Jump to content

கனடாவில் இடம்பெற்ற இந்து சமய முறையிலான தன்பால் ஈர்ப்புடைய ( lesbian) பெண்களின் திருமணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இங்கே படித்தவன் முற்போக்குவாதி என்பதை காட்டிக்கொள்வதை விட சக மனிதர்களாக அவர்களையும் பார்க்கும் பக்குவம் உள்ளது..காலம் மாற மாற அவர்களை பார்க்கும் சமூகத்தின் கண்ணோட்டமும் மாறுகிறது.. அவர்களும் எங்களைப்போன்ற மனிதர்கள் என்ற எண்ணம் ஏற்படுகிறது.. நாங்கள் குடும்பம், உறவுகள், காதல், நட்பு இத்யாதிகள் என்பவற்றை எவ்வளவு தூரம் அனுபவிக்க உரிமை உள்ளதோ அதேயளவு உரிமை அவர்களுக்கும் உண்டு.. அவர்கள் என்ன வேற்றுகிரகவாசிகளா? இல்லையே அவர்களும் மனிதர்கள் தான்.. 

இரண்டாவது- நாங்கள் இதை காணாத மாதிரி இருந்தால் அவர்கள் இல்லாமல் போய்விடுவார்களா? ஏன் அவர்களுக்கான வாழ்க்கையை சட்டரீதியாகவும் தங்களுக்கு பிடித்த சமயரீதியாகவும் வாழமுடியாதா? இது என்ன வகையான நியாயம்? 

மூன்றாவது- இங்கே வாழ்த்து தெரிவித்தவர்களோ சரி, திருமணத்திற்கு போனவர்களும் சரி அவர்களும் எங்களைப்போன்ற சக மனிதர்களுக்கு உதவும் மனப்பான்மையுடனும் போயிருக்க கூடும் அல்லது உண்மையிலே வாழ்த்திகூட இருக்கலாம்..அங்கே போனவர்கள் எந்த மனநிலையில் போனார்கள் என்பதை விட போயிருக்கிறார்கள்.. 

என்னைப்பொறுத்தவரை, அவர்கள் தங்கள் வாழ்க்கையை திருப்தியுடன் வாழ்வார்கள்.. பெற்றோரின் திருப்திக்காக, சமூகம் ஏதாவது சொல்லும் என்று பயத்தில், கோழையாக, பிடிக்காத வாழ்க்கையை வாழ்ந்து நான்கு பேரின் வாழ்க்கையை பாழாக்குவதைவிட, இவர்கள் தங்கள் வாழ்க்கையை திருப்தியுடன்தான் வாழ்வார்கள்.. 

 

பிரபா , அவர்களுக்கு விரும்பிதை தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு என்று நான் ஏற்கனவே எழுதி விட்டேன்..அவர்களை எதிர்க்க வேண்டும் என்றோ ,ஒதுக்கி வையுங்கள் என்றோ எங்கும் எழுதவில்லை 
திரும்பவும் எழுதுகிறேன் நான் அவர்கள் செய்தது சரி, பிழை என்று சொல்ல வரவில்லை...அது அவர்களது பேர்சனல்.
இயற்கைக்கு எதிரானதை நாம் ஆதரிக்க தேவையில்லை...நாம் ஆதரிக்கா விட்டால் இவர்கள் காணாமற் போக மாட்டார்கள் .. ஆனால் அவர்களிடம் ஒரு வித தயக்கமும்,பயமும் இருக்கும்.  
நான்  உங்களிடம் கேட்பது ஒன்றே ஒன்று தான் உங்கள் பிள்ளை இதை செய்திட கூடாது என்று வேண்டிக் கொண்டு எப்படி உங்களால் அடுத்தவர் பிள்ளையை வாழ்த்த முடியுது?
வெள்ளைகளை ஒரு உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால் அவர்களது பிள்ளைகள் ஓரின சேர்க்கையாளராய் இருந்தால் பகிரங்காய் மற்றவர்களுக்கு அவர்களை அறிமுகப்படுத்துவார்கள் ...உங்களால் அது முடியுமா?
ஐயரிடம் நான் நாயை திருமணம் செய்யப் போறேன் [ஜஸ்டின் மன்னிக்கவும்.] என்றுசொன்னால்  கூட வந்து செய்விப்பார்....அவருக்கு அது தொழில் .
என்னை இந்த கல்யாணத்திற்கு கூப்பிட்டு இருந்தால் கூட நான் போயிருப்பேன் ...போய் விடுப்பு பார்த்து ,மற்றவர் என்ன கொசிப் கதைக்கிறார்கள் என்று கேட்டு சாப்பிட்டுட்டு வந்திருப்பேன்.
பிள்ளைகள் தன் பாலிலனத்தை தேர்ந்தெடுக்க காரணமே பெற்றோர் தான்...பிள்ளைகளுக்கு சொல்லி வளர்ப்பதில்லை , அடுத்த பாலினத்தை சேர்ந்தவரோடு பழக விடுவதில்லை, கூடுதல் கண்காணிப்பு அல்லது அறவே இல்லை . போன்ற பல காரணங்கள் இருக்கு ....பெற்றோர்கள் கவனமாய் இருந்தால் பிள்ளைகள் இப்படி இயற்கைக்கு மாறான செயற்பாடுகளில் ஈடுபட மாட்டார்கள்.
ஏதாவது புதிசாய் எழுதினால் ,பதில் சொல்ல வாறேன்...இல்லாட்டி நன்றி ...வணக்கம் 

Link to comment
Share on other sites

  • Replies 386
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

ரதியின் கருத்தைப் பார்த்து ..வெடிச்சிரிப்பைத் தவிர வேறெதுவும் வரவில்லை!-மன்னிக்கவும். 😂

"நாம் பேசாமல் இருந்தால், அவர்களும் பேசாமல் இருந்து விடுவர் , எனவே இது இருப்பதே தெரியாமல் போய் விடும்!".. 

இந்த அணுகுமுறை , சாதி விடயத்தில், சீதன விடயத்தில், திருமணத்திற்கு வெளியே உறவு வைத்துக் கொள்ளும் ஊர்ப் பெரியவாள் விடயத்தில் என்று பல தமிழ் சமூகம் சார்ந்த விடயங்களில் கடைப் பிடிக்கப் படும் ஒன்று தான் - sweeping under the carpet! அவையெல்லாம் வெளியே தெரியாமல், எங்கள் சமூகத்தை மறைத்தன்மையான விதத்தில் பாதிக்காமல் போய் விட்டனவா? இல்லையல்லவா? 

எனவே, பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருட்டென்ற அணுகுமுறை தான் இது!

மறுபக்கம், என் குழந்தை இதைச் செய்தால் என்ன ரியாக்ஷன் எனும் கேள்வி! இந்தக் கேள்விக்கு பதிலே அவசியமில்லை.பெற்றோர்  தன் குழந்தை மேல் உண்மையான அன்பு கொண்டிருந்தால், பெற்றோர் விரும்பும் இணையையா கட்டி வைப்பர்? 

அனேகமான எங்கள் சமூகத்தின் வயசாளிகள், பெரியோர், தங்கள் வாழ்க்கையை ஊருக்காக வாழ்வர்! தங்களுக்காக தங்கள் பிள்ளைகளை வாழச் சொல்லி எதிர்பார்ப்பர்! வாழக் கிடைக்கிற அதிக பட்ச 75 ஆண்டுகளில் தனக்கென்று வாழ நினைக்காத "வாழா வெட்டிகள்" தான் எங்கட ஆட்கள்!   

சாதி விடயம் , சீதன விடயம் போன்றவை மனிதர் செய்யும் குற்றங்கள் ...இது அப்படியல்ல ...இயற்கைக்கு மாறானது என்று எனக்கும் தெரியும் . உங்களுக்கு மிக நன்றாகவே தெரியும் .
உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும் சில பேர் தாங்கள் வளர்க்கும் செல்ல பிராணிகளுடன் உடல் உறவு கொள்வார்கள் ...மிருகங்களுக்கு கதைக்க தெரியாது ...மிருக வதை என்று சொல்வீர்கள்...அவர்கள் வளர்க்கும் செல்ல பிராணியின் பாஷை அவர்களுக்கு புரியாதா ?
இன்னும் சில வருடங்களில் இதையும் சட்ட பூர்வமாக்கினால் ஏற்றுக் கொள்வீர்களா  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரதி said:

...அவர்கள் வளர்க்கும் செல்ல பிராணியின் பாஷை அவர்களுக்கு புரியாதா ?
இன்னும் சில வருடங்களில் இதையும் சட்ட பூர்வமாக்கினால் ஏற்றுக் கொள்வீர்களா  

பிரான்சில் ஆட்டை புணர்ந்த ஒரு தமிழர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணையில் உள்ளார். இன்னும் கொஞ்ச நாளில் ஆடு கத்தவில்லை எதிர்க்கவில்லை என்றும்  அவர்கள் இருவரும் திருமணம் செய்து இணைந்து வாழலாம் என்றும் வாதிட தயாராகுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

பிரான்சில் ஆட்டை புணர்ந்த ஒரு தமிழர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணையில் உள்ளார். இன்னும் கொஞ்ச நாளில் ஆடு கத்தவில்லை எதிர்க்கவில்லை என்று அவர்கள் இருவரும் திருமணம் செய்து இணைந்து வாழலாம் என்று வாதிட தயாராகுங்கள்.

இன்னும் கொஞ்ச காலத்தில் இதுக்கும் சப்போட் பண்ணி கொண்டு வருமார்களோ என்று பயமாய் உள்ளது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Eppothum Thamizhan said:

ஜஸ்டின் அட்வைஸ் சொல்வது மிக சுலபமான வேலை. அது தனக்கென்று வரும்போதுதான் தெரியும் அதன் வலி!

இதில் அட்வைஸ் எங்கே இருக்கிறது? எனக்கு இந்த அனுபவம் வந்தால் அது தான் என் சிந்தனைப் போக்காக இருக்கும் என்பதைத் தான் சொல்லியிருக்கிறேன். 

"உன் பெற்றோர் , சக பிறப்புகளின் மானம் காக்க, நீ உன் விருப்பத்தை மாற்றிக் கொள்!" என்று சொல்வதன் இன்னொரு வடிவம், "நாம் எல்லாரும் ஷோவுக்காக வாழ்வோம்!" என்பது தான்! -இப்படி சொல்வோர் வாழாவெட்டிகள் தானே?

10 minutes ago, ரதி said:

சாதி விடயம் , சீதன விடயம் போன்றவை மனிதர் செய்யும் குற்றங்கள் ...இது அப்படியல்ல ...இயற்கைக்கு மாறானது என்று எனக்கும் தெரியும் . உங்களுக்கு மிக நன்றாகவே தெரியும் .
உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும் சில பேர் தாங்கள் வளர்க்கும் செல்ல பிராணிகளுடன் உடல் உறவு கொள்வார்கள் ...மிருகங்களுக்கு கதைக்க தெரியாது ...மிருக வதை என்று சொல்வீர்கள்...அவர்கள் வளர்க்கும் செல்ல பிராணியின் பாஷை அவர்களுக்கு புரியாதா ?
இன்னும் சில வருடங்களில் இதையும் சட்ட பூர்வமாக்கினால் ஏற்றுக் கொள்வீர்களா  

ரதி: இதற்கான பதிலை மேலே எழுதி விட்டேன் ஏற்கனவே! CONSENT

ஒரு பாலுறவு பரஸ்பர சம்மதம் கொன்டு நடப்பது, இருவரின் படுக்கையறை விவகாரம், அதில் அரசுக்கோ , வேறு மனிதர்களுக்கோ மூக்கை நுழைக்க அதிகாரமில்லை!

குழந்தைகள் பாலுறவுக்கு சம்மதம் தர முடியாது - எனவே குழந்தைகளுடனான உறவு சட்ட விரோத வல்லுறவு!

மிருகங்கள் பாலுறவுக்கு சம்மதம் தர முடியாது- எனவே மிருகங்களுடனான உறவு சட்ட விரோத மிருக வதை!

இப்ப கேள்வி: இந்த இரு பெண்களிடையேயான ஒரு பாலுறவில் யார் வதைக்கப் பட்டனர்?

(கலாச்சாரக் காவலர்களின் நீதியுணர்வைத் தவிர எதுவும் பாதிக்கப் படவில்லை!)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Sasi_varnam said:

கோஷன் நீங்க பெரிய மனுஷன்யா... 
இவ்வளவு பொறுமையா எல்லா விதண்டாவாதத்துக்கும் அழகாக கருத்து வைத்ததுக்கு.
நீங்கள் யாரும் ஏன் வாழ்த்தவில்லை  என்று நாங்கள் கேள்வி கேட்க இல்லை, மாறாக  கொஞ்ச பேர்  எதுக்கு வாழ்த்துகிறீர்கள்? ஏன் ஊக்கப்படுத்துகிறீர்கள்? உங்கள் பிள்ளைகள் இப்படி செய்தால் என்ன செய்வீர்கள் என்ற எக்ஸ்ட்ரா பிட்டிங் கேள்விகளோடு எழுதுவது தான் சிக்கலே.
எனக்கு மூன்று ஆண் குழந்தைகள் மூவரும் 17 வயதுக்குள்ளே தான்,  அவர்களுக்கு பள்ளிக்கூடத்திலே இது பற்றி ஓரளவு சொல்லி கொடுக்கப்பட்டுள்ளது. (கத்தோலிக்க பாடசாலை). பிள்ளைகள்  எங்கள் சமூக எல்லா சாத்திர சம்பிரதாய நிகழ்ச்சிகளோடு கலந்து கொண்டுதான் இருக்கிறார்கள். திருமணம், காது குத்து, கருமாதி, பூப்புனித நீராட்டு. ஓரளவுக்கு எங்கள் வாழ்க்கை வட்டம் புரிகிறது. 
விதிவசத்தில் பிள்ளைகள் இப்படியான உணர்வை வெளிப்படுத்தினால், அதை உணர்ந்து கொள்ள முயல்வேன், பிரத்யோகமாக எமக்குள் இருக்கும் சமூக சிக்கல்களை சொல்லித்தருவேன்.
 உதாரணம் --> விசுகு மாமா, தமிழ்சிறி மாமா, குசா தாத்தா உன்னை ஆசீர்வதிக்க மாட்டார்கள், சிலநேரம் எங்களோடு கூட இனிமேல்  பேச மாட்டார்கள். 
அவர்களின் இந்த உணர்வை அவர்களாகவே மீழ்ஆய்வு செய்ய நேரம் கொடுத்தது, ஈற்றில் இதுதான் அவர்களின் வாழ்க்கை துணை தேடல், மார்க்கம் என்றால் அவர்களுக்கு நிச்சயம் பக்கபலமாக இருப்பேன். இதில் நானும் எனது மனைவியும்  உறுதியாக இருப்போம். 
இதனால் வரும் சமூக அவதூறுகளை ஏற்று ஒதுங்கி வாழ வேண்டிய நிர்பந்தம் வந்தால் அதையும் செய்வோம்.
என்பிள்ளைகள் ஏதாவது தவறான பாதையில் சென்று 2 பேரை சுட்டுக்கொண்டான், லாரியில் அடித்துக்கொண்டான், குத்திக்கொண்டான்  போன்ற அவப்பெயரை விட இதை சந்தோசமாக ஏற்று அவர்களோடு நாமும் சந்தோசமாக வாழ்வோம்.
மற்றும்படி இதில் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. நான் மெத்தப் படித்தவனும் இல்லை, பாமரனும் இல்லை.
இன்னும் ஒரு உயிரின் உணர்வுக்கும், இந்த நாட்டின் சட்டத்திட்கும் மதிப்பளிக்கிறேன் அவ்வளவே.

சசிவர்ணம், அவர்களே...
இயற்கைக்கு மாறானதை, எதிர்ப்பதில்... தவறு இல்லை, 
என்பதை ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகின்றேன்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விசுகு said:

பிரான்சில் ஆட்டை புணர்ந்த ஒரு தமிழர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணையில் உள்ளார். இன்னும் கொஞ்ச நாளில் ஆடு கத்தவில்லை எதிர்க்கவில்லை என்றும்  அவர்கள் இருவரும் திருமணம் செய்து இணைந்து வாழலாம் என்றும் வாதிட தயாராகுங்கள்.

விசுகர், ஒரு மேற்கு ஐரோப்பிய நாட்டில் வாழ்ந்தாலும், உங்களுக்கு சாதாரண உடலுறவு, வல்லுறவு, பலாத்காரம் இவை பற்றிய எந்த விளக்கமும் இல்லையென்பதைச் சுட்டிக் காட்டும் கருத்து இது!

நல்ல காலம் சட்டத்துடன் இன்னும் முட்டுப் படாமல் தப்பியிருக்கிறீர்கள் - குருட்டதிர்ஷ்டம் தான்! 😂

கீழே பதில்👇

21 hours ago, Justin said:

குடும்பத்திற்குள் நடக்கும் பாலுறவான incest ஐ சட்டம் தடுக்கப் பல நியாயமான காரணங்கள் உண்டு. குறைபாடுள்ள பிள்ளை பிறப்பதைத் தடுப்பது அதிலொன்றாக இருக்கலாம்! ஆனால், சிறுவர்களை/சிறுமியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்யாமல் தடுப்பதே மிகப் பெரிய காரணமாக இருக்கக் கூடும் என நினைக்கிறேன். Incest ஐ சட்டம் போட்டுத் தடுக்கா விட்டால், தங்கள் மகளையே புணர முயலும் மிருகத் தனமான தந்தையர் எல்லா சமூகத்திலும் இருக்கிறார்கள்!

ஒரு பாலுறவு என்பது இரு வளர்ந்தோர் பரஸ்பர சம்மதத்தோடு உருவாக்கும் உறவு. இங்கெ சம்மதம் (consent) என்பது முக்கியமான சொல்! ஒருவர் குழந்தையைப் பாலியல் ரீதியில் தொட்டால், அங்கே சம்மதம் கிடையாது! ஒரு மிருகத்தைப் புணர்ந்தால் அங்கே சம்மதம் கிடையாது! எனவே consent இல்லாத உறவு வல்லுறவு - சட்ட விரோதம்!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Justin said:

 

ரதி: இதற்கான பதிலை மேலே எழுதி விட்டேன் ஏற்கனவே! CONSENT

ஒரு பாலுறவு பரஸ்பர சம்மதம் கொன்டு நடப்பது, இருவரின் படுக்கையறை விவகாரம், அதில் அரசுக்கோ , வேறு மனிதர்களுக்கோ மூக்கை நுழைக்க அதிகாரமில்லை!

குழந்தைகள் பாலுறவுக்கு சம்மதம் தர முடியாது - எனவே குழந்தைகளுடனான உறவு சட்ட விரோத வல்லுறவு!

மிருகங்கள் பாலுறவுக்கு சம்மதம் தர முடியாது- எனவே மிருகங்களுடனான உறவு சட்ட விரோத மிருக வதை!

இப்ப கேள்வி: இந்த இரு பெண்களிடையேயான ஒரு பாலுறவில் யார் வதைக்கப் பட்டனர்?

(கலாச்சாரக் காவலர்களின் நீதியுணர்வைத் தவிர எதுவும் பாதிக்கப் படவில்லை!)

நான் கேட்டதற்கு உங்களிடம் பதில் இல்லையே 
ஒரு பால் உறவால் பாதிக்கப்படுவார்கள் பெற்றோர், சகோதர ,சகோதரிகள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

நான் கேட்டதற்கு உங்களிடம் பதில் இல்லையே 
ஒரு பால் உறவால் பாதிக்கப்படுவார்கள் பெற்றோர், சகோதர ,சகோதரிகள் 

சசி இதற்குப் பதில் சொல்லியாகி விட்டது!

அவர்களது பாலுறவால் பெற்றோர் சகோதர்களுக்குப் பாதிப்பில்லை! ஆனால், அவர்களது சொந்த விருப்பத்தை ஏற்றுக் கொள்ளாத கலாச்சாரக் காவலர்களால் தான் பெற்றோர் சகோதரருக்குப் பாதிப்பு! 

எனவே, சிகிச்சை தேவையாக இருப்பது ஒரு பாலுறவைத் தேர்வோருக்கல்ல! கலாச்சாரக் காவலர்களுக்குத் தான்!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Justin said:

விசுகர், ஒரு மேற்கு ஐரோப்பிய நாட்டில் வாழ்ந்தாலும், உங்களுக்கு சாதாரண உடலுறவு, வல்லுறவு, பலாத்காரம் இவை பற்றிய எந்த விளக்கமும் இல்லையென்பதைச் சுட்டிக் காட்டும் கருத்து இது!

நல்ல காலம் சட்டத்துடன் இன்னும் முட்டுப் படாமல் தப்பியிருக்கிறீர்கள் - குருட்டதிர்ஷ்டம் தான்! 😂

கீழே பதில்👇

சட்டம் சொல்வதை எல்லாம் என் முதுகில் ஏற்றி சுமக்கணும் என்று எந்த விதியும் கிடையாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

நான் கேட்டதற்கு உங்களிடம் பதில் இல்லையே 
ஒரு பால் உறவால் பாதிக்கப்படுவார்கள் பெற்றோர், சகோதர ,சகோதரிகள் 

ரதி, சில மேலைநாடுகளில் ஒருபால் திருமணத்தை அங்கீகரித்திருப்பதால் நவீன புரட்சியாளர்கள் நன்றாக கதைவிடுகிறார்கள். 0.001% கூட இல்லாத இப்படியான நிகழ்வுகளை ஊக்குவிக்காமல் கண்டும் காணாமல் செல்வதே எம்போன்றவர்களுக்கு சரி. புரட்சியாளர்கள் கருத்தெழுதும்போதே இப்படியான நிகழ்வுகள் தமது குடும்பத்தில் வரவேகூடாது என்று வேண்டிக்கொண்டே எழுதியிருப்பார்கள் என்பது யாவரும் அறிந்ததே. இதில ஆஸ்திரேலியாவில் இருந்து ஒருவ பாடம்வேற எடுக்கிறா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Justin said:

சசி இதற்குப் பதில் சொல்லியாகி விட்டது!

அவர்களது பாலுறவால் பெற்றோர் சகோதர்களுக்குப் பாதிப்பில்லை! ஆனால், அவர்களது சொந்த விருப்பத்தை ஏற்றுக் கொள்ளாத கலாச்சாரக் காவலர்களால் தான் பெற்றோர் சகோதரருக்குப் பாதிப்பு! 

எனவே, சிகிச்சை தேவையாக இருப்பது ஒரு பாலுறவைத் தேர்வோருக்கல்ல! கலாச்சாரக் காவலர்களுக்குத் தான்!  

நான் இங்கு தமிழர்களை பற்றி கதைக்கவில்லை ...மனிதர்களை பற்றி மட்டுமே கதைக்கிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/9/2021 at 17:57, கிருபன் said:

மணமக்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.💐💐💐

அத்துடன் தோழனாக நிற்கும் தோழிக்கும் (அப்படித்தான் வீடியோவில் தெரிகின்றது) பாராட்டுக்கள்👍🏾

கவலை வேண்டாம். விந்து வங்கி ஆண்களுக்கு திறந்தே உள்ளது😜

 

On 28/9/2021 at 17:07, valavan said:

 தன்பாலின சேர்க்கை என்பது அவரவர் உரிமை , அதை பிறர் விமர்சிக்கவோ அவர்களை தொந்தரவு செய்யவோ சட்டத்திலும் தர்மத்திலும் இடம் கிடையாது என்ற கொள்கைகளை கொண்ட நாடுகளில் வாழ்வதால் இது அவர்களின் தனிப்பட்ட விசயம் .

திருமண வாழ்த்துக்கள்.

ஆனால் ஒரே ஒரு கவலை இப்படியே பெண்கள் தன்னின சேர்க்கையாளர்களாக  போனால் ஆண்கள் எதிர்காலத்தில் என்ன செய்வது? 

அதைதான் ஐயரின் கை  சிம்பாலிக்கா சொல்லுதாக்கும்.

Bild

அதாவது கையை கட்டிக்கொண்டு அமைதியா போகவேண்டியதுதான் எண்டு சொல்ல வாறன்.

பொத்திக்கொண்டு இருக்க வேண்டியதுதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Justin said:

இதில் அட்வைஸ் எங்கே இருக்கிறது? எனக்கு இந்த அனுபவம் வந்தால் அது தான் என் சிந்தனைப் போக்காக இருக்கும் என்பதைத் தான் சொல்லியிருக்கிறேன். 

"உன் பெற்றோர் , சக பிறப்புகளின் மானம் காக்க, நீ உன் விருப்பத்தை மாற்றிக் கொள்!" என்று சொல்வதன் இன்னொரு வடிவம், "நாம் எல்லாரும் ஷோவுக்காக வாழ்வோம்!" என்பது தான்! -இப்படி சொல்வோர் வாழாவெட்டிகள் தானே?

ரதி: இதற்கான பதிலை மேலே எழுதி விட்டேன் ஏற்கனவே! CONSENT

ஒரு பாலுறவு பரஸ்பர சம்மதம் கொன்டு நடப்பது, இருவரின் படுக்கையறை விவகாரம், அதில் அரசுக்கோ , வேறு மனிதர்களுக்கோ மூக்கை நுழைக்க அதிகாரமில்லை!

குழந்தைகள் பாலுறவுக்கு சம்மதம் தர முடியாது - எனவே குழந்தைகளுடனான உறவு சட்ட விரோத வல்லுறவு!

மிருகங்கள் பாலுறவுக்கு சம்மதம் தர முடியாது- எனவே மிருகங்களுடனான உறவு சட்ட விரோத மிருக வதை!

இப்ப கேள்வி: இந்த இரு பெண்களிடையேயான ஒரு பாலுறவில் யார் வதைக்கப் பட்டனர்?

(கலாச்சாரக் காவலர்களின் நீதியுணர்வைத் தவிர எதுவும் பாதிக்கப் படவில்லை!)

மேலே நான் உங்களிடம் கேட்டது மிருகங்களோடு பாலியல் உறவு கொள்ளலாம் என்று சட்டம் வந்தால் அதை ஆதரிப்பீர்களா என்று தான் ...அதற்கு இன்னும் பதில் வரவில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, karu said:

 

பொத்திக்கொண்டு இருக்க வேண்டியதுதான்

எதையும் ஒரு நாசூக்கா சொல்ல விட மாட்டீர்களா  ‘கரு’ ?😜 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனித வர்க்கம் தனது தேவையை ஈடுசெய்ய அல்லது பூர்த்தி செய்யவே சகல காரியங்களில் ஈடுபடுகிறது. 
ஓடி வரும் நதியை குறுக்கே மறித்து, அணைகட்டி அனுபவிப்பது முதல் பல விடயங்கள் இப்படி இயற்கைக்கு முரணானது தான். மனிதர்களில் சில பகுதியினருக்கு  இப்படியான ஒரு உறவு, உணர்வு வேண்டி  இருக்கிறது.
அவர்கள் அதை ஞாயமாக, சட்ட ரீதியாக பூர்த்தி செய்துகொள்கிறார்கள் அவ்வளவே. நீங்கள் வாழ்த்துவதும், தூற்றுவதும், எதிர்ப்பதும் இங்கே ஒரு பொருட்டே அல்ல. இது உங்களின் மனநிலை மட்டுமே.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு பலருக்கு தாம் என்ன கதைக்கிறோம் என்பதே புரிவதில்லை. இங்கு பேசுபொருள் ஒருபாலின சேர்க்கையல்ல. அதை அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடி செய்திருந்தால் இதில் சொல்ல ஏதுமில்லை. ஆனால் அதை ஏன் எமது கலாச்சார முறைப்படி செய்தார்கள் என்பதே கேள்வி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


ஐயோ ராமா ....8 பக்கம் தாண்டியுமா இன்னும் புரியல 😴

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Sasi_varnam said:


ஐயோ ராமா ....8 பக்கம் தாண்டியுமா இன்னும் புரியல 😴

8 பக்கமில்லை 80 பக்கம் தாண்டினாலும் சிலருக்கு புரியாது அல்லது புரியாதமாதிரியே நடித்துக்கொண்டிருப்பார்கள்! இது ஒன்றும் யாழில் புதிதல்லவே!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சினை வீட்டுக்குள்ள அய்யரை கூப்பிட்டு செய்யாமல், அடர்ந்த காட்டில் அய்யரை கூப்பிட்டு செய்தது தானோ?

இல்லை ஒரு கிறீஸ்தவ பாதிரியை வைத்து செய்திருந்தால் எல்லாரும் வரிசையில் வந்து வாழ்த்தி இருப்பார்களோ?  எனக்கு தலை சுத்துது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Sasi_varnam said:

அவர்கள் அதை ஞாயமாக, சட்ட ரீதியாக பூர்த்தி செய்துகொள்கிறார்கள் அவ்வளவே. நீங்கள் வாழ்த்துவதும், தூற்றுவதும், எதிர்ப்பதும் இங்கே ஒரு பொருட்டே அல்ல. இது உங்களின் மனநிலை மட்டுமே.
 

அதை அவர்கள் சட்டரீதியாக மட்டுமே செய்து முடித்திருந்தால் அது பேசுபொருளாகியிருக்காது. அதை எமது கலாச்சார முறைப்படி செய்ததே நகைப்புக்கிடமானது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Sasi_varnam said:

மனித வர்க்கம் தனது தேவையை ஈடுசெய்ய அல்லது பூர்த்தி செய்யவே சகல காரியங்களில் ஈடுபடுகிறது. 
ஓடி வரும் நதியை குறுக்கே மறித்து, அணைகட்டி அனுபவிப்பது முதல் பல விடயங்கள் இப்படி இயற்கைக்கு முரணானது தான். மனிதர்களில் சில பகுதியினருக்கு  இப்படியான ஒரு உறவு, உணர்வு வேண்டி  இருக்கிறது.
அவர்கள் அதை ஞாயமாக, சட்ட ரீதியாக பூர்த்தி செய்துகொள்கிறார்கள் அவ்வளவே. நீங்கள் வாழ்த்துவதும், தூற்றுவதும், எதிர்ப்பதும் இங்கே ஒரு பொருட்டே அல்ல. இது உங்களின் மனநிலை மட்டுமே.
 

சசி வர்ணம் அதில் இன்னும் முக்கியமாக கவனிக்கபடவேண்டியது ஒன்று  , 

பாலியல் சேர்க்கையில் மட்டுமே பொங்கியெழுந்து கருத்து சொல்லுவதும், நேர்த்தியான வழிமுறைகள்பற்றி வகுப்பு எடுப்பதுமாக இருக்கும் எம்மினம், அதே கொள்கைகளை எல்லா விசயத்திலும் கடைபிடிக்குதா? / கடை பிடித்திருக்கிறதா?

வேறு விசயங்களில் எவன் செத்தா எமக்கு என்ன என்று வாழும் எம் சமூகம் இந்த விசயங்களில் மட்டும் சமூக விழிப்புணர்வுபற்றி கொதித்தெழுவது முரண்பாடான ஒன்று.

பாலியல் என்பது கலாச்சாரமல்ல, அது உடல் உணர்வுகள் சம்பந்தப்பட்ட விசயம்.

நான் ஒரு ஓரின சேர்க்கையாளனாக ஒருபோதும் இருக்க மாட்டேன்,

அது என் தனிப்பட்ட முடிவு.

ஆனால் அடுத்தவன் ஓரின சேர்க்கையாளனாக இருக்ககூடாது என்று ஒரு போதும் குரல் எழுப்ப மாட்டேன், அது அவனது தனிப்பட்ட வாழ்க்கை.

அவன் செக்ஸ் வாழ்க்கை முறை தவறு என்று நான் குரல் எழுப்ப தகுதி உள்ளவன் என்றால், அவனது வாழ்க்கை முறை அனைத்துக்குமே சார்பாகவோ எதிராகவோ நான் குரல் எழுப்பியே ஆகவேண்டும்.

அது என்னாலோ பிறராலோ முடியாத ஒன்று...

ஏனென்றால் செக்ஸ் மட்டுமா வாழ்க்கை? அதை கடந்து வாழ்க்கையில் இன்னும் பல இருக்கு, அதுக்கு போர்கொடி தூக்கிவிட்டு இதுக்கும் போர்கொடி தூக்குவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Eppothum Thamizhan said:

இங்கு பலருக்கு தாம் என்ன கதைக்கிறோம் என்பதே புரிவதில்லை. இங்கு பேசுபொருள் ஒருபாலின சேர்க்கையல்ல. அதை அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடி செய்திருந்தால் இதில் சொல்ல ஏதுமில்லை. ஆனால் அதை ஏன் எமது கலாச்சார முறைப்படி செய்தார்கள் என்பதே கேள்வி.

ஒருபாலினத்தவர். இந்துக்களா இருக்க முடியாத?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

அவர்கள் வாழ்வது ஜேர்மன், பிரான்ஸ், லண்டன், கனடா சமுகத்தில். ஆனால் அவர்களின் தார்மீக உணர்வு காபூலில்🤣

ஆகவே தாம் வாழும் நாட்டின் சமூதாய தார்மீக உணர்வையும், சட்டத்தையும் ஏற்கமுடியாமல் அல்லாடுகிறார்கள்.

ஐரோப்பாவில் வசிக்கவும் வேண்டும், ஷரியா சட்டமும் வேண்டும் என்று கேட்போரின் மனநிலையே.

மிகச் சரியாகச் சொன்னீர்கள்.

அவர்கள் இருவரும் இந்து மதகுரு மந்திம் சொல்லி தேவர்களை அழைத்து தாலிககட்டி ஆடம்பரமாக திருமணம் செய்கிறார்கள் இங்கே அதை ஒரு முற்போக்கு திருமணம் என்று சொல்லியும் எதிர்கிறார்கள் 😭

கடந்த ஞாயிற்று கிழமை தான் சுவிட்சலண் ஒரு பாலினத்தவர் திருமணம் செய்வதை பொது வாக்கெடுப்பு நடத்தி ஓம் என்று முடிவு எடுக்கபட்டது. இந்த செய்தி தமிழ் பெண்கள் பார்த்தால் தாங்களும் அப்படி செய்ய ஊக்கம் பெற்று விடுவார்கள் என்று என்று பயந்து யாழ்களத்தில் செய்தி வராமல் கலாச்சார காவலர்கள் மறைத்து விட்டனர் போலும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.