Jump to content

4 நாள்களில் 11 ஆயிரம் கோடி ரூபா பணத்தை அச்சிட்டது கோத்தா அரசு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கை அரசு கடந்த 4 நாள்களில் மட்டும் 11 ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை அச்சிட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
 
அதேவேளை, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் பதவியேற்ற பின்னர் இதுவரை 15 ஆயிரம் கோடி ரூபா அச்சிடப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகின்றது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள மத்திய மற்றும் தென் மாகாணங்களின் முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னக்கோன், அஜித் நிவாட் கப்ரால் பதவியேற்ற பின்னர், 15 ஆயிரத்து 842 கோடி ரூபா அச்சிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இலங்கை மத்திய வங்கி ஒரு லட்சத்து 36 ஆகியரத்து 805 கோடி ரூபாவை அச்சிட்டுள்ளது. அரசின் நிதிச் செயற்பாடுகள் தொடர்பில் அல்லது பணம் அச்சிடுதல் தொடர்பில் பொருளாதார நிபுணர்கள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் அல்லது எதிர்க்கட்சியினரின் கவனம் இதுவரை திரும்பவில்லை என்று ரஜித் கீர்த்தி தென்னக்கோன் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசின் அநாவசியச் செலவுகள் அதிகரித்துள்ளன. அதேநேரம் நாட்டின் வளங்கள் விற்கப்படுகின்றன. வகைதொகையின்றிப் பணமும் அச்சிடப்படுகின்றது.

விவசாய உற்பத்திகள் இன்மை, போதியளவு உரம் இன்மை ஆகியவற்றால் பட்டினி நிலைமை உருவாகின்றது. இலங்கையின் பொருளாதாரம் அதல பாதாளத்தை நோக்கிச் செல்கின்றது. அனைத்து நகரங்களிலும் அத்தியாவசிய பொருள்களை வாங்குவதற்கு மக்கள் வரிசையில் நிற்கின்றனர்.

இலங்கை மத்திய வங்கியின் புள்ளி விவரங்களின்படி இலங்கை மத்திய வங்கியின் திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி பிணை முறிகளின் முகப்புப் பெறுமதி 2020 ஆம் ஆண்டு முதலாம் திகதி 74 ஆயிரத்து 74 பில்லியனாகும். அது இப்போது ஆயிரத்து 442 பில்லியன்களாக உயர்ந்துள்ளது. இதற்கிடையில் இலங்கை மத்திய வங்கி ஆயிரத்து 368 பில்லியன்களை அச்சிட்டுள்ளது. இந்தச் செயற்பாடுகளால் இலங்கையின் பொருளாதாரம் நூலறுந்த பட்டம் போன்று ஆகியிருக்கின்றது என்று அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Link to comment
Share on other sites

  • Replies 72
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கின்றது எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும் .................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்கிற காசு உள்நாட்டில தானே புழங்கும்?! இதனால என்ன நன்மை? பழைய தாள்களை புழக்கத்தில் இருந்து நீக்குவார்களோ!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ஏராளன் said:

அடிக்கிற காசு உள்நாட்டில தானே புழங்கும்?! இதனால என்ன நன்மை? பழைய தாள்களை புழக்கத்தில் இருந்து நீக்குவார்களோ!

பகிடிக்குததானே   கேட்கிறீங்க 🤣

Link to comment
Share on other sites

53 minutes ago, ஏராளன் said:

அடிக்கிற காசு உள்நாட்டில தானே புழங்கும்?! இதனால என்ன நன்மை? பழைய தாள்களை புழக்கத்தில் இருந்து நீக்குவார்களோ!

ஓம். மகிந்த குடும்பம் தங்களிடம் உள்ள பழைய தாள்களை மாத்தி புது தாள்களாக அடுக்கி வைக்க போகினமாம்.🙃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பிழம்பு said:

அஜித் நிவாட் கப்ரால் பதவியேற்ற பின்னர், 15 ஆயிரத்து 842 கோடி ரூபா அச்சிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

அச்சடித்த பணத்தை அடுக்கி வைத்துவிட்டுதான் பணம் கையிருப்பில் இருக்கிறது என்று அறிக்கை விடுகிறார்களோ? இப்போ யாரையும் கடத்தி கப்பம் பெற்று ஏப்பம் பெற முடிவதில்லையாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

அடிக்கிற காசு உள்நாட்டில தானே புழங்கும்?! இதனால என்ன நன்மை? பழைய தாள்களை புழக்கத்தில் இருந்து நீக்குவார்களோ!

பொதுவாக ஒரு அரசு தனது நிதியாண்டிற்கான வரவு செலவினை முன்னராகவே திட்டமிட்டுவிடும், அதனை பாதீடு (Budget) என்பார்கள். அதாவது முதலில் செலவுகளை திட்டமிட்டு அதற்கான வருமானத்தினை எவ்வாறு பெறுவது என திட்டமிடுவார்கள். வருமானம் போதுமான அளவில் இல்லாவிட்டால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக்கடன் மூலம் அதனை ஈடு செய்வார்கள்.

ஒருநிதியாண்டில் திட்டமிடப்படாத வகையில் ஏதாவது செலவு ஏற்படும் பட்சத்தில் ஒரு சிறிய பாதீடு செய்வார்கள், உதாரணமாக கோவிட் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் போன்றவை.

அரசு கடன் பெறமுடியாத மோசமான நிலையிலேயே உள்நாட்டுக்கடன் வட்டி மற்றும் அரசின் செலவுகளை ஈடு செய்வதற்காக பணத்தினை அச்சிடுவர், பொதுவாக எந்த அரசும் பணத்தினை அச்சிடும் முடிவை எடுக்காது ஏனெனில் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் சேதத்தினை அது உருவாக்கும்.

பனம் அச்சிடும் போது பணவீக்கம் ஏற்படும், இது இயல்பான பணவீக்கம் அல்ல, இயல்பான பணவீக்கம் என்பது வேலையின்மை விகிதம் குறையும் போது ஏற்படும், இதனை மத்திய வங்கி வட்டி விகிதம் மூலம் கட்டுப்படுத்தும்.

பணத்தினை அச்சிடுவதால் ஏற்படும் பணவீக்கத்தினால் வியாபாரங்கள் சுருக்க நிலை ஏற்படும், அதே நேரம் நுகர்வோர் நெருக்கடியும் ஒரே நேரத்தில் ஏற்படும் (மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பது போல) இதனால் பொருளாதாரம் நீண்ட பின்னடைவை எதிர்கொள்ளும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, vasee said:

பொதுவாக எந்த அரசும் பணத்தினை அச்சிடும் முடிவை எடுக்காது ஏனெனில் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் சேதத்தினை அது உருவாக்கும்.

கவனம் கோத்தா  விசுவாசிகளுக்கு கோபம் வரப்போகுது பாஸ் .🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தாவை குறைகூறினால் மட்டும் சிலருக்கு நாட்டுப்பற்று பீறிக்கொண்டுவரும், பிறகு களம் தாங்காது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, பெருமாள் said:

கவனம் கோத்தா  விசுவாசிகளுக்கு கோபம் வரப்போகுது பாஸ் .🤣

வியாபாரங்கள் நேரடியாக பாதிப்படையும் ( வருமானம் குறைவடையும், கடனுக்கு பொருள்களை வழங்கிய நிறுவனக்கள் நட்டமடையும், வேலையாதளுக்கு சம்ம்பளம் பணவீக்கத்திற்கேற்ப அதிகரிக்காமல் குறைவடைதல் மற்றும் வேலையிழத்தல் ஏற்படும்,நுகர்வோர்நெருக்கடி(Consumer confident) ஏற்பட்டு பொருளாதார வளர்ச்சி பாதிப்படையும்.

g91LlH8KQB3AprZu5Ycw_Stagflation.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, பெருமாள் said:

கவனம் கோத்தா  விசுவாசிகளுக்கு கோபம் வரப்போகுது பாஸ் .🤣

9 minutes ago, satan said:

கோத்தாவை குறைகூறினால் மட்டும் சிலருக்கு நாட்டுப்பற்று பீறிக்கொண்டுவரும், பிறகு களம் தாங்காது!

ஆர்...? இஞ்சை அப்பிடி ஒருத்தரும் இல்லை. எல்லாரும் தமிழின விசுவாசிகள். 🤣

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, satan said:

கோத்தாவை குறைகூறினால் மட்டும் சிலருக்கு நாட்டுப்பற்று பீறிக்கொண்டுவரும், பிறகு களம் தாங்காது!

அவர்களை இந்த திரியில் காணமுடியவில்லையே இன்னும்😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, உடையார் said:

அவர்களை இந்த திரியில் காணமுடியவில்லையே இன்னும்😎

கொஞ்சம் பொறுங்கள்! அவர்கள் இன்னும் தூக்கத்திலிருந்து எழவில்லை, எழுந்ததும் விழுந்தடித்துக்கொண்டு வருவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது என்னை கூப்பிட்டனீங்களோ.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, vasee said:

பொதுவாக ஒரு அரசு தனது நிதியாண்டிற்கான வரவு செலவினை முன்னராகவே திட்டமிட்டுவிடும், அதனை பாதீடு (Budget) என்பார்கள். அதாவது முதலில் செலவுகளை திட்டமிட்டு அதற்கான வருமானத்தினை எவ்வாறு பெறுவது என திட்டமிடுவார்கள். வருமானம் போதுமான அளவில் இல்லாவிட்டால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக்கடன் மூலம் அதனை ஈடு செய்வார்கள்.

ஒருநிதியாண்டில் திட்டமிடப்படாத வகையில் ஏதாவது செலவு ஏற்படும் பட்சத்தில் ஒரு சிறிய பாதீடு செய்வார்கள், உதாரணமாக கோவிட் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் போன்றவை.

அரசு கடன் பெறமுடியாத மோசமான நிலையிலேயே உள்நாட்டுக்கடன் வட்டி மற்றும் அரசின் செலவுகளை ஈடு செய்வதற்காக பணத்தினை அச்சிடுவர், பொதுவாக எந்த அரசும் பணத்தினை அச்சிடும் முடிவை எடுக்காது ஏனெனில் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் சேதத்தினை அது உருவாக்கும்.

பனம் அச்சிடும் போது பணவீக்கம் ஏற்படும், இது இயல்பான பணவீக்கம் அல்ல, இயல்பான பணவீக்கம் என்பது வேலையின்மை விகிதம் குறையும் போது ஏற்படும், இதனை மத்திய வங்கி வட்டி விகிதம் மூலம் கட்டுப்படுத்தும்.

பணத்தினை அச்சிடுவதால் ஏற்படும் பணவீக்கத்தினால் வியாபாரங்கள் சுருக்க நிலை ஏற்படும், அதே நேரம் நுகர்வோர் நெருக்கடியும் ஒரே நேரத்தில் ஏற்படும் (மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பது போல) இதனால் பொருளாதாரம் நீண்ட பின்னடைவை எதிர்கொள்ளும்.

இவ்வளவு பாதிப்பு ஏற்படும் என்றால் எதற்காக பணத்தை அச்சிடுகிறார்கள்?! அச்சிட்டு புழங்க விடுவதால் வரும் தீமையை விட நன்மை அதிகமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஏராளன் said:

இவ்வளவு பாதிப்பு ஏற்படும் என்றால் எதற்காக பணத்தை அச்சிடுகிறார்கள்?! அச்சிட்டு புழங்க விடுவதால் வரும் தீமையை விட நன்மை அதிகமா?

அரசிற்கு செலவு செய்வதற்கு காசு வேண்டும், ஆனால் அரசிடம் காசில்லை, கடனும் வாங்க முடியவில்லை.வேறு தெரிவு எதுவும் அரசிடம் இல்லை,

அத்தியாவசிய பொருதளின் விலையேற்றத்திற்கான காரணம் யாரென்பது கூட தெரியவில்லை அரசிற்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா மாத்தயா அடிக்கிறதான் அடிக்கிறார், அடிச்சு ஒரு மில்லியன் ஒரு குடும்பத்துக்கு என்று குடுத்தால் உந்தக் கஸ்ரம் கொஞ்சம் குறையுமெல்லோ ? ஆராவது அவருக்கு ஆலோசனை சொல்லமாட்டீங்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

அச்சிட்டு புழங்க விடுவதால் வரும் தீமையை விட நன்மை அதிகமா?

நட்பு...நன்மை நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு
ஒருகட்டத்தில் சிறுவயதில் ராக்கெட் செய்துவிளையாடிய கொப்பியின்  நடுத்தாள் 1000 ரூபாய் தாளை விட விலை மதிப்பாக போகுமளவுக்கு நன்மை. ஒரு இறாத்தல் பாண் வாங்க தள்ளுவண்டியில் காசை நிரப்பிக்கொண்டு போகுமளவுக்கு கொண்டுவந்து விடும், 
 உதாரணம் :- சிம்பாபே     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, nochchi said:

கோத்தா மாத்தயா அடிக்கிறதான் அடிக்கிறார், அடிச்சு ஒரு மில்லியன் ஒரு குடும்பத்துக்கு என்று குடுத்தால் உந்தக் கஸ்ரம் கொஞ்சம் குறையுமெல்லோ ? ஆராவது அவருக்கு ஆலோசனை சொல்லமாட்டீங்களா?

சொன்னால் கேட்டால் தானே, நான் முதலிலேயே வீட்டுக்கொரு பிரின்டிங் மெஷின் என்ற திட்டத்தை பரிந்துரைத்தேன் , அவரவர்களுக்கு தேவையான அளவுக்கு அடித்துக்கொள்ளட்டும் அரசுக்கும் பிரின்டிங் செலவு மிச்சம் என்று.... கேட்டால் தானே ....?
அந்த அரை லூசு மாத்தையா வெடிமன்னன் "கப்சா"  கப்ரால் சொன்னால் மட்டும்தான் கேக்குமாம், சரி மாத்தையாவாச்சு  கப்சாவாச்சு என்று நானும் அமைதியாக நடையை கட்டிப்போட்டன்     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, அக்னியஷ்த்ரா said:

சொன்னால் கேட்டால் தானே, நான் முதலிலேயே வீட்டுக்கொரு பிரின்டிங் மெஷின் என்ற திட்டத்தை பரிந்துரைத்தேன் , அவரவர்களுக்கு தேவையான அளவுக்கு அடித்துக்கொள்ளட்டும் அரசுக்கும் பிரின்டிங் செலவு மிச்சம் என்று.... கேட்டால் தானே ....?
அந்த அரை லூசு மாத்தையா வெடிமன்னன் "கப்சா"  கப்ரால் சொன்னால் மட்டும்தான் கேக்குமாம், சரி மாத்தையாவாச்சு  கப்சாவாச்சு என்று நானும் அமைதியாக நடையை கட்டிப்போட்டன்     


சிலநேரம் 'ஸி யின்பிங்' சொன்னாக் கேட்பார்தானே? அப்ப அவருக்கு எழுதலாமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, vasee said:

அரசிற்கு செலவு செய்வதற்கு காசு வேண்டும், ஆனால் அரசிடம் காசில்லை, கடனும் வாங்க முடியவில்லை.வேறு தெரிவு எதுவும் அரசிடம் இல்லை,

அத்தியாவசிய பொருதளின் விலையேற்றத்திற்கான காரணம் யாரென்பது கூட தெரியவில்லை அரசிற்கு.

அரசிடம் ஏலவே உள்ள பணம் என்னாச்சு? வரிகள் இதர வருமானங்களாக திரும்ப கஜானவிற்கு வரவில்லையா? இல்லை பணத்தை யாரோ அமுக்கிறாங்களா?
அக்னி சொல்ற போல சிம்பாவே ஆக்காமல் ஓயமாட்டினம் போல!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்கிறதுதான் அடிக்கிறியள், குவைத் தினார் மாரி நல்ல பெறுமதியான காசை அடிக்கலாம்தானே?

ஐடியா இல்லாத பசங்க 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

அடிக்கிறதுதான் அடிக்கிறியள், குவைத் தினார் மாரி நல்ல பெறுமதியான காசை அடிக்கலாம்தானே?

ஐடியா இல்லாத பசங்க 🤣

ஏனண்ணை டொலர் அடிச்சா எல்லா கடனும் அடைக்கலாமே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஏராளன் said:

அக்னி சொல்ற போல சிம்பாவே ஆக்காமல் ஓயமாட்டினம் போல!

ஜஸ்டின் ஆகட்டும், குமாரசாமி ஆகட்டும், கோசானாகட்டும், கற்பகதருவாகட்டும், எங்களுக்கெல்லம் சிறிலங்கா is a joke.  சும்மா வந்து கருத்தெழுதி விட்டு போவோம், கடிபடுவோம் அங்கே என்ன நடந்தாலும் எம்மை, எம் குடும்பத்தை ஒன்றும் செய்யாது. எம்மை பொறுத்தவரை கொஞ்சம் தெரிஞ்ச சனம் இலங்கையில் இருக்கிறது, ஆப்கனிஸ்தானில் இல்லை. ஆப்கானிஸ்தானிக்கும் இலங்கைக்கும் அதுதான் ஒரே வித்தியாசம்.

ஆனால் உங்களுக்கு இது life. முடிந்தளவு சுயசார்பு வாழ்க்கைக்கு தயாராவது நல்லம். 

இராணுவம் பொலீசுக்கு சம்பளம் கொடுக்க முடியாவிட்டால் யாழ்பாணத்தின் ஆட்சி ஆவா குழுவின் கையில் இருக்கும் நிலை வரலாம்.

Be careful what you wish for, lest it come true.

Link to comment
Share on other sites

10 minutes ago, goshan_che said:

அடிக்கிறதுதான் அடிக்கிறியள், குவைத் தினார் மாரி நல்ல பெறுமதியான காசை அடிக்கலாம்தானே?

ஐடியா இல்லாத பசங்க 🤣

அது தானே.  நல்ல Quality paper  இருக்கு தானே. அதை use பண்ணலாம் தானே. கொஞ்சமும் யோசிக்காத பசங்க. 🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
    • அப்படி நடந்தால் சீமான் தம்பிகளில் பாதி கீல்பாக்கத்துக்கும் அடுத்த பாதி ஏர்வாடியிலும் தங்களுக்கு தாங்களே கரண்டு பிடித்துகொண்டு நிக்கும்கள் இது தேவையா 😀
    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.