Jump to content

பாவற்கொடியும் நானும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தாவரங்கள் மேல் அதீத நாட்டம் என்பது உங்கள் எல்லாருக்கும் தெரியும் தானே. 2019 இல் கனடாவிலிருக்கும் என் ஒன்றுவிட்ட அண்ணா பாவல், புடோல் பந்தலில் கீழே நின்று படம்  எடுத்துப் போட எனக்கும் என வளவில் இரண்டும் நட்டுக் கோடியில் படர விடவேணும் என்ற ஆசை எழுந்தது. ஊரில் உள்ள கணவனின் தங்கையிடம் உள்ள விதைகள் எல்லாம் அனுப்பும்படி கூற யாவரும் 1200 ரூபா கட்டி ஒரு சிறிய பார்சலை அனுப்பி வைக்க கோவிட் காலத்தில் என் கெடுகாலமும் சேர கஷ்டம்சில் எல்லாவற்றையும் எடுத்துவிட்டு அனுமதி இல்லை என்ற விபரத்துடன் கீரை விதைகள் மட்டும் வந்து சேர்ந்தது. உடனே கனடாவுக்கு தொலைபேசி எடுத்து எனக்குக் கொஞ்ச விதைகள் அனுப்புங்கோ என்றதுக்கு நான் எப்படி அனுப்புறது. விதைகள் அனுப்பக் கூடாதே  என்று அண்ணா பின்வாங்க, ஒரு வாழ்த்துமடலினுள் வைத்து அனுப்புமாறு ஆலோசனை கூறினேன்.  ஒரு வாரம் வரும் வரும் என்று பார்க்க இரு வாரங்களின் பின் வந்து சேர்ந்தது வாழ்த்துமடல். வாழ்த்து மடலை பார்த்தபோதே எனக்கு விளங்கீட்டுது அண்ணாவின் நப்பித்தனம். ஆறு பாகல் விதைகள், ஆறு புடோல். அதில் மூன்று கட்டைப் புடோல் மற்றையது நீளமானது என்றும் எழுதியிருக்க, சரி இதாவது வந்ததே என்று மகிழ்வோடு கடைக்காரரிடம் மரக்கறிகள் வரும் சிறிய regiform பெட்டிகளை வாங்கி வந்து அதற்குள் சிறிய சாடிக்களில் உரம் போட்டு விதைகளை நாட்டாச்சு.மேலே இன்னொரு மூடியால் மூடியும்  ஆச்சு.  ஒரு மாதமா ஒரு அசுமாத்தமும் இல்லை.  மே மாதம் முளைத்து நான்கு இலைகள் தெரிய அதை எங்கே நடுவது,  எப்பிடிப் பந்தல் போடுவது என்று ஒரே கற்பனை. வழமைபோல ஏற்கனவே தோட்டம் எல்லாம் காடாக்  கிடக்கு. உது எதுக்கு என்று மனிசன் தொடங்கியாச்சு. 

ஜெகதீஸ் அண்ணா என்று ஒருவர் வீட்டுத் தோட்டத்தில்  பாவல் நட்டு ஒரே காய்தாய். அந்த வீடியோ பார்த்த நான் அவருடன் தொடர்புகொண்டு அவரின் கொடிகளைப் பற்றி நலம் விசாரித்துவிட்டு என் பாவல் புடோல் பற்றி விபரம் சொன்னேன். இப்போதைக்கு வெளியே வையாதை பிள்ளை. ஜூன் மாதம் வெயில் வந்தால் தான் மரம் எழும்பும் என்றார். எனக்கோ கொடிகள் வளர வளர எப்படி வீட்டுக்குள் வைப்பது என்று எண்ணி எனது conservetry  உள் கொண்டுசென்று வைத்தேன். மே மாதக் கடைசியில் சாடையாய் வெயில் எறிக்க நல்ல பெரிய சாடிகளில் நல்ல உரம்போட்டு கன்றுகளை இடம் மாற்ற கிட்டத்தட்ட ஒரு மீற்றர் வரை கன்றுகள் வளர்ந்து புடோலிலும் பாகலிலும் பூக்களும் பூக்கத் தொடங்க எனக்கோ மட்டில்லா மகிழ்ச்சி. ஒரு வாரம் போக இழைகள் எல்லாம் சுருண்டு சுருண்டு என்ன என்று பார்த்தால் ஒரே எறும்புகள். இந்த ஆண்டுபோல் என தோட்டத்தில் எறும்புகள் வந்ததே இல்லை. பல இடங்களில் எறும்பு. எதற்கும் அந்த அண்ணாவிடமே கேட்போம் என்று போன் செய்ய அவர் ஒரு ஸ்பிறே ஒன்றைப் பரிந்துரைக்க கடைகளில் தேடினால் இல்லை.  ஒருவாறு  ஒன்லைனில் ஒன்றுக்கு மூன்றாய் எறும்புக்கு ஸ்பிறே ஓடர் செய்து அடுத்த நாள் வந்ததும் ஆசை தீர சாடிக்களின் மேலே கீழே இலைகளில் எல்லாம் நன்றாக அடித்து இனிமேல் இந்தப் பக்கம் எப்பிடித் தலை வைத்துப் படுக்கிறீர்கள் என்று எண்ணியபடி நல்ல நின்மதியான தூக்கம்.

அடுத்தநாள் காலை நல்ல வெயிலைக் கண்ட சந்தோசத்தில் தேனீரும் பருக்காமல் தோட்டத்துக்குப் போனால் நெஞ்செல்லாம் அடைச்சுப் போச்சு. அத்தனை கொடிகளும் எரிஞ்சுபோய்க் கிடக்கு. உடன அந்த அண்ணாவுக்கு போன் செய்தால், என்ன தங்கச்சி அடியில கொஞ்சம் அடிக்கிறதுக்கு இலைக்கு ஏன் அடிச்சியள் என்கிறார். அவரைத் திட்டவும் முடியாமல் மனிசனுக்கு போன் செய்து விடயத்தைச் சொல்ல, ஊரிலையே எரும்புக்கு பவுடர் தான் போடுறது. சரி இனி என்ன செய்யிறது. இண்டைக்கு வெயில் தானே தண்ணியை நல்லா விட்டுவிடு என்று சொல்ல..................... என்ன சொல்லி என்ன திரும்ப ஒரு குருத்துக் கூட வரேல்லை.  இனி என்ன செய்யிறது. அடுத்த ஆண்டு பார்ப்பம் என்று எண்ணியிருக்க, முளைக்காமல்  இருந்த ஒரு புடல் ஒரு சாடியில் இருந்து முளைத்துவர  இன்னொரு சாடியில் ஒரு பாகலும் முளைக்க என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆனால் இப்ப சீசன் தப்பி முளைத்து என்ன பயன். பிஞ்சுகள் எல்லாம் பழுத்துப் பழுத்து கொட்ட எனது கண்ணாடி அறையுள் அவர்களைக் கொண்டு வந்தாச்சு. சந்தோஷமா அவை படர்ந்தாலும், பிஞ்சு  பெருக்குமா காய்க்குமா என்ற சந்தேகம் எனக்கு. LED lights வாங்கிப் போடலாமா என்று எண்ண, அது கூடாது. எமக்கு  பார்வைக் கோளாறை உண்டாக்கும் என்கிறாள் மகள். யாராவது அதுபற்றி நன்றாகத் தெரிந்தவர்கள் எனக்கு உதவுங்கள். 

Link to comment
Share on other sites

சுமே,

LED grow lights for plants என்று amazon இல் தேடிப்பாருங்கள். என்னுடன் வேலை செய்கின்ற குஜராத்தை சேர்ந்தவர் இந்த லைட் வெளிச்சத்தில் துளசிச் செடிகள் வளர்க்கின்றார். அவையும் வளர்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.amazon.co.uk/Upgraded-Spectrum-360°Adjustable-Gooseneck-Seedling/dp/B085C5Q3NV/ref=sr_1_1?dchild=1&keywords=Lights+for+Growing&qid=1632869584&sr=8-1

போனவருடம் கறி வேப்பிலை  இப்படி ஒரு சோதனை செய்து பூவரசம் குழை போல் வளர்ந்து தள்ளியது நினைவுக்கு வருது வாசமும் இல்லை ஏதோ  ஒரு பிழை நடந்து இருக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, நிழலி said:

சுமே,

LED grow lights for plants என்று amazon இல் தேடிப்பாருங்கள். என்னுடன் வேலை செய்கின்ற குஜராத்தை சேர்ந்தவர் இந்த லைட் வெளிச்சத்தில் துளசிச் செடிகள் வளர்க்கின்றார். அவையும் வளர்கின்றன.

இந்த ஒளிகளால் மனிதருக்கு பின் விளைவுகள் ஏதாவது இருக்குமா? ஏனென்றால் பின் விளைவுகள் காரணமாக பல மின் விளக்குகளை ஐரோப்பாவில் தடை செய்து விட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த வருடம் வரை பொறுக்க மாட்டியளோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

https://www.amazon.co.uk/Upgraded-Spectrum-360°Adjustable-Gooseneck-Seedling/dp/B085C5Q3NV/ref=sr_1_1?dchild=1&keywords=Lights+for+Growing&qid=1632869584&sr=8-1

போனவருடம் கறி வேப்பிலை  இப்படி ஒரு சோதனை செய்து பூவரசம் குழை போல் வளர்ந்து தள்ளியது நினைவுக்கு வருது வாசமும் இல்லை ஏதோ  ஒரு பிழை நடந்து இருக்கு .

ஆனால், கஞ்சா செடி நல்ல வாசத்தோட இஞ்ச வளர்க்கினமே?🤒

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புங்கையூரன் said:

ஆனால், கஞ்சா செடி நல்ல வாசத்தோட இஞ்ச வளர்க்கினமே?🤒

அந்த விவசயிகளை தேடிக்கொண்டு இருக்கிறன்  பாஸ் .

Link to comment
Share on other sites

13 hours ago, குமாரசாமி said:

இந்த ஒளிகளால் மனிதருக்கு பின் விளைவுகள் ஏதாவது இருக்குமா? ஏனென்றால் பின் விளைவுகள் காரணமாக பல மின் விளக்குகளை ஐரோப்பாவில் தடை செய்து விட்டார்கள்.

தெரியவில்லை அண்ணா. ஆனால் என் வீட்டில் இருந்த சாதாரண மின்குமிழ்கள் அனைத்தையும் LED இற்கு மாற்றிக் கொண்டு வருகின்றேன். இதில் LED soft white இல் இருந்து வரும் வெளிச்சம் கண்ணுக்கு மிகவும் இதமாகவும் மனசுக்கு ஆறுதலாகவும் இருக்கின்றது. அத்துடன் மின்சார சக்தியை பெருமளவு சேமிக்க உதவுவதால் அரசும் இதை ஊக்குவிக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, நிழலி said:

சுமே,

LED grow lights for plants என்று amazon இல் தேடிப்பாருங்கள். என்னுடன் வேலை செய்கின்ற குஜராத்தை சேர்ந்தவர் இந்த லைட் வெளிச்சத்தில் துளசிச் செடிகள் வளர்க்கின்றார். அவையும் வளர்கின்றன.

வளர்க்கின்றதுதான். ஆனால் அவை மனிதர்களைப் பாதிப்பதாகவும் கூறுகிறார்கள்.

21 hours ago, பெருமாள் said:

https://www.amazon.co.uk/Upgraded-Spectrum-360°Adjustable-Gooseneck-Seedling/dp/B085C5Q3NV/ref=sr_1_1?dchild=1&keywords=Lights+for+Growing&qid=1632869584&sr=8-1

போனவருடம் கறி வேப்பிலை  இப்படி ஒரு சோதனை செய்து பூவரசம் குழை போல் வளர்ந்து தள்ளியது நினைவுக்கு வருது வாசமும் இல்லை ஏதோ  ஒரு பிழை நடந்து இருக்கு .

சிலவேளை நீங்கள் வாங்கியது கறிவேப்பிலை போல இருக்கும் மற்ற மரமோ ???

21 hours ago, குமாரசாமி said:

இந்த ஒளிகளால் மனிதருக்கு பின் விளைவுகள் ஏதாவது இருக்குமா? ஏனென்றால் பின் விளைவுகள் காரணமாக பல மின் விளக்குகளை ஐரோப்பாவில் தடை செய்து விட்டார்கள்.

கண்களுக்கும் தோலுக்கும் ஒவ்வாமை ஏற்படும் என்று இணையத்தில் இருக்கு.

15 hours ago, புங்கையூரன் said:

ஆனால், கஞ்சா செடி நல்ல வாசத்தோட இஞ்ச வளர்க்கினமே?🤒

அவை எந்த லைட் பாவிக்கினம் எண்டு கேட்டுப் பாருங்கோ😀

9 hours ago, Paanch said:

 

வெயில் நாடுகளில் வளர்ப்பது வேறு இங்கு வேறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிழலி said:

தெரியவில்லை அண்ணா. ஆனால் என் வீட்டில் இருந்த சாதாரண மின்குமிழ்கள் அனைத்தையும் LED இற்கு மாற்றிக் கொண்டு வருகின்றேன். இதில் LED soft white இல் இருந்து வரும் வெளிச்சம் கண்ணுக்கு மிகவும் இதமாகவும் மனசுக்கு ஆறுதலாகவும் இருக்கின்றது. அத்துடன் மின்சார சக்தியை பெருமளவு சேமிக்க உதவுவதால் அரசும் இதை ஊக்குவிக்கின்றது.

நாங்களும் வீட்டில் எல்லாம் LED தான். அதன் வெப்பம் கன்றுகளுக்கு அதிகம். அதனால் பாதிப்பு இல்லை என்றே கூறுகின்றனர்.

 

21 hours ago, பெருமாள் said:

https://www.amazon.co.uk/Upgraded-Spectrum-360°Adjustable-Gooseneck-Seedling/dp/B085C5Q3NV/ref=sr_1_1?dchild=1&keywords=Lights+for+Growing&qid=1632869584&sr=8-1

போனவருடம் கறி வேப்பிலை  இப்படி ஒரு சோதனை செய்து பூவரசம் குழை போல் வளர்ந்து தள்ளியது நினைவுக்கு வருது வாசமும் இல்லை ஏதோ  ஒரு பிழை நடந்து இருக்கு .

நீங்கள் வாங்கியது பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. நான் கீழே உள்ளதை ஓடர் செய்து இன்றுதான் வந்திருக்கு.

 

https://www.amazon.co.uk/Indoor-Plants-Spectrum-Inches-Greenhouse/dp/B07PKSG12N/ref=sr_1_54?dchild=1&keywords=Lights+for+Growing&qid=1632948195&sr=8-54

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூரிய வெளிச்சத்தில் இருந்து தாவரங்களுக்கு தேவையான ஒளியின் பகுதி மனித கண்ணுக்கு தெரியும் ஒளியின் பகுதிக்குள் தான் அடங்குகிறது. ஆனால் பல தாவரங்களுக்கு சூரிய வெளிச்சத்தில் உள்ள பச்சை நிறம் மட்டும்  தேவையில்லை என்பதால் அதை வந்தவழியே(?) விட்டு விடுகிறது. அதனால்தான் தாவரங்கள் பார்வைக்கு பச்சையாக தெரிகின்றன.

கண்ணாடி வீட்டுக்குள் செல்லும்போது அதிக வெளிச்சத்தினால் கண்கள் கூசினால் குளுகுளு கண்ணாடி அணிந்து கொள்ளவும். வீட்டு பாவனைக்கு தயாரிக்கப்பட்ட LED lights பயன்படுத்துவதால் மனிதருக்கு தாக்கமில்லை. கண்ணுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் அளவு புற ஊதாக்கதிர்களை வெளிப்படுத்தும் மின்விளக்குகளை வீட்டு பாவனைக்கு என விற்பனை செய்யப்படுவதில்லை.

தாவரங்கள் வளர்ப்பதற்கு மின் விளக்குகள் வாங்கும்போது சூரியவெளிச்சத்துக்கு ஒப்பானதான வெளிச்சம் அதிலிருந்து வருமா என்பதை நிச்சயப்படுத்திகொள்ளவும். பொதுவாக நிற வெப்பநிலை 6500K (கெல்வின்) கொண்ட குழாய் விளக்குகளை (tube lights) பயன்படுத்தி மரங்களை வளர்ந்த பின் அவை பூக்கும் பருவத்தில் 2000 K - 3000 K வெளிச்சம் தரும் வேறு குழாய் விளக்குகளுக்கு மாற்றிவிடலாம்.

கண்ணாடி வீட்டின் நிலப்பரப்பில் ஒவ்வொரு  சதுர மீற்றருக்கும் ஒரு விளக்கு என்ற எண்ணிக்கையில் 36W வலுவுள்ள 6500 K  குழாய் விளக்குகளை பயன்படுத்தவும். உதவிக்கு வேண்டுமானால் grow lights (LED tube lights) பயன்படுத்தவும். இவை தாவரங்களுக்கு முக்கிய தேவையான சிவப்பு (அலைநீளம் 650-670 nanometer ) மற்றும் நீலம் (அலைநீளம் 430-450 nanometer ) ஆகிய இரு நிறங்களை மட்டும் வெளிப்படுத்தும்.

பொதுவாக தோட்டத் தாவரங்களை விற்பனை செய்யும் உள்ளூர் கடைகளில் ஆலோசனையும் உதவியும்  பெற்றுக் கொள்ள முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பனி நிறைந்த நாட்டில் வீட்டுத்தோட்டம் செய்து அசத்தும் புலம்பெயர் தம்பதியினர் !

IMG-20210928-WA0406-1140x620.jpg

புலம்பெயர் தமிழ் மக்கள் நாட்டை ஏனைய நாடுகளுக்கு புலம் பெயர்ந்து   சென்றாலும் தமது அடையாங்களையும்  தமது பாரம்பரியத்தையும் விட்டுக்கொடுக்காது என்றும்  வாழ்ந்து  வருகின்றனர்

IMG-20210928-WA0405-225x300.jpg

அவ்வாறே பனிமலை கொண்ட கனடா நாட்டில்  ரொறன்டோ  நகரில் வாழும் குறித்த தம்பதியினர்  அங்கு  நமது  ஊரைப்போன்றே வீட்டு தோட்டத்தில்  பாகற்காய்  செய்கையை செய்து பலரின்  கவனித்தினை ஈர்த்ததுள்ளதுடன்  இவர்களின் இந்த முயற்சி  சமூக வலைதளங்களில் தற்போது  பெரிதும் பேசப்படும் செய்தியாக மாறியுள்ளது

https://tamonews.com/news/46519/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/9/2021 at 03:51, ஈழப்பிரியன் said:

அடுத்த வருடம் வரை பொறுக்க மாட்டியளோ?

அந்தப் பொறுமை இருந்தால் எங்கேயோ போயிருப்பனே.

20 hours ago, பெருமாள் said:

பனி நிறைந்த நாட்டில் வீட்டுத்தோட்டம் செய்து அசத்தும் புலம்பெயர் தம்பதியினர் !

 

புலம்பெயர் தமிழ் மக்கள் நாட்டை ஏனைய நாடுகளுக்கு புலம் பெயர்ந்து   சென்றாலும் தமது அடையாங்களையும்  தமது பாரம்பரியத்தையும் விட்டுக்கொடுக்காது என்றும்  வாழ்ந்து  வருகின்றனர்

 

அவ்வாறே பனிமலை கொண்ட கனடா நாட்டில்  ரொறன்டோ  நகரில் வாழும் குறித்த தம்பதியினர்  அங்கு  நமது  ஊரைப்போன்றே வீட்டு தோட்டத்தில்  பாகற்காய்  செய்கையை செய்து பலரின்  கவனித்தினை ஈர்த்ததுள்ளதுடன்  இவர்களின் இந்த முயற்சி  சமூக வலைதளங்களில் தற்போது  பெரிதும் பேசப்படும் செய்தியாக மாறியுள்ளது

https://tamonews.com/news/46519/

கனடாவில் நிலமை வேறு. அங்கு குளிர் போன்றே வெப்பமும் அதிகம். எனவே எல்லாம் செழிப்பாக வருகின்றன. லண்டனில் இரண்டும் கெட்டான் நிலை.

22 hours ago, vanangaamudi said:

சூரிய வெளிச்சத்தில் இருந்து தாவரங்களுக்கு தேவையான ஒளியின் பகுதி மனித கண்ணுக்கு தெரியும் ஒளியின் பகுதிக்குள் தான் அடங்குகிறது. ஆனால் பல தாவரங்களுக்கு சூரிய வெளிச்சத்தில் உள்ள பச்சை நிறம் மட்டும்  தேவையில்லை என்பதால் அதை வந்தவழியே(?) விட்டு விடுகிறது. அதனால்தான் தாவரங்கள் பார்வைக்கு பச்சையாக தெரிகின்றன.

கண்ணாடி வீட்டுக்குள் செல்லும்போது அதிக வெளிச்சத்தினால் கண்கள் கூசினால் குளுகுளு கண்ணாடி அணிந்து கொள்ளவும். வீட்டு பாவனைக்கு தயாரிக்கப்பட்ட LED lights பயன்படுத்துவதால் மனிதருக்கு தாக்கமில்லை. கண்ணுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் அளவு புற ஊதாக்கதிர்களை வெளிப்படுத்தும் மின்விளக்குகளை வீட்டு பாவனைக்கு என விற்பனை செய்யப்படுவதில்லை.

தாவரங்கள் வளர்ப்பதற்கு மின் விளக்குகள் வாங்கும்போது சூரியவெளிச்சத்துக்கு ஒப்பானதான வெளிச்சம் அதிலிருந்து வருமா என்பதை நிச்சயப்படுத்திகொள்ளவும். பொதுவாக நிற வெப்பநிலை 6500K (கெல்வின்) கொண்ட குழாய் விளக்குகளை (tube lights) பயன்படுத்தி மரங்களை வளர்ந்த பின் அவை பூக்கும் பருவத்தில் 2000 K - 3000 K வெளிச்சம் தரும் வேறு குழாய் விளக்குகளுக்கு மாற்றிவிடலாம்.

கண்ணாடி வீட்டின் நிலப்பரப்பில் ஒவ்வொரு  சதுர மீற்றருக்கும் ஒரு விளக்கு என்ற எண்ணிக்கையில் 36W வலுவுள்ள 6500 K  குழாய் விளக்குகளை பயன்படுத்தவும். உதவிக்கு வேண்டுமானால் grow lights (LED tube lights) பயன்படுத்தவும். இவை தாவரங்களுக்கு முக்கிய தேவையான சிவப்பு (அலைநீளம் 650-670 nanometer ) மற்றும் நீலம் (அலைநீளம் 430-450 nanometer ) ஆகிய இரு நிறங்களை மட்டும் வெளிப்படுத்தும்.

பொதுவாக தோட்டத் தாவரங்களை விற்பனை செய்யும் உள்ளூர் கடைகளில் ஆலோசனையும் உதவியும்  பெற்றுக் கொள்ள முடியும்.

மிக்க நன்றி வணங்கா முடி. நான் வாங்கிய மின் விளக்குகள் சூரிய ஒளிக்கு ஒப்பானவை என்றுதான் போட்டிருந்தது. ஆனால் review வில் காண்பார்வைக்குச் சேதம் வரலாம் என்று போட்டிருந்தனர். அதுதான் .. .. ஒரே குழப்பம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
    • 17 APR, 2024 | 05:42 PM (நெவில் அன்தனி) ஓக்லஹோமா, ரமோனாவில் ஞாயிறன்று நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் லிதுவேனியாவின் மெய்வல்லுநர் மிக்கோலாஸ் அலெக்னா நம்பமுடியாத 74.35 மீட்டர் தூரத்துக்கு தட்டை எறிந்து தட்டெறிதலுக்கான முன்னைய  சாதனையை    முறியடித்தார். முன்னைய உலக சாதனை கிட்டத்தட்ட 38 வருடங்கள் நிலைத்திருந்தது. இயூஜினில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிக்கோலாஸ் அலெக்னா, புடாபெஸ்டில் கடந்த வருடம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் பழைமையான சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார். ஒக்லஹோமா, ரமோனாவில் நடைபெற்ற எறிதல் தொடர் உலக அழைப்பு போட்டியில் தனது 5ஆவது முயற்சியில் தட்டை 74.35 மீட்டர் தூரத்திற்கு எறிந்ததன் மூலம் உலக சாதனையை 21 வயதான மிக்கோலாஸ் அலெக்னா முறியடித்தார். முன்னாள் கிழக்கு ஜேர்மனி வீரர் ஜேர்ஜன் ஷூல்ட்ஸ் 1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி தட்டெறிதல் போட்டியில் நிலைநாட்டிய 74.08 மீட்டர் என்ற உலக சாதனையையே மிக்கோலாஸ் அலெக்னா கடந்த ஞாயிற்றுக்கிழமை முறியடித்தார். பேர்லின் 1936 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஜெசே ஓவென்ஸினால் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 8.13 மீட்டர் என்ற உலக சாதனை 25 ஆண்டுகள் மற்றும் 79 நாட்களுக்கு நீடித்தது. ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் இது இரண்டாவது பழைமையான சாதனையாகும்.  எவ்வாறாயினும் பெண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் நிலைநாட்டப்பட்ட சாதனை ஒன்றே இன்றும் மிகவும் பழைமையான சாதனையாக இருந்துவருகிறது. செக்கோஸ்லவாக்கியாவைச் செர்ந்த ஜர்மிலா க்ராட்டோச்விலோவா என்பவரால் 1983ஆம் ஆண்டு பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தை 1:53.28 செக்கன்களில் நிறைவு செய்து நிலைநாட்டிய உலக சாதனையே மிகவும் பழைமை வாய்ந்த உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/181320
    • இரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் - அமெரிக்க அதிகாரிகள் தகவல் 19 ஏப்ரல் 2024, 03:01 GMT புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்பஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். இதனிடையே இஸ்பஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இரான் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது. இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, "நம்பகமான ஆதாரங்களை" மேற்கோள் காட்டி, இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "முற்றிலும் பாதுகாப்பானவை" என்று கூறியிருக்கிறது. அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்கள் எதுவும் தற்போது இல்லை மற்றும் இஸ்ரேலிய இராணுவம் "இந்த நேரத்தில்" கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350 கிமீ தெற்கே நான்கு மணிநேர பயணத்தில் உள்ள இஸ்பஹானில் வெடிப்புகள் நடந்திருக்கின்றன.   பிபிசி பெர்சியன் சேவைக்கு கிடைத்த காணொளி இரானின் இஸ்பஹான் மாகாணத்தில் வசிப்பவர்கள் பல வீடியோக்களை அனுப்பியுள்ளதாக பிபிசி பெர்சியன் சேவை தெரிவித்துள்ளது. பிபிசி பெர்சியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், விமான எதிர்ப்பு அமைப்பின் சத்தம் கேட்கிறது. Instagram பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு எண்ணெய், தங்கம் விலை உயர்வு இஸ்ரேலிய ஏவுகணை இரானைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து உலகளாவிய எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகள் உயர்ந்து பங்குகள் சரிந்தன. வெள்ளிக்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 3% உயர்ந்து சுமார் 90 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 டாலர்களுக்கு மேல் புதிய உச்சமாக வர்த்தகம் செய்யப்பட்டது. ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளும் தாக்குதல் செய்திக்குப் பிறகு சரிந்தன. கடந்த வார இறுதியில் இரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் எதிர்வினையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இரானிய அமைச்சர் எச்சரிக்கை இஸ்ரேலிய தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார். "இஸ்ரேலின் எந்தவொரு பதிலடிக்கும் தனது நாட்டின் பதில் "உடனடியாகவும் அதிகபட்ச மட்டத்திலும்" இருக்கும்" என்று தற்போது வெளியாகியிருக்கும் செய்திகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்தார். கடந்த சனிக்கிழமை இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப் போவதாக இஸ்ரேல் கூறி வந்ததது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் இஸ்ரேல் பதிலடி தரக்கூடாது என்று வலியுறுத்தி வந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்போதைய தாக்குதலுக்கு என்ன காரணம்? சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகக் கட்டடத்தின் மீது கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது என்று இரான் கூறுகிறது. தூதரகத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது இரான் குற்றம்சாட்டுகிறது. இது தன் இறையாண்மையை மீறுவதாக இரான் கருதுகிறது. அத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. அந்தத் தாக்குதலில் இரானின் உயர்நிலைக் குடியரசுக் காவலர்களின் (Iran's elite Republican Guards - IRGC) வெளிநாட்டுக் கிளையான குத்ஸ் படையின் மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். லெபனானின் ஷியா ஆயுதக் குழுவான ஹெஸ்பொலாவுக்கு ஆயுதம் வழங்க இரான் எடுத்துவரும் முன்னெடுப்புகளில் அவர் முக்கிய நபராக இருந்தார். இந்தத் தூதரகத் தாக்குதல், இரானிய இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்துவதாகப் பரவலாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களை ஒத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் சிரியாவில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பல மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். உயர் ரக துல்லிய ஏவுகணைகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை IRGC சிரியா வழியாக ஹெஸ்பொலாவுக்கு அனுப்புகிறது. இஸ்ரேல் இதைத் தடுக்க முயற்சிக்கிறது. அதே போல் இரான் சிரியாவில் தனது ராணுவ இருப்பை வலுப்படுத்துவதையும் இஸ்ரேல் தடுக்க முயல்கிறது. https://www.bbc.com/tamil/articles/c254j8gykgvo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.