Jump to content

மலை என்ற சொல்லுக்கு சரியான ஒத்தசொற்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

main-qimg-5b04e6027e6548a1e4a78be801b33502

 

'மல்’ என்றால் வலிமை எனப்பொருள். வலிமையான கருங்கற்களால் ஆன நிலப்பகுதி மலை எனப்பட்டது.

 

  • மலையையும் மலை சார்ந்த இடத்தையும் குறிக்குங் திணை-குறிஞ்சித் திணை
  1. மிக உயர்ந்த மலை - மிசை/ விண்டு - very high mountain
    1. விண்டு - விண்ணளாவிய மலை
  2. நாட்டின் குறுக்காக உள்ள மலை - விலங்கல் - blocking mountain
  3. ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கடுக்காகப் பாறைகள் அமைந்திருக்கும் மலை - அடுக்கல்- mountain as stratified.
  4. மூங்கிற்காடுகள் உள்ள மலை -வரை
  5. மிக நீண்ட மலைத்தொடர் - நெடுவரை (இங்கு வரை என்றால் பொதுமலை)
  6. காடுகள் அடர்ந்த மலை - இறும்பு - foothill
  7. மரங்கள் அற்ற, ஓரளவு சிறிய புதர்களைக் கொண்ட மலை - பிறங்கல்
  8. பனியால்(dew) மூடப்பட்டிருக்கும் மலை- பனிமலை
  9. சிந்துவால(snow) உறைந்து மூடப்பட்டிருக்கும் மலை - சிந்துமலை , இமமலை.
  10. நீரிடைப்பட்ட மலை - கூபிகை
  11. மணல் குன்று - தேரி
  12. நெருப்பைக் கக்கும் மலை- எரிமலை -volcano
  13. கதிரவன் உதிக்கும் திசையில் உள்ள மலை- உதயகிரி
  14. பெரும் பாறைகளாலான மலை - கன்மலை - rocky mountain
  15. காரீயம் நிறைந்த மலை - கடுமலை -graphite mountain
  16. zinc ஐக் கொண்ட மலை - மாசற்றமலை/ நாகமலை

என மலைகளை வகைப்படுத்திய அறிவியல் சிறப்பு, உலகில் இன்று கூட வேறு எங்கும் இல்லை என நாம் பெருமையாகக் கூறலாம்.


மலை என்ற சொல்லுக்கான ஒத்தசொற்கள் : →

  1. அகமம்
  2. அத்தி
  3. அரி
  4. இரவி
  5. இலும்பு
  6. இறும்பூது
  7. ஓதி
  8. கந்தரம்
  9. கல்லகம்
  10. கவடு
  11. காண்டம்
  12. கிரி
  13. குதரம்
  14. குத்திரம்
  15. குறிஞ்சி
  16. கோ
  17. கோட்டை
  18. கோத்திரை
  19. சக்கரம்
  20. சிகி
  21. சிலை
  22. சேலம்
  23. தடம்
  24. தணி
  25. தரணி
  26. தாரணி
  27. தரம்
  28. தராதரம்
  29. தானி
  30. துங்கம்
  31. துடரி
  32. திகிரி
  33. நகம்
  34. நவிரம்
  35. நாகம்
  36. பதலை
  37. பளகம்
  38. பாதவம்
  39. பீலி
  40. புறவிடன்
  41. பொகுட்டு
  42. பொங்கர்
  43. போதி
  44. மன்
  45. மாதிரம்
  46. மேகலை
  47. மேதரம்
  48. வல்லரண்
  49. வாரி
  50. விடம்
  51. விடரகம்
  52. விடரி
  53. வீரம்/வேரம்

 


  • மலை செறிந்தவூர் - கேடம், கேடகம்
    • மலையும் ஆறும் சூழ்ந்தவூர் - கருவடம்

 

 

மேலும் பார்க்க :

உசாத்துணை:

தொகுப்பு & வெளியீடு :

நன்னிச் சோழன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலை என்னும் சொல்லுக்கு எதற்காக இத்தனை ஒத்த சொற்கள்??????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மலை என்னும் சொல்லுக்கு எதற்காக இத்தனை ஒத்த சொற்கள்??????

சரிஞ்சாலும் முட்டு குடுக்கத்தான். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மலை என்னும் சொல்லுக்கு எதற்காக இத்தனை ஒத்த சொற்கள்??????

அகராதிகள் இருக்கிறது...
மேலும் இவற்றிற்கென்று விதப்பான பொருள்களும் இருந்திருக்கும்(மலையின் குறிப்பிட்டப்பகுதியினையோ அல்லது மலையின் ஒரு வகையினையோ!). ஆனால் அவை வழக்கொழிந்து இன்று இவை மட்டுமே எஞ்சியிருக்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலை என்பதற்கு "அசலை"  அல்லது "அசலம்" என்றும் பெயர் உண்டு என அறிந்திருக்கிறேன் உண்மையா?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, vanangaamudi said:

மலை என்பதற்கு "அசலை"  அல்லது "அசலம்" என்றும் பெயர் உண்டு என அறிந்திருக்கிறேன் உண்மையா?  

என்றுதான் கூகிள் சேர்ச் இல் சொல்லுது. 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
13 hours ago, vanangaamudi said:

மலை என்பதற்கு "அசலை"  அல்லது "அசலம்" என்றும் பெயர் உண்டு என அறிந்திருக்கிறேன் உண்மையா?  

ஓம். ஆனால் அந்த அ என்ற முன்னொட்டு தமிழில் இருந்து சமற்கிருதம் சென்றது என நல்லூர் ஞானப்பிரகாச அடிகளார் நிறுவியுள்ளார். 

அல் --> அ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் சிறு வயதில் தமிழ் ஆசிரியர் பாட நேரத்தில் சொன்ன ஒரு விடயம் நினைவுக்கு வந்தது அதனால் கேட்டேன்.
இந்திய தமிழ் அறிஞர் வேதாசலம் என்று பேற்றோர் இட்ட தனது இயற்பெயரை மறைமலை (வேதம்=மறை, அசலம் = மலை)என மாற்றி வைத்துக்கொண்டார்.
பிற்காலத்தில் மறைமலை அடிகளார் என அறியப்பட்ட இவர் வடமொழியும் ஆங்கிலமும் நன்கு கற்றவர். தமிழை வேற்று மொழிக்கலப்பின்றி எழுதவும் கற்கவும் மக்களை ஊக்கிவித்தவர். இவரும் நல்லூர் ஞானபிரகாச அடிகளாரும் சமகாலத்தினரே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சலம் = நீர் ....அசைவது ........அசலம் = அசையாமல் அப்படியே இருப்பது........! 

அருணாசலம் = அருணம் என்றால் சிகப்பு.....அசலம் என்றால் மலை.......!

அருணாசலேஸ்வரர் கோவில், திருவண்ணாமலை - Arunachaleswarar Temple,  Thiruvannamalai

அருணாசலேஸ்வரர் கோவில். திருவண்ணாமலை.......!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.