Jump to content

CoWIN கோவின் தளத்தில் சர்வதேசப் பயணிகள் தங்கள் கோவிட் தடுப்பூசி சான்றிதழின் சர்வதேச பதிப்பை பெறலாம்


Recommended Posts

CoWIN கோவின் தளத்தில் சர்வதேசப் பயணிகள் தங்கள் கோவிட் தடுப்பூசி சான்றிதழின் சர்வதேச பதிப்பை பெறலாம். 
May be an image of text

கோவின் -19 தடுப்பூசிக்கான இந்தியாவின் டிஜிட்டல் தளம் CoWIN  கோவின் ஆகும். தற்போது இந்த தளத்தில்  சர்வதேசப் பயணிகள் தங்கள் கோவிட் தடுப்பூசி சான்றிதழின் சர்வதேச பதிப்பை  பெற அனுமதிக்கிறது.

இந்த சான்றிதழ் WHO இன் சர்வதேச பயண வழிகாட்டுதல்களுடன் இணக்கமாக இருக்கும்.  அத்துடன் உங்கள் பிறந்த திகதி பிரதிபலிக்க இந்த சான்றிதழ் பெற்றுக்கொள்ளும் வசதியை வழங்குகிறது.

244427572_4538489679544605_6731513414430

இந்த அம்சம் செப்டம்பர் 30 வியாழக்கிழமை CoWIN இல் நேரடி ஒளிபரப்பப்பட்டது என்று தேசிய சுகாதார ஆணையத்தின் (NHA) தலைமை நிர்வாக அதிகாரி ஆர்எஸ் சர்மா ஒரு அறிவிப்பில் தெரிவித்தார்.

"தடுப்பூசிக்கு உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் தளத்தை உருவாக்கி, கோவின் சான்றிதழ் WHO-DDCC: VS தரவு அகராதியுடன் இணங்குவதை நாங்கள் உறுதி செய்துள்ளோம். இப்போது, சர்வதேச பயணிகள் தங்கள் சான்றிதழின் சர்வதேச பதிப்பை CoWIN இலிருந்து பதிவிறக்கம் செய்யலாம், ”என்று சர்மா கூறினார்.

https://www.cowin.gov.in/

பயனர்கள் தங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுடன் CoWIN இல் உள்நுழைந்து சர்வதேச பயண சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம். உள்நுழைந்தவுடன், பயனர்கள் போர்ட்டலில் "சான்றிதழ் Certificate" விருப்பத்திற்கு அடுத்ததாக ஒரு புதிய "சர்வதேச பயண சான்றிதழ்" “International Travel Certificate"  விருப்பத்தைக் காண்பார்கள். இது கோவின் பக்கத்தின் கீழ் வலது மூலையில் உள்ளது.

பயணச் சான்றிதழில் பிறந்த தேதி, எடுக்கப்பட்ட டோஸ், தடுப்பூசி பெயர், வகை, உற்பத்தியாளர், எண் மற்றும் தேதி, மாதம் மற்றும் தேதி, டோஸ் தொகுதி எண்கள் உள்ளடங்கும் .  மற்றும் சான்றிதழ் WHO உலக சுகாதார மையம் தேர்வுகளுக்கு இணங்குவதாக குறிப்பிடப்படும். அனைத்து உலக நாடுகளிலும் ஏற்றுக்கொள்ளப்படும். 

https://www.cowin.gov.in/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.