Jump to content

கடவுளை நம்புபவன்


Recommended Posts

கடவுளை நம்புகிறான்
சாஸ்திரத்தை நம்புகிறான் 
சோதிடத்தை நம்புகிறான்

விதியை நம்புகிறான்
செய்வினையை நம்புகிறான்

தேசிக்காயை நம்புகிறான்
பூசணிக்காயை நம்புகிறான்

சாமியாரை நம்புகிறான்
சிறு துண்டு கயிற்றை நம்புகிறான்

ஆனால்! அவன்,

உன்னையும் நம்புவதில்லை
என்னையும் நம்புவதில்லை

ஏன்?

அவன் தன்னையும் நம்புவதில்லை

இப்படி இருக்கையில் அவனுக்கு
எப்படிக்கிடைக்கும் நிம்மதி
எப்போ மலரும் புன்னகை?

                 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, tulpen said:

கடவுளை நம்புகிறான்
சாஸ்திரத்தை நம்புகிறான் 
சோதிடத்தை நம்புகிறான்

விதியை நம்புகிறான்
செய்வினையை நம்புகிறான்

தேசிக்காயை நம்புகிறான்
பூசணிக்காயை நம்புகிறான்

சாமியாரை நம்புகிறான்
சிறு துண்டு கயிற்றை நம்புகிறான்

ஆனால்! அவன்,

உன்னையும் நம்புவதில்லை
என்னையும் நம்புவதில்லை

ஏன்?

அவன் தன்னையும் நம்புவதில்லை

இப்படி இருக்கையில் அவனுக்கு
எப்படிக்கிடைக்கும் நிம்மதி
எப்போ மலரும் புன்னகை?

                 

கடவுள் என்றாலே “சைவம் / இந்து “ என்று ஏற்றுக் கொண்டீர்களே அந்த மனசு தான் ஐயா இறைவனின் அருள்.

எல்லாம் வல்ல ஆடல்வல்லான் அம்பலத்தரசன் திருப்பெருந்துறையுறை சிவனின் அருளாசிகள் உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் கிட்டட்டும் - சிவாய நம - மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்

அன்பே சிவம் 🙏, வாழ்க வளமுடன்.

Link to comment
Share on other sites

1 hour ago, MEERA said:

கடவுள் என்றாலே “சைவம் / இந்து “ என்று ஏற்றுக் கொண்டீர்களே அந்த மனசு தான் ஐயா இறைவனின் அருள்.

எல்லாம் வல்ல ஆடல்வல்லான் அம்பலத்தரசன் திருப்பெருந்துறையுறை சிவனின் அருளாசிகள் உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் கிட்டட்டும் - சிவாய நம - மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்

அன்பே சிவம் 🙏, வாழ்க வளமுடன்.

நன்றி என்னை வாழ்த்தியதற்கு நன்றிகள். நீங்கள் தனியவே அந்த வாழ்த்தை தெரிவித்திருந்தால் இன்னும் மகிழ்சசியடைந்திருப்பேன். 

கடவுள் என்றால் சிவன் மட்டும் தான் என்று நீங்கள் நம்புவதால் இந்த சாஸ்திரம், செவ்வாய் தோசம், ஏழரைச்சனி, பரிகாரம், எங்கோ இலங்கையில் குழந்தை பிறந்தால் இங்கு துடக்கு கோவிலுக்கு செல்லக்கூடாது , எள் எண்ணெய் எரித்தால் satun  வந்து help பண்ணும்  போன்ற சைவம்/ இந்து கூறிய  மடைத்தனங்களை நம்பாமல் சிவனை மட்டுமே நம்ப உங்களுக்கும்  எனது வாழ்ததுக்கள். 

இது எல்லா மதங்களும் கூறும் மூடத்தனங்களை நம்புபவர்களுக்கும் பொருந்தும். 

Link to comment
Share on other sites

30 minutes ago, tulpen said:

கடவுள் என்றால் சிவன் மட்டும் தான் என்று நீங்கள் நம்புவதால் இந்த சாஸ்திரம், செவ்வாய் தோசம், ஏழரைச்சனி, பரிகாரம், எங்கோ இலங்கையில் குழந்தை பிறந்தால் இங்கு துடக்கு கோவிலுக்கு செல்லக்கூடாது , எள் எண்ணெய் எரித்தால் satun  வந்து help பண்ணும்  போன்ற சைவம்/ இந்து கூறிய  மடைத்தனங்களை நம்பாமல் சிவனை மட்டுமே நம்ப உங்களுக்கும்  எனது வாழ்ததுக்கள். 

இது எல்லா மதங்களும் கூறும் மூடத்தனங்களை நம்புபவர்களுக்கும் பொருந்தும். 

நமக்கு தெரிந்தது கைமண்ணளவு, தெரியாதது உலகளவு. நமக்கு புரியாதவற்றை மூடத்தனம் என்ற முடிவுக்கு வருவது சரியானதல்ல. Cosmology பற்றி படியுங்கள் - சிவபெருமானை காண்பீர்கள். இலத்திரன்கள் புரோத்தனை சுற்றுவதற்கும் புரோத்தோனுக்குள் குவாக்குகள் சுற்றுவதற்கும், கோள்கள் சூரியனை சுற்றுவதற்கும், அண்டசராசரங்கள் சுற்றுவதற்கும், அணுக்களால் பொருட்கள் அமைந்திருப்பதற்கும்  உள்ள ஒற்றுமையை கண்டால் எங்களை பக்ரீரியாக்களின் அளவில் பார்க்கும், அண்டசராசரங்களை கற்களாக காணும் இன்னுமொரு பரிமாணத்தில் இறைவனை காண்பீர்கள்.

Link to comment
Share on other sites

5 minutes ago, கற்பகதரு said:

நமக்கு தெரிந்தது கைமண்ணளவு, தெரியாதது உலகளவு. Cosmology பற்றி படியுங்கள் - சிவபெருமானை காண்பீர்கள். இலத்திரன்கள் புரோத்தனை சுற்றுவதற்கும் புரோத்தோனுக்குள் குவாக்குகள் சுற்றுவதற்கும், கோள்கள் சூரியனை சுற்றுவதற்கும், அண்டசராசரங்கள் சுற்றுவதற்கும், அணுக்களால் பொருட்கள் அமைந்திருப்பதற்கும்  உள்ள ஒற்றுமையை கண்டால் எங்களை பக்ரீரியாக்களின் அளவில் பார்க்கும், அண்டசராசரங்களை கற்களாக காணும் இன்னுமொரு பரிமாணத்தில் இறைவனை காண்பீர்கள்.

ஆக மொத்தம் வாழ்ககையை சுய அறிவுடன் ஜாலியாக enjoy பண்ணி வாழாமல் பைத்தியமாகி ஜாலியாக வாழவேண்டும்.  அப்படி தானே? (இமயமலை சாரலில் சிவமூலிகை -கஞ்சாபுகைத்து  ஜாலியாக வாழ்பவர்கள் போல)

😂😂😂😂😂

Link to comment
Share on other sites

5 hours ago, tulpen said:

ஆக மொத்தம் வாழ்ககையை சுய அறிவுடன் ஜாலியாக enjoy பண்ணி வாழாமல் பைத்தியமாகி ஜாலியாக வாழவேண்டும்.  அப்படி தானே? (இமயமலை சாரலில் சிவமூலிகை -கஞ்சாபுகைத்து  ஜாலியாக வாழ்பவர்கள் போல)

😂😂😂😂😂

சின்ன சின்ன கேள்விகள்:

  1. உங்களுடைய தற்போதைய அறிவு சுய அறிவா, அல்லது Cosmology போன்ற பல துறைகளலும் ஊட்டப்பட்ட சுயமற்ற அறிவா?
  2. உங்களுக்கு இப்போது பைத்தியமில்லை என்று நீங்கள் நினைப்பது சரியானதா?

 

Link to comment
Share on other sites

3 minutes ago, கற்பகதரு said:

சின்ன சின்ன கேள்விகள்:

  1. உங்களுடைய தற்போதைய அறிவு சுய அறிவா, அல்லது Cosmology போன்ற பல துறைகளலும் ஊட்டப்பட்ட சுயமற்ற அறிவா?
  2. உங்களுக்கு இப்போது பைத்தியமில்லை என்று நீங்கள் நினைப்பது சரியானதா?

 

சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை என்று கூறிவிட்டு,   “என்னை இந்த பூமி சுற்றிவர ஆசை”, என்று பெரிய பெரிய ஆசைகளை கூறியது போல் சின்ன சின்ன கேள்விகள் என்று பெரிய கேள்விகளை  கேட்டுள்ளீர்கள். உங்கள் கேள்விக்கு  பதில் கூறும் வல்லமை எனக்கில்லை. stephen hawking  எழுதிய brief answers to the big questions என்ற புத்தகத்தில் உங்கள் கேள்விகளுக்கு பதில் கூற அவர் முயற்சித்துள்ளார்.  அதனை வாசித்து முழுமையாக புரியும் ஆற்றலும் எனக்கில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, tulpen said:

சிவனை மட்டுமே நம்ப உங்களுக்கும்  எனது வாழ்ததுக்கள். 

சம்பந்தர் தேவாரத்தில் கோளறு(கோள் அறு) பதிகம் இதையே சொல்கிறது. " என் ஐயன் சிவனின் அருள் இருக்கையில் சனி முதலான கோள்கள் என்னை என்ன செய்ய இயலும் ?"  என்பதே கோளறு பதிகத்தின் கருப்பொருள். (இறை மறுக்கும் நான் இதன் மூலம் சைவத்தைப் போதிக்கிறேன் என்று பொருளில்லை. 'சிவன் ஒருவனே உங்களுக்குப் போதும்; கோள்களைக் கட்டி அழ வேண்டியதில்லை' என்று சம்பந்தர் மூலமாக சைவ சமயத்தவர்க்குச் சொல்வதாய்க் கொள்ளலாம்).

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.