Jump to content

பூமியின் அதிசய வரலாறு: 100 கோடி ஆண்டுகளை காணவில்லை - விஞ்ஞானிகள் கூறும் விளக்கம் என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பூமியின் அதிசய வரலாறு: 100 கோடி ஆண்டுகளை காணவில்லை - விஞ்ஞானிகள் கூறும் விளக்கம் என்ன?

  • ஜாரியா கோர்வெட்
  • பிபிசி பியூச்சர்
2 மணி நேரங்களுக்கு முன்னர்
கேன்யான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

புவியியல் வரலாற்றுப் பதிவேட்டில் இருந்து நூறு கோடி ஆண்டுகள் காணாமல் போய்விட்டன. இப்படிக் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டு 150 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டாலும் இது எப்படி நடந்தது என்பதில் விஞ்ஞானிகளுக்குள் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.

"சிகாகோ ட்ரிப்யூன்" என்ற பாரம்பரியம் மிக்க பத்திரிகையின் முதல் பக்கத்தில் 1869-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 3-ஆம் தேதி "நடுங்கவைக்கும் விபரீதம்" என்ற தலைப்பில் ஒரு செய்தி வந்தது.

ஒரேயொரு கையைக் கொண்ட புவியியலாளர் ஜான் வெஸ்லி பவெல் தலைமையிலான ஆய்வாளர்கள் அடங்கிய ஒரு குழு தொடர்புடைய சம்பவத்தை அந்தச் செய்தி குறிப்பிட்டது. அந்தக் குழுவின் பணி ஒன்றே ஒன்றுதான். ஆனால் எளிதானது அல்லது. வயோமிங்கில் உள்ள கிரீன் ஆற்றங்கரையில் இருந்து சுமார் ஆயிரம் மைல்கள் கீழ்நோக்கி நீர்ப் போக்கில் பயணிப்பது. செல்லும் வழியில் தங்களது கண்டுபிடிப்புகளைப் பட்டியிலிடுவது அவர்களது வேலை.

அவர்கள் பயணத்தைத் தொடங்கிய சில வாரங்களுக்குப் பிறகு, அவர்களிடம் இருந்த எந்தத் தகவலும் இல்லை. பொதுவெளியில் கவலை அதிகரித்திருந்தது. அவர்கள் சென்ற படகு மூழ்கி விட்டதாகவும் அனைவரும் இறந்து போயிருக்கலாம் என்றும், தப்பிப் பிழைத்து வந்ததாக ஒருவர் கூறியது செய்தியாக வெளிவந்து கொண்டிருந்தது.

ஆனால் இந்தச் செய்தியை பவலின் மனைவி நம்பவில்லை. இறுதியில் அவர் நம்பாததுதான் சரி என்றாகிப் போனது. ஆம், தப்பிப் பிழைத்து வந்தவர் என்று கூறியவர், உண்மையில் பவலை சந்தித்ததே இல்லை என்பது அதன் பிறகுதான் தெரியவந்தது. பவெலும் அவரது குழுவினரும் மூழ்கிப் போனதாக வெளியான செய்தி கட்டுக்கதை - ஜோடிக்கப்பட்டது என்பது தெளிவானது.

இந்தக் கட்டுக்கதை வெளியாகிக் கொண்டிருந்த வேளையில், அதுபற்றி எதுவும் தெரியாத ஆராய்ச்சியாளர்கள் தங்களது ஆய்வுப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். அந்தப் பயணத்தின் போதுதான் நம்ப முடியாத, அதிர்ச்சியளிக்கும் ஒரு விஷயத்தை பவலும் அவரது குழுவினரும் கண்டுபிடித்தார்கள். அவரது கண்டுபிடிப்பு அடுத்த நூற்று ஐம்பது ஆண்டுகளாக புவியியில் ஆராய்ச்சியாளர்களைத் திகைக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

காணாமல் போன ஆண்டுகள்

பவெலின் அந்த ஆய்வுப் பயணம் சாதாரணமானது அல்ல. அது சாகசங்கள் நிறைந்த பயணம். ஆயிரம் மைல்கள், அதாவது 1,600 கிலோ மீட்டர் தொலைவுக்கு சீறிப் பாயும் ஆற்றில் பயணிப்பதற்காக அவர்கள் பல முன்னேற்பாடுகளைச் செய்திருந்தார்கள். வேலைக்கும் பாதுகாப்புக்கும் சந்தேக நபர்கள், பூர்வகுடியைச் சேர்ந்தவர்கள், முன்னாள் குற்றவாளிகள் போன்றோரையும் கூட்டிச் சென்றனர்.

பவல்

பட மூலாதாரம்,ALAMY

 
படக்குறிப்பு,

ஜான் வெஸ்லி பவெலின் பயணத்தை குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட தபால்தலை

மொத்தம் நான்கு படகுகளுடன் அவர்களது ஆய்வுப் பயணம் தொடங்கியது. சுழலும் நீர், பாயும் நீர்வீழ்ச்சிகள், அச்சுறுத்தும் பாறைகள் என நாள்தோறும் எதையாவது சந்திக்கும் துணிச்சலும் அவர்களிடத்தில் இருந்தது.

பயணம் தொடங்கிய சில நாட்களிலேயே அவர்கள் சென்ற ஒரு படகு அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. பயணம் செய்த 10 பேரில் ஆறு பேர்தான் வீடு திரும்புவார்கள் என்பது அப்போதே முடிவாகிவிட்டது.

1869-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதியன்று கிராண்ட் கேன்யான் எனப்படும் பெரும் செங்குத்துப் பள்ளத்தாக்கை அடைந்தது பவெலின் குழு. அப்போது, அவர்களிடத்தில் ஒரு மாதத்துக்குத் தேவையான உணவுப் பொருட்கள் மட்டுமே இருந்தன. நாளான ஆப்பிள்கள், அழுகிய பன்றி இறைச்சி, பூச்சிகள் இருக்கும் மாவு, ஒரு சாக்குப்பையில் காஃபி போன்றவை மட்டும்தான்.

ஆனால் அது மட்டுமே அல்லாமல், அவர்களுக்குத் தெரியாத பல ஆபத்துகளும் இருந்தன.

இந்த இக்கட்டான காலத்தில் கூட கண்ணில் தென்பட்டவற்றைத் பவெலும் அவரது குழுவினரும் ரசித்தார்கள். துல்லியமாகக் குறிப்பெடுத்துக் கொண்டார்கள். சுற்றிலும் இருந்த பாறை அடுக்குகள், கூர்மையான வளைவுகள், பிரமாண்டமான இயற்கைக் காட்சிகள் போன்றவற்றை அவர்கள் கண்டார்கள். வண்ணமயமான புத்தகங்களை அடுக்கி வைத்ததைப் போன்ற பாறை அடுக்குகளைக் கொண்டிருந்த ஒரு குன்று மீது பவெலின் படகு மோதியது. அதை அவர் "கடவுளின் நூலகம்" என்று குறிப்பிட்டார்.

அந்தப் பாறை அடுக்குகள் இந்தப் பிரபஞ்சம் எவ்வாறு உருவானது என்பதை வரிவரியாகப் படிப்பதற்கான இடம் என்று அவர் கூறினார். ஆனால், பின்னர் பள்ளத்தாக்கு சுவர்களின் அடுக்கில் திகைப்பூட்டும் வித்தியாசமான ஒன்றைக் கண்டுபிடித்தார்.

பாறைகளின் அடிவாரத்தில் நின்று மேல்நோக்கிப் பார்த்தால், கடினமான, படிகப் பாறைகளின் அடர்த்தியான பகுதியை அவரால் காண முடிந்தது. அவை வழக்கத்துக்கு மாறாக செங்குத்தாக அடுக்கப்பட்டிருந்தன. அதற்கு மேல் நேர்த்தியான கிடைமட்ட கோடுகளில் சுமார் ஆயிரம் அடிக்கு சிவப்பு நிற மணற்கல் தொகுப்பு இருந்தது.

செங்குத்து படிக பாறை இருந்த பகுதி புவியியில் விதிகளின்படி 10,000 அடி தடிமனாக இருக்க வேண்டும் என்று பவெல் மதிப்பிட்டிருந்தார். ஆனால் உண்மையில், இது 500 அடிதான் இருந்தது. ஆயிரக்கணக்கான அடி பாறையைக் காணவில்லை. அது மறைந்து போயிருந்தது.

அவர் "மகா முரண்" என்று அதற்குப் பெயரிட்டார். "அது எப்படி சாத்தியம்?" என்று தனக்குள்ளே அவர் கேட்டுக் கொண்டார்.

பெரும் பள்ளத்தாக்கு

பட மூலாதாரம்,ALAMY

 
படக்குறிப்பு,

பாறைகள் பொதுவாக ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கப்பட்டிருக்கும். ஆனால் "மகா முரண்" இந்த வழக்கத்தை உடைத்தது

இன்று புவியியலாளர்கள் கடினமான, படிக பாறைகளில் இளமையானது 1.7 பில்லியன் ஆண்டு வயதைக் கொண்டது என்பதை அறிந்திருக்கிறார்கள். அதேபோல் மணற்கல் அடுக்குகளில் மிகப் பழமையானது 550 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது என்பது தெரியும்.

இதன் பொருள் என்னவென்றால், பூமியின் வரலாற்றுப் பதிவில் ஒரு பில்லியன், அதாவது நூறு கோடி ஆண்டு இடைவெளி உள்ளது. இன்றுவரை, இடையில் உள்ள பாறைகளுக்கு என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது.

உலகளாவிய ஒழுங்கின்மை

கிராண்ட் கேன்யனில் காணாமல் போன பாறை தெளிவாக இருந்தாலும், உண்மையில் இது பூமி முழுவதுமே காணப்படுகிறது.

"எந்தக் கண்டத்தின் மையத்திலும் - அமெரிக்கா, சைபீரியா அல்லது ஐரோப்பாவில் போதுமான அளவு கீழே துளையிட்டால், இந்த மர்மமான புவியியல் ஒழுங்கின்மையைக் காண முடியும்" என்று கூறுகிறார் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை பேராசிரியர் ஸ்டீபன் மார்ஷக்.

"இதன் பொருள் என்னவென்றால், உங்களுக்கு கீழே எல்லா இடங்களிலும், அந்த முரண்பாட்டின எல்லை உள்ளது. சில நேரங்களில் அது மேற்பரப்புக்கு அருகில் இருக்கலாம். சில நேரங்களில் அது சில கிலோ மீட்டர் தொலைவுக்குக் கீழே இருக்கலாம். ஆனால் எங்கும் இருக்கிறது. இது பூமியின் வரலாற்றைப் பற்றிய மிக மிக முக்கியமான கதையைச் சொல்கிறது."

பில்லியன் ஆண்டுகள் காணாமல் போனது என்ற கண்டுபிடிப்பு அற்பமான விஷயம் அல்ல. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவது, இது இன்னுமொரு விவரிக்க முடியாத நிகழ்வுக்கு முன் நிகழ்ந்திருக்கிறது.

அதன் பெயர் கேம்ப்ரியன் வெடிப்பு. கடல்கள் திடீரென விசித்திரமான மற்றும் அறிமுகமில்லாத உயிரினங்களிடம் இருந்து விலகி தற்போதிருக்கும் பல உயிரினங்களின் வாழ்விடமான சம்பவம். இது 13-25 மில்லியன் ஆண்டு இடைவெளியில் நடந்திருக்கிறது. 1840 களில் இந்தச் சிக்கல் அடையாளம் காணப்பட்டது. சார்லஸ் டார்வினுக்கு இது சவாலாக இருந்தது. அவர் அதை "விவரிக்க முடியாதது" என்று அழைத்தார்.

இரண்டாவதாக, காணாமல் போனதாககக் கருதப்படும் ஆண்டுகளில் பூமி தீவிரமான பருவநிலை மாற்றத்திற்கு உட்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால் முற்றிலும் உறைந்த மேற்பரப்பைக் கொண்ட பெரிய பனிப் பந்து போல பூமி மாறியிருக்கலாம் என்று அனுமானிக்கப்படுகிறது. ஆயினும் அந்தக் காலகட்டத்தையும் தாண்டி உயிரினங்கள் எப்படி வாழ்ந்தன என்பது குறித்து போதுமான தெளிவு இல்லை.

பனிப்பந்து

பட மூலாதாரம்,ALAMY

 
படக்குறிப்பு,

650 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் மேற்பகுதி முழுவதும் பனியால் மூடப்பட்டிருந்தது

இந்த இருண்ட யுகத்தில் என்ன நடந்தது என்பதை நாம் அறிந்திருந்தால், புதிர்களுக்கு சில பதில்களைக் கண்டுபிடித்திருப்போம்.

"இது பூமியின் வரலாற்றில் நிறைய சம்வங்கள் நடக்கும் போது ஏற்பட்டிருக்கும் ஒரு இடைவெளி" என்கிறார் கொலராடோ பல்கலைக்கழகத்தின் புவியியல் அறிவியல் துறையின் இணை பேராசிரியர் ரெபெக்கா ஃப்ளவர்ஸ். " இந்த நிகழ்வுகள் அனைத்தும் ஏதோ ஒரு வடிவத்தில் தெளிவாக தொடர்புடையவை." என்று அவர் கூறுகிறார்.

இந்த அடிப்படையில் காணாமல் போன அந்த நூறுகோடி ஆண்டுகளில் என்ன நடந்திருக்கலாம் என்பது பற்றிய பல கோட்பாடுகள் வெளிவந்திருக்கின்றன.

கோட்பாடு 1: பனிப்பந்து

இன்று பூமியின் பனிப்பாறைகளில் என்ன நடக்கிறது என்பதை வைத்து காணாமல் போன காலகட்டத்தில் என்ன நடந்திருக்கலாம் என்று கணிப்பது. பூமியின் இரண்டாவது பெரிய பனிப்பகுதியான கிரீன்லாந்து பனி அடுக்குப் பாறைகளை, இது அந்தத் தீவின் மேற்பரப்பில் 80%, அதாவது சுமார் 1.7 மில்லியன் சதுர கிமீ அளவுக்குப் படர்ந்திருக்கிறது.

ஆறுகளைப் போலவே, பனிப்பாறைகளும் நகரலாம். ஆனால் மிக மெதுவாக நகரும். அவை படிந்திருக்கும் பூமயின் மேலடுக்கை விட்டு படிப்படியாக நகர்ந்து செல்கின்றன. இது பல்லாயிரக்கணக்கான அல்லது மில்லியன் ஆண்டுகளுக்கு தொடர்ந்தால், இறுதியில் இந்த அரிப்பு குறிப்பிடத்தக்க அளவு பாறைகளை அழித்துவிடும். இது கிரீன்லாந்திலும் நடந்திருக்கிறது.

பூமி ஒரு பெரிய பனிப்பந்தாக இருந்தபோது, இதே செயல்முறைகள் பூமியின் முழு மேற்பரப்பிலும் நடந்திருக்கிறது. ஒரே கேள்வி என்னவென்றால், எந்த அளவு பனியும் ஒரு பில்லியன் ஆண்டு பாறையை அழித்துவிடுமா என்பதுதான்.

2018 இல், பல பல்கலைக்கழக சகாக்களுடன் சேர்ந்து, பேராசிரியர் பிரஹின் கெல்லர் என்பவர் இந்த கேள்விக்கு பதிலளிக்க முயன்றார். பல ஆண்டுகளுக்கு முன்பு மற்றொரு குழு உருவாக்கிய மாதிரியின் அடிப்படையில், பனிப்பந்து பூமியின் மேற்பரப்பில் "ஈரமான" பனிப்பாறை இருந்திருக்கும் என்று அவர்கள் கருதினர். அது நகரக்கூடியதாகவும் இருந்திருக்கும்.

பனிப்பந்து

பட மூலாதாரம்,ALAMY

இந்தப் பனி அடுக்கு நகர்வு, ஒட்டுமொத்தமாக, சுமார் 717 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி சுமார் 580 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வரை சுமார் 3-5 செங்குத்து கிமீ அளவுக்கு பாறையை அகற்றியிருக்கும் என்று கணித்தனர். இது பவல் கூறிய "மகா முரணுக்கு" போதுமானது.

கோட்பாடு 2: ஒரு சூப்பர் கண்டத்தின் மரணம்

ஒரு பில்லியன் ஆண்டுகளுக்குரிய பாறைகள் காணாமல் போனதற்கான மற்றொரு சாத்தியம் என்னவென்றால், ரோடினியா என்கிற சூப்பர் கண்டத்தின் மறைவு. கிழக்கு அண்டார்டிகா, இந்தியா, சைபீரியா, சீனா, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவின் பல பகுதிகள் ஒரே இடத்தில் குவிந்துள்ள ஒரு மறக்கப்பட்ட நிலப்பரப்பு இது. இது முதன்முதலில் ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சேர்ந்திருந்தது. பின்னர் 750 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வரை படிப்படியாக உடைந்தது.

"இது அடிப்படையில் உலகின் அனைத்து மேற்பரப்பையும் ஒரே மாபெரும் கண்டமாக இணைத்தது" என்கிறார் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முனைவர் பட்ட மாணவர் மைக்கேல் டெலூசியா.

பூமியின் மையத்தில் இருந்து வெளியிடப்பட்ட வெப்பத்தால் அந்தக் கண்டம் உடையத் தொடங்கியது.

"நிச்சயமாக, பொருள்கள் சூடாகும்போது, அவை விரிவடைகின்றன," என்கிறார் டெலூசியா. அடிப்பகுதி சூடானதால், பூமியின் மேற்பரப்பு சில கிலோமீட்டர் தொலைவுக்கு உயர்ந்திருக்கலாம்.

இது ரோடினியாவின் முறிவை துரிதப்படுத்தியது மட்டுமல்லாமல், முந்தைய ஒரு பில்லியன் ஆண்டுகளில் நடந்த எல்லாவற்றையும் பற்றிய பதிவையும் அழித்திருக்கலாம்.

இந்த கோட்பாட்டின் படி, ரோடினியா சுமார் 200 மில்லியன் ஆண்டுகளாக ஒரு பெரிய, மலைப்பாங்கான பீடபூமியைப் போல தோற்றமளித்திருக்கும். எல்லா உயிர்களும் அதைச் சுற்றியுள்ள பரந்த கடலில் இருந்திருக்கலாம். இது இறுதியில் மேற்பரப்பு மட்டும் எதுவும் இல்லாமல் அழிக்கப்பட்டிருக்கலாம். அதுவே பாறைகள் காணாமல் போனதற்கும் காரணமாக அமைந்திருக்கும்.

கோட்பாடு 3: இடைவெளிகளின் குழப்பம்

இது மிக சமீபத்திய கோட்பாடு.

ஒரு பில்லியன் ஆண்டுகள் காணாமல் போக இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன. ஒன்று பாறை உருவாகவில்லை. அல்லது அனைத்தும் அகற்றப்பட்டது.

கிராண்ட் கேன்யன் எனப்படும் செங்குத்துப் பெரும் பள்ளத்தாக்கில் "மகா முரண்" மிகத் தெளிவாகத் தெரிகிறது. மேலும் பல இடங்களிலும் இதுபோன்ற தோற்றங்களைப் பார்க்க முடியும். அவற்றில் ஒன்று அமெரிக்காவின் வடகிழக்கில் ஹட்சன் விரிகுடாவைச் சுற்றியுள்ள பண்டைய பாறையின் பரந்த பகுதியான கனடியன் கேடயம் (Canadian Shield). இங்கே நடந்த சமீபத்திய ஆராய்ச்சி ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது.

பவெல்

பட மூலாதாரம்,ALAMY

 
படக்குறிப்பு,

பவெல் மற்றும் அவரது குழு

"பூமி பனிப்பந்தாக மாறுவதற்கு முன்னர் கிராண்ட் கேன்யனில் பெரும் அரிப்பு ஏற்பட்டதாகத் தோன்றுகிறது" என ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஃப்ளவர்ஸ் கூறுகிறார், "அதே நிகழ்வு கனேடிய கேடயத்தில் பூமி பனிப்பந்தாக மாறியபோதோ அல்லது அதற்குப் பிறகோ நிகழ்ந்திருக்கிறது."

இதன்படி பார்த்தால், காணாமல் போன பாறைகள் ஒரே தொடர்ச்சியாக இல்லாமல் இரண்டு வெவ்வேறு இடைவெளிகள் நடந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.

அழிக்கப்பட்ட பாறையின் இரண்டு அடுக்குகள் உண்மையில் தனித்தனியானதாக இருந்தால், அவை பூமி பனிப்பந்து ஆனது போன்ற ஒரே அசாதாரண நிகழ்வால் ஏற்படவில்லை என்று தெரிகிறது. அதனால் பூமி மேலடுக்கு உயர்ந்தது போன்ற பல்வேறு நிகழ்வுகளால் ஏற்பட்டிருக்கலாம் என்கிறார் ஃப்ளவர்ஸ்.

விலகாத மர்மம்

ஆயினும் புதிர் விலகிவிடவில்லை. . விவாதம் இன்னும் தொடர்கிறது. அனைத்து நிபுணர்களும் அதிக தரவின் அவசியத்தை வலியுறுத்துகின்றனர். அதிர்ஷ்டவசமாக இது கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது.

இதில் முக்கியமானது "தெர்மோக்ரோனாலஜி" என்று அழைக்கப்படும் ஒரு நுட்பம் இதில் முக்கியப் பங்கு வகிக்கும். இது பாறைகள் உருவானதிலிருந்து அவற்றின் வெப்பநிலை எவ்வாறு மாறியது என்பதை அளவிடுவதன் மூலம் அதன் வரலாற்றை விவரிக்கும்.

"இந்த நுட்பத்தின் அடிப்படையில் பூமியின் வரலாற்றில் காணாமல் போன பக்கங்களை மீட்பதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது" என்கிறார் பேராசிரியர் மெக்டொனால்ட்.

அவை என்ன ரகசியங்களை கொண்டிருக்கின்றன என்று யாருக்குத் தெரியும்?

https://www.bbc.com/tamil/science-58765562

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.