Jump to content

கிஷோரில் இருந்து சாட்டை முருகன்களை வரை ஆதரிக்கிற நடுநிலையாளர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
ஆர். அபிலாஷ்
 
18ED3056-5F77-486E-ADD0-895191FA4FBE.webp
 
569D75A5-D9B7-44D9-AA35-E166DFE51E42.jpeg
 

 

சாட்டை முருகன் கைதை ஒட்டி கண்டனம் தெரிவித்து எழுதிய சமஸ் அதற்குள் சில குழப்பமான caveatsகளையும் வைக்கிறார். முதலில், தான் “அவதூறு, வசை, பொய்ப் பிரச்சாரம், வன்மத் தாக்குதல்களுக்கு எந்த இடத்திலும் 'நடுநிலை' என்ற பெயரில் இதுவரை இடம் அளித்ததும் இல்லை” என்கிறார். இது சரி என்றால் முதல்வர் ஸ்டாலின் ஒரு தந்தை, தாய்க்கு பிறந்தவர் அல்ல என சாட்டை முருகன் கூறியது வசையாகாதா? சாட்டை முருகன் ஒரு தலைவரை இவ்வாறு வசைபாடும் போது அவருடைய பெற்றோரின் ஒழுக்கத்தை கேள்விக்குள்ளாக்குகிறார். இது வசை, அவமதிப்பு அல்லவென்றால் வேறென்ன? சமஸ் ஒரு மாற்றுப் பெயரை அளிக்கிறார் - தவறான கருத்து! ஆஹா!

 “'கருத்துச் சுதந்திரம் எப்போதும் தவறான கருத்துகளை வெளிப்படுத்துவதற்கான உரிமையையும் உள்ளடக்கியதுதான்.'”

எனக்கு உண்மையிலேயே புரியவில்லை - திமுக அரசு ஆட்சி அமைத்ததில் இருந்தே சகிப்புத்தன்மை இல்லாமல் மாற்றுக்கருத்தாளர்களை கைது செய்து வருவதாக சமஸ் கூறுகிறார். இதை திமுக ஆதரவு எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் கண்டிப்பதில்லை என்று வேறு வருந்துகிறார். அட, யார் அந்த ‘தவறான கருத்து’ கூறி கைதான மேதைகள், போராளிகள் என்று பார்த்தால் “ஹலோ நான் தாங்க அது” என கைதூக்குபவர் நமது கிஷோர் கெ ஸ்வாமி.

“தமிழக அரசு சமீப காலமாக இணையவெளியில் இப்படிப் புழங்குவோர் மீது காவல் துறை வழி  எடுத்துவரும் நடவடிக்கை கண்டனத்துக்கு உரியது. 'எல்லோர் குரல்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும்;  களங்கங்கள் ஏற்படா வண்ணம் இந்த ஆட்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்' என்கிற  முதல்வரின் முனைப்புக்கு  எதிரானது.” என்கிறார் சமஸ்.

 கிஷோர் யார்? அவர் தொடர்ந்து பெண்களை அவதூறு பண்ணுவது, பாலியல் தொந்தரவு பண்ணுவது, தலைவர்களை பாலியல் அவதூறு செய்து மிரட்டுவதையே தொழிலாக பண்ணி வந்தவர். அவர் சொல்லுவதை அரசியல் சமூகக் கருத்து என சமஸ் கூறுகிறாரா? 

“பல கோடிப் பேரின் பிரதிநிதியான ஓர் அரசு பெரிய உள்ளத்தோடுதான் இவற்றை அணுக வேண்டும்.”

கிஷோர் கெ ஸ்வாமி கவின் மலர், நடிகை ரோகிணி போன்றோருக்கு செய்த அவதூறுகள், தொந்தரவுகளை அவர் சமஸ் தனக்கு ஒரு மகள்  மகள் இருந்து அவருக்கு செய்திருந்தால் அதை மன்னிக்க வேண்டிய “தவறான கருத்து” எனக் கூறி பெரிய உள்ளத்துடன் ஏற்றுக் கொள்வாரா? மாட்டார். அவர் மட்டுமல்ல, எந்த அறிவுள்ள மனிதனும் ஏற்க மாட்டான். கிஷோரில் இருந்து மாரிதாஸ், மதன் போன்றவர்கள் எந்த காத்திரமான அரசியல் விவாதங்களுக்குள்ளும் வராமல் அவதூறுகள் பரப்புவது, பாலியல் மிரட்டல்களில் ஈடுபடுவது என்றே பிஸியாக இருப்பவர்கள் - இவர்களை கருத்தாளர்கள் எனும் பட்டியலில் கொண்டு வருவதே ஆபத்தானது.

“இப்படி நான் எழுதுவதன் அர்த்தம், இன்று கைதுசெய்யப்பட்டிருக்கும் 'சாட்டை' துரைமுருகன் போன்றவர்களின் கருத்து அல்லது போக்குக்கான என்னுடைய ஆதரவு அல்ல என்று நண்பர்கள் சரியாகவே புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன்.” என்கிறார் சமஸ் அடுத்து. அவர்களுடைய ‘கருத்துக்களை’, ‘போக்கை’ அவர் ஆதரிக்கவில்லை, சரி. வேறெதைத் தான் ஆதரிக்கிறார்? அவர்கள் வசைபாடும் உரிமையையா? அதையும் இல்லையா? வேறெதை?

மாற்றுக்கருத்து சொல்லும், விமர்சனம் வைக்கும் உரிமையை. கருத்துரிமையை. ஆனால் கருத்துரிமைக்கும் வசையுரிமைக்கும் சம்மந்தம் இல்லையே. சமஸ் எதைத்தான் ஆதரிக்கிறார்?

என்னுடைய ஊகம் சமஸ் தமிழகத்தில் திமுக எதிர்ப்புக்காக அதிமுகவால் ஆரம்பத்திலும் பாஜகவால் பின்னரும் நிதியளித்து வளர்க்கப்படும் நா.த.க மற்றும் பாஜகவின் மறைமுக கடிநாய்களின் இருப்பை அவசியம் என நினைக்கிறார் என்பது. அதை நேரடியாக சொல்ல அவரால் முடியாது. என்ன பிரச்சனை என்றால் பாஜகவின் வளர்ப்புநாய்களாக ஊடகங்களில் பேசும் “வலதுசாரி ஆதரவாளர்கள்” எந்த தர்க்கபூர்வமான, காத்திரமான கருத்துக்களையும் சொல்வதில்லை. அவர்களால் செய்ய முடிந்ததெல்லாம் நடுவே புகுந்து குழப்புவது, மதவெறியை தூண்டும் விதமாக பேசுவது, திராவிட மரபு குறித்த பொய்ச்செய்திகளை பரப்புவது, வாரத்துக்கு ஒருமுறை ஆட்சியை கலைப்பேன், மனிதவெடிகுண்டுகளை அனுப்பி மாநிலத்தை ஆள்வோரைக் கொல்லுவேன் என மிரட்டுவதே.

இத்தகையோரை நம் தனிப்பட்ட வாழ்வில் நாம் சகித்துக்கொள்ள மாட்டோம். கவின்மலர் உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் உறுதியானவர்கள் என்பதால் இந்த பாலியல் அவதூறுகளை, அதற்கு அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததை பொறுத்துக் கொண்டு தொடர்ந்து போராடினார்கள். ஆனால் ஒரு பலவீனமான பெண் என்றால் தற்கொலை செய்திருப்பார். அப்போதும் சமஸ் “தவறான கருத்தை” சொல்லும் உரிமையை நாம் பறித்து விடக் கூடாது எனக் கூறுவாரோ? 

இவர்களை தனிவாழ்வில் ஒருவிதமாகவும், சமூக, அரசியல் வெளியில் மட்டும் வேறுவிதமாகவும் நடத்தி நாம் ஏன் சகித்துக் கொள்ள வேண்டும்? ஒரே காரணம் இவர்களே இன்று தமிழகத்தில் வலதுசாரி சிந்தனை, மதவாதம் காலூன்ற பேசுகிற சக்திகள் என்பது. இந்த ஐயம் எழக் கூடாது எனும் நோக்கிலேயே முன் ஜாமீன் போல சமஸ் அடுத்தொரு பதிவு இடுகிறார். அதில் தான் அஜ்மல் கசாபுக்கே தூண்டுத்தண்டனை அளிக்கக் கூடாது என முன்பு எழுதியவர் என்கிறார். எனில் என்ன சொல்ல வருகிறீர்கள் சமஸ், சாட்டை முருகனையும் கிஷோர் கெ ஸ்வாமியையும் எதிர்ப்பவர்கள் கசாபின் ஆதரவாளர்கள் என்றா? கசாப் ஒரு இந்தியன் அல்ல. ஆனால் இடதுசாரிகள் அப்சல் குருவுக்காக பேசினார்கள், காஷ்மீரின் தன்னாட்சிக்காக பேசினார்கள், அயோத்தி பிரச்சனையில் இஸ்லாமியருக்காகவும், வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களின் போது விவசாயிகள் பக்கமும் நின்றார்கள். நீங்களும் இந்த சந்தர்பங்களில் சிறுபான்மை மக்களுக்காக, போராளிகளுக்காக நின்றவர் என்றால் அதைப் பற்றி சொல்லலாமே, எதற்கு கசாபை இழுத்துக் கொண்டு வருகிறீர்கள் சமஸ்? என்னவிதமான அரசியல் இது?

நியாயமாக இவர்களை மொத்தமாக உள்ளே அனுப்ப வேண்டும். எனக்கு திமுக மீதுள்ள வருத்தமே இந்த அவதூறாளர்களை, சமூக, மத விரோதப் பேச்சாளர்களை, பெண்களையும் தலைவர்களையும் பாலியல் மிரட்டல் செய்து பணம் பறிக்கவும் வாயை மூட வைக்கவும் செய்பவர்களை அது மென்மையாக கையாள்கிறது என்பதே. ஆனால் சமஸோ இப்படி ஒரு தரப்பு இருக்கட்டுமே என்கிறார். நியாயமாக இந்த அரசு அவதூறு பரப்புவதையே தன் தொழிலாக வைத்திருக்கும் எச்.ராஜாவின் கருத்துக்கள் எந்த ஊடகங்களிலும் வரக் கூடாது என தடை விதித்து, அவரை கைது பண்ண வேண்டும். (அதை தமிழக பாஜக தலைமையே பட்டாசு வெடித்து தமக்குள் ரகசியமாக கொண்டாடும் என நினைக்கிறேன்.) அடுத்து, செய்தி சேனல்களுடன் ஒன்றிய அரசின் முகவர்கள் வைத்துள்ள புரிந்துணர்வை, ஏற்பாட்டை தரவுகளுடன் அம்பலப்படுத்தி அவர்கள் தமிழக துரோகிகளாக அறிவிக்க வேண்டும். அல்லது அப்படி செய்வோம் என எச்சரிக்க வேண்டும். இதை ஏன் சொல்கிறேன் என்றால் சில சேனல்களும் பத்திரிகைகளும் பணத்துக்காகவும், சாதி மத வெறி காரணமாகவும் தொடர்ந்து பாரபட்சமாக, தமிழக மக்களுக்கு விரோதமாக பாஜகவை ஆதரிக்கிறது. இதை கண்டும் காணாதது போல தமிழக அரசு செல்வது இங்கு ஒரு மோசமான பிற்போக்குவாதம் பரவிட வழிவகுக்கும். 

அடுத்து, நா.த.க, ம.நீ.மை போன்ற கட்சிகளின் நிதி ஆதாரங்கள் குறித்து ஒரு விசாரணை நடத்தி எவ்வளவு கறுப்புப்பணத்தை வைத்திருக்கிறார்கள், அதை யார் அளித்தது, எப்படி கட்சியை துவங்கி இவ்வளவு விரைவில் பெரும் பணத்தை செலவழிக்க அவர்களால் முடிந்தது என மக்கள் முன் அம்பலபடுத்த வேண்டும். 

அடுத்து சாதிவெறியைத் தூண்டும் மோகன் ஜி போன்றோரின் படங்கள் வெளியாகாதிருக்கும் பொருட்டு ஒரு வலுவான சட்டத்தை இங்கு இயற்ற வேண்டும். அதையும் மீறி தலித்துகளையும் சிறுபான்மையினரையும் பொறுக்கிகளாகவும், வஞ்சகர்களாகவும் சித்தரிக்கிற இயக்குநர்களை கைது செய்ய வேண்டும்.  

ஆனால் திமுக அரசு இதையெல்லாம் செய்தால் சமஸ், ஶ்ரீதர் சுப்பிரமணியம் போன்றோர் ஐயோ கருத்து சுதந்திரத்துக்கு ஜலதோஷம் பிடித்துவிட்டதே என கையைப் பிசைந்து கொண்டு புலம்ப தொடங்கி விடுவார்கள். எனக்கு சத்தியமாகப் புரியவில்லை - கருத்து சுதந்திரத்துக்கு பொருள் பிற்போக்குவாதம், மக்கள் விரோதம், வலதுசாரி ஆதரவு என நடுநிலையாளர் அகராதியில் பொருளை மாற்றி விட்டார்களா?

ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்: எந்த கட்டத்திலும் வலதுசாரிகளை, இந்துத்துவர்களை, மதவாதிகளை மற்றமையாக மதித்து அவர்களுடைய உரிமைக்காக களமாடக் கூடாது. ஒருநாளும் அதிகார மையங்களை மற்றமையாக கருதி பரிந்து பேசக் கூடாது.

ஆனால் ஏன் நடுநிலையாளர்கள் இது தெரியாதது போன்றே எப்போதும் வலதுசாரி அரசியல் மீது மழைத்தண்ணீர் பட்டுவிடக் கூடாது என அவசரமாக குடைபிடிப்பவர்களாக இருக்கிறீர்கள்? ஏன் வலதுசாரிகளுக்கு ஜல்ப் பிடித்துவிடக் கூடாது என்று சதா பதறுகிறவர்களாக இருக்கிறீர்கள்? அதற்காக கருத்து சுதந்திரத்தை ஒரு கடவுளாக பாவிப்பவர்கள் என வேடம் போடுகிறீர்கள்?

உங்களுடைய பிரச்சனை உண்மையில் கருத்து சுதந்திரம் அல்ல என்று மட்டும் தெரிகிறது.

http://thiruttusavi.blogspot.com/2021/10/blog-post_12.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திமுக வின் கறுப்பு பணம் எல்லாம் வெள்ளையாகி விட்டதோ?!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
    • @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன்.    பி. கு அனுமதி பெறாமலே😂
    • ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.
    • வைகாசி மாதம் என்றால்  அகம் குளிரும் அன்னையின் முகம் காணும் ஆசைவரும்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.