Jump to content

தமிழ்நாடு ரவுடி ஒழிப்பு நடவடிக்கையில் விசிக குறிவைக்கப்படுகிறதா? ஆபரேஷன் டிஸ்ஆர்ம் என்ன செய்கிறது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு ரவுடி ஒழிப்பு நடவடிக்கையில் விசிக குறிவைக்கப்படுகிறதா? ஆபரேஷன் டிஸ்ஆர்ம் என்ன செய்கிறது?

  • ஆ.விஜய் ஆனந்த்
  • பிபிசி தமிழுக்காக
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
வன்னி அரசு.

பட மூலாதாரம்,VANNI ARASU/FACEBOOK

 
படக்குறிப்பு,

வன்னி அரசு.

`ஆபரேஷன் 'டிஸ்ஆர்ம்' என்ற பெயரில் தமிழ்நாடு காவல்துறை நடத்தும் `ரவுடிகள் ஒழிப்பு வேட்டை', அரசியல் ரீதியாக விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரிய ரவுடிகளை கைது செய்யவில்லை, அரசியல் போராட்டங்களில் கைது செய்யப்பட்டவர்களை ரவுடி பட்டியலில் சேர்க்கிறார்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) நிர்வாகிகள் குறிவைக்கப்படுகிறார்கள் என்றெல்லாம் குற்றம்சாட்டுகிறார் விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு.

குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்றச் சம்பவங்களில் தொடர்பில்லாதவர்கள், அப்பாவிகள் ஆகியோரை இலக்காக வைத்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்கிறார் ஒரு காவல் துறை கண்காணிப்பாளர்.

இந்த நடவடிக்கையில் திமுக நிர்வாகி ஒருவரே கூட கைது செய்யப்பட்டுள்ளார் என்கிறார் அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர்.

என்ன நடக்கிறது?

டி.ஜி.பியின் 5 உத்தரவுகள்

தமிழ்நாடு முழுவதும் 'ஆபரேஷன் டிஸ்ஆர்ம்' என்ற பெயரில் ரவுடிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவர்களிடம் இருந்து கொடூர ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையின் மூலம் தற்போது வரையில் 3,325 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஏராளமான பயங்கர ஆயுதங்களும் கள்ளத் துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர, ஆயுத தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் பற்றிய கணக்கெடுப்பும் நடத்தப்பட்டன. இதுதொடர்பாக, 2,548 பேரிடம் அந்தந்த மாவட்ட காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

அனைத்து மாவட்ட காவல்துறை ஆணையாளர்களுக்கும் காவல் கண்காணிப்பாளர்களுக்கும் கடந்த 30 ஆம் தேதி ஐந்து உத்தரவுகளை டி.ஜி.பி சைலேந்திரபாபு பிறப்பித்துள்ளார். அதன்படி, கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை தயாரிப்பவர்கள் விவரம், இடங்களை கண்டறிந்து வைத்திருப்பது, ஆயுதங்களை வாங்க வருவோரின் விவரம், எதற்காக இந்த ஆயுதங்கள் என்பது குறித்த பதிவேட்டு விவரம், விவசாயம், வீட்டு உபயோகம் தவிர வேறு எந்தக் காரணங்களுக்காகவும் விற்பனை செய்யாமல் இருத்தல், பட்டறைகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவது, குற்றவாளிகள் தொடர்பான தகவல்களை தெரிவிப்பவர்களுக்கு வெகுமதி அளிப்பது என்பன உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஆதார் இல்லாமல் அரிவாளா?

இதனால், அரிவாள் தயாரிப்பதில் புகழ்பெற்ற திருப்பாச்சேத்தி, திருப்புவனம் ஆகிய பகுதிகளிலும் 'ஆதார் இல்லாமல் அரிவாள் கொடுக்கக் கூடாது' என போலீஸார் உத்தரவிட்டுள்ளனர்.

அதேநேரம், குற்றச் செயலில் ஈடுபட்டு வருகிறவர்கள், பிணையில் வந்த பிறகு தப்பித்துச் சென்றவர்கள், சந்தேக வழக்குகளில் தொடர்புடையவர்கள் எனப்படுவோர் மீது தமிழ்நாடு முழுவதும் நடந்து வரும் இந்த ஆபரேஷன், இதுவரையில் நடக்காத ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. காவல்துறையின் இந்த நடவடிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.

"இந்த ஆபரேஷனுக்கு `டிஸ்ஆர்ம்' எனப் பெயர் வைத்துள்ளனர். முதலமைச்சரிடம் தன்னை வெளிக்காட்டிக் கொள்வதற்காகத்தான் காவல்துறை தலைமை இயக்குநர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். உண்மையில் இவர்கள் பெயர் சொல்லும் அளவில் செயல்படும் ரவுடிகளை கைது செய்யவில்லை. என்னிடம் அப்படிப்பட்ட ரடிவுகளின் பெயர்ப் பட்டியல் உள்ளது. அவர்களில் ஒருவரைக்கூட இவர்கள் கைது செய்யவில்லை" என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு.

"2 கேஸ் இருந்தாலே ரவுடி லிஸ்ட்"

தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசியவர், "தமிழ்நாட்டில் கூலிப்படை கலாசாரம் எவ்வளவு மோசமாக உள்ளது என்பது போலீசுக்கு தெரியும். ரவுடிகளை உருவாக்குவதே போலீஸ்தான். இவர்கள் இருவருக்கும் இடையில் தொடர்பு இருந்து கொண்டே இருக்கும். கடந்த 10 ஆண்டுகளாக வி.சி.க மீது அ.தி.மு.க அரசு பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்தது. எங்கள் கட்சியின் நிர்வாகிகள் மீது 2 வழக்குகள் இருந்தாலே சரித்திர குற்றப் பதிவேட்டை உருவாக்கி, தினமும் காவல்நிலையத்துக்கு வந்து கையொப்பமிட வைப்பது, ஆர்.டி.ஓ விசாரணைக்கு உட்படுத்துவது எனச் செயல்பட்டனர்.

அந்தப் பட்டியலையே வைத்துக் கொண்டு இந்த ஆட்சியிலும் அதேபோல் செயல்படுகின்றனர். கடந்த ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர் ஆகிய பதவிகளில் உள்ள பலரும் அந்தந்த பகுதிகளில் சாதி வன்மத்தோடு செயல்பட்டனர். எஸ்.பி பதவியில் உள்ள சிலரும் அதேபோன்று செயல்பட்டனர். நாங்கள் அனைவர் மீதும் குற்றம் சுமத்தவில்லை. சேலம் மாவட்டம் ஓமலூரில் எங்கள் கட்சியின் மீது மிகுந்த பாகுபாட்டுடன் அம்மாவட்ட எஸ்.பி நடந்து கொண்டார். இதே எஸ்.பி கடலூரில் இருந்தபோது பல இடங்களில் எங்கள் கட்சியின் கொடியினை ஏற்றவிடாமல் தடுத்துள்ளார்" என்கிறார்.

காவல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மேலும், `` பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த 3 காவலர்களை இதே அதிகாரி கள்ளக்குறிச்சிக்கு இடமாற்றம் செய்தார். காவல்துறை காவிமயமாக மாறி வருவதையே இது காட்டுகிறது. நாங்கள் போராட்டக்களத்தில் இருப்பதால் எங்கள் மீது வழக்குப் பதிவு செய்வது என்பது இயற்கையானது. அதனை நாங்கள் குறை சொல்லவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை எல்லாம் ரவுடிகள் பட்டியலில் வைப்பது என்பது எப்படி சரியானது?" என்கிறார்.

காஞ்சி, நாகை எடுத்துக்காட்டுகள்

"எடுத்துக்காட்டு கூற முடியுமா?" என்றோம். "நிச்சயமாக. கடந்த ஆட்சியில் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலையை பட்டப்பகலில் தகர்த்தனர். அதைக் கண்டித்து சாலை மறியல் நடத்தினோம். நாங்கள் சென்னையில் போலீசாருடன் வாக்குவாதம் செய்தோம். இதுதொடர்பாக, வேதாரண்யத்தில் எங்கள் கட்சியின் பொறுப்பாளரான வேங்கைத் தமிழ் என்பவரை அன்றைய அரசு குண்டர் சட்டத்தில் கைது செய்தது. அவரை தற்போது ரவுடி பட்டியலில் சேர்த்துள்ளதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளனர்.

அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நடுவீரப்பட்டு, எருமையூர் பகுதியில் 2 ரவுடிகள் உள்ளனர். அவர்களை போலீசார் கைது செய்யட்டும். அதனை நாங்கள் தவறு எனக் கூறவில்லை. ஆனால், அதே ஊரில் உள்ள வி.சி.க நிர்வாகிகளையும் கைது செய்துள்ளனர். பழநியிலும் இதேபோல் கைது செய்துள்ளனர். இதனை குறிப்பிடக் காரணம், கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாடு காவல்துறை கட்டமைத்த அதே பதிவேட்டை, தற்போதைய அரசின் காவல்துறையும் கையாள்வது எப்படி சரியானதாக இருக்க முடியும்? டி.ஜி.பிக்கு நாங்கள் வைக்கும் கோரிக்கை இதுதான், `ரவுடிகள் பட்டியலில் உள்ள 3,000 பேரை கைது செய்துள்ளதாகக் கூறுகிறீர்கள். அதில் பெயர் சொல்லும் அளவில் உள்ள ரவுடிகளைச் சொல்ல முடியுமா?' எனக் கேட்கிறோம். அவர்கள் இன்னமும் வெளியில் சுற்றிக் கொண்டுதானே இருக்கிறார்கள்.

தவிர, கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சியில் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணியை சேர்ந்த பிரமுகர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதை வைத்துக் கொண்டு சிலர் கட்டப்பஞ்சாயத்து செய்து வருகின்றனர். கோவையை சேர்ந்த இந்துத்துவ இயக்க பிரமுகர் ஒருவர் சந்தையில் இருந்து வரும் மாடுகளை எல்லாம் பசுவதை செய்வதாகக் கூறி கன்மேன் எனப்படும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சென்று வண்டிகளை மறித்து வசூல் செய்கிறார். அந்தவகையில், பொய் சொல்லி துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு பெற்றவர்களை எல்லாம் காவல்துறை சரிபார்க்கட்டும்" என்கிறார்.

கொங்கு மண்டலத்தில் என்ன சிக்கல்?

"முதலமைச்சர் கைகளில்தானே காவல்துறை உள்ளது. அவருக்குத் தெரிந்துதானே கைது நடவடிக்கைகள் தொடர்கின்றன?" என்றோம். "காவல்துறையின் சாதிரீதியான அணுகுமுறையைப் பற்றி அவருக்குத் தெரிந்திருக்குமா எனத் தெரியவில்லை. இதனை அவரது கவனத்துக்குக் கொண்டு செல்லாமல் உளவுத்துறை அதிகாரிகள் மறைக்கின்றனர். திருக்குறளில் `ஒற்றாடல்' பகுதியில் வள்ளுவர் சொல்வது போல, `நாட்டில் என்ன நடக்கிறது என்பதை நல்ல ஒற்றர்களை வைத்து கண்டறியவில்லை என்றால் ஆட்சிக்கு எதிராகப் போய்விடும்' என்கிறார். எனவே, என்ன நடக்கிறது என்பதை ஒற்றர்களை வைத்துப் பார்த்தால், அவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக என்ன செய்தார்கள் என்பது தெரியவரும்.

குறிப்பாக, கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் உள்ளவர்களை மாற்ற வேண்டும். அந்த மாவட்டங்களில் எல்லாம் இதுவரையில் அம்பேத்கர் சிலைகளை வைப்பதற்கு அனுமதியில்லை. அந்தப் பகுதிகளில் தி.மு.க வெற்றி பெற முடியாமல் போவதற்கு சாதிரீதியாக செயல்படும் இதுபோன்ற அதிகாரிகள்தான் காரணம். கடலூர், விழுப்புரம், திருவாரூர், நாகப்பட்டினம் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் இவர்கள் வி.சி.க நிர்வாகிகளுக்கு சிக்கலை ஏற்படுத்துகின்றனர்" என்கிறார்.

சேலம் மாவட்டம், மோரூர் கிராமத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கொடி ஏற்ற முயன்றபோது காவல்துறை தடியடி நடத்தியபோது காயமடைந்ததாக சொல்லப்படும் சிறுவன் தொல்காப்பியனோடு வன்னி அரசு.

பட மூலாதாரம்,VANNI ARASU/TWITTER

 
படக்குறிப்பு,

சேலம் மாவட்டம், மோரூர் கிராமத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கொடி ஏற்ற முயன்றபோது காவல்துறை தடியடி நடத்தியதில் காயமடைந்ததாக சொல்லப்படும் சிறுவன் தொல்காப்பியனோடு வன்னி அரசு.

``முதலமைச்சரை வி.சி.க தலைவர் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது என்ன பேசப்பட்டது?" என்றோம். `` முதல்வர் உடனான சந்திப்பில் காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்து பேசப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் 5 முதல் 10 வி.சி.க நிர்வாகிகள் காவல்துறையின் நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்தும் சந்திப்பின்போது முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது" என்கிறார்.

``அரசியல் காரணங்களுக்காக கைதானவர்களை எல்லாம் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் பட்டியலில் வைப்பதாக வி.சி.க குற்றம் சுமத்துகிறதே?" என காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி சுதாகரிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` அப்படியெல்லாம் எதுவும் இல்லை. குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்றச் சம்பவங்களில் தொடர்பில்லாதவர்கள், அப்பாவிகள் ஆகியோரை இலக்காக வைத்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதாவது, குற்ற வழக்குகளில் ஏதோ ஒரு வகையில் தொடர்பில் இருந்தவர்கள், அவர்களுக்கு குற்றத்துக்கும் எந்த அடிப்படையில் தொடர்பு என்பதை முழுமையாக ஆராய்ந்த பின்னரே நடவடிக்கை எடுக்கப்பட்டது" என்கிறார்.

மேலும், `` பழைய வழக்குகள், குற்றச் சம்பவங்கள், அவற்றில் சம்பந்தப்பட்ட நபரின் பங்கு ஆகியவற்றை டி.எஸ்.பியும் இன்ஸ்பெக்டரும் முழுமையாக ஆய்வு செய்கின்றனர். அதன்பிறகே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதில் வேறு எந்தக் காரணங்களும் இல்லை" என்கிறார்.

தவறான முன்னுதாரணம்

காவல்துறை மீது வி.சி.க முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, தி.மு.கவின் சட்டத்துறை இணைச் செயலாளர் வீ.கண்ணதாசனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` குற்றவாளிகள் எந்தக் கட்சியில் இருந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இவர்கள் சொல்வதுபோல பொய்யாக ஒருவரை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த முடியாது. இதனை சட்டரீதியாக எதிர்கொள்ளாமல் அரசியல்ரீதியாக அணுகுவது என்பது சரியான ஒன்றல்ல" என்கிறார்.

தொடர்ந்து பேசியவர், `` அனைத்துக் கட்சிகளிலும் குற்றச் செயலில் ஈடுபடும் சிலர் இருக்கத்தான் செய்வார்கள். ரவுடிகள் ஒழிப்பு விவகாரத்தில் டெல்டா மாவட்டங்களில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரவுடி என்றால் ரவுடிதான். இதில் கட்சி எங்கிருந்து வருகிறது? மணப்பாறையில் தி.மு.க ஒன்றிய செயலாளர் மீது புகார் எழுந்தது. அவர் உடனே கைது செய்யப்பட்டார். சரித்திர பதிவேட்டில் உள்ளவர்களைத்தான் போலீஸார் கைது செய்கின்றனர். இவர் எந்தக் கட்சிக்காரர் என்றெல்லாம் பார்த்து கைது செய்வதில்லை.

எந்தக் குற்றச்செயலிலும் ஈடுபடாத ஒருவரை போலீஸ் துன்புறுத்துகிறது என்றால், அதற்கான பட்டியலை இவர்கள் டி.ஜி.பியிடமோ, எஸ்.பியிடமோ புகார் மனு அளித்திருக்கலாம். அவ்வாறு இவர்கள் செய்யாமல் வெறுமனே பேசுவது என்பது சரியானதல்ல. சட்டத்தை மீறி நடவடிக்கை எடுத்தால் சட்டப்படியே முறையிடலாம். இதனை அரசியலாக்குவது என்பது தவறான முன்னுதாரணம்" என்கிறார்.

ஆதாரத்தைக் கொடுக்கட்டும்

காவல்துறையின் நடவடிக்கை குறித்து, ஓய்வுபெற்ற காவல்துறை கண்காணிப்பாளர் கருணாநிதியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` இதை ஒரு சிறப்பான நடவடிக்கையாக பார்க்கிறோம். கொலை செய்வது என்பது நாளுக்கு நாள் இயல்பான ஒன்றாக மாறிக் கொண்டிருக்கிறது. கூலிப்படையின் செயல்பாடுகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. சிறிய விஷயங்களைக்கூட பேசித் தீர்க்காமல், `சிவில் விவகாரங்களில் காவல்துறை தலையிடக் கூடாது' என சிலர் மிரட்டுகின்றனர். சிவில் விவகாரம் என்பதையே தங்களுக்கான கேடயமாக சிலர் பயன்படுத்திக் கொள்கின்றனர்" என்கிறார்.

மேலும், "சில கட்சிகளில் தவறு செய்கிறவர்கள் இருப்பார்கள். எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் காவல்துறை செயல்படுவதற்கு வாய்ப்பில்லை. ரவுடிகளை போலீஸார் கைது செய்ய வரும்போது, அவர்கள் கட்சிக்காரர்கள் என்பதற்காக ஆதரவு கொடுப்பது தவறு. போலீசார் தவறாகச் செயல்பட்டால், அதற்கான ஆதாரத்தைக் கொடுக்கலாம். அதனை விசாரணை அதிகாரி சரிபார்த்து நிவர்த்தி செய்வது வழக்கம். ஒரு குறிப்பிட்ட கட்சியில் இருப்பவர்கள் என்பதற்காக எல்லாம் நடவடிக்கை எடுத்துவிட முடியாது" என்கிறார்.

https://www.bbc.com/tamil/india-58763431

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.