Jump to content

எவரை எவர் ஏமாத்துகின்றனர்-பா.உதயன் 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்


எவரை எவர் ஏமாத்துகின்றனர்

வளமை போலவே
இந்த முறையும்
இந்திய அதிகாரி
அதே 13 க் கதையை
சொல்லிப் போனார்

எத்தனை முறை
சொன்னார்கள் என்று
எனக்கு ஞாபகம் இல்லை
ஆனால் முப்பது வருட
கதை இது

இத்தனை வருடமாக
இந்தியாவை ஏமாத்த
இலங்கைக்கு மட்டும் தெரியும் 
இது சிங்கள இராஜதந்திரம் 

முப்பது வருடமாய்  
ஈழத் தமிழனை ஏமாத்த
இந்தியாவுக்கும் 
இலங்கைக்கும்
மட்டும் தெரியும் 
இது இன்னும் 
ஒரு இராஜதந்திரம் 

இனி வரும் காலமும் 
இன்னும் ஒரு பொருளாதார 
ஓப்பந்தம் எழுத
இந்திய அதிகாரிகள் 
மீண்டும் வருவார்கள் 
அப்பவும் இன்னும் ஒரு முறை
நினைவூட்டுவர் 
அந்த 13 க் கதையை
சற்றும் மனம் தளராத 
விக்கிரமாதித்தன் 
கதை போலே 

 மீண்டும் வேதாளம்
13 ஐ சுமந்தபடி
முருங்கை மரத்தில்
தொங்கி நின்று

ஏளனமாய்
எம்மை பார்த்து 
சிரித்தபடி சொல்கிறது 
கையில் இப்போ 
எந்தப் பலமும் 
இல்லாத நீங்கள் 
காத்திருங்கள் காத்திருங்கள்
பொன் முட்டைகள் போடும் 
வரை காத்திருங்கள் 
என்றபடியே

மீண்டும் வேதாளம்
13 ஐ சுமந்தபடி
முருங்கை மரத்தில்
தொங்கி நிற்கும்.

பா.உதயன் ✍️

கீழ் காணும் கவிதை இன்னும் ஒரு முறை நினைவூட்ட பல மாதங்களுக்கு முன் இந்திய வெளி விவகார அமைச்சர் வந்து 13 ம் தீர்வை வலியுறுத்திய போது நான் எழுதிய கவிதை. இம் முறையும் இவர் போலவே கூறிச் சென்றிருக்கிறார் வெளி விவகார அமைச்சின் செயலாளர் இலங்கை வந்து. வருவதும் போவதுமாய் 13 ம் சரத்து தமிழர் தீர்வை வலியுறுத்துவதுமாய் இந்தியா ஆனால் எந்தத் தீர்வும் இலங்கை கொடுத்ததாய் இல்லை. இந்தியாவுக்கு ஏதாவதை கொடுத்து எங்களுக்கானதை கொடுக்க மறுக்கிறது இலங்கை. கொடுத்ததை பெற்றுச் சென்றிருக்கிறது இந்தியா. ஏதாவது தமிழருக்கு கொடுங்கள் என்றே சொல்லிவிட்டு 

விக்கிரமாதித்தனும் 13ம் கதையும்-பா.உதயன் 

எந்தத் தீர்வையும் 
ஈழத் தமிழனிடம்
கேட்க்காமல் 
இந்தியா போட்ட 
பிச்சை இது 

இன்னும் கிடந்து 
இழுக்குது சேடம் 
ஆயிரம் தடவை 
இந்தியா சொல்லியும் 
இலங்கை இதுக்கு 
மசிவதாய் இல்லை

ஏதோ புலி தான் 
மறுத்தினம் என்றால் 
இப்பவும் ஏன் தான் 
மறுக்கினம் கொடுக்க 

13 ம் பெட்டியோடு வந்த 
பெரியண்ணை தலையில்  
பிறத்தாலே நின்று 
துவக்கால அடிச்சும் 
சிங்களம் சொன்னது 

இந்தத் தீவில் 
எந்தத் தீர்வும் 
எப்பவும் இல்லை என்று 
அப்பவே சொன்னது 

விக்கிரமாதித்தன் 
கதையைப் போல
சற்றும் மனம் 
தளராத இந்தியா 
சந்திக்கும் பொழுதெல்லாம் 
13 ம் கதையை 
பல தடவை சொல்லும் 

இழுத்து வந்து வேதாளத்தை 
தலையில் சுமக்கும் 
கதையைப்போலே 

இதுக்கு மேலாய் 
கொடுப்போம் என்று 
இந்தியாவை மடக்கும் 
இலங்கை இராஜதந்திரம் 

இப்ப இன்னும் 
கடினம் கொஞ்சம் 
இந்தியா நினைச்சது போல் 
இந்து சமுத்திரம் இல்லை 

இனி வரும் காலம் 
சீனா காலமாம் 
இலங்கை இப்போ 
இவன் பக்கம் சாயல் 

இந்தியா நினைப்பது 
போல எதுகும் இல்லை 
எல்லா பக்கமும் 
றகன் வந்து குந்துது 

இத்தனை ஆண்டாய் 
கடத்திய இலங்கை 
அவிபிருத்தி ஒன்றே 
காணும் தமிழனுக்கு என்று 
ஆளுக்கு ஒரு 
அமைச்சு கொடுத்து 
அதிகாரப் பகிர்வை 
அடக்கியே வைத்தது 

ஆன இன்றும் கூட 
இதுகும் இல்லை 
அதுகும் இல்லை 
எதுகும் நடந்ததாய் 
இல்லை 

இன்னும் ஒரு முறை 
இந்தியா வரும் 
அப்பவும் அந்த 
13க் கதை வரும் 
இப்பவும் ஒன்றும் 
தெரியாது போல 
சீனா பார்வையோட 
சிங்கம் உறுமும்.

பா.உதயன் ✍️


“You have to learn the rules of the game. And then you have to play better than anyone else.”

― Albert Einstein

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/10/2021 at 16:03, uthayakumar said:


எவரை எவர் ஏமாத்துகின்றனர்

வளமை போலவே
இந்த முறையும்
இந்திய அதிகாரி
அதே 13 க் கதையை
சொல்லிப் போனார்

எத்தனை முறை
சொன்னார்கள் என்று
எனக்கு ஞாபகம் இல்லை
ஆனால் முப்பது வருட
கதை இது

இத்தனை வருடமாக
இந்தியாவை ஏமாத்த
இலங்கைக்கு மட்டும் தெரியும் 
இது சிங்கள இராஜதந்திரம் 

முப்பது வருடமாய்  
ஈழத் தமிழனை ஏமாத்த
இந்தியாவுக்கும் 
இலங்கைக்கும்
மட்டும் தெரியும் 
இது இன்னும் 
ஒரு இராஜதந்திரம் 

இனி வரும் காலமும் 
இன்னும் ஒரு பொருளாதார 
ஓப்பந்தம் எழுத
இந்திய அதிகாரிகள் 
மீண்டும் வருவார்கள் 
அப்பவும் இன்னும் ஒரு முறை
நினைவூட்டுவர் 
அந்த 13 க் கதையை
சற்றும் மனம் தளராத 
விக்கிரமாதித்தன் 
கதை போலே 

 மீண்டும் வேதாளம்
13 ஐ சுமந்தபடி
முருங்கை மரத்தில்
தொங்கி நின்று

ஏளனமாய்
எம்மை பார்த்து 
சிரித்தபடி சொல்கிறது 
கையில் இப்போ 
எந்தப் பலமும் 
இல்லாத நீங்கள் 
காத்திருங்கள் காத்திருங்கள்
பொன் முட்டைகள் போடும் 
வரை காத்திருங்கள் 
என்றபடியே

மீண்டும் வேதாளம்
13 ஐ சுமந்தபடி
முருங்கை மரத்தில்
தொங்கி நிற்கும்.

பா.உதயன் ✍️

கீழ் காணும் கவிதை இன்னும் ஒரு முறை நினைவூட்ட பல மாதங்களுக்கு முன் இந்திய வெளி விவகார அமைச்சர் வந்து 13 ம் தீர்வை வலியுறுத்திய போது நான் எழுதிய கவிதை. இம் முறையும் இவர் போலவே கூறிச் சென்றிருக்கிறார் வெளி விவகார அமைச்சின் செயலாளர் இலங்கை வந்து. வருவதும் போவதுமாய் 13 ம் சரத்து தமிழர் தீர்வை வலியுறுத்துவதுமாய் இந்தியா ஆனால் எந்தத் தீர்வும் இலங்கை கொடுத்ததாய் இல்லை. இந்தியாவுக்கு ஏதாவதை கொடுத்து எங்களுக்கானதை கொடுக்க மறுக்கிறது இலங்கை. கொடுத்ததை பெற்றுச் சென்றிருக்கிறது இந்தியா. ஏதாவது தமிழருக்கு கொடுங்கள் என்றே சொல்லிவிட்டு 

விக்கிரமாதித்தனும் 13ம் கதையும்-பா.உதயன் 

எந்தத் தீர்வையும் 
ஈழத் தமிழனிடம்
கேட்க்காமல் 
இந்தியா போட்ட 
பிச்சை இது 

இன்னும் கிடந்து 
இழுக்குது சேடம் 
ஆயிரம் தடவை 
இந்தியா சொல்லியும் 
இலங்கை இதுக்கு 
மசிவதாய் இல்லை

ஏதோ புலி தான் 
மறுத்தினம் என்றால் 
இப்பவும் ஏன் தான் 
மறுக்கினம் கொடுக்க 

13 ம் பெட்டியோடு வந்த 
பெரியண்ணை தலையில்  
பிறத்தாலே நின்று 
துவக்கால அடிச்சும் 
சிங்களம் சொன்னது 

இந்தத் தீவில் 
எந்தத் தீர்வும் 
எப்பவும் இல்லை என்று 
அப்பவே சொன்னது 

விக்கிரமாதித்தன் 
கதையைப் போல
சற்றும் மனம் 
தளராத இந்தியா 
சந்திக்கும் பொழுதெல்லாம் 
13 ம் கதையை 
பல தடவை சொல்லும் 

இழுத்து வந்து வேதாளத்தை 
தலையில் சுமக்கும் 
கதையைப்போலே 

இதுக்கு மேலாய் 
கொடுப்போம் என்று 
இந்தியாவை மடக்கும் 
இலங்கை இராஜதந்திரம் 

இப்ப இன்னும் 
கடினம் கொஞ்சம் 
இந்தியா நினைச்சது போல் 
இந்து சமுத்திரம் இல்லை 

இனி வரும் காலம் 
சீனா காலமாம் 
இலங்கை இப்போ 
இவன் பக்கம் சாயல் 

இந்தியா நினைப்பது 
போல எதுகும் இல்லை 
எல்லா பக்கமும் 
றகன் வந்து குந்துது 

இத்தனை ஆண்டாய் 
கடத்திய இலங்கை 
அவிபிருத்தி ஒன்றே 
காணும் தமிழனுக்கு என்று 
ஆளுக்கு ஒரு 
அமைச்சு கொடுத்து 
அதிகாரப் பகிர்வை 
அடக்கியே வைத்தது 

ஆன இன்றும் கூட 
இதுகும் இல்லை 
அதுகும் இல்லை 
எதுகும் நடந்ததாய் 
இல்லை 

இன்னும் ஒரு முறை 
இந்தியா வரும் 
அப்பவும் அந்த 
13க் கதை வரும் 
இப்பவும் ஒன்றும் 
தெரியாது போல 
சீனா பார்வையோட 
சிங்கம் உறுமும்.

பா.உதயன் ✍️


“You have to learn the rules of the game. And then you have to play better than anyone else.”

― Albert Einstein

 

9-1536392463.jpg

பகிர்வதற்கு நன்றிகள் தோழர்.👌

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு விழிப்புண‌ர்வு  குறைய‌ இவ‌ர்க‌ளின் ஆட்ட‌ம் இன்னும் சிறிது கால‌ம் தான் கைபேசி மூல‌ம் வ‌ள‌ந்த‌ பிளைக‌ளிட‌ம் 1000 2000ரூபாய் எடுப‌டாது...................... நாட்டு ந‌ல‌ன் க‌ருதி யார் உண்மையா செய‌ல் ப‌டுகின‌மோ அவைக்கு தான் ஓட்டு..............................
    • அதுதான்…. இல்லை. அந்தச் சனத்துக்கு சாராயத்தை விற்று, அந்த மண்ணின் கனிம வளங்களை சுரண்டி… அரசியல்வாதிகள் தான்  முன்னேறிக் கொண்டு இருக்கிறார்கள்.
    • இப்ப‌டி ப‌ல‌ரின் பெய‌ர் வாக்க‌ள‌ர் ப‌ட்டிய‌லில் இல்லை புல‌வ‌ர் அண்ணா..........................நாம் த‌மிழ‌ர் க‌ட்சி பெடிய‌ன் சொந்த‌ ஊரில் ப‌ல‌ வாட்டி ஓட்டு போட பெடிய‌னுக்கு நீ இந்த‌ ஊரில் போட‌ முடியாது வேறு ஊரில் போய் போட‌ சொல்ல‌ அந்த‌ பெடிய‌ன் 40கிலே மீட்ட‌ர் மோட்ட‌ சைக்கில‌ சென்று ஓட்டு போட்ட‌து அந்த‌ பெடிய‌ன் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் வ‌ள‌ர்சிக்கு பெரிய‌ பங்காற்றினது...................... காணொளி ஆதார‌ம் இதோ..........................................     இந்த‌ பெடிய‌னுக்கும் மேடையில் பேசிக்கு கொண்டு இருக்கும் போது திராவிட‌ குண்ட‌ர்க‌க் இந்த‌ பெடிய‌னுக்கு அடிக்க‌ மேடை ஏறின‌வை ஆனால் இந்த‌ பெடிய‌ன் நினைத்து இருந்தால் திராவிட‌ குண்ட‌ர்க‌ளை அடிச்சு வீழ்த்தி இருப்பார்..................வ‌ய‌தான‌ கிழ‌டுக‌ள் திமுக்காவில் அராஜ‌க‌ம் செய்துக‌ள்.................இப்ப‌டி ஒவ்வொரு த‌ரின் ஓட்டு உரிமைக்கு தேர்த‌ல் நேர‌ம் வேட்டு வைப்ப‌து ப‌ய‌த்தின் முத‌ல் கார‌ண‌ம்........................விடிய‌ல் ஆட்சி எப்ப‌ க‌வுழுதோ அப்ப‌ தான் த‌மிழ் நாட்டில் மீண்டும் அட‌க்குமுறை இல்லாம‌ ஊட‌க‌த்தில் இருந்து ஓட்டு உரிமையில் இருந்து எல்லாம் நேர்மையா ந‌ட‌க்கும்.......................................................................
    • என் வாக்கை திருடியது யார் ?     தோல்விக்கு இப்பவே நாடகம் போடுகின்றார்கள் என ஒரு கூட்டம் சொல்லும் 😂
    • அமெரிக்காவின் எழுதப்பட்ட சாசனத்தை ட்ரம்ப் மீறுவதால் ஆயிரம் யூரிகளும் உருவாக்கப்படுவர். என்ன ஒன்று.... டொனால்ட் ரம்ப் அடுத்த தேர்தலில் வேற்றியீட்டி அந்த நான்கு வருடத்தில் எதையுமே சாதிக்கப்போவதில்லை. எனவே கலக,அழிவின் உச்சம் பெற்றவன் மீண்டும் ஆட்சிக்கு வந்து  உலகம் அழிந்து போவதே சிறப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.