Jump to content

கனடாவில் இடம்பெற்ற இந்து சமய முறையிலான தன்பால் ஈர்ப்புடைய ( lesbian) பெண்களின் திருமணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Justin said:

குடும்பத்திற்குள் நடக்கும் பாலுறவான incest ஐ சட்டம் தடுக்கப் பல நியாயமான காரணங்கள் உண்டு. குறைபாடுள்ள பிள்ளை பிறப்பதைத் தடுப்பது அதிலொன்றாக இருக்கலாம்! ஆனால், சிறுவர்களை/சிறுமியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்யாமல் தடுப்பதே மிகப் பெரிய காரணமாக இருக்கக் கூடும் என நினைக்கிறேன். Incest ஐ சட்டம் போட்டுத் தடுக்கா விட்டால், தங்கள் மகளையே புணர முயலும் மிருகத் தனமான தந்தையர் எல்லா சமூகத்திலும் இருக்கிறார்கள்!

ஒரு பாலுறவு என்பது இரு வளர்ந்தோர் பரஸ்பர சம்மதத்தோடு உருவாக்கும் உறவு. இங்கெ சம்மதம் (consent) என்பது முக்கியமான சொல்! ஒருவர் குழந்தையைப் பாலியல் ரீதியில் தொட்டால், அங்கே சம்மதம் கிடையாது! ஒரு மிருகத்தைப் புணர்ந்தால் அங்கே சம்மதம் கிடையாது! எனவே consent இல்லாத உறவு வல்லுறவு - சட்ட விரோதம்!

அண்ணா,

மேலே எழுதிய உறவு சட்டத்தை விட்டு விடுவோம் என்றார். அதனால்தான் consent போன்ற விடயங்களை விட்டு விட்டு law making ஐ பற்றி எழுதினேன். 

எல்லா சட்டமுமே சமூகம் தகாதது என கருதுபவற்றினயே குற்றம் ஆக்கிறது. அதன் பின்னால் இருக்கும் காரணங்களை ஆராயாமால் விட்டாலும்.

ஒரு காலத்தில் ஒரு ஆண் 12 வயது பெண்ணை கல்யாணம் முடிப்பது சட்டபூர்வம் ஆனால் அவர் இன்னொரு ஆணை மணம் முடிக்கவியலாது. இப்போ தலைகீழ். 

என்ன காரணம் ? சமூகத்தின் பார்வைமாற்றம். 

அதேபோல் இந்த உலகில் சகோதரியை மணம் முடிப்பது ஏற்கப்பட்டும் உள்ளது (கிரேக்கர், ரோமர்). மேலே நெடுக்ஸ் polygamy பற்றி எழுதுகிறார்…பாஞ்சாலி செய்தது polyandry ஒரு பெண் பலதாரம் முடிப்பது. ஆங்கிலேயர் காலத்தில் கூட சில தமிழ்நாட்டு குடிகளிடம் இந்த வழக்கம் இருந்துள்ளது.

ஆகவே சட்டத்தின் அடிப்படை சமூக தார்மீக உணர்வுதான்.

இங்கே என்ன பிரச்சினை என்றால் இந்த கல்யாணத்தை எதிர்க்கும் ஆட்கள் அவர்கள் வாழும் சமுதாயத்தின் தார்மீக உணர்வுக்கு மாறுபட்டு இருக்கிறார்கள். 

அவர்கள் வாழ்வது ஜேர்மன், பிரான்ஸ், லண்டன், கனடா சமுகத்தில். ஆனால் அவர்களின் தார்மீக உணர்வு காபூலில்🤣

ஆகவே தாம் வாழும் நாட்டின் சமூதாய தார்மீக உணர்வையும், சட்டத்தையும் ஏற்கமுடியாமல் அல்லாடுகிறார்கள்.

 

Link to comment
Share on other sites

  • Replies 386
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

ஓரின சேர்க்கை எல்லா உயினங்களிலும் உள்ளது என வாதிட்டு சமாதானம் சொன்ன விண்ணர்களே!
ஜஸ்ரின் சொன்ன இந்த கருத்தைப்பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன?

அண்ணா,

விளக்கம் மேலே. சட்டம் உருவாவது சமூகத்தின் கண்ணோட்டத்தில் இருந்துதான். 

மிருகங்கள் செய்வதால் மனிதரும் ஓரினசேர்க்கை செய்யுங்கள் என எங்கேயும் யாரும் எழுதவில்லை. இது இயற்கையானது என்றே சொல்லப்பட்டது. அதே போல் இன்செஸ்டும் இயற்கையானதே. 

சிங்கம் மானை வேட்டை ஆடுவதும் இயற்கையானதே. அதுக்காக விருப்படி கொலை செய்யுங்கள் என்பதல்ல அர்த்தம்.

இயற்கையானது எல்லாவற்றையும் செய்ய வேண்டியதில்லை:

மனித சமூகம் நாகரீகம் அடைய, அடைய சில சட்டங்களை, தனது தார்மீக விழுமியங்களுக்கு ஏற்ப சட்டமியற்றி, இன்செஸ்ட் போன்றவற்றை தடுக்கிறது. 

ஒரு காலத்தில் தன்னின சேர்க்கையை தடுத்தது, இப்போ இரு சம்மதிக்கும் இரு வயது வந்தவர்களுக்குரிய உறவில் சமூக பாதகம் ஏதும் இல்லை என்று கருதி தடுக்காமல் விடுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

 

இங்கே என்ன பிரச்சினை என்றால் இந்த கல்யாணத்தை எதிர்க்கும் ஆட்கள் அவர்கள் வாழும் சமுதாயத்தின் தார்மீக உணர்வுக்கு மாறுபட்டு இருக்கிறார்கள். 

அவர்கள் வாழ்வது ஜேர்மன், பிரான்ஸ், லண்டன், கனடா சமுகத்தில். ஆனால் அவர்களின் தார்மீக உணர்வு காபூலில்🤣

ஆகவே தாம் வாழும் நாட்டின் சமூதாய தார்மீக உணர்வையும், சட்டத்தையும் ஏற்கமுடியாமல் அல்லாடுகிறார்கள்.

 

எங்களை விடுங்கள் சகோ

இந்த  நாடுகளில் உள்ள எத்தனை வீதம் மக்கள் இதை  ஊக்குவிக்கின்றனர்???

பாராட்டுகின்றனர்??

தங்களது  பிள்ளைகளுக்கும் சிபாரிசு செய்து உற்சாகப்படுத்துகின்றனர்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, goshan_che said:

இங்கே என்ன பிரச்சினை என்றால் இந்த கல்யாணத்தை எதிர்க்கும் ஆட்கள் அவர்கள் வாழும் சமுதாயத்தின் தார்மீக உணர்வுக்கு மாறுபட்டு இருக்கிறார்கள். 

அவர்கள் வாழ்வது ஜேர்மன், பிரான்ஸ், லண்டன், கனடா சமுகத்தில். ஆனால் அவர்களின் தார்மீக உணர்வு காபூலில்🤣

ஆகவே தாம் வாழும் நாட்டின் சமூதாய தார்மீக உணர்வையும், சட்டத்தையும் ஏற்கமுடியாமல் அல்லாடுகிறார்கள்.

கோசான்….  எங்களுடைய  உணர்வு எல்லாம்… காபூலில் 😲  என்று சொல்லி, எங்களை அவமானப் படுத்தி விட்டார். 🧐 😥

இதற்கு… ஜேர்மன், பிரான்ஸ், லண்டன், கனடா வாழ்… புலம் பெயர் தமிழர்களின் சார்பில்…. மிக மிக,  வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கின்றேன். 🥸 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

நீங்கள் சொன்ன மாதிரி அவர்களுக்கு வரும் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாது தான் ...நான் சொல்ல வந்தது இப்படி வெளிப்படையாய் எல்லோரும் வாழ்த்துக்களையும், ஆதரவுனை தெரிவித்தால் இவர்கள் போல் இருப்பவர் தைரியமாய் திருமணம் செய்ய வெளிவிக்கிடுவார்கள் ...நாங்கள் காணாத மாதிரி இருந்தால் அவர்களுக்கு தயக்கம் வரும்.
இங்கு வெளிப்படையாய் இத் திருமணத்திற்கு ஆதரவு தெரிவித்த நிழலி,கிருபன் , நீங்கள் உட்பட மனதிற்குள் உங்கள் பிள்ளைகள் இப்படி செய்ய கூடாது என்ற பயத்திலேயே வாழ்கிறீர்கள்.சொல்லிக் கொடுத்து தான் வளர்ப்பீர்கள் .தற்செயலாய் அவர்கள் செய்திட்டாலும் என்ற பயத்தில் முன்னெச்செரிக்கையாய் ஆதரவு கொடுக்கிறீர்கள் . அவ்வளவு தான் மனப்பூர்வமாய் எத்தனை பேர் இந்த திருமணத்திற்கு ஆதரவு?...இந்த திருமணத்திற்கு போனவர்களே இவர்களை மனப் பூர்வமாய் வாழ்த்தி இருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா?
நான் படித்தவன் ,முற்போக்கான சிந்தனைவாதி என்று தம்மை சொல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் இதற்கு ஆதரவு கொடுக்கிறார்கள் 

இப்படி எழுதுவதற்கு மன்னிக்க வேண்டும் அக்கா,

நீங்கள் எழுதியது நகைபுக்குரிய கருத்து.

1. நான் முன்பே விசுகு அண்ணாவுக்கு பதிலாக எழுதி விட்டேன். நான் சார்ந்தோருக்கு தன்பாலின ஈர்ப்பு இருக்கிறது என தெரியவந்தால் அதில் ஒரு பிழையும் இருப்பதாக நான் கருதமாட்டேன்.  “சரி என்ன செய்வது, நீ என்னை போல இல்லை. நீ ஒரு பாலியல் சிறுபான்மை. கடவுளோ/ இயற்கையோ உன்னை அப்படி படைத்துவிட்டது”. “இதில் தப்பேதும் இல்லை”. இதுவே என் நிலைப்பாடாக இருக்க்கும்.

2. ஆனால் நீங்கள் சொல்வது போல பயம் இருக்கும். “வாறான் பார் க**%காரன்” “மகன் க+**%யாம்” என்று இந்த சமூகம் எம்மை நித்திய சித்திரவதை செய்யும் என்பதும் எனக்கு தெரியும். ஆகவே ஒன்றில் இதை மறைத்து வாழு (be discreet) அல்லது நீ வெளிபடையாகத்தான் வாழ வேண்டும் என்றால் வா ஏதாவதொரு எம் சமூகம் இல்லாத நகரத்தில் போய் வாழுவோம் என்றே நான் கூறுவேன். அதற்கும் முடியாது லண்டனில்தான் வாழ்வேன், ஆனால் வெளிப்படையாக வாழ்வேன் என்றால் - வேறு வழியில்லாமல் ஏற்று கொள்ளவேண்டியதுதான்.

3. அப்போ ஏன் வாழ்த்து? ஏனென்றால் அவர்கள் என்னை விட தைரியசாலிகளாக இருக்கிறர்கள். இப்படி நடக்கும் போது அது சமுகத்தில் ஏற்று கொள்ளபடும் போது. இப்படி விவாதிக்கப்படும் போது - இது புலம் பெயர் தமிழ் சமுகத்யில் ஒரு சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தலாம். குறிப்பாக அந்த ஐயரின் செயல். ஆகவே அடுத்து வரும் தலைமுறையில் வரும் தன்பாலின ஈர்ப்பு உள்ள பிள்ளைகளாவது, தமது வெள்ளைகார பிள்ளைகள் போல சுதந்திரம்மாக இருக்க, பெற்றோர் பயந்து, நொந்து நூடில்ஸ் ஆகாமல் இருக்க, வாழும் பிணங்களாக மாறாமல் இருக்க இவ்வாறான செயல்கள் வழிகோலக்கூடும். இதில் இவர்களிருவரின் பெற்றோரின் நிலைப்பாடு என்ன என தெரியவில்லை. 

என் போல இங்கே எழுதியோரின் கருத்துகள் அவர்களுக்கும் (வாசித்த்தால்) நம்பிக்கையூட்டும் என நம்புகிறேன்.

இப்படியாக கருத்து எழுது ஒரு தமிழ் பெற்றார்தன்னும் தமது தன்பாலினைஈர்ப்பு பிள்ளையை முழுமையாக புரிந்துகொண்டால், அல்லது ஒரு பிள்ளையாவது தற்கொலை முடிவுக்கு போகாமல் விட்டால் - அது வெற்றிதானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

கோசான்….  எங்களுடைய  உணர்வு எல்லாம்… காபூலில் என்று சொல்லி, எங்களை அவமானப் படுத்தி விட்டார். 🧐

இதற்கு ஜேர்மன், பிரான்ஸ், லண்டன், கனடா வாழ் புலம் பெயர் தமிழர்களின் சார்பில்…. மிக மிக,  வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கின்றேன். 🥸

😂 கு சா அண்ணை கஸ்டபட்டு திறந்த திரியை அணையவிடல் தகுமோ😂.

யாரையும் அவமானப்படுத்தும் நோக்கம் இல்லை - அப்படி இருந்தால் மன்னிகவும்.

ஆனால் உண்மை இதுதானே? தன்பாலின கவர்ச்சி உள்ளவர்களை ஒதுக்கும் சட்டங்கள் இருந்தால் ஐரோப்பிய யூனியனில் சேர முடியாது என நினைக்கிறேன் (ஆராயவில்லை). ஜேர்மன் நாடு பற்றியும் அதன் அருமையான அரசாட்சி பற்றியும் அங்கே வாழும் எல்லாரும் எழுதுகிறீர்கள்.

பிரான்சை பற்றியும் அப்படித்தான். இங்கிலாந்துகாரருக்கு ஒரு தனி கர்வம், கனடா, யு எஸ் காரரும் அப்படிதான்.

பிழையில்லை ஆனால் இந்த சமூகங்களை எல்லாம் உயரத்தில் வைத்திருப்பதில் ஒரு பெரும் காரணி சகிப்புத்தன்மை. 

ஒரு வெளிநாட்டவராக, ethnic minorities ஆக இந்த சகிப்புதன்மையின் முழு பலனையும் அனுபவித்தபடி, sexual minorities மீது மட்டும் கடுப்பை காட்டுவது,

ஐரோப்பாவில் வசிக்கவும் வேண்டும், ஷரியா சட்டமும் வேண்டும் என்று கேட்போரின் மனநிலையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

😂 கு சா அண்ணை கஸ்டபட்டு திறந்த திரியை அணையவிடல் தகுமோ😂.

யாரையும் அவமானப்படுத்தும் நோக்கம் இல்லை - அப்படி இருந்தால் மன்னிகவும்.

ஆனால் உண்மை இதுதானே? தன்பாலின கவர்ச்சி உள்ளவர்களை ஒதுக்கும் சட்டங்கள் இருந்தால் ஐரோப்பிய யூனியனில் சேர முடியாது என நினைக்கிறேன் (ஆராயவில்லை). ஜேர்மன் நாடு பற்றியும் அதன் அருமையான அரசாட்சி பற்றியும் அங்கே வாழும் எல்லாரும் எழுதுகிறீர்கள்.

பிரான்சை பற்றியும் அப்படித்தான். இங்கிலாந்துகாரருக்கு ஒரு தனி கர்வம், கனடா, யு எஸ் காரரும் அப்படிதான்.

பிழையில்லை ஆனால் இந்த சமூகங்களை எல்லாம் உயரத்தில் வைத்திருப்பதில் ஒரு பெரும் காரணி சகிப்புத்தன்மை. 

ஒரு வெளிநாட்டவராக, ethnic minorities ஆக இந்த சகிப்புதன்மையின் முழு பலனையும் அனுபவித்தபடி, sexual minorities மீது மட்டும் கடுப்பை காட்டுவது,

ஐரோப்பாவில் வசிக்கவும் வேண்டும், ஷரியா சட்டமும் வேண்டும் என்று கேட்போரின் மனநிலையே.

கோசான்…. நீங்கள், குமாரசாமி அண்ணையின் திரிக்கு, பெற்றோல் ஊத்துகிறீர்கள் போலுள்ளது. 😂 🤣

லண்டனில்…. பெற்றோல் தட்டுப்பாடு என்று சொன்னார்கள்.

நீங்கள்… இங்கு, பெற்றோலை… தண்ணி மாதிரி இறைக்கிறீர்கள். 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, விசுகு said:

 

எங்களை விடுங்கள் சகோ

இந்த  நாடுகளில் உள்ள எத்தனை வீதம் மக்கள் இதை  ஊக்குவிக்கின்றனர்???

பாராட்டுகின்றனர்??

தங்களது  பிள்ளைகளுக்கும் சிபாரிசு செய்து உற்சாகப்படுத்துகின்றனர்???

இதை பற்றிய புள்ளிவிபரம் என்னிடம் இல்லை. ஆனால் இங்கே யூகேயில் இப்படி ஒரு ஜோடி திருமணம் முடித்தால் - அது இவ்வளவு பேசு பொருளாகாகாது, இதற்கு தமிழ் சமூகம் காட்டிய எதிர்ப்பில் 1% கூட இராது. 

அவர்களை பொறுத்தவரை இரெண்டு தன்பாலினத்வர் கல்யாணம் முடிப்பது பெரிய மேட்டர் இல்லை. 

எல்லா கல்யாணத்துக்கும் வாழ்த்து சொல்வோம் அல்லவா? அப்படி இதுக்கும் சொல்வார்கள். இங்கேயும் நான் உட்பட பலர் ஆரம்பத்தில் வெறும் வாழ்த்து மட்டுமே சொன்னோம். 

 

27 minutes ago, விசுகு said:

தங்களது  பிள்ளைகளுக்கும் சிபாரிசு செய்து உற்சாகப்படுத்துகின்றனர்???

என்ன கேள்வியண்ணை இது. இங்கே யார் பிள்ளைகளுக்கு சிபாரிசு செய்ய சொன்னார்கள். 

இது சிபாரிசு செய்ய கூடிய விடயமல்ல. அவர்கள் தாமாகவே இதுதான் நாம் என்று கண்டு பிடிப்பார்கள்.

எம்மை போல என்றால் - நோ பிராப்ளம்.

தன்னினசேர்க்கையாளர் என்றால் - நோ பிராப்ளம் - but we need a plan on how to deal with our people.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

அதை பெரியார் வேறு விதமாக சொன்னார்.

உனக்கு காமம் அதிகரித்து விட்டால் அதை தாயிடமோ அல்லது சகோதரியிடமோ தீர்த்துக்கொள் என்கிறார்.

அண்ணை,

இதுக்கு ஒரு ஆதாரத்தை தாங்கோ. இப்படி சொன்னாரா? என்ன context இல் இதை சொன்னார் என அறியவேண்டும். 

மேலே நான் “இன்செஸ்ட் இயற்கையானது” என எழுதியுள்ளேன். இதை மட்டும் தனியாக எடுத்து கோஷான் இன்செஸ்டை ஆதரிக்கிறார் எண்டு அடிச்சும் விடலாம்.

ஏற்கனவே சங்கிகளும், தம்பிகளும் பெரியார் எழுத்து சீர்திருத்தத்தை வலியுறுத்தி சொன்னதை - தமிழை இழிவுபடுதினார் என கையிறு திரித்துகொண்டிருக்கிறார்கள்.

ஆதாரம் காட்ட முடியாவிட்டால் தயவு செய்து அந்த கருத்தை நீக்கிவிடுங்கள் 🙏🏾

11 hours ago, தமிழ் சிறி said:

திராவிட பெரியாரா… இப்படி சொன்னவர்?

அவரையா… தமிழ் நாட்டில், சில கட்சிகள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள்.

கேட்கவே… அருவருப்பாக உள்ளது. 

 

12 minutes ago, தமிழ் சிறி said:

கோசான்…. நீங்கள், குமாரசாமி அண்ணையின் திரிக்கு, பெற்றோல் ஊத்துகிறீர்கள் போலுள்ளது. 😂🤣

லண்டனில்…. பெற்றோல் தட்டுப்பாடு என்று சொன்னார்கள்.

நீங்கள்… இங்கு, பெற்றோலை… தண்ணி மாதிரி இறைக்கிறீர்கள். 😃

🤣 தம்பியுள்ளான் சண்டைக்கு அஞ்சான்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

நான் படித்தவன் ,முற்போக்கான சிந்தனைவாதி என்று தம்மை சொல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் இதற்கு ஆதரவு கொடுக்கிறார்கள் 

இங்கே படித்தவன் முற்போக்குவாதி என்பதை காட்டிக்கொள்வதை விட சக மனிதர்களாக அவர்களையும் பார்க்கும் பக்குவம் உள்ளது..காலம் மாற மாற அவர்களை பார்க்கும் சமூகத்தின் கண்ணோட்டமும் மாறுகிறது.. அவர்களும் எங்களைப்போன்ற மனிதர்கள் என்ற எண்ணம் ஏற்படுகிறது.. நாங்கள் குடும்பம், உறவுகள், காதல், நட்பு இத்யாதிகள் என்பவற்றை எவ்வளவு தூரம் அனுபவிக்க உரிமை உள்ளதோ அதேயளவு உரிமை அவர்களுக்கும் உண்டு.. அவர்கள் என்ன வேற்றுகிரகவாசிகளா? இல்லையே அவர்களும் மனிதர்கள் தான்.. 

இரண்டாவது- நாங்கள் இதை காணாத மாதிரி இருந்தால் அவர்கள் இல்லாமல் போய்விடுவார்களா? ஏன் அவர்களுக்கான வாழ்க்கையை சட்டரீதியாகவும் தங்களுக்கு பிடித்த சமயரீதியாகவும் வாழமுடியாதா? இது என்ன வகையான நியாயம்? 

மூன்றாவது- இங்கே வாழ்த்து தெரிவித்தவர்களோ சரி, திருமணத்திற்கு போனவர்களும் சரி அவர்களும் எங்களைப்போன்ற சக மனிதர்களுக்கு உதவும் மனப்பான்மையுடனும் போயிருக்க கூடும் அல்லது உண்மையிலே வாழ்த்திகூட இருக்கலாம்..அங்கே போனவர்கள் எந்த மனநிலையில் போனார்கள் என்பதை விட போயிருக்கிறார்கள்.. 

என்னைப்பொறுத்தவரை, அவர்கள் தங்கள் வாழ்க்கையை திருப்தியுடன் வாழ்வார்கள்.. பெற்றோரின் திருப்திக்காக, சமூகம் ஏதாவது சொல்லும் என்று பயத்தில், கோழையாக, பிடிக்காத வாழ்க்கையை வாழ்ந்து நான்கு பேரின் வாழ்க்கையை பாழாக்குவதைவிட, இவர்கள் தங்கள் வாழ்க்கையை திருப்தியுடன்தான் வாழ்வார்கள்.. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

 

🤣 தம்பியுள்ளான் சண்டைக்கு அஞ்சான்🤣

லண்டன்… பெற்றோல்  நிரப்பு நிலையத்தில், சினேகிதர்கள் இருக்கிறார்கள் போலுள்ளது. 🤣😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

இதை பற்றிய புள்ளிவிபரம் என்னிடம் இல்லை. ஆனால் இங்கே யூகேயில் இப்படி ஒரு ஜோடி திருமணம் முடித்தால் - அது இவ்வளவு பேசு பொருளாகாகாது, இதற்கு தமிழ் சமூகம் காட்டிய எதிர்ப்பில் 1% கூட இராது. 

அவர்களை பொறுத்தவரை இரெண்டு தன்பாலினத்வர் கல்யாணம் முடிப்பது பெரிய மேட்டர் இல்லை. 

எல்லா கல்யாணத்துக்கும் வாழ்த்து சொல்வோம் அல்லவா? அப்படி இதுக்கும் சொல்வார்கள். இங்கேயும் நான் உட்பட பலர் ஆரம்பத்தில் வெறும் வாழ்த்து மட்டுமே சொன்னோம். 

 

என்ன கேள்வியண்ணை இது. இங்கே யார் பிள்ளைகளுக்கு சிபாரிசு செய்ய சொன்னார்கள். 

இது சிபாரிசு செய்ய கூடிய விடயமல்ல. அவர்கள் தாமாகவே இதுதான் நாம் என்று கண்டு பிடிப்பார்கள்.

எம்மை போல என்றால் - நோ பிராப்ளம்.

தன்னினசேர்க்கையாளர் என்றால் - நோ பிராப்ளம் - but we need a plan on how to deal with our people.

அவர்கள் அப்படி  இருக்கக்கூடாது என்ற ஏக்கமும்  பயமும் ஒவ்வொரு  பெற்றோருக்கும் இருக்கும்

இதுக்கு  இனம் நாடு மொழி  என்று ஒன்றும்  இல்லை

அதைத்தான் சொல்ல வந்தேன்

நன்றி சகோ  நேரத்திற்கும் பொறுமையான  விளக்கங்கள் மற்றும் தரவகளுக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, விசுகு said:

அவர்கள் அப்படி  இருக்கக்கூடாது என்ற ஏக்கமும்  பயமும் ஒவ்வொரு  பெற்றோருக்கும் இருக்கும்

இதுக்கு  இனம் நாடு மொழி  என்று ஒன்றும்  இல்லை

அதைத்தான் சொல்ல வந்தேன்

நன்றி சகோ  நேரத்திற்கும் பொறுமையான  விளக்கங்கள் மற்றும் தரவகளுக்கும்

உங்கள் நேரத்துக்கும் கருத்துக்களுக்கும் நன்றி அண்ணா. 

என்னை சுற்றியும் உங்கள் கருத்தை ஒத்தவர்களே இருக்கிறார்கள். ஏன்…சில வருடங்களுக்கு முன் எனது நிலைப்பாடும் இதுவே. ஆகவே இங்கே எழுதிய அனைவரின் நிலைப்பாடும் எனக்கு புரிகிறது🙏🏾.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

லண்டன்… பெற்றோல்  நிரப்பு நிலையத்தில், சினேகிதர்கள் இருக்கிறார்கள் போலுள்ளது. 🤣😂

இல்லை பெற்றோல் நிலையமே அவருடையது  தான் வேலை வெற்றிடமுணடு.  சம்பளம் அப்படி இப்படி தான் 🤣😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதியின் கருத்தைப் பார்த்து ..வெடிச்சிரிப்பைத் தவிர வேறெதுவும் வரவில்லை!-மன்னிக்கவும். 😂

"நாம் பேசாமல் இருந்தால், அவர்களும் பேசாமல் இருந்து விடுவர் , எனவே இது இருப்பதே தெரியாமல் போய் விடும்!".. 

இந்த அணுகுமுறை , சாதி விடயத்தில், சீதன விடயத்தில், திருமணத்திற்கு வெளியே உறவு வைத்துக் கொள்ளும் ஊர்ப் பெரியவாள் விடயத்தில் என்று பல தமிழ் சமூகம் சார்ந்த விடயங்களில் கடைப் பிடிக்கப் படும் ஒன்று தான் - sweeping under the carpet! அவையெல்லாம் வெளியே தெரியாமல், எங்கள் சமூகத்தை மறைத்தன்மையான விதத்தில் பாதிக்காமல் போய் விட்டனவா? இல்லையல்லவா? 

எனவே, பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருட்டென்ற அணுகுமுறை தான் இது!

மறுபக்கம், என் குழந்தை இதைச் செய்தால் என்ன ரியாக்ஷன் எனும் கேள்வி! இந்தக் கேள்விக்கு பதிலே அவசியமில்லை.பெற்றோர்  தன் குழந்தை மேல் உண்மையான அன்பு கொண்டிருந்தால், பெற்றோர் விரும்பும் இணையையா கட்டி வைப்பர்? 

அனேகமான எங்கள் சமூகத்தின் வயசாளிகள், பெரியோர், தங்கள் வாழ்க்கையை ஊருக்காக வாழ்வர்! தங்களுக்காக தங்கள் பிள்ளைகளை வாழச் சொல்லி எதிர்பார்ப்பர்! வாழக் கிடைக்கிற அதிக பட்ச 75 ஆண்டுகளில் தனக்கென்று வாழ நினைக்காத "வாழா வெட்டிகள்" தான் எங்கட ஆட்கள்!   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

நன்றி வணக்கம்.😄

@குமாரசாமி இஞ்ச இவர் உங்கட திரியை நூக்கப்பாக்கிறார்🤣

40 minutes ago, Kandiah57 said:

இல்லை பெற்றோல் நிலையமே அவருடையது  தான் வேலை வெற்றிடமுணடு.  சம்பளம் அப்படி இப்படி தான் 🤣😂

🤣 சொல்லுறதுதான் சொல்லுறியள்….பிறகேன் கஞ்சதனமா பெற்றோல் ஸ்டேசன் எண்டுறியள்… எசெக்ஸசில ஒரு சுத்தீகரிப்பு ஆலை, சவுதியில பத்து கிணறு எண்டு சொன்னால் நானும் சந்தோசப்படுவன் எல்லே🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, சுவைப்பிரியன் said:

நன்றி வணக்கம்.😄

கலோ... சுவைப்பிரியன்,  ஏன்... அவசரப் பட்டு, நன்றி சொல்கிறீர்கள்.
எனக்கு... இன்னும், சில விளக்கங்கள், தேவைப் படுகின்றது ராசா. :grin:

இந்தத் திரி, இன்னும்... "பத்துப் பக்கம்"  போனால்தான்,
எனக்கு, சரியான விளக்கம் கிடைக்கும் என நினைக்கின்றேன். :)

ஏற்கெனவே... இந்தத் தலைப்பு, பல சாதனைகளை படைத்துள்ளது.
அதன் பட்டியல் கீழே...

மூன்று  நாளில்.... 

1)  "செய்தி திரட்டியில்"... பதியப் பட்ட தலைப்பை,  167  கருத்துக்களுடன்... 
5400 வாசகர்கள், ஆர்வத்துடன் பார்த்துள்ளார்கள். 👍 👏

2)  யாழ்.களத்தின்... பல் வேறு துறைகளை சேர்ந்த, பல அருமையான கருத்தாளர்கள்,
(லண்டன் பெற்றோல் நிலைய முதலாளி உட்பட) தமது கருத்துக்களை பதிந்து உள்ளார்கள்.  🤠

3)  அத்துடன் இன்று... ரதி, பதிந்த கருத்தை...
ஜஸ்ரினும், கோசானும்...  ஏற்கவில்லைப்  போலுள்ளது.  😂

4)  அவர்களுக்கு... சரியான, விளக்கம் கொடுக்க... ரதிக்கு, சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும். 🤣

5)  மிக முக்கியமாக... திண்ணையில் நேற்று, நிழலி பதிந்த  வானொலி நேரடி நிகழ்ச்சியை,
நான் வேலையில்  நின்றதால் கேட்க முடியவில்லை. (East FM (102.7) எப் எம் Good morning Canada program) 😢

6)  அதனை கேட்ட... கோசான், அதன் இணைப்பையும் வழங்கி...
// அன்ரி ஒராள் ஐயரப் போட்டு வறுக்கிறா....//  🤩
என்ற கருத்தை பார்த்த பின், எனக்கு அந்த  வானொலி ஒலிபரப்பின்... 
மீள் பதிவை, பார்க்க வேண்டும் போல்... ஆவலாக உள்ளது.  🤣

7)  அதனை மீண்டும் கேட்க... வசதி உள்ளதா? இருந்தால்... இணைத்து விடுங்களேன். 
அந்த... அன்ரியின், வறுத்தலை... கேட்காமல், எனக்கு நித்திரை வராது போலுள்ளது.   🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, தமிழ் சிறி said:

அந்த... அன்ரியின், வறுத்தலை... கேட்காமல், எனக்கு நித்திரை வராது போலுள்ளது.   🤣

அன்ரி ஐயரை வறுத்த படியால் இன்று வெள்ளிக்கிழமை நீங்கள் எதிர்பார்க்கும் 🤣மச்சம் இருக்குமா ராசா?😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, தமிழ் சிறி said:

இந்தத் திரி, இன்னும்... "பத்துப் பக்கம்"  போனால்தான்,
எனக்கு, சரியான விளக்கம் கிடைக்கும் என நினைக்கின்றேன். :)

இன்னும் பத்து பக்கமா?அல்லது  பத்து பக்கம் மட்டுமா? இன்னும் பத்து என்றால் 

7+10=17வந்து. விடும்  நன்றி வணக்கம் 😂🤣🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

அன்ரி ஐயரை வறுத்த படியால் இன்று வெள்ளிக்கிழமை நீங்கள் எதிர்பார்க்கும் 🤣மச்சம் இருக்குமா ராசா?😜

விசுகர்... எப்படியும், அந்த... மச்சத்தை, கோசான்... எடுத்து தருவார் என்று நம்புகின்றேன். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

இப்படி எழுதுவதற்கு மன்னிக்க வேண்டும் அக்கா,

நீங்கள் எழுதியது நகைபுக்குரிய கருத்து.

1. நான் முன்பே விசுகு அண்ணாவுக்கு பதிலாக எழுதி விட்டேன். நான் சார்ந்தோருக்கு தன்பாலின ஈர்ப்பு இருக்கிறது என தெரியவந்தால் அதில் ஒரு பிழையும் இருப்பதாக நான் கருதமாட்டேன்.  “சரி என்ன செய்வது, நீ என்னை போல இல்லை. நீ ஒரு பாலியல் சிறுபான்மை. கடவுளோ/ இயற்கையோ உன்னை அப்படி படைத்துவிட்டது”. “இதில் தப்பேதும் இல்லை”. இதுவே என் நிலைப்பாடாக இருக்க்கும்.

2. ஆனால் நீங்கள் சொல்வது போல பயம் இருக்கும். “வாறான் பார் க**%காரன்” “மகன் க+**%யாம்” என்று இந்த சமூகம் எம்மை நித்திய சித்திரவதை செய்யும் என்பதும் எனக்கு தெரியும். ஆகவே ஒன்றில் இதை மறைத்து வாழு (be discreet) அல்லது நீ வெளிபடையாகத்தான் வாழ வேண்டும் என்றால் வா ஏதாவதொரு எம் சமூகம் இல்லாத நகரத்தில் போய் வாழுவோம் என்றே நான் கூறுவேன். அதற்கும் முடியாது லண்டனில்தான் வாழ்வேன், ஆனால் வெளிப்படையாக வாழ்வேன் என்றால் - வேறு வழியில்லாமல் ஏற்று கொள்ளவேண்டியதுதான்.

3. அப்போ ஏன் வாழ்த்து? ஏனென்றால் அவர்கள் என்னை விட தைரியசாலிகளாக இருக்கிறர்கள். இப்படி நடக்கும் போது அது சமுகத்தில் ஏற்று கொள்ளபடும் போது. இப்படி விவாதிக்கப்படும் போது - இது புலம் பெயர் தமிழ் சமுகத்யில் ஒரு சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தலாம். குறிப்பாக அந்த ஐயரின் செயல். ஆகவே அடுத்து வரும் தலைமுறையில் வரும் தன்பாலின ஈர்ப்பு உள்ள பிள்ளைகளாவது, தமது வெள்ளைகார பிள்ளைகள் போல சுதந்திரம்மாக இருக்க, பெற்றோர் பயந்து, நொந்து நூடில்ஸ் ஆகாமல் இருக்க, வாழும் பிணங்களாக மாறாமல் இருக்க இவ்வாறான செயல்கள் வழிகோலக்கூடும். இதில் இவர்களிருவரின் பெற்றோரின் நிலைப்பாடு என்ன என தெரியவில்லை. 

என் போல இங்கே எழுதியோரின் கருத்துகள் அவர்களுக்கும் (வாசித்த்தால்) நம்பிக்கையூட்டும் என நம்புகிறேன்.

இப்படியாக கருத்து எழுது ஒரு தமிழ் பெற்றார்தன்னும் தமது தன்பாலினைஈர்ப்பு பிள்ளையை முழுமையாக புரிந்துகொண்டால், அல்லது ஒரு பிள்ளையாவது தற்கொலை முடிவுக்கு போகாமல் விட்டால் - அது வெற்றிதானே.

கோஷன் நீங்க பெரிய மனுஷன்யா... 
இவ்வளவு பொறுமையா எல்லா விதண்டாவாதத்துக்கும் அழகாக கருத்து வைத்ததுக்கு.
நீங்கள் யாரும் ஏன் வாழ்த்தவில்லை  என்று நாங்கள் கேள்வி கேட்க இல்லை, மாறாக  கொஞ்ச பேர்  எதுக்கு வாழ்த்துகிறீர்கள்? ஏன் ஊக்கப்படுத்துகிறீர்கள்? உங்கள் பிள்ளைகள் இப்படி செய்தால் என்ன செய்வீர்கள் என்ற எக்ஸ்ட்ரா பிட்டிங் கேள்விகளோடு எழுதுவது தான் சிக்கலே.
எனக்கு மூன்று ஆண் குழந்தைகள் மூவரும் 17 வயதுக்குள்ளே தான்,  அவர்களுக்கு பள்ளிக்கூடத்திலே இது பற்றி ஓரளவு சொல்லி கொடுக்கப்பட்டுள்ளது. (கத்தோலிக்க பாடசாலை). பிள்ளைகள்  எங்கள் சமூக எல்லா சாத்திர சம்பிரதாய நிகழ்ச்சிகளோடு கலந்து கொண்டுதான் இருக்கிறார்கள். திருமணம், காது குத்து, கருமாதி, பூப்புனித நீராட்டு. ஓரளவுக்கு எங்கள் வாழ்க்கை வட்டம் புரிகிறது. 
விதிவசத்தில் பிள்ளைகள் இப்படியான உணர்வை வெளிப்படுத்தினால், அதை உணர்ந்து கொள்ள முயல்வேன், பிரத்யோகமாக எமக்குள் இருக்கும் சமூக சிக்கல்களை சொல்லித்தருவேன்.
 உதாரணம் --> விசுகு மாமா, தமிழ்சிறி மாமா, குசா தாத்தா உன்னை ஆசீர்வதிக்க மாட்டார்கள், சிலநேரம் எங்களோடு கூட இனிமேல்  பேச மாட்டார்கள். 
அவர்களின் இந்த உணர்வை அவர்களாகவே மீழ்ஆய்வு செய்ய நேரம் கொடுத்தது, ஈற்றில் இதுதான் அவர்களின் வாழ்க்கை துணை தேடல், மார்க்கம் என்றால் அவர்களுக்கு நிச்சயம் பக்கபலமாக இருப்பேன். இதில் நானும் எனது மனைவியும்  உறுதியாக இருப்போம். 
இதனால் வரும் சமூக அவதூறுகளை ஏற்று ஒதுங்கி வாழ வேண்டிய நிர்பந்தம் வந்தால் அதையும் செய்வோம்.
என்பிள்ளைகள் ஏதாவது தவறான பாதையில் சென்று 2 பேரை சுட்டுக்கொண்டான், லாரியில் அடித்துக்கொண்டான், குத்திக்கொண்டான்  போன்ற அவப்பெயரை விட இதை சந்தோசமாக ஏற்று அவர்களோடு நாமும் சந்தோசமாக வாழ்வோம்.
மற்றும்படி இதில் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. நான் மெத்தப் படித்தவனும் இல்லை, பாமரனும் இல்லை.
இன்னும் ஒரு உயிரின் உணர்வுக்கும், இந்த நாட்டின் சட்டத்திட்கும் மதிப்பளிக்கிறேன் அவ்வளவே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமண பெணகள் ஏன சிவப்பு பெட்டு வைக்கிறார்கள்?

பூப்புனித நீராட்டு விழா ஏன் செயகிறார்கள்?

பெட்டு வைப்பது திருமணம் முடிந்ததையும....பூப்புனித நீராட்டு விழா பெண் பெரியவள் ஆகி விட்டாள் எனபதையும். குறிக்கும் ஆயின்

இந்த தமிழ் பெண்ணும் தனக்கு ஒரு இணை உண்டு என்பதை இந்த நிகழ்வின்  மூலம் உறிதிப்பட தெரியப்படுததியுள்ளார் எனவே இவாவை கனடா வாழ் தமிழ் இளைஞர்கள் நினைத்து கொண்டிருக்க வேண்டியதில்லை 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Kandiah57 said:

இன்னும் பத்து பக்கமா?அல்லது  பத்து பக்கம் மட்டுமா? இன்னும் பத்து என்றால் 

7+10=17வந்து. விடும்  நன்றி வணக்கம் 😂🤣🙏

Political Science Blog

கந்தையா அண்ணை... அது, வெள்ளிக்கிழமை ஏற்பட்ட கருத்துப் பிழை. :grin:
அதற்காக... மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றேன். 🙏

பத்துப் பக்கம் தான்... target.  மேலை.. போனால், பிரீமியம்  கிடைக்கும். 😂

ஆனால்... 17 பக்கம் மட்டும், பெற்றோல்  ஊத்தினால்,
கம்பனிக்கு... கட்டுப் படியாகாது. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

ரதியின் கருத்தைப் பார்த்து ..வெடிச்சிரிப்பைத் தவிர வேறெதுவும் வரவில்லை!-மன்னிக்கவும். 😂

"நாம் பேசாமல் இருந்தால், அவர்களும் பேசாமல் இருந்து விடுவர் , எனவே இது இருப்பதே தெரியாமல் போய் விடும்!".. 

இந்த அணுகுமுறை , சாதி விடயத்தில், சீதன விடயத்தில், திருமணத்திற்கு வெளியே உறவு வைத்துக் கொள்ளும் ஊர்ப் பெரியவாள் விடயத்தில் என்று பல தமிழ் சமூகம் சார்ந்த விடயங்களில் கடைப் பிடிக்கப் படும் ஒன்று தான் - sweeping under the carpet! அவையெல்லாம் வெளியே தெரியாமல், எங்கள் சமூகத்தை மறைத்தன்மையான விதத்தில் பாதிக்காமல் போய் விட்டனவா? இல்லையல்லவா? 

எனவே, பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருட்டென்ற அணுகுமுறை தான் இது!

மறுபக்கம், என் குழந்தை இதைச் செய்தால் என்ன ரியாக்ஷன் எனும் கேள்வி! இந்தக் கேள்விக்கு பதிலே அவசியமில்லை.பெற்றோர்  தன் குழந்தை மேல் உண்மையான அன்பு கொண்டிருந்தால், பெற்றோர் விரும்பும் இணையையா கட்டி வைப்பர்? 

அனேகமான எங்கள் சமூகத்தின் வயசாளிகள், பெரியோர், தங்கள் வாழ்க்கையை ஊருக்காக வாழ்வர்! தங்களுக்காக தங்கள் பிள்ளைகளை வாழச் சொல்லி எதிர்பார்ப்பர்! வாழக் கிடைக்கிற அதிக பட்ச 75 ஆண்டுகளில் தனக்கென்று வாழ நினைக்காத "வாழா வெட்டிகள்" தான் எங்கட ஆட்கள்!   

ஜஸ்டின் அட்வைஸ் சொல்வது மிக சுலபமான வேலை. அது தனக்கென்று வரும்போதுதான் தெரியும் அதன் வலி!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "என் அன்பு மகளே"     "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்;  ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்!  இயங்குதி! என்னும்;’யாமே,"      தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை.      வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்ளை ஆக்கியது. நல்ல புரிந்துணர்வுடன் இனிமையாக மகிழ்வாக பழகுவாள். எமக்கு ஒரு கவலை என்றால், அவளை பார்த்தாலே போய்விடும். அவளின்   குறும்புத்தனம் எவரையும் எந்த நிலையிலும் மகிழ்விக்கும்!     "உள்ளம் களிக்க உடனே சிரிக்க உதிர்மா வேண்டுமம்மா! .     துள்ளித் திரிந்து துயரை மறந்திடத் துளிமா வேண்டுமம்மா!"     அவள் இதை துள்ளி ஆடி பாடும் பொழுது எம்மை அறியாமலே கவலை பறந்திடும். அத்தனை நளினம், தானே கற்று தானே ஆடுவாள்!  அவளுக்கு என்று ஒரு பாணி / போக்கு உண்டு !! படிப்பிலும் சூரி , குழப்படி தான் கொஞ்சம் கூட, அத்துடன் பிடிவாதமும் பிடித்தவள், ஆனால் இரக்கம், அன்பு, மரியாதை எல்லாம் உண்டு. நாளும் ஓட, அவளும் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பெறுபேருடன் நுழைந்தாள்.     "இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்"     மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போன்ற கூந்தலுடன்..  காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடன் ,  அழகான அரும்பை போன்ற இதழுடன், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போன்று ஒளி விடும் நெற்றி உடன் அவள் திகழ்ந்தது தான் எமக்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்தது. இனி அவள் மிக தூர, வேறு ஒரு நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் போகப் போகிறாள். படிப்பை பற்றி பிரச்சனை இல்லை. அது அவளுடன் பிறந்தது. தனிய, அதுவும் இந்த பொங்கி பூரிக்கும் அழகுடன், தந்திரமாக சமாளிப்பாளா என்ற ஒன்று மட்டுமே கொஞ்சம் கவலை அளித்தது. காரணம் அவளுக்கு எல்லாமே நாமே செய்து, எம்மை சுற்றியே பழக்கி விட்டோம் என்பதால். அதுவும் நான் இல்லாமல் எங்கும் தனிய போனதும் இல்லை.  கையை இறுக்க பிடித்துக் கொண்டு தான் போவாள். இப்ப தான் எம் வளர்ப்பின் சில சில தவறுகள் தெரிந்தன. ஆனால் இது நேரம் கடந்த ஒன்று!     "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும்  பூவையரின் அழகை ஆண்கள் அறிவர்  பூரிப்பு கொண்டு மயங்கி திரிவர்"      அவள் எப்படியும் பாடத்தில் கவனம் செலுத்தி, இவை எல்லாம் சமாளிப்பாள் என்று என் நெஞ்சை நானே தேற்றினேன்! . ஆனால் அவளின் சந்தேகமற்ற தூய மனம், பிள்ளைத்தனம் நிறைந்த இயல்பான குணம், இலகுவாக நம்பும் இரக்க தன்மை அவள் வாழ்வை ஏமாற்றி விளையாடி விட்டது அவள் முதலாம் ஆண்டு விடுதலையில் வந்து என் மடியில் இருந்து , என் கைகளால் தன் முகத்தை பொற்றி அழும் பொழுது தான் தெரிந்தது அவளின் வேதனை.!     ஆனால் ஒன்றை கவனித்தேன். இப்ப அவள் நாம் முன்பு கண்ட சின்னப் பிள்ளை அல்ல, அவளின் மற்றும் ஒரு குணமான பிடிவாதம், அவளை நிலைகுலைய  வைக்கவில்லை. தன்னை ஆசைகாட்டி மோசம் செய்தவன், அதே பல்கலைக்கழக, அதே மருத்துவ பீடத்தின் மூன்றாம் வகுப்பு மாணவன். பகிடிவதையில் நண்பர்களாகி, காலப்போக்கில் அவனை உண்மையான காதலன் என் அவள் நம்பியதை, அவன் தந்திரமாக தன் ஆசையை தீர்க்க பாவித்துள்ளான் என்பதை அறிந்தோம். ஆனால், 'நான் பார்த்துக்கொள்வேன்' , கவலை வேண்டாம் அப்பா , அவனை என்னால் திருத்தமுடியும். அவனே உங்கள் மருமகன், எனவே கவலை வேண்டாம் என தைரியமாக மடியில் இருந்து இறங்கி படுக்க போனாள்.     “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும் நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”        என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர் அன்று. ஆனால் என் மகள் தான் நினைத்தவனையே , தன்னை ஏமாறியவனையே திருத்தி மனிதனாக்கி , தன் துணைவனாகவும் மாற்ற புறப்பட்டாள்!. கட்டாயம் அவள் வெற்றி பெறுவாள். அவளின் துணிவு, இன்றைய அனுபவம், வாழ்வை அலசும் திறன், இப்ப அவள் செல்லப் பிள்ளை அல்ல, ஒரு முழுமையான அறிவு பிள்ளை!     என் அன்பு மகளே,  தந்தைக்கு உபதேசம் செய்தான் என்கிறது ஒரு புராணம். அது கட்டுக்கதையாக இருந்தாலும், தந்தை மகன் முன் சீடனாகி உபதேசம் கேட்பது என்பது அகந்தை துறந்து மகனின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள ஒரு தந்தை தயாராகும் வாழ்க்கைத் தத்துவம் அது. இன்று குடும்பங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது இந்த சுய அகந்தைதான். வயதில் சிறியவர்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடம்பிடிப்பது. இன்று நீ சொல்லாமலே என் தவறை சுட்டிக்காட்டி விட்டாய். நீ இனி எனக்கு அம்மாவும் கூட! அவளுக்கு இரவு முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி நித்திரைக்கு அனுப்பினேன்!      "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் ‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5 அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி, ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்"     தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்? எனக்கு இன்னும் வியப்பாகவே அது இருக்கிறது. அந்த வியப்பான பெண் தான் என் அன்பு மகளே !!      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • எல்லா துன்பங்களில் இருந்தும் மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன் பையா 🙏
    • "பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம்! பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது!" பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம் என்பதில் ஐயப்பாடு ஒன்றும் இல்லை. புறநானுறு 312 இல் அப்படித்தான் கூறுகிறது.  "ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;" மகனைப் பெற்று வளர்த்தல் பெண்களின் கடமைகளுள் தலையான கடமையாகும்.அவனைச் சான்றோ னாக்குதல் (வீரன்) தந்தையின் கடமையாகும். இப்படி பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம். ஆனால் பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது என்பதில் தான் எனக்கு ஒரு சந்தேகம்   [1] நாம் இப்ப சொல்லின் கருத்தை பார்ப்போமா ? பெற்றோர் = தங்கள் வாரிசை(குழந்தை) வளர்க்கும் பாதுகாவலர் என்று கொள்ளலாம். அல்லது = பிள்ளை பெற்றவர்கள் / பெற்றோர் என்று கொள்ளலாம். ஆகவே பெற்றோர் என்ற சொல்லே பிள்ளை இல்லாமல் உருவாகாது.  பிள்ளை = குழந்தை, குட்டி , குஞ்சு  இதில் கவனியுங்கள் பெற்றோர் என்ற சொல் தொடர்பு படுத்தப் படவில்லை [2] மேலும் எப்படி பிள்ளைகளை ஒழுங்காக பெற்றோர்கள் உருவாக்கினார்களோ, அப்படியே, பிள்ளைகள் வளர்ந்து ஒரு நிலைக்கு வந்த பின், கெட்டுப்போன / தீய வழியில் சென்ற பெற்றோர்களை , பிள்ளைகள் நல்லவராக உருவாக்கலாம். இதற்கு உதாரணமாக இரணியன், அவன் மகன் பிரகலாதன் கதையை கூறலாம் ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]    
    • "பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டு போல... மானம் என்பது இடுப்பில் கட்டியிருக்கும் வேட்டி போல." வேட்டி எப்பொழுதும் இடுப்பில் தான் கட்டலாம். வேண்டும் என்றால் உயர்த்தி கட்டலாம், மடித்து கட்டலாம் அல்லது கால் சட்டை போல் கட்டலாம் [கோவணம் /nஅரைக்கச்சை மாதிரி ]. எப்படியாயினும் அது இடுப்பின் கீழ் பகுதியை மறைத்து தான் கட்டப்படுகிறது. ஆகவே பொதுவாக மானம் காக்க என அதை கூறலாம். இடுப்பில் கட்டும் துணியான வேட்டியில் இருந்தது தான் "புடைவை, புடவை, அல்லது சேலை" வளர்ச்சி பெற்றது என சரித்திரம் கூறுகிறது . அதாவது பண்டைய காலத்தில் பெண்களும் இடுப்பை சுற்றி துண்டு ஒன்றை தான் கட்டினார்கள். தமது மானத்தை காக்க. உதாரணமாக நக்கீரர், புறநானுறு 189 இல்  "உண்பது நாழி, உடுப்பவையிரண்டே"  என கூறுகிறார். சால்வையை அல்லது மேல் துண்டை எடுத்து கொண்டால், அதை இடுப்பில் அணியும் வார் மாதிரி இடுப்பில் கட்டலாம், தோளில் போடலாம் அல்லது தலையில் தலைப்பாவாக [கிரீடம் மாதிரி] போடலாம். ஆகவே மேல் துண்டு பல விதமான பாவனையில் உள்ளது என்பது தெளிவாகிறது. இந்த பாவனை தான் பதவியைக்  காட்டுகிறது. ஒருவன் உயர்ந்த பதவியில் இருப்பவரிடம் போகும் போது அல்லது அப்படி பட்டவரை சந்திக்கும் போது மேல் துண்டை இடுப்பில் கட்டும் பழக்கம் இருந்துள்ளது. இப்பவும் இருக்கிறது. உதாரணமாக ஆலயத்திற்குள் போகும் போது நம்மவர்கள் இடுப்பில் சால்வை கட்டுவது அதன் தொடர்ச்சியே. அரசனை ஆண்டவனாய் கருதியவர்கள் நம் முன்னோர்கள். "நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே; மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;அதனால், யான்உயிர் என்பது அறிகை வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே. -புறநானுறு 186"  அரண்மனைக்குள் போகும் போது இடுப்பில் கட்டும் பழக்கம் அன்று தோன்றியது. அது உயர்ந்த பதவியில் இருப்பவரை,அரசனை மதிப்பதாக கருதப்பட்டது. குடும்ப விழாக்களில் எல்லோரும் தோளில் மேல் துண்டை போட்டபடி சாதாரணமாக பழகுவார்கள். காரணம் எல்லோரும் குடும்பத்திற்குள் சம பதவி என்பதே அதன் பொருள். என்றாலும் ஒரு வைபவத்தில் ஒருவர் தேங்காய் உடைத்து ஆரம்பிக்கும் போது, அந்த இடத்தில் அவர் ஒரு கௌரவ பதவி ஒன்றை பெறுவதால் , அந்த மேல் துண்டு தலையில் இடம் பிடிக்கிறது - ஒரு கிரீடம் போல். இதனால் தான் மேல் துண்டை பதவிக்கு உதாரணமாக கருதப்பட்டுகிறது போலும் - அதன் இடத்தை பொறுத்து பதவி அமைவதால். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]        
    • க‌ன‌டாவில் உணவு பொருட்க‌ளிலிருந்து எல்லாம் ச‌ரியான‌ விலை என்று கேள்வி ப‌ட்டேன் பொற்ரோல் விலையும் கூடினால்  ம‌க்க‌ளுக்கு இன்னும் சிர‌ம‌ம்.............................  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.