Jump to content

இந்தியாவின் அழுத்தத்தால் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த இலங்கை முடிவு செய்துள்ளதா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் அழுத்தத்தால் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த இலங்கை முடிவு செய்துள்ளதா?

  • ரஞ்சன் அருண் பிரசாத்
  • பிபிசி தமிழுக்காக
3 மணி நேரங்களுக்கு முன்னர்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியுடன் (வலது) இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

பட மூலாதாரம்,NARENDRA MODI TWITTER PAGE

 
படக்குறிப்பு,

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியுடன் (வலது) இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

இலங்கையில் மூன்று முதல் ஐந்து வருட காலமாக வலுவிழந்துள்ள மாகாண சபைகளை, வலுப்படுத்தும் வகையில், மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட ஆரம்பித்துள்ளது.

இலங்கை மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த இலங்கை மத்திய அரசாங்கத்திற்கு இந்தியத் தரப்பில் அழுத்தங்களை பிரயோகிக்குமாறு, இலங்கை சென்றிருந்த இந்திய வெளியுறவுச் செயலருக்கு, இலங்கையின் சில கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனினும், இந்திய அரசின் அழுத்தத்தால் தேர்தல் நடத்தும் முடிவு எடுக்கப்படவில்லை என்று இலங்கை அரசு மறுப்பு தெரிவிக்கிறது.

கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களுக்காக ஆயுட்காலம் நிறைவடைந்து ஐந்து வருடங்கள் ஆகின்றன.

அத்துடன், வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆயுட்காலம் நிறைவடைந்து நான்கு வருடங்கள் கடந்துள்ள நிலையில், ஊவா, மேல் மற்றும் தென் மாகாணங்களின் ஆயுட்காலம் நிறைவடைந்து மூன்று வருடங்கள் ஆகின்றன.

கடந்த அரசாங்கமான 'நல்லாட்சி' காலப் பகுதியிலும் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது போன பின்னணியில், தற்போதைய அரசாங்கத்தினாலும் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாத நிலைமை காணப்பட்டது. (மைத்திரிபால சிறிசேனவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து ஐக்கிய தேசிய கட்சி நல்லாட்சி அரசாங்கம் என்ற பெயரில் ஒரு கூட்டணி அரசாங்கத்தை அமைத்திருந்தது.)

மாகாண சபைத் தேர்தல் முறையில் ஏற்படுத்தப்பட்ட மாற்றம் மற்றும் கோவிட் பரவல் ஆகிய காரணங்கள், மாகாண சபைத் தேர்தலை பிற்போடுவதற்கான காரணியாக அமைந்திருந்தது.

குறிப்பாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்ட போதிலும், மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாத நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டிருந்தது.

கடந்த அரசாங்கத்தினால் மாகாண சபை திருத்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமையினால், தேர்தலை நடத்தாத பிரதான காரணமாக அமைந்திருந்தது. இந்த சட்டமூலம் 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் தேதி நிறைவேற்றப்பட்டது.

விகிதாசார மற்றும் கலப்பு முறையில் மாகாண சபை உறுப்பினர்களை தெரிவு செய்வது, பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது ஆகிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

எனினும், தேர்தல் தொகுதிகளை வரையறுப்பதற்காக எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற தீர்மானம் நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது.

கொரோனா நெருக்கடிக்கு நடுவே இலங்கை 2020ல் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தியது.

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கொரோனா நெருக்கடிக்கு நடுவே இலங்கை 2020ல் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தியது. (கோப்புப்படம்)

எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற தீர்மானம் தோற்கடிக்கப்பட்ட பின்னணியிலேயே, மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

தேர்தலை நடத்துவதற்கு மாற்று திட்டங்கள் முன்வைப்பு

மாகாண சபைத் தேர்லை நடத்துவதற்கு இரண்டு மாற்று திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

  • எல்லை நிர்ணயத்தை நிறைவு செய்து, அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி, மாகாண சபைத் தேர்தலை நடத்துதல்.
  • புதிய சட்டமூலமொன்றின் ஊடாக, பழைய முறைப்படி மாகாண சபைத் தேர்தலை நடத்துதல்.

தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பிலான விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு அண்மையில் கூடியுள்ளது.

இதன்படி, குறித்த இரண்டு யோசனைகள் தொடர்பில், தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பிலான விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன, சட்ட மாஅதிபரின் நிறைப்பாட்டை கோரியுள்ளார்.

சட்டமொன்றை நிறைவேற்றாமல், பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது என சட்ட மாஅதிபர், தெரிவுக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.

இதேவேளை, மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து, நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ ஏனைய கட்சிகளுடன் க லந்துரையாடல்களை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பழைய முறைப்படி தேர்தலை நடத்த தீர்மானம்?

மாகாண சபைத் தேர்தலை பழைய முறைப்படி நடத்துவதற்கு தற்போது பல கட்சிகள் இணக்கம் வெளியிட்டு வருகின்றன.

இந்த நிலையில், எதிர்வரும் நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் விவாதிக்கப்படவுள்ளமையினால், வரவு செலவுத்திட்ட விவாதம் நிறைவடைந்ததன் பின்னர், தேர்தலை நடத்துவது தொடர்பிலான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்பிக்க எதிர்பார்த்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, எதிர்வரும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதங்களில் பழைய முறையில் தேர்தலை நடத்துவது தொடர்பிலான புதிய சட்டமூலமொன்றை நாடாளுமன்றத்தில் சமர்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சட்டமூலம் நிறைவேற்றப்படும் நாள் முதல், எதிர்வரும் ஓரிரு மாதங்களில் தேர்தலை நடத்த கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

எதிர்வரும் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும் என்ற நிலைப்பாட்டிற்கு அனைத்து கட்சிகளும் ஏகமனதாக இணக்கம் வெளியிட்டதாகவும் அவர் கூறுகின்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு

சிறிய சட்ட திருத்தத்தின் ஊடாக, பழைய முறையின் பிரகாரம், மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும் என தான் கலந்துரையாடலில் கருத்து வெளியிட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்..ஏ.சுமந்திரன் தெரிவிக்கின்றார்.

எம்..ஏ.சுமந்திரன்
 
படக்குறிப்பு,

எம்..ஏ.சுமந்திரன்

இந்த சட்ட திருத்தம் தொடர்பிலான சட்டமூலமொன்றை தான் 2019ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தான் சமர்ப்பித்திருந்ததாக அவர் கூறுகின்றார்.

பழைய முறையின் பிரகாரம், தேர்தலை நடத்த முடியும் என்ற விதத்தில் சட்ட மாஅதிபர் பதிலளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இதேவேளை, தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பிலான விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு கூட்டத்திற்கு வருகைத் தந்திருந்த அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என தெரிவித்திருந்ததாகவும் அவர் கூறினார்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தமக்கு பல அழுத்தங்கள் காணப்படுவதாக அன்றைய கூட்டத்தில் பஷில் ராஜபக்ஷ தெரிவித்திருந்ததாக எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர், இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு, தனது விஜயத்தை நிறைவு செய்த பின்னணியிலேயே, அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்த அறிவிப்பை வெளியிட்டதாகவும் அவர் கூறினார்.

மலையக மக்கள் முன்னணியின் நிலைப்பாடு

பழைய முறையின் பிரகாரம், மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுமாக இருந்தால், அதனை தாம் முழுமையாக வரவேற்பதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வீ.இராதாகிருஸ்ணன் தெரிவிக்கின்றார். பிபிசி தமிழுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

V. Radhakrishnan

பட மூலாதாரம்,V. RADHAKRISHNAN FACEBOOK PROFILE

இந்திய வெளியுறவுத்துறை செயலாளரினால் இலங்கைக்கு விடுக்கப்பட்ட அழுத்தங்களே, மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுவதற்கான காரணம் என அவர் கூறினார்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான தீர்மானத்தை அரசாங்கம் எட்டியதன் பின்னணியில், 100 வீதம் இந்தியாவின் அழுத்தம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

அத்துடன், அண்மையில் நிறைவடைந்த ஐ.நா பொதுச் சபை கூட்டத்தின் போதும், இதற்கான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வீ.இராதாகிருஸ்ணன் கூறுகின்றார்.

சிறுபான்மை கட்சிகள் இந்தியாவிடம் விடுத்த கோரிக்கை

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன ஷ்ரிங்லாவின் இலங்கை விஜயத்தின் போது, அவரை அதிகாரபூர்வமாக சந்தித்த தமிழ் கட்சிகள், மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த இலங்கை மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தங்களை பிரயோகிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

தமிழ்; முற்போக்கு கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமை மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியன இந்த கோரிக்கையை இந்தியாவிடம் விடுத்திருந்தனர்.

இந்தியாவின் நிலைப்பாடு

அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் கீழான அதிகாரங்களை பகிர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவது குறித்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன ஷ்ரிங்லா வலியுறுத்தியதாக கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன ஷ்ரிங்லாவின் இலங்கை விஜயத்தின் பின்னர், இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தீர்மானிப்பது இந்தியாவா இலங்கை நாடாளுமன்றமா?

இலங்கை அதிபருடன் இந்திய வெளியுறவுச் செயலர்

பட மூலாதாரம்,HIGH COMMISSION OF INDIA IN COLOMBO

 
படக்குறிப்பு,

இலங்கை அதிபருடன் இந்திய வெளியுறவுச் செயலர்

மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு இந்தியா எந்தவிதத்திலும் அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிக்கின்றார்.

கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கையில் தேர்தலை எவ்வாறு நடத்துவது, எந்த முறையில் நடத்துவது என்பது குறித்து இலங்கை நாடாளுமன்றமே தீர்மானிக்கும் எனவும் அவர் கூறினார்.

புதிய சட்டமூலமொன்றை கொண்டு வந்து, அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி, மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்கின்றது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழு என்ன சொல்கிறது?

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுவது குறித்து அரசாங்கம் இதுவரை தமக்கு அறிவிக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமால் புஞ்சிஹேவா பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு முன்னர், மாகாண சபை சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு அரசாங்கம் மற்றும் நாடாளுமன்றம் வசமானது எனவும் அவர் கூறுகின்றார்.

மாகாண சபைத் தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டதன் பின்னரே, தமக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பிலான தீர்மானங்களை எடுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், நாட்டின் கோவிட் நிலைமை உள்ளிட்ட விடயங்களை ஆராய்ந்ததன் பின்னரே, தமக்கு தேர்தலை நடத்துவதற்கான தீர்மானத்தை எட்ட முடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமால் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-58863347

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.