Jump to content

பிளவுபடாத நாட்டுக்குள்... நிலையான தீர்வை அடைய, ஒற்றுமை அவசியம் – சம்பந்தன் வலியுறுத்து.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் – கூட்டமைப்பு வரவேற்பு!

பிளவுபடாத நாட்டுக்குள்... நிலையான தீர்வை அடைய, ஒற்றுமை அவசியம் – சம்பந்தன் வலியுறுத்து.

ஒன்றுபட்ட பிளவுபடாத நாட்டுக்குள் நிலையான தீர்வை வென்றெடுக்க அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.

பங்காளி கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடுகளை அடுத்து விசேட சந்திப்பு கடந்த புதன்கிழமை இடம்பெற்றது.

அதனை தெளிவுபடுத்தும் விதமாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டமைப்பிற்குள் ஒரு சிலர் பிளவுகளை ஏற்படுத்த காத்திருக்கும் நிலையில் தமது ஒற்றுமையை உறுதி செய்ய சம்பந்தப்பட்டவர்களின் கலந்துரையாடல் இடம்பெறும் என்றும் சம்பந்தன் தெரிவித்தார்.

தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வை அரசியமைப்பின் ஊடக பெற்றுக்கொள்வதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மிகப்பிரதான குறிக்கோள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆகவே மக்கள் மத்தியில் இருக்கும் தெளிவை எவரும் குழப்பக் கூடாது என்றும் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

https://athavannews.com/2021/1242525

Link to comment
Share on other sites

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கொடி இல்லை, பதிவு இல்லை, ஒற்றுமையும் இல்லையா...??????? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப யார் பிளவுபடுத்துவினம் என்று ஐயா பயப்பிடுறார் என்று புரியலயே?!🙃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஏராளன் said:

இப்ப யார் பிளவுபடுத்துவினம் என்று ஐயா பயப்பிடுறார் என்று புரியலயே?!🙃

ம்! இவருக்கு பனங்கிளங்கையே பிளக்க முடிமோ தெரியேல்லை. இதிலை பிளவுபடாத நாடாம். சிலநேரம் சிங்களவன் பிளவுபட விட்டாலும் இவர்விடார்போலகிடக்கு. 


கூட்டமைப்பு என்றால் கூடி முடிவெடுப்பதும்  கூட்டாகச் செயலாற்றுவதும். ஆனால் தமிழரசுக் கட்சியின் தலைவாசலாக்கிவிட்டு ஒற்றுமையாம், ஒற்றுமை. சிங்கள - கிந்திய அரசினது ஒற்றர்களாக இருந்தவாறு ஊளையிடுவதைவிடுத்து ஒற்றர்களே ஒதுங்கி ஓய்வெடுங்கள். யாராவது புதியதலைமுறை தமிழருக்குத் தலைமை தாங்க வழிவிடுங்கள் அதுபோதும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தருக்கு உந்தப் பிளவாலை பெரிய பிர்சினையைக் கிடக்குது போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தமிழ் சிறி said:

பிளவுபடாத நாட்டுக்குள்... நிலையான தீர்வை அடைய, ஒற்றுமை அவசியம் – சம்பந்தன் வலியுறுத்து.

உதைத்தானே 2009க்கு பிறகு சொல்லிக்கொண்டு வாறியள். சிங்கள கொடியை தூக்கி ஆட்டினதுதான் மிச்சம் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.