Jump to content

உலக மனநல தினம்: மனநல சிகிச்சை – நீங்கள் எங்கு எப்படி இருக்கிறீர்கள் என்பதை பொறுத்தது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உலக மனநல தினம்: மனநல சிகிச்சை – நீங்கள் எங்கு எப்படி இருக்கிறீர்கள் என்பதை பொறுத்தது

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
பீட்டர்ஸ்பெர்கில் உள்ள மருத்துவமனை

பட மூலாதாரம்,ALAMY

 
படக்குறிப்பு,

பீட்டர்ஸ்பெர்கில் உள்ள மருத்துவமனை

அக்டோபர் 10ஆம் தேதி உலக மனநல தினம். இந்த தினம் மனநலம் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்க அனுசரிக்கப்படுகிறது.

உலக மனநல கூட்டமைப்பால் இந்த ஆண்டிற்கான கருப்பொருள் `சமநிலையற்ற உலகில் மனநலம்` என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குறைந்த அல்லது நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் உள்ள 75% - 95% பேர் மனநலம் தொடர்பான சேவைகளை அணுகமுடிவதில்லை என இந்த கூட்டமைப்பு தெரிவிக்கிறது. இருப்பினும் வளர்ந்த நாடுகளில் உள்ளவர்களும் கூட மனநலம் தொடர்பான சேவைகள் பெறுவதில் சிரமப்படுகின்றனர்.

பல்வேறு நாடுகளை சேர்ந்த, முன்னர் நோயாளியாக இருந்தவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை பார்த்து கொண்டு இருந்த ஒருவர் மற்றும் மன நில மருத்துவர் ஆகியோரிடம் பிபிசி பேசியது. மனநலம் தொடர்பான சிகிச்சைகளையோ அல்லது சேவைகளையோ பெறுவதில் என்ன சிக்கல் என்பதை அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.

நோயாளி: `அடையாள அட்டை இல்லை என்பதால் சிகிச்சை இல்லை`

திருச்செல்வி

பட மூலாதாரம்,P. THIRUCHELVI

தமிழ்நாட்டின் கூடலூரை சேர்ந்தவர் திருச்செல்வி, இவருக்கு திருமணம் நடைபெற்றவுடன் அவரின் கணவர் திருச்செல்வியை துன்புறுத்த தொடங்கியுள்ளார். என்ன நடந்தது என்பதை நினைவு கூர்வதும் திருச்செல்விக்கு துயரத்தை தந்தது.

திருச்செல்விக்கு ஒரு மகன் உள்ளார். 2009ஆம் ஆண்டு திருச்செல்வி தனது கணவரின் துன்புறுத்தலால் மனநலப் பிரச்னைக்கு ஆளானார். எனவே அவரின் கணவர் திருச்செல்வியை விட்டுச் சென்றுவிட்டார்.

திருச்செல்வியும் அவரது மகனும், வீடில்லாமல், கையில் பணம் ஏதும் இல்லாமல் தவித்து நின்றனர். அவர் யார் என்று அடையாளப்படுத்திக் கொள்ள அவருக்கு எந்த ஆவணமும் இல்லை.

திருச்செல்வி அதீத மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவருக்கு ஆதரவு வழங்க யாரும் இல்லை.

ஏழை மக்கள் மனநலம் தொடர்பான சுகாதார சேவைகளை பெறுவதற்கு கிராம மக்களுடன் பணியாற்றுகிறார் திருச்செல்வி

பட மூலாதாரம்,P. THIRUCHELVI

 
படக்குறிப்பு,

ஏழை மக்கள் மனநலம் தொடர்பான சுகாதார சேவைகளை பெறுவதற்கு கிராம மக்களுடன் பணியாற்றுகிறார் திருச்செல்வி

இந்தியாவில் அடையாள அட்டை இல்லையெனில் அரசின் சுகாதார சேவைகளை பெறுவதும் கடினம்.

திருச்செல்வியை பொறுத்தவரை அவருக்கு என்று ஒரு நிரந்தர விலாசமும் இல்லை எனவே அவருக்கு அடையாள அட்டை பெறுவதும் கூட சிரமமாக இருந்தது.

நாளுக்கு நாள் திருச்செல்வியின் மன நலம் மோசமடைந்தது.

"எனக்கு என்ன செய்வதென்றோ அல்லது எங்கு செல்வது என்றோ புரியவில்லை. ஒரு கட்டத்தில் நான் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தேன்," என்கிறார் திருச்செல்வி.

எப்படியோ திருச்செல்வி சென்னை வந்தார். அங்கு அவர் `பான்யன்` என்ற தொண்டு அமைப்பின் கண்ணில் பட்டார்.

அந்த சமயத்தில் அந்த தொண்டு நிறுவனம் வீடில்லாதவர்கள் நலன் குறித்து பணியாற்றி கொண்டிருந்தது.

அந்த தொண்டு நிறுவனத்தின் உதவியோடு திருச்செல்வி மற்றும் அவரது மகனின் வாழ்க்கை சற்று மேம்பட்டது. அவர் ஒரு விடுதியில் தங்க வைக்கப்பட்டார். பின் அவருக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

Thiruchelvi now works with local communities

பட மூலாதாரம்,THIRUCHELVI

இன்று அவர் சுதந்திரமாக வாழ்கிறார். அதுமட்டுமல்லாமல் மன நிலம் தொடர்பான சிகிச்சை தேவைப்படுவோருக்கு அது தொடர்பான நிறுவனங்களுடன் தொடர்பு ஏற்படுத்தி தருகிறார்.

அதேபோன்று மன நலம் பாதிக்கப்பட்ட பெற்றோரின் குழந்தைகளுக்காக பணியாற்றி வருகிறார். அவர்களுக்கு சிகிச்சை கிடைப்பதற்கான வழிகளை ஏற்படுத்தி கொடுக்கிறார்.

கவனித்து கொண்டவர்; `என்ன உதவி கிடைக்கும்?`

Philippa Reekie

பட மூலாதாரம்,PHILIPPA REEKIE

 
படக்குறிப்பு,

ஃபிலிப்பா ரீக்கி

தென் ஆப்ரிக்காவில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் மனநலம் சார்ந்த பிரச்னைகளால் அவதிப்படுகின்றனர் என அந்நாட்டின் மன நலம் தொடர்பான செயற்பாட்டாளர் பிலிப்பா ரீக்கி தெரிவிக்கிறார்.

குறிப்பாக 15-25 வயதுக்குட்பட்டோர் இடையே ஒவ்வொரு வருடமும் தற்கொலை எண்ணிக்கைகள் அதிகரித்து வருவதாக அவர் தெரிவிக்கிறார்.

ஆனால் மனநல சுகாதார பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. அதேபோன்று போதுமான அளவில் மனநல மருத்துவர்களும் இல்லை.

தென் ஆப்ரிக்காவில் மன நலத்திற்கென வெறும் 22 நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. அதில் பல மோசமான நிலையில் உள்ளன என்கிறார் ரீக்கி

இந்த நிறுவனங்களில் நிதி கையாடல்கள் நடப்பதாகவும், ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும் தென் ஆப்ரிக்க மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

அதேபோன்று பொது மருத்துவமனைகளிலும் மனநல சிகிச்சைக்கென வருவோருக்கென வசதிகள் இல்லை.

"மனநல நோயாளிகளுக்கென ஒழுங்கான கழிவறைகள் இல்லை. மன நல வார்டுகளில் உள்ள கழிவறைகள் தனிப்பட்ட முறையில் இருக்காது. பல மருத்துவமனைகளில் மன நல நோயாளிகளுக்கென போதுமான மருத்துவமனை கிடையாது." என்கிறார் அவர்.

பல நாட்டில் உள்ளது போன்றே இங்கேயும் மன நலம் தொடர்பான தவறான புரிதல்கள் உள்ளன. எனவே தேவைப்படுவோர் பலர் உதவிகளை கோருவதில்லை.

"ஆனால் கேள்வி என்னவென்றால் உதவி கோரப்பட்டாலும் அது கிடைக்குமா என்பதுதான்" என்கிறார் ரீக்கி

மன நல மருத்துவர்: `பத்து நிமிடத்திற்கு ஒரு நோயாளியை பார்க்க வேண்டும்`

ரஷ்ய மருத்துவமனை

பட மூலாதாரம்,ANDREY BESSONOV

வீரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ரஷ்யாவில் 45 வருடங்களாக மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

தற்போது அவர் அரசு சுகாதார மையம் ஒன்றில் மன நல மருத்துவராக பணியாற்றி வருகிறார். தனியார் கிளினிக் ஒன்றிலும் பணியாற்றுகிறார். அவர் தொழில்முறை காரணங்களுக்காக தனது விவரத்தை வெளியிட விரும்பவில்லை.

ரஷ்யாவில் மனநலம் தொடர்பான அருமையான சுகாதார வசதிகள் இருக்கின்றன என்று பிபிசியிடம் தெரிவித்த வீரா, ஆனால் பெரும்பாலும் அது பணக்காரர்களுக்கு மட்டும் என்று தெரிவித்தார்.

மாஸ்கோவில் முந்தைய காலங்களை காட்டிலும் தற்போது அதிக எண்ணிக்கையிலான மன நல மருத்துவர்கள் இருக்கலாம் ஆனால் ஏழைகளுக்கான போதைய சேவைகள் கிடைப்பதில்லை என்று அவர் தெரிவிக்கிறார்.

"சோவியத் காலத்தில் வெகுசில மனநல மருத்துவர்களே இருந்தனர்." என்று பிபிசியிடம் தெரிவித்தார். "ஆனால் இப்போது ஓவ்வொரு கிண்டர்கார்டன் மற்றும் பள்ளியில் ஒரு மனநல மருத்துவர் உள்ளார்" அவர்களின் சேவை இலவசம்தான் என்கிறார் வீரா.

ஆனால் இதன் அர்த்தம் அனைவரும் சிறப்பான சேவையை அணுக முடியும் என்பதில்லை என்கிறார் வீரா.

வீரா பணிபுரியும் தனியார் கிளினிக்கில் ஒரு நாள் பணியில் 4-10 நோயாளிகளை பார்த்தால் போதும். ஒவ்வொரு நோயாளிக்கும் குறைந்தது 30 நிமிடம் ஒதுக்க வேண்டும். ஆனால் அரசு சுகாதார மையத்தில் ஒரு நாள் பணியில் 40 நோயாளிகளை பார்க்க வேண்டும். "ஒரு நோயாளிக்கு வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே வழங்க வேண்டும்" என்கிறார் அவர்.

இலவசமாக மனநல சேவைகளை வழங்குவோருக்கு ஒன்றும் கிடைப்பதில்லை. ஆனால் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் சுகாதார பணியாளர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது என்கிறார்.

"இப்போது அனைவரும் பணத்தின் பின்னால் ஓடுகின்றனர். தனியார் மருத்துவமனைகள் அதிக செலவாகும். எனவே எல்லாரும் அதை அணுக முடியாது." என மருத்துவர் வீரா தெரிவிக்கிறார்.

"பள்ளிகளில் மனநல மருத்துவர்கள் இருந்தாலும் மாறி வரும் நவீனகால சூழலில் குழந்தைகள் அதிகப்படியான மனநல பிரச்னைகளுக்கு ஆளாகும் நிலையில் 1000 குழந்தைகளுக்கு ஒரு மனநல மருத்துவர் என்பது போதாது," என்கிறார் வீரா.

"தற்போதைய சூழலில் ஏற்படும் பிரச்னைகளுக்கு மேலும் மேலும் பல மனநல மருத்துவர்கள் தேவை," என வீரா நம்புகிறார்.

மனநலம் பாதிக்கப்பட்டவரின் தாய்

ரேச்சல் மற்றும் அவரின் மகள்

பட மூலாதாரம்,ANDREW FOX

 
படக்குறிப்பு,

ரேச்சல் மற்றும் அவரின் மகள்

ரேச்சல் பானிஸ்டரின் மூத்த மகளுக்கு மனநல அறிகுறிகள் தென்பட்டது. ஆனால் அவர் உணவு உண்பதில் குறைபாடுகள் ஏற்பட்டன. இங்கிலாந்தின் நாட்டிங்ஹாம்ஷைரில் வசிக்கிறார் இவர். ஆனால் இவர் மகளின் சிகிச்சைக்கு சுமார் 500 கிமீட்டர் வரை பயணம் செய்ய நேர்ந்தது.

"சுகாதார ஊழியர்கள் அதிக மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். எனவே பலர் உடல்நிலை சரியில்லாமல் விடுப்பில் செல்கின்றனர். எனவே மருத்துவர்களை காண அரிதாகவே அனுமதி கிடைக்கின்றன." என்கிறார் ரேச்சல்.

ரேச்சல் மகளின் உணவு குறைப்பாடு நாளுக்கு நாள் மோசமடைந்தது. அவர் எடை குறைய தொடங்கினார். அவரின் மொத்த உடல் நலமும் பாதிக்கப்பட்டது.

ரேச்சல் மற்றும் அவரின் மகள் அவர்களது வீட்டில் இருந்து 80 கிமீ தொலைவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். அதன்பின் இரண்டாவதாக 160கிமீட்டர் தொலைவில் அனுப்பப்பட்டனர் அதன்பின் 500கிமீ தூரத்தில் ஸ்காட்லாந்திற்கு விமான பயணத்தில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

மருத்துவமனையில் தனது மகளை விட்டுவிட்டு வந்தபோது தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று தனக்கு தோன்றியதாக ரேச்சல் கூறுகிறார்.

தனது வீட்டின் அருகாமையிலேயே இவ்வாறு ஒரு மருத்துவ வசதியை பெற முடியாததற்கு காரணம் அரசு போதிய அளவில் நிதி வழங்காமை மற்றும் சுகாதார சேவைகளுக்கான நிதியை பிரிட்டிஷ் அரசாங்கம் குறைத்தவையே காரணம் என ரேச்சல் புரிந்து கொண்டார்.

ரேச்சலின் சூழல் குறித்து பதிலளித்த பிரிட்டன் சுகாதாரத் துறை, சிகிச்சைக்காக குழந்தைகளை தொலைதூரத்தில் விட்டு விட்டு வரும் துயரத்தை முடிவுக்கு வரும் பணியில் முழுவதுமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

ரேச்சல்

பட மூலாதாரம்,ANDREW FOX

சமமின்மை மற்றும் ஊதிய குறைப்பு

உலகின் ஏழை நாடுகளை காட்டிலும் பணக்கார நாடுகள் மனநலம் தொடர்பான சுகாதார சேவையில் ஒரு நபருக்கு 650 மடங்கு பணம் செலவழிக்கின்றன என சமீபத்திய உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

இருப்பினும் அதே அறிகையில் உலகின் பணக்கார நாடுகள் 2017 - 2020 கால கட்டத்தில் மனநல மருத்துவமனைகளில் ஒரு தனி நபருக்கு செய்யும் செலவு பாதியாக குறைந்துள்ளது என தெரிவித்துள்ளது.

ராயல் காலேஜ் ஆஃப் சைகாட்ரிக்ஸ் கல்லூரியின் மருத்துவர் ட்ரூடி, பிரிட்டன் போன்ற வளர்ந்த நாடுகளிலும்கூட மனநல தொடர்பான பிரச்னைகளுக்கு போதுமான கவனம் கொடுப்பதில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் மனநலம் சார்ந்த பிரச்னைகளை பேசுவதற்கு மக்கள் இன்னும் தயங்குகிறார்கள் என்று தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/global-58845450

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.