Jump to content

சிற்றின்பத்துக்கு அடிமையாக இருந்தார்களா இந்திய மகாராஜாக்கள்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் மகாராஜாக்கள் அல்லது சுதேச ராஜ்ஜியங்களின் ஆட்சியாளர்கள் பொதுவாக யானைகள், நடனமாடும் பெண்கள் மற்றும் பெரிய அரண்மனைகள் இவற்றுடன் இணைத்தே பார்க்கப்படுகிறார்கள். வரலாற்றாசிரியர் மனு பிள்ளை அவர்களின் பாரம்பரியத்தை ஆராய்கிறார்.

ஏராளமான நகைகளைப் பூட்டிக்கொண்டு, பெரிய அரண்மனைகளிலும் அலங்கரிக்கப்பட்ட நீதிமன்றங்களிலும் ஆட்சி செய்ததைத் தாண்டிப் பார்த்தால், அவர்கள், சிற்றின்பத்துக்கு அடிமைகளாக, கேலிப்பொருளாக, உல்லாசமாக வாழ்ந்ததாகவே அவர்கள் சித்தரிக்கப்பட்டார்கள்.

ஆங்கிலேயர்கள் தங்கள் காலத்தில், உள் நாட்டு இளவரசர்களைக் கோழைகளாகவும் அரசாட்சியில் கவனமின்றி சிற்றின்பத்துக்கு அடிமையானவர்களாக இருந்ததாகவே சித்தரித்திருந்தார்கள்.

உதாரணமாக, ஒரு வெள்ளை அதிகாரி, ஒரு இந்தியா மகாராஜாவை "கொடூரமான மற்றும் உடல் பெருத்த, அருவருப்பான தோற்றத்துடன், நடன மங்கைகளைப் போல காதிலும் கழுத்திலும் ஆபரணங்களை அணிந்து கொண்ட கோமாளிகள் என்று பகிரங்கமாகவே குறிப்பிட்டார். வெள்ளைக்கார ஆட்சியாளர்களைப் போல, சிறந்த ஆளுமை கொண்டவர்களாக இல்லாமல், இந்திய அரசர்கள் மோசமானவர்கள் என்ற பிம்பத்தை உருவாக்கினர் ஆங்கிலேயர்.பல தசாப்தங்களாக இதுவே நம்பப்பட்டது. 1947 ஆம் ஆண்டில், லைஃப் பத்திரிகை ஒரு புள்ளிவிவரம் வெளியிட்டு இதற்கு வலுசேர்த்தது. அதில், ஒரு சராசரி இந்திய அரசருக்கு, "11 பட்டங்கள், மூன்று சீருடைகள், 5.8 மனைவிகள், 12.6 குழந்தைகள், ஐந்து அரண்மனைகள், 9.2 யானைகள் மற்றும் 3.4 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள்" இருந்தன என்று கேலியாக அறிவித்தது.

 

எண்கள் தவறாக இருந்தாலும், இது கேலிசெய்வதாகவும் பொழுதுபோக்காகவும் தோன்றியது. மொத்தத்தில், 562 "ராஜ்ஜியங்கள்" என்று கூறப்படும் பெரும்பாலானவை அரசியல் சம்பந்தம் இல்லாத சிறிய தோட்டங்கள் என்றே கருதப்பட்டன.

சுமார் 100 அறிவிக்கப்பட்ட இளவரசர்கள், கோடிக்கணக்கான மக்களை ஆள்வதாகக் கூறப்பட்டாலும், புகழ்பெற்ற நில உரிமையாளர்கள் மற்றும் பிரபுக்கள் ஒரு சில சதுர கிலோமீட்டர் நிலத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது, அவர்களின் அந்தஸ்தை நீர்த்துப்போகச் செய்வது மட்டுமல்லாமல், அது அவர்களை ஒரு கேலிச்சித்திரமாகக் குறைத்து மதிப்பிட்டது. சர்வ ஆளுமை பொருந்திய எலிசபெத் ராணியை ஒரு உள்ளூர் ஜமீன்தாருக்கு இணை வைப்பது மிகத் துச்சமாகப் பார்க்கப்பட்டது.

இருப்பினும், இந்த சுயாட்சி ராஜ்ஜியங்கள், இந்தியத் துணைக்கண்டத்தின் ஐந்தில் இரண்டு பங்கு பகுதியில் பரவி, நேரடி காலனித்துவ கட்டுப்பாட்டின் கீழ் வராமல் இருந்தன. ஆனால் ஆங்கில ஆட்சியாளர்களுடனான உடன்படிக்கைகளின் மூலம் அவர்களின் பிரதிநிதிகள் போலவே கருதப்பட்டனர் இந்த நிலச் சுவாந்தாரர்கள்.

மகாராஜா

பட மூலாதாரம்,JUGGERNAUT

 
படக்குறிப்பு,

மைசூரைச் சேர்ந்த சாமராஜேந்திர வாடியார் உலகின் மிகப்பெரிய அணைகளில் ஒன்று உட்பட பல்வேறு தொழில்துறை திட்டங்களை எடுத்தார்

ஆனால், கொச்சி மகாராஜா ஒருவர், மோகத்தை விட, சமஸ்கிருத ஏடுகளில் அதிக ஈடுபாடு கொண்டிருந்ததும் அண்மையில் உயிரிழந்த கோண்டால் அரசர் ஒரு தேர்ந்த மருத்துவராக இருந்ததும் மறைக்க முடியாத உண்மைகள்.

இந்தப் பெரிய ராஜ்ஜியங்கள், கொடூரமான, மூர்க்கத்தனமான, மதுவுக்கும் மாதுவுக்கும் அடிமையான சர்வாதிகாரிகளால் ஆட்சி செய்யப்படவில்லை. மாறாக, தங்கள் ஆளுமையின் கீழ் உள்ள நிலத்தைத் தங்கள் நியாயமான அரசியல் அளுமையின் கீழ் உள்ள நிலமாகவே பார்த்தனர்.

ஆனால், இந்த சுயாட்சி மன்னர்கள் சில நேரம் விசித்திரமாக நடந்து கொண்டதை மறுக்க முடியாது. ஒரு மகாராஜா ஒரு ஸ்காட்டிஷ் படைப்பிரிவைக் கண்டு, உடனடியாகத் தனது பழுப்பு நிற வீரர்களுக்கு அதே போன்ற சீருடைகள் அணிய உத்தரவிட்டார். மற்றொரு அரசர் பஞ்சாபிகளின் மத்தியில், தான் பதினான்காம் லூயி மன்னர் மறு அவதாரம் என்றே தன்னை கருதிக்கொண்டார்.

ஆனால், இந்திய இளவரசர்களின் இந்த விசித்திரப் போக்கு அவர்களுக்கு மட்டுமே உரியதன்று. பிரிட்டிஷ் அரசர்களும் ஆட்சியாளர்களும் கூட இப்படி இருந்துள்ளனர். லார்ட் கர்சன் போன்ற ஒரு கடுமையான வைஸ்ராய் கூட ஒரு முறை முழு நிர்வாணமாக டென்னிஸ் ஆடியுள்ளார்.

மகாராஜா

பட மூலாதாரம்,JUGGERNAUT

 
படக்குறிப்பு,

பரோடாவின் சாயாஜி ராவ் கெய்க்வாட் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கூர்மையான சுதேச விமர்சகர்களில் ஒருவர்

இந்திய அரசர்கள் முட்டாள்கள் என்ற பிம்பம், பல உண்மைகளை மறைக்கவே உருவாக்கப்பட்டது என்பதை நான் எனது ஆய்வில் தெரிந்துகொண்டேன்.

யானைகளுக்குப் புகழ் பெற்ற மைசூர் அரசர், தொழில் மயமாக்கலைத் தனது ஆட்சியில் பின்பற்றினார்.

பரோடாவில் அரசர், அவரது குடிமக்களில் ஒவ்வொரு 55 பேருக்கும் 5$ ஒதுக்கியிருந்ததை ஒரு பத்திரிகையாளர் வெளிக்கொணர்கிறார். பிரிட்டிஷ் ஆட்சியில் கூட இந்தியாவில் ஒவ்வொரு 1000 பேருக்குத்தான் 5$ ஒதுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய கேரளத்தின் திருவாங்கூர் ராஜ்ஜியம், பள்ளிக்கூடங்கள், உள்கட்டமைப்பு போன்றவற்றில் மிகச் சிறந்து விளங்கி, ஒரு மாதிரி ராஜ்ஜியமாகத் திகழ்ந்துள்ளது.

இந்திய அரசியல் சட்டம் பற்றிய பல விவாதங்களுக்கு இந்த ராஜ்ஜியங்களே முன்னோடிகளாகவும் இருந்துள்ளன.

அப்படியிருக்கும் போது, இந்திய அரசர்களை வெறும் ஆடம்பரத்துக்கும் சிற்றின்பத்துக்குமே உரியவர்கள் என்ற பிம்பம் எப்படி உருவானது?

இது ஆங்கிலேய ஆட்சியாளர்கள், வெள்ளையர்கள் தான் நாகரிகத்தின் பிறப்பிடம் என்று போதித்தால் தான் தங்கள் ஆட்சியின் எல்லையை விரிவாக்க முடியும். நாகரிகமும் அறிவியலும் தெரியாத இந்தியர்களை ஆள இந்தியர்களால் முடியாது என்றும் தாங்கள் வந்து தான் அவர்களை முன்னேற்றவேண்டும் என்றும் ஒரு பிம்பத்தை உருவாக்கினார்கள்.

மகாராஜா

பட மூலாதாரம்,JUGGERNAUT

 
படக்குறிப்பு,

மைசூரின் மூன்றாம் கிருஷ்ணராஜா வாடியார் "தவறான அரசாங்கத்திற்காக" அதிகாரத்தை இழந்தார்,

மன்னர்கள் தாம் பேரரசின் தூண்கள் என்று கூறப்பட்டாலும், அவர்கள் உண்மையில், ஆங்கிலேயருக்கு ஒத்துப் போகும் பங்காளிகளாகவே கருதப்பட்டனர்.

உதாரணமாக, பரோடா புரட்சிகர பிரிட்டிஷ் எதிர்ப்பு இயக்கத்தின் ஆதாரமாக இருந்தது. அங்கு பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக அச்சு ஊடகம் செயல்பட்டது. மைசூர் உள்ளூர் பத்திரிகைகள் ஆங்கிலேய அரச குடும்பத்தின் பின்னால் செல்வதை சகித்துக்கொள்ளாத அரசர்கள், ஆங்கிலேய ஆட்சியை விமரிசிப்பதை அனுமதித்தனர்.

ஜெய்ப்பூரின் ஆட்சியாளர்கள் அதிக கப்பம் கட்டுவதைத் தவிர்க்க, தங்கள் கணக்குகளைக் குறைத்துக் காட்டத் தயங்கவில்லை. தவிர, பல ஆட்சியாளர்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுதந்திரத்திற்கான போராட்டத்தில் நிதி உதவி அளித்தனர். உண்மையில், கர்சன், 1920 களில் கூட, இந்த தேசியவாத அரசர்களின் நியாயத்தை உணர்ந்திருந்தார். பிரஞ்சுப் புரட்சி ஆதரவாளராக இருந்த ஃபிலிப் எகாலைட்கள் போல புரட்சியாளர்கள் இந்திய அரசர்களிடையே மிகுந்திருந்ததாக அவர் கூறினார்.

சுதந்திரப் போராட்டத்தின் பெரும்பகுதியில், இந்த இளவரசர்கள் உண்மையில் ஹீரோக்களாகவே காணப்பட்டனர்.

பெரிய மாநிலங்களின் சாதனைகள் மகாத்மா காந்தி போன்ற தேசியவாதிகளுக்குப் பெருமை சேர்த்தன. இந்தியர்களால் தங்களை ஆளமுடியாது என்ற இனவெறிப் போக்கு விரும்பத்தக்கதாக இல்லை.

ஆனால் 1930 கள் மற்றும் 1940 களில் நிலைமை மாறியது. பல நிறுவனங்களில், கல்விக்கான அணுகலை விரிவுபடுத்துவதில் அவர்களின் சொந்த வெற்றி காரணமாக, ஜனநாயக பிரதிநிதித்துவத்திற்கான கோரிக்கைகள் எழுந்தன. இந்தியாவிலிருந்து பிரிட்டிஷார் வெளியேறுவதற்கு முன்னதாக, பல மகாராஜாக்கள் வன்முறையில் இறங்கினர். இது அவர்களின் புகழைக் குறைத்தது.

அதிக நற்பெயர் பெறாதவர்களாக இந்த அரசர்கள் இன்று பார்க்கப்படுவதற்கு இதுவே முக்கிய காரணம்.

ஆனால் வரலாறு கூறும் பாடங்கள், பல விஷயங்கள் மறைக்கப்பட்டன என்பதே. இந்திய அரசர்கள் வெறும் சிற்றின்பத்துக்கு அடிமையானவர்களாக இல்லாமல், மிகச் சிறந்த அரசியல்வாதிகளாகவும் தேசியவாதிகளாகவும் இருந்துள்ளனர்.

மனு பிள்ளை ஒரு வரலாற்றாசிரியரும் 'ஃபால்ஸ் அலைஸ்: இண்டியாஸ் மஹாராஜாஸ் இன் த ஏஜ் ஆஃப் ரவி வர்மா' என்ற நூலின் ஆசிரியரும் ஆவார்.

இந்திய வரலாறு: சிற்றின்பத்துக்கு அடிமையாக இருந்தார்களா இந்திய மகாராஜாக்கள்? - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.