Jump to content

அமேசான் மழைக்காடுகள் சட்ட விரோத விற்பனை: பிபிசி புலனாய்வும் ஃபேஸ்புக் நடவடிக்கையும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அமேசான் மழைக்காடுகள் சட்ட விரோத விற்பனை: பிபிசி புலனாய்வும் ஃபேஸ்புக் நடவடிக்கையும்

அமேசான் மழைக்காடு.

Getty Images புவியில் கண்டறியப்பட்ட உயிரினங்களில் பத்தில் ஒன்று அமேசான் மழைக்காடுகளில் காணப்படுகின்றன.

அமேசான் மழைக்காடுகளில் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகளை சட்டவிரோதமாக தமது தளத்தைப் பயன்படுத்தி விற்பனை செய்வதை தடுக்கப்போவதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. 

இது போன்ற சட்டவிரோத வணிகம் பற்றி பிபிசி நடத்திய புலனாய்வினை அடுத்து ஃபேஸ்புக் இது தொடர்பான தமது கொள்கையை மாற்றிக்கொண்டுள்ளது. 

ஃபேஸ்புக்கின் இந்த நடவடிக்கை, பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும். அரசுக்கு சொந்தமான எல்லா காடுகளுக்கும் பொருந்தாது. அதைப் போல இது அமேசான் மழைக்காடுகளுக்கு மட்டுமே பொருந்தும், உலகில் உள்ள பிற மழைக்காடுகளுக்கும், காட்டுயிர் வாழ்விடங்களுக்கும் பொருந்தாது. 

உலகில் நடக்கும் காடு அழிப்பில் மூன்றில் ஒரு பங்கு அமேசான் பகுதியில் அரசுகளுக்கு சொந்தமான காடுகளில்தான் நடக்கிறது என்று இபாம் (Instituto de Pesquisa Ambental da Amazonia) என்ற கருத்தியல் குழு நடத்திய சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 

அமேசான் காடுகளில் இடங்களை விற்பது தொடர்பான சட்டவிரோத விளம்பரங்கள் எப்படி அடையாளம் காணப்படும் என்பதை வெளியே சொல்லப்போவதில்லை என்கிறது ஃபேஸ்புக். ஆனால், அமேசான் மழைக்காடுகள் தொடர்பான இத்தகைய சட்டவிரோத விளம்பரங்களைக் கண்டுபிடித்து நிறுத்தப்போவதாக அது கூறியுள்ளது. 

 

சட்டவிரோத காடு அழிப்பு அம்பலம்

 

அமேசானில் ஆயிரம் கால்பந்து மைதானங்கள் அளவுக்குப் பெரிய நிலப்பகுதிகளை விற்பதற்கான விளம்பரங்கள்கூட ஃபேஸ்புக்கில் வெளியிடப்படுவதாக பிப்ரவரியில் வெளியான பிபிபிசியின் உலகளாவிய ஆவணப் படமான Selling the Amazon அம்பலப்படுத்தியது. 

ஆல்விம் சௌசா ஆல்வெஸ்
 

16,400 பவுண்டுகளுக்கு நிலத்தை விற்க ஆல்விம் சௌசா ஆல்வெஸ் முயன்றார்.

தேசியக் காடுகள், பூர்வகுடிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலங்கள் உள்ளிட்ட பல பாதுகாக்கப்பட்ட காடுகள் இப்படி விற்பனைக்கு விளம்பரம் செய்யப்பட்டவற்றில் அடக்கம். 

 

பிபிசி கையாண்ட உத்தி

 

இந்த விளம்பரங்கள் உண்மை என்பதை நிரூபிக்க, நான்கு விற்பனையாளர்களுக்கும் பணக்கார முதலீட்டாளர்களின் பிரதிநிதி என்று ஜோடிக்கப்பட்ட ஒரு வழக்குரைஞருக்கும் இடையே ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்தது பிபிசி. 

உள்ளூர் பணத்தில் 16 ஆயிரத்து 400 பவுண்டுகளுக்கு இணையான தொகைக்கு ஒரு நிலத்தை விற்க முன்வந்தார் நில ஆக்கிரமிப்பாளர் ஆல்விம் சௌசா ஆல்வெஸ். இந்த நிலம் பூர்வகுடிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட உரு யு வா வா (Uru Eu Wau Wau) பகுதிக்குள் உள்ளது. 

பிபிசி நடத்திய இந்தப் புலனாய்வின் விளைவாக இது பற்றி விசாரணைக்கு உத்தரவிட்டது பிரேசில் கூட்டாட்சி உச்ச நீதிமன்றம். 

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி அப்போது பூர்வகுடி தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தபோதும், உள்ளூர் அதிகாரிகளோடு இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக கூறிய ஃபேஸ்புக் ஆனால், இந்த வணிகத்தை தன்னிச்சையாக நிறுத்த முடியாது என்று கூறி மறுத்துவிட்டது. 

ஆனால், ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டம் உள்ளிட்ட அமைப்புகளுடன் ஆலோசித்து இந்த பிரச்சனையை கையாள்வதற்கான முதல் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தற்போது கூறுகிறது ஃபேஸ்புக். 

பூர்வகுடி ஆள்.
 

சட்டவிரோதமாக விற்கப்படும் நிலங்களில் பெரும்பாலானவை பூர்வகுடிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டவை.

முன்னாள் ஃபேஸ்புக் ஊழியரும், கூக்குரல் விடுப்பவருமான ஃப்ரான்சஸ் ஹௌஜென் அம்பலப்படுத்திவரும் அதிர்ச்சிகரமான விஷயங்களை அடுத்து அமெரிக்க நாடாளுமன்றத்தின் அழுத்தத்துக்கு ஃபேஸ்புக் நிறுவனம் ஆளாகியிருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இந்த நடவடிக்கை பலன் அளிக்குமா?

சட்டவிரோதமாக நிலங்களை விற்பவர்களை கண்டுபிடிக்க ஐ.நா. சுற்றுச்சூழல் திட்ட பாதுகாப்பு கண்காணிப்பு மையத்தின் தரவுகளைப் பயன்படுத்தவுள்ளது ஃபேஸ்புக். 

அரசுகள் மற்றும் பிற நிறுவனங்கள் அளிக்கும் அறிக்கைகளின் அடிப்படையில் மாதந்தோறும் புதுப்பிக்கப்படும் இந்தத் தரவு மிகவும் விரிவானது என்கிறது ஐநா சுற்றுச்சூழல் திட்டம். 

ஆனால், விற்பனை செய்யப்படும் இடம் எங்கே உள்ளது என்பதை விளம்பரதாரர்கள் கட்டாயமாக தெரிவிக்கவேண்டும் என்று விதிகளை திருத்தாவிட்டால், சட்டவிரோத விற்பனையைத் தடுப்பதற்கான எந்த முயற்சியும் வெற்றிபெறாது என்கிறார் பிரேசில் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானியும் வழக்குரைஞருமான பிரென்டா பிரிட்டோ. 

"உலகின் தலைசிறந்த தரவுகள் அவர்களிடம் இருக்கலாம். ஆனால், விற்பனை செய்யும் இடம் உள்ள பகுதி எங்கே இருக்கிறது என்ற குறிப்பு இல்லாவிட்டால் அது வேலைக்கு ஆகாது," என்கிறார் அவர். 

சில விளம்பரங்களில் இடத்தின் செயற்கைக்கோள் படங்களும், ஜிபிஎஸ் புவியியல் குறிப்புகளும் இடம் பெற்றிருந்தன; ஆனால், எல்லா விளம்பரங்களும் அந்த அளவுக்கான தகவல்களைப் பகிர்வதில்லை என்பதை பிபிசி புலனாய்வில் கண்டறியப்பட்டது. 

விற்கப்படும் நிலம் அமைந்துள்ள இடத்தைப் பற்றி விற்பனையாளர்களிடம் துல்லியமான விவரம் கேட்கும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்று பிபிசியிடம் கூறியது ஃபேஸ்புக். 

"இந்தப் பிரச்சனைக்கு சர்வரோக நிவாரணி ஏதும் இல்லை என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், எங்கள் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு விளம்பரம் செய்வோரை தடுக்க தொடர்ந்து பாடுபடுவோம்," என்று ஃபேஸ்புக் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார். 

 

அமேசான் என்னும் பிரும்மாண்டம்

 

பிரேசில், பெரு, ஈக்வடார், கொலம்பியா உள்பட குறைந்தபட்சம் 7 நாடுகளில் பரவியுள்ள அமேசான் மழைக்காடுகள் மொத்தம் 75 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்துவிரிந்துள்ளன. 

இந்த சட்டவிரோத விற்பனையைத் தடுப்பது தொடர்பாக அந்தந்த நாடுகளின் அரசுகளுடனும் இணைந்து செயல்படுகிறதா என்பதை ஃபேஸ்புக் உறுதிப்படுத்தவில்லை. 

அமேசான் மழைக்காடுகளில் 60 சதவீதம் பிரேசிலில் உள்ளது. இங்கே காடு அழிப்பு விகிதம் 12 ஆண்டுகளில் இல்லாத அளவு தற்போது அதிகமாக உள்ளது. 

காடுகளை சட்டவிரோதமாக இணையத்தில் விற்பதைத் தடுப்பதற்கான முக்கிய கருவி பிரேசில் அரசின் பொதுக் காடுகள் குறித்த அதிகாரபூர்வ தரவு. ஆனால், இந்த தரவுகளை ஃபேஸ்புக் பயன்படுத்தப்போவதில்லை. 

"இந்த முயற்சியை மேம்படுத்துவதற்கு 2016 முதல் கிடைக்கும் இந்த தரவை அவர்கள் பயன்படுத்தலாம்," என்கிறார் பிரெண்டா பிரிட்டோ. 

ஆனால், அமேசான் மழைக்காடுகளில் நடந்துவரும் பெரிய அளவிலான காடு அழிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டங்களை பலவீனப்படுத்த நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் ஆகியவற்றின் பின்னணியில் பார்த்தால், ஃபேஸ்புக்கின் இந்த அறிவிப்பு ஒரு சிறிய வெற்றி என்கிறார்கள் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள். 

இந்தப் பிரச்சனை தொடர்பாக பிபிசி நடத்திய புலனாய்வை இங்கே காணலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஏன் அந்தக்கவலை? தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் அப்படி என்ன பெரிதாக கெடுதல் நடந்து விடும்?
    • ஒம் 1000ரூபாய்க்கு பிற‌ந்த‌வ‌ங்ள் என்று  திருட‌ர்க‌ளை பார்த்து சொல்லி விட்டா ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் வென்று விட‌க் கூடாது என்று அந்த‌ தொகுதியில் ஒரு ஓட்டுக்கு 2000ரூபாய்......................ப‌டிச்ச‌ அறிவுள்ள‌ ஜீவிக‌ள் அந்த் 2000ரூபாயை வேண்டி இருக்காதுக‌ள் ஏழை ம‌க்க‌ள் க‌ண்டிப்பாய் வேண்டி இருப்பின‌ம்......................ப‌ண‌ம் கொடுக்கும் முறைய‌ முற்றிலுமாய் இல்மாம‌ ப‌ண்ண‌னும்...............................பொய் என்றால் பாருங்கோ என்னும் ப‌த்து வ‌ருட‌ம் க‌ழித்து காசு கொடுத்து ம‌க்க‌ளிட‌ன் ஓட்டை பெற‌ முடியாது...............கால‌ம் கால‌மாய் வேண்டின‌ வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் கை நீட்டி வேண்டுங்க‌ள்..................... சிறு கால‌ம் போக‌ காசு கொண்டு வ‌ருப‌வ‌ர்க‌ளுக்கு வீட்டுக்குள் வைச்சு ஊமை குத்து விழும் அதை காணொளி மூல‌ம் காண‌லாம் க‌ண்டு ரசிக்க‌லாம்😂😁🤣......................................
    • யார் து…துரைமுருகன் சொல்வதையா…நோ சான்ஸ்🤣. ஜூன் 4 தெரியும்தானே ஏன் அவசரம். எனது ஒரே கவலை பிஜேபி எவ்வளவு சீட் எடுக்கப்போகிறது என்பது மட்டுமே. பூஜ்ஜியம் என்றால் சந்தோசம்.  பூஜ்ஜியத்துக்கு மேல் கூடும் ஒவ்வொரு சீட்டுக்கும் ஏற்ப கவலை கூடும். தேர்தல் கட்டம் கட்டமாக தானே நடக்குது? இன்று முழு உபிக்கும் நடக்கவில்லை. நடந்த இடங்களில் 67% மாம். ஆனால் மேற்கு வங்கத்தில் நடந்த இடங்களில் 77 சதவீதமாம். இன்று நடந்த மொத்த தொகுதிகளில் 62% பதிவு. ஆனால் தமிழ் நாட்டு தொகுதிகளில் 72.09% நான் யாழ்கள திமுக ஆதரவாளன் இல்லை. ஆனால் சீமான், பிஜேபியை எதிர்ப்பவன். பழனிச்சாமி எதிர்கட்சி தலைவர், குறைந்ததது 29% வாக்கு வங்கி உள்ள கட்சியின் தலைவர். அவர் எப்படி வாக்கை பிரிப்பவர் ஆவார்? விட்டால் திமுக வும் வாக்கை பிரிக்கும் கட்சி என்பீர்கள் போலுள்ளது. 10% கீழே வாக்கு வங்கி, தனியே ஒரு தொகுதியிலும் வெல்ல வாய்ப்பு இல்லை என தெளிவாக தெரிந்தும், 39 தொகுதியிலும் நிற்பவர்கள்தான் வாக்கை பிரிப்போர்.
    • ர‌ம் மீண்டும் ஆட்சியை பிடிப்பார் பைட‌ன் வென்றால் ஆள் இல்லாத‌ இட‌த்துக்கு எல்லாம் கை காட்டுவார் ஹா ஹா...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.