Jump to content

திரிபு படுத்தப்பட்ட பாடநூல் தொடர்பில் மனித உரிமை செயல்பாட்டாளர் ம.கயன்


Recommended Posts

 

திரிபு படுத்தப்பட்ட பாடநூல் தொடர்பில் மனித உரிமை செயல்பாட்டாளர் ம.கன் அவர்களது கண்டனம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டம்  பற்றிய அறிக்கையும்

 அனைவருக்கும் வணக்கம், நான் கன் பேசுகிறேன்,

 இது ஓர் அவசர வேண்டுகோள். உலகமெங்கும் பரந்து வாழும் ஈழத்தமிழர்களுக்கான கோரிக்கையாக இதை நான் முன்வைக்கிறேன். தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் தற்போது உருவாகியிருக்கும் தமிழ்க் கல்வி சார்ந்த பிரச்சனை தொடர்பாகவே உங்கள் முன் வந்திருக்கிறேன். நீண்டகாலமாக பிரான்சு நாட்டிலிருந்து உருவாக்கப்பட்டு செயற்படுவது தமிழ் கல்விப் பேரவை என்ற அமைப்பாகும். இந்த அமைப்பினுடைய பாடநூல்களே பிரான்சிலிருந்து அச்சடிக்கப்பட்டு உலகெங்கும் வழங்கப்பட்டு வந்தது. இந்தப்பாடநூலை வெளியிட்டுவந்த பொறுப்புக்குரியவர்களது நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும், பணமோசடிகள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, புதிதாக உருவாகியிருக்கும் அனைத்துலக தமிழர் கல்விப் பேரவை (ICEDT ) என்ற அமைப்பினால் புதிய பாடநூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தப்புதிய பாடநூலில் ´திட்டமிட்ட இன அழிப்பினை மேற்கொள்ளும் விதமாக , முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பின்னதான மாபெரும் திட்டமாக வரலாற்றை படுகொலை செய்யும்நோக்கில் பாடங்கள் எழுதப்பட்டுள்ளன. வரலாறு, கலை ஆகியவற்றையும் அழிப்பது இன அழிப்பின் ஒரு பகுதியே. இப்பாடநூலில் உள்ள வரலாற்றுத் திரிபுகள் உலகெங்கும் வாழும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களால் அடையாளம் காணப்பட்டு அறிக்கைகளாக வெளியிடப்பட்டுள்ளன 

 

அதைவிடவும்; இப்பாடநூல் மீளப்பெறப்பட்டு, நேர்த்தியான வரலாற்றுப் பாடநூல் வெளியிடப்பட வேண்டுமென வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டமும் யேர்மனியில் இருந்து முன்னெடுக்கப்பட்டது. அதைவிடவும் யேர்மனியில் இப்பாடநூல் மீளப்பெறப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி ஒன்றுகூடல்களும்  நடைபெறுகின்றன. ஆனாலும்; திரிபுபடுத்தப்பட்ட பாடநூலை வெளியிட்ட அமைப்பினரோ அல்லது இதற்குப் பொறுப்பானவர்களோ இதுதொடர்பில் எவ்வித பதிலையும் தெரிவிக்காமல் தனித்தனியே வெவ்வேறு விதமான பதில்களைக் கூறிவருகிறார்கள் . எங்களுடைய இனம், மொழி, வரலாறு காக்கப்படவேண்டும் என நாம் போராடி வருகின்ற வேளையில், சிங்கள அரசின் திட்டமிட்ட பாடத்திட்டம் இதற்குள் புகுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் இப்பாடத்திட்டத்தை உருவாக்கியவர்கள் ஒரு சில பிழைகள் தவிர்ந்த வேறெதுவும் இல்லை எனக் கூறி வருகிறார்கள். இதன்காரணமாக தமிழ்ப்பாடசாலைகள் இரண்டாகப் பிளவுறும் வாய்ப்புகளே அதிகம். ஒரே நாட்டுக்குள்ளே இரண்டு பாடத்திட்டங்கள் மூலம் புலம்பெயர்ந்த தமிழர்களைப் பிளவுபடுத்தும் வேலைத்திட்டங்களே இவையாகும்.

 

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக நான் என்னை அர்ப்பணிக்கவுள்ளேன். 1985 ஆம் ஆண்டிலிருந்து நான் இந்த விடுதலைப்போராட்டத்தில் பங்குகொண்டுவருகிறேன். இன்று எனது கோரிக்கை யாதெனில்; ஏற்கனவே இயங்கி வருகின்ற தமிழ்க்கல்விப் பேரவை (பிரான்சு) அமைப்பினரும், புதிதாக உருவான ICEDT எனப்படும் அனைத்துலகத் தமிழர் கல்விப் பேரவை என்ற அமைப்பினரும் நேருக்கு நேர் கலந்துரையாடி, பிளவைத் தடுத்து நிறுத்தவேண்டும். அனைத்து நாட்டு ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர்களும் ஒன்றாகக்கூடி இதற்குரிய தீர்வைக்காண வேண்டும். இது விளையாட்டல்ல, எமது இனத்தின் விடுதலை சம்பந்தப்பட்ட விடயம் ஆதலால் இது தொடர்பாக அனைவரும் இணைந்து நேர்த்தியான வரலாற்றை எமது சந்ததிக்கு எடுத்துச் செல்ல ஆவன செய்யவேண்டும். மக்களையே ஓரங்கட்டி இங்கே எதையும் செய்யமுடியாது

 

 

இதற்குரிய பொறுப்பானவர்கள் இவ்விடயங்களைக் கருத்திற்கொண்டு செயற்படவேண்டி, எதிர்வரும் வியாழக்கிழமை 14.10.2021 வரை கால அவகாசம் தருகிறேன். அதற்குள் இப்பாடப்புத்தகம் தொடர்பாக முடிவுகள் எட்டப்படாவிட்டால், 14.10.2021 அன்று நான் உண்ணாநோன்பை ஆரம்பிக்கவிருக்கிறேன் என்பதை அனைவருக்கும் அறியத்தருகிறேன். முற்றுமுழுதான உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தை நான் ஆரம்பிப்பதற்கு முன்பாக இதற்குரியவர்களுக்கு நான் கால அவகாசம் தந்திருக்கிறேன். அனைவரும் பிரான்சு நாட்டில் ஒன்றுகூடவேண்டும். இதற்குரிய தீர்வு எட்டப்படவேண்டும். அனைவரும் ஒன்றுகூட முற்படும் பட்சத்தில் அனைவருக்குமுரிய வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உறுதிசெய்யப்படும்.

 

 

எமது தலைவர் தமிழ் மக்களுடைய விடுதலைக்காகப் போராடியவர். தலைவர் எமது இனத்திற்காக தனது குடும்பத்தையே தியாகம் செய்துள்ளார் இனியாவது நாம் அனைவரும் இந்த இடத்தில் ஒன்று திரண்டு போராடவேண்டும். பாடப்புத்தகத்தில் கையை வைத்துவிட்டு, அதை நியாயப்படுத்துவதைவிடுத்து இப்புத்தகம் தவறானது அடையாளம் காணப்படும் நிலையில் இப்புத்தகங்கள் முழுமையாக அழிக்கப்படவேண்டும் என்பதில் உறுதியாகவுள்ளேன்

 

   
 
     
     
  அன்புடன் மனித உரிமை செயல்பாட்டாளர் ம. கயன்.  
     
     
     

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.