Jump to content

இலங்கையில் தமிழர்கள் அதிகாரத்தை பெற ஒன்றிணைந்து செயல்பட வலியுறுத்திய இந்திய வெளிவிவகார செயலாளர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தமிழர்கள் அதிகாரத்தை பெற ஒன்றிணைந்து செயல்பட வலியுறுத்திய இந்திய வெளிவிவகார செயலாளர்

  • ரஞ்சன் அருண் பிரசாத்
  • பிபிசி தமிழுக்காக
3 மணி நேரங்களுக்கு முன்னர்
இலங்கை பிரதமருடன் இந்திய வெளியுறவுத் துறைச் செயலர்

பட மூலாதாரம்,PMO SRILANKA

 
படக்குறிப்பு,

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா

இலங்கை மத்திய அரசாங்கத்திடமிருந்து தமிழர்களுக்கான அதிகாரங்களை பெற்றுக்கொள்வதற்கு அனைத்து சிறுபான்மை சமூகமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதனை இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன ஷ்ரிங்லா வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை தமிழ் மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பு கொழும்பில் நேற்று (அக்டோபர் 4) நடைபெற்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளை, இந்திய வெளிவிவகார செயலாளர் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்.

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து, அவர் தம்மிடம் கேட்டறிந்து கொண்டதாக சந்திப்பில் கலந்து கொண்ட கட்சி பிரதிநிதிகள் பிபிசி தமிழிடம் தெரிவித்திருந்தனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கவலை

இந்திய வெளியுறவுத் துறை செயலருடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்

பட மூலாதாரம்,INDIA IN SRI LANKA

 
படக்குறிப்பு,

இந்திய வெளியுறவுத் துறை செயலருடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்

தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் முயற்சித்து வருகின்ற நிலையில், அது சிறுபான்மை சமூகத்தை பெரிதும் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நிர்வாகிகள், இந்திய வெளியுறவுத்துறையிடம் தெரிவித்தனர் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், ராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான், பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார்.

மாகாண சபையில் இந்திய வம்சாவளி தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி, 25 பிரதிநிதிகள் உள்ளதாகவும், புதிய தேர்தல் முறைமையில் அது 2 அல்லது 3ஆக குறையும் அபாயம் காணப்படுவதாகவும் தாம், இந்திய அதிகாரியிடம் சுட்டிக்காட்டியதாக அவர் கூறினார்.

இந்த பிரதிநிதித்துவம் நாடாளுமன்றம் மற்றும் உள்ளுராட்சி சபை தேர்தல்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இவ்வாறான புதிய தேர்தல் முறைமை அமல்படுத்தப்படும் பட்சத்தில், தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் முழுமையாக இல்லாது போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த தேர்தல் முறை மாற்றம், சிறுபான்மை சமூகத்தை பாதிக்காத வகையில் அமைய வேண்டும் என இந்தியா, இலங்கைக்கு அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என தாம் கோரியதாகவும் ஜீவன் தொண்டமான் தெரிவிக்கின்றார்.

இலங்கையில்; வாழும் இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு எந்தவித பாதிப்பும் வரக்கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே இந்திய வெளிவிவகார செயலாளரும் உள்ளதாக அவர் கூறுகின்றார்.

புதிய தேர்தல் முறை அமல்படுத்தப்படும் பட்சத்தில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களை விடவும், மலையகத்தில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழ் மக்களுக்கே பாதிப்பு அதிகம் என்பதனையும் அவர் ஏற்றுக்கொண்டதாக ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

இவ்வாறான நிலையில், புதிய தேர்தல் முறைமை மாற்றம் குறித்து, இந்திய வெளிவிவகார செயலாளர், பிரதமருடனான சந்திப்பில் வலியுறுத்தியதாக அவர் கூறுகின்றார்.

மேலும், பெருந்தோட்ட பகுதிகளில் வறுமை கோட்டிற்கு கீழுள்ள பாடசாலைகளின் அபிவிருத்தி பணிகள், மலையக மக்களுக்கான வீடமைப்பு திட்டம் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்தும் தமது கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டதாக ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

13-ஆவது திருத்தத்தை வலியுறுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

இந்திய வெளியுறவுத் துறை செயலருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

பட மூலாதாரம்,TWITTER/INDIA IN SRILANKA

 
படக்குறிப்பு,

இந்திய வெளியுறவுத் துறை செயலருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

13வது திருத்தச் சட்டத்தை அமல்படுத்தி, மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு இந்தியா, இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என தாம் வலியுறுத்தியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பு தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், அது குறித்தும் இந்தியா கவனம் செலுத்த வேண்டும் என தாம் கோரியதாகவும் அவர் கூறுகின்றார்.

அத்துடன், தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஒத்துழைப்புக்களை இந்திய வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களை பொருளாதார ரீதியில் முன்னேறச் செய்வதற்கு இந்தியா, தமது ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்பது குறித்தும் தாம் கலந்துரையாடியதாக அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த நிலையில், இலங்கை அரசாங்கத்திடமிருந்து உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு, பொது விடயங்களில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதனை, இந்திய வெளிவிவகார செயலாளர் தம்மிடம் வலியுறுத்தியதாக அவர் கூறுகின்றார்.

தனித்து செயற்படும் பட்சத்தில், அதற்கான தீர்வு கிடைக்காது எனவும், ஒன்றிணைந்து செயற்படும் பட்சத்தில், தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் எனவும், அதற்கான ஒத்துழைப்புக்களை தாம் வழங்குவதாகவும் இந்திய வெளிவிவகார செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

அகதிகளுக்கு குடியுரிமை தர வேண்டும்: தமிழ் முற்போக்கு கூட்டணி

இந்திய வெளியுறவுத் துறை செயலருடன் தமிழ் முற்போக்கு கூட்டணி

பட மூலாதாரம்,TWITTER/INDIA IN SRI LANKA

 
படக்குறிப்பு,

இந்திய வெளியுறவுத் துறை செயலருடன் தமிழ் முற்போக்கு கூட்டணி

இலங்கையின் மொழி உரிமை தொடர்பில் தமது கலந்துரையாடலின் போது பேசப்பட்டதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் உபத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

அத்துடன், நாட்டின் அபிவிருத்தியில் இந்தியாவின் பங்களிப்பு முக்கியமானது எனவும், அதற்கான ஒத்துழைப்புக்களை வழங்க இந்திய முன்வர வேண்டும் எனவும் தாம் கோரியதாக அவர் கூறுகின்றார்.

மலையகத்தை அபிவிருத்தி செய்து, அங்கு வாழும் தமிழ் இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்புக்களை வழங்குவது குறித்தும் உதவிகளை வழங்க இந்தியா முன்வர வேண்டும் என்பதனை தாம் வலியுறுத்தியதாக அவர் குறிப்பிடுகின்றார்.

இலங்கையில் யுத்த காலத்தின்போது இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து அங்கு அகதிகளாக வாழ்ந்து வரும் இந்திய வம்சாவளி தமிழ் மக்களுக்கு 'இந்திய பிரஜாவுரிமை' வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாம், இந்திய வெளிவிவகார செயலாளரிடம் கோரிக்கை முன்வைத்ததாக அவர் தெரிவிக்கின்றார்.

தேர்தல் முறை மாற்றத்தின் போது, அது சிறுபான்மை சமூகத்தை பாதிக்காத வகையில் உருவாக்குவதற்கு இந்தியா ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

தேர்தல் முறை மாற்றமானது உள்நாட்டு விவகாரம் எனவும், அது குறித்து உள்நாட்டில் கலந்துரையாடல்களை ஆரம்பிக்குமாறும் இந்திய வெளிவிவகார செயலாளர் தம்மிடம் பதில் வழங்கியதாக கூறிய அவர், தாமும் இது குறித்து இலங்கை அரசிடம் பேசுவதாக குறிப்பிட்டதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, நுவரெலியாவிலுள்ள சீதை அம்மன் ஆலயத்தின் நிர்மாணப் பணிகளுக்கான உதவிகளை வழங்க இந்தியா முன்வந்துள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க சீதை அம்மன் ஆலயத்தின் புனர்நிர்மாணப் பணிகளை இந்தியா பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது.

இதற்கான திட்டத்தை இந்தியாவிடம், விரைவில் கையளிக்குமாறு, இந்திய வெளிவிவகார செயலாளர், தம்மிடம் கோரியதாக வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவிக்கின்றார்.

இதேவேளை, 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துதல், மாகாண சபைத் தேர்தல்களை முற்கூட்டியே நடத்துதல், நல்லிணக்கத்தை அடைதல் மற்றும் இந்தியாவுடனான தொடர்புகளை புதுப்பித்தல் ஆகியவற்றினூடாக தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை இந்திய வெளிவிவகார செயலாளர், தமிழ் மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் வெளியிட்டுள்ளார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றில் ஊடாக இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளது.

பிரதமர் மற்றும் ஜனாதிபதியுடன் சந்திப்பு

இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்கலா

பட மூலாதாரம்,PMO SRILANKA

 
படக்குறிப்பு,

இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்கலா

இந்தியாவின் குஷிநகர் விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாக பிரகடனப்படுத்தப்பட்டவுடன், இலங்கையிலேயே முதலாவது யாத்ரீக விமானம் வருகைத் தரும் என தான் நம்புவதாக இந்திய வெளிவிவகார செயலாளர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பௌத்த உறவை மேம்படுத்துவதற்கு இந்தியாவினால் வழங்கப்பட்ட 15 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடை குறித்தும், பௌத்த உறவை மேம்படுத்த இந்தியா வழங்கும் ஒத்துழைப்பு குறித்தும், பிரதமர் மஹிந்த ராஜபகேஷ, இந்திய வெளிவிவகார செயலாளருடன் கலந்துரையாடியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவை பலப்படுத்திக் கொள்ளும் நோக்கில் தற்போது செயற்பாட்டிலுள்ள திட்டங்கள் மற்றும் சுற்றுலாத்துறை, பௌத்த உறவினை மேம்படுத்தல் உள்ளிட்ட பரஸ்பர ஒத்துழைப்பு மேம்படுத்தப்படும் பல்வேறு துறைகள் தொடர்பிலும் பேசப்பட்டுள்ளது.

பிரதமருடனான சந்திப்பில் பின்னர், நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட தரப்பினரையும் நேற்றைய தினம் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்.

இந்திய திட்டங்கள் குறித்து ஆலோசனை

இலங்கை அதிபருடன் இந்திய வெளியுறவுத் துறைச் செயலர்

பட மூலாதாரம்,INDIA IN SRILANKA

 
படக்குறிப்பு,

இலங்கை அதிபருடன் இந்திய வெளியுறவுத் துறைச் செயலர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன ஷ்ரிங்லா ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது.

இந்திய - இலங்கை ஒத்துழைப்பு மற்றும் நட்புறவு ஆகியவற்றின் வலுவான உறவை இந்த சந்திப்பின் ஊடாக மீள உறுதிப்படுத்தியதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவிக்கின்றது.

இப்பரந்த பங்குடைமையை சகல மட்டங்களிலும் முன்னேற்றும் வழிமுறைகள் தொடர்பாகவும் இந்த சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 3ம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார செயலாளர், கண்டி, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இந்திய நிதியுதவியின் கீழ் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கலாசார மண்டபத்தை பார்வையிட்டதுடன், சிலர் தமிழ் தரப்புடன் அன்று பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

திருகோணமலையிலுள்ள இலங்கை ஐ.ஓ.சி நிறுவனத்திற்கு சொந்தமான எரிப்பொருள் தாங்கிகளையும் அவர் அன்றைய தினம் பார்வையிட்டிருந்தார்.

அதன்பின்னர், நேற்றைய தினம், மலையகத்திற்கான வீட்டுத் திட்டத்தை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்விலும் அவர் கலந்துக்கொண்டிருந்தார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-58802735

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1988 இல் இருந்து 1997 (என நினைக்கிறேன்) நடைமுறையில் இருந்த இலங்கை தமிழ் இலக்கியம் தரம் 10, 11 பாட நூலில் “சிரிக்க தெரிந்த பாரசீகன்” என்று ஒரு கட்டுரை இருந்தது. நல்ல ஜோக்குகள் பல அதில் கையாளப்பட்டிருந்தது. அதில் (நினைவில் இருந்து) ஒரு ஜோக்: அரசவையில் ஒருவன் பொய்யாக தன்னை இறைதூதன் என கூறிய வழக்கை விசாரிக்கிறார் கலிபா. கலிபா: உனக்குத் தெரியுமா, பொய்யாக தம்மை இறைவனால் அனுப்பபட்ட தூதர் என கூறி மக்களை ஏமாற்றிய பலரை நான் கடும் சித்திரவதையுடன் கூடிய மரண தண்டணைக்கு ஆளாக்கியுள்ளேன்! குற்றம் சாட்டபட்டவர்: ஓ….கலிபா! நன்றே செய்தாய்….. நான் எவரையும் அவ்வாறு அனுப்பவில்லை!!!
    • விடுமுறைகள் தொடங்க போகுது. நம்மவர்கள் கூடுதலாக மத்திய கிழக்கூடாகவே பயணிக்கிறார்கள். ஆனபடியால் சட்டுபுட்டென்று அலுவல்களை முடியுங்கோ.
    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
    • இஸ்ரேல் இரானுக்குள் (நின்று, அதன் முகவர்களை பாவித்து) தாக்குதல் செய்தது போல தோன்றுகிறது. இப்படி செய்வதற்கு இஸ்ரேல்   இரு கூட்டங்களை பாவிக்கிறது. ஒன்று, ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு வந்த  யூதர்களால். இவர்களால் ஈரானியர்களாகவே (Persian) இரானுக்குள் புழங்க முடியும்.  ஈரானின் இப்போதும் யூதர்கள் இருக்கிறார்கள், அனால், முன்பை விட மிக குறைவு. மற்றது, ஈரானில் கொடூர ஆட்சி ஷா வுக்கு, மொசாட், Savak எனும் கொடூர (இரகசிய) போலீசை உருவாக்கி கொடுத்தது.   உண்மையில், Savak ஐ உருவாக்கி தருமாறு ஷா கேட்டது CIA இடம். ஏனெனில், CIA தான், பிரித்தானியரின் வேண்டுதலில் , 1953 இல்  ஈரானின் உண்மையான சனநாயக   அரசை கவிட்டு, Sha ஐ ஆட்சிக்கு கொண்டுவந்தது. இந்த  ஈரானின் உண்மையான சனநாயக ஆட்சி 1953 இல்  கவிழ்த்தலின் முக்கிய காரணம், அன்றைய உண்மையான சனநாயக ஈரானிய அரசாங்கம் எண்ணெய் வளத்தை, கம்பனியை தேசியமயப்படுத்தியது, அதில் பிரித்தானியரின் BP தேசியமயப்படுத்தப்பட்டது. CIA அதன் குளிர் யுத்தத்தை வேலைப்பளுவால்,  Savak ஐ பயிற்சி அளித்து உருவாகுவதை Mosad இடம் அளித்தது. Mosad கொடூர Savak ஐ உருவாக்கியது. ஷா, Savak  இன் மிக கொடுமையான ஆட்சியை எதிர்க்க ஈரான் மண்ணில் அதுவாக பிறந்ததே இந்த முல்லாக்கள். முல்லாக்கள் ஆட்சியை பிடித்து, அகப்பட்ட Savak எல்லோரையும் (கொடூரமாக) கொன்றது, அனால், ஈரான் பெரும்பான்மை மக்கள் அதை வரவேற்றனர் அல்லது நிம்மதி அடைந்தனர். (முல்லாக்களுக்கும், ஈரான் மக்களுக்கும் உள்ள உறவு மேற்கால் சொல்லப்படுவது போல ஒரே வெறுப்பு அல்ல. சிலவற்றை எதிர்க்கிறாரக்ள் , சிலவற்றை வரவேற்றுகிறாரக்ள், முக்கியாக, அணுத்துறை, தொழில்நுட்ப வளர்ச்சி, இராணுவ வளர்ச்சி, குறிப்பாக அமெரிக்கா எதிர்ப்பு போன்றவை. மேற்கின் பிரச்சனை, மசகு, படிம எண்ணை, வாயு  நழுவி, மசகு, படிம எண்ணெய், வாயுவில் தவழ்ந்து மசகு, படிம எண்ணெய், வாயுவில் விழும்  ஈரானில், மேற்கிற்கு  ஒத்து ஊதக்கூடிய ஆட்சி இல்லாதது, ஈரானின் மக்கள் பற்றி முதலை கண்ணீர்  வடிக்கிறது).  முல்லாக்கள் கொன்று  எஞ்சிய Savak இன் எச்சம், சொச்சத்தை, Mosad தத்தெடுத்து பேணி வருகிறது, இரானுக்குள் இருந்து ஆட்தேர்வும் செய்கிறது, தாக்குதலுக்கு பாவிக்கிறது.  (சிறு குறிப்பு: இப்போதைய யூதர், தம்மை யூதர் என்று அழைக்கத்தொடங்கியது, சைரஸ் கிமு 500-550 களில் அவர்களை (யூதரை) (இப்போதைய ஈரானில்) அடிமை சிறைவாசத்தில் இருந்து  விடுவித்து, விடுவிக்கப்பட்டவர்கள் Judea வந்ததினால் என்று அவர்களே சொல்கிறார்கள். அதன் முதல் (யூதர்கள்) இஸ்ரேல் இன் புதல்வர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். இங்கு இஸ்ரேல் என்பது, ஆபிரகாமின் பேரன் Jacob, இஸ்ரேல் (இராச்சியம் அல்ல) என்று பெயர் மாற்றப்பட்டவர் (கடவுளினால் என்கிறது விவிலியம்), அதுக்கும் முதல், Canaan (இப்போதைய இஸ்ரேல், பலஸ்தீன், பகுதி ஜோர்டான், சிரியா)  ஐ பிடிக்கும் வரையிலும் ஆபிரகாம் ஐயும் உள்ளடக்கி Hebrew என்ற அடையாளம் என்கிறது (Hebrew) விவிலியம். ).  (இன்னொரு வளமாக, திராவிடர் என்ற கூட்டமும், இப்போதைய ஈரானின் சாகிறோஸ் மலைப்பகுதியில் இருந்து வந்த, ஒழுங்குபடுத்தப்பட்ட விவசாயத்தை வாழ்வாதரமாக கொண்ட மக்கள் கூட்டம் என்பதற்கு விஞ்ஞான  ஆதாரங்கள் பெருகி வருகிறது. இதில் ஒரு பகுதியை சிறீனிவாச ஐயங்கார், 1920 களில் சொல்லி இருந்தார்.)
    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.