Jump to content

4 நாள்களில் 11 ஆயிரம் கோடி ரூபா பணத்தை அச்சிட்டது கோத்தா அரசு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கை அரசு கடந்த 4 நாள்களில் மட்டும் 11 ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை அச்சிட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
 
அதேவேளை, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் பதவியேற்ற பின்னர் இதுவரை 15 ஆயிரம் கோடி ரூபா அச்சிடப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகின்றது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள மத்திய மற்றும் தென் மாகாணங்களின் முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னக்கோன், அஜித் நிவாட் கப்ரால் பதவியேற்ற பின்னர், 15 ஆயிரத்து 842 கோடி ரூபா அச்சிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இலங்கை மத்திய வங்கி ஒரு லட்சத்து 36 ஆகியரத்து 805 கோடி ரூபாவை அச்சிட்டுள்ளது. அரசின் நிதிச் செயற்பாடுகள் தொடர்பில் அல்லது பணம் அச்சிடுதல் தொடர்பில் பொருளாதார நிபுணர்கள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் அல்லது எதிர்க்கட்சியினரின் கவனம் இதுவரை திரும்பவில்லை என்று ரஜித் கீர்த்தி தென்னக்கோன் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசின் அநாவசியச் செலவுகள் அதிகரித்துள்ளன. அதேநேரம் நாட்டின் வளங்கள் விற்கப்படுகின்றன. வகைதொகையின்றிப் பணமும் அச்சிடப்படுகின்றது.

விவசாய உற்பத்திகள் இன்மை, போதியளவு உரம் இன்மை ஆகியவற்றால் பட்டினி நிலைமை உருவாகின்றது. இலங்கையின் பொருளாதாரம் அதல பாதாளத்தை நோக்கிச் செல்கின்றது. அனைத்து நகரங்களிலும் அத்தியாவசிய பொருள்களை வாங்குவதற்கு மக்கள் வரிசையில் நிற்கின்றனர்.

இலங்கை மத்திய வங்கியின் புள்ளி விவரங்களின்படி இலங்கை மத்திய வங்கியின் திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி பிணை முறிகளின் முகப்புப் பெறுமதி 2020 ஆம் ஆண்டு முதலாம் திகதி 74 ஆயிரத்து 74 பில்லியனாகும். அது இப்போது ஆயிரத்து 442 பில்லியன்களாக உயர்ந்துள்ளது. இதற்கிடையில் இலங்கை மத்திய வங்கி ஆயிரத்து 368 பில்லியன்களை அச்சிட்டுள்ளது. இந்தச் செயற்பாடுகளால் இலங்கையின் பொருளாதாரம் நூலறுந்த பட்டம் போன்று ஆகியிருக்கின்றது என்று அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Link to comment
Share on other sites

  • Replies 72
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கின்றது எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும் .................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்கிற காசு உள்நாட்டில தானே புழங்கும்?! இதனால என்ன நன்மை? பழைய தாள்களை புழக்கத்தில் இருந்து நீக்குவார்களோ!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ஏராளன் said:

அடிக்கிற காசு உள்நாட்டில தானே புழங்கும்?! இதனால என்ன நன்மை? பழைய தாள்களை புழக்கத்தில் இருந்து நீக்குவார்களோ!

பகிடிக்குததானே   கேட்கிறீங்க 🤣

Link to comment
Share on other sites

53 minutes ago, ஏராளன் said:

அடிக்கிற காசு உள்நாட்டில தானே புழங்கும்?! இதனால என்ன நன்மை? பழைய தாள்களை புழக்கத்தில் இருந்து நீக்குவார்களோ!

ஓம். மகிந்த குடும்பம் தங்களிடம் உள்ள பழைய தாள்களை மாத்தி புது தாள்களாக அடுக்கி வைக்க போகினமாம்.🙃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பிழம்பு said:

அஜித் நிவாட் கப்ரால் பதவியேற்ற பின்னர், 15 ஆயிரத்து 842 கோடி ரூபா அச்சிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

அச்சடித்த பணத்தை அடுக்கி வைத்துவிட்டுதான் பணம் கையிருப்பில் இருக்கிறது என்று அறிக்கை விடுகிறார்களோ? இப்போ யாரையும் கடத்தி கப்பம் பெற்று ஏப்பம் பெற முடிவதில்லையாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

அடிக்கிற காசு உள்நாட்டில தானே புழங்கும்?! இதனால என்ன நன்மை? பழைய தாள்களை புழக்கத்தில் இருந்து நீக்குவார்களோ!

பொதுவாக ஒரு அரசு தனது நிதியாண்டிற்கான வரவு செலவினை முன்னராகவே திட்டமிட்டுவிடும், அதனை பாதீடு (Budget) என்பார்கள். அதாவது முதலில் செலவுகளை திட்டமிட்டு அதற்கான வருமானத்தினை எவ்வாறு பெறுவது என திட்டமிடுவார்கள். வருமானம் போதுமான அளவில் இல்லாவிட்டால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக்கடன் மூலம் அதனை ஈடு செய்வார்கள்.

ஒருநிதியாண்டில் திட்டமிடப்படாத வகையில் ஏதாவது செலவு ஏற்படும் பட்சத்தில் ஒரு சிறிய பாதீடு செய்வார்கள், உதாரணமாக கோவிட் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் போன்றவை.

அரசு கடன் பெறமுடியாத மோசமான நிலையிலேயே உள்நாட்டுக்கடன் வட்டி மற்றும் அரசின் செலவுகளை ஈடு செய்வதற்காக பணத்தினை அச்சிடுவர், பொதுவாக எந்த அரசும் பணத்தினை அச்சிடும் முடிவை எடுக்காது ஏனெனில் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் சேதத்தினை அது உருவாக்கும்.

பனம் அச்சிடும் போது பணவீக்கம் ஏற்படும், இது இயல்பான பணவீக்கம் அல்ல, இயல்பான பணவீக்கம் என்பது வேலையின்மை விகிதம் குறையும் போது ஏற்படும், இதனை மத்திய வங்கி வட்டி விகிதம் மூலம் கட்டுப்படுத்தும்.

பணத்தினை அச்சிடுவதால் ஏற்படும் பணவீக்கத்தினால் வியாபாரங்கள் சுருக்க நிலை ஏற்படும், அதே நேரம் நுகர்வோர் நெருக்கடியும் ஒரே நேரத்தில் ஏற்படும் (மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பது போல) இதனால் பொருளாதாரம் நீண்ட பின்னடைவை எதிர்கொள்ளும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, vasee said:

பொதுவாக எந்த அரசும் பணத்தினை அச்சிடும் முடிவை எடுக்காது ஏனெனில் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் சேதத்தினை அது உருவாக்கும்.

கவனம் கோத்தா  விசுவாசிகளுக்கு கோபம் வரப்போகுது பாஸ் .🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தாவை குறைகூறினால் மட்டும் சிலருக்கு நாட்டுப்பற்று பீறிக்கொண்டுவரும், பிறகு களம் தாங்காது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, பெருமாள் said:

கவனம் கோத்தா  விசுவாசிகளுக்கு கோபம் வரப்போகுது பாஸ் .🤣

வியாபாரங்கள் நேரடியாக பாதிப்படையும் ( வருமானம் குறைவடையும், கடனுக்கு பொருள்களை வழங்கிய நிறுவனக்கள் நட்டமடையும், வேலையாதளுக்கு சம்ம்பளம் பணவீக்கத்திற்கேற்ப அதிகரிக்காமல் குறைவடைதல் மற்றும் வேலையிழத்தல் ஏற்படும்,நுகர்வோர்நெருக்கடி(Consumer confident) ஏற்பட்டு பொருளாதார வளர்ச்சி பாதிப்படையும்.

g91LlH8KQB3AprZu5Ycw_Stagflation.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, பெருமாள் said:

கவனம் கோத்தா  விசுவாசிகளுக்கு கோபம் வரப்போகுது பாஸ் .🤣

9 minutes ago, satan said:

கோத்தாவை குறைகூறினால் மட்டும் சிலருக்கு நாட்டுப்பற்று பீறிக்கொண்டுவரும், பிறகு களம் தாங்காது!

ஆர்...? இஞ்சை அப்பிடி ஒருத்தரும் இல்லை. எல்லாரும் தமிழின விசுவாசிகள். 🤣

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, satan said:

கோத்தாவை குறைகூறினால் மட்டும் சிலருக்கு நாட்டுப்பற்று பீறிக்கொண்டுவரும், பிறகு களம் தாங்காது!

அவர்களை இந்த திரியில் காணமுடியவில்லையே இன்னும்😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, உடையார் said:

அவர்களை இந்த திரியில் காணமுடியவில்லையே இன்னும்😎

கொஞ்சம் பொறுங்கள்! அவர்கள் இன்னும் தூக்கத்திலிருந்து எழவில்லை, எழுந்ததும் விழுந்தடித்துக்கொண்டு வருவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது என்னை கூப்பிட்டனீங்களோ.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, vasee said:

பொதுவாக ஒரு அரசு தனது நிதியாண்டிற்கான வரவு செலவினை முன்னராகவே திட்டமிட்டுவிடும், அதனை பாதீடு (Budget) என்பார்கள். அதாவது முதலில் செலவுகளை திட்டமிட்டு அதற்கான வருமானத்தினை எவ்வாறு பெறுவது என திட்டமிடுவார்கள். வருமானம் போதுமான அளவில் இல்லாவிட்டால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக்கடன் மூலம் அதனை ஈடு செய்வார்கள்.

ஒருநிதியாண்டில் திட்டமிடப்படாத வகையில் ஏதாவது செலவு ஏற்படும் பட்சத்தில் ஒரு சிறிய பாதீடு செய்வார்கள், உதாரணமாக கோவிட் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் போன்றவை.

அரசு கடன் பெறமுடியாத மோசமான நிலையிலேயே உள்நாட்டுக்கடன் வட்டி மற்றும் அரசின் செலவுகளை ஈடு செய்வதற்காக பணத்தினை அச்சிடுவர், பொதுவாக எந்த அரசும் பணத்தினை அச்சிடும் முடிவை எடுக்காது ஏனெனில் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் சேதத்தினை அது உருவாக்கும்.

பனம் அச்சிடும் போது பணவீக்கம் ஏற்படும், இது இயல்பான பணவீக்கம் அல்ல, இயல்பான பணவீக்கம் என்பது வேலையின்மை விகிதம் குறையும் போது ஏற்படும், இதனை மத்திய வங்கி வட்டி விகிதம் மூலம் கட்டுப்படுத்தும்.

பணத்தினை அச்சிடுவதால் ஏற்படும் பணவீக்கத்தினால் வியாபாரங்கள் சுருக்க நிலை ஏற்படும், அதே நேரம் நுகர்வோர் நெருக்கடியும் ஒரே நேரத்தில் ஏற்படும் (மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பது போல) இதனால் பொருளாதாரம் நீண்ட பின்னடைவை எதிர்கொள்ளும்.

இவ்வளவு பாதிப்பு ஏற்படும் என்றால் எதற்காக பணத்தை அச்சிடுகிறார்கள்?! அச்சிட்டு புழங்க விடுவதால் வரும் தீமையை விட நன்மை அதிகமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஏராளன் said:

இவ்வளவு பாதிப்பு ஏற்படும் என்றால் எதற்காக பணத்தை அச்சிடுகிறார்கள்?! அச்சிட்டு புழங்க விடுவதால் வரும் தீமையை விட நன்மை அதிகமா?

அரசிற்கு செலவு செய்வதற்கு காசு வேண்டும், ஆனால் அரசிடம் காசில்லை, கடனும் வாங்க முடியவில்லை.வேறு தெரிவு எதுவும் அரசிடம் இல்லை,

அத்தியாவசிய பொருதளின் விலையேற்றத்திற்கான காரணம் யாரென்பது கூட தெரியவில்லை அரசிற்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா மாத்தயா அடிக்கிறதான் அடிக்கிறார், அடிச்சு ஒரு மில்லியன் ஒரு குடும்பத்துக்கு என்று குடுத்தால் உந்தக் கஸ்ரம் கொஞ்சம் குறையுமெல்லோ ? ஆராவது அவருக்கு ஆலோசனை சொல்லமாட்டீங்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

அச்சிட்டு புழங்க விடுவதால் வரும் தீமையை விட நன்மை அதிகமா?

நட்பு...நன்மை நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு
ஒருகட்டத்தில் சிறுவயதில் ராக்கெட் செய்துவிளையாடிய கொப்பியின்  நடுத்தாள் 1000 ரூபாய் தாளை விட விலை மதிப்பாக போகுமளவுக்கு நன்மை. ஒரு இறாத்தல் பாண் வாங்க தள்ளுவண்டியில் காசை நிரப்பிக்கொண்டு போகுமளவுக்கு கொண்டுவந்து விடும், 
 உதாரணம் :- சிம்பாபே     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, nochchi said:

கோத்தா மாத்தயா அடிக்கிறதான் அடிக்கிறார், அடிச்சு ஒரு மில்லியன் ஒரு குடும்பத்துக்கு என்று குடுத்தால் உந்தக் கஸ்ரம் கொஞ்சம் குறையுமெல்லோ ? ஆராவது அவருக்கு ஆலோசனை சொல்லமாட்டீங்களா?

சொன்னால் கேட்டால் தானே, நான் முதலிலேயே வீட்டுக்கொரு பிரின்டிங் மெஷின் என்ற திட்டத்தை பரிந்துரைத்தேன் , அவரவர்களுக்கு தேவையான அளவுக்கு அடித்துக்கொள்ளட்டும் அரசுக்கும் பிரின்டிங் செலவு மிச்சம் என்று.... கேட்டால் தானே ....?
அந்த அரை லூசு மாத்தையா வெடிமன்னன் "கப்சா"  கப்ரால் சொன்னால் மட்டும்தான் கேக்குமாம், சரி மாத்தையாவாச்சு  கப்சாவாச்சு என்று நானும் அமைதியாக நடையை கட்டிப்போட்டன்     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, அக்னியஷ்த்ரா said:

சொன்னால் கேட்டால் தானே, நான் முதலிலேயே வீட்டுக்கொரு பிரின்டிங் மெஷின் என்ற திட்டத்தை பரிந்துரைத்தேன் , அவரவர்களுக்கு தேவையான அளவுக்கு அடித்துக்கொள்ளட்டும் அரசுக்கும் பிரின்டிங் செலவு மிச்சம் என்று.... கேட்டால் தானே ....?
அந்த அரை லூசு மாத்தையா வெடிமன்னன் "கப்சா"  கப்ரால் சொன்னால் மட்டும்தான் கேக்குமாம், சரி மாத்தையாவாச்சு  கப்சாவாச்சு என்று நானும் அமைதியாக நடையை கட்டிப்போட்டன்     


சிலநேரம் 'ஸி யின்பிங்' சொன்னாக் கேட்பார்தானே? அப்ப அவருக்கு எழுதலாமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, vasee said:

அரசிற்கு செலவு செய்வதற்கு காசு வேண்டும், ஆனால் அரசிடம் காசில்லை, கடனும் வாங்க முடியவில்லை.வேறு தெரிவு எதுவும் அரசிடம் இல்லை,

அத்தியாவசிய பொருதளின் விலையேற்றத்திற்கான காரணம் யாரென்பது கூட தெரியவில்லை அரசிற்கு.

அரசிடம் ஏலவே உள்ள பணம் என்னாச்சு? வரிகள் இதர வருமானங்களாக திரும்ப கஜானவிற்கு வரவில்லையா? இல்லை பணத்தை யாரோ அமுக்கிறாங்களா?
அக்னி சொல்ற போல சிம்பாவே ஆக்காமல் ஓயமாட்டினம் போல!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்கிறதுதான் அடிக்கிறியள், குவைத் தினார் மாரி நல்ல பெறுமதியான காசை அடிக்கலாம்தானே?

ஐடியா இல்லாத பசங்க 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

அடிக்கிறதுதான் அடிக்கிறியள், குவைத் தினார் மாரி நல்ல பெறுமதியான காசை அடிக்கலாம்தானே?

ஐடியா இல்லாத பசங்க 🤣

ஏனண்ணை டொலர் அடிச்சா எல்லா கடனும் அடைக்கலாமே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஏராளன் said:

அக்னி சொல்ற போல சிம்பாவே ஆக்காமல் ஓயமாட்டினம் போல!

ஜஸ்டின் ஆகட்டும், குமாரசாமி ஆகட்டும், கோசானாகட்டும், கற்பகதருவாகட்டும், எங்களுக்கெல்லம் சிறிலங்கா is a joke.  சும்மா வந்து கருத்தெழுதி விட்டு போவோம், கடிபடுவோம் அங்கே என்ன நடந்தாலும் எம்மை, எம் குடும்பத்தை ஒன்றும் செய்யாது. எம்மை பொறுத்தவரை கொஞ்சம் தெரிஞ்ச சனம் இலங்கையில் இருக்கிறது, ஆப்கனிஸ்தானில் இல்லை. ஆப்கானிஸ்தானிக்கும் இலங்கைக்கும் அதுதான் ஒரே வித்தியாசம்.

ஆனால் உங்களுக்கு இது life. முடிந்தளவு சுயசார்பு வாழ்க்கைக்கு தயாராவது நல்லம். 

இராணுவம் பொலீசுக்கு சம்பளம் கொடுக்க முடியாவிட்டால் யாழ்பாணத்தின் ஆட்சி ஆவா குழுவின் கையில் இருக்கும் நிலை வரலாம்.

Be careful what you wish for, lest it come true.

Link to comment
Share on other sites

10 minutes ago, goshan_che said:

அடிக்கிறதுதான் அடிக்கிறியள், குவைத் தினார் மாரி நல்ல பெறுமதியான காசை அடிக்கலாம்தானே?

ஐடியா இல்லாத பசங்க 🤣

அது தானே.  நல்ல Quality paper  இருக்கு தானே. அதை use பண்ணலாம் தானே. கொஞ்சமும் யோசிக்காத பசங்க. 🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 18 APR, 2024 | 01:20 PM யாழ்ப்பாண பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கை பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பது ஆண்டுகளை பூர்த்தி செய்து பொன்விழா காண்கிறது. ஈழத் தமிழர்களின் அறிவுக் கருவூலமாக திகழும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழ்ச் சமூகத்தின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் ஆற்றிய பங்களிப்பு ஏராளம். அந்த வகையில் ஐம்பதாவது ஆண்டு நிறைவிலும் அது புதிய பல பரிமாணங்களை பிரசவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  அந்த வகையில், முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வு மாநாட்டை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப் படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன.  ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீட பீடாதிபதி பேராசிரியர் செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இந்த ஆய்வு மாநாடு அரங்கேறவுள்ளது.  கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராக செயற்படுகிறார்.  வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம. பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாண கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர்.   எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமையும் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் நடைபெறவுள்ளன.  இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன.  சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கை பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார்.  ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள் : வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இந்த உரை நிகழவிருக்கிறது.  திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்குக்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார்.  ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் - சவால்களும் பிரச்சினைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் தி.முகுந்தனும், ‘வட மாகாண கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உள மருத்துவ நிபுணர் சி.சிவதாஸும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர்.  ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமைதாங்கவுள்ளார். இந்நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார்.  அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமான என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஐயா மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமான ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக்கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது.  ‘வடக்கு மாகாண பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் - எங்கு நாம் நிற்கின்றோம் - முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’ மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் - சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  இரண்டு நாட்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன. https://www.virakesari.lk/article/181365
    • அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் செலுத்தப்படாத சட்டரீதியான பங்களிப்புகளை (EPF/ETF) செலுத்துவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அரச பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு அமைச்சரும் நிதி இராஜாங்க அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் மேலதிக கட்டணங்களுடன் 500 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை செலுத்தப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வருடத்தின் முதல் கடமையாக அமைச்சின் செயலாளருக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், உழைக்கும் மக்களின் சட்ட உரிமைகளை பாதுகாத்து பெருந்தோட்ட நிறுவன சீர்திருத்தங்களை ஆரம்பிக்க வேண்டும் என்றார். இது தொடர்பாக ஊழியர்கள் தரப்பினால் 2000க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டத்தரணி கட்டணமாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெருமளவு பணத்தை செலவிடுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/299474
    • ஆகவே தாங்கள்  அவரது குடும்பம் கோத்திரம் எல்லாவற்றையும் நன்கு அறிந்திருக்கிறீர்கள். அந்த அடிப்படையில்தான் அவரது செயலைக் குறிப்பிடும்போது குலவழக்கம் என்று குறிப்பிட்டீர்கள்.  சூப்பரப்பூ சூப்பர்,.........👏 @கிருபன்@பெருமாள்@குமாரசாமி
    • Published By: DIGITAL DESK 3 18 APR, 2024 | 11:40 AM   யாழ்ப்பாணம் - நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார்.  நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு நேற்று புதன்கிழமை திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியர் பரிந்துரைத்தார். அதனையடுத்து போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு, அம்புலன்ஸ் படகு தற்போது சேவையில் ஈடுபடாததால், பொதுமக்கள் போக்குவரத்து படகில் ஏற்றி குறிகாட்டுவான் நோக்கி அழைத்து வந்துள்ளனர்.  இந்நிலையில் கடலில் படகு பயணித்துக்கொண்டிருந்த வேளை, பிரசவ வலி பெண்ணுக்கு அதிகரித்ததை அடுத்து, படகின் கீழ் தளத்தில் இருந்த ஆண்களை மேல் தளத்திற்கு அனுப்பி வைத்த பின்னர் , படகில் பயணித்த பெண்களே பிரசவம் பார்த்துள்ளனர்.  படகு குறிகட்டுவான் இறங்கு துறையை வந்தடைந்ததும், அங்கு தயார் நிலையில் நின்ற புங்குடுதீவு வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டியில் தாயையும் சேயையும், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர்.  தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/181359
    • 7 மாகாணங்களில் இன்று வெப்பநிலை அதிகரிப்பு! நாட்டின் 07 மாகாணங்களில் இன்று (18) வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன்படி வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, கிழக்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் வெப்பநிலையானது மனித உடலால் உணரப்படும் அளவினை விட அதிகரித்துக் காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இம்மாதத்தின் இறுதிவரை நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை தரச்சுட்டெண் அதிகரிக்கக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. https://thinakkural.lk/article/299507
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.