Jump to content

வானிலை அறிவிப்பு: மழை வருமா வராதா? உடனே கண்டுபிடிக்கும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வானிலை அறிவிப்பு: மழை வருமா வராதா? உடனே கண்டுபிடிக்கும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்

6 நிமிடங்களுக்கு முன்னர்
AI can predict if it will rain in two hours' time

பட மூலாதாரம்,GETTY IMAGES

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் அடுத்த இரண்டு மணி நேரங்களுக்குள் மழை பொழியுமா இல்லையா என்று கண்டறிய முடியும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமான, லண்டனில் உள்ள டீப்மைண்ட் செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் மற்றும் எக்செட்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிவியலாளர்கள் பிரிட்டனின் வானிலை ஆய்வு அலுவலகத்துடன் இணைந்து இந்தத் தொழில்நுட்ப அமைப்பை உருவாக்கியுள்ளனர்.

ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் வானிலை கணிப்பு முறைகள் மூலம் அடுத்த ஆறு மணி நேரம் முதல் இரண்டு வார காலம் வரையில் மழை பொழியுமா இல்லையா என்று மட்டுமே பெரும்பாலும் கண்டறிய முடியும். இந்த முறைகளில் மிகவும் நுணுக்கமான சமன்பாடுகள் பயன்படுத்தப்படும்.

தற்போது உருவாக்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்கும் புதிய முறை மூலம் ஆபத்தான புயல்கள் மற்றும் வெள்ளம் ஆகியவை வருவதையும், குறுகிய காலத்தில், முன்கூட்டியே கணிக்க முடியும்.

வானிலை எவ்வளவு நேரத்தில் மாறும், மழைப்பொழிவு எப்போது அதிகரிக்கும், வானிலை நிலவரம் எப்போது தீவிரமாகும் போன்றவற்றை முன்கூட்டியே கணிப்பது, பருவநிலை மாற்றம் காரணமாக ஆய்வாளர்களுக்கு மிகவும் கடினமானதாக உள்ளது.

இத்தகைய வானிலை நிகழ்வுகளால் கணிசமான அளவில் உயிர் மற்றும் பொருட் சேதங்கள் ஏற்படுகின்றன.

"தீவிர வானிலை மாற்றங்களால் பேரழிவை உண்டாக்கும் பின் விளைவுகள் ஏற்படுகின்றன. உயிரிழப்புகளும் அவற்றில் அடக்கம். பருவநிலை மாற்றத்தின் காரணமாக இத்தகைய நிகழ்வுகள் அடிக்கடி நிகழக்கூடும்," என்று பிரிட்டனின் வானிலை ஆய்வு அலுவலகத்தைச் சேர்ந்த முன்னணி தொழில்நுட்ப அதிகாரி நியால் ராபின்சன் தெரிவிக்கிறார்.

குறுகிய காலத்தில் வானிலையை கணிப்பது என்பது மக்கள் பாதுகாப்பாகவும் செழிப்பாகவும் இருக்க மிகவும் உதவியாக இருக்கும் என்றும் அவர் தெரிவிக்கிறார்.

செயற்கை நுண்ணறிவு அமைப்பு எப்படி இயங்குகிறது?

2016 முதல் 2018 வரையிலான பிரிட்டனின் ரேடார் வரைபடங்களை ஆராய்ந்து மழைப்பொழிவு எப்பொழுது எப்படி நடக்கிறது என்பதை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் அறிந்துகொண்டது.

மழை வெள்ளம் வானிலை
 
படக்குறிப்பு,

குறுகிய நேரத்தில் நிகழும் வானிலை மாற்றங்களைக் கணிப்பது தற்போது கடினமாக உள்ளது.

2019ல் எடுக்கப்பட்ட ரேடார் வரைபடங்களின் முடிவுகளை கணிக்குமாறு சோதனை செய்யப்பட்ட பொழுது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் காட்டிய முடிவுகள் 89 சதவிகிதம் துல்லியமாக இருந்தன.

பிரிட்டன் வானிலை ஆய்வு அலுவலகத்தைச் சேர்ந்த 50 வானிலை ஆய்வாளர்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் காட்டும் முடிவுகள் சரியானதாக இருக்கிறதா என்று ஆராய்ந்தனர். இந்த ஆய்வு முடிவுகள் நேச்சர் அறிவியல் சஞ்சிகையில் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

குறுகிய நேரத்தில் மழைப்பொழிவை கணிப்பதற்கு வேறு முறைகளைவிட செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும் முறையையே பின்பற்றலாம் என வானிலை ஆய்வாளர்கள் கணிசமாக முன்னுரிமை அளித்தனர் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இந்த ஆய்வு இன்னும் தொடக்க நிலையில்தான் உள்ளது. ஆனால் வானிலை ஆய்வாளர்கள் தரவுகளை ஆராய்வதில் குறைவான நேரத்தை செலவிட்டு, வானிலை மாற்றத்திற்கு பிந்தைய விளைவுகளின் அதிக கவனம் செலுத்த இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஒரு திறன்மிக்க கருவியாக இருக்கும்," என்று டீப்மைண்ட் ஆய்வகத்தில் உள்ள மூத்த அறிவியலாளர் ஷகீர் முகமது தெரிவிக்கிறார்.

"பருவநிலை மாற்றம் காரணமாக உண்டாகும் மோசமான வானிலை மாற்றங்களின் விளைவுகளை அறிந்து, நிவாரண நடவடிக்கைகளுக்கு ஆயத்தமாவதற்கு இது ஓர் ஒருங்கிணைந்த அங்கமாக இருக்கும்," என்று அவர் தெரிவிக்கிறார்.

https://www.bbc.com/tamil/science-58779817

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.