Jump to content

கேரளாவில் கிருஷ்ணர் படங்களை வரையும் முஸ்லிம் பெண்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கேரளாவில் கிருஷ்ணர் படங்களை வரையும் முஸ்லிம் பெண்

  • இம்ரான் குரேஷி
  • பிபிசி ஹிந்தி
5 மணி நேரங்களுக்கு முன்னர்
ஜஸ்னா சலீம்

பட மூலாதாரம்,JASNA SALEEM

ஜஸ்னா சலீம் தனக்குப் பிடித்த ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசினால் குழந்தை போல துள்ளிக் குதித்து மகிழ்ச்சியாகி விடுகிறார். அந்த ஒரு விஷயம் குழந்தை கிருஷ்ணர். கைகளை வெண்ணைப் பானைக்குள் விட்டபடி, முகத்தில் வெண்ணெயைப் பூசிக் கொண்டிருப்பாரே, அதே கிருஷ்ணர்தான்.

ஜஸ்னா சலீமுக்கு 28 வயது. கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர். இரண்டு குழந்தைகளுக்குத் தாய். பால கிருஷ்ணரின் ஓவியங்களை கடந்த ஆறு ஆண்டுகளாக வரைந்து வருகிறார். இப்போது ஒரு கோயிலுக்கு தாம் வரைந்த கிருஷ்ணரின் ஓவியத்தை வழங்கியிருக்கிறார்.

கிருஷ்ணருக்கே நேரடியாக தாம் வரைந்த பால கிருஷ்ணரின் ஓவியத்தை வழங்கிவிட்டதாகப் பூரிக்கிறார். கனவு நிறைவேறிய பெருமிதம் அவருக்கு.

சில நாள்களுக்கு முன்பு கேரளாவில் உள்ள உலநாடு ஸ்ரீ கிருஷ்ண ஸ்வாமி கோயிலுக்கு கிருஷ்ணரின் படத்தை வழங்கினார் ஜஸ்னா. 80 ஆண்டுகளுக்கு முந்தைய இந்தக் கோயில் பத்தனம்திட்டை மாவட்டத்தில் உள்ள பந்தளத்தில் அமைந்துள்ளது. கோயிலின் மூலவர் குழந்தை கிருஷ்ணர்.

முதலில் அவரது ஓவியங்கள் குருவாயூரில் உள்ள புகழ்பெற்ற கிருஷ்ணர் கோயிலுக்கு வழங்கப்பட்டிருந்தன. அதை அறிந்து கொண்ட பந்தள கோயில் நிர்வாகத்தினர், தங்களுக்கு அப்படியொரு ஓவியம் வேண்டும் என்று கேட்டனர்.

இதற்கு முன்பு குருவாயூர் கோயிலுக்கு அவர் ஓவியங்களைக் கொடுத்திருந்தாலும், கோயிலுக்குள் சென்று நேரடியாக படங்களை வழங்கியது இதுதான் முதல்முறை.

ஜஸ்னா

பட மூலாதாரம்,JASNA SALEEM

ஓவியம் வரைவதற்காக எந்தவிதமான தொழில்முறை பயிற்சியும் ஜஸ்னா பெற்றதில்லை. ஜஸ்னாவின் கணவர் சலீம் அவருக்கு கிருஷ்ணரைப் பற்றிச் சொன்னார். அவரைச் சுற்றியிருக்கும் கதைகளையும் கூறத் தொடங்கினார்.

தடை சொல்லாத குடும்பத்தினர்

கோழிக்கோட்டில் உள்ள தனது வீட்டில் இருந்து பிபிசியிடம் தொலைபேசியில் பேசினார் ஜஸ்னா.

"அந்த நேரத்தில் நான் கருவுற்றிருந்தேன். கிருஷ்ணரின் அழகையும் துறுதுறுப்பையும் நான் உணர்ந்தபோது, அவருடைய வாழ்க்கையை ரசிக்கத் தொடங்கினேன். பின்னர் ஒருநாள் அவரது படத்தைப் பார்த்து வரையத் தொடங்கினேன். அதுவே எனது வாழ்க்கையின் முதல் படமாக அமைந்தது".

ஆனால், ஜஸ்னாவால் கிருஷ்ணரின் படத்தை வீட்டில் வைக்க முடியவில்லை. இதைப் பார்த்து அவரது வீட்டில் இருப்பவர்கள் கோபப்படுவார் என்று அவரது கணவர் சலீம் முதலில் நினைத்தார்.

ஆனால் ஜஸ்னா ஓவியம் வரைவதில் எந்தப் பிரச்னையும் இருக்கவில்லை. "நான் ஒரு பழமைவாத குடும்பத்தில் இருந்து வந்தவள். ஆனால் என் கணவர் வீட்டில் இருப்பவர்கள் நான் ஓவியம் வரைவதைத் தடுக்க வில்லை."

ஜஸ்னா

பட மூலாதாரம்,JASNA SALEEM

"நான் முதலில் உருவாக்கிய கிருஷ்ணர் ஓவியத்தை, என் நண்பரான நம்பூதிரி குடும்பத்துக்கு கொடுத்தேன். கிருஷ்ணரின் படத்தை ஒரு முஸ்லிம் உருவாக்கியதைக் கண்டு எனது நண்பரின் குடும்பத்தினர் ஆச்சரியப்பட்டனர். விருப்பங்கள் நிறைவேறும் என்றும் அவர்கள் கூறினர்."

அப்போதிருந்து அவர் தொடர்ந்து கிருஷ்ணரைத் தேர்ந்தெடுத்து ஓவியங்களாக வரைந்தார்.

குழந்தை கிருஷ்ணரை தேர்ந்தெடுத்தது ஏன்?

ஜஸ்னாவுக்கு கிருஷ்ணரின் முகம் உத்வேகம் அளிக்கக்கூடியதாக இருந்தது. கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டதாகவும் இருந்தது. முதல் படத்தில் கிருஷ்ணர் கைகளைக் கட்டியிருப்பது போலப் பார்த்தார். அதன் பிறகு வெண்ணெய்ப் பாத்திரத்தில் கையை விடுவது போன்ற படம் கிடைத்தது. பின்னர் கிருஷ்ணரைப் படங்களாக வரையத் தொடங்கிவிட்டார்.

வெண்ணெய்ப் பானைகளுடன் இருக்கும் கிருஷ்ணரின் படங்களை மட்டுமே ஏன் வரைகிறீர்கள் என்று ஜஸ்னாவிடம் கேட்கப்பட்டது.

"கைகளில் வெண்ணெய் இருக்கும் கிருஷ்ணரின் படம் மிகவும் அழகாக இருக்கிறது. ஏனெனில் தனக்குப் பிடித்தமான உணவில் திருப்தியடைந்த ஒருவர் அதில் இருக்கிறார்."

ஜஸ்னா படங்களை வரையத் தொடங்கியபோது, அவருடைய தாய் மாமாதான் முதலில் குருவாயூர் கோவிலில் அவற்றைக் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். குருவாயூர் கோயிலில் இருந்து வந்தவர்கள் அங்கிருந்த ஜஸ்னாவின் பால கிருஷ்ணர் ஓவியத்தைப் பார்த்ததாகவும் அது மிகவும் அழகாக இருந்ததாகவும் கூறியிருக்கிறார்கள்.

ஜஸ்னா

பட மூலாதாரம்,JASNA SALEEM

"இந்த ஓவியத்தின் மிகவும் சுவாரஸ்யமான அம்சம் என்னவென்றால், குழந்தை கிருஷ்ணரின் குறும்புத்தனத்தை அவர் கச்சிதமாக வரைந்திருக்கிறார். இந்தப் படத்தை பார்த்தால், மகிழ்ச்சி கிடைக்கிறது" என்கிறார் புனேயைச் சேர்ந்த தத்வமசி சன்ஸ்தாவின் ஜே.பி.கே. நாயர்.

மெட்டாபிசிக்ஸ் கல்வி நிறுவனம் இந்த ஓவியத்துக்கு நிதியுதவி செய்திருக்கிறது.

இதுவரை நூற்றுக்கணக்கான படங்களை ஜஸ்னா வரைந்திருக்கிறார். கேரளா தவிர, தமிழ்நாடு, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து படம் கேட்டு ஆர்டர்கள் வருகின்றன.

ஆனால் ஜஸ்னா பணத்தைப் பெரிதாகக் கருதவில்லை. "மன திருப்திதான் எனக்குக் கிடைக்கும் நன்மை" என்கிறார் அவர்.

https://www.bbc.com/tamil/india-58760685

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படங்கள் மிகவும் அழகாக இருக்கின்றன......கண்ணனின் ஆசி அந்தப் பெண்ணுக்கு இருக்கிறது.....வாழ்த்துக்கள்......!  🌹

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பெண் வரைந்த மாயவன் ஓவியம் அழகு. அதைவிட இப்பெண்ணின் உள்ளம் பேரழகு. சற்று நிறம் குறைவாக இருந்தாலும் ஜஸ்னாவின் கண்களும், சிரிப்பும், உதட்டு மச்சமும் வாலியைக் கொள்ளைகொண்டதில் வியப்பேதும் இல்லை!👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேரள நாடு நல்லிணக்கம் உள்ள மாநிலம். இதற்கு என்ன காரணம் தெரியுமா?

அங்கே பெரியாரிசம் இல்லை. இந்(தி)துத்துவா இல்லை. எல்லோரும் சக மனிதர்கள்.😎

ஆனால் தமிழ் நாட்டில் திறாவிடமாம் 🙃

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் இங்கு குறிப்பிடுவது 2001 / கட்டாயம் 2004  க்கு முன்  கடந்த இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக எனக்கு அதனுடன் ஒரு தொடர்பும் இல்லை இலங்கையில் அன்று 55 வயதுடன் ஓய்வு பெறலாம். என்றாலும் நான் வேறு பல காரணங்களால் கொஞ்சம் நேரத்துடன் ஓய்வு பெற்று விட்டேன்
    • The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away. https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம். 
    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them. For Example, during the 2001-2004 period, they rose up with several protests.  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.