Jump to content

இலங்கை மீது இந்தியா அத்துமீறுவதாக தெரிவித்து ஜெனிவாவில் இந்தியாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் அத்துமீறிய செயற்பாடுகளுக்கு எதிராக ஜெனிவாவினுடைய கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக நேற்றுமுன்தினம் மாலை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமையகத்திற்கு முன்னால் இந்தியாவிற்கு எதிரான எதிர்ப்பு  ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

IMG-20210929-WA0021.jpg

இந்த ஆர்ப்பாட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பிய செய்தியில் இந்தியா தங்களுடைய அரசியல் நிலைப்பாட்டை உலக அரங்கில் தக்கவைத்துக் கொள்வதற்கு மற்றும் தெற்காசிய நாடுகளில் உள்ள பெரிய, சிறிய  நாடுகளையெல்லாம் தங்களுடைய (இந்தியா) கண்பார்வையில் கீழ் வைத்துக் கொள்ள வேண்டும் அதாவது இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம் போன்ற  நாடுகளையெல்லாம் தொடர்ந்து தங்களுடைய (இந்தியா) கட்டுப்பாட்டிற்குள் வைக்க வேண்டும் என்பதற்காக அமெரிக்காவுடன் இணைந்து கொண்டு இந்த நாடுகளுடைய விடையங்களில் எல்லை மீறி தலையிட்டுக்  கொண்டு வருகிறார்கள் எனும் குற்றசாட்டு உலக அரங்கில் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளனர்.

IMG-20210929-WA0022.jpg

மேலும் அந்த அறிக்கையில்,

இந்தியாவுக்கு கட்டுப்படாத நாடுகளுக்குள் தங்களுடைய புலனாய்வுப் பிரிவினரை பயன்படுத்தி இன மோதல்களை ஏற்படுத்துவது, ஆயுத குழுக்களை உருவாக்குவது, கூலிப்படைகளுக்கு பணம் கொடுத்து குண்டு வெடிப்புகளை ஏற்படுத்துவது போன்ற இவ்வாறான விடயங்களை செய்து வருவது இந்தியாவுடைய நாற்பது, ஐம்பது வருட கால வரலாறுகளில் இருந்து தெரியவருகிறது; இதில் ஒரு பின்னணிதான் எல்டிடிஈ (LTTE) பயங்கரவாதிகளுக்கும் - இலங்கை அரசுக்கும் ஏற்பட்ட யுத்தம் இந்த யுத்தம் நீண்ட காலமாக நீண்டு செல்வதற்கும், அவர்களுக்குப் (LTTE) பின்னால் முழுமையாக நின்று செயல்பட்டது இந்தியா என்பதும் மறைக்கப்பட்ட ஒரு உண்மையாகும் என்கின்றனர் அரசியல் அவதானிகள்.

IMG-20210929-WA0019.jpg

அதுமட்டுமல்லாமல்  யுத்தத்திற்குப் பின்னால்  இலங்கையினுடைய விடயங்களில் டயஸ்போரா அமைப்பை மிகவும் ஒரு பலமான அமைப்பாக பலப்படுத்தி உலக நாடுகளில் இலங்கைக்கு எதிராக செயற்படுவதற்கு பாரிய உதவிகளை செய்து வருகிறார்கள் (இந்தியா) ; மேலும் இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கு பின்னால் முழுமையாக ஈடுபட்டிருப்பது இந்திய ரோ அமைப்பும், இந்திய அரசும் என்பது எமது இலங்கையிலுள்ள புலனாய்வுப் பிரிவினருக்கு மட்டுமன்றி இலங்கையிலுள்ள 90 சதவீதமான மக்களுக்கும் தெரியவந்துள்ளது. அத்துடன் ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் மிக முக்கியமான சூத்திரதாரிகளில் ஒருவரான சாரா புலஸ்தீனி  என்பவளை மறைத்து பாதுகாத்து வைத்திருப்பதும் இந்தியா என்பது ஒரு குறிப்பிடத்தக்க விடயமாகும்;  என்பது காற்றில் உலாவும் செய்தி. பலதடவைகள் அரச மற்றும் எதிரணி அரசியல்வாதிகளினால் ஊடகங்களில் பேசப்பட்டுவந்த செய்தியும் கூட.

IMG-20210929-WA0020.jpg

அது மட்டுமல்லாமல் ஏனைய அண்டைய நாடுகளில் நடக்கக்கூடிய அசம்பாவிதங்கள், ஏனைய பிரச்சினைகளாக இருக்கட்டும் அனைத்திற்குப் பின்னாலும் இந்தியப் புலனாய்வுப் பிரிவினர்தான் செயற்பட்டு வருகிறார்கள்; முக்கியமாக இவர்கள்(இந்தியா)  ஒவ்வொரு நாடுகளிலும் தங்களுடைய கூலிப்படைகளை பயன்படுத்துவதுடன், அந்த நாடுகளில் இருக்கும் தனியார் ஊடகங்கள் மற்றும் சிறு சிறு ஒரு சில அரசியல் கட்சிகள் போன்றவற்றிற்கு பணம் கொடுத்து அவர்களுடைய(இந்தியா) நிகழ்ச்சி நிரல்களுக்கு இயங்க வைப்பதும், சமூக வலைத்தளங்களில் அரசாங்கத்திற்கு  எதிராக செயற்படுவதற்கு கூலிப்படைகளை பயன்படுத்தி வருவது போன்ற விடயங்களை இவர்கள் (இந்தியா) செய்து வருகிறார்கள். எனவேதான்  தற்போது ஜெனிவாவில் ஜெனிவா கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த காலகட்டத்தில்  அதுவும் இலங்கை பற்றிய விடயங்கள்  அதிகம் பேசப்பட்டு வருகின்ற இச்சந்தர்ப்பத்தில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதாக தெரிவித்துள்ளனர்.

இலங்கை மீது இந்தியா அத்துமீறுவதாக தெரிவித்து ஜெனிவாவில் இந்தியாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இத  

இந்தியாவுக்கு வந்த  சோதனை???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

ஆர்ப்பாட்டத்தை ஒழுங்குபடுத்தி நடாத்தியவர்கள் யார்? 

நிச்சயம் புலிகளோ அவர்கள் சம்பந்தப்பட்டவர்களோ இல்லை 

1 hour ago, விசுகு said:

என்ன இத  

இந்தியாவுக்கு வந்த  சோதனை???

எனக்கு இது சந்தோசம் தரும் செய்தி என்ன நடக்கிறது என்று உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

ஆர்ப்பாட்டத்தை ஒழுங்குபடுத்தி நடாத்தியவர்கள் யார்? 

இது இந்தியாவுக்கு எதிரானது என்பதால் பாகிஸ்தான் தீவிரவாதிகளாக இருக்க வாய்ப்பிருக்கிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, அக்னியஷ்த்ரா said:

இது இந்தியாவுக்கு எதிரானது என்பதால் பாகிஸ்தான் தீவிரவாதிகளாக இருக்க வாய்ப்பிருக்கிறது

இல்லை ..இது இலங்கை அரசின் வேலையேதான்...தமிழர்களின் போராட்டம் நடந்தல் .தமக்கு ஆப்பு என்றபடியால்...திசை திருப்பும் போராட்டங்களை அரசே நடத்தியது......அமெரிக்காவிலும் நடந்தது இதுதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kandiah57 said:

என்ன நடக்கிறது என்று உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் 

இது, அடிக்கடி இலங்கையைப்பார்த்து  இந்தியா கூறும்  வார்த்தையாயிற்றே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற் கிந்தியன் மொமென்ற்.😊

Screenshot-2021-09-29-08-33-47-031-com-a

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்திய‌ அள‌வுக் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
    • சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசியம் இன்னமும் உயிருடன் இருப்பது போலவே உணர முடிந்ததே?
    • நீங்களே தனியா நிண்டு வெல்ல முடியாது என நினைக்கும் கட்சியின் சின்னத்தை அப்படி எல்லாம் முடக்கி யாரும் மினகெட மாட்டார்கள். இது பல வருடமாக உள்ள இந்திய தேர்தல் விதி. நாதக போனமிறைக்கு முதல் முறை இரெட்டை மெழுகுதிரி, பின் விவசாயி, இப்போ மைக். போதியளவு வாக்கு எடுத்த கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம். லெட்டர்பேட் கட்சிக்கு எல்லாம் தற்காலிக சின்னம் என்பது பால வருட நடைமுறை. நடப்பு லோக்சபா எம்பிகள், சட்ட மன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தை, மதிமுகவுக்கே அவர்கள் சின்னம் இல்லை. ஒரு உள்ளாட்ட்சி சீட்டும் இல்லாத நாதக மட்டும் என்ன ஸ்பெசலா? நாதக 7%. நோட்டா 9% என நினைக்கிறேன். ஓம்.  பிஜேபி இப்போ தன் தலைமையில் கூட்டணி வைக்கிறது. அடுத்தடுத்த தேர்தல்களில் வாக்கை பிரிக்கும் வேலை முடிந்ததும், பி டீம், ஏ டீமுடன் இணையும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.