Jump to content

நாசாவின் படத்தில் 'கடவுளின் கை' - விண்வெளி அதிசயத்தின் உண்மை என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாசாவின் சந்திரா எக்ஸ்-ரே வான் ஆய்வகத்தின் அலுவல்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் ஒரு படம் வெளியிடப்பட்டிருந்தது. அந்தப்படத்தில் தங்கத்தால் ஆன கை போன்ற ஒரு மூட்டம் இருந்தது.

அது 'கடவுளின் கை' (Hand of God) என்று சமூக ஊடகத்தில் பலரும் கூறி வருகின்றனர். உண்மையில் அது என்ன?

விண்ணில் கை போன்ற உருவத்தில் தெரிவது என்ன?

கை போன்ற உருவத்தில் உள்ள அந்த ஒளி மூட்டம் என்ன என்பது குறித்தும் நாசா அந்த இன்ஸ்டாகிராம் பதிவிலேயே விளக்கமும் அளித்துள்ளது.

Instagram பதிவின் முடிவு, 1

விண்மீன் ஒன்று வெடித்து சிதறிய பின்பு உண்டான பல்சர் (துடிப்பு விண்மீன்) ஒன்றால் உருவான ஆற்றல் மற்றும் துகள்களின் மூட்டமே தங்க நிறத்தில் கை போன்ற உருவமாக தெரிகிறது என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

PSR B1509-58 என்று பெயரிடப்பட்ட இந்த துடிப்பு விண்மீன் பின் மூலம் சுமார் 19 கிலோ மீட்டர் குறுக்களவு (விட்டம்) கொண்டது என்றும் அது நொடிக்கு சுமார் ஏழு முறை சுழல்கிறது என்றும் நாசாவின் சந்திரா வானாய்வகம் தெரிவிக்கிறது.

பல்சர் - துடிப்பு விண்மீன் என்றால் என்ன?

ஒரு மிகப்பெரிய விண்மீன் அது மேலதிகமாக இயங்குவதற்கான எரிபொருள் இல்லாமல் சிதைவடையும் பொழுது நியூட்ரான் விண்மீன்கள் உருவாகும் என நாசாவின் அலுவல்பூர்வ இணையதளம் தெரிவிக்கிறது.

அந்த விண்மீனின் மையப்பகுதி சிதைவடைந்து அதில் இருக்கும் அனைத்து புரோட்டான்கள் (நேர் மின்மம் (positive charge) உடைய அணுவின் அடிப்படைத் துகள்கள்) மற்றும் எலக்ட்ரான்கள் (எதிர் மின்மம் (negative charge) உடைய அணுவின் அடிப்படைத் துகள்கள்) ஒன்றாக அழுத்தி நியூட்ரான்கள் (மின்மம் அற்ற (no charge)அணுவின் அடிப்படைத் துகள்கள்) ஆக மாற்றும்.

இதன் காரணமாக அவை நியூட்ரான் விண்மீன்கள் என அழைக்கப்படுகின்றன. இவற்றின் நிறை (திணிவு) மிகவும் அதிகமாக இருக்கும். எந்த அளவுக்கு என்றால் பூமியின் நிறையைப் போல சுமார் ஐந்து லட்சம் மடங்கு அதிகமான நிறையை சுமார் 12 மைல் குறுக்களவுள்ள நியூட்ரான் விண்மீனில் அடைக்கப்பட்டிருக்கும் என்கிறது நாசா இணையதளம்.

நாசா வெளியிட்டுள்ள துடிப்பு விண்மீன் சித்தரிப்புப் படம்

பட மூலாதாரம்,NASA

 
படக்குறிப்பு,

நாசா வெளியிட்டுள்ள துடிப்பு விண்மீன் சித்தரிப்புப் படம்

பல நியூட்ரான் விண்மீன்கள் துடிப்பு விண்மீன்களாகவே அதாவது பல்சர்களாகவே காணப்படும்.

சீரான இடைவெளியில் கதிரியக்க துடிப்புகளை கொண்டுள்ள நியூட்ரான் விண்மீன்கள் பல்சர் (pulsar) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றன.

இந்தத் துடிப்புகளுக்கு (pulses) இடையிலான கால இடைவெளி மில்லி நொடிகளிலிருந்து நொடிகள் வரை இருக்கும்.

துடிப்பு என்று பொருள்படும் 'pulse' எனும் ஆங்கிலச் சொல்லின் அடைப்படியிலேயே இவை 'pulsar' என்று பெயர்பெற்றன.

தங்க நிறத்தில் ஒளி வந்தது எப்படி?

துடிப்பு விண்மீன்களுக்கு காந்தப்புலம் மிகவும் அதிகமாக இருக்கும். இந்த காந்தப்புலத்தின் இரு துருவங்களில் இருந்தும் அதிக எண்ணிக்கையிலான துகள்கள் வேகமாக வெளியேற்றப்படும்.

காந்தப்புலத்தின் துருவங்களில் இருந்து அவ்வாறு அதிக வேகத்தில் வெளியேற்றப்படும் துகள்களால் மிகவும் சக்திவாய்ந்த ஒளிக்கீற்று உண்டாகும்.

அவ்வாறு உண்டாகியுள்ள ஒளிக்கீற்றுதான் தற்போது நாசாவால் வெளியிடப்பட்டுள்ள இந்த படத்திலும் தெரிகிறது.

நாசாவின் படத்தில் 'கடவுளின் கை' - விண்வெளி அதிசயத்தின் உண்மை என்ன? #factcheck - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஓம்... கரணவாய் மூத்த பிள்ளையார் கருணையால எல்லோரும் நலம். வாற வருசம் ஒரு பிளான் இருக்கு.பாப்பம் 😊
    • சகோதரிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். எனக்கு ஒரே குழப்பமாக உள்ளது.
    • இதே பொலுசன் பிரச்சனை தமிழ்  நாட்டில் அரியலூர், ஆலங்குளம் போன்ற பழைய சிமிண்ட் ஆலைகளிலும் உண்டு. ஊருக்குள் போனால் சாலை, மரங்கள், வீட்டு கூரைகளில் மணல் போன்ற தூசுகள் படிந்திருக்கும். இம்மாதிரி ஆலையின் மாசுகளால் அருகே வசிக்கும் பலருக்கும் உடலில் சுகாதாரக் கேடுகள் விளைகிறது என அறிந்துள்ளேன். என்னுடன் கல்லூரியில் படித்த நண்பர்கள் (Classmates) இந்த ஆலைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுவிட்டனர். தங்களின் பதிலுக்கு மிக்க நன்றி.🙏
    • நான் இங்கு குறிப்பிடுவது 2001 / கட்டாயம் 2004  க்கு முன்  கடந்த இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக எனக்கு அதனுடன் ஒரு தொடர்பும் இல்லை இலங்கையில் அன்று 55 வயதுடன் ஓய்வு பெறலாம். என்றாலும் நான் வேறு பல காரணங்களால் கொஞ்சம் நேரத்துடன் ஓய்வு பெற்று விட்டேன்
    • The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away. https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.