Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மரணமும் சில கதைகளும்

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

செப்டெம்பர் மாதம் ஐந்தாம் திகதி, தந்தையார் திடீரென்று காலமானார். அவ்வதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாவிட்டாலும், சொல்ல வேண்டிய சில கதைகளும் பகிரவேண்டிய சில செய்திகளும் பதிவாக்கப்பட வேண்டியவை. அதற்காக இந்தவாரப் பத்தியைப் பயன்படுத்த விரும்புகிறேன். இந்நிகழ்வுகள், இலங்கையின் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்புகின்றன. அறம் குறித்துத் தொடர்ந்து போதிக்கப்படும் கற்பிதங்கள் மீது கல்லெறிகின்றன.  

ஒருமரணம் தரும் வேதனையையும் அதிர்ச்சியையும், அதைத் தொடர்ந்து நிகழும் நிகழ்வுகள் மேலோங்கச் செய்யும்போது, விரக்தியும் வெறுப்புமே மிஞ்சுகின்றன. எந்தவொரு நோயுமற்ற மனிதனின் திடீர் மறைவு ஏற்படுத்திய அதிர்ச்சி ஒருபுறமும் என்ன நடந்தது என்ற விடைதெரியாத கேள்வி மறுபுறமுமாய் காலங்கள் கடக்கின்றன. 

அப்பாவின் மரணம் கொரோனா மரணம் என்று பரிசோதனை அறிக்கை வழங்கப்பட்ட நிலையில், அப்பாவை நன்கறிந்த வைத்தியர்கள், இது மாரடைப்பால் ஏற்பட்ட மரணமே என்று வாதிடுகிறார்கள். அது எதுவாகவும் இருந்துவிட்டுப் போகட்டும்; ஆனால், நிர்வாக ரீதியாக ஒரு மரணத்தைச் சுற்றி நிகழும் நிகழ்வுகள் ஏற்படுத்துகின்ற மனஉளைச்சல் சொல்லி மாளாதவை.

கொரோனா மரணம் என்று ‘சொல்லப்பட்ட’ ஒரு சமானியனின் உடலை, இறுதியாக ஒருமுறை பார்ப்பதற்கு நிறையவே போராட வேண்டியிருந்தது. உலகில் வாழ்வாங்கு வாழ்ந்த ஒருவரை, இறுதியாகப் பார்க்க குடும்பத்தினருக்கு சில நிமிடங்கள் மட்டுமே வழங்கப்பட்டன; கொரோனா நல்ல சாட்டானது. 

இலங்கையில் எல்லாக் கொரோனா மரணங்களும் ஒரே மாதிரியானவையல்ல. சில அதிவிஷேசமானவை. அம்மரணச் சடங்குகளில் பலர் பங்குபெறலாம்; பிரித் ஓதலாம்; மரணத்தைக் கூட்டாக நினைவுகூரலாம். ஆனால், மரணித்த சமானியனை இறுதியாக ஒருதடவை பார்ப்பதற்கு, அதிகாரத்துடன் இடையறாது போராட வேண்டும். 

உலகில் இறக்கும் அனைவரும், மரியாதையான இறுதியாத்திரைக்கு உரித்துடையவர்கள். ஆனால், இப்போது இலங்கையில் நடப்பது அதுவல்ல. மரணித்த ஒருவரை மரியாதையாக வழியனுப்ப அனுமதியாத அரசாங்கத்தையும் அதை நடைமுறைப்படுத்தும் மனிதர்களையும் என்னவென்பது? மனித வாழ்வும் மனித மாண்பும் பொருளற்றுப்போன ஒரு தேசத்தில், எதிர்பார்ப்பதற்கு அதிகமில்லைத்தான். 

அப்பாவின் மரணத்துக்கு, ‘கொரோனா’ காரணமாக்கப்பட்டதால், அதைத் தொடர்ந்து வீடு 14 நாள்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டது. 14 நாள்கள் முடிவடைந்த நிலையில், மேலும் ஏழு நாள்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளானது. 

“ஏன் மேலதிகமாக ஏழு நாள்கள்” என்று கேட்கப்பட்ட கேள்விக்கான பதிலை, பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் வழங்க முடியவில்லை. வீட்டில் உள்ளவர்கள் பி.சி.ஆர் பரிசோதனை செய்யமுடியுமா என்று கேட்டால், “அவசியமில்லை, 21 நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகினால் போதும்” என்று சொல்லப்பட்டது.

21 நாள்களின் பின்னர் பரிசோதனை செய்ய வேண்டுமா என்ற கேள்விக்கு, வீட்டுக் கதவில் ஒட்டப்பட்டத்தை கிழித்து விட்டு, வெளியே செல்லலாம் என்று பதில் வந்தது. சட்டத்தையும் ஒழுங்கையும் மதித்து நடக்க விரும்புகிறவர்களின் கேள்விகளுக்கான பதில்களோ செயல்களின் நியாயங்களோ என்றும் சொல்லப்படுவதில்லை. 

கொரோனா அச்சம், ஒருவகை மனநோயாக உருவெடுத்துள்ளது. அந்நோயை, எயிட்ஸ் நோய்க்கு நிகரானதாகச் சித்திரித்துப் பயம் காட்டும் போக்கு, அபத்தமானது மட்டுமன்றி ஆபத்தானதும் கூட!

இரண்டு சம்பவங்களை இங்கு நினைவுகூர்கிறேன். எங்கள் வீடு தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், எங்கள் வீட்டுக்கு யாரும் வராமல் இருப்பதை உறுதிசெய்யும் பணியை, அயலவர்கள் கண் துஞ்சாது முன்னெடுத்தார்கள். வீட்டுக்கு அனுப்பப்பட்ட பொருட்களைக் கொண்டுவந்தவர்களைத் தடுத்து நிறுத்தி, பொருட்களை வாசலில் வைப்பதை அனுமதிக்கவில்லை. அப்பொருட்களை எடுக்க நாம் கதவைத் திறந்தால், எங்கள் வீட்டில் உள்ள கொரோனா வைரஸ், காற்றின் ஊடாக வெளியே வந்துவிடும் என்று சொன்னார்கள். 

எமக்கு, உணவுப்பொருட்களை கொண்டுவந்த நண்பனொருவனை இடைமறித்து எச்சரித்த அயலவர்கள், முகக்கவசங்களை அணிந்திருக்கவில்லை; சமூக இடைவெளியைப் பின்பற்றவில்லை. ஆனால், நண்பனுக்குக் கொரோனா பற்றிப் பாடமெடுத்தார்கள். மிகக் கொடிய நோயொன்றுக்கு ஆளாகிய மனிதர்களைக் கொண்ட வீடாக எங்கள் வீடு பார்க்கப்பட்டது. இந்த மனநிலை, அச்சத்தின் விளைவிலானது. இந்த அச்சத்தை விதைத்தது யார்? இந்த அச்சத்தில் பயனடைவது யார்? இந்த அச்சம் நாட்டின் ஏனைய விடயங்களில் இருந்து மக்களைத் திசைதிருப்புகிறது.  

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக, கொரோனாவுடன் இலங்கையர்கள் அல்லற்படுகிறார்கள். ஆனால், இன்றுவரை ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட பதிலிறுப்பு ஒன்றைச் செய்ய இயலவில்லை. கொரோனா தொற்றை அரசாங்கம் கையாண்ட விதம், தொடக்கத்திலிருந்து தவறு. கொரோனா பற்றி மிகையான பீதியைக் கிளப்பியதும் போதாமல், எந்த முன்னேற்பாடுகளுமின்றி ஊரடங்கைப் பிறப்பித்து, மக்களை அல்லற்படுத்திய போதும் எவரும் மறுபேச்சுப் பேசவில்லை. 

அரசாங்கத்தின் அணுகுமுறையின் கோளாறுகளை, அரசியல் இலாப நோக்கு இல்லாமல், அறிவார்ந்த முறையில் மக்களிடையே பரப்புவதன் மூலமும் பரந்த உரையாடல் மூலமும் பிரச்சினையை கையாளச் சரியான வழிகளை ஆராயவும் எந்த அரசியல் கட்சிக்கும் துணிவிருக்கவில்லை. மக்களிடையே சென்று கலந்துரையாடும் மரபை, அரசியல் கட்சிகள் இழந்து நீண்டகாலமாகிவிட்டது.  

அரசாங்கம் போரை வென்றது போல, வைரஸையும் வெல்கின்றது என்ற வெட்டிப்பேச்சு உண்மை போல் தெரிந்த வேளை, ஊமையாய் இருந்தோர் புதிதாக எதை விமர்சிக்க இயலும்? மருத்துவ சேவையினர் ஆற்ற வேண்டிய பணியை இராணுவத்தினரிடம் ஒப்படைத்தது தவறு என்று சொல்லும் தைரியம், பலரிடம் இல்லாத காரணம் இராணுவத்துடன் முரண்படத் தைரியமின்மையே. இலங்கை இன்னும் இராணுவமைய சிந்தனைவாதத்திலிருந்து வெளியேறவில்லை. எனவே அதற்கான விலையை கொடுத்தே ஆகவேண்டும். 

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்போம் என்று அறிவித்ததன் மூலம், பிரதான எதிர்க்கட்சி அரசாங்கத்தை விமர்சிக்கும் தகுதியை இழந்தது. 

இன்றுவரை கேட்கப்படாத கேள்வி யாதெனில், மக்களின் வாழ்வாதாரத்துக்கு கேடின்றி, தொற்றைத் தடுக்கும் வழிகளை அரசாங்கம் ஏன் விசாரிக்கவில்லை என்பது. இப்போது தடுப்பூசிகள் மூலம் தொற்றை முடிவுக்குக் கொண்டுவரலாம் என்று அரசாங்கம் சொல்லிவருகிறது. தடுப்பூசி அனைத்துக்குமான தீர்வல்ல! 

உலக சுகாதார நிறுவனம் 2022 டிசெம்பரில் இத்தொற்று கட்டுக்குள் வருவதற்கு வாய்ப்புண்டு என்று சொல்லியுள்ளது. அதுவரை என்ன செய்வது? மேற்குலக நாடுகள் போல மூன்றாவது, நான்காவது தடுப்பூசிகளுக்குச் போகப்போகிறோமா?

ஆட்சியாளர்களுக்கு கொரோனா நல்லதொரு காரணமாகிவிட்டது. அனைத்தையும் அதன் மீது போடவும் பொறுப்புகளில் இருந்து நகரவும் இயலுமாகிறது. இலங்கையின் ஆட்சியாளர்களின் செயல்களைப் பார்க்கும் போது, டொன் கிஹோட்டே நினைவுக்கு வருகிறது. 

மிஹுவெல் டி செர்வான்டெஸ் 1605இல் ஸ்பானிய மொழியில் எழுதிய ‘டொன் கிஹோட்டே’ (Don Quixote) உலகின் அதி சிறந்த ஆக்க இலக்கியங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதை உலகின் முதலாவது நாவல் எனவும் கூறுவர். ‘லா மன்ச்சாவின் கூர்மதி மிக்க இடால்ஹோ டொன் கிஹோட்டே’ (The ingenious Idalgo Don Quixote of la Mancha) எனும் தலைப்பில் வெளியான இந்நாவலின் இரண்டாம் பாகம் 1615இல் வெளியானது. 

50 வயது தாண்டிய கிராமத்துக் கனவானான அலொன்ஸோ கிஹானோ, வீரசாகசக் கதைகள் பலவற்றை வாசித்து, அவற்றால் மிகுதியாகப் பாதிக்கப்பட்டு, தன்னையும் முன்னைய காலத்து வீரப் பெருந்தகைகளில் ஒருவனாகக் கற்பனை செய்து, தன்னை ‘லா மன்ச்சா என்ற ஸ்பெயினிலுள்ள பெருநிலப்பரப்பொன்றின் டொன் கிஹோட்டே’ என அழைத்துக் கொண்டு, சாகசச் செயல்களில் ஈடுபட விழைகிறான். தனது நோஞ்சான் குதிரைக்கு ‘றொசினாட்டே’ எனப் பெயரிடுகிறான். 

டொன் கிஹோட்டேயினது வீரசாகசப் பயணம் தொடர்கையில், யதார்த்தம் பற்றிய உணர்வே அவனிடம் இல்லாமல் போகிறது. டொன் கிஹோட்டே, வலிந்து வம்பை விலைக்கு வாங்கி, அடி உதையையும் அவமானத்தையும் பெற்றாலும், அவனுக்குத் தன்னைப் பற்றிய மயக்கம் தீராது, மேலும் கற்பனையான எதிரிகளுடன் மோதுகிறான். 

image_ee7c9dfd55.jpg

லா மன்ச்சா பீடபூமியின் நிற்கும் பெரிய காற்றாலைகள் அவனுக்குப் பயங்கர இராட்சதர்களாகத் தெரிகின்றனர். குதிரையில் ஏறிக் குத்தீட்டியுடன் காற்றாலைகளைப் போரிட்டுப் பலமுறை விழுகிறான். 

நூலின் இரண்டாம் பாகத்தில், டொன் கிஹோட்டேக்குக் காலங்கடந்து நிதானம் திரும்பிய போது, வாழ்க்கை பொருளற்றுப் போகிறது. டொன் கிஹோட்டே, ஏளனத்துக்குரிய ஒரு கதாநாயகன். தம்மைப் பற்றி மிகையான மதிப்புடையோராகத் தம்மாலேயே உலகை உய்விக்க இயலும் என எண்ணுவோருக்குரிய ஒரு படிமமாக டொன் கிஹோட்டேயைக் கொள்ளலாம். இலங்கையின்  டொன் கிஹோட்டே யாரென்பதை, நீங்களே முடிவுசெய்து கொள்ளுங்கள்.     

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மரணமும்-சில-கதைகளும்/91-282648

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Popular Now

  • Topics

  • Posts

    • நீங்கள் சீமானின் அநியாயம் மட்டும் தெரிந்த பால்குடி.😂 தமிழ்நாட்டு அரசியலுடன் கலந்த  சினிமா அவலங்களை உங்களுக்காக மட்டுமே இங்கே  கொஞ்சம் கொஞ்சமாக எழுதுகின்றேன் காத்திருங்கள். 😎 யாழ் களமும்,அதன் உறுப்பினர்களும் கிணற்று தவளையல்ல என்பதை நெஞ்சில் நிறுத்திக்கொண்டு காத்திருங்கள்..
    • ஊழ‌ல் கஞ்சா திமுக்கா எத்த‌னை கூட்ட‌னி வைச்சு தேர்த‌ல‌ ச‌ந்திக்குது...................சீமானின் க‌ட்சி த‌னித்து அதை நினைவில் வைத்து இருங்கோ இதே சீமான் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னிக்கு போய் இருந்தால் 1000கோடி காசும் 10 தொகுதியும் குடுத்து இருப்பின‌ம் நாம் த‌மிழ‌ர் 40 இட‌ங்க‌ளில் தோத்தாலும் நேர்மைக்கு கிடைச்ச‌ தோல்வி........................ஊட‌க‌ ப‌ல‌ம் இல்லை ப‌ண‌ ப‌ல‌ம் இல்லை..............ஊட‌க‌ங்க‌ளில் 4ங்கு முனை போட்டி என்று காட்டாம‌ வெறும‌ன‌ 3மூனை போட்டி என்று போடுவ‌து சீமானை வ‌சை பாட‌ 200ரூபாய் கொத்த‌டிமைக‌ளை இற‌க்கி இருக்கின‌ம் கொத்த‌டிமைக‌ள் வேண்டுற‌ காசுக்கு மேல‌ கூவுங்க‌ள் ஹா ஹா 65வ‌ருட‌ க‌ட்சி ஜ‌ரிம்க்கு  200ரூபாய் கொடுத்து அவ‌தூற‌ ப‌ர‌ப்ப‌ விடுவ‌து........................ இப்ப‌டி சொல்லிட்டு போக‌லாம் திமுக்கா ப‌ண‌த்தை ந‌ம்பி தான் தேர்த‌ல‌ ச‌ந்திக்கிற‌து இவ‌ர்க‌ள் ஆட்சிக்கு வ‌ந்து இந்த‌ மூன்று ஆண்டுக‌ளில் எவ‌ள‌வு ஊழ‌ல்க‌ள் க‌ஞ்சா மோசடி பொன்மொடி சிறை போக‌ வேண்டிய‌வ‌ர் தேர்த‌ல் டீலிங்கை பிஜேப்பி கூட‌ பேசி த‌ப்பிச்சிட்டார் சிறைக்கு ப‌ய‌ந்து த‌மிழ் நாட்டில் ம‌றைவுக‌மாய் பிஜேப்பிய‌ திமுக்கா வ‌ள‌த்து விடுது ஹா ஹா.....................................
    • சினிமா காலத்தை வைத்து பார்த்தால் கருணாநிதியே ஆட்சி கதிரையில் அமர்ந்திருக்க முடுடியாது.நீங்கள் விரும்பினால்  படங்களுடன் பூரண விளக்கம் தரப்படும்  ஓகேயா? முதலில் கனிமொழியுடம் தொடங்கவா? ஆதாரம் கேட்டால் படங்கள் போட்டோக்கள் எக்ஸ்சற்றாக்கள் இணைக்கலாம். 😂
    • ஆழ்ந்த இரங்கல்கள். மேலே  ஏராளன் இணைத்த தினக்குரல் பத்திரிகையில் 1933 ஓகஸ்ட்இல் பிறந்த எதிர்வீரசிங்கம் வயது 89 என்று எழுதியிருக்கிறார்கள். 90 என்றுதானே வரவேண்டும்?. அவர் மத்திய கல்லூரியில் படிக்கும் போது இலங்கை சாதனையை முறியடிக்கும் போது ,  கொழும்பில் வெளிவந்த ஆங்கில பத்திரிகை ஒன்றில் இவரது பெயரை எதிர்வீரசிங்க என்று எழுதியிருந்தது. அப்பொழுது மத்திய கல்லூரியின் அதிபர் சிமித் அவர்கள் ‘எதிர்வீரசிங்க அல்ல நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்’  என்று எழுதிய கடிதம் அதே பத்திரிகையில் பிறகு வந்தது.  ஆசிய விளையாட்டுப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றபின்பு யாழ் புகையிரத நிலையத்தில் இருந்து மத்திய கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டு ,எதிர்வீரசிங்க அவர்களுக்கு சிறந்த வரவேற்பு பாடசாலையில்வழங்கப்பட்டது.  -  மத்திய கல்லூரியின் பழைய மாணவரான எனது தகப்பனார் சொன்ன தகவல் இவரும் , இவரது சகோதரர்களும் படிக்கிற காலத்தில் மத்திய கல்லூரியில்துடுப்பாட்டத்தில் ஆரம்ப வேகப்பந்தாளராக விளங்கினார்கள் (Opening blower). 
    • அட்லீஸ்ட் விஜயலக்சுமிக்கு செய்தது போல் அநியாயம் செய்யாமல் தன்னை நம்பி வந்த பெண்ணை கண்ணியத்தோடு நடத்தினார் என நினைக்கிறேன்🤣. பதில் விளக்கம் போதும் என நினைக்கிறேன்🤣 ஐயகோ….இரு மாநில ஆளுனர்….ஆட்டுகுட்டி கதையை கேட்டு…
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.