Jump to content

நல்லெண்ண விஜயமாக இந்திய இராணுவப் படைகளின் பிரதானி இலங்கை வந்தடைந்தார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நல்லெண்ண விஜயமாக இந்திய இராணுவப் படைகளின் பிரதானி இலங்கை வந்தடைந்தார்

நல்லெண்ண விஜயமாக இந்திய இராணுவப் படைகளின் பிரதானி இலங்கை வந்தடைந்தார்

ஐந்து நாட்கள் நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இந்திய இராணுவப் படைகளின் பிரதானி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே இலங்கைக்கு வந்துள்ளார்.

இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவின் அழைப்பின் பேரில் ஐந்து பேர் கொண்ட குழு இன்று (செவ்வாய்க்கிழமை) இலங்கை வந்துள்ளது.

ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகே ஆகியோரை சந்திக்க உள்ளார்.

அத்துடன், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, கடற்படை மற்றும் வான் படைத் தளபதிகளையும் இந்திய இராணுவப் படைகளின் பிரதானி சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2021/1244474

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய ராணுவத் தளபதியின் இலங்கை பயணம்: சீனாவை ஓரங்கட்டும் முயற்சியா?

  • ரஞ்ஜன் அருண் பிரசாத்
  • பிபிசி தமிழுக்காக, இலங்கையில் இருந்து
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
இந்திய ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே

பட மூலாதாரம்,MINSITRY OF DEFNCE, INDIA

 
படக்குறிப்பு,

இந்திய ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே

இலங்கை தொடர்பில் கடந்த சில காலமாக இந்தியா அதிக கவனம் செலுத்தி வருகின்ற நிலையில், சமீப காலமாக இந்தியாவில் ராஜதந்திர ரீதியிலான முக்கிய பிரமுகர்கள் தொடர்ச்சியாக இலங்கைக்கு பயணம் மேற்கொள்கின்றனர்.

குறிப்பாக இந்த மாத ஆரம்பத்தில் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன ஷ்ரிங்லா, இலங்கைக்கான அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டிருந்தார்.

அவரது வருகையின் போது, ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, தமிழ் மக்கள் பிரதிநிதிகள் என பலரையும் சந்தித்திருந்தார்.

அவரது விஜயத்தின் பின்னர், சுமார் 3 முதல் 5 வருட காலமாக நடைபெறாதிருந்த மாகாண சபைத் தேர்தலை நடத்தும் அறிவிப்பை அரசாங்கம் விடுத்திருந்தது.

இந்தியாவின் அழுத்தமே, மாகாண சபைத் தேர்தல் நடத்துவதற்கு காரணம் என எதிர்கட்சிகள் கூறிய போதிலும், அந்த கூற்றை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மறுத்திருந்தார்.

இவ்வாறான பின்னணியில், இந்திய வெளிவிவகார செயலாளரின் இலங்கைக்கான விஜயம் நிறைவு பெற்று, சுமார் ஒரு வாரங்கள் கூட கடப்பதற்கு முன்னர், இந்திய ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே இலங்கைக்கான அதிகாரபூர்வ 5 நாட்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இலங்கை ராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் அழைப்பின் பேரில் இந்திய ராணுவ தளபதி இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது.

இந்திய ராணுவ தளபதி, இலங்கை ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு செயலாளர், ராணுவ தளபதி உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்திக்கவுள்ளதாக ராணுவ ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

அத்துடன், இலங்கை - இந்திய கூட்டுப் பயிற்சியான மித்ர சக்தி பயிற்சிகளின் இறுதி கட்டங்களையும் அவர் பார்வையிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை ராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா (வலது) உடன் இந்திய ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே

பட மூலாதாரம்,SRILANKAN ARMY

 
படக்குறிப்பு,

இலங்கை ராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா (வலது) உடன் இந்திய ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே

மேலும், ராணுவம் சார்ந்த சில முக்கிய நிகழ்வுகளிலும் அவர் கலந்துக்கொள்ளவுள்ளார்.

அதேபோன்று, இலங்கையில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களின் நினைவு தூபிக்கு விஜயம் மேற்கொள்ளும் இந்திய ராணுவ தளபதி, அங்கு அஞ்சலி நிகழ்வுகளிலும் கலந்துக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீன பாதுகாப்பு அமைச்சரின் பயணத்தின் பின் இந்திய ராணுவ தளபதியின் பயணம்

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் மிகப் பெரிய நாடான இந்தியாவின் ராணுவத் தளபதி, இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஜயமாக கருதப்படுகின்றது.

இந்திய ராணுவ தளபதிகள் இதற்கு முன்னரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தனர்;.

இந்திய முன்னாள் ராணுவ தளபதியான ஜெனரல் பிபின் ராவத், 2018ம் ஆண்டு மே மாதம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

இந்திய பாதுகாப்பு தரப்பு மாத்திரமன்றி, பல நாடுகளின் பாதுகாப்பு சார்ந்த முக்கியஸ்தர்கள் இலங்கைக்கான விஜயத்தை அண்மை காலமாக மேற்கொண்டிருந்தனர்.

இலங்கையில் கோவிட் நிலைமை தீவிரமாக காணப்பட்ட தருணத்தில், சீன பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் 27ம் தேதி சீன பாதுகாப்பு அமைச்சர் தலைமையிலான தூதுக்குழு இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தது.

சீன பாதுகாப்பு அமைச்சர் தலைமையிலான குழு, ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு தரப்பின் பிரதானிகள் உள்ளிட்டோரை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தியிருந்தது.

இந்த நிலையில், சீன பாதுகாப்பு அமைச்சரின் விஜயத்திற்கு பின்னர், உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரியொருவர் இலங்கைக்கு வருகின்ற முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

சீன திட்டங்கள் இலங்கையில் அதிகரித்து வருகின்ற நிலையில், இந்திய இராணுவ தளபதியின் விஜயம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

'ஏனைய நாடுகளிடமிருந்து போட்டி'

புவிசார் அரசியல் விவகாரத்தில் இந்திய - இலங்கை நாடுகளுக்கு இடையிலான உறவுகளை, ஏனைய நாடுகளிலிடமிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு இந்தியா தற்போது முயற்சித்து வருவதாக சௌதி அரேபியாவிற்காக முன்னாள் தூதுவரும், முன்னாள் ராஜதந்திர அதிகாரியுமான அஹமட் ஜாவீட் யூசுப் பிபிசி தமிழிடம் தெரிவிக்கின்றார்.

இலங்கை மற்றும் இந்திய நாடுகளுக்கு இடையிலான நட்புக்கு, ஏனைய நாடுகளிடமிருந்து போட்டி காணப்படுவதாகவும், அதனை பாதுகாத்துக்கொள்ளும் நோக்கிலேயே இந்திய அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறுகின்றார்.

அரசியல் ரீதியில் உறவுகளை மேம்படுத்துவதற்கு முயற்சிக்கு அப்பால் ராணுவ ரீதியில் ஏன் உறவுகளை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என பிபிசி தமிழ், அவரிடம் கேள்வி எழுப்பியது.

அஹமட் ஜாவீட் யூசுப்

பட மூலாதாரம்,JAVID YUSUF

 
படக்குறிப்பு,

அஹமட் ஜாவீட் யூசுப்

நாடுகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்தும் திட்டத்தில் அரசியல் ரீதியான உறவுகளே வலுப்படுத்தப்படும் என்ற போதிலும், இலங்கையுடனான உறவை மேம்படுத்துவதில் ராணுவ ரீதியிலான உறவுகளை மேம்படுத்த வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

இலங்கையில் கோவிட் ஒழிப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்களில் ராணுவம் ஆதிக்கம் செலுத்தி வருவதாக அவர் கூறுகின்றார்.

இலங்கையில் ராணுவத்தின் ஆதிக்கத்தை கருத்திற் கொண்டு, இந்திய இராணுவ ரீதியிலான உறவுகளை மேம்படுத்துவதற்கு இந்தியா முயற்சித்து வருவதை அவதானிக்க முடிகின்றது என அவர் குறிப்பிட்டார்.

ராணுவ ரீதியிலான உறவுகள் மேம்படுத்தப்படும் பட்சத்தில், அது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவதாகவே அமைகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

கசப்பான உறவை சீர் செய்யும் முயற்சியா?

பின்னடைவை சந்தித்திருந்த இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மூத்த பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் தெரிவிக்கின்றார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்திக் கொள்ளும் நோக்கிலேயே, இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் கடந்த வாரம் நாட்டிற்கு வருகைத் தந்திருந்ததாகவும், தற்போது ராணுவ தளபதி நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

அதேபோன்று, இலங்கையில், இரு நாட்டு ராணுவத்தினரின் பங்குப்பற்றுதலுடன் பயிற்சி நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிடுகின்றார்.

இந்தியாவுடன் காணப்பட்ட கசப்பான உறவை சீர் செய்யும் வகையிலேயே இவ்வாறான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

இந்தியாவுடனான உறவை வலுப்படுத்திக் கொள்ளும் வகையில், இந்தியாவிற்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள மிலிந்த மொரகொடவின் முயற்சியினால் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மூத்த பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் குறிப்பிடுகின்றார்.

வீரகத்தி தனபாலசிங்கம்

பட மூலாதாரம்,V.THANABALASINGHAM'S TWITTER HANDLE

 
படக்குறிப்பு,

வீரகத்தி தனபாலசிங்கம்

சீனாவிற்கு நிகரான மூலோபய நலன்களை இலங்கையுடன் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் இந்தியாவிற்கு உள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

எனினும், சீனாவுடனான இலங்கையின் உறவை போல, இலங்கை இந்தியாவுடன் உறவை பேணாத போதிலும், இந்தியாவுடன் அண்மித்த உறவை பேண வேண்டும் என்ற உணர்வை இலங்கை ஆட்சியாளர்கள் உணர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

ராஜதந்திர உறவுகளின் போது, இந்திய இராணுவத்தின் பிரவேசம் குறித்தும், மூத்த பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தார்.

மூலோபய நலன்கள் என்ற விடயத்திற்குள், பொருளாதாரம், இராணுவம், புலனாய்வு, கடல்சார் பாதுகாப்பு விடயங்கள், அரசியல் என அனைத்தும் உள்ளடங்கும் என அவர் விளக்கமளித்தார்.

அனைத்து துறைகளிலும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை துரிதகரியில் வலுப்படுத்துவதே, இவ்வாறான விஜயங்களின் நோக்கமாக காணப்படுகின்றது என மூத்த பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் தெரிவிக்கின்றார்.

இலங்கை - இந்திய ராணுவ தொடர்பு

இலங்கை - இந்திய நாடுகளுக்கு இடையில் பல ஆண்டு கால ராணுவ தொடர்புகள் காணப்பட்டு வருகின்ற நிலையில், உள்நாட்டு போர் காலத்திலும் இந்தியா ராணுவத்தின் பங்களிப்பு இலங்கைக்கு இருந்து வந்தது.

இலங்கையில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் 1987ம் ஆண்டு இந்திய அமைதிப்படை நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்த ராணுவ அமைதிப்படை இலங்கையில் தனது பணிகளை 1987ம் ஆண்டு ஆரம்பித்திருந்தது.

இவ்வாறு இலங்கைக்குள் பிரவேசித்த இந்திய அமைதிபடை 1990ம் ஆண்டு காலப் பகுதியில் நாட்டை விட்டு வெளியேறியது.

இவ்வாறான நிலையில், இந்திய ராணுவத்திற்கும், இலங்கைக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் காலம் காலமாக இருந்து வருகின்றது.

https://www.bbc.com/tamil/sri-lanka-58894792

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கன் சிட்டிசன்ஸ் மைண்ட்வாய்ஸ்:

உங்க நல்லெண்ணை வேண்டாம் ஜி, கொஞ்சம் மண்ணெண்ணை தந்தா நல்லாருக்கும்🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 12:09 PM பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறி  சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு (SLCERT) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல  தெரிவித்துள்ளதாவது, குறித்த இணைப்புகள் குறுஞ்செய்தி, வட்ஸ்அப், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் பேஸ்புக் மற்றும் கையடக்க தொலைபேசியில் பெறப்பட்ட அழைப்பு ஆகியவற்றினூடாக பகிரப்படுகிறது. எனவே இவ்வாறான இணைப்புகள் வந்தால்  கிளிக் செய்யவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோன்ற இணைப்புகளை உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து உங்களுக்கு வரலாம். சில சமூக ஊடகங்களில் பகிரப்படும் இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்வதால் தனிப்பட்ட தரவுகளை திருடப்படலாம். மேலும், உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC), சாரதி அனுமதி பத்திரம், வங்கிக் கணக்கு விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP), வேலை செய்யும் விவரங்கள் போன்ற தனிபட்ட விவரங்களை பெற்றுகொள்வார்கள். சில நேரங்களில் மூன்றாம் தரப்பு கையடக்க தொலைபேசியில் இணைப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, குறித்த கையடக்க தொலைபேசியில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள தனிபட்ட விவரங்களை திருடலாம். எனவே அவர்களும் பாதிக்கப்படலாம் என்பதால், அந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179956
    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.