Jump to content

சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் குறிஞ்சியியல்(Montology) தொடர்பான கலைச்சொற்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

main-qimg-88acff1a073f337672313c9618e143af-lq.jpg

 

குறிஞ்சித்திணைப் பாடல்களில் இவை காணப்படுவதால் புவியியல், வேதியல் என்பன போன்று மலையும் மலை சார்ந்தவற்றையும் குறிஞ்சியியல் (credit: திருவள்ளுவன் இலக்குவனார் ) என்றே நாம் தனியியல் கண்டு பல கலைச்சொற்களைப் புதுப்பிக்க இயலும்.

சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் மலையியல் தொடர்பான கலைச் சொற்கள் :

  1. அடிவாரம், தாள், வெற்பு - மலையின் அடிப்பகுதி (spur / Foot of a hill/mountain)
  2. அடுக்கம் - பன்மலை வரிசை (a complex mountain range.)
  3. அறைவாய், கணவாய், கண்டி - (mountain pass)
  4. ஆரிப்படுகர் - (very difficult mountain path with ascents and descents) அரிதின் முயன்று ஏறியும் இறங்கியும் செல்லும் கடிய மலை வழி
  5. கது, கிழிப்பு, பிளப்பு, விடர், விடரளை, விடம்பு, விடப்பு, மறுமாடி- mountain cleft
  6. கமர் - chasm
  7. கவான் - கவைந்து கிடக்கும் பக்க மலை
  8. கோடு - இரு குவடுகள் சேருமிடம் (joining place of two summits)
  9. கல்லளை, விடரகம், அளை, குகரம், முடுக்கர், விடப்பு, விடர், முகை, போன், கெவி - mountain caves
  10. கன்முழை, கற்பாழி, காண்டை, முழை - large mountain cave
  11. பொறை அருப்பம், சுவல், பறம்பு, பொற்றை, பொச்சை, அரி - hillock, hummock, knoll
  12. குறும்பொறை - பொறையை விடச் சிறியது; பரந்துபட்ட கற்பாறை எனவும் கொள்ளலாம்.
  13. கொடுமன் - slope & side together
  14. கொடுமுகம் - steep face
  15. கொடுமுனை- precipice
  16. கோடு, முகடு, மோடு - ridge
  17. சமவெளி, தாவு, துறவை - plain
  18. சரி - மலைவழி- mountain way
  19. சரி, சரிவு - declivity
  20. சென்னி, குடுமி, உச்சி, முடி - peak of a mountain/ hill - மலையுச்சி
  21. சிமை, மீமிசை, அறை, கூடம், குவடு - summit of a mountain/ hill - உச்சி மலை
  22. சிமையம், கொடுமுடி - உச்சிச் சிகரவுச்சி (topmost tip of the peak)
  23. சிலம்பு, அரைமலை - ஒரு உயரமான மலைச்சரிவில், இடையே அமைந்த ஒரு சிறிய சமவெளிப்பகுதி.
  24. சிறு மலை, குன்று, அரி, குன்றம், மிசை, ஏந்தல் - hill
  25. சூழி - மலையில் உள்ள குளம்
  26. ledge = ?
  27. படுகுழி, அகத்தியா - abyss
  28. பள்ளத்தாக்கு, கொல்லி, தாவு - valley, vale
  29. பிலம், கெவி- cavern
  30. புறத்தெற்றிடறு - Promontory (புறத்தெற்றிய திடறு)
  31. மணற்குன்று/ தகர் / எக்கர் / எக்கல்/ இடுமணல்/ பதுக்கை- sand hill / dune
  32. மரிசு - edge of ridge
  33. மோடு - eminence
  34. பிட்டி- mound
    1. திட்டு - திட்டாக இருக்கும் நிலம்
    2. திடல் - தரையில் இருந்து மெலிதாக உயர்ந்த நிலம்
    3. திடர் - இப்படி உயர்ந்த நிலம் சற்று பருத்திருந்தால்
    4. திடறு - நன்கு உயர்ந்து பருத்து இருந்தால்
    5. திப்பை - பருத்த மேடு
    6. குவால் - குவிந்தமலை போன்ற தோற்றத்தோடு இருக்கும் பிட்டி
  35. மிசைத்திட்டை - Mesa
    1. சொல் உருவான முறை - மிசை என்றால் தமிழில் உயர்ச்சி, மேலிடம், மேடு என்று பொருள்; திட்டை என்றால் மேடு, திண்ணை என்று பொருள். அதாவது மேடு போன்று உயரத்தில் அமைந்துள்ள சமதரையான(மேலிடம்) திண்ணை போன்ற நிலம். (மெசா உண்மையிலே ஒரு வகையான திண்ணைதான்)
  36. வற்புலம், பீடபுவி - plateau
  37. வரை - மலை முகட்டின் பக்கம் (side of a summit)
  38. வாரம், கடறு, சாரல், கடம், பொருப்பு- மலையின் ஒரு பக்கம் (side/ slope of a mountain)
  39. வட்டமரி - knob (வட்டமான(round) அரி(குன்று, குறும்பொறை))
  40. நெடும்பொறை - butte - இவற்றின் உயரமானது அகலத்தை விடவும் கூடுதலாக இருக்கும். மேலும் பொறை என்றாலே எமக்குள் ஓர் பாறை என்னும் உள்ளுணர்வு தோன்றி விடும். ஆதலால் அதனோடு நெடும் என்னும் உயரத்தைக் குறிக்கும் சொல்லினையும் சேர்த்து நெடும் பொறை என்னும் சொல்லினை உருவாக்கியுள்ளேன்.

 


  • அறை, துறுகல் - சிறுபாறை
  • இகுப்பம், கேளிதம் - சீரான பெரிய பாறை(boulders)
  • உலம் - திரண்ட கல் (round stone rock, large pebble.)
  • கக்கான்கல் - kankar, limestone, an impure concretionary carbonate of lime.
  • கரடு - கற்பாங்கான பெருந்திடல்
  • கல்/கன், அதிரி- stone
  • காழ் - gravel
  • குண்டுக் கல் - (undressed stone, rubble) வேலை செய்து செப்பனிடாத கல்
  • பரல், கூழாங்கல் - small pebbles
  • பருக்கை - சிறு கூழாங்கல்
  • பாறை, பாறாங்கல், முரஞ்சு, பெருங்கல், முரம்பு, கற்பாறை, சிலை, பார் - rock
  • முரம்பு - பருக்கைக் கல்லுள்ள மேட்டு நிலம்;
    mound of gravel or stone.

 


கலாநிதி குணராசா என்பவர் எழுதிய 'இடவிளக்கவியற் படங்கள்' என்னும் புத்தகத்தில் இருந்து…..

 

  • மென்சாய்வு- Gentle slope

main-qimg-418b15b965f45af64d29928f46ede99a.png

  • குத்துச்சாய்வு - Steep slope

main-qimg-667d71db1b763972e368398cf91454a3.png

  • குழிவுச்சாய்வு -Concave slope

main-qimg-da33a8f3b54ccb46475a0ce7fd985a75.png

  • குவிவுச்சாய்வு - Convex slope

main-qimg-bf37c829794ee68af59530b885b705b6.png

  • சமச்சீரான பள்ளத்தாக்கு -

main-qimg-018296faf59d3e2e1822e10892cf338c.png

  • சமச்சரில் பள்ளத்தாக்கு -

main-qimg-8aac8a906ebdde64559b081f03c014a1.png

  • நெடுக்குப் பள்ளத்தாக்கு -

main-qimg-ccf7c809f0c4f1fd2531f569c3523fa3.png

  • குறுக்குப் பள்ளத்தாக்கு - ஒரு பிரதேசத்தின் பாறைப் போக்குகளுக்கு குறுக்காகப் பாறைத் தொடர்களை ஊடறுத்து அமைந்திருப்பவை குறுக்குப் பள்ளத்தாக்குகள் எனப்படும்.

main-qimg-891ab0e26f8ab59414a878f88188e4ce.png

  • மேட்டு நிலம் - உயர் நிலமொன்றின் உச்சியில் அகன்று தட்டையாக அமைந்த ஒரு பரப்பே மேட்டுநிலம் எனப்படும். இதிலி சமவுயரக்கோடுகள் உயர்நிலத்தைக் காட்ட அமைந்திருக்கும். ஆனால் உச்சியில் சமவுயரக்கோடுகள் காணப்படா.

main-qimg-87a307ca6211fe1da53c12df213aac21.png

 


  1. கணவாய் - இரு பாறைத் தொட்களுக்கு இடையே அமைந்த கழுத்துப் போன்ற தாழ்ந்த பகுதியே கணவாய் எனப்படும். இதில் சமவுயரக் கோடுகள் பாறைத் தொடர்களினி அமைப்பைப் பிரதிபலிப்பனவாய் இருக்கும். இருபாறைத் தொடர்களைச் சுற்றி வளைத்து வேறு தாழ் சமவுயரக் கோடுகள் அமைந்திருக்கும். கணவாய்கள் பல்வேறு உயரங்களிற் காணப்படலாம்.
  2. உயர்கணவாய் சேணக்கணவாய் - இரு மலைத்தொடகளுக்கு இடையே அமைந்த இரு பள்ளத்தாக்குகளை இணைக்கும் கழுத்தே உயர் கணவாய் அல்லது சேணக் கணவாய் எனப்படும். கணவாயின் இரு பக்கமும் உயர் நிலம் காணப்பட சேணக்கணவாயின் இரு புறமும் பள்ளத்தாக்குகள் காணப்படும்.
  3. கடகம்/ மலையிடுக்கு - gorge - ஒரு பள்ளத்தாக் குவழக்கத்தைவிட ஆழமாயும், ஒடுங்கிய தாகவும், ஒருபுறம் கணவாய் அமைப்பிலும், மறுபுறம் படிப்படியாக உயர்ந்தும் சமவுயரக் கோடுகளைக் கொண்டு அமையும்போது அதனை மலையிடுக்கு என்பர். கணவாய் ஒன்றிற்கும் மலையிடுக்கிற்கும் இடையில் வேறுபாடுகளுள்ளன. மலையிடுக்கு, பெயருக்கு ஏற்ப ஒரு பாறைத் தொடரில் ஆழமான, ஒடுங்கிய இடுக்காகக் காணப்படும். இடவிளக்கவியற் படங்கள். கணவாயை ஒரு புறத்தில் இருந்து ஏறிக்கடக்கும் போது முதலில் படிபடியாக ஏற்றம் உயர்ந்து, பின்னர் படிப்படியாக இறங்கிக் காணப்படும். ஆனால் மலையிடுக்கு அவ்வாறன்று. ஒரு புறம் படிப்படியாக உயர்ந்து, மறுபுறம் அந்த உயரம் படிப்படியாக உயர்ந்து செல்லும். படம் 3.18 - இல் சமவுயரக் கோடுகளின் அமைப்பினை அவதானிக்க. கணவாய் போன்று சமவுயரக்கோடுகள் இருபுறமும் உயரத்தை 'நோக்கி V” வளைவாக அமையவில்லை. ஒருபுறம் உயரும் அப்பள்ளத்தாக்கு, மறுபறமும் உயர்ந்து செல்கின்றது. பொதுவாக மலையிடுக்குகள் குத்தான பக்கங்களைக் கொண்டனவாயும், ஒடுங்கியனவாயும், ஆழமானவையாயும் காணப்படும். ஒருவகையில் இவை ஒடுங்கிய குறுக்குப் பள்ளத்தாக்கை ஒத்தன. (படம்: 3.18)

main-qimg-f9e376e7bbce689d06e69eb2ecf85dfc.png

 


  1. சரிவுப்பறை - குத்துச் சாய்வான பாறைச்சாய்வு ஒன்று சுவர் போன்று வெகுதூரம் நீண்டமையும்போது, அதனைச் சரிவுப்பறை என்பர். இவை பொதுவாக மேட்டுநிலங்களை உருவாக்கும் சாய்வுகள் சரிவுப்பாறைகளாகக் காணப்படுகின்றன.
  2. சுவடு -ஒரு உயர் நிலத்தினின்றும் அல்லது ஒரு பாறைத்தொட ரினின்றும் வெளியே நீட்டிக்கொண்டு காணப்படும் உறுப்பே சுவடு ஆகும். அதாவது பாறைத்தொடர் ஒன்று நெடுக்காக அமைந்திருக்க அப்பாறைத்தொடரில் ஒரு கிளை குறுக்காகச் சற்று நீண்டிருக்கில் அதுவே சுவடு. இதில் சமவுயரக்கோடுகள் தாழ்நிலத்தை நோக்கி வளைந்து சுருண்டு அமைந்திருப்பன. பள்ளத் தாக்கிற்கும் சுவடிற்குமிடையே சமவுயரக்கோடுகளிடையே வேறுபாடு காண்பதில் தவறு நேரலாம்.
  3. வெளிக்கிடை - பாறைகளினால் சூழப்பட்ட பாறைத் திணிவொன்றே வெளிக்கிடை எனப்படும். இது பாறைத் தொடரினின்றும் பிரிவுற்று அமைந்திருக்கும். இதில் சமவுயரக்கோடுகள் அருகமைந்த உயர்நிலத்தோடு இணையாது தனித்து, கூம்பு வடிவிலோ வேறு அத்தகைய சிறு வடிவிலோ அமைந்து காணப்படும். சுவடுகளுக்கு அருகே அமைந்திருக்கும் குன்று வெளிக்கிடையாகும்.
  4. நீர்ப்பிரிமேடு - interfluve
  5. சிறுகுன்று - small hill - சிறுகுன்றுகள், ஏறத்தாழ 500m நீளத்திற்குட்பட்டனவாகக் காணப்படும்.
  6. நீள்குன்று - சிறு குன்றிலும் பார்க்க நீளமானவை நீள் குன்றுகள் எனப்படுகின்றன. அவை ஏறத்தாழ 1 - 2 km நீளமானவையாகக் காணப்படும். ஒன்றிற்கு மேற்பட்ட உச்சிகளைக் கொண்டனவாக இருக்கும்.
  7. கூம்புக் குன்று - கூம்பு வடிவினதாய் அமைந்திருக்கும் ஒரு குன்றே கூம்புக் குன்றம் ஆகும்.
  8. பாறைத் தொடர் - நீள்குன்றிலும் பார்க்க நீளமானவை பாறைத்தொடர்களாகும். இவை 3-8 km வரை நீளமானவையாகக் காணப்படும். 2-3 km அகலமானவையாகவும் காணப்படும். பல சிகரங்களை இப்பறைத் தொடர்கள் கொண்டிருக்கும்.
  9. மீள்நுழை (re-entrant) - இரண்டு வெற்புகளுக்கு(spurs) இடையே உருவாகும் தாழ்நிலம்.
  10. ஓங்கல் - (cliff) அதிக குத்தாக உயர்ந்து அமைந்த பாறை முகமே ஓங்கல் எனப்படும். இது கடற்கரைகளில் அல்லது உள்நாட்டில் காணப்படலாம். இதில் சமவுயரக்கோடுகள் ஓரிடத்தில் வந்து தொடராது ஒரே கோட்டில் நின்று விடும்.
  11. தனியாக்கப்பட்ட குன்று- ஒரு இடத்தில், ஏனைய உயர் நிலத்தோடு இணையாது பிரிந்து அமைந்து நிற்கும் குன்றைத் தனியாக்கப்பட்ட குன்று என்பர்.

main-qimg-df12f29cd41133b39eceab87ff95db50.png

 

 


  • மலையிலிருந்து வெட்டி எடுக்கப்படும் கனமான கருப்பு நிறக் கல்- black rock; granite- கருங்கல் / மலைக்கல்

 

 

மேலும் பார்க்க :

 

என்னும் கேள்விக்காக நானெழுதிய விடையினுள்ளும் கொஞ்ச கலைச்சொற்கள் உள்ளன.... அவற்றினையும் படித்து மகிழ்க !

மேலுள்ள சொல் ஒவ்வொன்றுமே கலைச்சொல் என்பதை உணர்ந்து உரிய துறை ஆசிரியர்கள் இவற்றைப் பயன்படுத்தி நூல்கள் எழுத வேண்டும் என்பது எனது வேண்டுகோள் _/\_

 

உசாத்துணை:

தொகுப்பு & வெளியீடு :

நன்னிச் சோழன்

 

 

Link to comment
Share on other sites

  • நன்னிச் சோழன் changed the title to சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் குறிஞ்சியியல்(Montology) தொடர்பான கலைச்சொற்கள்
  • கருத்துக்கள உறவுகள்+

குழந்தைகளுக்கு இதை படம்போட்டுக் காட்டலாம். இலகுவாக தமிழ் படிப்பினம்

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனக்கு தெரிந்த சில சிறிய பென்சன்காரர்கள் (மாதம் 500 இலிருந்து 600 யூரோக்கள் வரை) அங்கே 6 முதல் 9 மாதங்கள் தங்கி வருகிறார்கள். அவர்களுக்கு இது இனி கடினம் தானே? விமான ரிக்கற் மற்றும் விசா செலவு என்று பார்த்தால் வாழ்க்கை இனி இறுகலாம் அல்லவா?
    • குளிப்பா? கிலோ என்ன விலை எனும் சப்பையள் நாளுக்கு நாலு தரம் குளிக்கும் எம்மை பார்த்து மூக்கை பொத்துகிறார்களா? ஜோக்தான். எனக்கும் இதில் கொஞ்சம் நாட்டம் அதிகம்தான். Paco Rabanne 1Million பாவித்துள்ளீர்களா? எனக்கு பிடிக்கும். முன்னர் Gucci Envy for men பிடிக்கும். ஒரு பத்து வருடம் முன் நிறுத்தி விட்டார்கள்.  இப்போ வெறும் போத்தல் நல்ல விலை போகிறது. கடைசியாக பாவித்தது ஒரு 10 மில்லியோடு பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். 
    • அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் விடயம் சூடுபிடித்திருக்கின்றது. இந்த விடயத்தைப்பற்றிப் பேச்சு எழுந்தவுடனேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு ஒத்தூதும் வகையில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த காலங்களில் அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது வகிபாகம் மிகப்பெரியது. அந்தக் கட்சி எடுக்கும் முடிவையே தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பங்காளிகளுடன் பேசி, அந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தால் எந்தத் தாமதமும் இல்லாமல் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சகல முடிவுகளையும் சம்பந்தன் அல்லது சம்பந்தனின் பெயரால் சுமந்திரனே எடுத்தனர், அதை ஏனையோரிடம் திணித்தனர். அவர்களும் எதிர்ப்புகளை கட்சிக்குள் பதிவு செய்துவிட்டு, திணிக்கப்பட்ட முடிவை செயற்படுத்தினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அவருக்கான இடம் - செல்வாக்கு கட்சி தொடர்பில் தீர்மானிக்கும் சக்திக்கான அந்தஸ்து என்பன கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. கடந்த காலங்களைப்போன்று தென்னிலங்கையின் அரசதலைவர் வேட்பாளர்களை கண் மூடித்தனமாக ஆதரித்த சுமந்திரன்- சம்பந்தன் கூட்டின் போக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்களே ஏற்க மறுக்கின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசதலைவர் தேர்தல்களில் எடுத்த முடிவு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கின்றது. இதை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் கூட அண்மையில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில் தங்களது கைகளை மீறி, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சென்று விடுமோ என்ற அச்சத்தில், இரா. சம்பந்தன் -எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது அணியினர் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் இதற்காக, ராஜபக்சக்கள் மீண்டும் வந்து விடுவார்கள், தென்னிலங்கையில் இனவாதிகள் ஒன்றாகி விடுவார்கள் என்ற தேய்ந்துபோன இசைத் தட்டையே மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தல்களின் போதும், தமிழ் மக்கள் இதைச் செய்தால் தென்னிலங்கை இப்படி எதிர் வினையாற்றும் என்று சொல்லிச் சொல்லியே, தமிழ் மக்க ளுக்கு எது தேவை என்பதைச் சொல்லாமல் செய்து விட்டிருந்தனர். இம்முறை அதேதவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைப்பதற்குத் தயாரில்லை. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முடிவை நோக்கி தமிழ் மக்கள் தாங்களாக வரவில்லை. அதை நோக்கி கடந்தகால அரசதலைவர் தேர்தல் அனுபவங்கள் தமிழ் மக்களை தள்ளிவிட்டிருக்கின்றன. இப்போதும், தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றதும் எதிர் வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற சிங்கள வேட்பாளர்கள் பதறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் எவரும் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை சாதகமாகப் பார்க்கவில்லை. அந்தத் தென்னிலங்கை வேட்பாளர்களைப்போல அல்லது அதற்கு ஒருபடி மேலேபோய், சம்பந்தன் - சுமந்திரன் இணை அணியும் பதறத் தொடங்கியிருக்கின்றது. ராஜபக்ச பூச்சாண்டி அல்லது தென்னிலங்கை இனவாதிகள் என்ற பயத்தைக் காண்பித்து, தாங்கள் சேவகம் செய்யவேண்டிய ஏதோவொரு தென்னிலங்கை வேட்பாளரை நோக்கி தமிழ் மக்களைத் தள்ள வேண்டும் என்று இந்த அணியினர் சிந்திக்கின்றனர். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இதுவரைகாலமும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்து எதுவும் பெறமுடியாத சூழலில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து, எங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதைச் சொல்வதற்கான சந்தர்ப்பமாக மாத்திரம் அரசதலைவர் தேர்தலை பிரயோகிப்பதில் தவறில்லையே...! (13.04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/உள்ளத்தில்_இருப்பதை_உரக்கச்_சொல்ல_ஒரு_சந்தர்ப்பம்!!!
    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது. எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை. பிகு 50 நாடுகளுக்கு இலவச டூரிஸ்ட் விசா விரைவில் இலங்கை அறிவிக்கும் என ஒரு வதந்தி உலவுகிறது. வாய்ப்பில்லை என நினைக்கிறேன். நடந்தாலும் இந்த 50 இல் மேற்கு நாடுகள் இராது.  
    • இணைத்த படம் தெளிவாக இல்லை. கவனம் செலுத்தவும் 😎 @தமிழ் சிறி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.