Jump to content

கனடாவில் இடம்பெற்ற இந்து சமய முறையிலான தன்பால் ஈர்ப்புடைய ( lesbian) பெண்களின் திருமணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

நாங்கள் எப்படி எந்தவித தயக்கமும் பயமுமின்றி எங்களுக்கு பிடித்தமாதிரி வாழ்கிறோம், அதை செய்ய தன்னினசேர்க்கையாளர்களுக்கும் உரிமையுண்டு.. அவர்கள் தன்னினச்சேர்க்கையென்பதால் தயக்கத்துடனும் பயத்துடனும் வாழவேண்டும் என எதிர்பார்ப்பது பிழை எனக்கூறினால் தனிப்பட்ட முறையில் நீங்கள் அப்படி செய்வீர்களா? இப்படி செய்வீர்களா.. அல்லது அந்த மாதிரி ஆட்கள் etc என வகைப்படுத்துகிறார்கள்.. இந்த மனநிலைகள் எனக்கு விளங்குவதில்லை.. 

இரண்டாவது பெற்றோர்கள் சரியான முறையில் வளர்த்தால் இந்தமாதிரி தன்பாலின கவர்ச்சியுடைய பிள்ளைகள் இருக்கமாட்டார்கள் எனவும் எழுதப்பட்டது.. பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சகல அத்தியாவசிய தேவைகளுடன் கல்வி, கலாச்சாரம், பழக்கவழக்கங்களையும், உணர்வுகளையும் உரிமைகளையும் கற்றுக்கொடுத்தும் மதிக்கவும் சொல்லி கொடுத்து வளர்க்கையில்  பிள்ளைகள் தங்களது உணர்விற்கு மதிப்பளித்து துணையை தேர்ந்தெடுப்பதை எவ்வாறு பெற்றோர் சொல்லிவளர்த்தால் இப்படி செய்யமாட்டார்கள் என கூறமுடியும்? 


இரு மனிதர்கள்(ஆண்-ஆண், பெண்-பெண்) தங்களுக்குள் ஏற்பட்ட இயற்கையான உணர்வை மதித்து சேர்ந்து வாழ்வதையும் தங்களுக்கு பிடித்த சமயத்திலும், சட்டரீதியாகவும் செய்யமுற்படுவதையும் பிழையென கூறமுடியாது..ஏனெனில் திருமணம் என்பது தனியே உடலுறவை மட்டும் சார்ந்தது இல்லை.. அதேபோல கட்டாயம் சந்ததி பெருக்கமாகவும் இருக்கவேண்டியதில்லை.. இரு பெண்கள்/இரு ஆண்கள் விரும்புகிறார்கள், திருமணம் செய்கிறார்கள். குழந்தைகள் வேண்டுமென்றால் பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள், அல்லது சமூகத்தின் கண்களில் தகாத உறவினால் பிறந்த பிள்ளைகளை தத்து எடுத்துவளர்கிறார்கள்..இல்லை வாடகைதாய், விந்து/முட்டை தானம் போன்றவற்றின் மூலம் பிள்ளைகளை பெறுகிறார்கள்..

குழந்தை வளர்ப்பும் சட்டசமூக பிரச்சனைகளும் - இதற்காகவே இதை சட்டமாக்கினார்கள்.. நாங்கள் எப்படி கணவனோ மனைவியோ இறந்தால் தனியாகவோ, இல்லை மறுமணம் செய்து, குழந்தைகளுடன் வாழ்கிறோமோ அதுபோலவே அவர்களும் இருக்கிறார்கள்.. குழந்தையும் அதனை வளர வளர தன் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றுகிறது. குழந்தைகளின் எதிர்கால பாதுகாப்பு முன்பே ஒழுங்காக இருந்திருக்குமாயின் ஏன் foster cares உருவானதே தெரியவில்லை.. child abusers எல்லா வகையிலும் இருக்கிறார்கள். சட்டமும் சமூகமும் எத்தனை நடவடிக்கைகள் எடுத்தாலும் இந்த செயல்கள் நடந்துகொண்டுதானே உள்ளது.. 

தற்போது இந்த குடும்ப அமைப்புகளைப்பற்றி பாடசாலைகள் தொடங்கி அலுவலகங்கள் விளங்கப்படுத்தப்படுகிறது, தொலைகாட்சி நிகழ்ச்சிகள், பத்திரிக்கைகள் வரை எல்லா சமூக ஊடகங்களிலும் வருகிறது ஏனெனில் இந்த உறவுகள் எங்கள் சமூகத்தில் ஒரு அங்கம் என்பதால்தான், எல்லா சமூகங்களுக்கும் இதை ஏற்றுக்கொள்ள கடினம் என்றாலும் ஏற்றுக்கொண்டு போகிறார்கள், அரசும் தன்னலான நடவடிக்கைகளை எடுக்கிறது.. மக்கள் எதிர்ப்பையும் ஆதரவையும் காட்டுகிறார்கள்..


என்னைப்பொறுத்தவரை இந்த திருமணங்கள், உறவுகள் சமூகத்தில் உள்ளன.. ஏற்பதும் ஏற்காமல் விடுவதும் அவரவர் தனிப்பட்ட விடயம். அதற்காக தன்னினசேர்க்கை என்பதால் தயக்கத்துடனும் பயத்துடனும் வாழவேண்டும் என எதிர்பார்ப்பது பிழையான ஒன்று, மனித தன்மையற்றது
அவ்வளவுதான்.. 

மன்னிக்க வேண்டும் பிரபா , திரும்பவும் முதலில் இருந்தா?...இந்த திருமணத்தை எதிர்ப்பவர்கள் அதற்கான காரணங்களை எழுதி விட்டார்கள் . ஆனால் ஆதரிப்பவர்களோ தொடர்ந்தும் ஒரே பல்லவியான அவர்களது வாழ்க்கை , அவர்களது உரிமை என்று பாடி கொண்டு ...அதை நாங்களும் ஒத்து கொள்கிறோம் ....3 வருசமாய் ஐயரை தேடிக் கொண்டு இருந்தவையாம் . அதுக்கு எவ்வளவு காலத்திற்கு முந்தி ரிலேஷன்சிப் இருந்திருக்கும்?[அதை  பிழை என்று சொல்லவில்லை.]...அப்படியே வாழ்ந்திருக்கலாமே !...அவர்கள் குடும்பங்கள் நிம்மதியாய் இருந்திருக்கும் . ஏன் இந்த ஐயருக்கு கூட பிரச்சனை வந்திருக்காது ....இவர்கள் இத் திருமணத்தை நடத்தினதே தங்களை மற்றவர்கள் ஏதோ புரட்ச்சியாளர்கள் என்று சொல்லட்டும் என்ற காரணத்தினாலும், பெற்றோரை பழி வாங்குவதற்காகவும் தவிர வேறு ஒன்றும் இல்லை .

பெற்றோர் கல்வி ,கலாச்சாரம் ,பழக்க வழக்கம் சொல்லி கொடுக்கிறார்கள் . ஆனால் , ஆண் ,பெண் ரிலேசன்சிப் பற்றி சொல்லிக் கொடுக்கிறார்களா?
 

Link to comment
Share on other sites

  • Replies 386
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

சிறி அண்ணா 17 பக்கம் எண்டு பெரிய அளவில டார்கெட் போட்டுட்டார். ஆனாலும் எல்லாரும் கைபோட்டு 12 ஆக்கியாச்சு.🤣

GIF workplace - animated GIF on GIFER

கோசான்.... இதில் உங்களது கடுமையான, உழைப்பை தான்... கெளரவிக்க வேண்டும்.
300 பதிவுகளில்... 45 பதிவுகள் மட்டும், உங்களுடையது. 👍
கொரோனா கட்டுப் பாட்டுக்குள் வந்தவுடன், உங்களுக்கு ஒரு விழா எடுக்க வேணும். 🤣

நான்கு  நாட்கள்... 64 பதிவுகளிலிருந்து 74 பதிவுகள் போட்டு,  வெற்றி விழா கொண்டாயிருக்கு. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

நாங்கள் எப்படி எந்தவித தயக்கமும் பயமுமின்றி எங்களுக்கு பிடித்தமாதிரி வாழ்கிறோம், அதை செய்ய தன்னினசேர்க்கையாளர்களுக்கும் உரிமையுண்டு.. அவர்கள் தன்னினச்சேர்க்கையென்பதால் தயக்கத்துடனும் பயத்துடனும் வாழவேண்டும் என எதிர்பார்ப்பது பிழை எனக்கூறினால் தனிப்பட்ட முறையில் நீங்கள் அப்படி செய்வீர்களா? இப்படி செய்வீர்களா.. அல்லது அந்த மாதிரி ஆட்கள் etc என வகைப்படுத்துகிறார்கள்.. இந்த மனநிலைகள் எனக்கு விளங்குவதில்லை.. 

தன்னின சேர்க்கையாளர்களுக்கு எல்லாவித உரிமையும் உள்ளது அதை யாரும் இங்கு மறுதலிக்கவில்லையே. அதை சமய சடங்குகளுடன் நடத்தும்போது  அதற்கு சமய கலாச்சார அங்கீகாரம் உள்ளதாக நினைத்து அதில் கலந்துகொள்ளும் சிறுவர்களும், டீனேஜ் பிள்ளைகளும் இதை ஒரு முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு நாமும் செய்து பார்க்கலாமே என்ற மனநிலை ஏற்படாதா? ஏன் யாரும் இந்த கோணத்தில் யோசிக்காமல் அது அவர்களின் உரிமை, கூந்தல் மண்ணாங்கட்டி என்று பாடமெடுக்கிறீர்கள் என்று புரியவில்லை! இனி அடல்ட்ஸ் ஒன்லி படங்களுக்கு டீனேஜ் பிள்ளைகளையும் கூட்டிச்சென்றுபார்க்கலாம் என்று சொல்லும் மனநிலைக்கு வந்துவிடுவீர்கள் போலுள்ளது.

இந்த நிகழ்வுகளெல்லாம் பாலிச்சையால் அல்லது குடும்பம் பிள்ளைகள் என்ற பொறுப்புகளை ஏற்கமுடியாதவர்கள் எடுக்கும் ஒரு short term decision மட்டுமே. யாரோ  விலங்குகளிலும் இவ்வாறான நடைமுறை இருப்பதாக எழுதியிருந்தார்கள். அது பக்கத்தில் ஒரு எதிர்பாலின துணை இல்லாதபோது தனது இச்சையை தீர்க்க எடுக்கப்படும் முடிவேயன்றி அவை காலம் முழுவதும் அப்படியே வாழ்வதில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Kandiah57 said:

ஒருபால் திருமணத்தின் மூலம் பிள்ளைகள் பெற வாய்ப்பு இல்லை எனவே சட்டப் பாதுகாப்பு தேவையில்லை பிரியும்” போது தனி தனியாக போகவேண்டியாது  தான்    சேர்த்து சொத்து வேண்டி இருத்தல் இரண்டாக பிரியும்  தனி தனியாக வேண்டியதுக்கு சட்டம் தேவைப்படலாம் 

சரியான கருத்தல்ல! biological children பெறமுடியா விட்டாலும் தத்தெடுத்து வளர்க்க, அல்லது வாடகைத் தாய் மூலம் பெற்று வளர்க்க மேற்கு நாடுகளில் அனுமதியுண்டு. அந்தக் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அவசியம் - எனவே தான் இவை சட்ட ரீதியான இணைவாக அங்கீகரிக்கப் பட வேண்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

 

இந்த நிகழ்வுகளெல்லாம் பாலிச்சையால் அல்லது குடும்பம் பிள்ளைகள் என்ற பொறுப்புகளை ஏற்கமுடியாதவர்கள் எடுக்கும் ஒரு short term decision மட்டுமே. யாரோ  விலங்குகளிலும் இவ்வாறான நடைமுறை இருப்பதாக எழுதியிருந்தார்கள். அது பக்கத்தில் ஒரு எதிர்பாலின துணை இல்லாதபோது தனது இச்சையை தீர்க்க எடுக்கப்படும் முடிவேயன்றி அவை காலம் முழுவதும் அப்படியே வாழ்வதில்லை!

மன்னிக்க வேண்டும் எப்போதும் தமிழன்! தன்னினச் சேர்க்கையாளர் பற்றி நீங்கள் சொல்லியிருக்கும் இந்த அவதானங்களுக்கு ஆதாரங்கள் இருக்கின்றனவா? எனக்கு இது உங்கள் அபிப்பிராயமாகத் தான் தெரிகிறது.

ஆண்டுக் கணக்காக சேர்ந்து வாழும், ஏனைய மனிதர்கள் போல வாழும் ஓரின இணைகள் இப்போது அதிகரித்திருக்கிறார்கள். முன்னர் இவை living together ஆக மட்டுமிருக்க திருமணம் சட்ட ரீதியாக இருக்காமையே காரணம். எனவே உங்கள் இந்த குறுகின பாலுணர்வு விகாரம் என்பது ஆதாரங்களில்லாத அபிப்பிராயம் மட்டுமே!

மேலும்: பிரபாவிடம் நீங்கள் கேட்ட "பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாக அமைந்து விடாதா?" என்ற கேள்விக்கு என் பதில்! - இது சகஜமான விடயமென பிள்ளைகளுக்குத் தெரிய வேண்டும். அவ்வாறு தெரிந்தாலும், வளர்ந்த பிள்ளைகள் தங்கள் sexual orientation இனை  இதை வைத்து கட்டாயமாக மாற்றிக் கொள்ளப் போவதில்லை. ஏனெனில் இது நீங்கள் நினைப்பது போல ஒரு பேஷன் அல்ல!

மேலும், இவ்வாறு ஓரின உறவு சகஜம் என்று அறிவூட்டப் படாத பிள்ளைகள் தான் மேலே வளவன் இணைத்த செய்தியில் இருக்கும் வெறுப்பாளர்களாகவும் வன்முறையாளர்களாகவும் மாறுகிறார்கள். எனவே இது இளம் பிள்ளைகளிடையே சகஜமான விடயமாக காட்டப் படுவது நன்மையே! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

தன்னின சேர்க்கையாளர்களுக்கு எல்லாவித உரிமையும் உள்ளது அதை யாரும் இங்கு மறுதலிக்கவில்லையே

 மறுக்கிறீர்கள் எப்படியென்றால் அவர்கள் தயக்கத்துடனும் பயத்தைடனும் வாழ வேண்டும் என்ற கருத்தின் மூலம்.

2 hours ago, Eppothum Thamizhan said:

சமய சடங்குகளுடன் நடத்தும்போது  அதற்கு சமய கலாச்சார அங்கீகாரம் உள்ளதாக நினைத்து அதில் கலந்துகொள்ளும் சிறுவர்களும், டீனேஜ் பிள்ளைகளும் இதை ஒரு முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு நாமும் செய்து பார்க்கலாமே என்ற மனநிலை ஏற்படாதா?

இதற்கான பதில், இருக்காது ஏனெனில் இவை இங்கே இந்த சமயசடங்குகளிற்கு போய்தான் அறியவேண்டுமென்பதில்லை.. பாடசாலைகள் தொடங்கி அலுவலகங்கள், தொலைகாட்சிகள், பத்திரிக்கைகள், ஏன் சனத்தொகை வாக்குஎடுப்பு பத்திரத்தில் கூட கேள்விகள் உள்ளது.. அவர்களுக்கு முன்னுதாரணங்கள் நிறையவே உள்ளது..ஆகையால் இதையெல்லாம் பார்த்துதான் அவர்கள் மாற வேண்டும் என்பதில்லை..  

 

2 hours ago, Eppothum Thamizhan said:

இந்த நிகழ்வுகளெல்லாம் பாலிச்சையால் அல்லது குடும்பம் பிள்ளைகள் என்ற பொறுப்புகளை ஏற்கமுடியாதவர்கள் எடுக்கும் ஒரு short term decision மட்டுமே. 

seriously அண்ணா! how do you know? ஏதாவது தரவுகள்? இங்கே நிறையவே இதைப்பற்றி கருத்துகள் பகிரப்பட்டுள்ளன.. 

உங்களுக்கும் எனக்கும் எங்களது எதிர்பாலினத்தில்தான் ஈர்ப்பு வருகிறது.. இது இயற்கையாகவே ஏற்படுகிறது.. யாரும்  என்னை வற்புறுத்தவில்லை, உங்களையும் வற்புறுத்தவில்லை இல்லையா! இயற்கையாகவே வருகிறது.. அதை ஏற்றுக்கொள்ளும் உங்களால் ஏன் இன்னொரு மனிதர் தனக்கு தன்னினத்தை சேர்ந்தவருடன் இயற்கையாகவே வரும் உணர்வை ஏற்க முடியவில்லை..ஏனெனில் வழமைக்கு மாறானது என நீங்கள் நினைப்பதனால்  ஏற்கமுடியவில்லை.. இது உங்களது தனிப்பட்ட கருத்து, அதை எல்லோரும் மதிக்கிறோம். உங்களை மாறவேண்டும் எனக்கூட கேட்கவில்லை.. 

ஆனால் நாங்கள் அவர்களும் எங்களைப்போன்ற சகமனிதர்கள் என்பதால் அவர்களது உணர்வுகளை மதிக்கிறோம்.. என்ற கருத்தை மதிக்க ஏன் உங்களால் முடியவில்லை? 

உங்களுக்கு வாழ்த்த விருப்பமில்லை எனக்கு வாழ்த்த முடிகிறது.. அவ்வளவுதான்..
 

உங்களில் உள்ள மரியாதை, மதிப்பு காரணமாகவே இவ்வளவையும் எழுதுகிறேன்.. இல்லாவிடில் உண்மையில் எழுதியிருக்கமாட்டேன், ஏனெனில்

- இது இயற்கையானது ஆனால் வழமைக்குமாறானது.. 

- இது அடிப்படை தனிமனித உரிமை. ஒப்பிட்டளவில் சிறுபாண்மை என்பதால் அவர்களுக்கான உரிமையை மறுப்பது தவறு

- இதற்கும் பெற்றோரின் வளர்ப்பிற்கும் சம்பந்தமில்லை.. இயல்பாக ஏற்படும் உணர்வு/விருப்பம்/desire ..அதை சமூகத்திற்காக அடக்க சொல்வது தவறு 

- கிட்டதட்ட 30 நாடுகளில் சட்டரீதியாக அங்கரிக்கப்பட்டுள்ளது.. குழந்தைகளின் நலன் கருதி சட்டரீதியாக கொண்டுவரப்பட்டுள்ளது

- சகல இடங்களிலும் இதைப்பற்றிய விளக்கங்கள் உள்ளன

- எங்களது இந்து சமயத்தில் இதைப்பற்றி மெளனமாகவே இருக்கிறார்கள் அதற்கு என்ன காரணம்

- விலங்களிலும் உள்ளன.. 

- இதில் புரட்சியாக செய்வது, முற்போக்காக காட்டுவது என்பதை விட ஒரு மனிதன் இன்னொரு மனிதனை மதிப்பதும் அவர்களது உணர்வுகள் உரிமைகளை மதிப்பது என்ற அடிப்படை உணர்வு 

- யாரையும் வாழ்த்த சொல்லி கட்டயாப்படுத்தவில்லை. 

- கட்டாயம் sexual pleasureதான் இருக்கவேண்டியதில்லை என்பதால் அவர்களது sexual satisfaction பற்றி கவலைப்படத்தேவையில்லை.

- sexual consent  

இதைவிட வேறு ஏதாவது?  Did I miss anything? 

இப்படி பல தரவுகள் கிட்டதட்ட 13 பக்கங்களில் கருத்துகள் பகிரப்பட்டுள்ளன.. 

இதற்கு மேல்.. முடியவில்லை..

இன்னொரு விடயம், இதைப்பற்றி பெரிதுபடுத்த தேவையில்லை என்றால் இதை இங்கே கடந்து போகும் மற்றைய செய்திகள் போல கடந்து போயிருக்கலாம் வாழ்த்துபவர்கள் மனமார வாழ்த்தினால் என்ன இல்லாவிட்டால்தான் என்ன! பெரிதுபடுத்தவேண்டிய விடயம் இல்லை என்றால் கடந்து போயிருக்கலாம் தானே..

 உங்களைப்போன்றே மற்றைய சக கருத்தாளர்களும் தங்களது கருத்தை எழுதுகிறார்கள்..  நீங்கள் எழுதுவது வகுப்பெடுப்பதில்லை என்றால் நான் எழுதுவதும் பாடம் எடுப்பதில்லை அண்ணா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

உங்களில் உள்ள மரியாதை, மதிப்பு காரணமாகவே இவ்வளவையும் எழுதுகிறேன்.. இல்லாவிடில் உண்மையில் எழுதியிருக்கமாட்டேன், ஏனெனில்

- இது இயற்கையானது ஆனால் வழமைக்குமாறானது.. 

- இது அடிப்படை தனிமனித உரிமை. ஒப்பிட்டளவில் சிறுபாண்மை என்பதால் அவர்களுக்கான உரிமையை மறுப்பது தவறு

- இதற்கும் பெற்றோரின் வளர்ப்பிற்கும் சம்பந்தமில்லை.. இயல்பாக ஏற்படும் உணர்வு/விருப்பம்/desire ..அதை சமூகத்திற்காக அடக்க சொல்வது தவறு 

- கிட்டதட்ட 30 நாடுகளில் சட்டரீதியாக அங்கரிக்கப்பட்டுள்ளது.. குழந்தைகளின் நலன் கருதி சட்டரீதியாக கொண்டுவரப்பட்டுள்ளது

- சகல இடங்களிலும் இதைப்பற்றிய விளக்கங்கள் உள்ளன

- எங்களது இந்து சமயத்தில் இதைப்பற்றி மெளனமாகவே இருக்கிறார்கள் அதற்கு என்ன காரணம்

- விலங்களிலும் உள்ளன.. 

- இதில் புரட்சியாக செய்வது, முற்போக்காக காட்டுவது என்பதை விட ஒரு மனிதன் இன்னொரு மனிதனை மதிப்பதும் அவர்களது உணர்வுகள் உரிமைகளை மதிப்பது என்ற அடிப்படை உணர்வு 

- யாரையும் வாழ்த்த சொல்லி கட்டயாப்படுத்தவில்லை. 

- கட்டாயம் sexual pleasureதான் இருக்கவேண்டியதில்லை என்பதால் அவர்களது sexual satisfaction பற்றி கவலைப்படத்தேவையில்லை.

- sexual consent  

இதைவிட வேறு ஏதாவது?  Did I miss anything? 

எதையும் மிஸ் பண்ணவில்லை. மிக நேர்த்தியாக அத்தனை தர்க்கத்தையும் தொகுத்துள்ளீர்கள்👏🏾.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

 மறுக்கிறீர்கள் எப்படியென்றால் அவர்கள் தயக்கத்துடனும் பயத்தைடனும் வாழ வேண்டும் என்ற கருத்தின் மூலம்.

இதற்கான பதில், இருக்காது ஏனெனில் இவை இங்கே இந்த சமயசடங்குகளிற்கு போய்தான் அறியவேண்டுமென்பதில்லை.. பாடசாலைகள் தொடங்கி அலுவலகங்கள், தொலைகாட்சிகள், பத்திரிக்கைகள், ஏன் சனத்தொகை வாக்குஎடுப்பு பத்திரத்தில் கூட கேள்விகள் உள்ளது.. அவர்களுக்கு முன்னுதாரணங்கள் நிறையவே உள்ளது..ஆகையால் இதையெல்லாம் பார்த்துதான் அவர்கள் மாற வேண்டும் என்பதில்லை..  

 

seriously அண்ணா! how do you know? ஏதாவது தரவுகள்? இங்கே நிறையவே இதைப்பற்றி கருத்துகள் பகிரப்பட்டுள்ளன.. 

உங்களுக்கும் எனக்கும் எங்களது எதிர்பாலினத்தில்தான் ஈர்ப்பு வருகிறது.. இது இயற்கையாகவே ஏற்படுகிறது.. யாரும்  என்னை வற்புறுத்தவில்லை, உங்களையும் வற்புறுத்தவில்லை இல்லையா! இயற்கையாகவே வருகிறது.. அதை ஏற்றுக்கொள்ளும் உங்களால் ஏன் இன்னொரு மனிதர் தனக்கு தன்னினத்தை சேர்ந்தவருடன் இயற்கையாகவே வரும் உணர்வை ஏற்க முடியவில்லை..ஏனெனில் வழமைக்கு மாறானது என நீங்கள் நினைப்பதனால்  ஏற்கமுடியவில்லை.. இது உங்களது தனிப்பட்ட கருத்து, அதை எல்லோரும் மதிக்கிறோம். உங்களை மாறவேண்டும் எனக்கூட கேட்கவில்லை.. 

ஆனால் நாங்கள் அவர்களும் எங்களைப்போன்ற சகமனிதர்கள் என்பதால் அவர்களது உணர்வுகளை மதிக்கிறோம்.. என்ற கருத்தை மதிக்க ஏன் உங்களால் முடியவில்லை? 

உங்களுக்கு வாழ்த்த விருப்பமில்லை எனக்கு வாழ்த்த முடிகிறது.. அவ்வளவுதான்..
 

உங்களில் உள்ள மரியாதை, மதிப்பு காரணமாகவே இவ்வளவையும் எழுதுகிறேன்.. இல்லாவிடில் உண்மையில் எழுதியிருக்கமாட்டேன், ஏனெனில்

- இது இயற்கையானது ஆனால் வழமைக்குமாறானது.. 

- இது அடிப்படை தனிமனித உரிமை. ஒப்பிட்டளவில் சிறுபாண்மை என்பதால் அவர்களுக்கான உரிமையை மறுப்பது தவறு

- இதற்கும் பெற்றோரின் வளர்ப்பிற்கும் சம்பந்தமில்லை.. இயல்பாக ஏற்படும் உணர்வு/விருப்பம்/desire ..அதை சமூகத்திற்காக அடக்க சொல்வது தவறு 

- கிட்டதட்ட 30 நாடுகளில் சட்டரீதியாக அங்கரிக்கப்பட்டுள்ளது.. குழந்தைகளின் நலன் கருதி சட்டரீதியாக கொண்டுவரப்பட்டுள்ளது

- சகல இடங்களிலும் இதைப்பற்றிய விளக்கங்கள் உள்ளன

- எங்களது இந்து சமயத்தில் இதைப்பற்றி மெளனமாகவே இருக்கிறார்கள் அதற்கு என்ன காரணம்

- விலங்களிலும் உள்ளன.. 

- இதில் புரட்சியாக செய்வது, முற்போக்காக காட்டுவது என்பதை விட ஒரு மனிதன் இன்னொரு மனிதனை மதிப்பதும் அவர்களது உணர்வுகள் உரிமைகளை மதிப்பது என்ற அடிப்படை உணர்வு 

- யாரையும் வாழ்த்த சொல்லி கட்டயாப்படுத்தவில்லை. 

- கட்டாயம் sexual pleasureதான் இருக்கவேண்டியதில்லை என்பதால் அவர்களது sexual satisfaction பற்றி கவலைப்படத்தேவையில்லை.

- sexual consent  

இதைவிட வேறு ஏதாவது?  Did I miss anything? 

இப்படி பல தரவுகள் கிட்டதட்ட 13 பக்கங்களில் கருத்துகள் பகிரப்பட்டுள்ளன.. 

இதற்கு மேல்.. முடியவில்லை..

இன்னொரு விடயம், இதைப்பற்றி பெரிதுபடுத்த தேவையில்லை என்றால் இதை இங்கே கடந்து போகும் மற்றைய செய்திகள் போல கடந்து போயிருக்கலாம் வாழ்த்துபவர்கள் மனமார வாழ்த்தினால் என்ன இல்லாவிட்டால்தான் என்ன! பெரிதுபடுத்தவேண்டிய விடயம் இல்லை என்றால் கடந்து போயிருக்கலாம் தானே..

 உங்களைப்போன்றே மற்றைய சக கருத்தாளர்களும் தங்களது கருத்தை எழுதுகிறார்கள்..  நீங்கள் எழுதுவது வகுப்பெடுப்பதில்லை என்றால் நான் எழுதுவதும் பாடம் எடுப்பதில்லை அண்ணா!!

What else can be said more than this? Thank you. !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தன்னினச் சேர்க்கையாளர்களை வெறுக்கவில்லை, ஆனால் அவர்களை ஊக்குவிக்கவுமில்லை என்று இங்கே கருத்திட்ட சிலருடைய கருத்துகள் உண்மையில் மென்மையான thinly veiled வெறுப்பை வெளிக்காட்டும் கருத்துகளாகவே தெரிகிறது. 

கோவேறு கழுதை உதாரணம்: இணைந்தால் சந்ததி தோன்ற வேணும், இல்லா விட்டால் அவர்களுக்கு மரியாதை சந்ததி உருவாக்கியோரை விடக் குறைவேயென்ற பிம்பம். அப்ப பிள்ளைகள் பெறாமல் இருக்கும் heterosexual இணைகளுக்கும் மரியாதை குறைவா? இது ஊரில் "மூளியை, மலடை, விதவையை சபையில் முன்னே விடாதே!" என்று சில பழசுகள் இரகசியமாகச் சொல்வதன் வேறு வடிவமேயொழிய வேறில்லை!

தன்னினச் சேர்க்கையாளர், இடைப்பாலினர், மாற்றுப் பாலினர் ஆகிய எல்லாருக்கும் ஏனைய மனிதர்கள் போல சாதாரண உணர்வுகளும், வாழ்க்கையும் உண்டு என்பதைச் சுவையாகச் சித்திருக்கும் அரிய புனைவு: அருந்ததி றோயின் அரிய படைப்பு.

வாசியுங்கள், உங்களுக்குத் தெரியாத உலகத்தை முதலில் அறிந்து கொள்ளுங்கள் - பின்னர் அபிப்பிராயங்களை உருவாக்குங்கள்:

புத்தக முகப்பு: நன்றியுடன் அமேசன் தளம்.   

51PRaeOEdAL._SX338_BO1,204,203,200_.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹோமோபோபியா உள்ள பலரின் முகத்தை காட்டிய திரி இது. 
வாழ்த்தத் தேவையில்லை, கடந்து போவோம் என்ற நிலையை கூட நான் புரிந்து ஏற்றுக்கொள்கிறேன். 🙏
அதற்கப்பால் எழுதப்பட்ட; தன்னின உறவுவைத்தோரை மொத்து மொத்தென்று போட்டார்கள், புட்டீன் படைகள் பின்னால் சென்று போட்டார்கள், எல்லா சட்டத்தையும் முதுகில் தூக்க அவசியம் இல்லை, அச்சம், நாணத்தால் அவர்களே இந்த உறவை துண்டிப்பார்கள், மிருகத்தோடும் படுக்க அனுமதிப்பீர்களா? இப்படியான பாலுணர்வு உள்ளவன் சைவனாய் இருக்க மாட்டான், இது ஒரு பிறழ்வு, குறை, போன்ற இது போன்ற பல கருத்துக்களை வெளிச்சம் காட்டிய திரியும் இது தான்.

Link to comment
Share on other sites

1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

 மறுக்கிறீர்கள் எப்படியென்றால் அவர்கள் தயக்கத்துடனும் பயத்தைடனும் வாழ வேண்டும் என்ற கருத்தின் மூலம்.

இதற்கான பதில், இருக்காது ஏனெனில் இவை இங்கே இந்த சமயசடங்குகளிற்கு போய்தான் அறியவேண்டுமென்பதில்லை.. பாடசாலைகள் தொடங்கி அலுவலகங்கள், தொலைகாட்சிகள், பத்திரிக்கைகள், ஏன் சனத்தொகை வாக்குஎடுப்பு பத்திரத்தில் கூட கேள்விகள் உள்ளது.. அவர்களுக்கு முன்னுதாரணங்கள் நிறையவே உள்ளது..ஆகையால் இதையெல்லாம் பார்த்துதான் அவர்கள் மாற வேண்டும் என்பதில்லை..  

 

seriously அண்ணா! how do you know? ஏதாவது தரவுகள்? இங்கே நிறையவே இதைப்பற்றி கருத்துகள் பகிரப்பட்டுள்ளன.. 

உங்களுக்கும் எனக்கும் எங்களது எதிர்பாலினத்தில்தான் ஈர்ப்பு வருகிறது.. இது இயற்கையாகவே ஏற்படுகிறது.. யாரும்  என்னை வற்புறுத்தவில்லை, உங்களையும் வற்புறுத்தவில்லை இல்லையா! இயற்கையாகவே வருகிறது.. அதை ஏற்றுக்கொள்ளும் உங்களால் ஏன் இன்னொரு மனிதர் தனக்கு தன்னினத்தை சேர்ந்தவருடன் இயற்கையாகவே வரும் உணர்வை ஏற்க முடியவில்லை..ஏனெனில் வழமைக்கு மாறானது என நீங்கள் நினைப்பதனால்  ஏற்கமுடியவில்லை.. இது உங்களது தனிப்பட்ட கருத்து, அதை எல்லோரும் மதிக்கிறோம். உங்களை மாறவேண்டும் எனக்கூட கேட்கவில்லை.. 

ஆனால் நாங்கள் அவர்களும் எங்களைப்போன்ற சகமனிதர்கள் என்பதால் அவர்களது உணர்வுகளை மதிக்கிறோம்.. என்ற கருத்தை மதிக்க ஏன் உங்களால் முடியவில்லை? 

உங்களுக்கு வாழ்த்த விருப்பமில்லை எனக்கு வாழ்த்த முடிகிறது.. அவ்வளவுதான்..
 

உங்களில் உள்ள மரியாதை, மதிப்பு காரணமாகவே இவ்வளவையும் எழுதுகிறேன்.. இல்லாவிடில் உண்மையில் எழுதியிருக்கமாட்டேன், ஏனெனில்

- இது இயற்கையானது ஆனால் வழமைக்குமாறானது.. 

- இது அடிப்படை தனிமனித உரிமை. ஒப்பிட்டளவில் சிறுபாண்மை என்பதால் அவர்களுக்கான உரிமையை மறுப்பது தவறு

- இதற்கும் பெற்றோரின் வளர்ப்பிற்கும் சம்பந்தமில்லை.. இயல்பாக ஏற்படும் உணர்வு/விருப்பம்/desire ..அதை சமூகத்திற்காக அடக்க சொல்வது தவறு 

- கிட்டதட்ட 30 நாடுகளில் சட்டரீதியாக அங்கரிக்கப்பட்டுள்ளது.. குழந்தைகளின் நலன் கருதி சட்டரீதியாக கொண்டுவரப்பட்டுள்ளது

- சகல இடங்களிலும் இதைப்பற்றிய விளக்கங்கள் உள்ளன

- எங்களது இந்து சமயத்தில் இதைப்பற்றி மெளனமாகவே இருக்கிறார்கள் அதற்கு என்ன காரணம்

- விலங்களிலும் உள்ளன.. 

- இதில் புரட்சியாக செய்வது, முற்போக்காக காட்டுவது என்பதை விட ஒரு மனிதன் இன்னொரு மனிதனை மதிப்பதும் அவர்களது உணர்வுகள் உரிமைகளை மதிப்பது என்ற அடிப்படை உணர்வு 

- யாரையும் வாழ்த்த சொல்லி கட்டயாப்படுத்தவில்லை. 

- கட்டாயம் sexual pleasureதான் இருக்கவேண்டியதில்லை என்பதால் அவர்களது sexual satisfaction பற்றி கவலைப்படத்தேவையில்லை.

- sexual consent  

இதைவிட வேறு ஏதாவது?  Did I miss anything? 

இப்படி பல தரவுகள் கிட்டதட்ட 13 பக்கங்களில் கருத்துகள் பகிரப்பட்டுள்ளன.. 

இதற்கு மேல்.. முடியவில்லை..

இன்னொரு விடயம், இதைப்பற்றி பெரிதுபடுத்த தேவையில்லை என்றால் இதை இங்கே கடந்து போகும் மற்றைய செய்திகள் போல கடந்து போயிருக்கலாம் வாழ்த்துபவர்கள் மனமார வாழ்த்தினால் என்ன இல்லாவிட்டால்தான் என்ன! பெரிதுபடுத்தவேண்டிய விடயம் இல்லை என்றால் கடந்து போயிருக்கலாம் தானே..

 உங்களைப்போன்றே மற்றைய சக கருத்தாளர்களும் தங்களது கருத்தை எழுதுகிறார்கள்..  நீங்கள் எழுதுவது வகுப்பெடுப்பதில்லை என்றால் நான் எழுதுவதும் பாடம் எடுப்பதில்லை அண்ணா!!

மிகவும் விரிவாக தகவல்களை தொகுத்து தந்துளீர்கள்.  இது போல தரவுகளை தொகுக்கும் ஆற்றல் எனக்கில்லை. என்னை பொறுத்தவரை பாலின உணர்வு சிறுபான்மையினரான அவர்கள் எம்மை போல் இந்த உலகில் வாழும் உரிமை படைத்த மனிதர்களே. அவர்களுக்கு எது செய்ய வேண்டும் என்று ஆணையிட எம்மில்  எவருக்கும் உரிமை இல்லை.  அடுத்தவன் உரிமையில் தலையிடும் பழமைவாதமும் காட்டு மிராண்டித்தனமும் தான் கலாச்சாரம் என்று புரிந்து வைத்திருக்கும் மனிதர்களை தாண்டி   இந்த உலகம் மேலும் civilization வளர்ச்சி அடைய தான் போகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, goshan_che said:

ஆனால் இந்த ஐயர் இதை செய்வதை விட, செய்யாமல் விடுவதால் அவருக்கு வரும் பல பொருளாதார இழப்பு, அசெளகரியத்தை தவிர்த்து இருக்கலாம். இவர்களை பார்த்தால் ஐயருக்கு ஆயிர கணக்கில் கொடுப்பவர்கள் போலவும் தெரியவில்லை.

ஜேர்மனியில் Standesamt.  என்ற காரியாலயத்தில் பதிவு செயது. தான் திருமண எழுத்து எழுத முடியும்    கனடாவில் ஐயார்மாரும். அனுமதி பெற்று வீட்டில் மண்டபம்...என.  திருமணம். எழுதுவதாக அறிந்தேன்.  இந்த திருமணம் யார் எழுதியது  மேற்படி ஐயாரா.? எழுத முடியாது என அவர் மறுக்க முடியாது என நினைக்கிறன் அப்படி மறுத்தால். .....சம்பத்தப்பட்ட பெண்கள் முறைப்பாடு செய்யும்போது அனுமதி இரத்து செய்யப்படும் எனவே அவர் எழுதியிருத்தால் சடங்கும் செய்ய கடமைப்பட்டிருக்கிறார்.  இதுபற்றி  மேலதிக தகவல்களை கனடா வாழ். யாழ்கள உறவுகள் அறியத்தருவார்கள். என நம்புகிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kandiah57 said:

ஜேர்மனியில் Standesamt.  என்ற காரியாலயத்தில் பதிவு செயது. தான் திருமண எழுத்து எழுத முடியும்    கனடாவில் ஐயார்மாரும். அனுமதி பெற்று வீட்டில் மண்டபம்...என.  திருமணம். எழுதுவதாக அறிந்தேன்.  இந்த திருமணம் யார் எழுதியது  மேற்படி ஐயாரா.? எழுத முடியாது என அவர் மறுக்க முடியாது என நினைக்கிறன் அப்படி மறுத்தால். .....சம்பத்தப்பட்ட பெண்கள் முறைப்பாடு செய்யும்போது அனுமதி இரத்து செய்யப்படும் எனவே அவர் எழுதியிருத்தால் சடங்கும் செய்ய கடமைப்பட்டிருக்கிறார்.  இதுபற்றி  மேலதிக தகவல்களை கனடா வாழ். யாழ்கள உறவுகள் அறியத்தருவார்கள். என நம்புகிறேன் 

கனடா விபரம் எனக்குத்தெரியவில்லை. பொதுவாக கலியாணம் நடக்கும் இடமும், நடத்தி வைப்பவரும் லைன்சன்ஸ் உடையவர்களாக இருக்க வேண்டும். 

ஆனால் லைசன்ஸ் இருந்தாலும் தன்பாலின திருமணத்தை கட்டாயம் நடத்தி வைக்கவேண்டும் என்ற கடப்பாடு மத நிறுவனங்களுக்கு இல்லை. 

ஒரு சிவில் ரெஜிஸ்டார் இப்படி செய்ய முடியாது என மறுக்கமுடியாது, ஆனால் ஒரு மதப் போதகர், அமைப்பு மறுக்கலாம். 

என்னை பொறுத்தவரை இது சரியான நிலைப்பாடும் கூட.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பெண்கள் இருவரும் அதே இடத்தில் அதே தினம் ஐயார்  இல்லாமல் மாலையை  மாற்றி  பல படங்கள் எடுத்து   Facebook...You Tube....போன்ற தளங்களில் போடுவதான் மூலமும்.  விளம்பரம் செய்திருக்க முடியும்  இதையும் எமது குழந்தைகள் பார்க்க தான் போகிறார்கள்   உங்களால் தடுக்க முடியுமா?இல்லை அல்லவா 

ஐயார். அல்லது ஐயாரைக கொண்டு செய்த தான் மூலம் விளம்பரம் வந்து விட்டது என்பது எற்க்க முடியாது பிள்ளைகள் பாதிப்பு அடைவாரகள் என்பது எற்க்கக்கூடிய கருத்து இல்லை என்னெனில் பெறும்பாலும். திருமணம் பிள்ளைகள் விருப்பப்படி தான் நடைபெறுகிறது  அந்த பெண்கள் இந்து சமயத்தில் உள்ள பற்று காரணமாக ஐயார் மூலம்  செய்துள்ளனர் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

மன்னிக்க வேண்டும் எப்போதும் தமிழன்! தன்னினச் சேர்க்கையாளர் பற்றி நீங்கள் சொல்லியிருக்கும் இந்த அவதானங்களுக்கு ஆதாரங்கள் இருக்கின்றனவா? எனக்கு இது உங்கள் அபிப்பிராயமாகத் தான் தெரிகிறது.

ஆண்டுக் கணக்காக சேர்ந்து வாழும், ஏனைய மனிதர்கள் போல வாழும் ஓரின இணைகள் இப்போது அதிகரித்திருக்கிறார்கள். முன்னர் இவை living together ஆக மட்டுமிருக்க திருமணம் சட்ட ரீதியாக இருக்காமையே காரணம். எனவே உங்கள் இந்த குறுகின பாலுணர்வு விகாரம் என்பது ஆதாரங்களில்லாத அபிப்பிராயம் மட்டுமே!

இப்படி ஒருபாலின ஜோடிகளில் எத்தனைபேர் வாழ்நாள் முழுவதும் ஒன்றாக வாழ்ந்தார்கள் என்று ஏதாவது ஆதாரமான தரவுகள் இருந்தால் தாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Eppothum Thamizhan said:

இப்படி ஒருபாலின ஜோடிகளில் எத்தனைபேர் வாழ்நாள் முழுவதும் ஒன்றாக வாழ்ந்தார்கள் என்று ஏதாவது ஆதாரமான தரவுகள் இருந்தால் தாருங்கள்.

அவர்கள் அப்படி வாழவில்லை என்பதற்கு ஆதாரமான தகவல்களை நீங்கள் தந்த பிறகு நான் numerical data இருக்கிறதா எனத் தேடிப் பார்க்கிறேன்!
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

ஹோமோபோபியா உள்ள பலரின் முகத்தை காட்டிய திரி இது. 
வாழ்த்தத் தேவையில்லை, கடந்து போவோம் என்ற நிலையை கூட நான் புரிந்து ஏற்றுக்கொள்கிறேன். 🙏
அதற்கப்பால் எழுதப்பட்ட; தன்னின உறவுவைத்தோரை மொத்து மொத்தென்று போட்டார்கள், புட்டீன் படைகள் பின்னால் சென்று போட்டார்கள், எல்லா சட்டத்தையும் முதுகில் தூக்க அவசியம் இல்லை, அச்சம், நாணத்தால் அவர்களே இந்த உறவை துண்டிப்பார்கள், மிருகத்தோடும் படுக்க அனுமதிப்பீர்களா? இப்படியான பாலுணர்வு உள்ளவன் சைவனாய் இருக்க மாட்டான், இது ஒரு பிறழ்வு, குறை, போன்ற இது போன்ற பல கருத்துக்களை வெளிச்சம் காட்டிய திரியும் இது தான்.

அமெரிக்க படைகளில் காணப்பட்ட இந்த ஓர்பால் சேர்க்கையாளர்களை நோக்கி தான் எச் ஐ வி தோற்றுவிக்கப்பட்டதாகவும் கருதுகோள்கள் உண்டு. 

Several studies have documented elevated rates of both sexually transmitted infections (STIs) and STI risk behaviors and among MSM/MSMW (men who have sex with men/men who have sex with men and women) and WSW/WSMW (women who have sex with women/women who have sex with men and women) populations compared to men and women who engage exclusively in opposite-sex sexual relationships.

https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3575167/

மேலும் இந்த ஓர்பால் சேர்க்கை விருப்புக் கும்பல் சொல்லித் திரிவது போல்.. இயற்கை இவர்களை மரபணு தேர்வு மூலம் தெரிவு செய்யவில்லை. அப்படியான ஒற்றை மரபணுக் கூட கண்டறியப்படவில்லை. 

No single gene associated with being gay

A genetic analysis of almost half a million people has concluded there is no single "gay gene".

ஆனாலும் இந்த நடத்தையியலை காண்பிக்கும் கும்பல்கள் மத்தியில் 5 மரபணுத் திரிபுகளை அவதானிக்க முடிந்துள்ளது. அவை எல்லாம் ஒரு சேர அமைவது கூட 1 சதவீதத்திற்கும் குறைவு.  குறிப்பாக 1 மண நுகர்ச்சி மரபணு மாறல்,  4 மற்றவை பால்நிலை ஓமோன்கள் சார்ந்த மரபணு மாறல்களாகும். 

Five specific genetic variants were found to be particularly associated with same-sex behaviour, including one linked to the biological pathway for smell, and others to those for sex hormones.

But together they only accounted for under 1% of same-sex behaviour.

https://www.bbc.co.uk/news/health-49484490

ஆக மொத்தத்தில் ஆய்வாளர்களால்.. இது nature அல்லது nurture காரணமானதா என்பதைக் கூட தீர்க்கமாக முடிவு செய்ய முடியவில்லை. 

ஆனால்.. இங்கு சிலர் இது இயற்கை என்று சொல்லிக்கிட்டு இருக்கிறார்கள். 

உண்மையில்.. இது சில மரபணுத் திரிபுகள் சார்ந்து.. உடல் இரசாயனத் தூண்டல் மூளையில் ஏற்படுத்தும்.. இயல்புக்கு மாறான தூண்டற் பிறழ்வுகள் சார்ந்து (abnormality) மற்றும் சூழல் சார்ந்து ஏற்படுத்தப்படும் ஒரு பழக்கம் என்பதே இன்று ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயம்.

அந்த வகையில்.. இவர்களின் உயிரியல் வாழ்க்கை நிலை மனிதர்கள் என்ற வகைக்குள் அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.. என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அவர்களின் நடத்தையியலை அவர்கள் தங்கள் மட்டில் மட்டுப்படுத்தி வைத்துக் கொள்வதையும் உலகம் எதிர்க்கவில்லை.

ஆனால்.. இதை ஒரு பொது நடத்தையாக.. ஒரு பொது சமூக ஒழுங்காக காட்ட நினைக்கும் கோமாளிகளால் தான்.. இவர்களுக்குப் பிரச்சனை என்பதே நிஜமாகும். யார் இந்தக் கோமாளிகள் என்றால்.. தங்களை தாங்களே சமூக சீர்திருத்தவாதிகள் என்று விளம்பரம் தேடப் பறைசாற்றித் திரிபவர்கள் தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Sasi_varnam said:

கோவேறு கழுதைகளுக்கும் வாழ்க்கை உண்டு...
இந்த வரியை என்ன மன நிலையில் எழுதியிருக்கிறீர்கள் என புரிந்து கொள்ள முயல்கிறேன்.
கோவேறு கழுதை என்றால் என்ன எந்த உயிர்ப்பும் அற்ற ஜடமா? பிரபஞ்சத்தின் படைப்பில் கோவேறு கழுதையோ, கட்டெறும்போ  எந்த வகையிலும் குறையவில்லை. 

குதிரை குதிரை வாழ்க்கை வாழட்டும்,  கழுதை கழுதை வாழ்க்கை வாழட்டும், கோவேறு கோவேறு வாழ்க்கை வாழட்டும். நீங்கள் எதை வாழ்த்த, எதை வாழ்த்தாமல் இருக்க நினைக்கிறீர்களோ அது உங்கள் மனநிலை. நான் அதை மதிக்கிறேன்.

அந்த படத்தில் இருந்த உருவங்களை வைத்து நானே ஒரு கருத்தியல் செய்து கொள்கிறேன். மன்னிக்கவும்:   
படிச்சவன், படிச்சவனை போல நடிச்சவன், படிக்காமல் முட்டாளாய்  இருப்பவன்... பார்வையில் எல்லாரும் ஒரு மாதிரி என்பதற்காக நடிக்கிறவனையும், முட்டாளயும்  படிச்சவனா கொண்டாட ஏலாது தான்.

 

கோவேறு கழுதைகளை தனி இனமாகக் கருதுவதில்லை. காரணம் அவை இயற்கையாக.. தமக்கிடையே இனப்பெருக்கும் தகுதியற்றவை. இந்த ஓர்பால் சேர்க்கை அல்லது தேர்வுக்கும்பலும் கிட்டத்தட்ட நடத்தையியலில்.. அதே வகை தான். 

இதற்குள் படிச்சவன்.. படிச்சவனை போல நடிச்சவன்.. படிக்காத முட்டாள் என்பதை எல்லாம் திணிப்பது பொருத்தமாக இருக்காது. அவசியமற்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

ஹோமோபோபியா உள்ள பலரின் முகத்தை காட்டிய திரி இது. 
வாழ்த்தத் தேவையில்லை, கடந்து போவோம் என்ற நிலையை கூட நான் புரிந்து ஏற்றுக்கொள்கிறேன். 🙏
அதற்கப்பால் எழுதப்பட்ட; தன்னின உறவுவைத்தோரை மொத்து மொத்தென்று போட்டார்கள், புட்டீன் படைகள் பின்னால் சென்று போட்டார்கள், எல்லா சட்டத்தையும் முதுகில் தூக்க அவசியம் இல்லை, அச்சம், நாணத்தால் அவர்களே இந்த உறவை துண்டிப்பார்கள், மிருகத்தோடும் படுக்க அனுமதிப்பீர்களா? இப்படியான பாலுணர்வு உள்ளவன் சைவனாய் இருக்க மாட்டான், இது ஒரு பிறழ்வு, குறை, போன்ற இது போன்ற பல கருத்துக்களை வெளிச்சம் காட்டிய திரியும் இது தான்.

இங்கே எம் மீது கொட்டப்பட்ட அனைத்து அவமதிப்புக்களையும் கண்ணை மூடி கடந்து வந்த தங்களின் மன ஓட்டத்தை மெச்ச வார்த்தைகள் வரவில்லை. நன்றி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, nedukkalapoovan said:

அமெரிக்க படைகளில் காணப்பட்ட இந்த ஓர்பால் சேர்க்கையாளர்களை நோக்கி தான் எச் ஐ வி தோற்றுவிக்கப்பட்டதாகவும் கருதுகோள்கள் உண்டு. 

Several studies have documented elevated rates of both sexually transmitted infections (STIs) and STI risk behaviors and among MSM/MSMW (men who have sex with men/men who have sex with men and women) and WSW/WSMW (women who have sex with women/women who have sex with men and women) populations compared to men and women who engage exclusively in opposite-sex sexual relationships.

https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3575167/

மேலும் இந்த ஓர்பால் சேர்க்கை விருப்புக் கும்பல் சொல்லித் திரிவது போல்.. இயற்கை இவர்களை மரபணு தேர்வு மூலம் தெரிவு செய்யவில்லை. அப்படியான ஒற்றை மரபணுக் கூட கண்டறியப்படவில்லை. 

No single gene associated with being gay

A genetic analysis of almost half a million people has concluded there is no single "gay gene".

ஆனாலும் இந்த நடத்தையியலை காண்பிக்கும் கும்பல்கள் மத்தியில் 5 மரபணுத் திரிபுகளை அவதானிக்க முடிந்துள்ளது. அவை எல்லாம் ஒரு சேர அமைவது கூட 1 சதவீதத்திற்கும் குறைவு.  குறிப்பாக 1 மண நுகர்ச்சி மரபணு மாறல்,  4 மற்றவை பால்நிலை ஓமோன்கள் சார்ந்த மரபணு மாறல்களாகும். 

Five specific genetic variants were found to be particularly associated with same-sex behaviour, including one linked to the biological pathway for smell, and others to those for sex hormones.

But together they only accounted for under 1% of same-sex behaviour.

https://www.bbc.co.uk/news/health-49484490

ஆக மொத்தத்தில் ஆய்வாளர்களால்.. இது nature அல்லது nurture காரணமானதா என்பதைக் கூட தீர்க்கமாக முடிவு செய்ய முடியவில்லை. 

ஆனால்.. இங்கு சிலர் இது இயற்கை என்று சொல்லிக்கிட்டு இருக்கிறார்கள். 

உண்மையில்.. இது சில மரபணுத் திரிபுகள் சார்ந்து.. உடல் இரசாயனத் தூண்டல் மூளையில் ஏற்படுத்தும்.. இயல்புக்கு மாறான தூண்டற் பிறழ்வுகள் சார்ந்து (abnormality) மற்றும் சூழல் சார்ந்து ஏற்படுத்தப்படும் ஒரு பழக்கம் என்பதே இன்று ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயம்.

அந்த வகையில்.. இவர்களின் உயிரியல் வாழ்க்கை நிலை மனிதர்கள் என்ற வகைக்குள் அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.. என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அவர்களின் நடத்தையியலை அவர்கள் தங்கள் மட்டில் மட்டுப்படுத்தி வைத்துக் கொள்வதையும் உலகம் எதிர்க்கவில்லை.

ஆனால்.. இதை ஒரு பொது நடத்தையாக.. ஒரு பொது சமூக ஒழுங்காக காட்ட நினைக்கும் கோமாளிகளால் தான்.. இவர்களுக்குப் பிரச்சனை என்பதே நிஜமாகும். யார் இந்தக் கோமாளிகள் என்றால்.. தங்களை தாங்களே சமூக சீர்திருத்தவாதிகள் என்று விளம்பரம் தேடப் பறைசாற்றித் திரிபவர்கள் தான். 

நெடுக்கர், உங்கள் விஞ்ஞான, மருத்துவ அறிவை இங்கேயும் ஆயுதமயப்படுத்துகிறீர்கள் போல!

முதல் தகவல் உண்மை: ஆண் ஆண் உடலுறவின் போது அதிகம் abrasions ஏற்படுவதால் அவர்களிடையே எச்.ஐ.வி உட்பட்ட நோய்கள் அதிகம் பரவியது உண்மை. ஆனால், abrasions ஏற்படும் வகையில் ஆண் பெண் உறவு நிகழ்ந்தாலும் இவை அதிகரிக்கத் தான் போகிறது! எனவே, இதெல்லாம் இயற்கைக்கு மாறானது என்பதற்கு ஆதாரமில்லை! (எந்த இயற்கை மீறலால் இன்புழுவன்சா நோய்கள் ஏற்பட்டன? எனவே வைரஸ் நோய்களை வைத்துக் கொண்டு இயற்கை சம்மதிக்கிறதா எதிர்க்கிறதா என்பதெல்லாம் solid science அல்ல!

ஒரு ஜீன் வடிவத்தில் இருந்தால் தான் அந்த இயல்பு இயற்கையால் தப்ப வைக்கப் படுகிறது என்ற  கருத்தை உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை! இது இங்கே இருக்கும் பெரும்பாலானோருக்கு ஜீன்கள் பற்றிய உயிரியல் புரியாது என்ற நம்பிக்கையில் எழுதியிருக்கிறீர்கள் போல! 

ஜீன்களை மீறிய இயல்புகள் மனிதரிடையே நிலைக்கவேயில்லையா? மத நம்பிக்கைக்கு எத்தனை ஜீன்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

12 Animals That Reproduce Asexually

https://www.treehugger.com/animals-that-reproduce-asexually-5112566

பெண்துணை / கலவி இன்றிழும் கூட சந்ததி பெருக்கும் 12 உயிரினங்கள் --> இயற்கை மிக நுட்பமான அட்புதமான விடயம். இது இப்படித்தான் என்று வரையறை போடுதல்  எல்லா சந்தர்ப்பத்திலும் பொருந்துமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

 மறுக்கிறீர்கள் எப்படியென்றால் அவர்கள் தயக்கத்துடனும் பயத்தைடனும் வாழ வேண்டும் என்ற கருத்தின் மூலம்.

அவர்கள் தயக்கத்துடனும், பயத்துடனும் வாழவேண்டுமென்று நான் எங்கும் கருத்தெழுதவில்லை. பொதுவழக்காக இல்லாதஒன்றை ஒருவர் செய்யமுற்படும்போது இவற்றை எதிர்நோக்க வேண்டிவரும் என்பது பொதுவானதே. ஒருபாலினசேர்க்கை அவர்களது விருப்பம். அதை அவர்களோ அல்லது அவர்களின் பெற்றோர்களோ அங்கீகரிக்கப்பட்ட ஒரு சமய சடங்காக காட்ட முற்படுவதுதான் பிரச்சனையே.

இதற்கான பதில், இருக்காது ஏனெனில் இவை இங்கே இந்த சமயசடங்குகளிற்கு போய்தான் அறியவேண்டுமென்பதில்லை.. பாடசாலைகள் தொடங்கி அலுவலகங்கள், தொலைகாட்சிகள், பத்திரிக்கைகள், ஏன் சனத்தொகை வாக்குஎடுப்பு பத்திரத்தில் கூட கேள்விகள் உள்ளது.. அவர்களுக்கு முன்னுதாரணங்கள் நிறையவே உள்ளது..ஆகையால் இதையெல்லாம் பார்த்துதான் அவர்கள் மாற வேண்டும் என்பதில்லை..  

நீங்கள் சொன்ன எந்த இடத்திலும் ஒருபாலின சேர்க்கையை எமது சமய சடங்காக சொல்லவோ காட்டுவதோ இல்லையே.

- விலங்களிலும் உள்ளன.. 

இதற்கான பதிலை ஏற்கனவே எழுதிவிட்டேன். விலங்குகள் எதிர்பாலின இணை அருகில் இருக்கும்போது இதை செய்வதில்லை. அந்தந்த நேரத்தில் எழும் பாலிச்சையை தீர்த்துக்கொள்ளவே அப்படி செய்கின்றன. காலம் முழுவதும் அதையே செய்துகொண்டிருப்பதில்லையே!

- இதில் புரட்சியாக செய்வது, முற்போக்காக காட்டுவது என்பதை விட ஒரு மனிதன் இன்னொரு மனிதனை மதிப்பதும் அவர்களது உணர்வுகள் உரிமைகளை மதிப்பது என்ற அடிப்படை உணர்வு 

ஒருபாலின சேர்க்கையென்பது காலாகாலமாக நடப்பதுதான். அதை அங்கீகரிக்கப்பட்ட சமய சடங்காக காட்ட முற்படுவதைத்தான் புரட்சி என்று குறிப்பிட்டேன்.

 

உங்கள் விரிவான பதில்களுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Justin said:

நெடுக்கர், உங்கள் விஞ்ஞான, மருத்துவ அறிவை இங்கேயும் ஆயுதமயப்படுத்துகிறீர்கள் போல!

முதல் தகவல் உண்மை: ஆண் ஆண் உடலுறவின் போது அதிகம் abrasions ஏற்படுவதால் அவர்களிடையே எச்.ஐ.வி உட்பட்ட நோய்கள் அதிகம் பரவியது உண்மை. ஆனால், abrasions ஏற்படும் வகையில் ஆண் பெண் உறவு நிகழ்ந்தாலும் இவை அதிகரிக்கத் தான் போகிறது! எனவே, இதெல்லாம் இயற்கைக்கு மாறானது என்பதற்கு ஆதாரமில்லை! (எந்த இயற்கை மீறலால் இன்புழுவன்சா நோய்கள் ஏற்பட்டன? எனவே வைரஸ் நோய்களை வைத்துக் கொண்டு இயற்கை சம்மதிக்கிறதா எதிர்க்கிறதா என்பதெல்லாம் solid science அல்ல!

ஒரு ஜீன் வடிவத்தில் இருந்தால் தான் அந்த இயல்பு இயற்கையால் தப்ப வைக்கப் படுகிறது என்ற  கருத்தை உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை! இது இங்கே இருக்கும் பெரும்பாலானோருக்கு ஜீன்கள் பற்றிய உயிரியல் புரியாது என்ற நம்பிக்கையில் எழுதியிருக்கிறீர்கள் போல! 

ஜீன்களை மீறிய இயல்புகள் மனிதரிடையே நிலைக்கவேயில்லையா? மத நம்பிக்கைக்கு எத்தனை ஜீன்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன?

https://www.forbes.com/sites/dawnstaceyennis/2019/08/30/the-gay-gene-is-a-myth-but-being-gay-is-natural-say-scientists/?sh=7b26a9a77fa7

the largest study of its kind failed to confirm the existence of a "gay gene" is not so much a disappointment for those looking to understand the LGBTQ community, as it is an acknowledgement that science does not need to tell us what should be plainly obvious: gays, lesbians, bisexuals and pansexuals are who they are.

The study by Andrea Ganna, lead author and European Molecular Biology Laboratory group leader at the Institute of Molecular Medicine in Finland, said the research reinforces the understanding that same-sex sexual behavior is simply “a natural part of our diversity as a species.”

... 

Genetics cannot tell "the whole story," as Eric Vilain, director of the Center for Genetic Medicine Research at Children’s National Health System, told the Post, about what "makes" somebody gay. But even if people are not "Born This Way," as Lady Gaga sang, at last now we can join Gloria Gaynor in singing, "I Am What I Am."

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழும் புலத்தில் ஒரு தலைப்பு (எனக்கு தமிழ் தெரியாது) அனாதரவாக இருக்கு அது மிக தேவையானதும் கூட. ஆனால் செய்தி திரட்டியில் 13 பக்கம் கடந்து வீறுநடை போடுகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வாதவூரான் said:

வாழும் புலத்தில் ஒரு தலைப்பு (எனக்கு தமிழ் தெரியாது) அனாதரவாக இருக்கு அது மிக தேவையானதும் கூட. ஆனால் செய்தி திரட்டியில் 13 பக்கம் கடந்து வீறுநடை போடுகிறது. 

கவுதமனின் திரி: பார்த்தேன். ஆனால், அமெரிக்காவில் அப்படியான முறைப்பாட்டை நான் கேள்வியுறாததால் எதுவும் சொல்லவில்லை!

ஆனால், பேசவேண்டிய விடயம் இதுவும் தானே?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.