Jump to content

விசமிகளால் அழிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் முயற்சி | Palai


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எதிரியாக இருந்தாலும் பயிர்களை நாசம் செய்யாதீர்கள். உங்களை அந்த இயற்கையே மன்னிக்காது.

விவசாயியான எனக்கு அந்த வலி தெரிகின்றது.

அழிக்கப்பட்ட  800 மிளகாய் கன்றின் மூலம் வரும் வருமானம் அனைத்தையும் வழங்க தயாராக இருக்கின்றேன். சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பான விபரங்கள் தெரிந்தவர்கள் என் தனிமடலுக்கு  தகவல் தரவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதனை செய்தவர்களையும் தூண்டிவிட்டவர்களையும் தண்டிக்கப்பட வேண்டும்; 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

எதிரியாக இருந்தாலும் பயிர்களை நாசம் செய்யாதீர்கள். உங்களை அந்த இயற்கையே மன்னிக்காது.

மனதை நெருடிய  வரிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு பயிர்களையும் அழிக்க எப்படி மனம் வந்ததோ தெரியாது.......செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்களே.......!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகமோசமான செயல், மன்னிக்க முடியாத செயல்.
குற்றவாளிகளிடம் தண்டப்பணம் அறவிட்டு பாதிக்ப்பட்டோருக்கு வழங்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம் பி அதிலும் சிறீதரன் வந்து  போயிருக்கிறார்

இனி இதற்கு தீர்வு  காணும்வரை நித்திரை  கொள்ளமாட்டார்?

குமாரசாமியண்ணை 

சொல்ல  வார்த்தைகள் இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, ஏராளன் said:

மிகமோசமான செயல், மன்னிக்க முடியாத செயல்.
குற்றவாளிகளிடம் தண்டப்பணம் அறவிட்டு பாதிக்ப்பட்டோருக்கு வழங்க வேண்டும்.

 

காவல்த்துறையில் முறையிட்டோம் பலன்  எதுவுமில்லை  என்று  சொல்லும்போது அந்த  அம்மாவின் கண்களை  கவனித்தீர்களா??

ஒரு இயலாமையும்  ஆற்றாமையும் பயமும் வருகிறது??

அப்போ  இதன்  பிண்ணணியில் யார்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காணொளி பார்க்கவே கஸ்டமாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது சில வேளை அரசியல் சம்பந்தப்பட்ட விடயங்களாக இருக்கலாம். யாராக இருந்தாலும் தனிமனித உழைப்புகளில் கை வைக்காதீர்கள்.இதை வைத்து அரசியலும் செய்யாதீர்கள்.அது வேறு அவர்களுக்கு தலையிடியாக போய் விடும். அந்த பெண்கள் 800 மிளகாய் கன்றுகளையும் எத்தனை கனவுகளோடு தண்ணீர் ஊற்றி வளர்த்திருப்பார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அந்த பெண்கள் 800 மிளகாய் கன்றுகளையும் எத்தனை கனவுகளோடு தண்ணீர் ஊற்றி வளர்த்திருப்பார்கள்?

அய்யோ நானொரு நாலு முளகாக்கண்டை நட்டுப்போட்டு ஒவ்வொரு நாளும் காலம்பர ஒழும்பி அதோட கதைக்கிறனான் எண்டா எண்ணூறு கண்டையும் நட்டு தண்ணிஊத்தினவன் வயிறு எப்புடி எரிஞ்சிருக்கும்.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொந்தமாக கஷ்டப்பட்டு உழைக்க முடியாமல், அடுத்தவன் பணத்தில் பவுசு காட்டி வாழ்பவர்களால், சொந்தமாய் தன்னிறைவாய், மகிழ்வாய் வாழ்பவர்களை பார்த்து வயிறு எரியும் மந்திக்கூட்டம் செய்யும் வேலையிது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அனுபவப் பகிர்விற்கு நன்றி கோசான் அவர்களே. புத்தர் சிலைகள் எல்லாம் எந்தளவு தூரம் முளைத்துள்ளன? 
    • மனித வளம் அதிகம் இருப்பதால்தான் இன்னும் மனித மலத்தை மனிதர்களை வைத்தே கையால் அள்ளிக் கொண்டிருக்கிறார்களோ?தமிழ்நாட்டில் எண்ணெய்கப்பல் கசிந்து கடல்நீரில் கலந்த பொழுது வாளியால் அள்ளி ஊற்றினார்கள்.உண்மையில் இந்தியாவில் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி அடையவில்லை.ஆனால் ஒரு அணுவாயுத வல்லரசு பொருளாதாரத்தில் வளர்ந்தது போல் ஒருமாயத் தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.நகர்ப்புறங்கள் நவீனத் தோற்றத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றன.சந்திராயனுக்கு ரொக்கற் அனுப்பிய அதே வேளையில் இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் அடிப்படை வசதிகளற்று மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.ஒப்பீட்டளவில் தென் மாநிலங்கள் ஓரளவு வளர்ச்சி அடைந்த நிலையில் வடமாநிலங்களின் நிலமை படு மோசம்.
    • சகோ சீமானின் பிள்ளைகள் பற்றிய கருத்தை இங்கே பதிவிட்டவன் யானே.  இங்கே எனது கேள்வி தனது பிள்ளைகள் தமிழ் படிக்காததற்கு  மேடை கோணல் என்பது.  ஆனால் அது உண்மையல்லவே.  எனவே இந்த இவரது கூற்று தேர்தல் நேரத்தில் அவரை கவிழ்க்க உதவும் என்பதே அவரின் அபிமானியான எனது கவலை. நன்றி. 
    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.