Jump to content

மரபணு திருத்தப்பட்ட பயிர்களுக்கு பிரிட்டனில் கட்டுப்பாடு தளர்த்த திட்டம்: ஏன்? எப்படி?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மரபணு திருத்தப்பட்ட பயிர்களுக்கு பிரிட்டனில் கட்டுப்பாடு தளர்த்த திட்டம்: ஏன்? எப்படி?

  • பல்லவ் கோஷ்
  • அறிவியல் செய்தியாளர்
3 அக்டோபர் 2021
கூடுதல் வைட்டமின் சி கொண்ட மரபணு திருத்தப்பட்ட தக்காளி.

பட மூலாதாரம்,JIC

 
படக்குறிப்பு,

கூடுதல் வைட்டமின் சி கொண்ட மரபணு திருத்தப்பட்ட தக்காளி.

இங்கிலாந்தில் மரபணு திருத்தப்பட்ட (Gene Edited) பயிர்களை வணிகரீதியாக உற்பத்தி செய்ய வழிவகுக்கும் வகையில் பிரிட்டன் அரசு இதற்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்த உள்ளது.

மரபான முறையில், புதிய பயிர் வகைகளை உருவாக்கும்போது எப்படி சோதிக்கப்பட்டு, மதிப்பிடப்படுமோ அந்த அளவுக்கே இனி மரபணு திருத்தப்பட்ட பயிர்களும் சோதிக்கப்படும்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறிவிட்டதால், இது தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டுப்பாடுகளை இனி பிரிட்டன் பின்பற்றவேண்டியதில்லை. இதனால்தான் இந்த கட்டுப்பாடு தளர்வு சாத்தியமாகி உள்ளது.

அதே நேரம், ஸ்காட்லாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து அரசுகள் இனி தாங்களே இந்தக் கட்டுப்பாடு தளர்வு தொடர்பாக முடிவு எடுத்துக்கொள்ளலாம்.

வலுவான, பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படாத செடிகளை உருவாக்குவது தொடர்பில் விவசாயம், சுற்றுச்சூழல் சார்ந்த குழுக்களுடன் இணைந்து செயல்படப்போவதாக சுற்றுச்சூழல் அமைச்சர் ஜார்ஜ் யூஸ்டிஸ் தெரிவித்துள்ளார்.

"இயற்கை அளித்துள்ள மரபணு வளங்களை பயன்படுத்திக்கொள்ளும் வல்லமை மரபணு திருத்தும் தொழில்நுட்பத்துக்கு உண்டு. நாம் எதிர்கொள்ளும் சில பெரிய சவால்களை சமாளிப்பதற்கான கருவி இது," என்று அவர் தெரிவித்துள்ளார்.

மரபணு மாற்றமும், திருத்தமும்

மரபணு மாற்றம் என்று சொல்லப்படுவது வேறு. மரபணு திருத்தம் என்பது வேறு. மரபணு மாற்றப்பட்ட பயிர்களை ஒப்பிடும்போது மரபணு திருத்தப்பட்ட பயிர்களில் மரபணுவில் எளிமையான மாற்றங்களே செய்யப்பட்டிருக்கும் என்று விளக்கம் சொல்லப்படுகிறது.

மரபணு மாற்றப்பட்ட பயிர்களில் பெரும்பாலும் கூடுதல் ஜீன்கள் சேர்க்கப்பட்டிருக்கும். சில நேரங்களில் அந்த கூடுதல் ஜீன் என்பது முற்றிலும் வேறு உயிரினத்தில் இருந்து எடுக்கப்பட்டதாக இருக்கும். சில நேரங்களில் விலங்குகளின் டி.என்.ஏ. கூட அதில் செலுத்தப்படும்.

மாறாக மரபணு திருத்தப்பட்ட பயிர்களில் பெரும்பாலும் ஜீன்கள் வெட்டி எடுக்கப்பட்டிருக்கும். இது போன்ற மாற்றங்களை மரபான ஒட்டு முறையில், கலப்பின முறையில்கூட செய்ய முடியும். ஆனால், ஒட்டு, கலப்பின முறையில் அதை செய்வதற்கு பல ஆண்டுகள் ஆகும் என்றால் மரபணு திருத்த முறையில் சில மாதங்களிலேயே அதை செய்ய முடியும்.

ஊட்டச் சத்து அதிகம் இருக்கும் வகையில், அதிகம் விளையக் கூடிய வகையில், தீவிர பருவநிலை விளைவுகளைத் தாங்கி நிற்கும் வகையில் பயிர்களை உருவாக்க இந்த மரபணு திருத்த முறையைப் பயன்படுத்தலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

ஒரு மரபணு திருத்தப்பட்ட கோதுமைப் பயிர் இது. இயற்கையில் ஒரு முறை மட்டுமே நிகழ்ந்துள்ள, தானியத்தின் அளவை பெரிதாக்கும் ஒரு திடீர் மற்றத்தை இந்த மரபணு திருத்தம் நிகழ்த்தியுள்ளது.

பட மூலாதாரம்,JIC

 
படக்குறிப்பு,

ஒரு மரபணு திருத்தப்பட்ட கோதுமைப் பயிர் இது. இயற்கையில் ஒரு முறை மட்டுமே நிகழ்ந்துள்ள, தானியத்தின் அளவை பெரிதாக்கும் ஒரு திடீர் மற்றத்தை இந்த மரபணு திருத்தம் நிகழ்த்தியுள்ளது.

ஆனால், மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு வைக்கப்பட்டுள்ள அதே அளவு கட்டுப்பாடுகளை, விதிகளை மரபணு திருத்தப்பட்ட பயிர்களுக்கும் வைத்துள்ளது ஐரோப்பிய ஒன்றியம்.

இந்த விதிகளின்படி மரபணு திருத்தப்பட்ட பயிர்களை பல ஆண்டுகளுக்கு களப்பரிசோதனைக்கும், உணவுப் பாதுகாப்பு பரிசோதனைகளுக்கும் உட்படுத்த வேண்டும்.

அதன் பிறகு புதிய வகைகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்கு உறுப்பு நாடுகள் வாக்களிக்கவேண்டும் என்பது அதைவிட பெரிய தடை.

இந்த அணுகுமுறை, பெரிய சிக்கல்களையும், முயற்சிகளையும் உடையது மட்டுமல்ல, நிறைய செலவு பிடிப்பதும்கூட என்று உயிரி தொழில்நுட்ப நிறுவனங்கள் நினைக்கின்றன. இதனால், ஐரோப்பிய ஒன்றியத்தில் மரபணு மாற்றப்பட்ட, திருத்தப்பட்ட எந்த ஒரு பயிரும் உருவாக்கப்பட்டதில்லை.

மரபணு மாற்றப்பட்ட, மரபணு திருத்தப்பட்ட பயிர்கள் தொடர்பாக தனித்தனி சட்டங்களை உருவாக்குவதில் இருந்து இந்த மாற்றத்தைத் தொடங்குகிறது வெஸ்ட்மின்ஸ்டர் அரசங்கம்.

முதல் படியாக, மரபான கலப்பின முறையில் உருவாக்க முடிகிற மாற்றங்களை மரபின திருத்தம் மூலம் செய்த பயிர்களை வயல்களில் பரிசோதனை செய்ய விஞ்ஞானிகள் உரிமம் பெறவேண்டும் என்ற விதி இந்த ஆண்டு ரத்து செய்யப்படும்.

அதைவிட ஒரு முக்கியமான மாற்றம் அடுத்த ஆண்டு மேற்கொள்ளப்படும். இதன் மூலம் வழக்கமாக புதிய ரகத்தை உருவாக்குவதற்கு உள்ள வழிமுறை என்னவோ, அதே வழிமுறையைப் பின்பற்றியே எளிமையான மரபணு திருத்தங்களை மேற்கொள்ள வழி செய்யும் சட்டம் கொண்டுவரப்படும்.

எல்லாவகை உயிரினங்களுக்கும் மரபணு மாற்றுவதற்கான கட்டுப்பாடுகள் தொடர்பான அணுகுமுறையை நீண்ட கால நோக்கில் அமைச்சர்கள் மறுபரிசீலனை செய்வார்கள். மரபணு திருத்தப்பட்ட, மாற்றப்பட்ட விலங்களுகளை உருவாக்கி, வணிக ரீதியாக உற்பத்தி செய்யும் நடவடிக்கைகளை அனுமதிப்பது போன்றவை இந்த கட்டத்தில் இடம் பெறக்கூடும். இதனால் விலங்குகளின் உற்பத்தித் திறன், சில நோய்களை, வெப்பமான தட்பவெட்ப நிலையை தாங்கும் திறன் ஆகியவை அதிகரிக்கக்கூடும்.

மரபணு திருத்தத்தின் மூலம் அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கிய இந்த கன்று அதிக வெப்பத்தை தாங்கக்கூடியது, அதிகம் பால் தரும் பசுவாக ஆகக்கூடியது.

பட மூலாதாரம்,ACCELIGEN

 
படக்குறிப்பு,

மரபணு திருத்தத்தின் மூலம் அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கிய இந்த கன்று அதிக வெப்பத்தை தாங்கக்கூடியது, அதிகம் பால் தரும் பசுவாக ஆகக்கூடியது.

இது தொடர்பாகப் பேசிய வேல்ஸ் அரசு செய்தித் தொடர்பாளர் ஒருவர், "மரபணு மாற்றப்பட்ட உயிரினங்கள் தொடர்பாக தற்போது வேல்சில் உள்ள விதிமுறைகளை மறுபரிசீலனை செய்யும் திட்டம் ஏதும் எங்களுக்கு இல்லை. மரபணு மாற்றம் தொடர்பான எங்களுடைய முன்னெச்சரிக்கை அணுகுமுறை தொடரும். பிரிட்டன் அரசாங்கத்தைப் போல அல்லாமல், மரபணு திருத்தத்தையும் மரபணு மாற்றமாகவே நாங்கள் தொடர்ந்து அணுகுவோம். ஐரோப்பிய நீதிமன்றம் 2018ல் வகுத்த நெறிமுறை இது," என்றார்.

https://www.bbc.com/tamil/science-58780519

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்கை சுத்தி இங்கை சுத்தி கடசியிலை சாப்பாட்டில் கை  வைத்து விட்டார்கள் இந்த gmo  மூலம் ஏட்படவுள்ள அழிவு  ஏராளம் என்று சொல்லியும் மக்களின் உணவு தேவைக்கு என்று சட்டங்கள் மீறப்படுது .

Non gmo தயாரிப்பை பார்த்து வாங்கவேணும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

ஆனால், மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு வைக்கப்பட்டுள்ள அதே அளவு கட்டுப்பாடுகளை, விதிகளை மரபணு திருத்தப்பட்ட பயிர்களுக்கும் வைத்துள்ளது ஐரோப்பிய ஒன்றியம்.

இப்போ யூகே Genetically modified பயிர்களுக்கு அனுமதி அளிக்காவிடினும் Gene editing செய்ய்யப்பட்ட பயிர்களுக்கு வழங்கப்படும் அனுமதியானது காலக்கிரமத்தில் GM உணவையும் உள்வாங்கும் என ஒரு சாரார் அஞ்சுகிறார்கள்.

எஸ் என் பி+ கிரீன் கூட்டு ஆட்சியில் இருக்கும் வரை ஸ்கொட்லாந்தில் இது நடைமுறைக்கு வராது என நினைக்கிறேன், வேல்ஸ்சும் சந்தேகமே.

இதன் சாதக பாதங்களை கடந்த வெள்ளி கிழமை Radio 4 Today நிகழ்சியில் அலசினார்கள். ஆர்வம் உள்ளவர்கள் catchup இல் கேட்கலாம். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரிக்ஸிட் வெண்ட உடனையே சொன்னவஙகள் அமெரிக்க மரபணுமாற்றப்பட்ட குப்பை சதையை இறைச்சி எண்டு தலையில கட்டப்போறாங்கள் எண்டு… இப்ப மரக்கறியிலும் கைவச்சுட்டாங்க… ஜரோப்பிய ஒன்றியத்தில இருக்கும் வரைக்கும் இந்த கட்டுப்பாடு இருந்ததால் ஆரோக்கியமான உணவு சந்தைக்கு வந்தது.. இனி கான்சர் கொஸ்பிட்டல்ல ஒரு துண்டு போட்டு வைக்கவேணும்போல 

2 hours ago, ஏராளன் said:

மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு வைக்கப்பட்டுள்ள அதே அளவு கட்டுப்பாடுகளை, விதிகளை மரபணு திருத்தப்பட்ட பயிர்களுக்கும் வைத்துள்ளது ஐரோப்பிய ஒன்றியம்.

இந்த விதிகளின்படி மரபணு திருத்தப்பட்ட பயிர்களை பல ஆண்டுகளுக்கு களப்பரிசோதனைக்கும், உணவுப் பாதுகாப்பு பரிசோதனைகளுக்கும் உட்படுத்த வேண்டும்.
அதன் பிறகு புதிய வகைகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்கு உறுப்பு நாடுகள் வாக்களிக்கவேண்டும் என்பது அதைவிட பெரிய தடை.
இந்த அணுகுமுறை, பெரிய சிக்கல்களையும், முயற்சிகளையும் உடையது மட்டுமல்ல, நிறைய செலவு பிடிப்பதும்கூட என்று உயிரி தொழில்நுட்ப நிறுவனங்கள் நினைக்கின்றன. இதனால், ஐரோப்பிய ஒன்றியத்தில் மரபணு மாற்றப்பட்ட, திருத்தப்பட்ட எந்த ஒரு பயிரும் உருவாக்கப்பட்டதில்லை.
மரபணு மாற்றப்பட்ட, மரபணு திருத்தப்பட்ட பயிர்கள் தொடர்பாக தனித்தனி சட்டங்களை உருவாக்குவதில் இருந்து இந்த மாற்றத்தைத் தொடங்குகிறது வெஸ்ட்மின்ஸ்டர் அரசங்கம்.
முதல் படியாக, மரபான கலப்பின முறையில் உருவாக்க முடிகிற மாற்றங்களை மரபின திருத்தம் மூலம் செய்த பயிர்களை வயல்களில் பரிசோதனை செய்ய விஞ்ஞானிகள் உரிமம் பெறவேண்டும் என்ற விதி இந்த ஆண்டு ரத்து செய்யப்படும்.
அதைவிட ஒரு முக்கியமான மாற்றம் அடுத்த ஆண்டு மேற்கொள்ளப்படும். இதன் மூலம் வழக்கமாக புதிய ரகத்தை உருவாக்குவதற்கு உள்ள வழிமுறை என்னவோ, அதே வழிமுறையைப் பின்பற்றியே எளிமையான மரபணு திருத்தங்களை மேற்கொள்ள வழி செய்யும் சட்டம் கொண்டுவரப்படும்.
எல்லாவகை உயிரினங்களுக்கும் மரபணு மாற்றுவதற்கான கட்டுப்பாடுகள் தொடர்பான அணுகுமுறையை நீண்ட கால நோக்கில் அமைச்சர்கள் மறுபரிசீலனை செய்வார்கள். மரபணு திருத்தப்பட்ட, மாற்றப்பட்ட விலங்களுகளை உருவாக்கி, வணிக ரீதியாக உற்பத்தி செய்யும் நடவடிக்கைகளை அனுமதிப்பது போன்றவை இந்த கட்டத்தில் இடம் பெறக்கூடும். இதனால் விலங்குகளின் உற்பத்தித் திறன், சில நோய்களை, வெப்பமான தட்பவெட்ப நிலையை தாங்கும் திறன் மரபணு திருத்தத்தின் மூலம் அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கிய இந்த கன்று அதிக வெப்பத்தை தாங்கக்கூடியது, அதிகம் பால் தரும் பசுவாக ஆகக்கூடியது.
இது தொடர்பாகப் பேசிய வேல்ஸ் அரசு செய்தித் தொடர்பாளர் ஒருவர், "மரபணு மாற்றப்பட்ட உயிரினங்கள் தொடர்பாக தற்போது வேல்சில் உள்ள விதிமுறைகளை மறுபரிசீலனை செய்யும் திட்டம் ஏதும் எங்களுக்கு இல்லை. மரபணு மாற்றம் தொடர்பான எங்களுடைய முன்னெச்சரிக்கை அணுகுமுறை தொடரும். பிரிட்டன் அரசாங்கத்தைப் போல அல்லாமல், மரபணு திருத்தத்தையும் மரபணு மாற்றமாகவே நாங்கள் தொடர்ந்து அணுகுவோம். ஐரோப்பிய நீதிமன்றம் 2018ல் வகுத்த நெறிமுறை இது," என்றார்.

https://www.bbc.com/tamil/science-58780519

https://www.bbc.com/tamil/science-58780519

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

பிரிக்ஸிட் வெண்ட உடனையே சொன்னவஙகள் அமெரிக்க மரபணுமாற்றப்பட்ட குப்பை சதையை இறைச்சி எண்டு தலையில கட்டப்போறாங்கள் எண்டு… இப்ப மரக்கறியிலும் கைவச்சுட்டாங்க… ஜரோப்பிய ஒன்றியத்தில இருக்கும் வரைக்கும் இந்த கட்டுப்பாடு இருந்ததால் ஆரோக்கியமான உணவு சந்தைக்கு வந்தது.. இனி கான்சர் கொஸ்பிட்டல்ல ஒரு துண்டு போட்டு வைக்கவேணும்போல 

 

ஐரோப்பிய யூனியனில் பல மின்சார விளக்குகளை கூட தடை செய்து விட்டார்கள். ஏனெனில் பின் விளைவுகள் அதிகமாம்.
 

வருங்கால பிரிட்டிஷ் சந்ததியினருக்கு வாழ்த்துக்கள்.😁


childhood-obesity.png?height=259&width=400

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி மரக்கறியும் சாப்பிடேலாது ….பார்க்க வடிவாய் இருந்தால் வேண்ட கூடாது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரபணு மாற்றப் பட்ட உணவுகளால் சில பாதிப்புகள் உண்டு (ஒவ்வாமை, சில மருந்துகள் வேலை செய்யாமல் விடுதல் போன்றன). ஆனால், ஒட்டு மொத்தத்தமாக நன்மைகளே அதிகம்: போசணை அதிகம், செயற்கை உரங்கள் அதிகம் பாவிக்கப் படுவதில்ல, விலை மலிவு. 

விஞ்ஞான அடிப்படையில்லாத ஊடகங்களில் மரபணு மாற்றப் பட்ட உணவுகள் பற்றி வரும் அனேக தகவல்கள் அடிப்படையற்றவை - மக்களைப் பயப்படுத்தும் செய்திகள்.

மனித வரலாற்றில் பல்லாயிரம் ஆண்டுகளாக தாவரங்களிலும், விலங்குகளிலும் மரபணுக்கள் மனிதனால் மாற்றப் பட்டே வந்திருக்கின்றன. காட்டுத் தாவரங்கள், விலங்குகளிலிருந்து தேர்ந்தெடுத்தல் (selective breeding) மூலம்  வந்தவை தான் தற்போதைய உணவுப் பயிர்களும், கால்நடைகளும்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Justin said:

மரபணு மாற்றப் பட்ட உணவுகளால் சில பாதிப்புகள் உண்டு (ஒவ்வாமை, சில மருந்துகள் வேலை செய்யாமல் விடுதல் போன்றன). ஆனால், ஒட்டு மொத்தத்தமாக நன்மைகளே அதிகம்: போசணை அதிகம், செயற்கை உரங்கள் அதிகம் பாவிக்கப் படுவதில்ல, விலை மலிவு. 

விஞ்ஞான அடிப்படையில்லாத ஊடகங்களில் மரபணு மாற்றப் பட்ட உணவுகள் பற்றி வரும் அனேக தகவல்கள் அடிப்படையற்றவை - மக்களைப் பயப்படுத்தும் செய்திகள்.

மனித வரலாற்றில் பல்லாயிரம் ஆண்டுகளாக தாவரங்களிலும், விலங்குகளிலும் மரபணுக்கள் மனிதனால் மாற்றப் பட்டே வந்திருக்கின்றன. காட்டுத் தாவரங்கள், விலங்குகளிலிருந்து தேர்ந்தெடுத்தல் (selective breeding) மூலம்  வந்தவை தான் தற்போதைய உணவுப் பயிர்களும், கால்நடைகளும்! 

ஓகானிக் / மரபணு மாற்றம் இரண்டும் கிட்டத்தட்ட ஒன்றா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Justin said:

மரபணு மாற்றப் பட்ட உணவுகளால் சில பாதிப்புகள் உண்டு (ஒவ்வாமை, சில மருந்துகள் வேலை செய்யாமல் விடுதல் போன்றன). ஆனால், ஒட்டு மொத்தத்தமாக நன்மைகளே அதிகம்: போசணை அதிகம், செயற்கை உரங்கள் அதிகம் பாவிக்கப் படுவதில்ல, விலை மலிவு. 

என்ன அந்த நன்மைகள் என்று சொன்னால் நல்லது 

(வழக்கமான கொள்ளுபாடு அல்ல தெரிந்து கொள்ள கேட்கிறேன் )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ரதி said:

ஓகானிக் / மரபணு மாற்றம் இரண்டும் கிட்டத்தட்ட ஒன்றா?

இரண்டும் வெவ்வேறு ரதி. இனோகானிக் உரங்கள் பாவிக்காமல், வேறு இரசாயனங்களும்  பாவிக்காமல் வளர்ப்பவை தான் ஓகானிக். சாதாரண மரக்கறி/ கால்நடைகளை இப்படி வளர்க்கலாம் - ஆனால் சந்தையில் விலை அதிகம்.

மரபணு மாற்றப் பட்ட (GMO) என்பது சில ஜீன்கள் மாற்றி அவற்றை வளர்ப்பது. இதை பற்றி அதிகம் பயமூட்டும் கதைகள் இயற்கை விவசாய முறைகளை முன்னிறுத்துவோரால் பரப்பப் படுகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

என்ன அந்த நன்மைகள் என்று சொன்னால் நல்லது 

(வழக்கமான கொள்ளுபாடு அல்ல தெரிந்து கொள்ள கேட்கிறேன் )

ஓம். மேலே சுருக்கமாகக் குறிப்பிட்டிருக்கிறேன்: ஆனால் விரிவாக:

1. பிரதான நன்மை: அதிக செயற்கை உரம் தேவையில்லை. ஏனெனில் மரபணு மாற்றம் சாதாரண நிலைகளிலேயே வளர்ச்சியைக் கூட்டும். இதனால், இலங்கையில் செயற்கை உரத்தால் உருவாவதாகக் கருதப் படும் CKD போன்ற பாதிப்புகள் குறையும்.

2. பூச்சித் தாக்கங்கள் சில ஜி.எம்.தாவரங்களில் இருக்காது - இதனால் இழப்பு இல்லை, எனவே விளைச்சல் அதிகம், விலை அதற்கேற்ப குறைவு.

3. கடைசியாக, சில ஜி.எம்.ஓ தாவரங்களில் போசணை அதிகரிக்கப் பட்டிருக்கிறது - Golden rice  என்ற நெல் வகையில் சில போசணைச் சத்துக்களை அதிகரித்திருக்கிறார்கள். ஆபிரிக்கா போன்ற போசணைக் குறைபாடுகள் உள்ள நாடுகளில் இந்த அரிசிக்கு நல்ல பயன்பாடு உண்டு! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

2. பூச்சித் தாக்கங்கள் சில ஜி.எம்.தாவரங்களில் இருக்காது - இதனால் இழப்பு இல்லை, எனவே விளைச்சல் அதிகம், விலை அதற்கேற்ப குறைவு.

பூச்சி  புளுக்கள் தாக்காத காய்கனிகளினாலேயே தானே இப்ப உள்ள பிரச்சனையள்.
எல்லாம் பாக்க வடிவாய் இருக்கும். சாப்பிட வயிறும் நிறையும். ஆனால் உடம்புக்கு தேவையான விட்டமின்கள் தேவையெண்டால் சொல்லுங்கோ அதுக்கு குளிசையள் விக்கிறம்.:cool:
அய்யே....ஐயோ...😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

பூச்சி  புளுக்கள் தாக்காத காய்கனிகளினாலேயே தானே இப்ப உள்ள பிரச்சனையள்.
எல்லாம் பாக்க வடிவாய் இருக்கும். சாப்பிட வயிறும் நிறையும். ஆனால் உடம்புக்கு தேவையான விட்டமின்கள் தேவையெண்டால் சொல்லுங்கோ அதுக்கு குளிசையள் விக்கிறம்.:cool:
அய்யே....ஐயோ...😜

பூச்சி புழுக்கள் விற்றமின்களை அதிகரிக்குமா தெரியவில்லை. ஆனால் பூச்சி புழுக்களால் பயிர்களுக்கு வரும் அழிவினால் வரும் நட்டத்தை நுகர்வோரின் தலையில் கட்டி விடுவர். பூச்சி புழுக்களுக்கு எதிராக சக்தி வாய்ந்த மருந்தடிக்க இயலாத ஓர்கானிக் மரக்கறிகளின் விலை கூட இதுவும் ஒரு காரணம். 

இதனால் தான் ஜி.எம்.ஓ உணவுகள் சில விலை குறைவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Gene editing மற்றும் Gene modification இதில் பரமணு திருத்தம் பற்றி தலைப்பு.. மரபணு மாற்று பற்றி கருத்துப்பரிமாறல்... எது...சரி..??!

Gene editing is different from genetic modification (GM), as it does not result in the introduction of DNA from other species.

(https://www.reuters.com/world/uk/regulations-gene-edited-crops-be-eased-england-2021-09-28/)

 

Genetically modified vs. gene editing - Wells Fargo

 

இயற்கை முறையில் மரபணுக் கலப்பு.. செயற்கை முறை மரபணு மாற்றம்.. செயற்கை முறை மரபணுத் திருத்தம்.. இதில் இயற்கை முறை மரபணுக் கலப்பு.. இயற்கைச் சூழலுக்கும்.. மக்களுக்கும் அதிக பாதிப்பில்லாமல்.. இருக்கும் என்பதை நம்பலாம். மற்றைய இரு செயற்கை முறைகளிலும் நன்மை தீமை இரண்டும் கிட்டத்தட்ட சம அளவில் உண்டு. 

 

Information on technological differences. Information provision by... |  Download Scientific Diagram

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப‌ இருந்த‌ மேற்கு வங்காள முத‌ல‌மைச்ச‌ர் இந்திரா காந்தி அம்மையார‌ பார்த்து கேட்ட‌து இந்திய‌ ப‌டையை அனுப்புறீங்க‌ளா அல்ல‌து என‌து காவ‌ல்துறைய‌ அனுப்ப‌வா என்று............மேற்கு வங்காள முத‌லைமைச்ச‌ரின் நிப‌ந்த‌னைக்கு இன‌ங்க‌ இந்திய‌ ப‌டையை இந்திரா காந்தி அம்மையார் இந்திய‌ ப‌டையை அனுப்பி வைச்சா...............இந்தியா அடுத்த‌ நாட்டு பிர‌ச்ச‌னையில் த‌லையிடுவ‌து இல்லை என்றால் ஏன் ராஜிவ் காந்தி அமைதி ப‌டை என்ற‌ பெய‌ரில் அட்டூழிய‌ம் செய்யும் ப‌டையை ஈழ‌ ம‌ண்ணுக்கு அனுப்பி வைச்சார்............. உங்க‌ட‌ இஸ்ர‌த்துக்கு பாலும் தேனும் ஓடுவ‌து போல் எழுதி இந்தியா ஏதோ புனித‌ நாடு போல் காட்ட‌ முய‌ல்வ‌தை நிறுத்துங்கோ பெரிய‌வ‌ரே...............இந்தியாவை வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் இருந்து தூக்கி விட்டின‌ம்.............இந்தியா 2020வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ வ‌ந்துடும் என்று சொன்னார்க‌ள் வ‌ல்ல‌ர‌சு ஆக‌ வில்லை நாளுக்கு நாள் பிச்சைக்கார கூட்ட‌ம் தான் அதிக‌ரிக்குது லொல்...........................
    • ரனிலுக்கு ஆதரவளிக்கும் குழுவினர் யார்?
    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.