Jump to content

பிரான்ஸ் திருச்சபை பாதிரியார்களால் 2,16,000 சிறாருக்கு பாலியல் கொடுமை: விசாரணை அறிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1950ஆம் ஆண்டு முதல் பிரான்சில் உள்ள கத்தோலிக்க பாதிரியார்களால் 2,16,000 சிறார்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாகியுள்ளனர் என்று இது தொடர்பான விசாரணையில் தெரியவந்துள்ளது.

2,900 முதல் 3,200 பேர் வரை சிறாரை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிய குற்றங்களில் ஈடுபட்டதாக திருச்சபை உறுப்பினர்களின் கொடுமைகள் தொடர்பாக விசாரிக்கும் குழுவின் தலைவர் ஜீன் மார்க் சாவே தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தி தமக்கு வலியை ஏற்படுத்துவதாக போப்பாண்டவர் பிரான்சிஸ் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

பள்ளி ஆசிரியர்கள் போன்ற திருச்சபையின் சாதாரண உறுப்பினர்கள் செய்த தவறுகளை கணக்கிட்டால் இந்த பாதிப்பு எண்ணிக்கை 3,30,000 ஆக உயரும் என்று விசாரணை அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

திருச்சபை அதன் நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களின் சங்கமான லா பரோல் லிபரேயின் (சுதந்திர பேச்சு) நிறுவனர் பிரான்சுவா டெவாக்ஸ், "இது நம்பிக்கைக்கு துரோகம், மன உறுதிக்கு துரோகம், குழந்தைகளுக்கு துரோகம்" என்று கூறினார்.

இது பிரான்சின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்திருப்பதாகவும் அவர் கூறினார். "திருச்சபையின் அனைத்துப் பொறுப்பிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீங்கள் இறுதியாக நிறுவன ரீதியிலான அங்கீகாரம் வழங்கியுள்ளீர்கள். இது ஆயர்கள் மற்றும் போப் ஆண்டவர் இன்னும் செய்யத் தயாராக இல்லாத ஒன்று." என்று அவர் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட சங்கத் தலைவர்

பட மூலாதாரம்,AFP

 
படக்குறிப்பு,

பாதிக்கப்பட்டவர்களின் சங்கமான லா பரோல் லிபரேயின் (சுதந்திர பேச்சு) நிறுவனர் பிரான்சுவா டெவாக்ஸ்

போப் கடந்த சில நாட்களில் வருகை தந்த பிரெஞ்சு ஆயர்களை சந்தித்த பிறகு இந்த அறிக்கை பற்றி அறிந்து கொண்டதாக வாடிகன் கூறியுள்ளது.

"பாதிக்கப்பட்டவர்களின் காயங்களுக்கு ஆழ்ந்த கவலையும், முன்வரும் துணிச்சலுக்கு நன்றியும் அவர் தெரிவித்தார்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த விசாரணை அறிக்கையின் வெளியீடு உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க திருச்சபை அதிகாரிகளுக்கு எதிரான பல கோரிக்கைகள் மற்றும் வழக்குகளைத் தொடர்ந்து நடந்திருக்கிறது.

சுயேச்சையான இந்த விசாரணை 2018 இல் பிரெஞ்சு கத்தோலிக்க திருச்சபையால் நியமிக்கப்பட்டது.

இது இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக நீதிமன்றம், காவல்துறை மற்றும் திருச்சபை பதிவுகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களிடமும் சாட்சிகளிடமும் தகவல்களைப் பெற்றது.

விசாரணையால் மதிப்பிடப்பட்ட பெரும்பாலான குற்றச்சாட்டுகள் பிரெஞ்சு சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர மிகவும் பழையவை எனக் கருதப்படுகின்றன.

'பாதிக்கப்பட்டவர்களை நம்பவில்லை'

ஏறக்குறைய 2,500 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கை, பாதிக்கப்பட்டவர்களில் "பெரும்பான்மையானவர்கள்" 10 முதல் 13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்று கூறியுள்ளது.

திருச்சபை பாலியல் கொடுமைகளைத் தடுக்கத் தவறியது மட்டுமல்லாமல், அது தொடர்பாக புகார் அளிக்கவும் தவறியது, சில தருணங்களில் பாலியல் வேட்டை நடத்துவோர் எனத் தெரிந்தே அவர்களுடன் குழந்தைகளைத் தொடர்பு கொள்ள வைத்திருக்கிறது என்று விசாரணை அறிக்கை கூறுகிறது.

"முழுமையான அலட்சியம், குறைபாடு, மவுனம், நிறுவன அளவிலான ஒட்டுமொத்த மறைப்பு போன்றவை நடந்திருக்கின்றன" என்று விசாரணையின் தலைவர் ஜீன்-மார்க் சாவே செய்தியாளர்களிடம் கூறினார்.

2000களின் முற்பகுதி வரை பாதிக்கப்பட்டவர்கள் மீது "கொடூரமான அலட்சியத்தை" திருச்சபை காட்டியது என்று அவர் கூறினார்.

"பாதிக்கப்பட்டவர்கள் நம்பப்படுவதில்லை, அவர்களின் குரல் கேட்கப்படுவதில்லை. அப்படிக் கேட்கப்பட்டாலும், நடந்தவற்றில் அவர்களுக்கும் பங்களித்திருக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது" என்று அவர் விளக்கினார்.

போப்

பட மூலாதாரம்,VATICAN POOL/GETTY IMAGES

 
படக்குறிப்பு,

அறிக்கை குறித்து போப் ஆண்டவர் கவலை தெரிவித்துள்ளார்

கத்தோலிக்க திருச்சபையில் பாலியல் கொடுமை நடப்பது ஒரு தொடரும் பிரச்சனையாகவே உள்ளது என்றும் அவர் கூறினார்.

1,15,000 பாதிரியார்கள் மற்றும் பிற மதகுருமார்களில் மொத்தம் 3,200 பேருக்கு எதிரான ஆதாரங்களை விசாரணை ஆணையம் கண்டறிந்தது. இதுவும் இது அநேகமாக குறைத்து மதிப்பிடப்பட்டிருக்கலாம் என்று ஆணையம் கூறியுள்ளது.

"குடும்பம் மற்றும் நண்பர்களின் வட்டத்திற்குப் பிறகு, பாலியல் வன்முறை அதிகமாக இருக்கும் சூழல் கொண்டது கத்தோலிக்க திருச்சபை" என்று அறிக்கை கூறுகிறது.

பார்லஸ் எட் ரெவிவர் (பேசுங்கள், மீண்டும் வாழுங்கள்) என்ற பாதிக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவரான ஆலிவியர் சவிநாக், தனது 13 வயதில் ஒரு கத்தோலிக்க விடுமுறை முகாமின் இயக்குநரால் பாலியல் கொடுமைக்கு ஆளானார்.

கொடுமை இழைக்கப்படுவதற்கு முன்னதாக பாதிரியாரை "நல்லவர், அக்கறையுள்ள நபர்" என்று நினைத்ததாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் அவர் தெரிவித்தார்.

"வளர்ந்து வரும் நீர்க்கட்டி போன்ற, உடலிலும் ஆன்மாவில் உள்ள புற்றைப் போன்ற இதை நாங்கள் சுமந்து கொண்டிருக்கிறோம்" என்று அவர் கூறினார்.

பாலியல் கொடுமைக்கு ஆளானோரில் 60 சதவிகித ஆண்களும் பெண்களும் "தங்கள் உணர்வு மற்றும் பாலியல் வாழ்க்கையில் பெரும் பிரச்சினைகளை எதிர்கொண்டனர்" என்று விசாரணையில் கண்டறியப்பட்டிருக்கிறது.

இழப்பீடு கோரிக்கை

விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சில மட்டுமே குற்றவியல் வழக்குகள் தவிர்த்து, ஒழுங்கு நடவடிக்கை வரை சென்றிருக்கின்றன.

ஆனால் பெரும்பாலான கொடுமைகள் இப்போது நீதிமன்றங்கள் வழியாக வழக்கு தொடுக்க முடியாத அளவுக்கு பழையதாகிவிட்டன. இருப்பினும் நடந்தவற்றுக்கு திருச்சபை பொறுப்பேற்பதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் வேண்டும் என விசாரணை அறிக்கை கூறியிருக்கிறது.

நிதி இழப்பீடு பாதிக்கப்பட்டவர்கள் அனுபவித்த அதிர்ச்சிக்கு நிவாரணமாக அமையாது என்றாலும், "அங்கீகார செயல்முறைக்கு அது இன்றியமையாதது" என்று அறிக்கை கூறுகிறது.

பிரார்த்தனை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

பாதிக்கப்பட்டவர்களுக்கு "நிதி அளிக்கும்" திட்டத்தை பிரான்ஸ் திருச்சபை ஏற்கெனவே அறிவித்திருக்கிறது.

பாதிரியார்கள் மற்றும் பிற மதகுருமார்களுக்கு பயிற்சி அளிப்பது உள்ளிட்ட முறைகேடுகளை தடுப்பதற்கான தொடர் பரிந்துரைகளையும் விசாரணை அறிக்கை பட்டியலிட்டிருக்கிறது.

"திருச்சபையின் தெளிவான மற்றும் உறுதியான பதில்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என்று பாதிக்கப்பட்டோரின் ஆறு சங்கங்கள் கூறியிருக்கின்றன.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் துயர அனுபவங்கள் "நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு இருக்கின்றன" என்று இந்த விசாரணை அறிக்கையைக் கோரிய பிரான்சின் ஆயர்கள் கூட்டமைப்பின் தலைவரான பேராயர் எரிக் டி மவுலின்ஸ்-பியூஃபோர்ட் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு "நிதி அளிக்கும்" திட்டத்தை பிரான்ஸ் திருச்சபை ஏற்கெனவே அறிவித்திருக்கிறது. அது அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளது.

பாலியல் கொடுமைகளை வெளிப்படையான குற்றமாக்கும் வகையில் கத்தோலிக்க சட்டங்களை போப் ஆண்டவர் இந்த ஆண்டு தொடக்கத்தில் மாற்றியமைத்தார். இது கடந்த 40 ஆண்டுகளில் மிகப் பெரிய திருத்தமாக அமைந்தது.

பிரான்ஸ் திருச்சபை பாதிரியார்களால் 2,16,000 சிறாருக்கு பாலியல் கொடுமை: விசாரணை அறிக்கை - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

உலகிலே அதிக சிறுவர் துஸ்பிரயோகம் செய்பவர்கள் கத்தோலிக்க பாதிரியாரும், புத்த பிக்குகளும் ஆகும். இயற்க்கைக்கு எதிரான அவர்களின் வாழ்வு  முறையே,  அவர்களை இப்படிப்பட்ட பாதக செயலை செய்ய தூண்டுகின்றது.

Link to comment
Share on other sites

நீதிமன்றங்கள் பின்வருமாறு உத்தரவிடுமாறு கோரி பல வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும்.
1. பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகபட்ச நட்டயீடு வழங்கப்பட வேண்டும்.
2. பாதித்தவர்கள் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும்.

3. கத்தோலிக்க திருச்சபை இனிமேல் திருமணமானவர்களையும், ஒரே பாலின திருமணமானவர்களையும் மட்டுமே தமது சமய நிறுவனங்களில் நியமிக்க சட்டரீதியாக கட்டாயப்படுத்த வேண்டும்.

4. பாலியல் துஷ்பிரயாக நடவடிக்கை இடம் பெறுகிறதா என மாதம் ஒருமுறையாவது எல்லா கத்தோலிக்க திருச்சபை நிறுவனங்களும் பொலிசால் விசாரணைக்கு உட்டபடுத்தப்பட பட வேண்டும்.

Link to comment
Share on other sites

சாதாரண மனிதர்களான இவர்களுக்கு (பாதிரியார், பிக்குகள்)  திருமணம் செய்ய முடியாது என்பது போன்ற கட்டுப்பாடுகளே அவர்களை இப்படி செய்ய தூண்டுகிறது என நினைக்கிறேன். இத்தகைய கட்டுப்பாடுகளில் நெகிழ்வு தன்மை எதிர்காலத்தில் இருக்குமாயின் மேற்படி துஸ்பிரயோகங்கள் இல்லாமல் போகலாம்.
 

Link to comment
Share on other sites

இதன் உள் நோக்கங்கள் புரியாவிட்டாலும் இது ஒரு ஆரோக்கியமான அறிக்கை.  

- இந்த அறிக்கைக் குழுவை 3 மில்லியன் ஈரோ செலவில் சுயாதீனமாக இயங்க வைத்தது கத்தோலிக்க திருச்சபை
- பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடு தருவதாகக் கூறியுள்ளனர்
- பாப்பரசர் வருத்தம் தெரிவித்தது மட்டுமில்லாமல் பிரான்ஸ் திருச்சபை மன்னிப்புக் கேட்டுள்ளது
- மூடி மறைக்காமல் உண்மைகளை வெளிக்கொணர்ந்ததால் எல்லோரும் கவனமாக இருப்பார்கள்.

குற்றவாளிகளை இனம்கண்டு சட்டப்படி கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அறிவியல் விஞ்னானத்துக்கு எதிராகச் செயற்பட்டது, பின்னர் அதை ஏற்றுக்கொண்டு மன்னிப்புக் கேட்டது உட்பட கிறிஸ்தவ மதம் சரியான பாதையில் பயணிக்கிறது என்பது எனது கருத்து. மூடி மறைப்புகளும் பழமைவாதமும் மாற்றங்களும் இல்லாத எதுவும் எதிர்கால இருப்பிற்குப் பாதகமாகவே அமையும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nunavilan said:

சாதாரண மனிதர்களான இவர்களுக்கு (பாதிரியார், பிக்குகள்)  திருமணம் செய்ய முடியாது என்பது போன்ற கட்டுப்பாடுகளே அவர்களை இப்படி செய்ய தூண்டுகிறது என நினைக்கிறேன். இத்தகைய கட்டுப்பாடுகளில் நெகிழ்வு தன்மை எதிர்காலத்தில் இருக்குமாயின் மேற்படி துஸ்பிரயோகங்கள் இல்லாமல் போகலாம்.
 

 

அப்படியானால் இஸ்லாத்தில் 4 முறை கட்டலாம் எனவே இஸ்லமிய முல்லாக்கள் உத்தமர்களா? இப்படி எல்லாம் பொதுவாக சொல்ல முடியாது. 

13 hours ago, zuma said:

உலகிலே அதிக சிறுவர் துஸ்பிரயோகம் செய்பவர்கள் கத்தோலிக்க பாதிரியாரும், புத்த பிக்குகளும் ஆகும். இயற்க்கைக்கு எதிரான அவர்களின் வாழ்வு  முறையே,  அவர்களை இப்படிப்பட்ட பாதக செயலை செய்ய தூண்டுகின்றது.

அப்படியானால் இஸ்லாத்தில் 4 முறை கட்டலாம் எனவே இஸ்லமிய முல்லாக்கள் உத்தமர்களா? இப்படி எல்லாம் பொதுவாக சொல்ல முடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்கவே அருவருப்பாக உள்ளது, பாதிரியார்களின் முகத்தில் காறி உமிழவேண்டும்போலிருக்கின்றது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புரட்டஸ்டன்ட் மதத்திலை உந்த சோலியள் இல்லை எண்டு நினைக்கிறன்....:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களது ஆடம்பரமான வாழ்க்கை முறைகளோடு மஸ்த்தான உணவுப் பழக்கங்களும்தான் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அவர்களை கொண்டு செல்கிறது......!   🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாதிரியார்களாக இருந்தாலும் சரி ஐயர் மற்றும் பிக்குகளாக இருந்தாலும் சரி அவர்களும் சாதாரண உணர்ச்சியுள்ள மனிதர்களே.

இதில் ஐயர்மார்  மணம் முடித்து சர்வசாதாரண வாழ்க்கை வாழ்கின்றனர்.

Link to comment
Share on other sites

7 hours ago, இணையவன் said:

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அறிவியல் விஞ்னானத்துக்கு எதிராகச் செயற்பட்டது, பின்னர் அதை ஏற்றுக்கொண்டு மன்னிப்புக் கேட்டது உட்பட கிறிஸ்தவ மதம் சரியான பாதையில் பயணிக்கிறது என்பது எனது கருத்து. மூடி மறைப்புகளும் பழமைவாதமும் மாற்றங்களும் இல்லாத எதுவும் எதிர்கால இருப்பிற்குப் பாதகமாகவே அமையும்.

கத்தோலிக்கம்  இப்போதுதான்   சரியான பாதையில் பயணிக்க முயற்சிக்கிறது என்பதே சரியான கருத்தாக இருந்திருக்கும். ஜப்பான், தாய்லாந்து இந்தியா, சீனாவில் பௌத்தமும், தென்னிந்தியாவிலும் பல்வேறு நாடுகளிலும் இந்துமதமும் சரியான பாதைக்கு ஐம்பது வருடங்களுக்கு முன்பே   திரும்பிவிட்டன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.dailymail.co.uk/news/article-10065191/Priest-absolved-raping-altar-boy-sexual-abuse-trial-heard-Popes-criminal-court.html
 

போப்பாண்டவரினால் இதற்கென அமைக்க பட்ட குற்றிவியல் நீதிமன்றின் முதலாவது வழக்கில் இரு பாதிரியார்களும் குற்றமற்றவர்களாக காணப்பட்டுள்ளனர்.

சில குற்றங்களில் இருந்து விடுவிப்பு சிலதை காலம் பிந்தியதால் நடத்தமுடியாது என தள்ளிவைப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, nunavilan said:

சாதாரண மனிதர்களான இவர்களுக்கு (பாதிரியார், பிக்குகள்)  திருமணம் செய்ய முடியாது என்பது போன்ற கட்டுப்பாடுகளே அவர்களை இப்படி செய்ய தூண்டுகிறது என நினைக்கிறேன். இத்தகைய கட்டுப்பாடுகளில் நெகிழ்வு தன்மை எதிர்காலத்தில் இருக்குமாயின் மேற்படி துஸ்பிரயோகங்கள் இல்லாமல் போகலாம்.

அவர்களை நீங்கள் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து எனக்கு சேவை செய்ய வேண்டும் என்று கடவுள் உத்தரவிட்டுள்ளார்.கடவுளின் உத்தரவில் விருப்பத்தில் மீறல்கள் செய்ய முடியாது.

இவர்கள் குற்றம் புரிவது தாங்கள் கடவுளின் சேவகர்கள் அவரோடு சம்பந்தம் கொண்டவர்கள் என்று மற்றவர்கள் நம்புவது தருகின்ற பாதுகாப்பு தான்.

9 hours ago, இணையவன் said:

மூடி மறைப்புகளும் பழமைவாதமும் மாற்றங்களும் இல்லாத எதுவும் எதிர்கால இருப்பிற்குப் பாதகமாகவே அமையும்.

நூறுவீதம் உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, இணையவன் said:

இதன் உள் நோக்கங்கள் புரியாவிட்டாலும் இது ஒரு ஆரோக்கியமான அறிக்கை.  

- இந்த அறிக்கைக் குழுவை 3 மில்லியன் ஈரோ செலவில் சுயாதீனமாக இயங்க வைத்தது கத்தோலிக்க திருச்சபை
- பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடு தருவதாகக் கூறியுள்ளனர்
- பாப்பரசர் வருத்தம் தெரிவித்தது மட்டுமில்லாமல் பிரான்ஸ் திருச்சபை மன்னிப்புக் கேட்டுள்ளது
- மூடி மறைக்காமல் உண்மைகளை வெளிக்கொணர்ந்ததால் எல்லோரும் கவனமாக இருப்பார்கள்.

குற்றவாளிகளை இனம்கண்டு சட்டப்படி கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அறிவியல் விஞ்னானத்துக்கு எதிராகச் செயற்பட்டது, பின்னர் அதை ஏற்றுக்கொண்டு மன்னிப்புக் கேட்டது உட்பட கிறிஸ்தவ மதம் சரியான பாதையில் பயணிக்கிறது என்பது எனது கருத்து. மூடி மறைப்புகளும் பழமைவாதமும் மாற்றங்களும் இல்லாத எதுவும் எதிர்கால இருப்பிற்குப் பாதகமாகவே அமையும்.

100% உண்மை 

4 hours ago, வாலி said:

வாசிக்கவே அருவருப்பாக உள்ளது, பாதிரியார்களின் முகத்தில் காறி உமிழவேண்டும்போலிருக்கின்றது!

காறி உமிழ்ந்தால் போச்சு..🤮

(பாதிரியார்கள் எல்லோரையும் சொல்கிறீர்களா அல்லது குற்றம் புரிந்தவர்களை மட்டும் குறிப்பிடுகிறீர்களா ? மயக்கமாக உள்ளது )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குற்றவாளிகளைத்தான் சொல்கின்றேன். தொப்பி அளவானவர்கள் போட்டுக்கொள்ளட்டும். (நான் பாதிரிகள் என்று கருதுவது கிறீஸ்தவத்தின் எல்லாப் பிரிவினரையும்தான்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாதிரியார்கள் புத்த துறவிகளுக்கு மாட்டுக்கு நாய்க்கு செய்வது போல் பதவி பிரமாணத்தின் போது செய்ய வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குடல் அறுவை சிகிச்சைக்குப்பின் போப் ஆண்டவர் பிரான்சிஸ் உடல் தேறி வருகின்றார்: வத்திகான்!

பிரான்ஸ் பாலியல் துஷ்பிரயோக விவகாரம்: இது அவமானத்துக்கான தருணம் என்கிறார் போப் ஆண்டவர் பிரான்சிஸ்!

பிரான்ஸில் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட விவகாரம் அவமானத்துக்கான தருணம் என போப் ஆண்டவர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் போப் ஆண்டவர் பிரான்சிஸ் கூறுகையில், ‘பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது வருத்தத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். தேவாலயத்தின் இயலாமைக்காகவும், பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் தேவாலயங்கள் நிற்காததற்கும், நீண்டகாலமாக, பாதிக்கப்பட்டவர்களைக் கவலையில் வைத்திருந்ததற்காகவும் நான் அவமானம் கொள்கிறேன். இது அவமானத்துக்கான தருணம்’ என கூறினார்.

பிரான்ஸில் கத்தோலிக்க மதகுருமார்களால் சுமார் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகி இருப்பதாக சமீபத்தில் வெளியான விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஜீன் மார்க் சாவ் தலைமையில் இரண்டு ஆண்டுகளாகத் தனியார் விசாரணைக் குழு நடத்திய ஆய்வு முடிவில், ‘ரோமன் கத்தோலிக்க தேவாலயங்களில், உலகெங்கிலும் தொடர்ச்சியான பாலியல் துஷ்பிரயோகங்கள் நடந்து வருவதைத் தொடர்ந்து இந்த விசாரணை நடத்தப்பட்டது. பிரான்ஸில் கடந்த 70 வருடங்களுக்கும் மேலாக, இந்தப் பாலியல் துஷ்பிரயோகங்கள் நடந்து வருகின்றன.

பிரான்ஸில் ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தைச் சேர்ந்த 3,000 பாதிரியார்களும், பிற ஊழியர்களும் இந்தப் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டுள்ளனர். 1950ஆம் ஆண்டு முதல் இதுவரை இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2021/1243509

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவ மன்னிப்பின் ரகசியத்தன்மை நாட்டின் சட்டங்களை விட உயர்வா?

October 8, 2021

spacer.png

கத்தோலிக்கத் தலைமை ஆயரை ஆஜராகுமாறு அமைச்சு அழைப்பு அரசுக்கும் மதத்துக்கும் இடையே ஒருபெரும் சர்ச்சை வெடித்திருக்கிறது.

பிரான்ஸின் ஆயர்கள் மன்றத்தின் தலைமைக் குருவை (head of the Bishops’ Conference of France) உள்துறை அமைச் சில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

பிரான்ஸின் தேவாலயங்களில் மிக நீண்டகாலமாக இடம்பெற்றுவருகின்ற மத குருமார்கள் சம்பந்தப்பட்ட சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் பற்றி அதிர்ச்சி தரும் அறிக்கை ஒன்று இந்த வாரம் வெளியாகியிருந்தது.

1950 – 2020 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கத்தோலிக்கத் தேவாலயங்களில் இடம் பெற்ற சிறுவர்கள் மீதான குற்றங்கள் பற்றி ஆய்வு செய்த ஆணைக்குழு வெளியிட்ட அந்த அறிக்கையில் சுமார் இரண்டு லட்சத்து 16 ஆயிரம் குற்றச் சம்பவங்கள் பற்றிய தகவல்கள் பதிவாகி உள்ளன. தொடுகை முதல் வல்லுறவு வரை சிறுவர்கள் மீது புரியப்பட்ட பல்வேறு குற்றங்கள் அடங்கிய அந்த அறிக்கை கத்தோலிக்க சமூகத்தினரிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

நாட்டின் கத்தோலிக்க ஆயர் மன்றத்தின் தலைவர் Eric de Moulins-Beaufort அந்த அறிக்கை பற்றி செய்தி நிறுவனம் ஒன்றுக்குக் கருத்து வெளியிடுகையில், ‘பாவமன்னிப்பு’ அல்லது’ஒப்புதல் வாக்குமூலம்’ எனப்படுகின்ற குற்றத்தை ஒப்புக்கொள்ளும் மதச் சடங்கில் பேணப்படும் ‘ரகசியம்’ நாட்டின் சட்டங்களை விட மேலானது என்ற சாரப்படக் கருத்து வெளியிட்டிருந்தார்.

பாவிகள் தங்கள் பாவங்களை பாதிரியாரிடம் ஒப்புக் கொண்டு கடவுளிடம் மன்னிப்புக் கோருகின்ற ஒரு சடங்கே ஒப்புதல் வாக்கு மூலம் அல்லது பாவ மன்னிப்புஎனப்படுகிறது. அது ஒரு திரைக்குப் பின்னால் செய்யப்படுகிறது.அதன்போது பாவம் செய்தவரது குரலை மட்டுமே மத
குருவானவர் செவிமடுப்பார். அதில் பேணப்படுகின்ற மிக உயர்ந்த ரகசியத்தன்மையையே ‘நாட்டின் சட்டங்களை விடமேலானது’ என்று ஆயர்கள் அமைப்பின் தலைமைக் குரு குறிப்பிட்டிருந்தார்.

சிறுவர் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களும் அவ்வாறு பாவ மன்னிப்புக் கோரியிருக்கலாம். அது பற்றிய ரகசியத் தன்மையை வெளிப்படுத்த முடியாது என்பதை மனதில் வைத்தே ஆயர் தனது கருத்தை வெளியிட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

அவரது அந்தக் கருத்துக் குறித்து விளக்கம் கேட்பதற்காகவே-அரசுத் தலைவர் மக்ரோனின் பணிப்பின் பேரில்- உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டாமனா ஆயரை அமைச்சுக்கு அழைத்திருக்கிறார்.நாட்டின் குடியரசுச் சட்டங்களை விடஉயர்வானவை என்று எதுவும் இல்லை”என அரச பேச்சாளர் கப்ரியேல் அட்டால் கூறியிருக்கிறார். அமைச்சின் ஆணையை ஏற்றுக் கொண்டுள்ள ஆயர், எதிர்வரும் செவ்வாய்க் கிழமை உள்துறை அமைச்சரைச் சந்திக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பிரெஞ்சுச் சட்டங்களின் படி சிறுவர் குற்றங்களை அறிந்திருந்த ஒருவர் அதுபற்றி அரச அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தக் கடமைப்பட்டுள்ளார். அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில் அபராதம் மற்றும் சிறைத் தண்டனையை எதிர்கொள்ள நேரிடலாம் .சிறுவர் குற்றங்கள் புரிந்தோர் பாவ மன்னிப்புக் கோருவதன் மூலமாக நாட்டின்சட்டங்களில் இருந்து தப்பிவிட முடியுமாஎன்ற கேள்வியை எழுப்பியிருக்கின்ற இந்த விவகாரம் ஊடகங்களில் சூடு பிடித்துள்ளது.

 

https://globaltamilnews.net/2021/166947

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.