Jump to content

நோர்வேயில்.... வில் மற்றும் அம்புகளை எய்து... மக்கள் மீது தாக்குதல் -5 பேர் வரையில் உயிரிழப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நோர்வேயில் வில் மற்றும் அம்புகளை எய்து மக்கள் மீது தாக்குதல் -5 பேர் வரையில் உயிரிழப்பு!

நோர்வேயில்... வில் மற்றும் அம்புகளை எய்து, மக்கள் மீது தாக்குதல் -5 பேர் வரையில் உயிரிழப்பு!

நோர்வேயில் வில் அம்புகளை எய்து மக்கள் மீது தாக்குதல் நடத்தியதில் 5 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, சம்பவத்தோடு தொடர்படைய 37 வயதுடைய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நோர்வே நாட்டின் தலைநகர் ஓஸ்லோவின் தென்மேற்கில் காங்ஸ்பெர்க் நகரில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடத்தில் விம், அம்புடன் வந்த மர்ப நபர் மக்களை அம்புகள் எய்தி தாக்கியுள்ளார். மேலும் துப்பாக்கிச்சூடும் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில் 5 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்தோடு, காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதல் நடத்தியதற்கான காரணம் குறித்து இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், கைது செய்யப்பட்ட  சந்தேகநபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

https://athavannews.com/2021/1244777

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் எங்கும்… பொது மக்களை குறி வைத்து, கொல்லும் கிறுக்கு பிடித்தவர்கள் இருந்தாலும்…

இவ(ன்)ர் ஏன்… வில்லு, அம்பை… தெரிந்தெடுத்தா(ன்)ர் என்பதுதான் புரியவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

உலகம் எங்கும்… பொது மக்களை குறி வைத்து, கொல்லும் கிறுக்கு பிடித்தவர்கள் இருந்தாலும்…

இவ(ன்)ர் ஏன்… வில்லு, அம்பை… தெரிந்தெடுத்தா(ன்)ர் என்பதுதான் புரியவில்லை. 

காட்டுவாசி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறியர் மன்னிக்கோணும்.. 

தலையங்கம் வில் மற்றும் அம்புகளை எய்து என்றிருக்கிறது.

வில்லால் அம்பு எய்தப்படும்.  அம்புதான் சேதத்தை ஏற்படுத்தும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

சிறியர் மன்னிக்கோணும்.. 

தலையங்கம் வில் மற்றும் அம்புகளை எய்து என்றிருக்கிறது.

வில்லால் அம்பு எய்தப்படும்.  அம்புதான் சேதத்தை ஏற்படுத்தும். 

அதை ஆதவன் நியூஸ்காரரிட்டை போய் கேளுங்க சார் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

சிறியர் மன்னிக்கோணும்.. 

தலையங்கம் வில் மற்றும் அம்புகளை எய்து என்றிருக்கிறது.

வில்லால் அம்பு எய்தப்படும்.  அம்புதான் சேதத்தை ஏற்படுத்தும். 

 

6 hours ago, குமாரசாமி said:

அதை ஆதவன் நியூஸ்காரரிட்டை போய் கேளுங்க சார் 🤣

 

On 14/10/2021 at 05:44, தமிழ் சிறி said:

மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடத்தில் விம், அம்புடன் வந்த மர்ப நபர் மக்களை அம்புகள் எய்தி தாக்கியுள்ளார்.

கபிதன் சார்...   நீங்கள்,  
தலையங்கத்தை மட்டும்  வாசித்து விட்டு,  குற்றம் கண்டு பிடிக்கிறீர்கள்.
உள்ளுக்கு ஒரு இடத்தில்... "விம்" என்று எழுதியுள்ளார்கள்.
அதுக்கு... என்ன சொல்லப் போகிறீர்கள்.   🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

கபிதன் சார்...   நீங்கள்,  
தலையங்கத்தை மட்டும்  வாசித்து விட்டு,  குற்றம் கண்டு பிடிக்கிறீர்கள்.
உள்ளுக்கு ஒரு இடத்தில்... "விம்" என்று எழுதியுள்ளார்கள்.
அதுக்கு... என்ன சொல்லப் போகிறீர்கள்.

வில் அம்புடன் வந்த நபர் ...ஒருகட்டத்தில் வீட்டிற்கு போய் விம் சோப்பையும்  எடுத்துக்கொண்டுவந்து அதன் மூலமும்  தாக்குதலை நடத்தியிருக்கிறார் என்று நினைக்கிறேன், ராம்போ பட பிரியர் போல 
நோர்வெ காவல்துறை  சில்வஸ்டெர் ஸ்டாலோனையும் விசாரிப்பது நல்லது நிறைய துப்புக்கள் கிடைக்கலாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, அக்னியஷ்த்ரா said:

வில் அம்புடன் வந்த நபர் ...ஒருகட்டத்தில் வீட்டிற்கு போய் விம் சோப்பையும்  எடுத்துக்கொண்டுவந்து அதன் மூலமும்  தாக்குதலை நடத்தியிருக்கிறார் என்று நினைக்கிறேன், ராம்போ பட பிரியர் போல 
நோர்வெ காவல்துறை  சில்வஸ்டெர் ஸ்டாலோனையும் விசாரிப்பது நல்லது நிறைய துப்புக்கள் கிடைக்கலாம் 

கொரோனாவில் இருந்து... தப்பிக்க,
"விம்"  சோப்பையும்.... கொண்டு திரிகிறார் போலுள்ளது. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நோர்வே வில்- அம்பு தாக்குதல்: சந்தேக நபர் பொலிஸாருக்கு நன்கு அறியப்பட்டவர்!

நோர்வே வில்- அம்பு தாக்குதல்: சந்தேக நபர் பொலிஸாருக்கு நன்கு அறியப்பட்டவர்!

நோர்வேயில் நடந்த கொடிய வில் மற்றும் அம்பு தாக்குதலில் கைது செய்யப்பட்டவர் இஸ்லாமியராக மாறியவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் அவரிடம் இஸ்லாமிய தீவிரமயமாக்கலின் அறிகுறிகள் தென்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால், அவர் மீது பொலிஸார் முன்னதாக சந்தேகம் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

37 வயதான டேனிஷ் குடிமகனான அவர், காங்ஸ்பெர்க்கில் நேற்று (புதன்கிழமை) இரவு நான்கு பெண்களையும் ஒரு ஆணையும் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டார்.

68 கிலோமீட்டர் தெற்கே நோர்வேயின் காங்ஸ்பெர்க்கின் பல்வேறு பகுதிகளில் இந்த தாக்குதல் நடந்தது

பிராந்திய பொலிஸ்துறைத் தலைவர் ஓலே பிரெட்ரூப் சவெருட் இதுகுறித்து கூறுகையில், ‘அதிகாரிகள் கடைசியாக அந்த மனிதருடன் 2020இல் தொடர்பு கொண்டிருந்தனர்.

பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் 50 முதல் 70 வயதுக்குட்பட்டவர்கள். அவர் கைது செய்யப்பட்டு ஒரே இரவில் பல மணி நேரம் விசாரிக்கப்பட்டார்’ என கூறினார்.

https://athavannews.com/2021/1244937

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, தமிழ் சிறி said:

நோர்வேயில் நடந்த கொடிய வில் மற்றும் அம்பு தாக்குதலில் கைது செய்யப்பட்டவர் இஸ்லாமியராக மாறியவர்

 ஓ அமைதி மார்க்க பேர்வழியா ....அப்பவே தோணிச்சு இருந்தாலும் அடக்கி வாசிப்போம் என்று வெளியாலை விடலை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, தமிழ் சிறி said:

நோர்வே வில்- அம்பு தாக்குதல்: சந்தேக நபர் பொலிஸாருக்கு நன்கு அறியப்பட்டவர்!

விஜயகாந்த் படத்தில் வெள்ளை போலீஸ்காரங்களை எப்பவும் அரை லூசுகளாக தான் காட்டுவினம் 
இப்போ  கேள்விப்படும் செய்திகளை பார்த்தால் அது உண்மை போலத்தான் படுது. 
நியூசிலாந்தில் என்னவென்றால் கத்தியால் குத்தி கிழறி முடிக்கும்வரை பாதுகாப்பு வளையத்திற்குள் வைத்து வேடிக்கை பார்த்தர்களாம், இந்த நோர்வே ஆள் என்னவென்றால் அதேபோல் புதுசாக இன்னொரு கதையை விடுது   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, அக்னியஷ்த்ரா said:

விஜயகாந்த் படத்தில் வெள்ளை போலீஸ்காரங்களை எப்பவும் அரை லூசுகளாக தான் காட்டுவினம் 
இப்போ  கேள்விப்படும் செய்திகளை பார்த்தால் அது உண்மை போலத்தான் படுது. 
நியூசிலாந்தில் என்னவென்றால் கத்தியால் குத்தி கிழறி முடிக்கும்வரை பாதுகாப்பு வளையத்திற்குள் வைத்து வேடிக்கை பார்த்தர்களாம், இந்த நோர்வே ஆள் என்னவென்றால் அதேபோல் புதுசாக இன்னொரு கதையை விடுது   

நோர்வே பொலிஸ்காரர்… ரொம்ப மென்மையானவர்கள் போலுள்ளது. 😂

அவர்கள்…  ஜேர்மன், பிரான்ஸ் பொலிஸ்காரரிடம்… “ட்ரெயினிங்” எடுப்பது நல்லது. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் ஆபத்தானதொரு சூழல்.  மதவாதம் உலகை அழித்துவருகிறது. இலங்கை, இ(கி)ந்தியா, இஸ்ரவேல், ஆப்கானிஸ்தான்.....  எனத் தொடரும் நிலை மனிதகுல அழிவுக்கே வழிவகுத்து வருகின்றது. மதபோதனைகள் மனிதர்களைப் பக்குவப்படுத்துகிறதா அல்லது பழியெடுக்கப்பயிற்றுவிக்கப்படுகின்றதா? என்ற ஐயம் எழுவது தவிர்க்கமுடியாதது.     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/10/2021 at 06:27, அக்னியஷ்த்ரா said:

விஜயகாந்த் படத்தில் வெள்ளை போலீஸ்காரங்களை எப்பவும் அரை லூசுகளாக தான் காட்டுவினம் 
இப்போ  கேள்விப்படும் செய்திகளை பார்த்தால் அது உண்மை போலத்தான் படுது. 
நியூசிலாந்தில் என்னவென்றால் கத்தியால் குத்தி கிழறி முடிக்கும்வரை பாதுகாப்பு வளையத்திற்குள் வைத்து வேடிக்கை பார்த்தர்களாம், இந்த நோர்வே ஆள் என்னவென்றால் அதேபோல் புதுசாக இன்னொரு கதையை விடுது   

 

On 15/10/2021 at 09:12, தமிழ் சிறி said:

நோர்வே பொலிஸ்காரர்… ரொம்ப மென்மையானவர்கள் போலுள்ளது. 😂

அவர்கள்…  ஜேர்மன், பிரான்ஸ் பொலிஸ்காரரிடம்… “ட்ரெயினிங்” எடுப்பது நல்லது. 🤣

 

29 minutes ago, nochchi said:

மிகவும் ஆபத்தானதொரு சூழல்.  மதவாதம் உலகை அழித்துவருகிறது. இலங்கை, இ(கி)ந்தியா, இஸ்ரவேல், ஆப்கானிஸ்தான்.....  எனத் தொடரும் நிலை மனிதகுல அழிவுக்கே வழிவகுத்து வருகின்றது. மதபோதனைகள் மனிதர்களைப் பக்குவப்படுத்துகிறதா அல்லது பழியெடுக்கப்பயிற்றுவிக்கப்படுகின்றதா? என்ற ஐயம் எழுவது தவிர்க்கமுடியாதது.     

நேற்று யூகேயில் ஒரு எம்பியை அவர் மக்களிடம் குறை கேட்டு கொண்டிருக்கும் போது குத்தி கொன்று விட்டார்கள். 

கொலையாளி - இஸ்லாமிய அடிப்படைவாதிதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

 

 

நேற்று யூகேயில் ஒரு எம்பியை அவர் மக்களிடம் குறை கேட்டு கொண்டிருக்கும் போது குத்தி கொன்று விட்டார்கள். 

கொலையாளி - இஸ்லாமிய அடிப்படைவாதிதான்.

நோர்வே மற்றும் லண்டன் கொலைகள் தொடர்பாக யேர்மனியின் DLFஎன்ற செய்திநிறுவனம் சுட்டியதோடு தங்களது செய்தியாளர்களின் கண்ணோட்டங்களையும் பதிவு செய்திருந்தது.

யேர்மனியிலே ஒருபுறம் மதவாமும் சமாந்தரமாக வலதுசாரிகளின் எழுச்சியும் நகர்கிறது. இரண்டாலும் அதிகம் பாதிப்பினை எதிர்கொள்ளப்போவதென்னவோ எம்மைப் போன்ற அகதிகளாக வந்தோராகத்தானிருக்க வாய்ப்புள்ளதாகவே நோக்க வேண்டியுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nochchi said:

அதிகம் பாதிப்பினை எதிர்கொள்ளப்போவதென்னவோ எம்மைப் போன்ற அகதிகளாக வந்தோராகத்தானிருக்க வாய்ப்புள்ளதாகவே நோக்க வேண்டியுள்ளது.

எங்களைவிட எங்களின் பிள்ளைகள் தான் அதிகம் பாதிக்கப்படப் போகின்றனர்
நான் ஊருக்குத் திரும்ப ஆயத்தம் செய்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, வாத்தியார் said:

எங்களைவிட எங்களின் பிள்ளைகள் தான் அதிகம் பாதிக்கப்படப் போகின்றனர்
நான் ஊருக்குத் திரும்ப ஆயத்தம் செய்கின்றேன்

எமது அடுத்தலைமுறை பிரச்சனைகளைச் சந்திக்கத்தொடங்கிவிட்டது. ஆனால் பெரிய அளவில் இல்லை. அதற்கு அவர்களுக்குள்ள மொழியறிவும் சட்டப்பாதுகாப்பும் கரணியாமனபோதும் , எவளவு நாள் என்பதே விடைதெரியாத வினாவாகும். எங்கள் தேசம் விடுதலையடையாதவரை என்னதான் உயரங்களை எமது இளவல்கள் தொட்டாலும், மிகக்குறைந்த தொகையினரான  எம்மால் பெரிய அரசியல் மாற்றங்களைக் கொண்டுவரமுடியாதென்பதே மெய்நிலை.  எமது இனத்தின் வாழ்வு எம் தேசவிடியலிலேயே தங்கியுள்ளது. துருக்கியருக்கு ஒருமுறை பிரச்சினை என்றவுடன் துருக்கிய அதிபர் வந்தார். ஆனால், எமக்கு? திரள்நிலையடைவேண்டிய எமது இனம் பிளவுண்டு துகள்களாகி வருகின்ற ஆரோக்கியமற்ற சூழலை யார் மாற்றுவார் என்றே புரியவில்லை.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, வாத்தியார் said:

எங்களைவிட எங்களின் பிள்ளைகள் தான் அதிகம் பாதிக்கப்படப் போகின்றனர்
நான் ஊருக்குத் திரும்ப ஆயத்தம் செய்கின்றேன்

 

12 minutes ago, nochchi said:

எமது அடுத்தலைமுறை பிரச்சனைகளைச் சந்திக்கத்தொடங்கிவிட்டது. ஆனால் பெரிய அளவில் இல்லை. அதற்கு அவர்களுக்குள்ள மொழியறிவும் சட்டப்பாதுகாப்பும் கரணியாமனபோதும் , எவளவு நாள் என்பதே விடைதெரியாத வினாவாகும். எங்கள் தேசம் விடுதலையடையாதவரை என்னதான் உயரங்களை எமது இளவல்கள் தொட்டாலும், மிகக்குறைந்த தொகையினரான  எம்மால் பெரிய அரசியல் மாற்றங்களைக் கொண்டுவரமுடியாதென்பதே மெய்நிலை.  எமது இனத்தின் வாழ்வு எம் தேசவிடியலிலேயே தங்கியுள்ளது. துருக்கியருக்கு ஒருமுறை பிரச்சினை என்றவுடன் துருக்கிய அதிபர் வந்தார். ஆனால், எமக்கு? திரள்நிலையடைவேண்டிய எமது இனம் பிளவுண்டு துகள்களாகி வருகின்ற ஆரோக்கியமற்ற சூழலை யார் மாற்றுவார் என்றே புரியவில்லை.
 

வேறு வழியில்லை இந்த நாடுகள்தான் எமது எம் சந்ததிகளுனதும் நாடுகள்.

இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கும், வெள்ளை இன துய்மைவாத அடிப்படைவாததுக்கும் எதிரான அணியில் நாமும் பிள்ளைகளும் இணைந்து  இந்த இரெட்டை எதிர்களை எதிர்த்து போராடுவதே ஒரே வழி.

இந்த அடிப்படையில்தான் என்னால் முடிந்தவரை பிரெக்சிற்றை எதிர்த்து வேலை செய்தேன்.

இனியும் விடுவதாக இல்லை.

இலங்கை போல இல்லை - இங்கே நாம் முயன்றால் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

Link to comment
Share on other sites

On 15/10/2021 at 04:12, தமிழ் சிறி said:

நோர்வே பொலிஸ்காரர்… ரொம்ப மென்மையானவர்கள் போலுள்ளது. 😂

அவர்கள்…  ஜேர்மன், பிரான்ஸ் பொலிஸ்காரரிடம்… “ட்ரெயினிங்” எடுப்பது நல்லது. 🤣

சுவிசை விட்டதை மென்மையாக கண்டிக்கிறேன்.😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, nunavilan said:

சுவிசை விட்டதை மென்மையாக கண்டிக்கிறேன்.😃

அடி பலமோ? 😁

Vadivelu Look GIF - Vadivelu Vadivel Look - Discover & Share GIFs

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

அடி பலமோ? 😁

Vadivelu Look GIF - Vadivelu Vadivel Look - Discover & Share GIFs

 சா சா 😃சுவிஸ் பொலிசை ஒப்பிடாமல் என்ன ஒப்பீடு அண்ணை.😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

நேற்று யூகேயில் ஒரு எம்பியை அவர் மக்களிடம் குறை கேட்டு கொண்டிருக்கும் போது குத்தி கொன்று விட்டார்கள். 

கொலையாளி - இஸ்லாமிய அடிப்படைவாதிதான்.

அவர்கள் தான் இஸ்லாமியர்கள் என்றால் உருகி ஊத்துப்படும் ஆட்கள் ஆயிற்றே ....பொல்லை கொடுத்துவிட்டு அடி வாங்குரினம், கட்டுப்பாடின்றி  உள்ளவிட்டால் இப்படி  செத்து செத்து விளையாடவேண்டியதுதான்   

Link to comment
Share on other sites

11 hours ago, nochchi said:

மிகவும் ஆபத்தானதொரு சூழல்.  மதவாதம் உலகை அழித்துவருகிறது. இலங்கை, இ(கி)ந்தியா, இஸ்ரவேல், ஆப்கானிஸ்தான்.....  எனத் தொடரும் நிலை மனிதகுல அழிவுக்கே வழிவகுத்து வருகின்றது. மதபோதனைகள் மனிதர்களைப் பக்குவப்படுத்துகிறதா அல்லது பழியெடுக்கப்பயிற்றுவிக்கப்படுகின்றதா? என்ற ஐயம் எழுவது தவிர்க்கமுடியாதது.     

அதற்குத்தானே தமிழில் சரியாக பெயர் வைத்துள்ளனர். 

'மதம்'

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, manimaran said:

அதற்குத்தானே தமிழில் சரியாக பெயர் வைத்துள்ளனர். 

'மதம்'

'மதம்' பீடிக்கக்கூடாதது. அது எந்த மதமாயினும். அதனால்தான் என்னவோ தமிழர்கள் 'சமயம்' என்றழைத்தனர் என்று நினைக்கின்றேன். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.