Jump to content

மக்கள் திண்டாட்டம் ! அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றின் விலை அதிரடியாக உயர்வு - முழு விபரம் இதோ !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் திண்டாட்டம் ! அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றின் விலை அதிரடியாக உயர்வு - முழு விபரம் இதோ !

(இராஜதுரை ஹஷான்)

இறக்குமதி செய்யப்படும் பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து ஆகிய அத்தியாவசிய பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலை  நீக்கப்பட்டதை தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதனால் பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த முடியாது என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சும்,அமைச்சரவை அமைச்சர்களும் குறிப்பிட்டுள்ளார்கள்.

பால்மா, சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் தற்போதும் சந்தையில் இப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றமை அவதானிக்க முடிகிறது. அத்தியாவசிய பொருட்கள் விலை தொடர்ச்சியாக அதிகரிக்கப்படுகின்றமைக்கு நுகர்வோர் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

எரிபொருள்

அத்தியாவசிய பொருட்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் எரிபொருளின் விலை அதிகரிப்பதற்கான சாத்தியம் காணப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி வரை கனிய வள கூட்டுத்தாபனம் 70 பில்லியன் நட்டத்தை எதிர்க்கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

எரிபொருளின் விலை இறுதியாக கடந்த ஜூன் மாதம் 11 ஆம் திகதி அதிகரிக்கப்பட்டது.92 ஒக்டெய்ன் பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 20 ரூபாவினாலும், 95ஒக்டெய்ன் பெற்றோல் ஒரு லீற்றரின் ஒன்றின் விலை 23 ரூபாவினாலும்,ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 7 ரூபாவாலும்,சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 12 ரூபாவினாலும்,மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 7 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டது.

சமையல் எரிவாயு

லிட்ரோ

லிட்ரோ ரக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை நேற்று நள்ளிரவு முதல் முன்னறிவிப்பின்றிய வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை 1,257 ரூபாவினாலும், 5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயுவின் விலை 503 ரூபாவினாலும், 2.5 கிலோ கிராம் நிறைவுடைய எரிவாயுவின் விலை 231 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் புதிய விலை 2,750 ரூபாவாகவும், 5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் புதிய விலை 1,101 ரூபாவாகவும், 2.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயுவின் புதிய விலை 520 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

லாக் ரக சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து லிட்ரோ ரக சமையல் எரிவாயுவின் விலையை 1200 ரூபாவினால் அதிகரிக்குமாறு கட்டுப்பாட்டு விலை அமுலில் இருக்கும் போது லிட்ரோ நிறுவனத்தினர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் அப்போது அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. அத்தியாவசிய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டு அதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டவுடன் லிட்ரோ நிறுவனத்தினர் 1200  ரூபாவுடன் மேலதிகமாக 57 ரூபாவையும் இணைத்து 1257 ரூபாவினால் விலையை அதிகரித்துள்ளது.

லாப்

லாப் ரக சமையல் எரிவாயுவின் விற்பனை விலை நேற்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.அதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு சிலின்டரின் விலை 984 ரூபாவினாலும், 5 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலின்டரின் விலை 393 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 12.5 கிலோகிராம் நிறையுடைய சிலின்டரின் புதிய விலை 2840 ரூபாவாகவும், 5 கிலோகிராம் நிறையுடைய சிலின்டரின் புதிய விலை 1,136 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் லாப்ரக சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டது.12.5 கிலோகிராம் நிறையுடைய சிலின்டரின் விலை 363 ரூபாவினாலும், 5கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலின்டரின் விலை 145 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டன. விலை அதிகரித்தும் லாப் ரக எரிவாயு சிலிண்டரை பெற்றுக் கொள்வதில் நுகர்வோர் பெரும் அசௌகரியங்களை எதிர்க்கொண்டனர். சந்தையில் லாப் ரக எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.இவ்வாறான பின்னணியில் தற்போது மீண்டும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

கோதுமை மா

கோதுமை மாவின் விலையும் நேற்று காலை முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய கோதுமை மா ஒரு கிலோகிராம் ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக செரண்டிப் கோதுமை மா உற்பத்தி ஆலை நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய 1 கிலோகிராம் கோதுமை மாவின் புதிய விற்பனை விலை 97 ரூபாவாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிறீமா மா நிறுவனம் ஒரு கிலோகிராம் மாவின் விற்பனை விலையை 15 ரூபா தொடக்கம் 20 ரூபா வரையில் அதிகரிக்குமாறு தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளது.

சீமெந்து

50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து பெக்கெட்டின் விலை நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் 93 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து பெக்கெட்டின் புதிய விலை 1098 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாட்டின் உற்பத்தி தேவைக்கு பயன்படுத்தப்படும் சீமெந்தில் 40 சதவீதம் தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யப்படுவதுடன்,60 சதவீதம் சீமெந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

பால்மா

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை 250 ரூபாவினாலும், 400 கிராம் பால்மாவின் விலை 100 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.இதற்கமைய சந்தையில் தற்போது ஒரு கிலோகிராம் பால்மாவின் புதிய விலை 1195 ரூபாவாகவும், 400 கிராம் பால்மாவின் புதிய விலை 480 ரூபாவாகவும் காணப்படுகிறது.

பேக்கரி உற்பத்தி உணவு பொருட்கள்

கோதுமை மா, சமையல் எரிவாயு, பால்மா ஆகியவற்றின் விற்பனை விலை அதிகரிக்கப்பட்டுள்ளதனால் பேக்கரி உற்பத்தியிலான உணவுகளின் விற்பனை விலையை அதிகரிக்க வேண்டும்.என பேக்கரி உணவு உற்பத்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் பேக்கரி உற்பத்தி உணவு பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டது. பாண் ஒரு இறாத்தலின் விலை 5 ரூபாவினாலும், பனிஸ், டீ பனிஸ், ஆகியவற்றின் விலை 10 ரூபாவினாலும், ஒரு கிலோகிராம் கேக்கின் விலை 100 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
 

https://www.virakesari.lk/article/115093

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சனம் எல்லாம் நாட்டை விட்டு ஓடப்போகுதுகள்.நல்ல  அடி மாட்டு விலைக்கு தீவை வாங்கலாம்.லாபாய் லாபாய்.😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படிப்படியாகச் சிறீமாவோ அம்மையாரின் ஆட்சிக்காலத்தை(1970) நோக்கி இலங்கை செல்கிறதா? விலைவாசி உயர்வு, திட்டமிட்ட தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம். அக்காலத்தில்  வடபகுதியில் விவசாயமாவது கைகொடுத்தது. இன்று விவசாயத்திலே முன்புபோல் ஈடுபடும் நிலையற்ற சூழலில் மேலும் படுமோசமானதொரு நிலையை மக்கள் சந்திக்கப்போகின்றார்கள்போல் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, சுவைப்பிரியன் said:

சனம் எல்லாம் நாட்டை விட்டு ஓடப்போகுதுகள்.நல்ல  அடி மாட்டு விலைக்கு தீவை வாங்கலாம்.லாபாய் லாபாய்

அப்படியெல்லாம் நினைக்கப்படாது அண்ணை 
****  காய்ஞ்சாலும் துவேசம் விட்டுப்போகாது, கொலைப்பட்டினியில் கிடந்தாலும் தமிழனை நெருக்குவேன் என்று சொன்னால் போதும், சிங்கள செத்த  எலும்புக்கூடும் போய் வாக்குபோட்டுவிட்டு வரும்    

Link to comment
Share on other sites

33 minutes ago, nochchi said:

அக்காலத்தில்  வடபகுதியில் விவசாயமாவது கைகொடுத்தது. இன்று விவசாயத்திலே முன்புபோல் ஈடுபடும் நிலையற்ற சூழலில்

அதென்ன, “இன்று விவசாயத்திலே முன்புபோல் ஈடுபடும் நிலையற்ற சூழல்” ??

வானம் பொழிகிறது, பூமி விளைகிறது, அதற்குள் நீங்களா விவசாயத்திலே முன்புபோல் ஈடுபடும் நிலையற்ற சூழல் உருவாக்குபவர்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.