Jump to content

ராஜபக்‌ஷர்கள் முன்னுள்ள வாய்ப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்‌ஷர்கள் முன்னுள்ள வாய்ப்பு

என்.கே. அஷோக்பரன்

twitter: @nkashokbharan

சுதந்திரகாலம் முதல் இனமுறுகல், இனவாதம், இனத்தேசியம் ஆகியவற்றால் விளைந்த இனத்துவேசம், இனப்பிரச்சினை ஆகியவற்றுக்குள் சிக்குண்டு, இலங்கை தீவின் அரசியல் சின்னாபின்னமாகி நிற்கிறது.

சுதந்திரகாலம் மற்றும் அதற்கு முற்பட்ட தலைவர்கள் கனவு கண்டது போல, இனத்தேசியவாதம், இனவாதம், இனப்பிரிவினை ஆகியவையற்ற சிவில் தேசமாக, இலங்கை ஒருவேளை கட்டியெழுப்பப்பட்டு இருந்தால், இலங்கையின் நிலை இன்று வேறாக இருந்திருக்கலாம். ஏனெனில், சுதந்திர காலத்திலேயே பொருளாதார ரீதியில் பலமான நாடாகவும் வளமான எதிர்காலத்தை நோக்கிய நாடாகவும் இலங்கை இருந்தது. ஆனால், இனவாத அரசியல் இலங்கையின் தலையெழுத்தை மாற்றிப் போட்டது. 

இனவாதத்துடன் இணைந்த பெருந்திரள்வாத அரசியல், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான இலகுவான வழியாகக் காணப்பட்டமை, அதிகாரத்தைக் கைப்பற்றும் எண்ணமும் சுயநலமும் மிக்க அரசியல்வாதிகளுக்கு இனவாத, பெருந்திரள்வாத அரசியல் மீதான ஈர்ப்புக்குக் காரணமாயிற்று. 

இலங்கையின் பேரினவாத, பெருந்தேசிய அரசியலுக்கு எதிராக, தமிழ்த் தேசிய அரசியல் தற்காப்புத் தேசியமாகப் பிறந்து, வளர்ந்து நிற்கிறது. உண்மையில், இலங்கையில் இனவாத, பெருந்திரள்வாத அரசியலுக்கு மாற்றானதும் வலுவானதுமான அரசியல் முன்னெடுக்கப்படவில்லை என்பது கவலைக்குரிய உண்மை. மிகச் சிறிய, சில கட்சிகள், இதனை முயற்சித்திருக்கலாம், ஆனால், அதை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கும் வலுவோ, செல்வாக்கோ அவர்களிடம் இருக்கவில்லை. 

இதேவேளை, மக்கள் செல்வாக்கும் கட்சிப்பலமும் பிரபல்யமும் மிக்க அரசியல்வாதிகள், தமக்கு அதிகார பலத்தைப் பெற்றுத்தரவல்ல இனமைய அரசியலைத் தாண்டி, சிந்திக்கத் தயங்கினார்கள். இதன் விளைவு இனவாதம், இனத்தேசியம், இனவெறி எனும் விஷச்சில்லுக்குள், இலங்கை சிக்கிக்கொண்டுள்ளது. 

இலங்கை அரசியலில், குறிப்பிடத்தக்க இடதுசாரிக்கட்சிகள் கூட, இனவாதத்தைக் கக்கியவையாகவும் அதிகாரத்தைக் கைப்பற்ற இனவாதத்தை அமைதியாக ஆதரித்தவையாகவுமே இருந்திருக்கின்றன என்பதும் கவனிக்கத்தக்க வரலாறு. 

முதலாளி வர்க்கம், தொழிலாளி வர்க்கத்தை அடக்குமுறைக்கு உள்ளாக்குகிறது என்றவர்கள் கூட, பெரும்பான்மைத் தேசம், சிறுபான்மைத் தேசங்களை அடக்குமுறைக்கு உள்ளாக்குவது பற்றி அக்கறை கொள்ளவில்லை. 

30 வருட யுத்தம், இலங்கையின் வளர்ச்சியையும் அபிவிருத்தியையும் பெருமளவு பாதித்தது. இலங்கையிலிருந்து பல்லாயிரம் மூளைசாலிகள் வௌியேறினார்கள். இதன் தாக்கத்தை, இன்று மட்டுமல்ல, அடுத்த தலைமுறை கடந்தும் இலங்கை சந்தித்துக் கொண்டேயிருக்கும். இத்தனைக்கும் காரணம், அரசியல்வாதிகளின் சுயநலம். 

எல்லா நாடுகளிலும் தீவிரவாத எண்ணம் கொண்ட, துவேசம் மிக்க வெறுப்பை விதைக்கும் மிகச் சொற்ப மக்கள் கூட்டமொன்று இருந்துகொண்டேயிருக்கும். ஆனால், அவற்றுக்கு அரசியல் முன்னரங்கில் இடங்கொடுக்காமல் இருப்பதில்தான், அந்நாட்டின் எதிர்காலம் தங்கியிருக்கிறது. உதாரணத்துக்கு நோர்வே, பின்லாந்து, கனடா போன்ற நாடுகளில், இனத்துவேச எண்ணம் மிக்கவர்கள் இல்லை என்று சொல்லிவிட முடியாது. ஆனால், அந்த நாடுகளின் அரசியல் முன்னரங்கில், இனவாதத்துக்கு இடமளிக்கப்படுவதில்லை.

இலங்கை அரசியலிலும் அது முடியாத காரியமல்ல. ஆனால், அந்த மாற்றத்தைச் செய்வதற்கு, பலமும் தன்னம்பிக்கையும்  முதுகெலும்பும் உள்ள அரசியல் தலைவர்கள் அவசியம் தேவை.

இன்று, ஆளுங்கட்சியினரை இனவாதிகள் என்று சொல்லிக்கொண்டு, அதே இனவாதத்தைப் பயன்படுத்தி, தாமும் ஆட்சியைக் கைப்பற்றிவிட முடியாதா என்று அவாக்கொள்ளும் எதிர்க்கட்சிகளைத்தான் நாம், பார்த்துக் கொண்டிருக்கிறோம். எம்மில் யார் பெரிய இனவாதி என்ற போட்டிதான், இலங்கையின் தேசிய அரசியலுக்கு உரமாக அமைகிறது. 

இதற்கு மிக முக்கிய காரணங்களாக அமைவது, அரசியல் தலைவர்கள் என்று தம்மை முன்னிறுத்துவோரின் ஆளுமைக்குறைவும் தன்னம்பிக்கை இன்மையும் நேர்மையின்மையும் குறுகிய சிந்தனையும் சுயநலமும்தான்!

‘சிறிய அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரைக் கொண்ட குழுவொன்றின் முயற்சிகள் புறநிலையாகவும், எந்தவொரு சுயநலமும் இல்லாமல் செயற்படும்போது, பெரும்பாலும் தீர்க்க முடியாத சிக்கல்களை அதனால் தீர்க்க முடியும்’ என்று  நெல்சன் மண்டேலா குறிப்பிடுவதை, இங்கு கவனிக்க வேண்டும். அத்தகைய தலைவர்கள், இன்றுவரை இலங்கைக்கு கிடைக்கவில்லை. 

image_db8a16ce35.jpg

ஆங்காங்கே சில ஒளிக்கீற்றுகள் தோன்றியிருப்பினும், அவை மின்மினிகளைப் போல விரைவில் மறைந்துவிட்டன. ஓர் உதாரணத்துக்கு சந்திரிகா குமாரதுங்கவின் அரசியல் பிரவேசத்தைக் குறிப்பிடலாம். சந்திரிகாவின் அரசியல் எழுச்சி, சமாதானத்துக்கான நம்பிக்கையை விதைத்திருந்தது. ஆனால், அந்த நம்பிக்கையைக் காப்பாற்றுவதில், சந்திரிகா தவறியது மட்டுமல்லாது, தான் கொடுத்த நம்பிக்கைக்கு நேரெதிராகவும் செயற்பட்டார். 

தமிழ்த் தலைமைகளும் ஒன்றும் சிறப்பானவர்கள் அல்ல; பேரினவாதத்துக்கு எதிரான, தமிழ்த் தேசிய அரசியலை அவர்கள் உணர்ச்சிவயப்பட்ட, வாய்ச்சொல் பகட்டாரவார அரசியலாக முன்னெடுத்தார்கள். அது மட்டும்தான் அவர்களுக்குத் தெரியும். காலங்காலமாக அதையே செய்து, தமது பதவிகளைக் காப்பாற்றிக்கொண்டு, வயிறுவளர்த்து வரும் கூட்டமாக அவர்கள் இருக்கிறார்கள். 

பெரும்பாலும் வயிற்றுப்பிழைப்புக்கு அரசியலில் தங்கியவர்களாக அவர்கள் இருப்பதால், அரசியல் பிழைப்புவாதத்தை உறுதிப்படுத்தும் வாய்ச்சொல் பகட்டாரவார அரசியலைத் தாண்டிச் சிந்திக்க அவர்கள் தயாராக இல்லை. அப்படிச் சிந்திக்கும், செயற்படும் புதியவர்கள் யாராவது வந்தாலும், அவர்களைத் ‘துரோகி’கள் என்று முத்திரை குத்தி, ஓரங்கட்டி விடுகிறார்கள். 

அழிவுப்பாதை அரசியலிலிருந்து தமிழ் மக்களை மீட்டெடுத்து, வழிகாட்டும் அளவுக்கான அறிவோ, அனுபவமோ, ஆற்றலோ, தன்னம்பிக்கையோ, இயலுமையோ இல்லாதவர்களாகவே அவர்கள் இருக்கிறார்கள்.  

இதுதான் இலங்கை அரசியலின் நிலை. இந்த அரசியல் தலைமைகளின் இயலாமையால்தான், இன்று இனவாத, இனவெறி அரசியலுக்குள் இலங்கை உழன்று கொண்டும், எதிர்காலத் தலைமுறையின் சிந்தனையைப்  பாழாக்கிக்கொண்டும் இருக்கிறது. அப்படியானால் இதற்கு மாற்றே இல்லையா?

இலங்கையின் இந்த இனவாத, அரசியலை மாற்றும் பலம், ஒருமுறை ஒருவரின் கையில் இருந்தது. 2009இல், யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தபோது, அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவிடம், இலங்கை வரலாற்றில் அதுவரை காலமும் எந்தத் தலைவரிடமும் இல்லாத ஒரு பலம் இருந்தது. 

‘இத்தோடு இனவாத, இனவெறி அரசியலை முடிவுக்குக் கொண்டு வருவோம்’ என்று மஹிந்த தீர்மானித்திருந்தால், அதன் பின்னர் ஒன்றுபட்ட இலங்கையை கட்டியெழுப்பவும் ஓர் அரசுக்குள் அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை வழங்கி, அனைத்து மக்களும் சுயமரியாதை, சுயகௌரவம், சுயநிர்ணயத்துடன் வாழ வழிசமைத்திருந்தால், அது இலங்கையின் வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமைந்திருக்கும்.

‘யுத்தத்தை வெற்றிகொண்ட’ மஹிந்த ராஜபக்‌ஷ அதைச் செய்திருந்தால், அதைத் தட்டிக்கேட்கவும் எதிர்க்கவும் எந்தவொரு பேரினவாதியாலும் முடியாதிருந்திருக்கும். ஆனால், அதைச் செய்யும் பலமும் தன்னம்பிக்கையும் அன்று மஹிந்தவிடம் இருக்கவில்லை என்பது வரலாற்றுச் சோகம். மஹிந்த ராஜபக்‌ஷவைத் தோற்கடித்து, 2015இல் வந்த அரசாங்கம் செய்தது வரலாற்றுத் துரோகம். அதைப் பற்றிப் பேசுவது கூடப் பயனற்றது. 

மீண்டும் பெருவெற்றி பெற்று, ராஜபக்‌ஷர்கள் ஆட்சிப்பீடமேறி, இரண்டு ஆண்டுகள் ஆகப்போகின்றன. கடந்த ஓராண்டுக்கும் மேலாக, பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையையும் கொண்டிருக்கிறார்கள். இலங்கையின் இனப்பிரச்சினை வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய வாய்ப்பு இன்னும் ராஜபக்‌ஷர்களிடம் இருக்கிறது. 

2009இல் இருந்ததைப் போன்ற தார்மீக பலம் இல்லாவிட்டாலும், பெரும்பான்மையினரை நம்பிக்கை கொள்ளச்செய்யத்தக்க இயலுமை அவர்களிடம் இருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தை, எல்லா ராஜபக்‌ஷர்களும் ஒன்றிணைந்து, இலங்கையின் வரலாற்றை மாற்றியமைக்கப் பயன்படுத்த வேண்டும். 

எந்த அரசாங்கத்தாலும், மிக இலகுவாக அத்தியாவசியப் பொருட்கள் மீதான கட்டுப்பாட்டு விலையை நீக்க முடியாது. ஆனால், ராஜபக்‌ஷர்கள் அதைக்கூடச் செய்தார்கள். அது காலத்தின் அத்தியாவசியத் தேவையாக இருக்கலாம். ஆனால் அதைச் செய்யும் பலம், அவர்களிடம் இருக்கிறது. 

இன்று, கொழும்புத் துறைமுகத்தின் மேற்கு முனையம், இந்தியாவின் அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இத்தகைய தனியார் மயமாக்கல்களை ஐ.தே.க, தொழிற்சங்கங்களின் செல்வாக்கைக் கடந்து செய்ய முடியவில்லை. ஆனால்,ராஜபக்‌ஷர்களால் அந்த எதிர்ப்புகளை இலகுவாகக் கடந்து, அதைச் செய்ய முடிந்திருக்கிறது.

இன்றைய சூழலில், இலங்கையின் இனவாத அரசியல் பாதையை மாற்றி அமைக்கக் கூடிய வலு, ராஜபக்‌ஷர்களிடம்தான் இருக்கிறது; அதற்கான அருமையான சந்தர்ப்பமும் இருக்கிறது. 

அவர்கள் இனவாத அரசியலைக் கைவிட்டு, இலங்கையை வளமான பாதைக்கு அழைத்துச் செல்வார்களா? அல்லது, 2009ஐப் போலவே, குறுகிய சுயநல அரசியலை முன்னெடுத்துவிட்டுப் போய்விடுவார்களா என்பதுதான், இங்கு கேள்வி. இலங்கையின் எதிர்காலம், இன்று அவர்களின் கையில் இருக்கிறது.

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ராஜபக்-ஷர்கள்-முன்னுள்ள-வாய்ப்பு/91-282859

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.