம் மக்கள் இதை  ஊக்குவிக்கின்றனர்???

பாராட்டுகின்றனர்??

தங்களது  பிள்ளைகளுக்கும் சிபாரிசு செய்து உற்சாகப்படுத்துகின்றனர்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, goshan_che said:

இங்கே என்ன பிரச்சினை என்றால் இந்த கல்யாணத்தை எதிர்க்கும் ஆட்கள் அவர்கள் வாழும் சமுதாயத்தின் தார்மீக உணர்வுக்கு மாறுபட்டு இருக்கிறார்கள். 

அவர்கள் வாழ்வது ஜேர்மன், பிரான்ஸ், லண்டன், கனடா சமுகத்தில். ஆனால் அவர்களின் தார்மீக உணர்வு காபூலில்🤣

ஆகவே தாம் வாழும் நாட்டின் சமூதாய தார்மீக உணர்வையும், சட்டத்தையும் ஏற்கமுடியாமல் அல்லாடுகிறார்கள்.

கோசான்….  எங்களுடைய  உணர்வு எல்லாம்… காபூலில் 😲  என்று சொல்லி, எங்களை அவமானப் படுத்தி விட்டார். 🧐 😥

இதற்கு… ஜேர்மன், பிரான்ஸ், லண்டன், கனடா வாழ்… புலம் பெயர் தமிழர்களின் சார்பில்…. மிக மிக,  வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கின்றேன். 🥸 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

நீங்கள் சொன்ன மாதிரி அவர்களுக்கு வரும் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாது தான் ...நான் சொல்ல வந்தது இப்படி வெளிப்படையாய் எல்லோரும் வாழ்த்துக்களையும், ஆதரவுனை தெரிவித்தால் இவர்கள் போல் இருப்பவர் தைரியமாய் திருமணம் செய்ய வெளிவிக்கிடுவார்கள் ...நாங்கள் காணாத மாதிரி இருந்தால் அவர்களுக்கு தயக்கம் வரும்.
இங்கு வெளிப்படையாய் இத் திருமணத்திற்கு ஆதரவு தெரிவித்த நிழலி,கிருபன் , நீங்கள் உட்பட மனதிற்குள் உங்கள் பிள்ளைகள் இப்படி செய்ய கூடாது என்ற பயத்திலேயே வாழ்கிறீர்கள்.சொல்லிக் கொடுத்து தான் வளர்ப்பீர்கள் .தற்செயலாய் அவர்கள் செய்திட்டாலும் என்ற பயத்தில் முன்னெச்செரிக்கையாய் ஆதரவு கொடுக்கிறீர்கள் . அவ்வளவு தான் மனப்பூர்வமாய் எத்தனை பேர் இந்த திருமணத்திற்கு ஆதரவு?...இந்த திருமணத்திற்கு போனவர்களே இவர்களை மனப் பூர்வமாய் வாழ்த்தி இருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா?
நான் படித்தவன் ,முற்போக்கான சிந்தனைவாதி என்று தம்மை சொல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் இதற்கு ஆதரவு கொடுக்கிறார்கள் 

இப்படி எழுதுவதற்கு மன்னிக்க வேண்டும் அக்கா,

நீங்கள் எழுதியது நகைபுக்குரிய கருத்து.

1. நான் முன்பே விசுகு அண்ணாவுக்கு பதிலாக எழுதி விட்டேன். நான் சார்ந்தோருக்கு தன்பாலின ஈர்ப்பு இருக்கிறது என தெரியவந்தால் அதில் ஒரு பிழையும் இருப்பதாக நான் கருதமாட்டேன்.  “சரி என்ன செய்வது, நீ என்னை போல இல்லை. நீ ஒரு பாலியல் சிறுபான்மை. கடவுளோ/ இயற்கையோ உன்னை அப்படி படைத்துவிட்டது”. “இதில் தப்பேதும் இல்லை”. இதுவே என் நிலைப்பாடாக இருக்க்கும்.

2. ஆனால் நீங்கள் சொல்வது போல பயம் இருக்கும். “வாறான் பார் க**%காரன்” “மகன் க+**%யாம்” என்று இந்த சமூகம் எம்மை நித்திய சித்திரவதை செய்யும் என்பதும் எனக்கு தெரியும். ஆகவே ஒன்றில் இதை மறைத்து வாழு (be discreet) அல்லது நீ வெளிபடையாகத்தான் வாழ வேண்டும் என்றால் வா ஏதாவதொரு எம் சமூகம் இல்லாத நகரத்தில் போய் வாழுவோம் என்றே நான் கூறுவேன். அதற்கும் முடியாது லண்டனில்தான் வாழ்வேன், ஆனால் வெளிப்படையாக வாழ்வேன் என்றால் - வேறு வழியில்லாமல் ஏற்று கொள்ளவேண்டியதுதான்.

3. அப்போ ஏன் வாழ்த்து? ஏனென்றால் அவர்கள் என்னை விட தைரியசாலிகளாக இருக்கிறர்கள். இப்படி நடக்கும் போது அது சமுகத்தில் ஏற்று கொள்ளபடும் போது. இப்படி விவாதிக்கப்படும் போது - இது புலம் பெயர் தமிழ் சமுகத்யில் ஒரு சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தலாம். குறிப்பாக அந்த ஐயரின் செயல். ஆகவே அடுத்து வரும் தலைமுறையில் வரும் தன்பாலின ஈர்ப்பு உள்ள பிள்ளைகளாவது, தமது வெள்ளைகார பிள்ளைகள் போல சுதந்திரம்மாக இருக்க, பெற்றோர் பயந்து, நொந்து நூடில்ஸ் ஆகாமல் இருக்க, வாழும் பிணங்களாக மாறாமல் இருக்க இவ்வாறான செயல்கள் வழிகோலக்கூடும். இதில் இவர்களிருவரின் பெற்றோரின் நிலைப்பாடு என்ன என தெரியவில்லை. 

என் போல இங்கே எழுதியோரின் கருத்துகள் அவர்களுக்கும் (வாசித்த்தால்) நம்பிக்கையூட்டும் என நம்புகிறேன்.

இப்படியாக கருத்து எழுது ஒரு தமிழ் பெற்றார்தன்னும் தமது தன்பாலினைஈர்ப்பு பிள்ளையை முழுமையாக புரிந்துகொண்டால், அல்லது ஒரு பிள்ளையாவது தற்கொலை முடிவுக்கு போகாமல் விட்டால் - அது வெற்றிதானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

கோசான்….  எங்களுடைய  உணர்வு எல்லாம்… காபூலில் என்று சொல்லி, எங்களை அவமானப் படுத்தி விட்டார். 🧐

இதற்கு ஜேர்மன், பிரான்ஸ், லண்டன், கனடா வாழ் புலம் பெயர் தமிழர்களின் சார்பில்…. மிக மிக,  வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கின்றேன். 🥸

😂 கு சா அண்ணை கஸ்டபட்டு திறந்த திரியை அணையவிடல் தகுமோ😂.

யாரையும் அவமானப்படுத்தும் நோக்கம் இல்லை - அப்படி இருந்தால் மன்னிகவும்.

ஆனால் உண்மை இதுதானே? தன்பாலின கவர்ச்சி உள்ளவர்களை ஒதுக்கும் சட்டங்கள் இருந்தால் ஐரோப்பிய யூனியனில் சேர முடியாது என நினைக்கிறேன் (ஆராயவில்லை). ஜேர்மன் நாடு பற்றியும் அதன் அருமையான அரசாட்சி பற்றியும் அங்கே வாழும் எல்லாரும் எழுதுகிறீர்கள்.

பிரான்சை பற்றியும் அப்படித்தான். இங்கிலாந்துகாரருக்கு ஒரு தனி கர்வம், கனடா, யு எஸ் காரரும் அப்படிதான்.

பிழையில்லை ஆனால் இந்த சமூகங்களை எல்லாம் உயரத்தில் வைத்திருப்பதில் ஒரு பெரும் காரணி சகிப்புத்தன்மை. 

ஒரு வெளிநாட்டவராக, ethnic minorities ஆக இந்த சகிப்புதன்மையின் முழு பலனையும் அனுபவித்தபடி, sexual minorities மீது மட்டும் கடுப்பை காட்டுவது,

ஐரோப்பாவில் வசிக்கவும் வேண்டும், ஷரியா சட்டமும் வேண்டும் என்று கேட்போரின் மனநிலையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

😂 கு சா அண்ணை கஸ்டபட்டு திறந்த திரியை அணையவிடல் தகுமோ😂.

யாரையும் அவமானப்படுத்தும் நோக்கம் இல்லை - அப்படி இருந்தால் மன்னிகவும்.

ஆனால் உண்மை இதுதானே? தன்பாலின கவர்ச்சி உள்ளவர்களை ஒதுக்கும் சட்டங்கள் இருந்தால் ஐரோப்பிய யூனியனில் சேர முடியாது என நினைக்கிறேன் (ஆராயவில்லை). ஜேர்மன் நாடு பற்றியும் அதன் அருமையான அரசாட்சி பற்றியும் அங்கே வாழும் எல்லாரும் எழுதுகிறீர்கள்.

பிரான்சை பற்றியும் அப்படித்தான். இங்கிலாந்துகாரருக்கு ஒரு தனி கர்வம், கனடா, யு எஸ் காரரும் அப்படிதான்.

பிழையில்லை ஆனால் இந்த சமூகங்களை எல்லாம் உயரத்தில் வைத்திருப்பதில் ஒரு பெரும் காரணி சகிப்புத்தன்மை. 

ஒரு வெளிநாட்டவராக, ethnic minorities ஆக இந்த சகிப்புதன்மையின் முழு பலனையும் அனுபவித்தபடி, sexual minorities மீது மட்டும் கடுப்பை காட்டுவது,

ஐரோப்பாவில் வசிக்கவும் வேண்டும், ஷரியா சட்டமும் வேண்டும் என்று கேட்போரின் மனநிலையே.

கோசான்…. நீங்கள், குமாரசாமி அண்ணையின் திரிக்கு, பெற்றோல் ஊத்துகிறீர்கள் போலுள்ளது. 😂 🤣

லண்டனில்…. பெற்றோல் தட்டுப்பாடு என்று சொன்னார்கள்.

நீங்கள்… இங்கு, பெற்றோலை… தண்ணி மாதிரி இறைக்கிறீர்கள். 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, விசுகு said:

 

எங்களை விடுங்கள் சகோ

இந்த  நாடுகளில் உள்ள எத்தனை வீதம் மக்கள் இதை  ஊக்குவிக்கின்றனர்???

பாராட்டுகின்றனர்??

தங்களது  பிள்ளைகளுக்கும் சிபாரிசு செய்து உற்சாகப்படுத்துகின்றனர்???

இதை பற்றிய புள்ளிவிபரம் என்னிடம் இல்லை. ஆனால் இங்கே யூகேயில் இப்படி ஒரு ஜோடி திருமணம் முடித்தால் - அது இவ்வளவு பேசு பொருளாகாகாது, இதற்கு தமிழ் சமூகம் காட்டிய எதிர்ப்பில் 1% கூட இராது. 

அவர்களை பொறுத்தவரை இரெண்டு தன்பாலினத்வர் கல்யாணம் முடிப்பது பெரிய மேட்டர் இல்லை. 

எல்லா கல்யாணத்துக்கும் வாழ்த்து சொல்வோம் அல்லவா? அப்படி இதுக்கும் சொல்வார்கள். இங்கேயும் நான் உட்பட பலர் ஆரம்பத்தில் வெறும் வாழ்த்து மட்டுமே சொன்னோம். 

 

27 minutes ago, விசுகு said:

தங்களது  பிள்ளைகளுக்கும் சிபாரிசு செய்து உற்சாகப்படுத்துகின்றனர்???

என்ன கேள்வியண்ணை இது. இங்கே யார் பிள்ளைகளுக்கு சிபாரிசு செய்ய சொன்னார்கள். 

இது சிபாரிசு செய்ய கூடிய விடயமல்ல. அவர்கள் தாமாகவே இதுதான் நாம் என்று கண்டு பிடிப்பார்கள்.

எம்மை போல என்றால் - நோ பிராப்ளம்.

தன்னினசேர்க்கையாளர் என்றால் - நோ பிராப்ளம் - but we need a plan on how to deal with our people.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

அதை பெரியார் வேறு விதமாக சொன்னார்.

உனக்கு காமம் அதிகரித்து விட்டால் அதை தாயிடமோ அல்லது சகோதரியிடமோ தீர்த்துக்கொள் என்கிறார்.

அண்ணை,

இதுக்கு ஒரு ஆதாரத்தை தாங்கோ. இப்படி சொன்னாரா? என்ன context இல் இதை சொன்னார் என அறியவேண்டும். 

மேலே நான் “இன்செஸ்ட் இயற்கையானது” என எழுதியுள்ளேன். இதை மட்டும் தனியாக எடுத்து கோஷான் இன்செஸ்டை ஆதரிக்கிறார் எண்டு அடிச்சும் விடலாம்.

ஏற்கனவே சங்கிகளும், தம்பிகளும் பெரியார் எழுத்து சீர்திருத்தத்தை வலியுறுத்தி சொன்னதை - தமிழை இழிவுபடுதினார் என கையிறு திரித்துகொண்டிருக்கிறார்கள்.

ஆதாரம் காட்ட முடியாவிட்டால் தயவு செய்து அந்த கருத்தை நீக்கிவிடுங்கள் 🙏🏾

11 hours ago, தமிழ் சிறி said:

திராவிட பெரியாரா… இப்படி சொன்னவர்?

அவரையா… தமிழ் நாட்டில், சில கட்சிகள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள்.

கேட்கவே… அருவருப்பாக உள்ளது. 

 

12 minutes ago, தமிழ் சிறி said:

கோசான்…. நீங்கள், குமாரசாமி அண்ணையின் திரிக்கு, பெற்றோல் ஊத்துகிறீர்கள் போலுள்ளது. 😂🤣

லண்டனில்…. பெற்றோல் தட்டுப்பாடு என்று சொன்னார்கள்.

நீங்கள்… இங்கு, பெற்றோலை… தண்ணி மாதிரி இறைக்கிறீர்கள். 😃

🤣 தம்பியுள்ளான் சண்டைக்கு அஞ்சான்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

நான் படித்தவன் ,முற்போக்கான சிந்தனைவாதி என்று தம்மை சொல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் இதற்கு ஆதரவு கொடுக்கிறார்கள் 

இங்கே படித்தவன் முற்போக்குவாதி என்பதை காட்டிக்கொள்வதை விட சக மனிதர்களாக அவர்களையும் பார்க்கும் பக்குவம் உள்ளது..காலம் மாற மாற அவர்களை பார்க்கும் சமூகத்தின் கண்ணோட்டமும் மாறுகிறது.. அவர்களும் எங்களைப்போன்ற மனிதர்கள் என்ற எண்ணம் ஏற்படுகிறது.. நாங்கள் குடும்பம், உறவுகள், காதல், நட்பு இத்யாதிகள் என்பவற்றை எவ்வளவு தூரம் அனுபவிக்க உரிமை உள்ளதோ அதேயளவு உரிமை அவர்களுக்கும் உண்டு.. அவர்கள் என்ன வேற்றுகிரகவாசிகளா? இல்லையே அவர்களும் மனிதர்கள் தான்.. 

இரண்டாவது- நாங்கள் இதை காணாத மாதிரி இருந்தால் அவர்கள் இல்லாமல் போய்விடுவார்களா? ஏன் அவர்களுக்கான வாழ்க்கையை சட்டரீதியாகவும் தங்களுக்கு பிடித்த சமயரீதியாகவும் வாழமுடியாதா? இது என்ன வகையான நியாயம்? 

மூன்றாவது- இங்கே வாழ்த்து தெரிவித்தவர்களோ சரி, திருமணத்திற்கு போனவர்களும் சரி அவர்களும் எங்களைப்போன்ற சக மனிதர்களுக்கு உதவும் மனப்பான்மையுடனும் போயிருக்க கூடும் அல்லது உண்மையிலே வாழ்த்திகூட இருக்கலாம்..அங்கே போனவர்கள் எந்த மனநிலையில் போனார்கள் என்பதை விட போயிருக்கிறார்கள்.. 

என்னைப்பொறுத்தவரை, அவர்கள் தங்கள் வாழ்க்கையை திருப்தியுடன் வாழ்வார்கள்.. பெற்றோரின் திருப்திக்காக, சமூகம் ஏதாவது சொல்லும் என்று பயத்தில், கோழையாக, பிடிக்காத வாழ்க்கையை வாழ்ந்து நான்கு பேரின் வாழ்க்கையை பாழாக்குவதைவிட, இவர்கள் தங்கள் வாழ்க்கையை திருப்தியுடன்தான் வாழ்வார்கள்.. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

 

🤣 தம்பியுள்ளான் சண்டைக்கு அஞ்சான்🤣

லண்டன்… பெற்றோல்  நிரப்பு நிலையத்தில், சினேகிதர்கள் இருக்கிறார்கள் போலுள்ளது. 🤣😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

இதை பற்றிய புள்ளிவிபரம் என்னிடம் இல்லை. ஆனால் இங்கே யூகேயில் இப்படி ஒரு ஜோடி திருமணம் முடித்தால் - அது இவ்வளவு பேசு பொருளாகாகாது, இதற்கு தமிழ் சமூகம் காட்டிய எதிர்ப்பில் 1% கூட இராது. 

அவர்களை பொறுத்தவரை இரெண்டு தன்பாலினத்வர் கல்யாணம் முடிப்பது பெரிய மேட்டர் இல்லை. 

எல்லா கல்யாணத்துக்கும் வாழ்த்து சொல்வோம் அல்லவா? அப்படி இதுக்கும் சொல்வார்கள். இங்கேயும் நான் உட்பட பலர் ஆரம்பத்தில் வெறும் வாழ்த்து மட்டுமே சொன்னோம். 

 

என்ன கேள்வியண்ணை இது. இங்கே யார் பிள்ளைகளுக்கு சிபாரிசு செய்ய சொன்னார்கள். 

இது சிபாரிசு செய்ய கூடிய விடயமல்ல. அவர்கள் தாமாகவே இதுதான் நாம் என்று கண்டு பிடிப்பார்கள்.

எம்மை போல என்றால் - நோ பிராப்ளம்.

தன்னினசேர்க்கையாளர் என்றால் - நோ பிராப்ளம் - but we need a plan on how to deal with our people.

அவர்கள் அப்படி  இருக்கக்கூடாது என்ற ஏக்கமும்  பயமும் ஒவ்வொரு  பெற்றோருக்கும் இருக்கும்

இதுக்கு  இனம் நாடு மொழி  என்று ஒன்றும்  இல்லை

அதைத்தான் சொல்ல வந்தேன்

நன்றி சகோ  நேரத்திற்கும் பொறுமையான  விளக்கங்கள் மற்றும் தரவகளுக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, விசுகு said:

அவர்கள் அப்படி  இருக்கக்கூடாது என்ற ஏக்கமும்  பயமும் ஒவ்வொரு  பெற்றோருக்கும் இருக்கும்

இதுக்கு  இனம் நாடு மொழி  என்று ஒன்றும்  இல்லை

அதைத்தான் சொல்ல வந்தேன்

நன்றி சகோ  நேரத்திற்கும் பொறுமையான  விளக்கங்கள் மற்றும் தரவகளுக்கும்

உங்கள் நேரத்துக்கும் கருத்துக்களுக்கும் நன்றி அண்ணா. 

என்னை சுற்றியும் உங்கள் கருத்தை ஒத்தவர்களே இருக்கிறார்கள். ஏன்…சில வருடங்களுக்கு முன் எனது நிலைப்பாடும் இதுவே. ஆகவே இங்கே எழுதிய அனைவரின் நிலைப்பாடும் எனக்கு புரிகிறது🙏🏾.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

லண்டன்… பெற்றோல்  நிரப்பு நிலையத்தில், சினேகிதர்கள் இருக்கிறார்கள் போலுள்ளது. 🤣😂

இல்லை பெற்றோல் நிலையமே அவருடையது  தான் வேலை வெற்றிடமுணடு.  சம்பளம் அப்படி இப்படி தான் 🤣😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதியின் கருத்தைப் பார்த்து ..வெடிச்சிரிப்பைத் தவிர வேறெதுவும் வரவில்லை!-மன்னிக்கவும். 😂

"நாம் பேசாமல் இருந்தால், அவர்களும் பேசாமல் இருந்து விடுவர் , எனவே இது இருப்பதே தெரியாமல் போய் விடும்!".. 

இந்த அணுகுமுறை , சாதி விடயத்தில், சீதன விடயத்தில், திருமணத்திற்கு வெளியே உறவு வைத்துக் கொள்ளும் ஊர்ப் பெரியவாள் விடயத்தில் என்று பல தமிழ் சமூகம் சார்ந்த விடயங்களில் கடைப் பிடிக்கப் படும் ஒன்று தான் - sweeping under the carpet! அவையெல்லாம் வெளியே தெரியாமல், எங்கள் சமூகத்தை மறைத்தன்மையான விதத்தில் பாதிக்காமல் போய் விட்டனவா? இல்லையல்லவா? 

எனவே, பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருட்டென்ற அணுகுமுறை தான் இது!

மறுபக்கம், என் குழந்தை இதைச் செய்தால் என்ன ரியாக்ஷன் எனும் கேள்வி! இந்தக் கேள்விக்கு பதிலே அவசியமில்லை.பெற்றோர்  தன் குழந்தை மேல் உண்மையான அன்பு கொண்டிருந்தால், பெற்றோர் விரும்பும் இணையையா கட்டி வைப்பர்? 

அனேகமான எங்கள் சமூகத்தின் வயசாளிகள், பெரியோர், தங்கள் வாழ்க்கையை ஊருக்காக வாழ்வர்! தங்களுக்காக தங்கள் பிள்ளைகளை வாழச் சொல்லி எதிர்பார்ப்பர்! வாழக் கிடைக்கிற அதிக பட்ச 75 ஆண்டுகளில் தனக்கென்று வாழ நினைக்காத "வாழா வெட்டிகள்" தான் எங்கட ஆட்கள்!   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

நன்றி வணக்கம்.😄

@குமாரசாமி இஞ்ச இவர் உங்கட திரியை நூக்கப்பாக்கிறார்🤣

40 minutes ago, Kandiah57 said:

இல்லை பெற்றோல் நிலையமே அவருடையது  தான் வேலை வெற்றிடமுணடு.  சம்பளம் அப்படி இப்படி தான் 🤣😂

🤣 சொல்லுறதுதான் சொல்லுறியள்….பிறகேன் கஞ்சதனமா பெற்றோல் ஸ்டேசன் எண்டுறியள்… எசெக்ஸசில ஒரு சுத்தீகரிப்பு ஆலை, சவுதியில பத்து கிணறு எண்டு சொன்னால் நானும் சந்தோசப்படுவன் எல்லே🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, சுவைப்பிரியன் said:

நன்றி வணக்கம்.😄

கலோ... சுவைப்பிரியன்,  ஏன்... அவசரப் பட்டு, நன்றி சொல்கிறீர்கள்.
எனக்கு... இன்னும், சில விளக்கங்கள், தேவைப் படுகின்றது ராசா. :grin:

இந்தத் திரி, இன்னும்... "பத்துப் பக்கம்"  போனால்தான்,
எனக்கு, சரியான விளக்கம் கிடைக்கும் என நினைக்கின்றேன். :)

ஏற்கெனவே... இந்தத் தலைப்பு, பல சாதனைகளை படைத்துள்ளது.
அதன் பட்டியல் கீழே...

மூன்று  நாளில்.... 

1)  "செய்தி திரட்டியில்"... பதியப் பட்ட தலைப்பை,  167  கருத்துக்களுடன்... 
5400 வாசகர்கள், ஆர்வத்துடன் பார்த்துள்ளார்கள். 👍 👏

2)  யாழ்.களத்தின்... பல் வேறு துறைகளை சேர்ந்த, பல அருமையான கருத்தாளர்கள்,
(லண்டன் பெற்றோல் நிலைய முதலாளி உட்பட) தமது கருத்துக்களை பதிந்து உள்ளார்கள்.  🤠

3)  அத்துடன் இன்று... ரதி, பதிந்த கருத்தை...
ஜஸ்ரினும், கோசானும்...  ஏற்கவில்லைப்  போலுள்ளது.  😂

4)  அவர்களுக்கு... சரியான, விளக்கம் கொடுக்க... ரதிக்கு, சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும். 🤣

5)  மிக முக்கியமாக... திண்ணையில் நேற்று, நிழலி பதிந்த  வானொலி நேரடி நிகழ்ச்சியை,
நான் வேலையில்  நின்றதால் கேட்க முடியவில்லை. (East FM (102.7) எப் எம் Good morning Canada program) 😢

6)  அதனை கேட்ட... கோசான், அதன் இணைப்பையும் வழங்கி...
// அன்ரி ஒராள் ஐயரப் போட்டு வறுக்கிறா....//  🤩
என்ற கருத்தை பார்த்த பின், எனக்கு அந்த  வானொலி ஒலிபரப்பின்... 
மீள் பதிவை, பார்க்க வேண்டும் போல்... ஆவலாக உள்ளது.  🤣

7)  அதனை மீண்டும் கேட்க... வசதி உள்ளதா? இருந்தால்... இணைத்து விடுங்களேன். 
அந்த... அன்ரியின், வறுத்தலை... கேட்காமல், எனக்கு நித்திரை வராது போலுள்ளது.   🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, தமிழ் சிறி said:

அந்த... அன்ரியின், வறுத்தலை... கேட்காமல், எனக்கு நித்திரை வராது போலுள்ளது.   🤣

அன்ரி ஐயரை வறுத்த படியால் இன்று வெள்ளிக்கிழமை நீங்கள் எதிர்பார்க்கும் 🤣மச்சம் இருக்குமா ராசா?😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, தமிழ் சிறி said:

இந்தத் திரி, இன்னும்... "பத்துப் பக்கம்"  போனால்தான்,
எனக்கு, சரியான விளக்கம் கிடைக்கும் என நினைக்கின்றேன். :)

இன்னும் பத்து பக்கமா?அல்லது  பத்து பக்கம் மட்டுமா? இன்னும் பத்து என்றால் 

7+10=17வந்து. விடும்  நன்றி வணக்கம் 😂🤣🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

அன்ரி ஐயரை வறுத்த படியால் இன்று வெள்ளிக்கிழமை நீங்கள் எதிர்பார்க்கும் 🤣மச்சம் இருக்குமா ராசா?😜

விசுகர்... எப்படியும், அந்த... மச்சத்தை, கோசான்... எடுத்து தருவார் என்று நம்புகின்றேன். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

இப்படி எழுதுவதற்கு மன்னிக்க வேண்டும் அக்கா,

நீங்கள் எழுதியது நகைபுக்குரிய கருத்து.

1. நான் முன்பே விசுகு அண்ணாவுக்கு பதிலாக எழுதி விட்டேன். நான் சார்ந்தோருக்கு தன்பாலின ஈர்ப்பு இருக்கிறது என தெரியவந்தால் அதில் ஒரு பிழையும் இருப்பதாக நான் கருதமாட்டேன்.  “சரி என்ன செய்வது, நீ என்னை போல இல்லை. நீ ஒரு பாலியல் சிறுபான்மை. கடவுளோ/ இயற்கையோ உன்னை அப்படி படைத்துவிட்டது”. “இதில் தப்பேதும் இல்லை”. இதுவே என் நிலைப்பாடாக இருக்க்கும்.

2. ஆனால் நீங்கள் சொல்வது போல பயம் இருக்கும். “வாறான் பார் க**%காரன்” “மகன் க+**%யாம்” என்று இந்த சமூகம் எம்மை நித்திய சித்திரவதை செய்யும் என்பதும் எனக்கு தெரியும். ஆகவே ஒன்றில் இதை மறைத்து வாழு (be discreet) அல்லது நீ வெளிபடையாகத்தான் வாழ வேண்டும் என்றால் வா ஏதாவதொரு எம் சமூகம் இல்லாத நகரத்தில் போய் வாழுவோம் என்றே நான் கூறுவேன். அதற்கும் முடியாது லண்டனில்தான் வாழ்வேன், ஆனால் வெளிப்படையாக வாழ்வேன் என்றால் - வேறு வழியில்லாமல் ஏற்று கொள்ளவேண்டியதுதான்.

3. அப்போ ஏன் வாழ்த்து? ஏனென்றால் அவர்கள் என்னை விட தைரியசாலிகளாக இருக்கிறர்கள். இப்படி நடக்கும் போது அது சமுகத்தில் ஏற்று கொள்ளபடும் போது. இப்படி விவாதிக்கப்படும் போது - இது புலம் பெயர் தமிழ் சமுகத்யில் ஒரு சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தலாம். குறிப்பாக அந்த ஐயரின் செயல். ஆகவே அடுத்து வரும் தலைமுறையில் வரும் தன்பாலின ஈர்ப்பு உள்ள பிள்ளைகளாவது, தமது வெள்ளைகார பிள்ளைகள் போல சுதந்திரம்மாக இருக்க, பெற்றோர் பயந்து, நொந்து நூடில்ஸ் ஆகாமல் இருக்க, வாழும் பிணங்களாக மாறாமல் இருக்க இவ்வாறான செயல்கள் வழிகோலக்கூடும். இதில் இவர்களிருவரின் பெற்றோரின் நிலைப்பாடு என்ன என தெரியவில்லை. 

என் போல இங்கே எழுதியோரின் கருத்துகள் அவர்களுக்கும் (வாசித்த்தால்) நம்பிக்கையூட்டும் என நம்புகிறேன்.

இப்படியாக கருத்து எழுது ஒரு தமிழ் பெற்றார்தன்னும் தமது தன்பாலினைஈர்ப்பு பிள்ளையை முழுமையாக புரிந்துகொண்டால், அல்லது ஒரு பிள்ளையாவது தற்கொலை முடிவுக்கு போகாமல் விட்டால் - அது வெற்றிதானே.

கோஷன் நீங்க பெரிய மனுஷன்யா... 
இவ்வளவு பொறுமையா எல்லா விதண்டாவாதத்துக்கும் அழகாக கருத்து வைத்ததுக்கு.
நீங்கள் யாரும் ஏன் வாழ்த்தவில்லை  என்று நாங்கள் கேள்வி கேட்க இல்லை, மாறாக  கொஞ்ச பேர்  எதுக்கு வாழ்த்துகிறீர்கள்? ஏன் ஊக்கப்படுத்துகிறீர்கள்? உங்கள் பிள்ளைகள் இப்படி செய்தால் என்ன செய்வீர்கள் என்ற எக்ஸ்ட்ரா பிட்டிங் கேள்விகளோடு எழுதுவது தான் சிக்கலே.
எனக்கு மூன்று ஆண் குழந்தைகள் மூவரும் 17 வயதுக்குள்ளே தான்,  அவர்களுக்கு பள்ளிக்கூடத்திலே இது பற்றி ஓரளவு சொல்லி கொடுக்கப்பட்டுள்ளது. (கத்தோலிக்க பாடசாலை). பிள்ளைகள்  எங்கள் சமூக எல்லா சாத்திர சம்பிரதாய நிகழ்ச்சிகளோடு கலந்து கொண்டுதான் இருக்கிறார்கள். திருமணம், காது குத்து, கருமாதி, பூப்புனித நீராட்டு. ஓரளவுக்கு எங்கள் வாழ்க்கை வட்டம் புரிகிறது. 
விதிவசத்தில் பிள்ளைகள் இப்படியான உணர்வை வெளிப்படுத்தினால், அதை உணர்ந்து கொள்ள முயல்வேன், பிரத்யோகமாக எமக்குள் இருக்கும் சமூக சிக்கல்களை சொல்லித்தருவேன்.
 உதாரணம் --> விசுகு மாமா, தமிழ்சிறி மாமா, குசா தாத்தா உன்னை ஆசீர்வதிக்க மாட்டார்கள், சிலநேரம் எங்களோடு கூட இனிமேல்  பேச மாட்டார்கள். 
அவர்களின் இந்த உணர்வை அவர்களாகவே மீழ்ஆய்வு செய்ய நேரம் கொடுத்தது, ஈற்றில் இதுதான் அவர்களின் வாழ்க்கை துணை தேடல், மார்க்கம் என்றால் அவர்களுக்கு நிச்சயம் பக்கபலமாக இருப்பேன். இதில் நானும் எனது மனைவியும்  உறுதியாக இருப்போம். 
இதனால் வரும் சமூக அவதூறுகளை ஏற்று ஒதுங்கி வாழ வேண்டிய நிர்பந்தம் வந்தால் அதையும் செய்வோம்.
என்பிள்ளைகள் ஏதாவது தவறான பாதையில் சென்று 2 பேரை சுட்டுக்கொண்டான், லாரியில் அடித்துக்கொண்டான், குத்திக்கொண்டான்  போன்ற அவப்பெயரை விட இதை சந்தோசமாக ஏற்று அவர்களோடு நாமும் சந்தோசமாக வாழ்வோம்.
மற்றும்படி இதில் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. நான் மெத்தப் படித்தவனும் இல்லை, பாமரனும் இல்லை.
இன்னும் ஒரு உயிரின் உணர்வுக்கும், இந்த நாட்டின் சட்டத்திட்கும் மதிப்பளிக்கிறேன் அவ்வளவே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமண பெணகள் ஏன சிவப்பு பெட்டு வைக்கிறார்கள்?

பூப்புனித நீராட்டு விழா ஏன் செயகிறார்கள்?

பெட்டு வைப்பது திருமணம் முடிந்ததையும....பூப்புனித நீராட்டு விழா பெண் பெரியவள் ஆகி விட்டாள் எனபதையும். குறிக்கும் ஆயின்

இந்த தமிழ் பெண்ணும் தனக்கு ஒரு இணை உண்டு என்பதை இந்த நிகழ்வின்  மூலம் உறிதிப்பட தெரியப்படுததியுள்ளார் எனவே இவாவை கனடா வாழ் தமிழ் இளைஞர்கள் நினைத்து கொண்டிருக்க வேண்டியதில்லை 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Kandiah57 said:

இன்னும் பத்து பக்கமா?அல்லது  பத்து பக்கம் மட்டுமா? இன்னும் பத்து என்றால் 

7+10=17வந்து. விடும்  நன்றி வணக்கம் 😂🤣🙏

Political Science Blog

கந்தையா அண்ணை... அது, வெள்ளிக்கிழமை ஏற்பட்ட கருத்துப் பிழை. :grin:
அதற்காக... மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றேன். 🙏

பத்துப் பக்கம் தான்... target.  மேலை.. போனால், பிரீமியம்  கிடைக்கும். 😂

ஆனால்... 17 பக்கம் மட்டும், பெற்றோல்  ஊத்தினால்,
கம்பனிக்கு... கட்டுப் படியாகாது. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

ரதியின் கருத்தைப் பார்த்து ..வெடிச்சிரிப்பைத் தவிர வேறெதுவும் வரவில்லை!-மன்னிக்கவும். 😂

"நாம் பேசாமல் இருந்தால், அவர்களும் பேசாமல் இருந்து விடுவர் , எனவே இது இருப்பதே தெரியாமல் போய் விடும்!".. 

இந்த அணுகுமுறை , சாதி விடயத்தில், சீதன விடயத்தில், திருமணத்திற்கு வெளியே உறவு வைத்துக் கொள்ளும் ஊர்ப் பெரியவாள் விடயத்தில் என்று பல தமிழ் சமூகம் சார்ந்த விடயங்களில் கடைப் பிடிக்கப் படும் ஒன்று தான் - sweeping under the carpet! அவையெல்லாம் வெளியே தெரியாமல், எங்கள் சமூகத்தை மறைத்தன்மையான விதத்தில் பாதிக்காமல் போய் விட்டனவா? இல்லையல்லவா? 

எனவே, பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருட்டென்ற அணுகுமுறை தான் இது!

மறுபக்கம், என் குழந்தை இதைச் செய்தால் என்ன ரியாக்ஷன் எனும் கேள்வி! இந்தக் கேள்விக்கு பதிலே அவசியமில்லை.பெற்றோர்  தன் குழந்தை மேல் உண்மையான அன்பு கொண்டிருந்தால், பெற்றோர் விரும்பும் இணையையா கட்டி வைப்பர்? 

அனேகமான எங்கள் சமூகத்தின் வயசாளிகள், பெரியோர், தங்கள் வாழ்க்கையை ஊருக்காக வாழ்வர்! தங்களுக்காக தங்கள் பிள்ளைகளை வாழச் சொல்லி எதிர்பார்ப்பர்! வாழக் கிடைக்கிற அதிக பட்ச 75 ஆண்டுகளில் தனக்கென்று வாழ நினைக்காத "வாழா வெட்டிகள்" தான் எங்கட ஆட்கள்!   

ஜஸ்டின் அட்வைஸ் சொல்வது மிக சுலபமான வேலை. அது தனக்கென்று வரும்போதுதான் தெரியும் அதன் வலி!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.