Jump to content

பேசாமலே சாதித்த விஜய் மக்கள் இயக்கம்.. நாம் தமிழரை விட அதிக இடங்களில் முன்னிலை- எப்படி சாத்தியமானது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பேசாமலே சாதித்த விஜய் மக்கள் இயக்கம்.. நாம் தமிழரை விட அதிக இடங்களில் முன்னிலை- எப்படி சாத்தியமானது?

 

Updated: Wed, Oct 13, 2021, 12:27 [IST]

விஜய் மக்கள் இயக்கம் 

இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளும் போட்டியிட்டனர். ஊரக உள்ளாட்சி தேர்தல் என்பதால் இவர்கள் சுயேட்சையாக போட்டியிட்டனர். விஜய் மக்கள் இயக்க கொடியை வைத்தும், விஜயின் புகைப்படத்தை வைத்தும் பிரச்சாரம் செய்ய விஜய் மக்கள் இயக்கம் வேட்பாளர்களுக்கு அனுமதி அளித்து இருந்தது. மொத்தம் 169 இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர்.

வெற்றி 

அதாவது மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் , ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் , பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல்களில் இவர்கள் போட்டியிட்டனர். இதில் மாவட்ட கவுன்சிலர் , ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவி எதிலும் விஜய் மக்கள் இயக்கம் வெற்றிபெறவில்லை. மற்றபடி பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கான தேர்தலில் மக்கள் இயக்க நிர்வாகிகள் முன்னிலை வகித்து வருகிறார்கள்.

Advertisement

எத்தனை 

இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் மொத்தமாக 77 பேர் வெற்றி பெற்றுள்ளதாக விஜய் மக்கள் இயக்க பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். சுயேச்சையாக போட்டியிட்டு பஞ்சாயத்து கவுன்சிலர் பதவி உட்பட 77 இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் வெற்றி பெற்றுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் இதன் மூலம் விஜய் மக்கள் இயக்கம் புதிய சாதனை படைத்து இருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.

Advertisement

Advertisement

தேர்தல் வெற்றி 

ஏனென்றால் இவர்கள் பெரிய கட்சி பின்னணியை கொண்டவர்கள் கிடையாது. விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள். உள்ளூர் அளவில் பிரபலமான நபர்களாக இருப்பதால்தான் இவர்களுக்கு தேர்தலில் வெற்றி கிடைத்து இருக்கிறது. விஜய் மக்கள் இயக்கத்திற்கு இது ஒரு வகையில் நல்ல சிக்னலாக பார்க்கப்படுகிறது. எப்படி தேமுதிகவை தொடங்கிய காலத்தில் விஜயகாந்த் உள்ளாட்சி தேர்தலில் ஆழம் பார்த்தாரோ அதேபோல்தான் தற்போது விஜய் ஆழம் பார்த்து அதில் கொஞ்சம் வெற்றியும் பெற்று இருக்கிறார்.

நாம் தமிழர் 

அதிலும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 77 பதவிகளை பெற்றதன் மூலம் நாம் தமிழர் கட்சியை விட அதிக இடங்களில் விஜய் மக்கள் இயக்க உறுப்பினர்கள் வென்று உள்ளனர். நாம் தமிழர் கட்சி எந்த விதமான மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர் பதவியிலும் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டிலும் நாம் தமிழர் எந்த இடத்திலும் வெல்லவில்லை. இதன் மூலம் உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழரை விட இந்த தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வருகின்றன. முழு முடிவுகள் வெளியாகும் போதும் நிலைமை மாறலாம். பெரிய அளவில் பிரச்சாரம், பேட்டி எதுவுமே இல்லாமல் சத்தமே இன்றி விஜய் மக்கள் இயக்கம் இந்த சாதனையை செய்துள்ளது.

வார்த்தை போர் 

இது இணையத்தில் தற்போது நாம் தமிழர் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையில் வார்த்தை போரை உண்டாக்கி உள்ளது. நாம் தமிழரை விட நாங்கள் அதிக இடங்களில் வென்றுவிட்டோம் என்று விஜய் மக்கள் இயக்கத்தினரும், விஜய் ரசிகர்களும் இணையத்தில் ட்வீட் செய்து கொண்டாடி வருகிறார்கள். இதற்கு நாம் தமிழர் தரப்போ, நடிகர்களை பார்த்துதான் இப்போதும் தமிழர்கள் வாக்களிக்கிறார். களத்தில் நிற்பவர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று விமர்சனங்களை வைத்து வருகிறார்கள்.

எப்படி சாத்தியமானது 

தனிப்பட்ட வகையில் பாமகவிற்கு அடுத்தபடியாக நாம் தமிழர் பெரிய கட்சியாக இந்த தேர்தலில் பார்க்கப்பட்டது. ஆனால் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் இந்த தேர்தலில் அதிக இடங்களை வென்றுள்ளனர். இதற்கு நிர்வாகிகளின் தனிப்பட்ட பிரபலம் காரணமாகவும், வீடு வீடாக பிரச்சாரம் காரணமாகவும் விஜய் மக்கள் இயக்கம் இந்த வெற்றியை பெற்று இருக்கலாம். அதோடு இதில் வெற்றிபெற்ற விஜய் மக்கள் இயக்கத்தினர் சிலர் ஏற்கனவே ஊரக அளவில் தேர்தலில் போட்டியிட்டு வென்றவர்கள் என்பதும் அந்த இயக்கத்திற்கு தேர்தலில் சாதகமாக இருந்தது.

https://tamil.oneindia.com/amphtml/news/chennai/tn-local-body-election-result-how-vijay-makkal-iyakkam-performed-well-in-this-time-435659.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெட்டி ஒட்டியவரின் கருத்து

நிச்சயமாக இந்த தேர்தலில் அதிமுகவுக்கு ஒரு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதே நேரம் பாஜக வை 2ம் பெரிய கட்சியாக ஏற்கவும் மக்கள் தயாரில்லை என்பதும் தெளிவாகிறது.

ரஜனிகாந்த் அன்று சொன்ன வெற்றிடம் இப்போதுதான் உருவாகியுள்ளது. 

இதை நிரப்ப போவது சசிகலா தலைமையில் புத்துயிர் பெறும் (பெற்றால்) அதிமுகவா? அல்லது விஜையா?

தான் களத்தில் இறங்காமல் பெயரை, படத்தை மட்டும் வைத்து இந்த வெற்றியை விஜை ஈட்டி இருப்பது சாதனைதான். 

துணிந்து முழு நேரமாக இறங்குவாரா?

எல்லாரும் எம்ஜிஆர் ஆக முடியாது என்பது உண்மைதான். அதே போல் எல்லாரும் ரஜனி ஆகவும் வேண்டும் என்பதும் இல்லை.

தகுந்த நேரத்தில் சரியாக களம் கண்டால் வெற்றி சாத்தியப்படலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு ஊரக உள்ளாட்சித் தேர்தல்: சீமானின் நாம் தமிழர் கட்சி படுதோல்வி ஏன்?

  • ஆ. விஜயானந்த்
  • பிபிசி தமிழ்
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
தமிழ்நாடு ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட ஊராட்சி மற்றும் ஒன்றிய கவுன்சிலர் ஆகிய இடங்களில் ஓர் இடத்தைக்கூட நாம் தமிழர் கட்சி பெறவில்லை. ''ஒரு கட்சி கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வளர முடியும். ஒரேநாளில் ஒரு செடியில் பூ பூப்பதும் இல்லை, காய்ப்பதும் இல்லை'' என்கிறார் சீமான். நாம் தமிழர் கட்சியின் தோல்விக்கு என்ன காரணம்?

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு கடந்த அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.

கடந்த செவ்வாய் கிழமையன்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் 986 இடங்களுக்கு மேல் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளிலும் 137 மாவட்ட கவுன்சிலர் பதவிகளிலும் தி.மு.க வெற்றி பெற்றுள்ளன அல்லது முன்னிலை வகிக்கின்றன. அதேநேரம், 199 ஒன்றிய கவுன்சிலர் இடங்களிலும் 3 மாவட்ட கவுன்சிலர் பதவிகளிலும் அ.தி.மு.க வெற்றி பெற்றுள்ளது அல்லது முன்னிலை வகிக்கின்றது.

ம.தி.மு.க, வி.சி.க, அ.ம.மு.க உள்ளிட்ட கட்சிகள் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றாலும், நாம் தமிழர் கட்சியும் மக்கள் நீதி மய்யமும் படுதோல்வியை சந்தித்துள்ளன. குறிப்பாக, ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சி மன்ற பதவிகளில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெறவில்லை. `இப்படியொரு தோல்வியை அக்கட்சியின் நிர்வாகிகள் எதிர்பார்க்கவில்லை' எனவும் கூறப்படுகிறது.

நடிகர் விஜய்க்காக ஓட்டு விழுந்ததா?

உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய சீமான், ` மக்களிடம் வாக்கு சேகரிப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் நான் ஒருவன்தான் சுற்றிச் சுழன்று பரப்புரை செய்து வருகிறேன். மற்ற கட்சியினர் எல்லாம் வாக்காளர்களுக்கு பணம், பட்டுப்புடவை, நகை எனக் கொடுத்து வாக்குகளைப் பறிப்பதற்கு வரிசை கட்டி நிற்கிறார்கள்' என விமர்சனம் செய்தார். சட்டமன்றத் தேர்தலில் ஆறு சதவிகித வாக்குகளுக்கு மேல் பெற்றதால் இந்தமுறை அதிகப்படியான உள்ளாட்சிப் பதவிகள் கிடைக்கலாம் எனவும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் பேசி வந்தனர். இந்நிலையில், தேர்தல் முடிவுகள் நாம் தமிழர் கட்சிக்கு அதிர்ச்சியை அளித்துள்ளன.

விஜய்

பட மூலாதாரம்,TWITTER@ACTORVIJAY

இதுகுறித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேள்வியெழுப்பிய செய்தியாளர்கள், `விஜய் மக்கள் இயக்கம் அதிக இடங்களில் வென்றுள்ளதே?' எனக் கேட்டபோது, ``விஜய் மக்கள் இயக்கம் வென்றிருந்தால் அவர்களுக்கு வாழ்த்துகள். உள்ளாட்சித் தேர்தலில் கிடைக்கும் வெற்றிக்கு அந்தந்த பகுதிகளில் உள்ளவர்களின் செல்வாக்குதான் காரணம். எனவே, விஜய்க்காக மக்கள் வாக்கு செலுத்தினார்கள் என நான் நினைக்கவில்லை" என்றார்.

தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் தோல்வி குறித்துப் பேசிய சீமான், ``நாங்கள் பல இடங்களில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகளை வென்றுள்ளோம். இதனை படுதோல்வி என எப்படிக் கருத முடியும்? ஒரு கட்சி கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வளர முடியும். ஒரே நாளில் ஒரு செடி பூப்பதும் காய்ப்பதும் கிடையாது. இதனை தோல்வி என களத்தில் நிற்கும் நாங்களே நினைக்கவில்லை. கோடிகளைக் கொட்டாமல் கொள்கைகளைப் பேசி இந்தக் கட்சிகள் களத்தில் நிற்குமா? தி.மு.க தனித்துப் போட்டியிடுமா? இன்றைக்கு மக்கள் எங்களுக்கு ஆதரவு தராவிட்டால், நாளை தருவார்கள். நாளை மறுநாள் தருவார்கள். 5 வருடங்கள் கழித்து இதே கேள்வியை என்னிடம் கேளுங்கள்" என்றார்.

பிரசாரம் செய்யவே ஏகப்பட்ட தடைகள்

``உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை எவ்வாறு எடுத்துக் கொள்வது?" என நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாக்கியராசனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, `கட்டாயம் வெற்றி பெற வேண்டும்' என்ற சூழல் அவர்களுக்கு இருக்கிறது. நாங்கள் 21 ஊராட்சி வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளோம். ராணிப்பேட்டையில் ஓர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை பெற்றுள்ளோம். களத்தில் இன்னமும் நாங்கள் வேலை செய்ய வேண்டும் என்பது தெரிகிறது. இந்தத் தேர்தலை நாங்கள் மனதில் வைக்கவும் இல்லை, இலக்காக வைத்து செயல்படவும் இல்லை" என்கிறார்.

தொடர்ந்து பேசியவர், `` இந்தத் தேர்தலில் ஆளும்கட்சியின் நடவடிக்கைகளும் பணமும் பிரதான பங்கு வகித்தன. மக்களிடம் நாங்கள் வாக்குக் கேட்டுச் செல்வதிலேயே பிரச்னைகள் இருந்தன. சட்டமன்றத் தேர்தலின்போது, `இந்த இடத்தில் பிரசாரம் செய்கிறோம்' எனக் கூறினால் அனுமதி கிடைக்கும். நாங்களும் எளிதாக பிரசாரம் செய்தோம். இந்தமுறை அவ்வாறு பிரசாரம் செய்வதிலேயே தடைகள் இருந்தன.

நாங்கள் பத்து பேருடன் வாக்கு கேட்டுச் செல்லும்போது, அதே இடத்தில் மற்றவர்களும் பிரசாரம் செய்ய வந்தனர். இது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் கேள்வி கேட்பதிலும் பிரச்னைகள் இருந்தன. பல இடங்களில் பத்திரிகையாளர்களையே அனுமதிக்கவில்லை. இனி வரக் கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் எங்களின் செயல்பாடுகளைப் பாருங்கள். அதன்பிறகு முடிவு செய்யுங்கள்" என்கிறார்.

நா.த.க கவனிக்க வேண்டியது என்ன?

நாம் தமிழர் கட்சிக்கு பின்னடைவு ஏன்?

பட மூலாதாரம்,NAAMTAMILARKATCHIOFFL FACEBOOK PAGE

``நாம் தமிழர் கட்சியின் தோல்வியை எவ்வாறு எடுத்துக் கொள்வது?" என மூத்த பத்திரிகையாளர் என்.அசோகனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` நாம் தமிழர் கட்சியினர் சமூக ஊடகங்களிலும் பிரதான ஊடகங்களிலும் தாங்கள் சொல்லும் அதிரடியான கருத்துகளுக்காக கவனத்தைப் பெறுகின்றனர். சீமானின் உரைகளும் நேர்காணல்களும் கவனத்துடன் பார்க்கப்படுகின்றன. ஆனால் இந்த ஊடகக் கவனத்தை தேர்தல் களத்தில் பெறும் வாக்குகளுடன் ஒப்பிடுகையில் அவர்கள் இன்னும் எவ்வளவோ தூரம் மேல் எழுந்து வரவேண்டியதாக உள்ளது" என்கிறார்.

மேலும், `` அவர்களின் அடித்தள, செயல்பாட்டு அரசியலில் இன்னும் தீவிரமாகச் செயல்படவேண்டும் என்பதை உணர்த்துவதாகவே இந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளைப் பார்க்கவேண்டும். சமூக ஊடகங்களில் மேற்கொள்ளும் கருத்தியல் பரப்புரை ஒருபுறம் இருக்கலாம். அதே சமயம் களத்தில் செயல்பாடுகள்தான் வாக்குகளாக மாறும் என்பதே எதார்த்தம். நாம் தமிழர் கட்சியினர், இதனைக் கவனத்தில் கொள்ளவேண்டும்" என்கிறார்.

தமிழ்நாடு ஊரக உள்ளாட்சித் தேர்தல்: சீமானின் நாம் தமிழர் கட்சி படுதோல்வி ஏன்? - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 யாழ்ப்பாண மருமகனான விஜய் தமிழகத்தில் அரசியலுக்கு வந்தால், வந்து எங்களுக்கு சார்பாகப் பேசினால், இப்போது நாம் தமிழர் ஆதரவாக இருப்போர் விஜயை ஆதரிப்பார்களா? 

(விஜய் "தூய தமிழர்" இல்லையென நினைக்கிறேன், உண்மையா?) 

Link to comment
Share on other sites

1 hour ago, Justin said:

 யாழ்ப்பாண மருமகனான விஜய் தமிழகத்தில் அரசியலுக்கு வந்தால், வந்து எங்களுக்கு சார்பாகப் பேசினால், இப்போது நாம் தமிழர் ஆதரவாக இருப்போர் விஜயை ஆதரிப்பார்களா? 

(விஜய் "தூய தமிழர்" இல்லையென நினைக்கிறேன், உண்மையா?) 

“யாழ்ப்பாண மருமகன் என்கிறீர்கள்”,தூய தமிழர் இல்லையென நினைக்கிறேன் என்கிறீர்கள்” 

இரண்டையும் பார்க்கையில் ஒரே குழப்பமாக இருக்கிறதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நந்தி said:

“யாழ்ப்பாண மருமகன் என்கிறீர்கள்”,தூய தமிழர் இல்லையென நினைக்கிறேன் என்கிறீர்கள்” 

இரண்டையும் பார்க்கையில் ஒரே குழப்பமாக இருக்கிறதே.

குழப்பத்தின் அடுத்த படி தெளிவு தானே?😂 பொறுத்திருங்கள் - விளக்கங்கள் சிலர் தருவர்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிந்த வரையில் விஜை தமிழன் தான்.அதனால் தான் மதத்தை காவுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Justin said:

யாழ்ப்பாண மருமகனான விஜய் தமிழகத்தில் அரசியலுக்கு வந்தால், வந்து எங்களுக்கு சார்பாகப் பேசினால், இப்போது நாம் தமிழர் ஆதரவாக இருப்போர் விஜயை ஆதரிப்பார்களா? 

(விஜய் "தூய தமிழர்" இல்லையென நினைக்கிறேன், உண்மையா?) 

சீமான் கட்சிக்கு இனி தேய்மானம்.  புலம் பெயர்ந்த ஈழதமிழர்கள் இப்போது வரலாற்று திருப்பு முனையில் நிற்கிறார்கள்.நாம் தமிழர் கட்சியினரின்   பேச்சுக்ளை இதுவரை கேட்டுவந்தபடியால் தமிழர்களை துய தமிழர்கள் - தமிழர்கள் அல்லாதோர் என்று பார்க்கும் ஒரு பிரச்சனை விஜய்யை ஏற்பதிலும் வரலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

நிச்சயமாக இந்த தேர்தலில் அதிமுகவுக்கு ஒரு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதே நேரம் பாஜக வை 2ம் பெரிய கட்சியாக ஏற்கவும் மக்கள் தயாரில்லை என்பதும் தெளிவாகிறது.

அரை ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக தான் வெற்றி பெறும் அப்படி பணம் கொடுத்து திமுக வெற்றி பெற்றாலும் பாஜக தான் ஆட்சி செய்யும் என்று இங்கே தெரிவித்தார்களே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, நந்தி said:

“யாழ்ப்பாண மருமகன் என்கிறீர்கள்”,தூய தமிழர் இல்லையென நினைக்கிறேன் என்கிறீர்கள்” 

இரண்டையும் பார்க்கையில் ஒரே குழப்பமாக இருக்கிறதே.

 

19 hours ago, Justin said:

குழப்பத்தின் அடுத்த படி தெளிவு தானே?😂 பொறுத்திருங்கள் - விளக்கங்கள் சிலர் தருவர்!

 

18 hours ago, சுவைப்பிரியன் said:

நான் அறிந்த வரையில் விஜை தமிழன் தான்.அதனால் தான் மதத்தை காவுகிறார்கள்.

இதில் ஒரு சின்ன சிக்கல் இருக்கு.

1. விஜை அம்மா ஷோபா மலையாளி. அப்பா தமிழ்.

2. தவிரவும் விஜை ஒரு கிறிஸ்தவர் (ஜோசப் விஜை -சர்சை).

3. இப்போ விஜை தமிழனா? மலையாளியா? தூய தமிழனா? என்பதில் தம்பிகளுக்கு குழப்பம். 

4. இந்த குழப்பத்தை மேலும் அதிகமாக்கும் நான்கு காரணிகள்.

A. லைக்காவுக்கு ஆதரவாக இறங்கிய சமயம் சீமான் விஜயை எளிய தமிழ் பிள்ளை என்று அங்கிகரித்த நியாபகம். இப்போ மலையாளி என சொன்னால் - தமக்கு பிடித்தால் தமிழன், பிடிக்காட்டில் மலையாளி என்று சொல்கிறார்கள் என்பது அப்பட்டமாக தெரியும்.

B. சீமானின் மனைவியின் தாயார் தெலுங்கர் என்கிறார்கள் ஆகவே இதே வரைவிலக்கணத்தின் படி சீமானின் மகனும் தமிழன் இல்லை என ஏற்க வேண்டி வரும்.

C. விஜையின் பலம் - ரஜனியை போல அல்ல துடிப்பான இளைஞர்கள் விஜையோடு உள்ளார்கள். நேற்று ஒரு வாண்டு வீடியோ விட்டிருக்கு சீமானை திட்டி. 

D. சீமானும் கிறிஸ்தவர் ஆகவே அந்த பருப்பும் வேகாது.

இப்படி எல்லா பக்கத்தாலும் விஜய் கேட்டை போடுவதால்- விஜே சேதுபதியை, பார்தீபனை தெலுங்கன் என கட்டம் கட்டியது போல் விஜையை செய்ய யோசிக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

 

 

A. லைக்காவுக்கு ஆதரவாக இறங்கிய சமயம் சீமான் விஜயை எளிய தமிழ் பிள்ளை என்று அங்கிகரித்த நியாபகம். இப்போ மலையாளி என சொன்னால் - தமக்கு பிடித்தால் தமிழன், பிடிக்காட்டில் மலையாளி என்று சொல்கிறார்கள் என்பது அப்பட்டமாக தெரியும்.

B. சீமானின் மனைவியின் தாயார் தெலுங்கர் என்கிறார்கள் ஆகவே இதே வரைவிலக்கணத்தின் படி சீமானின் மகனும் தமிழன் இல்லை என ஏற்க வேண்டி வரும்.

C. விஜையின் பலம் - ரஜனியை போல அல்ல துடிப்பான இளைஞர்கள் விஜையோடு உள்ளார்கள். நேற்று ஒரு வாண்டு வீடியோ விட்டிருக்கு சீமானை திட்டி. 

D. சீமானும் கிறிஸ்தவர் ஆகவே அந்த பருப்பும் வேகாது.

இப்படி எல்லா பக்கத்தாலும் விஜய் கேட்டை போடுவதால்- விஜே சேதுபதியை, பார்தீபனை தெலுங்கன் என கட்டம் கட்டியது போல் விஜையை செய்ய யோசிக்கிறார்கள்.

ஆம், யாழிலேயே  தொண்டைக்குள் மீன்முள் சிக்கியமாதிரி மௌனம் நிகழ்கிறது எனும் போது சிக்கல் விளங்குகிறது.🤣 

"தமிழர்கள் இனத்தூய்மையை முன் வைத்து அரசியல் செய்வது இரு பக்கக் கூரான கத்தியை வைத்து விளையாடுவது போல- எம் மூக்கையே ஒரு நாள் பதம் பார்க்கும்" - இதை இன்னொரு திரியில் பரம்பரையியல் ஆதாரத்தோடு சொல்லியிருந்தேன்!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: 'விஜயகாந்த் வெற்றிக்கு ஆதாரம் உள்ளது; விஜய் வென்றாரா?'

  • ஆ. விஜயானந்த்
  • பிபிசி தமிழ்
13 அக்டோபர் 2021
புதுப்பிக்கப்பட்டது 14 அக்டோபர் 2021
விஜய்

பட மூலாதாரம்,XB CREATIONS

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 110 இடங்களில் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் வெற்றி பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் வென்றிருப்பதாக விஜய் மக்கள் மன்றத்தினர் தெரிவித்து வந்தாலும், அவ்வாறு வென்றவர்கள் விஜய் மக்கள் மன்றத்தில் உறுப்பினராகவோ நிர்வாகியாகவோ இருந்தார்கள் என்பதற்கான ஆதாரங்களை அவர்கள் வெளியிடவில்லை.

தமிழ்நாட்டின் ஒன்பது மாவட்டங்களில் உள்ள 140 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 74 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 1381 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 2,901 கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடங்களுக்கும், 22,581 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் என மொத்தமாக 27,003 தேர்தல் உள்ளாட்சிப் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இவற்றில் வேறு மாவட்டங்களில் இடைத் தேர்தல் நடந்த மிகச் சில இடங்களும் அடக்கம்.

இதில், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களில் 2874 பதவியிடங்களும் கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவியிடங்களில் 119 பதவியிடங்களும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களில் 5 பதவியிடங்களும் மாவட்ட ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களில் 5 பதவியிடங்களும் போட்டியின்றி நிரப்பப்பட்டன.

மேலும், ஒரு கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடம் நீதிமன்ற வழக்கின் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 2 கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடத்திற்கும் 21 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடத்திற்கும் போட்டியிட ஆட்கள் முன்வரவில்லை என்பதால் இங்கு தேர்தல் நடைபெறவில்லை. மீதமுள்ள 23,978 பதவியிடங்களுக்கு தேர்தல் நடந்தது. இவற்றில் 110 இடங்களைக் கைப்பற்றியுள்ளோம் என்கின்றனர் விஜய் மக்கள் மன்றத்தினர்.

'இயக்கத்தின் கொடி, பெயர் பயன்படுத்தியதால் வெற்றி'

`மக்கள் இயக்கத்தின் கொடி, பெயர் ஆகியவற்றைப் பயன்படுத்தி தேர்தலில் நின்றதால் இந்த வெற்றி கிடைத்துள்ளது' என்கிறார், காஞ்சிபுரம் மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளர் சரவணன். என்ன நடந்தது?

தமிழ்நாட்டில் அக்டோபர் 6 மற்றும் 8 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி என ஒன்பது மாவட்டங்களுக்கு நடைபெற்ற இந்தத் தேர்தலில் பெரும்பான்மையான வெற்றியை ஆளும்கட்சியான தி.மு.க பெற்றுள்ளது.

பல மாவட்டங்களில் எதிர்க்கட்சியான அ.தி.மு.க படுதோல்வியடைந்துள்ளது. தென் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் அ.ம.மு.க வெற்றி பெற்றுள்ளது. மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி ஆகியவை குறிப்பிடத்தக்க வெற்றியை பெறவில்லை. சட்டமன்றத் தேர்தலில் ஆறு சதவிகித வாக்குகளைப் பெற்ற நாம் தமிழர் கட்சி, இந்தமுறை படுதோல்வியை சந்தித்துள்ளது.

போட்டி 169 இடங்கள்.. வெற்றி?

அதேநேரம், 109 இடங்களில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் வெற்றி பெற்றுள்ளதாக அந்த அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். நேற்று மாலை தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருந்த நேரம், 55 இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் வெற்றி பெற்றுள்ளதாக அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டிருந்தார். தொடர்ந்து நேற்று இரவு முழுக்க வாக்கு எண்ணும் பணிகள் நீடித்தன. முடிவில் 110 இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் வெற்றி பெற்றுள்ளதாக அந்த அமைப்பின் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

விஜய்
 
படக்குறிப்பு,

தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் வாக்களிக்க சைக்கிளில் வந்து அதிர்வலைகளை ஏற்படுத்தினார் நடிகர் விஜய்

இதன் தொடர்ச்சியாக வெற்றி பெற்றவர்கள் அனைவரும் ஓரிரு நாள்களில் நடிகர் விஜய்யை சந்தித்து ஆசி பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பொதுவாக, ஊரக உள்ளாட்சித் தேர்தலில் சின்னம் என்பது பிரதானமாக இருப்பதில்லை என்பதால், அந்தந்த பகுதிகளில் செல்வாக்கானவர்களை அரசியல் கட்சிகள் களமிறக்கின. சட்டமன்றத் தேர்தலுக்கு இணையாக உள்ளாட்சித் தேர்தலிலும் பணம் பிரதானப் பங்கு வகித்ததாகவும் தகவல் வெளியானது. இந்தநிலையில், விஜய் மக்கள் இயக்கத்தின் வெற்றியை மிக முக்கியமான ஒன்றாக அக்கட்சியின் நிர்வாகிகள் பேசி வருகின்றனர்.

போட்டியின்றி தேர்வான 13 பேர்

உள்ளாட்சித் தேர்தல் நிலவரம் குறித்து, தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளரும் மாவட்ட இளைஞர் அணி தலைவருமான சரவணனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` உள்ளாட்சி தேர்தல் வாக்குப் பதிவுக்கு முன்னரே ஒன்பது மாவட்டங்களில் போட்டியின்றி 13 பேர் தேர்வானார்கள். குறிப்பாக, காஞ்சிபுரத்தில் 2 பேர், கள்ளக்குறிச்சியில் 3 பேர் என வெற்றி பெற்றுள்ளனர். தேர்தல் முடிவுகளுக்கு முன்னரே இந்த வெற்றி எங்களுக்குள் மகிழ்ச்சியை கொடுத்தது" என்கிறார்.

தொடர்ந்து பேசிய சரவணன், `` உள்ளாட்சியில் 169 இடங்களில் போட்டியிட்டோம். இந்த நிமிடம் வரையில் 110 பேர் வெற்றி பெற்றுள்ளனர். 2019 உள்ளாட்சித் தேர்தலில் 32 மாவட்டங்களில் சுயேச்சையாக கொடி, பெயர் ஆகியவற்றைப் பயன்படுத்தாமல் போட்டியிட்டோம். அப்போது 135 பேர் வெற்றி பெற்றனர். இந்தமுறை மக்கள் இயக்கத்தின் கொடி, பெயர் ஆகியவற்றைப் பயன்படுத்துவதால் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்ததை அறிய முடிந்தது.

விழுப்புரம், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நல்ல வெற்றி கிடைத்துள்ளது. மக்கள் நலப் பணிகளை தொடர்ந்து முன்னெடுக்கிறோம். எங்களின் சேவைகளைப் பார்த்து மக்களும் ஆதரவு கொடுத்தனர். வாக்கு எண்ணிக்கைக்கு முன்னரே, `100 இடங்களில் வெற்றி பெறுவோம்' என உறுதியாக நம்பினோம்" என்கிறார்.

``தேர்தல் நேரத்தில் நடிகர் விஜய் தரப்பில் இருந்து எதாவது தகவல்கள் வந்ததா?" என்றோம். `` மாநில பொதுச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான புஸ்ஸி ஆனந்தின் வழிகாட்டலில்தான் நாங்கள் தேர்தலில் நின்றோம். தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட பிரதான கட்சிகளிடம் இருந்து எங்களுக்கு எந்தவித சிக்கல்களும் வரவில்லை. தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் மாநிலத் தலைமைக்கு அனுப்பி வந்தோம்" என்கிறார்.

என்ன ஆதாரம் இருக்கிறது?

`` உள்ளாட்சியில் வெற்றி பெற்றதை நடிகர் விஜய்யின் ரசிகர்கள் கொண்டாடுகிறார்களே?" என மூத்த பத்திரிகையாளர் சிகாமணியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

விஜய்

பட மூலாதாரம்,ACTOR VIJAY

`` தாங்கள் வெற்றி பெற்றதற்கு எந்த ஆதாரத்தின் அடிப்படையில் விஜய்யை முன்வைத்து உரிமை கோருகிறார்கள் எனத் தெரியவில்லை. இந்தத் தேர்தலில் சுயேச்சை சின்னத்தில்தான் அனைவரும் போட்டியிட்டுள்ளனர். ஊராட்சி மன்றத் தேர்தலில் கட்சி சின்னத்தில் யாரும் போட்டியிடுவதில்லை. அப்படியிருக்கும்போது, `நடிகர் விஜய்யின் ஆதரவில்தான் நாங்கள் வெற்றி பெற்றோம்' என இவர்கள் கூறுவதை யாரும் சென்று சரிபார்க்கப் போவதில்லை" என்கிறார்.

தொடர்ந்து பேசிய சிகாமணி, `` ஊரக உள்ளாட்சியில் இவர்கள் அனைவரும் ஒரே சின்னத்தில் போட்டியிடவும் வாய்ப்பில்லை. தனது தந்தை புதிதாக அரசியல் கட்சியைத் தொடங்கியபோது, அதனை மறுத்து விஜய் அறிக்கையும் வெளியிட்டிருந்தார். கடந்த காலங்களில் உள்ளாட்சியில் அதிக இடங்களில் விஜயகாந்த் வெற்றி பெற்றார் என்றால், அதற்குப் போதிய ஆதாரங்கள் இருந்தன. அதேநேரம், விஜய் ரசிகர்கள் தரப்பில் கற்பனையான, நிரூபிக்க முடியாத தகவல்களைக் கூறுவது ஏன் எனத் தெரியவில்லை" என்கிறார்.

மேலும், `` தற்போதைய அரசியல் சூழலில், யாராவது ஒருவர் வந்துதான் தமிழ்நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்ற அவசியம் எதுவும் தற்போது இல்லை. உள்ளாட்சியில் எதாவது ஒரு காரணத்தால் சிலர் வெற்றி பெற்றிருக்கலாம். அதற்காக, விஜய்க்காகத்தான் மக்கள் வாக்களித்தார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? இதன்மூலம் என்ன சாதிக்கப் போகிறார்கள் எனத் தெரியவில்லை. தமிழ்நாட்டில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன. இதில், 110 இடங்களில் வெற்றி பெறுவதில் என்ன பெருமை இருக்கப் போகிறது?" என்கிறார்.

https://www.bbc.com/tamil/india-58895863

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் பேசவே இல்லை... தான் சார்ந்து அரசியல் இயக்கம் நடக்குதுன்னு. அப்புறம்.. எப்படி இது விஜயின் வெற்றி ஆகும். இதனை விட பெரிசா சாதிச்ச விஜய்காந்தின் நிலை இன்று..??!

மிகச் சில  ஆயிரம் அல்லது நூறு வாக்குகளில் தெரிவாகக் கூடிய இந்த தேர்தலில்... உள்ளூர் ரெளடிகளும்.. பணக்காரர்களும்.. செல்வாக்குள்ளவர்களுமே வெற்றியடைகின்றனர்.. தெற்காசிய சாக்கடை அரசியலில்.

இதில் 60 வீதமே எழுத்தறிவு கொண்ட தமிழக கிராமங்களில் மக்கள் அரசியல் தெளிவடைந்து வாக்குப் போடுவினம் என்பது வெறும் எதிர்பார்ப்பே. இந்த தேர்தல்களில் இளையோரை விட வயதானவர்களே அதிகம் வாக்களிக்கின்றனர். அவர்கள் பாரம்பரியமாக காசுக்கு வாக்குப் போடும்.. சலுகைகளை எதிர்பார்த்து வாக்குப் போடும் மக்களாகவே வைக்கப்பட்டுள்ளனர்.. திமுக.. அதிமுக போன்ற திராவிடக் கும்பல்களால்.

அந்த வகையில் நாம் தமிழரின் எழுச்சி மக்களிடம் முழுச் செல்வாக்குச் செய்ய காலம் எடுக்கும். அதேவேளை நாம் தமிழரும்.. அடிமட்ட மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய அரசியலினூடான தமிழின முன்னுந்தல் அரசியலை செய்தால் அன்றி.. திராவிடக் கும்பல்களின் 50 ஆண்டுகளாக திராவிட அரசியல் பீடையை தமிழகத்தில் இருந்து பிடிங்கி எறிவது அவ்வளவு இலகுவான விடயமல்ல.

நாம் தமிழர் தோற்கனும் என்று விரும்புவர்களின் தேடிப்பிடித்த பிரச்சாரங்களை எல்லாம் முறியடித்து நாம் தமிழர் கட்சி தோற்கும் கட்சி என்ற மக்களின் மனநிலையில் மாற்றம் கொண்டு வந்து மக்கள் வாக்குகளால்... வெல்லப்படக் கூடிய கட்சி என்ற நிலையை உருவாக்காமல்.. நாம் தமிழருக்கான வாக்கு சதவீதத்தை வெற்றி வாக்கு சதவீதமாக்க முடியாது. 

நாம் தமிழர் வெல்ல முடியாத கட்சி என்ற மக்களின் சிந்தனை மாறி.. வெல்லக் கூடிய கட்சி என்ற செயற் திட்டங்களே.. நாம் தமிழரின் அரசியலில் அதனை பலப்படுத்தி முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும். அதுவே ஈழத்தமிழினத்தின் எதிர்கால அயலக உறவு ஈழத்திற்கு சாதகமாக அமைய வாய்ப்பளிக்கும்.

இன்றி சுப்பிரமணியம் சுவாமி போன்ற கொரோனாவை விட மோசமான கிருமிகளின் ஆதிக்கமே  தமிழகத்தையும் மொத்த தமிழினத்தையும் நாசப்படுத்திக் கொண்டிருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலில் படு தோல்வி- வாய் மட்டும் பேசும் நாம் தமிழர் கட்சி!

அரசியல் கட்சிகள் மக்களின் ஆதரவைப் பெற்று வெற்றி பெறும் நோக்கோடுதான் உருவாக்கப்படுகிறது. மக்களின் ஆதரவைப் பெற பல விதமான வாக்குறுதிகளையும் மக்களுக்கு அளிக்கிறது. அதே கட்சி ஆளும் கட்சி ஆனால் கொடுத்த வாக்குறுதிகளை ஓரளவு நிறைவேற்றி தங்கள் அணுகுமுறையால் வெல்கிறது.

ஆனால், திமுக, திராவிட இயக்கத்தை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கோடு உருவான கட்சிதான் நாம் தமிழர். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் முதல் அக்கட்சியின் கீழ் மட்ட பிரமுகர்கள் வரை வாயைத் திறந்தால் வன்முறை வாடை வீசுகிறது. தலைவர்களை அருவருப்பாக பேசுவது. அரசியல் தலைவர்களின் குடும்பங்களை கீழ்த்தரமாக விமர்சிப்பது, பெண்களை அவதூறாகப் பேசுவது என இதையே அரசியல் பணியாகச் செய்து வருகிறார்கள்.

புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களிடம் இருந்து ஆண்டுதோறும் பல லட்சம் ரூபாயை நன்கொடையாகப் பெறும் நாம் தமிழர் கட்சி அந்த நிதி பற்றி எதுவும் பேசுவதில்லை. இந்திய  தேர்தல் கமிஷனால் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு அரசியல் கட்சி எந்த வெளிநாட்டிடம் இருந்தும் தேர்தல் நிதி பெறக்கூடாது. ஆனால், நாம் தமிழர் கட்சி வெவ்வேறு காரணங்களைச் சொல்லி நிதி பெறுகிறது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் முதல்வரின் பிறப்பைப் பற்றி மோசமாகப் பேசி சாட்டை துரைமுருகன் என்பவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சரி, இவ்வளவு பேசும் இவர்கள் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் வெல்வதில்லை. இப்போது நடந்து முடிவுகள் வெளியாகி வரும் உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றியக் கவுன்சிலர் பதவிகள் ஒன்றில் கூட வெல்ல முடியவில்லை. சரி மாவட்ட அளவில்தான் வெல்ல முடியவில்லை. ஒரு வார்டிலாவது வென்றார்களா என்றால் இல்லை.

வார்ட் என்பது போட்டியிடும் வேட்பாளர்கள் வசிக்கும் பகுதி அன்றாடம் மக்களோடு புழங்கும் இடம் என்பதால் ஓரளவுக்கு போட்டியிடும் அனைவருக்குமே மக்களிடம் செல்வாக்கு இருக்கும். ஆனால், நாம் தமிழர் கட்சி ஒரு வார்ட் தேர்தலில் கூட வெற்றி பெற முடியவில்லை. அந்த அளவுக்கு மக்களோடு நெருக்கமாக  இருக்கிறார்கள்.

மைக், மேடை, வாட்சப், பேஸ்புக் போன்றவற்றின் மூலமாகவே ஒரு கட்சியை வளர்த்து விட முடியாது என்பதையே நாம் தமிழர் கட்சி  துவங்கிய நாள் முதல் சந்தித்து வரும் தோல்விகள் எடுத்துக் காட்டுகின்றன.

https://inioru.com/தேர்தலில்-படு-தோல்வி-வாய/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனிமனித விருப்புவெறுப்பகளைக் கொண்டு அரசியலை பார்க்க முடியாதென்பதை அரசறிவியலாளர்கள் சுட்டுகின்றனர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1FABCC47-0B66-482D-9E4F-CC5C6A56BBA7.jpeg
 

 

சீமானின் “கர்வாப்ஸி” பேச்சைக் கேட்ட போது ஒருவிசயம் தெளிவாகியது: அவருக்கு தன்னுடைய சுயசாதி, தமிழ் தேசிய தொண்டர் படை தன்னை விட்டுப் போகிறதோ எனும் அச்சம் அவருக்கு உண்டாகி இருக்கிறது. அந்த பேச்சில் அவருடைய முகத்திலும், குரலிலும் அந்த பதற்றம், கசப்பு தெரிகிறது. இந்த அச்சம் விஜய்யின் ரசிகர் மன்றம் உள்ளாட்சி தேர்தலில் 120க்கும் மேற்பட்ட இடங்களில் வென்றுள்ளது மிகப்பெரிய கவனத்தை ஊடகங்களில் பெற்றது, நாம் தமிழர் கட்சி இன்னொரு பக்கம் இதே தேர்தலில் டவுசர் கழன்று போயுள்ளது குறித்த கேலி, கேள்விகளில் இருந்து வருகிறது. இன்னும் தெளிவாக சொல்லுவதானால், விஜய் தன்னுடைய சாதியை சேர்ந்த மற்றும் சேராத இளைஞர்களை மொத்தமாக அள்ளிக் கொண்டு போய் விடுவாரோ என சீமான் பதறுகிறார். ஒருவேளை விஜய்யின் ரசிகர் மன்றம் ஒரு கட்சியாக அடுத்த சட்டமன்ற தேர்தலில் களம் கண்டு இதே போல கணிசமான வாக்குகளைப் பெற்றால் அது சீமானின் வாக்குவங்கியை அரித்து விடும். 

ஆக சீமான் தமிழரின் பூர்வ மதம் இந்து மதம், கிறித்துவர்களும், இஸ்லாமியரும் அம்மதங்களை பின்பற்றும் வரையில் தமிழர்களாக அவர்களை ஏற்க முடியாது என்கிறார். இந்து மதம் என்று சொன்னால் தான் பாஜகவுடன் நேரடியாக அடையாளப்படுத்தப் படுவோம் என பயப்படும் அவர் சைவமும், மால்யமும் இந்து மதங்கள் அல்ல என்கிறார். கவனியுங்கள், சைவமும் வைணவமும் வைதீக மதங்கள் அல்ல என்று அவர் கூறவில்லை. வில்லியம் ஜோன்ஸ் சட்டமியற்றி தமிழர் மதங்களை இந்து மதம் என பெயர் மாற்றி விட்டார், அப்பெயரை நீக்கினால் அவை தமிழர் மதமாகி விடும் என குழப்புகிறார். வரலாறும், மெய்யியலும் அறிந்த எவரும் இந்த அபத்தமான விளக்கத்தை ஏற்க மாட்டார்கள். இந்து மதம் என அறியப்பவடுகிற பிரதான இரு கிளைகள் வைணவமும் சைவமும். இரண்டுமே அத்வைதத்தின் மெய்யியல் படி தொடர்ந்து விளக்கப்பட்டு வருகின்றன. தொன்மங்களும் அவ்வாறே வடிக்கப்பட்டுள்ளன. சீமான் வழிபடும் வடபழனி முருகனும் தான். சிவனையோ விஷ்ணுவையோ வைதீக பூச்சுகளை ஒழித்து பழங்குடி தெய்வங்களாக்கும் எந்த முயற்சியையோ சீமானின் கட்சியினர் எடுக்கவில்லை. சைவத்தை பக்தி காலகட்டத்தில் எப்படி முன்வைத்தார்களோ அப்படித்தான் சீமானும் பார்க்கிறார். சொல்லப் போனால் சிவனை வைதீக எதிர்ப்புக் கடவுளாக மறுகட்டமைப்பு பண்ணுவதும் அவருடைய நோக்கமல்ல; அவர் மதநம்பிக்கையும் சுயசாதி பாசமும் கொண்ட ஒரு மக்கள் திரளை தமிழ் தேசிய முலாம் பூசி தன் வசம் இழுக்க இப்போது முயல்கிறார். இந்து என்று சொன்னால் எடுபடாது என்றால் சைவம் எனும் தமிழர் மதம் என ஒரு புதிய கதையாடலை எடுத்து விடுகிறார். இங்கு தான் விஜய்க்கும் ஒரு செக் வைக்கிறார்:

 

விஜய்யை ஏற்கனவே கிறித்துவ வந்தேறி என பாஜக எதிர்க்க முயன்று தோற்றது. இப்போது சீமான் அதையே விஜய்யின் பெயர் சொல்லாமல் செய்கிறார். விஜய் நம்முடைய சாதி நடிகர் என்று எண்ணி பின்னால் போகாதீர்களடா, அவர் கிறித்துவர், அதனாலே அவர் தமிழர் அல்ல என்று தன் தம்பிகளை கையைப் பிடித்து இழுக்கிறார்.

சீமான் இதற்கு முன்பும் அவ்வப்போது விஜய்யை “என் தம்பி” என்று கூறுவது, பின்னர் தாக்குவது என இருந்திருக்கிறார். குறிப்பாக, தன்னுடைய 6% வாக்குகளுக்கு பங்கு வந்து விடுமோ என பயம் வரும் போது அவர் “அரசியல் செய்யாமல் நேரடியாக தேர்தலில் போட்டியிடும் நடிகர்களுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்” என்று விஜய்யையும் சேர்த்து சாடுவார். இப்போது ஒரு படி மேலே சென்று “அந்நிய மிஷினரி” என்று தாக்கி விட்டு கூடவே இருக்கட்டும் என “அரபு வந்தேறிகள்” என இஸ்லாமியரையும் சாடி இருக்கிறார். கோபத்தில், அச்சத்தில் நிதானத்தை இழந்திருக்கிறார்.

 ஆனால் இப்போதுள்ள நிலை தொடர்ந்தால் சீமானின் வீழ்ச்சி வரும் பத்தாண்டில் வேகமெடுக்கும் எனத் தோன்றுகிறது.

 

http://thiruttusavi.blogspot.com/2021/10/blog-post_16.html

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையாளர் அபிலாசின் நட்சத்திரம் ,லக்கினம் என்பனவறையும் எழுதி விட்டால், இனி வரப்போகும் கருத்தாளர்கள் அவருக்கு திமுக சொம்பு என அர்ச்சனை செய்ய வசதியாக இருக்கும்🤣.

மேலே கட்டுரையில் அலசப்படும் சீமான் வீடியோ👇.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கர் வாபஸி (வீடு திரும்புதல்) (தாய் மதம் திரும்புதல்) எனும் சங்பரிவாரின் நீண்ட கால திட்டத்தை விஷ்வஹிந்து பரிஷித் எப்படி நடைமுறை படுத்துகிறது என்பது பற்றிய கட்டுரை இது 👇.

https://www.hindutamil.in/amp/news/india/32942-15.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார் Published By: VISHNU    19 APR, 2024 | 06:46 PM   மறைந்த முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார். வெள்ளிக்கிழமை (19) முற்பகல் அவரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ள மத்துகம யடதொலவத்தையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகளுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் உடன் சென்றிருந்தனர். https://www.virakesari.lk/article/181481
    • இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஜோ பைடனின் பேச்சை மீறியதால் சிக்கலில் பெஞ்சமின் நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரெமி போவன் பதவி, பிபிசி சர்வதேச ஆசிரியர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தி தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக இரான் அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்ஃபஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். சில நாட்கள் முன்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பெரும் அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தார். கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி காஸாவில் உள்ள ‘உலக மத்திய சமையலறையில்’ (வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்) பணிபுரியும் ஏழு மனிதநேய உதவிப் பணியாளர்கள், இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வால் இஸ்ரேல் மீது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிருப்தி அடைந்தார். மேலும், நட்பு நாடாக இருப்பினும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பொறுமை இழக்கச் செய்தது. அதே நாளில், சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள இரானிய தூதரக வளாகத்தை இஸ்ரேல் தாக்கியது. அந்தத் தாக்குதலில் ஒரு மூத்த ராணுவ ஜெனரல் மற்றும் ஆறு அதிகாரிகளுக்கு மேல் கொல்லப்பட்டனர். தூதரகங்கள் மீதான தாக்குதல்களைத் தடை செய்யும் சட்ட மரபுகள் செயல்பாட்டில் இருப்பினும், அதை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ‘இரான் விதிகளை மீறி தூதரக கட்டடத்தை ராணுவ புறக்காவல் நிலையமாக மாற்றியதால்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது’ என இஸ்ரேல் தரப்பில் ஏற்றுக்கொள்ள முடியாத காரணம் சொல்லப்பட்டது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இரான் உறுதிபூண்டது. அதற்கு முன்னரும் மூத்த ராணுவ தளபதிகள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டபோது ‘பதிலடி கொடுக்கப்படும்’ என்று வார்த்தைகளில் மட்டுமே இரான் தெரிவித்தது. ஆனால், அவை செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   அமெரிக்கா ஆவேசம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்கா தனக்கு வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி இஸ்ரேல் காஸாவில் பேரழிவுத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான ‘வோர்ல்டு சென்ட்ரல் கிச்சனில்’ பணிபுரியும் குழுவை இஸ்ரேல் தாக்கியது. மனிதநேய உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட சீற்றத்தால் இரானுக்கு வெளியே, டமாஸ்கஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பெரிதாகக் கண்டு கொள்ளப்படவில்லை. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எழுதிய ஆவேசமான அறிக்கை ஒன்றை வெள்ளை மாளிகை வெளியிட்டது. அவர் ‘சீற்றம்டைந்தார், மனமுடைந்து விட்டார்’. இப்படி நடப்பது முதல்முறை அல்ல. உதவிப் பணியாளர்கள் மற்றும் பாலத்தீன குடிமக்களைப் பாதுகாக்க இஸ்ரேல் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை, என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இஸ்ரேல் பிரதமருடன் ஒரு காட்டமான தொலைபேசி உரையாடலில், பைடன், பெரும் சலுகைகளைக் கோரினார். காஸாவுக்கு பெருமளவு மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும் என்றார். வடக்கு காஸாவில் உணவின்றிப் பட்டினியால் இறக்கும் குழந்தைகள் வசிக்கும் பகுதியில் இருந்து ஒரு மணிநேரத்திற்கும் குறைவான தூரத்தில் இஸ்ரேல் அதிகமான எல்லைக் கடப்புகளைத் திறக்க வேண்டும் என்றார். அஷ்டோதில் உள்ள கொள்கலன் துறைமுகத்தையும் திறக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்தச் சூழல் மாறும் என பிரதமர் நெதன்யாகு பைடனுக்கு உறுதியளித்தார். அது வெறும் சமாளிப்பு மட்டுமே.   இருபுறமும் அழுத்தத்தில் இருந்த நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES வெள்ளை மாளிகையின் சீற்றத்தை எதிர்கொள்ளும் அதே வேளையில் நெதன்யாகு, மற்றொருபுறம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் தன்னை ஆதரித்து தனது கூட்டணியை அதிகாரத்தில் வைத்திருக்கும் தீவிர தேசியவாதிகளின் அழுத்தத்திற்கும் ஆளாகியுள்ளார். காஸாவில் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை மட்டும் அவர்கள் எதிர்க்கவில்லை. காஸாவில் இந்தப் போர் யூதர்களை மீண்டும் குடியமர்த்துவதற்கான விலைமதிப்பற்ற வாய்ப்பை இஸ்ரேலுக்கு வழங்கியிருப்பதாக அவர்கள் திடமாக நம்புகிறார்கள். கடந்த 2005ஆம் ஆண்டில் இஸ்ரேலில் இருந்து ஒருதலைப்பட்சமாக அங்குள்ள யூதர்களின் குடியிருப்புகள் அரசால் காலி செய்யப்பட்டு இடித்துத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த வார இறுதியில், அமெரிக்கா இஸ்ரேல் மீதான அழுத்தத்தை அதிகரித்தது. வியாழன் அன்று, அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். காஸாவை ஆறு மாதமாக இஸ்ரேல் முற்றுகையிட்டு வைத்திருந்தது, அப்பகுதியில் உலகிலேயே மிக மோசமான உணவு நெருக்கடி சூழலை உருவாக்கியது என்பது இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கும் எதிரி நாடுகளுக்கும் தெளிவாகவே தெரிந்திருக்கும். மற்றொருபுறம், ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா அதைப் பயன்படுத்த இஸ்ரேலுக்கு நிபந்தனைகளை விதிக்கும் என்ற யூகமும் இருந்தது.   அமெரிக்காவின் மனநிலை பட மூலாதாரம்,UGC கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) காலை, இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்துவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, தி’ நியூயார்க் டைம்ஸ்’ ஊடகம் பெரும் சீற்றத்தை எதிரொலித்து ஒரு தலையங்கம் வெளியிட்டது. குறிப்பாக அமெரிக்க காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் மத்தியில் இந்தச் சீற்றம் காணப்பட்டது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதில் இடைநிறுத்தம் செய்யக் கோரியும் பெஞ்சமின் நெதன்யாகுவை தாக்கியும் அத்தலையங்கம் அமைந்திருந்தது. “இஸ்ரேலுக்கான ராணுவ உதவி நிபந்தனையற்றதாக இருக்கக்கூடாது,” என்ற தலைப்பின் கீழ், அப்பத்திரிகையின் ஆசிரியர் குழு, அமெரிக்கா உடனான ‘நம்பிக்கையின் பிணைப்பை’ உடைத்ததற்காக நெதன்யாகுவையும் அவரது அரசின் கீழ் செயல்படுபவர்களையும் கடுமையாகச் சாடியுள்ளது. “இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதும் நாட்டை தற்காத்துக் கொள்ள நினைப்பதும் சரிதான். ஆனால் அதற்காக அதிபர் பைடன் ‘நெதன்யாகு இரட்டை முகத்துடன் மேற்கொள்ளும் தந்திரமான அரசியல் விளையாட்டுகளை அனுமதிக்க வேண்டும்’ என்பது அர்த்தம் இல்லை,” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.   இரானின் தாக்குதல், நெதன்யாகுவுக்கு கிடைத்த வாய்ப்பு படக்குறிப்பு,இஸ்ரேல் மீது இரான் ஏவிய ஏவுகணைகள் அதன்பின் இரான் இஸ்ரேல் மீது முதல் நேரடித் தாக்குதலை நடத்தியது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. ஆனால், தற்போது அதற்கு பதிலடி கொடுக்க வேண்டாம் என்று அமெரிக்கா கூறியதை மீறி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல். ராணுவ ஒத்துழைப்பின் குறிப்பிடத்தக்க ஒருங்கிணைந்த செயல்பாடாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பிற மேற்கத்திய நட்பு நாடுகள் இரானால் ஏவப்பட்ட 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்துவதற்கு இஸ்ரேலுக்கு உதவின. காஸாவில் நடக்கும் இஸ்ரேலின் தாக்குதல்களைக் கடுமையாக விமர்சித்தவர் ஜோர்டான் நாட்டின் மன்னர் அப்துல்லா. ஆனால் இஸ்ரேலுக்கு ஆபத்து வந்தபோது, ஜோர்டானின் விமானப்படை பாதுகாப்பு நடவடிக்கையில் இணைந்தது, இஸ்ரேலை நோக்கி வந்த ஏவுகணைகளை வீழ்த்தியது. இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ராணுவ உதவிக்கு நிபந்தனைகள் விதிக்கும் சூழல் மாறி ஒற்றுமையின் உறுதியான வெளிப்பாடு அப்போது பிரதிபலித்தது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு புதிய அரசியல் வாய்ப்பை வழங்கியுள்ளது. குறைந்தப்பட்சம் ஓரிரு நாட்களுக்கு தலைப்புச் செய்திகளில் காஸாவின் பெயர் அடிபடாது.   மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாடு என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இரானின் ஏவுகணைகளை இடைமறித்த இஸ்ரேலின் அயர்ன் டோம் அதேநேரம் பிரதமர் நெதன்யாகு மீதான அழுத்தம் அதிகரித்துவிட்டது. இஸ்ரேலின் அடுத்த நகர்வுகள் அந்த அழுத்தத்தை இரட்டிப்பாக்கும். அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதை அதிபர் பைடன் மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். இரானின் தாக்குதலை முறியடித்த வெற்றியை மட்டும் இஸ்ரேல் எடுத்துக்கொள்ள வேண்டும், ‘ஆனால் திருப்பி அடிக்கக்கூடாது’ என்றார். இந்த நிலையில்தான் இரான் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் ஆதரவு என்பது ‘இரும்புக் கவசம்’ போன்றது என்பதை பைடன் மீண்டும் நினைவுபடுத்தினார். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு அவரது நிலையான கொள்கை வெளிப்பட்டது. காஸாவில் பேரழிவையும் கொடிய விளைவுகளையும் ஏற்படுத்தப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அமெரிக்காதான் வழங்கியது என்ற போதிலும் அதிபர் பைடனும் அவரது நிர்வாகமும் மத்திய கிழக்கில் நடக்கும் போரை நிறுத்தக் கடுமையாக உழைத்துள்ளனர். அக்டோபரில் இருந்து ஆயுதங்கள் மற்றும் பிற நாடுகள் அளித்த ஆதரவையும் இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. ஜோ பைடனின் எச்சரிக்கைகளையும் கோபத்தையும் புறக்கணித்து அவரின் அவநம்பிக்கைக்கு ஆளானது. இரானுக்கு எதிராகச் செயல்பட, இஸ்ரேலுக்கு முன்னெப்போதும் இல்லாத ராணுவ ஒத்துழைப்பை சில ஆதரவு நாடுகள் வழங்கின. இதன்மூலம் இஸ்ரேல் மீண்டும் ஒருமுறை ஜோ பைடனின் ‘பதிலடி கொடுக்க வேண்டாம்’ என்ற அறிவுரையைப் புறக்கணித்தது. ஜோ பைடனை போலவே பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் ஆகியோர் இரான் தாக்குதலுக்கு எதிராகப் போர் விமானங்களை அனுப்பினர். இருவரும் இரானை கண்டித்தனர். மேலும் இஸ்ரேலிடம் பதில் தாக்குதல் செய்ய வேண்டாம் என்பதை வலியுறுத்தினர். அவர்கள் இஸ்ரேலில் நீண்ட கால நம்பிக்கைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக யோசிக்கத் தொடங்கிவிட்டனர். இஸ்ரேல்-இரான் பகை இஸ்ரேல் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு சீற்றத்துடன் பதிலடி கொடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் ஆழமாக நம்புகிறது. மேலும், இரான் இஸ்ரேலின் மிகவும் ஆபத்தான எதிரி என்றும் யூத அரசை அழிப்பதில் இரான் குறியாக உள்ளது என்றும் பெஞ்சமின் நெதன்யாகு நம்புகிறார். அவரது ஆட்சியில் பலமுறை இந்த நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக இஸ்ரேல் மக்கள் பலர் இதே கருத்தை முன்வைக்கின்றனர். கடந்த 1979இல் இரானில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் இஸ்ரேலுடன் பல வருடப் பகை நீடித்தது. அதன் பிறகு இப்போது இரான் முதன்முறையாக இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதல் தொடுத்துள்ளது. நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கும் மறைமுகப் போர் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தற்போதைய தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்னதாகவே, பதில் தாக்குதல் நடத்தப்படுமா என்பது கேள்வி அல்ல, எப்போது, எப்படி நடத்தப்படும் என்பதுதான் கேள்வி என்று இஸ்ரேல் கூறியது. தீவிரமான போர்ச்சூழல் உருவாகாமல், எப்படி பதில் தாக்குதல் நடத்துவது என்று இஸ்ரேலின் போர்க்குழு அமைச்சரவை விவாதித்து வந்தது. இரான் தீவரமான போர்ச்சூழலை விரும்பவில்லை என்று சொன்னாலும், அதற்கேற்ப பதிலளிக்கும். எந்தவொரு அனுமானமும் இன்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இரு தரப்பினரும் ஏற்கெனவே மற்றவரின் நோக்கங்களைத் தவறாக மதிப்பிட்டுள்ளனர் என்பதே நிதர்சனம். பெஞ்சமின் நெதன்யாகுவும் அவரது அரசாங்கமும் மீண்டும் ஒருமுறை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற நாடுகளின் விருப்பங்களைப் புறக்கணிப்பதில் குறியாக உள்ளனர். இஸ்ரேலின் தீவிர தேசியவாதக் கூட்டாளிகள், இரான் மீது கொடூரத் தாக்குதல் நடத்தக் கோரினர். அவர்களில் ஒரு தரப்பினர் இஸ்ரேல் ‘வெறியுடன் செயல்பட வேண்டும்’ என்றனர்.   காஸாவில் தொடரும் மனிதாபிமானப் பேரழிவு படக்குறிப்பு,அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். இவையனைத்திற்கும் மத்தியில் காஸாவில் மனித உரிமை மீறல் மற்றும் பேரழிவு தொடர்கிறது. காஸா மீண்டும் சர்வதேச கவனம் பெறும். இஸ்ரேலின் ராணுவம் காஸாவில் இன்னமும் பொதுமக்களைக் கொன்று வருகிறது. மற்றொருபுறம் மேற்குக் கரையில் பாலத்தீனர்களுக்கும் யூத குடியேற்றவாசிகளுக்கும் இடையே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. ஹெஸ்பொல்லாவுடன் இஸ்ரேலுக்கு மீண்டும் எல்லைப் போர் தீவிரமடையலாம். இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இன்னும் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என இரான் உறுதியளித்துள்ளது. அதன் ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரியான ஹொசைன் பாகேரி, இஸ்ரேல் மீதான தாக்குதல் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது, ஆனால் இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் ‘மிகப் பெரிய’ பதிலடியை திருப்பிக் கொடுப்போம் எனக் கூறியிருக்கிறார். இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்தினால் உதவ மாட்டோம் என அமெரிக்கா உறுதிபடத் தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான ‘இரும்புக் கவசமாகச்’ செயல்பட்ட ஜோ பைடன் அரசு இஸ்ரேலிய தாக்குதலுக்கு இரான் பதிலடி கொடுத்தால், ஆதரவாக நிற்காது என்பதை நம்புவது கடினம். இந்தச் சூழ்நிலை மத்திய கிழக்குப் பகுதியில் தீவிரமான போர்ச் சூழலையும் சர்வதேச நெருக்கடியையும் ஏற்படுத்தும். https://www.bbc.com/tamil/articles/cd19j8p3n4vo
    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.