Jump to content

புலம்பெயர் தமிழ் மக்களுக்கு அண்மையில் ஜனாதிபதி விடுத்த அழைப்பை வரவேற்கிறேன் – குமரன் பத்மநாதன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழ் மக்களுக்கு அண்மையில் ஜனாதிபதி விடுத்த அழைப்பை வரவேற்கிறேன் – குமரன் பத்மநாதன்

புலம்பெயர் தமிழ் மக்களுக்கு அண்மையில் ஜனாதிபதி விடுத்த அழைப்பை வரவேற்பதாக தெரிவித்த அவர், இந்த வாய்ப்பை நழுவவிடாமல் படிப்படியாக கைகோர்த்து பயணிக்க வேண்டும் என புலிகள் அமைப்பின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளராக இருந்த குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

இறுதி யுத்த காலத்தில் தான் மலேசியாவில் தலைமறைவாகியிருந்த போது தன்னிடம் எந்த சொத்தையும் புலிகள் வழங்கியிருக்கவில்லை எனவும் அவர் கூறினார். அவ்வாறு சொத்து இருத்திருந்தால் இந்த அழிவில் இருந்து மக்களை காப்பாற்றி இருப்பேன் என கிளிநொச்சி – செஞ்சோலையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.(15)

 

 

http://www.samakalam.com/புலம்பெயர்-தமிழ்-மக்களுக/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தாளையும் கோத்தா போட்டு தள்ளியிட்டார்  என்றார்கள் ஆள் இருக்கிறார் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, கிருபன் said:

இறுதி யுத்த காலத்தில் தான் மலேசியாவில் தலைமறைவாகியிருந்த போது தன்னிடம் எந்த சொத்தையும் புலிகள் வழங்கியிருக்கவில்லை எனவும் அவர் கூறினார்

சாதாரண அரசியல் கைதிகள் இன்னும் சிறையில் விடிவிற்காக காத்திருக்க, இவர்மட்டும் எப்படி வெளியில் சுதந்திரமாய் இருந்து கருத்து வெளியிடுகிறார்? அன்றைய காலகட்டத்தில் எதிர்க்கட்ச்சிகள் இவரிடம் இருந்து பெற்ற பணத்திற்கு என்ன நடந்தது?  இவரிடம் இருந்து பெற்ற பணத்திற்காகவே இவரை தண்டனையில்லாமல் வெளியே விட்டிருக்கிறார்கள் என்று கேள்வியும் எழுப்பியிருந்தனர். எல்லாம் திட்டம் போட்டு வலையில் விழுந்துவிட்டு, இப்போ பரம சாதுபோல் கதைக்கிறார் இவர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரபல்யமான புலி தலைவர்கள் (சரணடைந்தவர்கள்) இன்று வரை எங்கே என்று தெரியாது. அண்ணை மட்டும் தானாய் பிடி படுகிறாராம். தானாய் கருத்து சொல்கிறாராம். 

 

இவர் புலிகளின் பணத்தை கோத்தபாயவிடம் கொடுத்து உயிர்பிச்சை எடுத்துள்ளார். புலிகளை றோவுக்கு காட்டியும் கொடுத்துள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளால் எவ்வித சொத்துக்களும் வழங்கப்படவில்லை, அவை இருந்திருந்தால் மக்களை காப்பாற்றி இருப்பேன் – கேபி

புலிகளால்... எவ்வித சொத்துக்களும் வழங்கப்படவில்லை, அவை இருந்திருந்தால் மக்களை காப்பாற்றி இருப்பேன் – கேபி

யுத்தம் முடிவடைந்த போது தமிழீழ விடுதலைப் புலிகளால் தனக்கு எவ்வித சொத்துக்களும் வழங்கப்படவில்லை என புலிகள் அமைப்பின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளராக குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி – செஞ்சோலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இறுதி யுத்த காலத்தில் தான் மலேசியாவில் தலைமறைவாகியிருந்த போது தன்னிடம் எந்த சொத்தையும் புலிகள் வழங்கியிருக்கவில்லை எனவும் அவர் கூறினார்.

அவ்வாறு சொத்து இருத்திருந்தால் இந்த அழிவில் இருந்து மக்களை காப்பாற்றி இருப்பேன் என்றும் குமரன் பத்மநாதன் குறிப்பிட்டார்.

இதேவேளை புலம்பெயர் தமிழ் மக்களுக்கு அண்மையில் ஜனாதிபதி விடுத்த அழைப்பை வரவேற்பதாக தெரிவித்த அவர், இந்த வாய்ப்பை நழுவவிடாமல் படிப்படியாக கைகோர்த்து பயணிக்க வேண்டும் எனவும் என்றும் தெரிவித்தார்.

https://athavannews.com/2021/1243792

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாவிகளையும், கருத்து தெளிவு இல்லாதவர்களையும், தன்மானம் அற்றவர்களையும், பாசாங்கு அரசியல் வித்தைகளை செய்யும் அரசியல் அயோக்கியர்களும் உங்களை போன்றோரை நம்புவார்கள்.


அதோட உங்களின் தொழில் ரகசியத்தை சொன்னால் நம்புவார்கள் முடிந்தால் தெரியப்படுத்துங்கள்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இப்பொழுது கே பியை ஏச வேண்டும்? அவர் தன்னல் முடித்ததை சிறுவர் இல்லத்தில் இருந்து செய்கின்றார் 
இவர் குப்பி கடித்திருந்தால் தியாகியாக்ப்படிருப்பாரா? வெளினாட்டில் புலிகளின் சொத்துக்களை ஆட்டையை போட்டவர்கள் காரில் போகும் போது ஏன் தட்டிக் கேட்க கூடாது? 

இப்படி எழுதுவதனால் நான் சிங்கள்வனுக்கு சப்போர்ட் அல்ல‌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, colomban said:

ஏன் இப்பொழுது கே பியை ஏச வேண்டும்? அவர் தன்னல் முடித்ததை சிறுவர் இல்லத்தில் இருந்து செய்கின்றார் 
இவர் குப்பி கடித்திருந்தால் தியாகியாக்ப்படிருப்பாரா? வெளினாட்டில் புலிகளின் சொத்துக்களை ஆட்டையை போட்டவர்கள் காரில் போகும் போது ஏன் தட்டிக் கேட்க கூடாது? 

இப்படி எழுதுவதனால் நான் சிங்கள்வனுக்கு சப்போர்ட் அல்ல‌

நல்ல கேள்விகள், ஆனால் பிழையான இடத்தில் கேட்கிறீர்கள்!

புலம் பெயர் நாடுகளில் இன்னும் சொத்துக்களைப் பதுக்கி வைத்திருப்போரைப் பற்றிப் பேசினால் இங்கே சில உறுப்பினர்களுக்கு அலர்ஜியாகி விடும்!

ஆனால்,  சிறிதளவாவது நல்ல காரியம் செய்து கொண்டிருக்கும் கே.பி யைத் திட்ட வரிசையில் வருவர்! அங்க நிக்கிறான் எங்கள் புலம்பெயர்ந்த தமிழன்!😎

Link to comment
Share on other sites

17 hours ago, satan said:

அன்றைய காலகட்டத்தில் எதிர்க்கட்ச்சிகள் இவரிடம் இருந்து பெற்ற பணத்திற்கு என்ன நடந்தது? 

இவ்வளவு உறுதியாக இப்படி பணம் மாற்றப்பட்டது பற்றி நீங்கள் எழுதுவதால் எனக்கு வரும் சத்தேகம் அந்த பணத்தை ஏப்பம் விட்டவர் நீங்களோ அல்லது உங்கள் உறவினரா என்பதாகவே இருக்கிறது. இதனை ஆதாரத்துடன் உங்களால் மறுக்க முடியுமா? நீங்கள் மறுக்க முடியாது என்பதே எனது முடிவு.

17 hours ago, kalyani said:

இவர் புலிகளின் பணத்தை கோத்தபாயவிடம் கொடுத்து உயிர்பிச்சை எடுத்துள்ளார். புலிகளை றோவுக்கு காட்டியும் கொடுத்துள்ளார்.

இந்த புலிகள் பணத்தை கையாண்டதில் உங்கள் பாகத்தையும் எழுதுங்கள்.

12 hours ago, MullaiNilavan said:

அதோட உங்களின் தொழில் ரகசியத்தை சொன்னால் நம்புவார்கள் முடிந்தால் தெரியப்படுத்துங்கள்.
 

அவரின் தொழில் இரகசியத்தை கேட்பதில் இருந்து வெளியாவது நீங்களும் அந்த தொழில் செய்வதாகவே தெரிகிறது.

6 hours ago, Justin said:

புலம் பெயர் நாடுகளில் இன்னும் சொத்துக்களைப் பதுக்கி வைத்திருப்போரைப் பற்றிப் பேசினால் இங்கே சில உறுப்பினர்களுக்கு அலர்ஜியாகி விடும்!

அதற்கான காரணம் இந்த அலர்ஜியாபவர்கள் அந்த பதுக்கலில் பங்காளிகளாக இருப்பதே. அதில் சந்தேகமே இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@கற்பகதரு மற்றவர்களிடம் ஆதாரம்  கேட்கும் தாங்கள் அந்த கனடா விசயத்தை மறந்திட்டீங்க

கேபி என்ன செய்தார் என்பது வெள்ளிடை மலை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேபியின் தகவல்கள் மூலம் புலிகள் பயன்படுத்திய பல கப்பல்கள் இலங்கை துறைமுகம்வரை இழுத்து வரபட்டபோதே அனைத்துமே தெளிவாகிவிட்டது புலிகள் சொத்து தொடர்பான விஷயங்களில் என்னதான் முடிவில் ராஜபக்ச சகோதரர்களுக்கும் கேபிக்கும் இடையில் நடந்திருக்கும் என்பது.

இறுதி போரின் பின்னர் புலிகளின் சார்பில்  கேபி வசமிருந்த   பெரும் பண பரிமாற்றங்கள் அனைத்தும் ராஜபக்ச குடும்பம் பக்கம் திருப்பிவிடப்பட்டுவிட்டது, அதற்கு சன்மானமாகவே கேபியின் உயிர் விட்டு வைக்கப்பட்டிருக்கிறது என்பதை பாமரனும் அறிவான்.

இது தவறா சரியா என்பதுக்கான விவாதம் எல்லாம் நடத்த முடியாது, சூழ்நிலை கைதியாக ஆகிவிட்ட ஒரு மனிதன் இப்படித்தான் இருப்பான்.

சூழ்நிலை கைதியாக இல்லாமல் இருந்தபோதே ராஜபக்ச குடும்பம் உட்பட்ட சிங்கள ஆதிக்கவாதிகளுடன் கைகோர்த்த முன்னாள் புலி தளபதிகளைவிட கேபி ஒன்றும் அவ்வளவாக பெரிய குற்றம் செய்துவிட்டதாக தெரியவில்லை.

புலிகள் எனும் இயக்கம் முளைவிட தொடங்கியபோது அதை வீரம் பொருளாதாரம் ஆயுத கொள்வனவு என்று  முக்கோண வடிவில் தாங்கியவர்கள் மூவர்.

தலைவர் ஒன்று என்றால், எம்ஜிஆர் அடுத்தது, மற்றையது கேபி.

மட்டுவிலிருந்து மணலாறு வழியாக இயக்கம் முல்லைதீவுவரை வந்த பாதையை எல்லாம் சிங்களவருக்கு போட்டு கொடுத்து,

தலைநகரிலிருந்த புலிகளின் புலனாய்வு கட்டமைப்புகளையெல்லாம் காட்டி கொடுத்து,

பிரிந்து சென்றபோது பல்லாயிரம் ஆயுதங்களை தீமூட்டி கொழுத்தி,

ஒரு இயக்கத்தின் சாம்ராஜ்ஜியத்தையே சின்னா பின்னமாக்கிய புலிகளின் முன்னாள் தளபதிகளைவிட கேபி ஒப்பீட்டளவில் அப்படியொன்றும் பெரிதாய் துரோகமிழைத்ததாய் நினைக்கவில்லை.

குதிரைகள் ஓடிவிட்டன இனி லயன்களை பூட்டி பயன் இல்லை .

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேபியின் துரோகம் கருணாவின் துரோகத்திற்கு சற்றும் குறைந்ததல்ல. இவர் சிங்களத்திடம் சரணடைவதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்தது கனடாவிலுள்ள ஒருவரே. வெளிநாட்டுக் கட்டமைப்புக்கள் எல்லாவற்றிலும் சிங்கள இந்திய முகவர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததற்கு இவர்கள் இருவருமே காரணம்.

நாடுகடந்த அரசை பின்னால் இருந்து இயக்குவது இவர்கள் இருவருமே. உருத்திரகுமாரன் வெற்று முகமூடி மட்டுமே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, MEERA said:

@கற்பகதரு மற்றவர்களிடம் ஆதாரம்  கேட்கும் தாங்கள் அந்த கனடா விசயத்தை மறந்திட்டீங்க

கேபி என்ன செய்தார் என்பது வெள்ளிடை மலை. 

Escape GIF - Escape Bye Moving Out - Discover & Share GIFs

இந்த ஆதாரத்தை.... கேட்டவுடன், அவர்  "எஸ்கேப்" ஆயிடுறார்.  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, கற்பகதரு said:

 

இந்த புலிகள் பணத்தை கையாண்டதில் உங்கள் பாகத்தையும் எழுதுங்கள்.

 

நீங்கள் இப்ப தான் பிறந்து இருக்கிறீர்கள் போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, கற்பகதரு said:

அவரின் தொழில் இரகசியத்தை கேட்பதில் இருந்து வெளியாவது நீங்களும் அந்த தொழில் செய்வதாகவே தெரிகிறது.

நாங்களும் அவற்றை தொழில் தான் முதல்ல செய்தம். அவரை நம்பியும் இருந்தோம்.

ஐயா நடேசன் மே 16ஆம் தேதி அவரை சர்வதேச பொறுப்பாளராக நியமிக்கும்போது பொங்கியும் இருந்தோம்.

எங்களிடம்  குறையே தகவல்களை சரி பார்ப்பதும் இல்லை, பரந்துபட்ட  ஆய்வுகளை மேற்கொள்வதும் இல்லை. அதுவே பின்னாளில் எங்களின் தோல்விக்கு   காரணமாகப் போய்விட்டது.

எல்லாத்தையும் நம்புவது.

 "நான்" முதன்மை பெற்று "செய்வேன்", "முடிப்பேன்", "நடத்துவேன்" ,"வருவேன்", "போவேன்", "வெல்வேன்".

 

இந்த இடத்தில் அவதானம் வேண்டும். என் தாய்மொழி கூறுகிறது/  சொல்கிறது  "ஏன்"  என்பது சுட்டி நிற்கும்.

வினாவைத் தோற்றுவிக்கும், பதிலைத் தரும்.

நாங்கள் கற்றுக் கொண்டது.

ஆனால்,

"செய்வோம்"  "முடிப்போம்" "நடத்துவோம்" "வருவோம்" "போவோம்" "வெல்வோம்".

 தமிழ் சொல்கிறது "ஓம்" சுட்டி நிக்கும். அங்கே பல பேர்  கருத்தும் வந்து மோதும், தெளிவு பிறக்கும், விடை கிடைக்கும்.

அங்கே "ஏன்" அங்கே இழுத்துச் சென்றது.

 "ஓம்" வலுவிழந்தது, நாதியற்று கிடந்தது. தற்பொழுது கவனிப்பாரற்று,  பிழைப்பு / உழைப்பு வாதம் செய்ய அவ்வபோது துளிர்விடுகிறது  மீண்டும் கருகி போய்விடுகிறது.

 இதையே அந்நாளில் "ஓம"ன சொல்லிவந்த பிராமணன் கோயிலில் வரிசையாய்நிற்க வைக்கிறார்கள்.

நாங்கள் எப்படி அதை நம்பினோம்? இப்பவும் இப்படி நம்பி கதைகள், கட்டுரைகள் எழுதுகிறோம்.

தாய்மொழி எங்களைப் பார்த்து சிரிக்கிறது, தமிழ்மொழி சொல்லுகிறது வரலாறு. ஆனால் உணர தெரியவில்லை. எல்லாம் எங்கள் தலையெழுத்து.

உணராத வரைக்கும் அவர்கள் காடுகளில் நல்ல மழை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச பொறுப்பாளராக கே. பி அவர்களை நியமித்தது நடேசன் அவர்கள் என்றால் தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் மூலம அந்த நியமனம் கிடைக்கவில்லையா?

கே.பியை விட அனுபவம், திறமை, ஆளுமை, நேர்மை, ஊக்கம் கொண்ட பல தலைவர்கள் யாழ் கருத்து களத்திலேயே உள்ளார்கள் போல் தோன்றுகின்றது. ஆனால், மக்கள் பிரச்சனைகள்தான் தீர்ந்தபாடில்லை.

அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து விட்டது இலங்கையில். இப்போது உரிமை இல்லாமல் அபிவிருத்தி தேவை இல்லை என்று ஓர் புது கோசமும் வைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து நடத்துங்கள்.

Link to comment
Share on other sites

விடுதலைப் புலிகளின் சொத்துக்கள்?

நீண்ட காலத்திற்கு பின்னர் கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் பேசியிருக்கின்றார். விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் தொடர்பில் ஊடகவிலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, எந்தவொரு சொத்தும் என்னிடமில்லை. அவர்கள் (விடுதலைப் புலிகள் அமைப்பு) எவ்வாறான சொத்துக்களை விட்டுச் சென்றனர் என்று எனக்கு தெரியாதென்றும் அவர் பதிலளித்திருக்கின்றார்.

12 வருடங்களுக்கு முன்னர், 2009 ஓகஸ்ட் மாதம், கே.பி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் வைத்து, கைதுசெய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட போது, பல சர்வதேச ஆங்கில ஊடகங்களில், விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார் என்றே செய்திகள் வெளியாகிருந்தன.

ஒரு வேளை, கே.பி வெளிநாடு ஒன்றில் தலைமறைவாக இருந்திருந்தால், அவர் உண்மையிலேயே விடுதலைப் புலிகளின் புதிய தலைவராகத்தான் இருந்திருப்பார். இன்றிருக்கும் புலம்பெயர் அமைப்புக்கள் அனைத்தும் அவரது கட்டுப்பாட்டுக்குள்தான் இருந்திருக்கும். ஏனெனில் கே.பிக்கு உத்தரவிடக் கூடியளவிற்கு வேறு எந்தவொரு தகுதியான மூத்த உறுப்பினரும் உயிரோடு இல்லை. கே.பியால் பிள்ளையார் சுழியிடப்பட்ட நாடு கடந்த அரசாங்கம்தான், இப்போது விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தலைமையில் இயங்கிவருகின்றது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாரன் உயிரோடு இருக்கின்ற போதே, அவரது கையெழுத்துடன் சர்வதேச விவகாரங்களை கையாளுவதற்காக உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்ட ஒரேயொரு நபரென்றால் அது கே.பி மட்டும்தான். இந்த பின்புலத்தில் நோக்கினாலும், பிரபாகரனுக்கு அடுத்த நிலையில் இருப்பதற்கான முழுத் தகுதியும் கே.பிக்கு மட்டும்தான் இருக்கின்றது. ஆனால் இன்று கே.பி இலங்கை அரசின் கைதி. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர்க் குற்றங்கள் விசாரிக்கப்படுமாயின், கே.பியையும் விசாரிக்க முடியும். அப்படியொரு விசாரணை இடம்பெற்றால்.

கே.பி கைது செய்யப்பட்ட போது, அவரிடம் பெருந்தொகையான பணம் இருப்பதாக ஒரு கதை உலவியது. ஆனால் நாட்கள் வாரங்களாக, மாதங்களாக  கழிந்துசென்ற போது, அவரது கட்டுப்பாட்டின் கீழ் எதுவுமில்லை என்பது தெளிவாகவே தெரிந்தது. ஒரு வேளை கே.பியின் கட்டுப்பாட்டில் பெரும்தொகை பணம் இருந்திருந்தால், புலம்பெயர் அமைப்புக்கள் பலவும் கே.பியை விமர்சிக்கவோ, தள்ளிவைக்கவே துணிந்திருக்காது. கே.பியுடன் இணைந்து பணியாற்றிய பலர் அரசியலிருந்தே ஒதுங்கி, தற்போது முகவரியை தொலைத்தவர்களாகவே வெளிநாடுளில் வாழ்ந்துவருகின்றனர். ஒரு காலத்தில், கே.பியுடன்  நாங்கள் தொடர்பிலிருந்தோம், என்று சொல்லுவiயே, இப்போது பலரும் விரும்புவதில்லை.

ஆனால் விடுதலைப் புலிகளின் பெரும் தொகை நிதி சிலரிடம் முடங்கியிருக்கும் என்பதில் அதிச்சியடைய ஒன்றுமில்லை. அவ்வாறானவர்கள் எவருமே அந்த நிதியை தாயக மக்களின் நல்வாழ்விற்காக வழங்கப் போவதுமில்லை. அப்படியான  தமிழ் தேசிய பொறுப்புணர்வுடன், அவர்கள் செயற்பட்டதற்கான எந்தவொரு சான்றையும் இதுவரை காணமுடியவில்லை.

மனிதநேயமுள்ள பல புலம்பெயர் உறவுகள், வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்திருக்கின்றனர். இப்போதும் உதவி செய்து கொண்டிருக்கின்றனர் என்பது உண்மைதான். ஆனால் இப்படியான சிறிய உதவிகளை கொண்டு தாயக மக்களை பொருளாதார ரீதியாக தூக்கிவிட முடியாது. வடக்கு கிழக்கின் பொருளாதாரத்துக்கு வலுவான அடித்தளத்தை போட முடியாது. மாகாண சபை நிர்வாகத்தோடு புலம்பெயர் சமூகம் கைகோர்த்து செயற்பட்டால், பொருளாதார ரீதியில் நல்ல விடயங்களை செய்ய முடியும்.

ஆனால், கடந்த 12 வருடங்களில், புலம்பெயர் அமைப்புக்கள் அல்லது தனிநபர்கள், வடக்கு கிழக்கில் பெருந்தொகை நிதியில் தொழிற்முயற்சிகளை மேற்கொண்டதாக, எந்தவொரு தகவலுமில்லை. பெருந்தொகை என்பது நூறு, இரு நூறு கோடிகளை முதலீடாகக் கொண்ட திட்டங்கள். விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் என்பது அடிப்படையில் தாயக மக்களின் சொத்துக்கள். அவற்றை கோருவதற்கான முழு உரிமையும் தாயகத்திலுள்ள ஒவ்வொரு தமிழ் குடிமகனுக்கும் உண்டு.

யாழில் இருந்து வெளிவரும் 'ஈழநாடு' நாளேட்டில் இன்று செவ்வாய்க்கிழமை (12.10.2021) வெளிவந்த ஆசிரியர் தலையங்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, nirmalan said:

கே.பியால் பிள்ளையார் சுழியிடப்பட்ட நாடு கடந்த அரசாங்கம்தான், இப்போது விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தலைமையில் இயங்கிவருகின்றது

ஐயா,

எழுத்தாளர்களே இதுவும் ஒரு அயல்நாட்டு அமைப்பினுடைய  தந்திரோபாய சித்து விளையாட்டு. இதற்கு அடிகோலியவர் களை நன்கு அடையாளம் காண உங்களால் முடியும். முடிந்தால் அதனுடைய வரலாற்றை சற்று ஆராய்ந்து பாருங்கள்.

47 minutes ago, nirmalan said:

12 வருடங்களுக்கு முன்னர், 2009 ஓகஸ்ட் மாதம், கே.பி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் வைத்து, கைதுசெய்யப்பட்டார்

ஒரு சில மணி நேரத்துக்கு முன்பாக, மறைந்த ஐயா ஐயா நடேசன் அவர்களின்  புதல்வருடன் புதல்வர் நடந்த விடயத்தை அவரிடமே  கேட்டு வையுங்கள்.  வாசகர்களாகிய நாங்களும் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றோம்.

50 minutes ago, nirmalan said:

விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் தொடர்பில் ஊடகவிலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, எந்தவொரு சொத்தும் என்னிடமில்லை.

இதற்குரிய விடை நீங்கள் குறிப்பிட்டது போல விசாலமான சிந்தனையைத் தூண்டி  விவாதம் செய்து பாருங்கள்.

"விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாரன் உயிரோடு இருக்கின்ற போதே, அவரது கையெழுத்துடன் சர்வதேச விவகாரங்களை கையாளுவதற்காக உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்ட ஒரேயொரு நபரென்றால் அது கே.பி மட்டும்தான்."

இதனை மையமாக வைத்து உங்களுக்குள், வினாக்களை  எழுப்புங்கள் விடை தெரியும்.

54 minutes ago, nirmalan said:

கே.பி இலங்கை அரசின் கைதி

 உங்களின் கட்டுரை வாயிலாக, நீங்கள் கேபி அவர்களுக்கு காவடி தூக்குவது புலப்படுகிறது. உங்களுடைய வேலையை நீங்கள் சரிவர செய்கிறீர்கள். 

நீங்களே  பந்தியில் குறிப்பிட்டதுபோல் நாங்கள் "நண்டுகள்" ஆகிவிட்டோம். அதனால் குழுக்களாக வெளிநாடுகளில் பனிப்போர், கருத்துப் போர், காட்டிக் கொடுத்தல் நடந்து கொண்டிருக்கின்றது .

ஆனால்

பாவம் அந்த மக்கள் மட்டுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கைது செய்யப்படுவதற்கு பலப்பல வருடங்கள் முன்பே 90களில் Interpol சிகப்பு பட்டியலில் கே.பி வந்து விட்டார். இன்டர்போல் தனது இணையத்தளம் தொடங்கிய காலத்திலேயே கே.பி படம், தகவலுடன் Most Wanted Listஇல் பிரசுரம் செய்ய தொடங்கிவிட்டது. 

எந்த நேரமும் கைதாகலாம் எனும் நிலையில் வாழ்ந்த ஒருவரிடமா விடுதலைப்புலிகள் அமைப்பின் வெளிநாட்டு சொத்துக்கள் முடங்கின என கூறப்படுகின்றது?

இரகசிய வங்கி கணக்குகளின் சொந்தக்காரர் யார் என்பது விடுதலை புலிகளுக்கு மட்டும் தெரிந்த உண்மை.

கடைசியாக விடுதலைப்புலிகள் தலைவர் மாவீரர் தின அறிக்கை 2008 இல் வெளியாகியது. இதையே சாதாரண பொதுமக்கள் நம்பிக்கைக்கு கடைசி தொடர்பாடலாக செய்தியாக எடுக்க முடியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

கைது செய்யப்படுவதற்கு பலப்பல வருடங்கள் முன்பே 90களில் Interpol சிகப்பு பட்டியலில் கே.பி வந்து விட்டார். இன்டர்போல் தனது இணையத்தளம் தொடங்கிய காலத்திலேயே கே.பி படம், தகவலுடன் Most Wanted Listஇல் பிரசுரம் செய்ய தொடங்கிவிட்டது. 

எந்த நேரமும் கைதாகலாம் எனும் நிலையில் வாழ்ந்த ஒருவரிடமா விடுதலைப்புலிகள் அமைப்பின் வெளிநாட்டு சொத்துக்கள் முடங்கின என கூறப்படுகின்றது?

இரகசிய வங்கி கணக்குகளின் சொந்தக்காரர் யார் என்பது விடுதலை புலிகளுக்கு மட்டும் தெரிந்த உண்மை.

கடைசியாக விடுதலைப்புலிகள் தலைவர் மாவீரர் தின அறிக்கை 2008 இல் வெளியாகியது. இதையே சாதாரண பொதுமக்கள் நம்பிக்கைக்கு கடைசி தொடர்பாடலாக செய்தியாக எடுக்க முடியும். 

உங்கள் வெகுளித்தனத்தை பார்க்க ஆச்சரியமும் கவலையுமாக இருக்கிறது.

😔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

கைது செய்யப்படுவதற்கு பலப்பல வருடங்கள் முன்பே 90களில் Interpol சிகப்பு பட்டியலில் கே.பி வந்து விட்டார். இன்டர்போல் தனது இணையத்தளம் தொடங்கிய காலத்திலேயே கே.பி படம், தகவலுடன் Most Wanted Listஇல் பிரசுரம் செய்ய தொடங்கிவிட்டது. 

 

On 11/10/2021 at 23:55, kalyani said:

நீங்கள் இப்ப தான் பிறந்து இருக்கிறீர்கள் போல.

ஒரு பழமொழி சொல்வார்கள், "தன்ர பல்லின் ஊத்தையை குத்தி மற்றவர் மூக்கில் வைப்பது" என்று. நான் இங்கு கூறியது: இலங்கை  அரசால் குற்றவாளி என்று கருதப்பட்டு, அவரை கைது செய்வதற்கு  சர்வதேச பொலிஸாரின் உதவி கோரப்பட்டு, இரகசியமாக  தனி விமானம் மூலம் சென்று கைது செய்த ஒருவரை, எந்த விசாரணையுமின்றி நடமாட விட்டதன் காரணம் என்ன? அவரிடமிருந்து பெறப்பட்ட பணமே அதற்கு காரணம். அந்த பணத்திற்கு என்ன நடந்தது? இறுதிப்போரின்போது  புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம், நகைகளுக்கு என்ன நடந்தது? என்று எதிர்க்கட்சிகள் மஹிந்த மாத்தையாவிடம் கேட்ட போது, மஹிந்தாவே பதிலளிப்பதை தவிர்த்துவிட்டார். அதை நான் இங்கு குறிப்பிட்டதற்கு இங்கு ஒருவர் குறுகுறுப்பதன் காரணம் என்ன? ஒன்று, நான் எழுதியதை விளங்கிக்கொள்ள அவரால் முடியவில்லை, அடுத்தது இவரின் மடியில் கனம் அதிகம். அவரை அப்படியே விடுங்கள். அவர் தன்னை மறைத்துக்கொள்ளட்டும். நாம் எதற்கு பதிலளிக்க வேண்டும்? இது எனக்குரிய கடிதமல்ல, அனுப்பியவருக்கே திரும்பி செல்லட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kapithan said:

உங்கள் வெகுளித்தனத்தை பார்க்க ஆச்சரியமும் கவலையுமாக இருக்கிறது.

😔

உங்கள் வெகுளித்தனத்தை பார்க்க எனக்கு அனுதாபம் பிறக்கின்றது. 

செவி வழி கதைகளை கேட்டு நம்பினால் அது உங்கள் வெகுளித்தனமே. கதை சொல்ல பலர் உள்ளார்கள். 

தலைவரை அமெரிக்கா பிளேனில் ஏத்தி சென்று பாதுகாப்பாக வைத்து உள்ளார்கள் என்று நம்பவும் ஆட்கள் உள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/10/2021 at 04:26, நியாயத்தை கதைப்போம் said:

உங்கள் வெகுளித்தனத்தை பார்க்க எனக்கு அனுதாபம் பிறக்கின்றது. 

செவி வழி கதைகளை கேட்டு நம்பினால் அது உங்கள் வெகுளித்தனமே. கதை சொல்ல பலர் உள்ளார்கள். 

தலைவரை அமெரிக்கா பிளேனில் ஏத்தி சென்று பாதுகாப்பாக வைத்து உள்ளார்கள் என்று நம்பவும் ஆட்கள் உள்ளார்கள்.

என்னால் கூறப்படுபவை செவிவழி வந்தவையல்ல. இவற்றிற்கு நானே சாட்சி. 

இதைவிட வேறு என்ன வேண்டும் உங்களுக்கு.. ? 

சர்வதேச பொலிசாரால் தேடப்படும் ஒருவர், அதுவும் இலங்கை அரசால் அறிவிக்கப்பட்டு  தேடப்படும் ஒருவர், இலங்கையிலேயே பாதுகாப்பாய் நடமாடுகின்றார். ஆனால் சாதாரண பொது மக்கள் அச்சத்துடன் நடமாடுகின்றனர்.  அது எப்படிச் சாத்தியமாகும் ? 

இதனைக்கூட புரிந்துகொள்ள முடியாத  ஒருவருடன் கருத்தாடுதல் நகைச்சுவைக்குரியதாகவே இருக்கும் ஆதலினால் .. 🙏 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எம்.எஸ்.தோனி: அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் உருவாவது எப்படி? ராஜன் குறை கிருஷ்ணன் எம்.எஸ்.தோனி மிகச் சிறந்த விளையாட்டு வீரர். அவர் ஆடுவதை மிகவும் ரசித்துப் பார்த்திருக்கிறேன். ஒரு வகையில் என்னை மிகவும் கவர்ந்த கிரிக்கெட் ஆட்டக்காரர் அவர்தான் எனலாம். எதனால் என்றால் எனக்குச் சமநிலை குலையாமல் விளையாடுபவர்களை மிகவும் பிடிக்கும். ‘கேப்டன் கூல்’ என்று அழைக்கப்பட்ட தோனி எந்தச் சந்தர்ப்பத்திலும் பதட்டம் அடையாமல் நிதானமாக இருப்பதை மிகவும் ரசிப்பேன்.  ஐந்து நாள் ஆடப்பட்ட டெஸ்ட் மேட்சிலிருந்து ஒரு நாள் போட்டிகளும், டி20 போட்டிகளும் மிகவும் வேறுபட்டவை. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பந்துகளில் முதலில் ஆடிய அணி எடுத்த ரன்களைப் பின் தொடரும் அணி எடுத்தால் வெற்றி. இல்லாவிட்டால் தோல்வி. ஒவ்வொரு பந்தும் கணக்கு. டி20 பந்தயத்தில் மொத்தமே 120 பந்துகள்தான். இதுபோன்ற போட்டிகளில் உறுதியாக அடித்து ஆடும் தோனி போன்றவர்கள் ரசிகர்களைப் பெருமளவு ஈர்ப்பதில் வியப்பு ஒன்றுமில்லை. அதுவும் தொலைகாட்சியில் பார்த்து ரசிக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு அவர் பெரும் நட்சத்திரமாக மாறுவதை இயல்பாகவே புரிந்துகொள்ளலாம்.  தோனி எண்ணிக்கையை துரத்தும் நிலையில் மைதானத்தில் இறங்கினால், எதிர் அணி எத்தனை ரன் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தாலும், ஒரு பதட்டம் அவர்களிடையே உருவாவதை ரசித்திருக்கிறேன். ஏனெனில், அசாத்தியம் என்று நினைத்ததைப் பல சந்தர்ப்பங்களில் சாத்தியமாக்கி இருக்கிறார். அதேபோல அவர் தலமையிலான அணி பந்து வீசி எதிர் அணியின் ரன் சேர்ப்பைக் கட்டுப்படுத்த வேண்டி இருந்தால், அவர் முற்றிலும் எதிர்பாராத விதமாக பந்து வீசுபவர்களைத் தேர்வுசெய்வார். அது எதிர் அணி ஆட்டக்காரர்களைத் தடுமாறச் செய்த சந்தர்ப்பங்கள் பல. தோனியின் மேலாண்மைத் திறன் ஆய்வுப் பொருளானது. அதிநாயக பிம்பமான நாயகன் இப்படிப் பல சிறப்புகளைக் கொண்ட தோனி இன்று அதிநாயக பிம்பமாக மாற்றப்பட்டுள்ளார் என்பதுதான் சோகம். வயதாகிவிட்டதால் இந்திய அணிக்காக விளையாடுவதிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டார். ஆனால், பெரும் வர்த்தகமான, வெகுமக்கள் கேளிக்கையான டி20 ஆட்டத்திலிருந்து அவர் விடுபட முடியவில்லை. ஏனெனில், அவர் விளையாடுவதைப் பார்க்கவே மைதானத்திற்கு மக்கள் வருகிறார்கள்; தொலைக்காட்சி பெட்டிகளின் முன் அமர்கிறார்கள். அவர் மைதானத்தில் இறங்கும்போது மைதானமே உற்சாக ஆரவாரத்தில், கோஷங்களில் அதிர்கிறது. பணம் குவிகிறது.  அவருடைய அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்கிறதா, தோற்கிறதா என்பதைவிட தோனி மைதானத்தில் இறங்கினாரா, சிக்ஸர் அடித்தாரா என்பது ரசிகர்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது. சமீபத்தில் தொலைக்காட்சி பார்வையாளர்களிடம் “நீங்கள் எதைப் பார்ப்பற்காக வேலையை விட்டுவிட்டு வருவீர்கள், சூர்யகுமார் யாதவ் சிக்ஸர் அடிப்பதைப் பார்க்கவா அல்லது தோனி மைதானத்தில் இறங்குவதை பார்க்கவா” என்று கேட்டபோது எழுபது சதவீதம் பேர் தோனி மைதானத்தில் இறங்குவதைப் பார்க்கவே வருவோம் என்று பதில் அளித்தார்கள். தோன்றினாலே பரவசம், விளையாடவே வேண்டாம்.  சமீபத்திய மேட்ச் ஒன்றில் அவர் விளையாட வந்தவுடன் மூன்று சிக்ஸர்கள் அடுத்தடுத்த பந்தில் அடித்தார். அது கடைசி ஓவர் என்பதால் இருபது ரன் எடுத்தார். எதிர் அணியான மும்பை அணி சிறப்பாகவே பதிலடி கொடுக்கத் தொடங்கியது. சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள், குறிப்பாக பதிரானா என்ற இளைஞர், சிறப்பாக பந்து வீசி சென்னைக்கு 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி தேடித் தந்தார்கள். ஆனால், அவர்கள் எல்லோரையும்விட தோனியே, அவர் அடித்த 20 ரன்களே வெற்றிக்குக் காரணம் எனச் சமூக ஊடகங்களில் பலரும் எழுதினார்கள். ஆட்டத்தின் நுட்பங்களை ரசிப்பது, மதிப்பிடுவது, திறமைகளை ஊக்குவிப்பது எல்லாமே இரண்டாம் பட்சமாகிவிடுகின்றன. அதிநாயக வழிபாடே பிரதானமாகிறது. அதுவே வசூலைக் குவிப்பதால் ஊடகங்களும் ஒத்தூதுகின்றன. பிம்பத்தை ஊதிப் பெரிதாக்குகின்றன.    சுருக்கமாகச் சொன்னால் நன்றாக கிரிக்கெட் விளையாடியதால் உருவான தோனி என்ற நாயக பிம்பம், இன்று கிரிக்கெட்டைவிட முக்கியமான அதிநாயக பிம்பமாக மாறிவிட்டது. கிரிக்கெட்டிற்காக தோனி என்பதைவிட, தோனிக்காக கிரிக்கெட் என்று மாறுகிறது. அதனால் என்ன, எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அவ்வளவுதானே என்று தோன்றலாம். பிரச்சினை அத்துடன் நிற்பதில்லை. பலவீனமான மனங்கள் இந்த அதிநாயக பிம்பங்களை வழிபடத் துவங்குகின்றன. தங்களை அந்தப் பிம்பங்களுடன் அடையாளப்படுத்திக்கொள்கின்றன. அந்தப் பிம்பங்களை யாராவது குறை சொன்னால் அவர்கள் மீது கோபம் கொள்கின்றன.  இதேபோலத்தான் டெண்டுல்கரும் கிரிக்கெட்டின் கடவுள் எனப் பூஜிக்கப்பட்டார். அவரும் மிகச் சிறந்த ஆட்டக்காரர்தான். ஆனால், அவர் ஆட்டமிழந்துவிட்டால் அத்துடன் ஆட்டத்தை பார்ப்பதையே நிறுத்திவிடுபவர்கள் பலரை அறிவேன். அவருடன் ஆடிய பல சிறந்த ஆட்டக்காரர்கள் போதுமான அளவு மக்களால் ரசிக்கப்படவில்லை. அங்கீகரிக்கப்படவில்லை. மற்ற யாரும் செஞ்சுரி அடித்தால், அதாவது நூறு ரன்கள் எடுத்தால் அது பெரிய ஆரவாரமாக இருக்காது; ஆனால் டெண்டுல்கர் நூறு ரன்கள் எடுத்தால் ஊரே தீபாவளி கொண்டாடும். அலுவலகங்களில் அனைவருக்கும் இனிப்பு வாங்கித் தருவார்கள்.        அதிநாயக பிம்பம் + மிகை ஈடுபாடு = வன்முறையின் ஊற்றுக்கண் இதுபோன்ற மிகை ஈடுபாடுகளுக்கு மற்றொரு ஆபத்தான பரிமாணமும் இருக்கிறது. மஹாராஷ்டிரத்தின் கோலாப்பூர் மாவட்டத்தில் மார்ச் 27ஆம் தேதி நடந்த சம்பவத்தைக் கவனிக்க வேண்டும். அண்டை வீட்டுக்காரர்களான இரு விவசாயிகள், நெடுநாள் நண்பர்கள், டி20 மேட்ச் சேர்ந்து பார்த்திருக்கிறார்கள். அவரகளில் 65 வயது நிரம்பிய பந்தோபந்த் டிபைல் என்பவர் ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தவுடன் மும்பை இந்தியன் அணி தோற்றுவிடும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வென்றுவிடும் என்று கூறியுள்ளார். ஐம்பைத்தைந்து வயதான பல்வந்த் ஷன்ஜகே கோபமடைந்து வாக்குவாதம் செய்துள்ளார். வார்த்தை முற்றி, பல்வந்த் ஷன்ஜகேவும் அவர் மருமகனும் சேர்ந்து டிபைலை கட்டைகளைக் கொண்டு தாக்கியதில் அவர் இறந்தே போய்விட்டார். அவர்களிடையே வேறு எந்த முன்விரோதமும் இருக்கவில்லை என்றே அக்கம் பக்கத்தார் கூறுகின்றனர்.  கிரிக்கெட் விளையாட்டை ரசிப்பதற்கும் இதுபோன்ற மனப்பிறழ்வான மிகை ஈடுபாடுகளுக்கும் தொடர்பில்லை. ஆனால், ஒவ்வொரு துறையிலும் எப்படி இத்தகைய அதிநாயக பிம்ப உருவாக்கமும், மிகை ஈடுபாடும் அடிப்படை விழுமியங்களையே சேதப்படுத்துகின்றன என்பதை நாம் கவனிக்க இந்த உதாரணங்கள் உதவும். மகிழ்ச்சிக்காக விளையாடுகிறோம்; விளையாட்டைப் பார்க்கிறோம். ஆனால், அதுவே வன்முறையை தோற்றுவிப்பது எத்தகைய விபரீதம் என்பதைச் சிந்திக்க வேண்டும். உலகம் முழுவதுமே விளையாட்டு ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபடுவது, வன்முறையில் ஒரு சிலர் உயிரிழப்பது நடக்கத்தான் செய்கிறது. தாங்கள் ஆதரிக்கும் அணி அல்லது ஆட்டக்காரர்கள் தோற்பதைத் தாங்க முடியாமல் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபடுவது பல சமயங்களில் நடக்கும்.  விளையாட்டில் மட்டும் இல்லை. தாயின் கருவறையில் உயிர்த்து, வெளிவந்து, வாழ்ந்து மாயும் நாம், நம்மை சாத்தியமாக்கும் இயற்கையை இறைவனாக உருவகித்து வழிபடுகிறோம். அதில் பரவசமாகி நாம் அனைத்தையும், அனைவரையும் நேசிக்கும் பண்பைப் பெற விழைகிறோம். ஆனால், நாம் உருவகித்து வழிபடும் இறைவனுடன் நம்மை அடையாளப் படுத்திக்கொண்டு, வேறொரு உருவகத்தை வழிபடுபவர்களை வெறுக்கத் தொடங்குகிறோம். கடவுளின் பெயரால் கொலை செய்யத் தொடங்குகிறோம். மானுட வரலாற்றில் அதிகபட்ச கொலைகள் அன்பே உருவான கடவுளின் பெயரால்தானே நடந்துள்ளன.  கணியன் பூங்குன்றனின் குரல் சமூக நன்மைக்காக பாடுபடுபவர்களைத் தலைவர்களாக ஏற்கிறோம். அவர்களைப் பின்பற்றுகிறோம். மெள்ள மெள்ள அவர்களை அதிநாயகர்கள் ஆக்குகிறோம். அவர்கள் தலமையை ஏற்காதவர்களை விரோதிகள் ஆக்குகிறோம். அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் இணையும்போது அங்கே பாசிஸ முனைப்பு தோன்றுகிறது. கருத்து மாறுபாடுகளை, விமர்சனங்களை வெறுக்கிறோம். அவற்றை எதிர்கொள்ள வன்முறையைக் கையாளத் துவங்குகிறோம். சமூக நன்மை இறுதியில் சமூக வன்முறையாக மாறிவிடுகிறது.  நாயகர்களை அதிநாயகர்களாக மாற்றுவதும், மிகை ஈடுபாட்டின் மூலம் நம்மை விமர்சன சிந்தனையற்ற அடிமைகளாக மாற்றிக்கொள்வதும் நம்முடைய சுயத்தின் பலவீனத்தால்தான் நிகழ்கிறது. நம்முடைய சுயத்திற்கு நாம் மரியாதை செலுத்தினால், சுயமரியாதையுடன் பகுத்தறிவுடன் வாழ்ந்தால் நாயகர்கள் அதிநாயக பிம்பமாக மாட்டார்கள். தமிழ்ப் பண்பாடு என்றோ இதனை கணியன் பூங்குன்றன் குரலில் அறிந்துகொண்டது.    விரிந்த மானுடப் பார்வையையும், சமநிலையையும் வலியுறுத்தும் பூங்குன்றன், வாழ்க்கை பெருமழை உருவாக்கிய சுழித்தோடும் வெள்ளத்தில் சிக்கிய மதகு பயணப்படுவதுபோல தற்செயல்களால் நிகழ்வது என்று உருவகிக்கிறார் எனலாம். அதனால் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதினினும் இலமே என்று கூறுகிறார். அதிக நாயக பிம்பங்களின் மீதான மிகை ஈடுபாட்டிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள அவருடைய வரிகளே காப்பு.    https://www.arunchol.com/rajan-kurai-krishnan-article-on-ms-dhoni
    • பலரைத் துரத்திப் பிடிச்சுக்கொண்டு வந்த வீரப் @பையன்26க்கும் @ஈழப்பிரியன் ஐயாவுக்கும் நன்றி பல!🙏🏽 கடைசி இடத்தைப் பிடிக்க என்றே மூன்று பேர் கலந்திருக்கினம். கவலைவேண்டாம்😜
    • பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமான ரபாவையொட்டி இஸ்ரேலிய படை குவிப்பு படையெடுப்பு அச்சம் அதிகரிப்பு: தாக்குதல்களும் தீவிரம் gayanApril 20, 2024 காசா மக்களின் கடைசி அடைக்கலமாக உள்ள ரபா நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நகர் மீதான படையெடுப்பு ஒன்று பற்றி அச்சம் அதிகரித்துள்ளது. காசாவின் தென் முனையில் எகிப்துடனான எல்லையில் அமைந்திருக்கும் ரபாவில் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் அடைக்கலம் பெற்றுள்ளனர். இங்கு பெரும் நெரிசல் மற்றும் உணவுப் பொருட்களுக்கு நிலவும் பற்றாக்குறைக்கு மத்தியில் கூடாரங்கள் மற்றும் வெட்ட வெளிகளில் தங்கியுள்ள பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. காசாவில் இஸ்ரேலிய தரைப் படை இன்னும் நுழையாத ஒரே இடமாக இருக்கும் ரபா மீது படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இஸ்ரேல் நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது. எனினும் இந்த இராணுவ நடவடிக்கை குறித்து அமெரிக்கா மீண்டும் ஒருமுறை இஸ்ரேலிடம் கவலையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமது அக்கறை தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக இஸ்ரேலிய பிரதமரின் பிரதிநிதிகள் இணங்கியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ள ரபா நகர் மீதான படையெடுப்பை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்கா, இஸ்ரேலை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. எனினும் ஹமாஸை ஒழிக்கும் படை நடவடிக்கையின் அங்கமாக ரபா மீதான படையெடுப்பு ஒன்றை முன்னெடுப்பது பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. தெற்கு ரபாவில் உள்ள இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் வசித்த வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல் ஒன்றில் அங்கிருந்தவர்கள் உடல் சிதறுண்டு உயிரிழந்திருப்பதாக அயலவர்கள் மற்றும் உறவினர்கள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக அல் அர்ஜா என்பவர் குறிப்பிட்டுள்ளார். ‘சிறுவர்கள் மற்றும் பெண்களின் கைகள், கால்கள் என உடல் பாகங்களை மீட்டோம். அவை துண்டு துண்டாக சிதறிக் கிடந்தன. இது சாதாரணமானதல்ல, பயங்கரமாக இருந்தது’ என்று அவர் குறிப்பிட்டார். கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்த விரைவில் வடக்கு காசாவில் வசிக்கும் பலஸ்தீனர்கள் ரபா போன்ற தெற்கு காசா நகரங்களின் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டது. ஆனால், தற்போது 1.5 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நகரை தாக்கப்போவதாக இஸ்ரேல் இராணுவம் எச்சரித்து வருகிறது. ‘ரபா எப்படி பாதுகாப்பான இடமாக இருக்க முடியும்?’ என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர் ஒருவரான சியாத் அய்யாத் கேள்வி எழுப்பினார். ‘கடந்த இரவில் நான் குண்டு சத்தங்களை கேட்டேன், பின்னர் படுக்கச் சென்றுவிட்டேன். எனது அத்தை வீடு தாக்கப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது’ என்றும் அவர் கூறினார். இந்தத் தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் பரிய பள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில் தேடுதல் நடவடிக்கையும் பெரும் வேதனை தருவதாக உள்ளது என்று உறவினர்கள் மற்றும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர். ‘அவர்களை இடிபாடுகளுக்கு கீழ் எம்மால் பார்க்க முடிகிறது. எம்மால் அவர்களை மீட்க முடியவில்லை’ என்று அல் அர்ஜா குறிப்பிட்டார். ‘இவர்கள் தெற்கு பாதுகாப்பானது என்று கூறியதால் வடக்கில் இருந்து வந்தவர்கள். எந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் இவர்கள் தாக்கப்பட்டார்கள்’ என்றும் அவர் கூறினார். கடந்த செவ்வாய்க்கிழமை ரபாவின் அல் சலாம் பகுதியில் வீடு ஒன்று தாக்கப்பட்டதை அடுத்து மீட்பாளர்கள் அங்கிருந்து ஐந்து சிறுவர்கள் உட்பட எட்டு குடும்ப உறுப்பினர்களின் உடல்களை மீட்டதாக காசா சிவில் பாதுகாப்பு சேவை குறிப்பிட்டது. ‘இடம்பெயர்ந்த மக்களின் வீட்டின் மீது இஸ்ரேலிய ரொக்கெட் குண்டு ஒன்று விழுந்தது’ என்று குடியிருப்பாளரான சமி நைராம் குறிப்பிட்டார். ‘எனது சகோதரியின் மருமகன், அவளது மகள் மற்றும் குழந்தைகள் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவர்களின் தலைகளுக்கு மேலால் ஏவுகணை விழுந்து வீட்டை தகர்த்துள்ளது’ என்றும் அவர் கூறினார். ராபாவில் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டு அந்த நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த நகர் மீதான படையெடுப்புகான சமிக்ஞைகள் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரபா மாவட்டத்தை ஒட்டிய அனைத்து பகுதிகளிலும் மேலதிக இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளன. ரபாவின் கிழக்கு பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் பெரும்பகுதியை இஸ்ரேலிய துருப்புகள் நேற்றுக் கைப்பற்றி இருப்பதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே காசாவின் மற்றப் பகுதிகள் இஸ்ரேலின் தாக்குதலால் அழிக்கப்பட்டிருக்கும் சூழலில் ரபா தாக்கப்படும் பட்சத்தில் எங்கு செல்வது என்று அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்குள்ள பலஸ்தீனர்களை வெளியேற்றுவது குறித்து இஸ்ரேல் கூறிவருகின்றபோதும் அது நடைமுறை சாத்தியம் இல்லை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர். காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்தன. வடக்கு காசாவின் காசா நகர் மற்றும் மத்திய காசாவின் நுசைரத் நகர் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது போர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் இடைவிடாத தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.   https://www.thinakaran.lk/2024/04/20/world/55779/பலஸ்தீனர்களின்-கடைசி-அடை/
    • யாழ். பல்கலைக்கழகத்திலும் அன்னை பூபதியின் நினைவேந்தல் April 20, 2024     இந்தியப் படைகளின் அத்துமீறிய செயற்பாடுகளிற்கு எதிராக உண்ணாவிரதமிருந்து தன்னுயிர் நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நினை வேந்தல் நிகழ்வுகளின் போது பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் பங்கு கொண்டு அன்னை பூபதிக்கு தங்கள் புகழ் வணக்கங்களைச் செலுத்தியிருந்தனர்.   https://www.ilakku.org/யாழ்-பல்கலைக்கழகத்திலும/  
    • இல்லை, மீரா. தாம் என்ன செய்கிறோம் என்பதை நன்கு தெரிந்தே செய்கிறார்கள். ஏனென்றால், அதுதான் அவர்களின் தேவை. தேசியமும், விடுதலையும், சுய நிர்ணயமும், அடையாளமும் இல்லாது போகவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். ஆகவே, அவர்கள் குறித்து உங்கள் நேரத்தையும், சக்தியையும் செலவிடாதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்துகொண்டிருங்கள். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.