Jump to content

கனடாவில் இடம்பெற்ற இந்து சமய முறையிலான தன்பால் ஈர்ப்புடைய ( lesbian) பெண்களின் திருமணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் இடம்பெற்ற இந்து சமய முறையிலான தன்பால்ஈர்ப்புடைய( lesbian) பெண்களின் திருமணம்👩‍❤️‍👩

திருமண வாழ்த்துக்கள்💐

Bild

  Bild

Bild

💝

டிவிட்டரிலிருந்து......

Bild

Link to comment
Share on other sites

  • Replies 386
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள - தமிழ் ஒருபால்த் திருமணம் எண்டு சொல்லுங்கோ !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரஞ்சித் said:

சிங்கள - தமிழ் ஒருபால்த் திருமணம் எண்டு சொல்லுங்கோ !

வந்தனீங்கள்.... பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க எண்டு வாழ்த்து சொல்லுங்கோ🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லறம் சிறக்க வாழ்த்து💐.

ஐயருக்கும் ஒரு சலூட் 🖖

Link to comment
Share on other sites

இந்து திருமணச் சடங்குகளுடன் இரண்டு பெண்கள் திருமணம் முடித்துக்கொண்ட வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இரண்டு பெண்களும் தமது சுற்றத்தார் முன்னிலையில், அம்மி மித்து, அருந்ததி பார்த்து, தாலிகட்டிக்கொண்ட அந்தக் காட்சி ஊடகங்களில் வெளியாகி சாதகமாகவும், எதிரானதுமான விமர்சனங்களை ஏற்படுத்தி வருகின்றது.

இந்தச் சம்பவம் கனடா நாட்டின் Grafton பகுதியில் கடந்த 26ம் திகதி நடந்ததாக தெரியவருகின்றது.

 

பலவித செல்வங்களும் பெற்று நீடூழி வாழ்க!!🙌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னெண்டா.....

 

…ஒண்டுமில்லை... 

சொன்னாப்போல.... அய்யா, மோனோட வந்திட்டார் போலை கிடக்குது.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய திருமண நல் வாழ்த்துக்கள் .........இவர்களின் சொத்துக்கள் இவர்களுக்கு பின் யாருக்கு போகும் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 தன்பாலின சேர்க்கை என்பது அவரவர் உரிமை , அதை பிறர் விமர்சிக்கவோ அவர்களை தொந்தரவு செய்யவோ சட்டத்திலும் தர்மத்திலும் இடம் கிடையாது என்ற கொள்கைகளை கொண்ட நாடுகளில் வாழ்வதால் இது அவர்களின் தனிப்பட்ட விசயம் .

திருமண வாழ்த்துக்கள்.

ஆனால் ஒரே ஒரு கவலை இப்படியே பெண்கள் தன்னின சேர்க்கையாளர்களாக  போனால் ஆண்கள் எதிர்காலத்தில் என்ன செய்வது? 

அதைதான் ஐயரின் கை  சிம்பாலிக்கா சொல்லுதாக்கும்.

Bild

அதாவது கையை கட்டிக்கொண்டு அமைதியா போகவேண்டியதுதான் எண்டு சொல்ல வாறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் என்று  சொல்லி என்னை  நானே  ஏமாற்ற  விரும்பவில்லை

இயற்கைக்கு எதிரானவற்றிற்கு  எதிராக  குரல்  கொடுக்க  பின்னிற்கக்கூடாது

அது  நாளை நம் கதவை  தட்டும்?😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணமக்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.💐💐💐

அத்துடன் தோழனாக நிற்கும் தோழிக்கும் (அப்படித்தான் வீடியோவில் தெரிகின்றது) பாராட்டுக்கள்👍🏾

49 minutes ago, valavan said:

ஆனால் ஒரே ஒரு கவலை இப்படியே பெண்கள் தன்னின சேர்க்கையாளர்களாக  போனால் ஆண்கள் எதிர்காலத்தில் என்ன செய்வது? 

 

கவலை வேண்டாம். விந்து வங்கி ஆண்களுக்கு திறந்தே உள்ளது😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

மணமக்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.💐💐💐

அத்துடன் தோழனாக நிற்கும் தோழிக்கும் (அப்படித்தான் வீடியோவில் தெரிகின்றது) பாராட்டுக்கள்👍🏾

 

ஒரு சிறு  சந்தேகம்

இதையே  உங்கள் பிள்ளை  செய்தால்??

எந்தவித உதறலுமற்று

இதேபோல்  வாழ்த்து  சொல்வீர்களா???

(ஒரு  உறவு என்ற  ரீதியில்  கேட்கிறேன் தவறாக இருந்தால்  பதில் தரவேண்டாம்)

Link to comment
Share on other sites

1 minute ago, விசுகு said:

 

ஒரு சிறு  சந்தேகம்

இதையே  உங்கள் பிள்ளை  செய்தால்??

எந்தவித உதறலுமற்று

இதேபோல்  வாழ்த்து  சொல்வீர்களா???

(ஒரு  உறவு என்ற  ரீதியில்  கேட்கிறேன் தவறாக இருந்தால்  பதில் தரவேண்டாம்)

நானும் வாழ்த்துச் சொன்னவன் என்ற முறையில் இதற்கான என் நேர்மையான பதில்

கண்டிப்பாக நான் எதிர்க்க மாட்டேன் 

உங்களுக்கு என் பிள்ளைகளையும் தெரியும் என்பதுடன் அவர்கள் பதின்ம வயதில் உள்ளார்கள் என்றும் தெரியும். எனவே இங்கு சும்மாச்சும் சொல்ல முடியாது. 

என் பிள்ளைகளின் எந்த நியாயபூர்வமான ஆசைகளுக்கும் எதிர்ப்பார்ப்புகளுக்கும் எந்தவிதத்திலும் நான் குறுக்கா நிற்பதும் இல்லை. அத்துடன் அதற்கான உரிமையும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நிழலி said:

நானும் வாழ்த்துச் சொன்னவன் என்ற முறையில் இதற்கான என் நேர்மையான பதில்

கண்டிப்பாக நான் எதிர்க்க மாட்டேன் 

உங்களுக்கு என் பிள்ளைகளையும் தெரியும் என்பதுடன் அவர்கள் பதின்ம வயதில் உள்ளார்கள் என்றும் தெரியும். எனவே இங்கு சும்மாச்சும் சொல்ல முடியாது. 

என் பிள்ளைகளின் எந்த நியாயபூர்வமான ஆசைகளுக்கும் எதிர்ப்பார்ப்புகளுக்கும் எந்தவிதத்திலும் நான் குறுக்கா நிற்பதும் இல்லை. அத்துடன் அதற்கான உரிமையும் இல்லை.

ஆனால் நான்கேட்ட கேள்வி வேறு  நிழலி

எந்தவித உதறலுமற்று

இதேபோல்  வாழ்த்து  சொல்வீர்களா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

 

ஒரு சிறு  சந்தேகம்

இதையே  உங்கள் பிள்ளை  செய்தால்??

எந்தவித உதறலுமற்று

இதேபோல்  வாழ்த்து  சொல்வீர்களா???

(ஒரு  உறவு என்ற  ரீதியில்  கேட்கிறேன் தவறாக இருந்தால்  பதில் தரவேண்டாம்)

விசுகு அண்ணா உங்கள் புரிதலில் தவறு உள்ளது, நீங்கள் வாழுகின்ற தேசத்தின் சட்டப்படி நீங்கள் உங்களுக்கு விருப்பமில்லாத ஒன்றை செய்யாதுவிடலாம், ஆனால் மற்றவர்கள் அதை செய்யகூடாது என்று சொல்ல எமக்கு எந்த உரிமையும் இல்லையென்பதே நாடுகளின் சட்டம்.

வாழ்வு தந்த நாடுகளின் சட்டங்களை,அவர்களின் உரிமைகளை  மதிப்பவர்களாயிருந்தால் நீங்களும் ஒரு வாழ்த்தை தட்டிவிடலாம் தவறில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, valavan said:

ஆனால் ஒரே ஒரு கவலை இப்படியே பெண்கள் தன்னின சேர்க்கையாளர்களாக  போனால் ஆண்கள் எதிர்காலத்தில் என்ன செய்வது? 

 

மிக முக்கியமான விடயத்தை தொட்டிருக்கிறீர்கள்....

கோழியில் பெண்கோழி, மாட்டில், ஆட்டில் பெண் இனம் என மனிதன், முட்டை, பால், இறைச்சி என பேராசை கொண்டு வளர்ப்பதால், இவைகளில் ஆண் இனமே ஒரு வாரத்தில் அழிக்கப்படுகின்றன அல்லது உண்ணப்படுகின்றன.

இது புரிந்ததால், அதிர்ந்து போன பிரிட்டிஸ் மக்களிடையே, மரக்கறி உணவு, 750 வீதம் வரை கடந்த நாலு ஆண்டுகளில் அதிகரித்துள்ளது.

இந்த வகையில் மனித இனத்தில், ஆண்கள் தேவையில்லை என்ற நிலைக்கு வந்துள்ளோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, valavan said:

விசுகு அண்ணா உங்கள் புரிதலில் தவறு உள்ளது, நீங்கள் வாழுகின்ற தேசத்தின் சட்டப்படி நீங்கள் உங்களுக்கு விருப்பமில்லாத ஒன்றை செய்யாதுவிடலாம், ஆனால் மற்றவர்கள் அதை செய்யகூடாது என்று சொல்ல எமக்கு எந்த உரிமையும் இல்லையென்பதே நாடுகளின் சட்டம்.

வாழ்வு தந்த நாடுகளின் சட்டங்களை,அவர்களின் உரிமைகளை  மதிப்பவர்களாயிருந்தால் நீங்களும் ஒரு வாழ்த்தை தட்டிவிடலாம் தவறில்லை.

சட்டத்தை நான்  புரிந்து  கொள்கின்றேன் 

இப்படி  திருமணம்  எனக்கு  உறவான இடத்திலேயே  ஏற்கனவே  நடந்திருக்கிறது

(பெற்றோர் இன்றும் மன நெரிசலிலேயே  உள்ளனர்)

அதல்ல  கேள்வி?

இங்கே  வாழ்த்து சொல்லும்  எத்தனைபேர் மனதார அதை ஏற்று எந்த  வித  பாகுபாடுமற்று வாழ்த்தும் பக்குவத்துக்கு  வந்துள்ளனர்?? என்பதே???

என்னைப்பொறுத்தவரை இன்னும்  சில  தலைமுறை  போகணும்?

இப்ப  சொல்வதெல்லாம் தம்மை தயாராக்குதல்  மட்டுமே...

ஆனால்  தயாராகி  விட்டோம் என்று  வெளியில் காட்டுகிறார்கள்

உண்மை  நிலை அதுவல்ல என்பது  தான் நிஐம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, விசுகு said:

 

ஒரு சிறு  சந்தேகம்

இதையே  உங்கள் பிள்ளை  செய்தால்??

எந்தவித உதறலுமற்று

இதேபோல்  வாழ்த்து  சொல்வீர்களா???

(ஒரு  உறவு என்ற  ரீதியில்  கேட்கிறேன் தவறாக இருந்தால்  பதில் தரவேண்டாம்)

எதுவித உதறுதலும் இருக்காது @விசுகுஐயா. பிள்ளைகள் வளரும் மேற்கு நாடுகளில் தன்பாலீர்ப்பினரை  விலக்கும் வழக்கம் அருகிக்கொண்டு வருகின்றது. எனினும் அவர்களுக்கு எதிரான வன்முறைகளும், இழிசொற்களால் திட்டுவதும் இன்னும் ஒழியவில்லை. 

பிள்ளைகள் தமக்குப் பிடித்தமான வாழ்வை அவர்களே தீர்மானிக்க விட்டுவிடவேண்டும் என்பதே என் கொள்கை. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, விசுகு said:

ஆனால் நான்கேட்ட கேள்வி வேறு  நிழலி

எந்தவித உதறலுமற்று

இதேபோல்  வாழ்த்து  சொல்வீர்களா???

வாழ்த்து சொன்னவன் என்றவகையில்.

உறுத்தலோடு வாழ்த்து சொல்லுவேன்.

அவர்கள் செய்தால், செய்வதில் எந்த தப்புமே இல்லை என்பதை நான் (முன்பு அல்ல) இப்போது நன்கு விளங்கி கொள்கிறேன். பாலியல் என்பது ஒரு தெரிவு அல்ல அது உள்ளார்ந்த உந்தல் (innate) என்பதை என் மனது ஏற்று கொள்கிறது. 

ஆனால் என் சமூகம் இன்னும் இந்த புரிதலுக்கு வரவில்லை என்ற உண்மையும் எனக்கு தெரியும். 

ஆகவே அவர்கள் இப்படி செய்தால், இந்த சமூகம் என்னையும், நான் சார்ந்தவர்களையும், அவர்களையும் இப்படி பேசு பொருளாக்கும் கேலி பேசும், யாழில் வந்து பல்லின் மேல் நாக்கை போட்டு இளிக்கும் என்பதும் எனக்கு விளங்கிறது.

ஆகவே நிச்சயம் இந்த சமூகத்யின் எதிர்வினையை இட்டு உறுத்தல்…..இல்லை பயம் இருக்கும்.

Link to comment
Share on other sites

22 minutes ago, விசுகு said:

ஆனால் நான்கேட்ட கேள்வி வேறு  நிழலி

எந்தவித உதறலுமற்று

இதேபோல்  வாழ்த்து  சொல்வீர்களா???

கண்டிப்பாக விசுகண்ணா. இதில் எனக்கு எந்த உறுத்தலும் இல்லை. என் பிள்ளைகள் தவறான வழியில் சென்று (போதைப் பொருள் பாவனை போன்ற), தவறான வழியில் பணம் ஈட்டினால் தான் உறுத்தலும் கவலையும் ஏற்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முரண்நகை - இந்த பெண்கள் இருவரும் மிக தைரியமாக தமது பாலின தெரிவை முன்னிலைபடுத்துகிறனர். ஒரு புரோகிதர் பழைய வழக்கத்தை உடைத்து தன் முகத்தை காட்டி இதை செய்து வைக்கிறார். துணிச்சல் மிக்க செயல்.

ஆனால் இதை கேலி பேசும் பலர் இந்த கேலியை சொந்த பெயரில் செய்ய முடியாது. செய்தால் இருக்கும் நாட்டில் சட்டம் பாயும்.

இதில் யார் பேடி?

Link to comment
Share on other sites

3 minutes ago, goshan_che said:

 

ஆகவே நிச்சயம் இந்த சமூகத்யின் எதிர்வினையை இட்டு உறுத்தல்…..இல்லை பயம் இருக்கும்.

என் உறவுகளில் ஒரு பிள்ளை தான் ஓரினச்சேர்க்கையாளர் என்றதை பெற்றோருக்கு மறைமுகமாக சொன்னார். அவர்களால் அவனை புரிந்து கொள்ள முடிந்தாலும், "என்ற சொந்தம் எல்லாம் எப்படி என்னை கேவலமாக பார்க்கும்" என்ற கடும் மனவுளைச்சலில் உள்ளார்.

மற்றவர்களின் எம்மைப் பற்றிய அபிப்பிராயம் என்பது என்னைப் பொறுத்தவரைக்கும் நாய் குலைப்பது போன்றது. திருப்பி உறுதியாக நின்றால் குலைக்கும் நாய் வாலைச் சுருட்டிக் கொண்டு ஓடிவிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

வாழ்த்துகள் என்று  சொல்லி என்னை  நானே  ஏமாற்ற  விரும்பவில்லை

இயற்கைக்கு எதிரானவற்றிற்கு  எதிராக  குரல்  கொடுக்க  பின்னிற்கக்கூடாது

அது  நாளை நம் கதவை  தட்டும்?😢

 
அண்ணா தட்டினால் திறப்பது தான் எமது பண்பாடு.  வளமாக வாழ வாழ்த்துவோம். 

Link to comment
Share on other sites

பொதுவாக யாழ் இணையத்தில் தனிப்பட்டவர்களின் வாழ்கையில் நிகழும் சம்பவங்கள்,வைபங்கள், சொந்த விடயங்கள் பற்றி இணைப்பதை தவிர்க்க சொல்வதுண்டு. தனிப்பட்டவர்களின் தனியுரிமையை அது மீறுகின்றது என்பதனால். ஆனால் இந்த பெண்களின் திருமண விடயம் புலம்பெயர் தமிழ் செய்தித் தளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பரவலாக பகிரப்படுவதாலும், கட்டுண்ட சமூகம் ஒன்று கட்டுடைப்பை செய்ய எத்தனிப்பதை வெளிக்காட்டுவதாலும் பண்பான முறையில் தொடர்ந்து கருத்தாடுவது ஆரோக்கியமானது என நினைக்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, விசுகு said:

சட்டத்தை நான்  புரிந்து  கொள்கின்றேன் 

இப்படி  திருமணம்  எனக்கு  உறவான இடத்திலேயே  ஏற்கனவே  நடந்திருக்கிறது

(பெற்றோர் இன்றும் மன நெரிசலிலேயே  உள்ளனர்)

அதல்ல  கேள்வி?

இங்கே  வாழ்த்து சொல்லும்  எத்தனைபேர் மனதார அதை ஏற்று எந்த  வித  பாகுபாடுமற்று வாழ்த்தும் பக்குவத்துக்கு  வந்துள்ளனர்?? என்பதே???

வாழும் உலகத்தை பொறுத்து எமது புரிதல்கள் வேறுபடுகின்றன.

இலங்கையில் இருந்திருந்தால் நிச்சயமாக பலர் இதற்கு வாழ்த்து சொல்லவேமாட்டார்கள், கேலிதான் பண்ணுவார்கள். இவர்களிடமிருந்து ஒதுங்கியிருப்பார்கள்.

ஏனெனின் ஆணும் பெண்ணும் காதல் செய்தாலே சாதி மதம் மொழி ஏரியா அந்தஸ்து என்று பிரித்து பார்க்கும் சமூகம் நாம்.

இதை எல்லாம் விட்டு வைப்போமா?

ஆனால் புலம்பெயர்ந்தபின் அடுத்தவன் உணர்வை உரிமையை மதிக்கணும் எமக்கு சம்பந்தமில்லாத விசயங்களில் தலையிடகூடாது,  

இரு உயிர்கள் வாழ பிற உயிர்களின் அனுமதி தேவையில்லை போன்ற பல நாகரிகங்களை விரும்பியோ விரும்பாமலோ கடைபிடிக்கிறோம் அல்லது கடைபிடிக்க சொல்லி அறிவுறுத்தபடுகிறோம் அதனால், அந்த வாழ்வை நாம் விரும்பாவிடினும் அடுத்தவர் வாழ்க்கைமுறையை குறை சொல்லவேண்டிய தேவை நமக்கு இல்லை என்பதே என் எண்ணம்.

ஆனால் எம் சமூகத்தில் இதுபோன்ற உறவுமுறைகள் ஏற்படும்போது அதை முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளும் பழக்கம் ஏற்பட பல தசாப்தங்கள் கடந்தாலும் முழுமையாக ஒருபோதும் ஏற்படாது என்ற உங்கள் கருத்து சரிதான்.

ஒரு பொது விழாக்கள் ஒன்றுகூடல் இடங்களில் நின்றபடி எம் பெற்றோர்,

என் மகன் ஒரு கம்பி காய் என்றோ..என் மகள் ஒரு சாப்பை என்றோ பெருமையாக பிறருக்கு சொல்லி கொள்ளும் நிலை எம் சமூகத்தில் இன்னும் பல தசாப்தங்களுக்கு சாத்தியமில்லை என்பது மட்டும் நிதர்சனம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.