Jump to content

எங்கட தோட்டத்தை சுற்றி பாப்பம் வாங்க | Yarl Samayal Jaffna Farm Vlog | Cherry | Organic farm jaffna


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் 90களுக்கு முன் அநேக வீடுகள் இப்படித்தான் இருந்தன .இதைவிட கூடிய மரங்கள் இருந்தன என்றும் கொள்ளலாம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 குறுகிய நிலபரப்பினுள் அனைத்து விதமான பயன் தரு கனிகள் மரங்கள் நட்டு இருக்கிறீர்கள், அனைத்தும் காய்த்திருக்கிறது என்பதுதான் முக்கியமான ஒன்று.

ஊரில் நிற்கும்போது பல மரங்கள் நட்டு வளர்த்திருக்கிறேன் அதில் சில சில வருடங்கள் ஆகியும் வெளிநாடு நான் வரும்வரை காய்க்கவேயில்லை என்பதுதான் சோகம்.

அலரி மரம் தோட்டங்களில் வீடுகளில் வளர்க்ககூடாது என்று சொல்ல கேள்விபட்டிருக்கிறேன், உண்மையோ தெரியவில்லை, அலரி அபசகுனம் மட்டுமல்ல ஏனைய பயிர்களின் நீரை உறிஞ்சிகொள்ளும் என்று அறிந்ததாய் ஒரு ஞாபகம்.

மற்றும்படி பழத்தை நீங்கள் வெட்டும் முறையைபார்க்கும்போது பக்குனுது கவனமாக வெட்டுங்கள்.

இயற்கையோடு சேர்ந்த உங்கள் உழைப்புக்கும் வாழ்வுக்கும் வாழ்த்துக்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்க அருமையாய் இருக்கின்றது பாராட்டுக்கள்........!  👍

பனங்காணிகளில் அன்னமுன்னா, கொய்யா, நாயுருவி, குண்டுமணி கொடி எல்லாம் கேட்பாரற்று சொரிந்து போய் கிடைக்கும்......இந்தத் தோட்டத்தைப் பார்க்கையில் எல்லாம் நினைவுக்கு வருகின்றது.....நிறைய இழந்து விட்டோம் ......!   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, sivarathan1 said:

 

அருமை. 👍

உங்கள் தாயார் நிறைய விடயங்கள் அறிந்துள்ளார். 

இப்படியான தோட்டங்கள் எமது வீட்டு பழ, மரக்கறி தேவையை பூர்த்தி செய்ய வல்லன. 

எந்த ஊர் இது?

Link to comment
Share on other sites

21 hours ago, பெருமாள் said:

யாழில் 90களுக்கு முன் அநேக வீடுகள் இப்படித்தான் இருந்தன .இதைவிட கூடிய மரங்கள் இருந்தன என்றும் கொள்ளலாம் .

உண்மை தான்,, 

 

21 hours ago, யாயினி said:

அவ்வப்போது சில மாற்றங்கள் செய்து போடுவது நல்ல விஷயம்.

👋✍️

ஓம் மிச்சம் இன்னொரு காணொளியாக வரும் 

21 hours ago, valavan said:

 குறுகிய நிலபரப்பினுள் அனைத்து விதமான பயன் தரு கனிகள் மரங்கள் நட்டு இருக்கிறீர்கள், அனைத்தும் காய்த்திருக்கிறது என்பதுதான் முக்கியமான ஒன்று.

ஊரில் நிற்கும்போது பல மரங்கள் நட்டு வளர்த்திருக்கிறேன் அதில் சில சில வருடங்கள் ஆகியும் வெளிநாடு நான் வரும்வரை காய்க்கவேயில்லை என்பதுதான் சோகம்.

அலரி மரம் தோட்டங்களில் வீடுகளில் வளர்க்ககூடாது என்று சொல்ல கேள்விபட்டிருக்கிறேன், உண்மையோ தெரியவில்லை, அலரி அபசகுனம் மட்டுமல்ல ஏனைய பயிர்களின் நீரை உறிஞ்சிகொள்ளும் என்று அறிந்ததாய் ஒரு ஞாபகம்.

மற்றும்படி பழத்தை நீங்கள் வெட்டும் முறையைபார்க்கும்போது பக்குனுது கவனமாக வெட்டுங்கள்.

இயற்கையோடு சேர்ந்த உங்கள் உழைப்புக்கும் வாழ்வுக்கும் வாழ்த்துக்கள்.

 

மிக்க நன்றி, நிச்சயமாக அலரி மரம் பற்றி தெரியவில்லை, ஒருமுறை பார்க்கிறோம், தகவலுக்கு மிக்க நன்றி. 

20 hours ago, suvy said:

பார்க்க அருமையாய் இருக்கின்றது பாராட்டுக்கள்........!  👍

பனங்காணிகளில் அன்னமுன்னா, கொய்யா, நாயுருவி, குண்டுமணி கொடி எல்லாம் கேட்பாரற்று சொரிந்து போய் கிடைக்கும்......இந்தத் தோட்டத்தைப் பார்க்கையில் எல்லாம் நினைவுக்கு வருகின்றது.....நிறைய இழந்து விட்டோம் ......!   

 

இதுல சிலது மிச்ச பக்கம் இருக்கு அடுத்த பகுதியில் வரும் 

16 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

அருமை. 👍

உங்கள் தாயார் நிறைய விடயங்கள் அறிந்துள்ளார். 

இப்படியான தோட்டங்கள் எமது வீட்டு பழ, மரக்கறி தேவையை பூர்த்தி செய்ய வல்லன. 

எந்த ஊர் இது?

மிக்க நன்றி, இது கோப்பாயில் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அலரி விதை விசம் என்றபடியால்தான் அப்படி சொல்லுறது......எங்கள் வீட்டில் பின்னுக்கு அருகில் எல்லாம் நிறைய இருந்தது.....கோவிலுக்கு பூ எடுப்பவர்கள் வந்து கொய்து கொண்டு போவார்கள்......!

முன் வீட்டு அக்கா ஒருவர் அப்பப்ப வந்து பொறுக்குவார்.ஏனென்று கேட்டால் உவன் துலைவானோடை (அவவின் புருஷனைத்தான்) வாழேலாது அதுதான் என்று சொல்லுவா ஆனால் பின்னேரம் விறாந்தையில் இருந்து வெத்திலை போட்டுக்கொண்டிருப்பா.......!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அலரி செடி வைக்க தேவை இல்லை. தானாகவே வரும். தேமா வைப்பார்கள். தேமா மரத்தில் நாம் சிறுவயதில் ஏறி விளையாடுவோம். அலரி காய்களை வைத்து ஈரக்குகளினால் குற்றி தேர் செய்து விளையாடுவோம்.

இப்படி தோட்டங்கள் செய்வது நல்லதொரு முதலீடு, பயன்தரும் நேரம். கடைசி வரை எம்மை காப்பாற்றும். ஆனால், யாழ்ப்பாணம் மண் வளத்தை, நீர் தரத்தை நினைக்கும் போதுதான் கவலையாக உள்ளது.

செயற்கை இரசாயனங்கள் இயற்கை வளத்தை கெடுத்துவிடும். ஏற்கனவே போர்க்காலத்தில் கொட்டப்பட்ட குண்டுகள், வெடி மருந்துகள் சூழலை துவம்சம் செய்துவிட்டது.

Link to comment
Share on other sites

 

பகுதி 2 

இந்த காணொளியில் நாங்க காட்டுற கொஞ்ச மரங்கள்

 

அம்பிரலங்காய்

பப்பாளி

கருணைக்கிழங்கு

பட்டர் ஃபுரூட் / அவகோடா

சின்ன நெல்லி - Small Gooseberry

முசூட்டை

கறுவா

பலா

ஊர் அன்னமுன்னா

திப்பிலி

தூதுவளை

வேப்பமரம்

ஆடாதோடை

இரசவள்ளி Purple Jam

பயிற்றை

முடக்கொத்தான்

கொடித்தோடை Passion fruit)

லாவுடு

ஸ்டார் பழம்

விலும்பிலி

மாதுளை

வெற்றிலை betel

சப்போட்டா

பூசணி

கறிவேப்பிலை

முருங்கை drumstick

பெருங்குறிஞ்சா

கரிசலாங்கண்ணி

ரம்புட்டான் Rambutan

முழு நெல்லி - Small Gooseberry

மரவள்ளி

மங்குஸ்தான் Mangosteen

கொய்யா

சிவப்பு கொய்யா

இந்தியன் கருவேப்பிலை

கரும்பு

பாவட்டை Pavetta indica

கவண்டிஷ் வாழை

செவ்வாழை

சாம்பல் மொந்தன்

யானை வாழை

ஊர் இதரை

கப்பல் வாழை

மருத்துவ வாழை

வன்னி மொந்தன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிவரதன்... உங்களது, இரு காணொளிகளையும்... ரசித்து  பார்த்தேன். :)
மூன்று தலைமுறை ஆட்களும், சேர்ந்து.. கடினமாக உழைத்ததின் பலனை,
எமக்கும் காட்டி... ஊக்கப் படுத்தியமைக்கு நன்றி. 🙏

அந்தத்.. தோட்டத்தை, நன்றாக திட்டமிட்டு... 
செடிகளையும், கொடிகளையும், மரங்களையும்,   வளர்த்து உள்ளதை பார்த்து...   
உண்மையில் ஆச்சரியமாக இருந்தது. 👏

உண்மையில்... நீங்கள் எல்லோரும், பயங்கர கெட்டிக்காரர்.
எல்லோருக்கும்.. பாராட்டுக்களும், நன்றிகளும் உரித்தாகட்டும். ❤️

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஜனாதிபதி தேர்தலில்  கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும்  உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவான தரப்பினர் கட்சி தனது சொந்தவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடவேண்டும் என  தெரிவித்துள்ளனர். கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது - எனினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படாததால் இது குறித்து கட்சி இன்னமும் தீவிரமாக ஆராயவில்லை. இதேவேளை அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகிக்கும்  பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கே ஆதரவளிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். R   https://www.tamilmirror.lk/செய்திகள்/பிளவை-நோக்கிச்-செல்லும்-ஸ்ரீலங்கா-பொதுஜனபெரமுன/175-335341
    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.